(கடல்மீன்பிடி தொழில் ஒழுங்காற்றல் மற்றும் மேலாண்மை சட்டம்‘ 2009 பற்றி சென்னை, நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம், சிதம்பரம், ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டக் குழுவினர் நடத்திய கள ஆய்வு)
பாரம்பரியத் தொழில்களுக்கு ஆப்பு வைத்துவிட்டு, பன்னாட்டு கம்பெனிகளுக்கு கால் பிடிக்கும் இந்தியத் தலைமையின் பார்வை இந்தமுறை மீனவர்கள் மீது விழுந்திருக்கிறது. மீன்பிடித் தொழிலில் பாரம்பரியமாக ஈடுபட்டு வரும் மீனவர்களின் பிழைப்பில் கடல் மணலை அள்ளிக் கொட்ட, ‘மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் - 2009’ என்று ஒன்றை கையில் எடுத்திருக்கிறது, மைய அரசு.






