இந்திய-சீன எல்லைப் பிரச்சனை, அவ்வப்போது தலையெடுப்பதும், அதுவாக தீர்ந்ததைப் போன்ற நிலை உருவாவதும் தொடர் கதையாகி விட்டது. யார் மீது தவறு இருக்கிறது? என்ற கேள்விக்கு ஒரு நாடு என பதில் சொல்வது நியாயமற்றது. ஏனென்றால் எல்லைக்கோட்டை வகுத்தது, இரு நாட்டைச் சார்ந்தவர்களும் அல்ல மக்மோகன் என்ற இங்கிலாந்து தேசத்தவர் வகுத்த எல்லைக்கோடு. 1947க்கு முன் இந்தியாவும், சீனாவும் இன்றைய அரசியல் சுதந்திரத்தை எட்டியிருக்காத சூழலில், இங்கிலாந்து அரசின் காலனியாதிக்கத்தின் (1914)கீழ் இருந்த இந்தியாவுக்கான எல்லையை வகுத்த போது, மக்மோகன் பொறுப்பாக்கப்பட்டார்.







