பாரதிய ஜனதாவின் ஊதுகுழலாக வெளிவரும் நாளேடு ‘தினமணி’. அதன் ஆசிரியராக உள்ள கே. வைத்தியநாதன், ஒரு ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர். ‘முரசொலி’ நாளேட்டில் கட்டுரை தீட்டும் சின்னக் குத்தூசி - ‘தினமணி’யையும், ஆசிரியர் வைத்திய நாதனையும் - பார்ப்பன வெறியராக செயல்படுகிறார் என்று தொடர்ந்து கடுமையாக எழுதி வந்தார். இப்போது சின்னக்குத்தூசிக்கு தர்மசங்கடமான நிலை. எந்த சின்னக் குத்தூசி ‘முரசொலி’யில் வைத்தியநாதனின் பார்ப்பனீயத்தை கடுமையாக எழுதி வந்தாரோ, அதே வைத்தியநாதனுக்கு, கலைஞர் பாராட்டு மழைகளைப் பொழிந்து தள்ளி விட்டார்.







