தொடர்புடைய படைப்புகள்

இந்தக் கட்டுரையை எழுதுவதற்கான தூண்டுதலை நமக்கு வழங்கிய தமிழ்த் தேசியம் பேசும் நண்பர்களுக்கு - குறிப்பாக அண்ணன் சீமானின் அருமைத் தம்பிகளுக்கு - கோடான கோடி நன்றிகள்.

rajaraja chola "தமிழன் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று நாங்கள் கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது?. திராவிடக் கட்சிகள் தமிழையும், தமிழ்நாட்டையும் சீரழித்துவிட்டன. திராவிடம் என்பதே தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக தெலுங்கர்கள் அதாவது வந்தேறிகள் கண்டுபிடித்த ஒன்று. தமிழ் மக்கள் மீட்சி அடைய வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி தமிழ்த் தேசியம் தான். இதை விட்டால் வேறு மாற்றுவழியே கிடையாது" என்று கையில் உருட்டுக்கட்டையோடு சிக்ஸ்பேக் சீமானின் தம்பிகள் மிரட்டுகின்றார்கள். ராஜராஜ சோழனையும், மற்ற பிற தமிழ் மன்னர்களையும் தமிழ்த் தேசியத்தின் நாயகர்களாகவும், மற்ற மொழி பேசிய மன்னர்களை வில்லன்களாகவும் சித்தரிக்கின்றார்கள். உண்மை என்னவென்று தமிழ் மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை நமக்குள்ளது. எனவே கைநடுங்க, கால் நடுங்க, உயிர் பயத்தோடு இந்தக் கட்டுரையை எழுதுகின்றோம்!. தமிழ்க்குடிதாங்கி முருகன்தான் நம்மை எல்லாம் சீமானிடம் இருந்தும், அவரது தம்பிப் பிள்ளைகளிடம் இருந்தும் காப்பாற்ற வேண்டும்!.

 தமிழர் பண்பாடு, தமிழர் பண்பாடு என்று சொல்கின்றார்களே... அப்படி என்ற ஒன்று இங்கே இருந்ததா? அதுவும் பொதுவான தமிழர் பண்பாடு என்ற ஒன்று இங்கு இருந்ததா? நிச்சயமாக வரலாற்றில் அப்படி ஒன்று எப்போதும் இருந்ததில்லை. தொல்காப்பியம் கூட தமிழரின் நிலப்பகுதிகளை ஐந்தாகப் பிரித்து ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் கருப்பொருள் வேறு, உரிப்பொருள் வேறாகப் பிரித்துள்ளது. ஒவ்வொரு நிலத்துக்கும் ஓர் உணவு வகையும், தெய்வமும், ஒழுக்கமும் கூறப்பட்டுள்ளது. பொதுவான வாழ்க்கை முறை என்ற ஒன்று தொல்காப்பியக் காலத்திலேயே கிடையாது என்பதுவே உண்மை. ஒருவரது வாழ்நிலையே அவரின் சிந்தனையைத் தீர்மானிக்கின்றது. வெவ்வேறு வாழ்நிலைகளில் வாழும் மக்கள் வெவ்வேறு சிந்தனைகளைக் கொண்டவர்களாகத்தான் நிச்சயம். இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் தமிழ்பேசும் மக்களிடையே பல்வேறு அரசுகள் தோன்றுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லாமல் போயிருக்கும். அவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொண்டு ஆயிரக்கணக்கான மக்களை பலிகொடுக்க வேண்டிய எந்தத் தேவையும் இருந்திருக்காது.

 நாம் தமிழக வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அனைத்து இடங்களிலும் இரண்டுவகையான பண்பாடுகள் நிலவியதை சற்றென உணர்ந்து கொள்ளலாம். ஒன்று மேட்டுக்குடி பண்பாடு, மற்றொன்று சாமானிய மக்களின் பண்பாடு. உதாரணமாக உணவுப் பழக்கத்தை எடுத்துக்கொண்டால் கூட “தமிழ் மக்களில் தாழ்ந்த நிலையில் இருந்த சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும் கூழோ, கஞ்சியோதான் குடித்து வந்ததாக செய்திகள் உள்ளன. அதுவும் கூட முழுவயிற்றுக்கும் கிடைத்தாகத் தகவல் இல்லை. உணவு உண்ட பின்னர் அந்த உணவு செரிமானம் அடைவதற்கு உயர் சாதித் தமிழர்கள் சில மருந்து வகைகளைத் தின்பண்டம் போலத் தயாரித்து உண்டுவந்த வேளையில் “கும்பி கருகுது கடல் காயுது” என்று கீழ்நிலையில் இருந்த தமிழ்மக்கள் கதறிக் கொண்டிருந்த பதிவுகளையும் காண்கின்றோம். சுமார் 1500 ஆண்டுகாலத் தமிழ் நாட்டின் வரலாற்றில் நூற்றுக்கணக்கான பஞ்சம் பற்றிய செய்திகள் பதிவாகி உள்ளன. அவற்றில் இலட்சக்கணக்கான மக்கள் மாண்டு போனதாகவும் ஒரு வேளை உணவுக்காகத் தங்கள் மானத்தையே விற்று விட்டதாகவும் குறிப்புகள் உள்ளன. இன்றைய காலத்தில் கூட சுவையான சைவ உணவு வகைகளைத் தயாரிப்பவர்கள் தஞ்சாவூர் பார்ப்பனர்களாக உள்ளனர். அசைவ உணவு வகைகளைத் தயாரிப்பதில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் உள்ளனர். சுவையான இனிப்பு வகைகளைத் தயாரிப்பதில் திருநெல்வேலிப் பிள்ளைமார்களும், திருவையாற்றுப் பகுதிப் பார்ப்பனர்களும்தாம் முன்னணியில் உள்ளனர். பெரும்பாலான தமிழ்சாதிகள் வெறும் கூழுக்கே ஏங்கி நின்றது வரலாறாகப் பதிவாகி இருக்கையில், பாலும் தேனும் நெய்யும் கலந்த பலகாரங்கள் தயாரித்து வந்ததை மொத்த தமிழ்ச்சாதியினரின் உணவுப் பண்பாடு என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்?

 உணவுக்கே வழியில்லாத தமிழ்ச் சாதிகளைச் சார்ந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் தங்களைத் தாங்களே விற்றுக்கொண்டு அடிமைகள் ஆனார்கள் என்கிற குறிப்புகள் பல உள்ளன. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள்-2004 என்ற தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை வெளியீட்டில் பக்கம் 202இல் குடும்பம் குடும்பமாக 100 தமிழ்ச் சாதி ஆண்களும் பெண்களும் அடிமைகளாக விற்கப்பட்டதற்காக ஆவணம் உள்ளது.

 இந்த அடிமைகள் பொருள்களைப் போல கருதப்பட்டனர். அவர்களை விற்கும்போது அல்லது தானமாக வழங்கும்போது நிலத்தைப் பதிவு செய்வது போல பதிவு செய்யும் வழக்கம் இருந்தது. அடிமை விற்பனை பதிவு ஆவணத்திற்கு “ஆள்விலை பிரமாண இசைவுத்தீட்டு” என்று பெயர். இடைக்குடி மக்களை அடிமைகளாக வழங்கும்போது முத்திரைகள் இட்டு வழங்கி உள்ளனர். “திருவிலச்சனை செய்து சந்த்ராதித்தவரை இவ்விடையாரை நாம் கொள்ள” என்று குறிக்கும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முத்திரை என்பது அவர்கள் உடம்பின் மேல் இடப்படும் இலக்கமாகும். இதனை சூட்டுகோல் கொண்டோ அல்லது வேறு எப்படியோ இட்டு வந்தனர். கோவில் அடிமைகளுக்கு ஒரு விதமாகவும், அரண்மனை அடிமைகளுக்கு வேறு விதமாகவும் முத்திரை பதித்துள்ளனர்.

 பெரும்பாலான தமிழ்மக்கள் ஒருவேளை சோற்றுக்கே வழியின்றி உயிரை விட்டதற்குக் காரணம் தெலுங்கர்களோ, மலையாளிகளோ, கன்னடர்களோ அல்ல; இந்த மண்ணை ஆண்ட அதிகார வெறிபிடித்த தமிழ் மன்னர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மேலும் இந்தத் தமிழ் மன்னர்களை அனைத்து மக்களும், தங்களுக்கான மன்னர்களாக ஒருபோதும் ஏற்றுக் கொண்டது கிடையாது. “சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ்மக்கள் அனைவரும் சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைத் தங்களுடைய மன்னர்கள் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. அது மட்டுமல்லாது தங்களை அழிக்க வந்த கொடுமையான விரோதிகள் தான் மூவேந்தர்கள் என்று வெறுத்தனர். இதனைப் புறநாறூற்றின் 270 ஆம் பாடல் தொடங்கி 359 ஆம் பாடல் வரை உள்ள பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. நேற்றுவரை எங்களைப் போன்ற பழங்குடிகளாக இருந்த நீங்கள் இன்று வம்ப வேந்தர்களாகி எங்களை அதிகாரம் செய்யப் பார்க்கிறீர்களா? என்று எதிர்ப்புக்குரல் எழுப்பும் பல பாடல்கள் புறநானூற்றில் உள்ளன”.

 வர்க்க வேறுபாடுகள் முதன்மை அடையாத குல அமைப்பில் சொத்துரிமை தனியாருக்கு இன்றி மொத்த சமூகத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் பொதுவானதாக இருந்தது. அத்தகைய சமூகங்களில் தலைமைப் பொறுப்பு என்பது சுழற்சி முறையில் சமூக உறுப்பினர்கள் அனைவருக்கும் கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. இத்தகைய பொதுத்தன்மைகளை நீக்க முயன்ற வேந்தர்கள் ‘பொது நீக்கி’ ஆட்சி செய்ய முயன்றார்கள் என்று புறநானூற்றுப் (8,51, 189) பாடல்கள் குறிக்கின்றன. இவர்கள் குல அமைப்பின் அங்கத்தினர்கள் அனைவரின் உரிமையை நீக்கி அந்த இடத்தில் தனிநபர் உரிமையை நிலைநாட்டினர். இத்தகைய மாறுதல்களை இயல்பானதாகக் காட்டுவதன் ஒரு பகுதியாகத் தங்களை மற்ற குலங்களிலிருந்து வேறுபட்டு உயர்ந்தவர்கள் எனக் காட்டுவதற்கு வேதங்கள், பார்ப்பனர்கள் உதவியுடன் யாகங்கள் செய்து தங்களை ஆரியகுலம், சந்திரகுலம் என்றும் பல்வேறு ரிஷிகளின் கோத்திரங்கள் வழிவந்தவர்கள் என்றும் பிரகடனப்படுத்தினர். சங்கப் பாடல்களில் வேதம், வேள்வி, பார்ப்பனர்கள் என்று வரும் இடங்கள் அனைத்தும் தமிழ் வேந்தர்களுடன் சேர்ந்தே வருவதை, ‘பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுது’ இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி’ போன்றவர்களைப் பாடும் பாடல்கள் வழியாகத் தெளிவாகப் பார்க்கலாம்.

 நீங்கள் இன்றும் இந்த மானங்கெட்ட மன்னர்களின் வாரிசுகளை அரசியல் கட்சிக் கூட்டங்களிலும், சாதிக்கட்சிகளின் மாநாடுகளிலும் பார்க்கலாம். தங்களை வெட்கமே இல்லாமல் சத்திரியப் பரம்பரை என்றும், ஆண்ட பரம்பரை என்று கட்அவுட்டர்களிலும், பிளக்ஸ் பேனர்களிலும் போட்டுக் கொள்கிறார்கள். அவர்களிலும் பலபேர் தமிழ்த் தேசியவாதிகளைப் போல திராவிடம் என்ற கருத்தியலை வன்மத்தோடு எதிர்ப்பவர்கள் தான். சரி இந்த நில உடைமை தமிழகத்தில் எப்படி தோற்றம் பெற்றது என்று பார்ப்போம்.

தமிழகத்தின் நீண்ட கால வரலாற்றை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று அவைதிக மதங்களான பெளத்தமும், ஜைனமும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்த அவைதிக எழுச்சிக்காலம். இது சங்க காலத்திலிருந்து கிட்டத்திட்ட ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலம். இந்தக் காலத்தின் சமூக அமைப்பு பெரும்பாலும் இனக்குழுக்களின் சுதந்திர வாழ்க்கை எனலாம். தனியார் நிலவுடமை என்பது ஆதிக்கப் பொருளியலாக வளரவில்லை. சாதி அமைப்பு என்பது உறுதிப்படவில்லை. சுருக்கமாகக் கூறினால் தீண்டாமை என்பது உறுதிப்படவில்லை. மற்றொன்று வைதீகம் எழுச்சி பெற்ற காலம். இது 9 ஆம் நூற்றாண்டு தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதி வரையில் நீண்டது. இக்காலம் நிலத்தில் தனியார் உடைமை தோன்றியது முதல் நிலம் பண்டப் பொருளாக மாறுவது வரை தொடர்ந்தது. வைதீகம் என்பது சைவ சித்தாந்தத்துடன் கலந்து சமூக அமைப்பில் பார்ப்பன- வேளாள கூட்டுச் சக்திகள் கல்வியைக் கையகப்படுத்தி இருந்ததால் 20ஆம் நூற்றாண்டிலும் கூட அவர்கள்தான் இலக்கியவாதிகளாகவும், தத்துவவாதிகளாகவும், வரலாற்றாளர்களாகவும் இன்னும் சொல்லப் போனால் மொத்தத் தமிழ்ச்சமூகத்தின் குறியீடாகவும் கருதப்பட்டனர்.

 இன்றும் கூட அதே மேட்டுக்குடி சாதிகளைச் சார்ந்தவர்கள் தான் பெரும்பாலும் தமிழ்த்தேசியம் பேசுகின்றனர் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். தமிழ்த் தேசியம் பேசுபவர்களில் 99.99% பேர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் கிடையாது என்பதையும், குறைந்த பட்சம் சாதிவெறி அரசியலைக்கூட கண்டிக்கத் திராணியற்ற, அப்படியே கண்டித்தாலும் சாதியின் பெயரைச் சொல்லி வெளிப்படையாக கண்டிக்கத் திராணியற்ற அப்பட்டமான பிழைப்புவாதிகள் என்பதையும் பார்க்க வேண்டும்.

 தமிழ் மன்னர்கள் அனைவரும் அப்பட்டமான பார்ப்பனிய தாசன்கள் என்பதை நிரூபிக்க பல வரலாற்று ஆவணங்கள் நம்மிடம் உள்ளன. பல்லவர் காலம் பற்றிய வரலாற்றுச் சான்றுகளாக செப்பேடுகள் 30ம், கல்வெட்டுகள் சுமார் 200 வரையிலும் கிடைக்கின்றன. பாண்டியர் செப்பேடுகள் 10ம், சோழர்காலச் செப்பேடுகள் சிலவும் கவ்வெட்டுகள் பத்தாயிரம் வரையிலும் கிடைத்துள்ளன. சோழர் கல்வெட்டுகளில் சுமார் 1500 முதல் 2000 வரை முழுமையாக அச்சில் வந்துள்ளன. இதில் பல்லவர்- பாண்டியர் செப்பேடுகள் சம காலத்தையாக உள்ளன. இந்தச் சான்றுகளின் அடிப்படையில் வைத்து அக்காலத்தைக் கணித்தால் 1) வடநாட்டுப் பார்ப்பனர்கள் (பீகார், காஷ்மீர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்) நிலவுடைமையாளர்களாகத் தமிழ் மன்னர்களால் உருவாக்கப்பட்ட காலம் இது கி.பி 6, 7 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரையிலான காலம். 2) தென்னிந்திய- தமிழ்ப் பார்ப்பனர்களும் நிலவுடைமையாளர்கள் ஆனது கி.பி 10 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் 3) தமிழகத்து உயர் சாதியைச் சேர்ந்த வெள்ளாளர்கள் உள்ளிட்டோர் நிலவுடைமையாளர்கள் ஆன காலம் கி.பி 13 ஆம் நூற்றாண்டு என்று மூன்றாகப் பிரிக்கலாம்”.

 இப்படி நில தானம் பெறுவதற்காக பார்ப்பனர்களுக்கு சில தகுதிகள் வரையறை செய்யப்பட்டிருந்தன. நிலதானம் பெற்றவர்கள் பார்ப்பனர்களாக மட்டுமே அதாவது (சந்தியாவதனம்) அந்தித் தொழுகைகள் இரண்டும் ஓம்புபவன், முத்தீ (கார்ஹபத்யம், ஆஹவனிகம், தக்ஷிணாக்கிணி) வளர்ப்பவன், நான்கு வேதங்களைக் காத்தவன், ஐந்து வேள்விகளைச் செய்பவன், ஆறு தொழில்கள் அதாவது ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் போன்ற அவைதிகக் கருமங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்தான் என்பது கவனிக்கத்தக்கது.

 இத்தகைய பார்ப்பன கூட்டமைப்புதான் சபை எனப்பட்டது. பல்லவர் செப்பேடுகள், பாண்டியர் செப்பேடுகள் ஆகிய 40 செப்பேடுகளில் சுமார் 15000 பார்ப்பன குடும்பங்கள் இந்த நிலதானத்தைப் பெற்றுள்ளன என்று குறிப்பிடுகின்றன. உத்திரமேரூர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் குடவோலை முறை என்பது தமிழக வரலாற்றுப் பாட நூல்களில் குதூகலத்துடன் சொல்லப்படுகின்ற ஜனநாயக் முறை என்பது பார்ப்பனர்களுக்குள் நடக்கும் தேர்வுமுறைதான். அதிலும் குறிப்பிட்ட நிலச் சொத்தும், வேத, வேதாங்கம் புலமையும் நிரம்பிய சனாதானக் காவலர்களான பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் கலந்துகொள்ள இயலாது என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் பொது நிர்வாகம் (சிவில் நிர்வாகம்) இவர்களால்தான் நடத்தப்பட்டது. தானம் அளிக்கப்பட்ட ஊர்களுக்குள் அரசனின் படைகள் கூட நுழையக்கூடாது என்ற தடை கண்டிப்பாக அமுல் செய்யப்பட்டது.

 தமிழ்மன்னர்கள் தமிழுக்குச் செய்த பணியைத் தமிழ்த் தேசியவாதிகள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களைப் போலவே அவர்களது வழிகாட்டியாக இருக்கின்ற தமிழ்மன்னர்களும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ‘கதையை’ப் பார்ப்போம். பார்ப்பனர்களை குழந்தைப் பருவத்திலிருந்து பயிற்றுவிக்கும் வடமொழி கல்வி நிலையங்கள் என்பன பல்லவர், பாண்டியர், சோழர் காலங்களில் சுமார் 50க்கும் மேற்பட்டவை தமிழ்நாடு முழுமையும் இருந்தன. இந்த கல்வி நிலையங்கள் அனைத்திற்கும் தமிழ் அரசர்களால் மானியங்கள் அளிக்கப்பட்டன. தென் ஆற்காடு மாவட்டம் இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தில் இருந்த ஒரு கல்லூரியில் முதுநிலை மாணவர்கள் 70 பேரும் இளநிலை மாணவர்கள் 270 பேரும் பயின்றனர். ஆசிரியர்கள் 14 பேரும் இருந்தனர். இதில் ரூபாவதார இலக்கணத்தை 40 பேர் படித்தனர். ஏனையோர் மூன்று பிரிவினராக ரிக் வேதத்தை 75 பேரும், யஜூர் வேதத்தை 75 பேரும், வாஜசனேய சாம வேதத்தை 20 பேரும், சண்டோக சாம வேதத்தை 20 பேரும், தலவாகர சாம வேதத்தை 20 பேரும், அதர்வ வேதத்தை 10 பேரும், எஞ்சிய 10 பேர் பெளதாயன கிருகஷ்ய சூத்திரம், பெளதாயன கல்ப சூத்திரம், பெளதாயன ஞான சூத்திரம் ஆகியவற்றையும் படித்தார்கள். இளநிலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் நாள்தோறும் ஆறு நாழி நெல் கொடுக்கப்பட்டது.

ஆசிரியர்களுள் கூடுதலான ஊதியமாக நாளொன்றுக்கு 1.5 கலம் நெல் கொடுக்கப்பட்டது . மீமாம்சமும் வியாகரணமும் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கு 1 கலமும், மற்றவர்களுக்கு ஒரே அளவாக 0.25 கலமும் கொடுக்கப்பட்டது. இங்கே படித்தவன், சொல்லிக் கொடுத்தவன் அனைவரும் பார்ப்பனர்களே ஆவார்கள். இராஜராஜனின் மகன் இராசேந்திர சோழன் தன் குருவான பீகார் பார்ப்பனர் சர்வசிவ பண்டிதருக்கும், அவருடைய மாணவர்கள் (வட மொழி மாணவர்கள்) பலருக்கும் ஆயிரக்கணக்கான மூட்டைகள் நெல்லும், பொன்னும் வழங்கியதைக் கூறும் கல்வெட்டுகள் ஜயங்கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ளன. இராசேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் திருவெற்றியூரில் ஒரு கல்லூரியும், சோழ மன்னர் இராசேந்திரனால் வேப்பத்தூர், திருமுக்கூடல், திருபுவனி, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலும் பார்ப்பனர்கள் கற்பதற்கென்றே வடமொழிக் கல்லூரிகள் அரசர்கள் உதவியுடன் தொடங்கப்பட்டன. தமிழ்மொழியின் வளர்ச்சிக்காகவோ, தமிழ்மக்களின் கல்வி அறிவுக்காகவோ ஒரு துரும்பைக்கூட எந்தத் தமிழ் மன்னனும் தூக்கிப் போடவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை.

 உண்மையில் இப்படி புறக்கணிக்கப்பட்ட தமிழ்மக்களுக்குக் கல்வி அறிவு போதித்தது சைன, பெளத்த மதமே. பழங்குடி மக்களின் பெரும்பகுதியினரைக் கல்வி கற்றவர்களாக மாற்றியது இந்த மதமே. சங்க காலத்திலிருந்தே தமிழ்க்கல்வி என்பது சமண, பெளத்த மதத்தினரைச் சார்ந்துதான் இருந்துள்ளது என்பதைத் தமிழ்நாட்டில் கிடைக்கும் ‘பிராமி’ கல்வெட்டுகளும் மணிமேகலை, திருக்குறள், நாலடியார் பழமொழிநானூறு போன்ற நூல்களிலுள்ள செய்திகளும் தெரிவிக்கின்றன. தொல்காப்பியம் தொடங்கி யாப்பெருங்கலம், யாப்பெரும்கலக்காரிகை, வீரசோழியம், நன்னூல், நேமிநாதம் போன்ற இலக்கண நூல்களும் தமிழ்க்காப்பியங்கள் பலவும் தமிழ்க் கல்விக்கு அடிப்படையான நிகண்டு நூல்களும் ஜைனர்களால் தான் எழுதப்பட்டன. எனவே தமிழ்நாட்டில் தமிழ்க்கல்வி என்பது சமண, பெளத்தர்களால் தான் தழைத்து வளர்ந்து வந்தது என்று உறுதியாகக் கூறலாம். வருணாசிரம, சாதிய தர்மத்தை வளர்த்து வந்த உயர்சாதித் சூத்திரத் தமிழர்கள் வட மொழியான சமஸ்கிருதத்தைத்தான் ஆதரித்தனர் என்பதற்கு 50க்கும் மேற்பட்ட தமிழ்க் கல்வெட்டுகளில் காணும் குறிப்புகளே சான்றாகும். வருணாசிரம அமைப்பிற்கு எதிர்ப்பு ஏற்பட்டு, தமிழ் மக்களின் மீதான இவர்களின் ஆளுகை கேள்விக்குள்ளாகி, சிதைவடையத் தொடங்கிய காலத்தில் தான் அந்த அதிகாரத்தை மீட்டுருவாக்கம் செய்யும் பணிகளில் ஒன்றாகத்தான் தமிழ்மொழியிலான கல்விக்கு ஓர் இடத்தை ஒதுக்க ஆரம்பித்தனர்.

 தமிழ்நாட்டை ஆண்ட இந்த தமிழ்மன்னர்கள் யாரும் தங்களுடைய குருவாக ஒரு தமிழனை எப்போதும் வைத்துக் கொண்டதில்லை. தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய முதலாம் இராசராசனின் குரு வட இந்தியப் பார்ப்பனர் ஈசான் சிவ பண்டிதர் என்பவர். படைத்தலைவர் கிருஷ்ணன், இராமன் என்ற மும்முடிச் சோழ பிரமாதிராயர் என்ற பார்ப்பனர். இராசராசனுக்குப் பின்னர் அரசாண்ட (கி.பி1300) எல்லா சோழ அரசர்களுக்கும் குருவும் படைத் தலைவர்களும் பார்ப்ப்னர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய செய்திகளின் குறிப்பால் அன்றைய தமிழ் நாட்டின் சிவில் நிர்வாகம் என்பது பார்ப்பனர்களிடம் இருந்தது என்பதும் இராணுவ நிர்வாகம் மட்டுமே அரசர்களிடம் இருந்தது என்பதும் விளங்குகின்றது. ஆனாலும் இறுதி அதிகாரம் என்பது பார்ப்பன ராஜ குருக்களிடம் தான் இருந்துள்ளது.

 ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் இந்தப் பார்ப்பனர்களுக்குத் தானமாக கொடுக்கப்பட்டன. ”மனுநீதி, பகவத் கீதை போன்ற நூல்களின் சுலோகங்கள் இந்த தானத்தைக் காக்கப் பெரும்பாலான செப்பேடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சாதிமுறை தவறாமல் காப்பதுதான் அரசனுடைய கடமை என்பதும் மனுவின் வழியாகக் குறிப்பிடப்படுகின்றது. தமிழக வரலாற்றில் முதன் முதலாக ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் இவை சமூக அமைப்பில் நுழைகின்றன. இத்துடன் பாரதத்தைத் தமிழ்ப்படுத்துவது, சங்கம் வைத்து மொழி (தமிழ் மொழிக்கான சங்கம் என்று குறிப்பிடப்படவில்லை என்பதையும் கவனிக்கவும்) வளர்ப்பது போன்றவையும் அகத்தியரைத் தமிழின் முதல்வராகக் கூறுவது போன்றவையும் இங்குதான் முதன்முதலாக நாம் காண்கின்றோம். சுருக்கமாக கூறினால் புராணமயமாக்கப்பட்ட தமிழ் இலக்கிய வரலறு என்பது இந்தக்கால கட்டத்தில்தான் தொடங்குகின்றது.

 இத்தகைய நடவடிக்கைகளுக்குத் தமிழ்ப் பழங்குடிகளிடமிருந்து கடும் எதிர்ப்புகள் இருந்ததையும், எதிர்த்தவர்களை பல்லவ, பாண்டிய மன்னர்கள் இராணுவ நடவடிக்கைகளினால் ஒடுக்கியதையும் இந்தச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. அடுத்து வந்த ஆயிரம் ஆண்டுகளிலும் இந்த எதிர்ப்பு என்பது சில இடங்களில் தொடர்ந்ததை கர்னல் மெக்கன்சியின் தொகுப்புகளில் உள்ள பழங்குடியினர் குறிப்புகள் உணர்த்துகின்றன.

 மேலும் தமிழ்நாட்டில் ஆகம வழிபட்ட கோவில் வழிபாடு என்பது பல்லவர் காலத்தின் பிற்பகுதியில் தான் ஏற்றமடைகின்றது. வேள்வி, யாகம் என்பன சூத்திர அரசர்களை மையமாகக் கொண்டு பார்ப்பனர்களால் நிகழ்த்தப்பட்டது. மேலும் ஆகமம் சார்ந்த கோவில் வழிபாடு என்பது சூத்திர குலத்துச் சமூகத் தலைவர்களை மையமாகக் கொண்டதாகின்றது. திருஞான சம்பந்தர் மற்றும் அப்பர் என்ற திருநாவுக்கரசர் நடவடிக்கைகள் இதனை வலியுறுத்தும். திருமூலர், திருமந்திரம் என்ற நூலின் வழியாக ஆகமக் கருத்துக்களைத் தமிழில் தருகின்றார். இந்தத் திருமூலர் வடநாட்டுப் பார்ப்பனர் என்று பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். தமிழில் ஆகமங்களை பற்றிக் கூறும் முதல் நூல் திருமந்திரம் என்பது கவனிக்கத் தக்கது. இதனை ஆக்கி தந்த திருமூலர் சுந்தரநாதன் என்ற பார்ப்பனர், அகத்தியர் என்ற பார்ப்பனரைப் படைத்து அவர் வழியாக இறைவன் சூத்திர மொழியான தமிழைப் படைத்தார் என்ற புனைவை முன்வைத்தார். அகத்தியம் என்பது பார்ப்பனர்களின் கோத்திரப் பெயரான பரத்வாஜ் போன்ற ஒன்று என்பதையும் கவனிக்க வேண்டும்.

 தமிழ்நாட்டில் உள்ள சில அறிஞர்கள் பக்தி இயக்கம் என்பது சாதியை அழிக்கப் புறப்பட்ட ஒரு இயக்கம் என்று வாய்கூசாமல் புளுகித் திரிகின்றனர். அதிலும் தங்களைக் கம்யூனிஸ்ட்டுகள் என்று சொல்லிக் கொள்ளும் சில பார்ப்பன அடிமைகளும் தங்கள் கட்சி அணிகளுக்கு இது போன்ற போதனைகளை வழங்கி அவர்களை முட்டாள்கள் ஆக்க முயற்சிக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டு வரலாற்றில் சாதிகள் என்பதும், தீண்டாமை என்பதும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர்தான் தமிழ் மக்களிடம் நிலைபெற்றன என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக தீண்டாமை என்பது 8 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் வழக்கத்தில் வரவில்லை என்பதை வரலாற்று ஆசிரியர் கி.ர.அனுமந்தன் அவர்கள் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வேட்டில் விளக்கியுள்ளார். இதுவரை கிடைத்துள்ள கல்வெட்டுச் சான்றுகளும் பிற்காலச் சோழர் காலத்தில்தான் சாதிகள் பெருகி தீண்டாமை இறுதி நிலைபெற்றன என்பதையும் புலப்படுத்துகின்றன.

 7, 8 ஆம் நூற்றாண்டுகளில் காணப்படும் பட்டயங்களில் இலக்கியங்களில் வர்ணமுறைதான் குறிப்பிடப்படுகின்றது. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற வடிவத்தில் குறிப்பிடப்படும் வர்ணமுறை தமிழகத்தில் அதேபோன்று இல்லை. மாறாக பார்ப்பனர், வேளாளர், சூத்திரர் என்றுதான் குறிப்புகள் கிடைக்கின்றன. சில இடங்களில் வேளாளர்கள் சூத்திரர்களாகத்தான் குறிப்பிடப்படுகின்றனர். இடைப்பட்ட சத்திரிய, வைசியப் பிரிவுகள் அக்காலத்தில் நடைமுறையில் இருந்ததாகச் சான்றுகள் கிடைக்கவில்லை. சோழர்கள் மற்றும் தமிழகத்தின் குறுநில மன்னர்கள் பார்ப்பனர்களைக் கொண்டு வேத வேள்விகள் செய்தும், இரணிய கர்ப்பதானம், துலாபார தானம் போன்றவைகள் செய்தும் தங்களை சூத்திர அந்தஸ்தில் இருந்து மாற்றிக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டாலும் அவர்களால் சத்திரியர்கள் ஆக முடியவில்லை என்பதையும் வரலாற்றுக் குறிப்புகள் காட்டுகின்றன. ஆனால் அவர்கள் தமிழ்மக்கள் சார்ந்த குலத்தவர்கள் என்பதலிருந்து மாறி, சந்திர குலத்தவர், சூரிய குலத்தவர் என்றும் பெயர் சூட்டிக் கொள்ளப் பார்ப்பனர்கள் உதவி புரிந்தனர். சோழர்கள் ஆண்ட 400 ஆண்டுகாலத் தமிழகத்து வரலாற்றில் கடைசி 100 ஆண்டுகள்தான் சாதிகளைப் பற்றிய குறிப்புகள் பெருக ஆரம்பிக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது பக்தி இயக்கம் அனைத்துச் சாதிகளையும் உள்ளடக்கியது என்பது வரலாற்றுக்கு முரணான அன்றைய நடைமுறையில் இல்லாத கூற்று என்பது வெளிப்படையாக புலப்படும்.

 தமிழ் மன்னர்கள் மட்டும் இன்றி விஜயநகர அரசர்களும் பார்ப்பன அடிமைகளாகவே இருந்துள்ளனர். விஜய நகரத்தைச் சேர்ந்த குமாரக்கம்பண்ணன் போன்ற அரசர்கள் தமிழ்நாட்டில் நுழைந்த உடனே செய்த வேலை என்பது இஸ்லாமியர் வருகையால் அறுபது ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இந்துக் கோவில்களை கும்பாபிஷேகம் செய்தது மட்டுமின்றி ஏராளமான பொன் கொடுத்து அந்தக் கோவில்களின் நிர்வாகத்தை பழைய முறைப்படி சீரமைத்து, தமிழ்நாட்டுப் பார்ப்பன உயர் சாதி சூத்திரர்களை பழைய முறைப்படியான கோவில் அதிகாரத்தில் நியமித்ததுதான். சுருக்கமாகக் கூறினால் தமிழ்நாட்டில் நிலைகுலைந்து போயிருந்த வருணாசிரம இந்துத்துவ தர்மத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களும், உயர்சாதித் தமிழ்ச் சூத்திரர்களும் இந்துத்துவ விஜய நகர மன்னர்களுக்குத் தமிழ்நாட்டைத் தாரைவார்த்து இழந்த அதிகாரத்தை மீட்டெடுத்ததுதான்.

 இப்படியாக தமிழ்மன்னர்கள் மட்டும் இன்றி தமிழ்நாட்டை ஆட்சி செய்த அனைத்து மன்னர்களும் சாதிவெறியர்களாகவும், பார்ப்பன அடிமைகளாகவுமே இருந்தனர். இதில் தமிழன், தெலுங்கன், மராட்டியன் என்ற பேதமெல்லாம் இல்லை. அவர்களின் ஒரே நோக்கம் மக்களை ஒட்டச் சுரண்டி கோவில்கள் கட்டுவதும், அரண்மனைகள் கட்டுவதும், அதில் ஆடம்பரமாக அந்தப்புரங்கள் வைத்துக்கொண்டு கும்மாளம் அடிப்பதும்தான். மொழியோ, இனமோ இவர்கள் நேர்மையாளர்களாக இருக்க உதவவில்லை என்பதுதான் மேற்கூறிய வரலாற்று உண்மைகளில் இருந்து நாம் தெரிந்துகொள்ளும் பாடம்.

 கடைசியாக தமிழ்த் தேசியவாதிகளால் மாமன்னன் என்று கொண்டாடப்படும் ராஜராஜ சோழனைப் பற்றியும் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்து விடுவோம். இல்லை என்றால் அவர்கள் கோபித்துக் கொள்வார்கள். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் என்ற மன்னனை கண்டுபிடித்தவர் ஹூல்ஸ் என்ற ஆங்கிலேயர் ஆவார். இவர்தான் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் முதன்முதலாக பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டுகளைப் படித்து இந்த எழுத்துக்கள் தமிழ்தான் என்றும், அவனுடைய காலம் கி.பி 985-1113 என்றும் சொன்னவர். அதற்கு முன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியது காடுவெட்டி சோழன் என்னும் மன்னன்தான் என்று பெரும்பான்மை தமிழ்மக்கள் நினைத்துக்கொண்டு இருந்தனர். ஆக சீண்டுவார் யாருமின்றி அனாதையாக கல்வெட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜராஜனை அதில் இருந்து எழுப்பிவிட்ட பாவத்தைச் செய்தவர் ஓர் ஆங்கிலேயரே ஆவர்.

 இந்த ராஜராஜன் சாதாரண அரசன் அல்ல, பத்தாம் நூற்றாண்டிலேயே வாழ்ந்த நரேந்திர மோடி ஆவான். அவனது உடல், பொருள், ஆவி என அனைத்தயும் பார்ப்பனியத்தை வளர்ப்பதற்காகவே செலவிட்டவன். இந்த ராசராசன் இரண்டாம் பராந்தகனின் இரண்டாவது மகன் ஆவான். அவனது அண்ணன் ஆதித்த கரிகாலன் என்ற பட்டத்து இளவரசன். அவன் உடையார்குடி பார்ப்பனர்களால் கொல்லப்படுகின்றான். கொலையாளிகள் பார்ப்பனர்கள் என்ற ஒரே காரணத்திற்காக ராஜராஜ சோழன் அவர்களைத் தண்டிக்காமால் விட்டுவிட்டான் என்ற செய்தி உடையாளூர் கல்வெட்டின் மூலம் தெரிந்துகொள்ள முடிகின்றது. அண்ணனின் உயிரை விட பார்ப்பனின் உயிர் ராஜராஜனுக்குப் பெரிதாகத் தெரிந்தது. பார்ப்பனனைக் கொன்றால் பிரம்மஹத்தி தோஷம் வந்துவிடும் என்ற பார்ப்பன சிந்தனையே அவனை அவ்வாறு செய்ய வைத்தது.

 இன்று தெலுங்கர்களாலும், மலையாளிகளாலும், கன்னடர்களாலும் தமிழ்நாட்டில் வளங்கள் சுரண்டப்படுவதாக கூப்பாடு போடும் தமிழ்த் தேசியவாதிகள் ராஜராஜனின் அரசியல் பிழைப்புவாதத்தை தெரிந்து கொள்ள வேண்டும். “நாடுபிடிக்கும் ஆசையில் இருந்த ராஜராஜ சோழன் தன் மகள் குந்தவையை வேங்கி நாட்டு மன்னன் விமலாத்தித்தனுக்கு மணம் முடித்து வைத்தான். அது போல ராசேந்தர சோழன் தன்னுடைய மகள் அம்மங்கா தேவியை கீழைச் சாளுக்கிய மன்னன் முதலாம் ராஜராஜனுக்கு மணம் முடித்து வைத்தார். பின்னாளில் அரியணை ஏறிய முதலாம் குலோத்துங்கன் அம்மங்காதேவியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது தமிழனுக்குப் பிறக்காதவன்.

 ராஜராஜன் பார்ப்பனியத்தின் ஊதுகுழலாக இருந்தது மட்டும் அல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் கேவலமாக நடத்தினான். அவனது ஆட்சிக்காலத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் தனிக்குடியிருப்புகளில் அதாவது ஊருக்கு வெளியே குடிவைக்கப்பட்டனர். பெரியகோவில் கல்வெட்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்த பகுதிகளைக் குறிக்கும் விதமாக பறச்சேரி, தீண்டாச்சேரி என்கிற பெயர்கள் குறிப்பிடுவதில் இருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம்.

 ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தஞ்சைப் பெரிய கோவிலில் 400க்கும் மேற்பட்ட பெண்கள் தேவரடியார்களாக பணியமர்த்தப்பட்டனர் என்ற செய்தியை தஞ்சை பெரியகோவில் வட வெளிச்சுற்றுச் சுவரில் உள்ள தளிச்சேரிக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இந்தப் பெண்களுக்கு மணம் புரியும் உரிமை கிடையாது. இந்தப் பெண்கள் அர்ச்சகர்களின் ஆசைக்குட்பட்ட வைப்பாட்டிகளாகவும் விளங்கினர். இப்படி தமிழ்மன்னர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தத் தேவதாசிமுறை மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் முன்முயற்சியால் தான் ஒழிக்கப்பட்டது என்பதையும் அதற்குத் தமிழ்த் தேசியவாதிகளின் முன்னோர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர் என்பதும் வரலாறு.

 ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் தான் பார்ப்பனர்களுக்கு பிரமதேயம், தேவதானம், சீவிதம் போன்ற பெயர்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் தானமாக கொடுக்கப்பட்டன. அப்படி கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு எந்த வரியும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏழை விவசாயிகள் மீது கொடுமையான வரிகள் விதித்து, அவர்களைத் துன்புறுத்திய ராஜராஜன் பார்ப்பனனின் நிலங்களுக்கு வரிவிதிக்காதது மற்றும் அவர்களுக்குச் சலுகைகள் வழங்கியதில் இருந்தே அவனின் பார்ப்பன அடிமைத்தனம் பல் இளிக்கின்றது.

 கங்கையைக் கொண்டான், கடாரம் கொண்டான் என்றெல்லாம் புகழ்கின்றார்கள். ஆனால் சாமானிய மக்களுக்கு என்ன செய்தான் என்பதுபற்றி யாரும் வாய் திறப்பதில்லை. சாதிவெறி பிடித்தவனாகவும், பார்ப்பன அடிமையாகவும், போர்வெறி பிடித்தவனாகவும் உள்ள ஒருவன் சாமானிய மக்களுக்கு எதைச் செய்திருக்கப் போகின்றான்? மக்கள் மீது எக்கச்சக்கமாக வரி விதித்து ஊர் ஊருக்கு கோவில்கட்டியதைத் தவிர அவனது சாதனைகள் என்று எதைச் சொல்வது?

 நம்முடைய கேள்வி எல்லாம் ஒரு மன்னனை எதற்காக ஆதரிக்க வேண்டும், எதற்காக எதிர்க்க வேண்டும் என்பதுதான். பல நாடுகளை வெற்றி கொண்டான், கோவில் கட்டினான், குளங்களை வெட்டினான், ஏரிகளை உருவாக்கினான் என்பதற்காக ஒரு மன்னனை தமக்கான வழிகாட்டியாக ஒருவனால் ஏற்க இயலுமா? வரலாற்றை இயக்கவியல் பொருள்முதல்வாத வழியில் ஆய்வு செய்யும் யாரும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆட்சி செய்த மன்னர்கள் மீது வெற்றுப் பிரமிப்பை உருவாக்கிக் கொள்வதால் யாருக்கு லாபம்? சமூக மாற்றம் வேண்டுவோர் எப்படி வரலாற்றைப் பார்க்க வேண்டும்? பத்துப்பைசா பிரயோசனம் இல்லாத பழம்பெருமைகள் பேசி ஒருவன் சமூக மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகின்றான் என்றால் நிச்சயம் அவன் ஆளும் வர்க்கத்தின் கைக்கூலியாகவே இருப்பான். ஜாரை எதிர்த்துதான் ரஷ்ய புரட்சி நடந்தது. சீன நிலப்பிரபுத்துவ அதிகார வர்க்கத்தை எதிர்த்துதான் சீனப்புரட்சி நடந்தது. இங்கே யாரும் தங்களை ஆண்ட மன்னன் என்பதற்காக அவர்களை எதிர்க்காமல் விட்டுவிடவில்லை. தங்களை ஆண்ட, ஆளும் மன்னன் ஒரு கொடுங்கோல்வாதி, பிற்போக்குவாதி, ஏகாதிபத்திய அடிமை என்று தெரிந்தபோது நெஞ்சுரத்தோடு எதிர்த்து நின்று அவர்களை வீழ்த்தினார்கள். அதற்குப் பெயர்தான் புரட்சி. சாதிவெறி பிடித்தவனையும், பார்ப்பனியத்தின் அடிமையாகக் கிடந்தவனையும் மாபெரும் இலட்சியவாதியாக ஒருவன் சித்தரிக்கின்றான் என்றால், அவனும் அதைப் போல சாதிவெறி பிடித்தவானகவும் பார்ப்பனியத்தின் அடிமையாகவும்தான் நிச்சயம் இருக்க முடியும்.

 ராஜராஜ சோழன் தமிழ் இனத்தின் அவமானச் சின்னம் என்பதுதான் வரலாறு நமக்கு கற்றுத் தரும் பாடம். அவன் மட்டும் அல்ல சேர, சோழ, பாண்டிய, நாயக்க மன்னர்கள் அனைவரும் அப்படித்தான் இருந்திருக்கின்றார்கள். நாம் வீரபாண்டிய கட்டபொம்மனையும், ஊமைத்துரையையும், கோபால நாயக்கரையும் ஆதரிப்பதற்கு முக்கிய காரணம் அவர்கள் கும்பினி அரசை எதிர்த்து போரிட்டார்கள் என்பதற்குத் தான். அவர்களது சமகாலத்தில் வாழ்ந்த பல தமிழ் மன்னர்கள் கும்பினி ஆட்சிக்கு முழு ஒத்துழைப்பு தந்து, அவர்களது அடிமைகளாய் மாறிவிட்ட சூழ்நிலையில் கட்டபொம்மன், ஊமைத்துரை, கோபால நாயக்கர் போன்றோரின் எதிர்ப்புக்குரல் அன்றைய கும்பினி ஆட்சியை குலை நடுங்கவைத்தது. அவர்களின் தன்னலமற்ற தியாகமும் நெஞ்சுரம்தான் அவர்களை பின்பற்றச் சொல்லி நம்மைத் தூண்டுகின்றது.

 ராஜராஜ சோழன் போன்றவர்களைக் கடுமையாக நாம் எதிர்ப்பதற்குக் காரணம் அவன் சாதிவெறியானாகவும், பிற்போக்குவாதியாகவும், பார்ப்பன அடிமையாகவும், பெண்களை தேவதாசிகள் ஆக்கி அழகுபார்த்தவன் என்பதற்காவும் தான். நாம் தமிழ்த் தேசியவாதிகளை கடுமையாக எதிர்ப்பதற்குக் காரணமும் அவர்கள் ராஜராஜ சோழனை தமிழ் இனத்தின் மீட்சிக்காக பாடுபட்டவன் போன்று சித்தரிப்பதுதான். அவர்களும் ராஜராஜ சோழன் போன்றே தாழ்த்தப்பட்ட மக்களிடம் நடந்து கொள்கின்றார்கள். அவர்கள் ராஜராஜ சோழன் போன்றே பார்ப்பனியத்தின் அடிமையாக இருக்கின்றார்கள். அவர்கள் ராஜராஜ சோழன் காந்தளூர்ச் சாலையில் பல மலையாளிகளின் தலையை அறுத்து துள்ளத் துடிக்க கொலை செய்தது போல, இவர்களும் இங்குள்ள தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்களின் தலைகளை அறுப்பதற்கு ஆயத்தம் செய்து கொண்டு இருக்கின்றார்கள். இப்போது தெரிகின்றதா தமிழ்த் தேசியவாதிகள் ஏன் ராஜராஜ சோழனை ஆதரிக்கின்றார்கள் என்று. ராஜராஜ சோழனை ஆதரிப்பது என்பதன் பொருள் சாதிவெறியனாகவும், பார்ப்பன அடிமையாகவும், இனவெறியனாகவும் நாம் மாற நினைக்கின்றோம் என்பதுதான்.

 உதவிய நூல்கள்:

1) கோவில்- நிலம்- சாதி- பொ.வேல்சாமி

2) பொற்காலங்களும் இருண்ட காலங்களும்- பொ.வேல்சாமி

3) பொய்யும் வழுவும்-பொ.வேல்சாமி

4) தமிழகத்தின் அடிமைமுறை-ஆ.சிவசுப்பரமணியன்

5) வரலாறும் வழக்காறும்- ஆ.சிவசுப்பிரமணியன்.

6) ராஜராஜ சோழனின் மறுபக்கம்- துரை.இளமுருகு

7) இராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர்- சி.இளங்கோ

8) களப்பிரர் ஆட்சியில் தமிழகம்- மயிலை சீனி வேங்கடசாமி.

9) வரலாறும் வக்கிரங்களும்- ரொமிலா தாப்பர்

- செ.கார்கி

Comments

36 comments

36
gurunathan
வழக்கமா தமிழ் மன்னர்களைக் கழுவி ஊற்றுபவர்கள் நாயக்க மன்னர்கள் பற்றி,அவர்களது பார்ப்பன அடிமைத்தனம் பற்றி வாய் திறப்பதில்லை.
இந்தக் கட்டுரை ஆசிரியரும் அதையே செய்துள்ளார். பெயருக்கு ஒரு வரி சேர்த்துள்ளார். அதுவும் விஜய நகர மன்னர்களாம். நாயக்கர் பெயரில் ஆண்ட மன்னர்களை விஜயநகர மன்னர்கள் என்று அழைப்பதே அயோக்கியத்தனம்.

நாயக்க மன்னர்கள் பற்றி இவ்வளவு நீள கட்டுரை எழுதி வெளியிடத் துணிச்சல் உண்டா??
சோழ மன்னர்கள் செய்துள்ள மக்கள் நலன் பணிகளை மூடி மறைப்பது என்?
இராசா
தமிழ் மன்னர்கள் பார்ப்பனியத்தை கட்டிக்காத்த அயோக்கியர்களாகவே இருந்துவிட்டு போகட்டும். நாயக்கர்கள் பார்ப்பனியத்தை கட்டிக்காத்த நல்லவர்களாகவே இருந்துவிட்டு போகட்டும்.

கட்ட்பொம்மு வெள்ளையனை எதிர்த்தால் நாட்டுப்பற்றாம். வேலு நாச்சியாரும், மருது சகோதரர்கள் என்ன திருடர்களா?

ஆயிரம் காலத்திற்கு முந்திய சமூகத்தை, இன்றைய கண்ணாடியை போட்டுக்கொண்டு பார்ப்பது அறிவீனம்.

இனிமேலும் தமிழ் அடையாளத்தை அவமானப்படுத்தும் திராவிடர்களின் பார்ப்பனியத்தை ஒழிப்போம். தமிழ் நாட்டை தமிழரே ஆளுவோம்.
நலங்கிள்ளி
தமிழுக்கும் தமிழ்த் தேசியத்துக்கும் எதிரான நஞ்சே இந்தக் கட்டுரையில் பொங்கி வழிகிறது.
POOMARI
Keetru athan Kolkaithan enna?
Surya
le. Nan niraya book ah padicha feel kidachathu. Miga arumaiyana katturai.ungal panni(work) melum thodara my hearty wishes.# இந்த ராஜராஜன் சாதாரண அரசன் அல்ல, பத்தாம் நூற்றாண்டிலேயே வாழ்ந்த நரேந்திர மோடி ஆவான். # very nice line.
Karuppusamy
அருமையான கட்டுரை. சீமானின் தம்பிகளுக்கு இதையெல்லாம் படித்து பதில் அளிக்க புரிதல் இருக்குமா என்று தெரியவில்லை. அது போக உங்கள் கட்டுரையில் பழந்தமிழ் சமூகத்தைப் பற்றிய பல தவறான சித்தரிப்புகள் உள்ளன. இது பற்றிய எனது விரிவான விளக்கத்தை பின்னால் எழுதுகிறேன். எவ்வாறாயினும் சரியான நேரத்தில் தனித் தமிழ் வாதிகளுக்கு தேவையான ஒரு கட்டுரையை எழுதியதற்கு பாராட்டுக்கள்.
arikaran
மனு தர்மம் நூல் எழுதியது தமிழ் அறிஞர்களா எனக்கு அப்படி ஒரு தகவல் கிடைத்து
பிரசன்னா
கார்கி அவர்களே, சாதியவாதிகளும், பார்ப்பன கைக்கூலிகளுமாகிய தமிழ் தேசியவாதிகளை நாறடித்த தங்களின் கட்டுரை மிக அருமை! ஆனால், கட்டபொம்மன், ஊமைத்துரை வகையறாக்களைப் பற்றி தாங்கள் சொன்ன ஒரு தகவல்தான் இடிக்கிறது. அந்த தெலுங்கு பாளையக்காரர்கள் ஒன்றும் புரட்சிகர ஆட்சியை நடத்தவில்லை. அவர்கள், ஆற்காடு நவாப்பிற்கு கப்பம் கட்டிக் கொண்டிருக்கையில், அதில் அடிக்கடி டிமிக்கி காட்டியதால், பாளையக்காரர்களிடமிருந்து ஒழுங்காக வரிவசூலித்துக் கொடுப்பதாக நவாப்பிடம் உறுதிசொல்லி, வெள்ளையன் உள்ளே வருகிறான். தங்களின் ஆதிக்கத்திற்கு தடையாக இருந்ததால் கட்டபொம்மன் வகையறாக்கள் மற்றும் இதர தமிழ் பாளையக்காரர்களும் ஆங்கிலேயரை எதிர்த்து வீரர்களும், தியாகிகளும் ஆகிவிட்டார்கள். மற்றபடி, அவர்களின் ஆட்சி ஒரு கேவலமான நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பைக் கொண்டதுதான். இதிலும், சில பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை நக்கிப் பிழைத்தார்கள் என்பதும் உண்டு. எனவே, நீங்கள் கட்டபொம்மன் வகையறாக்களைப் போற்றுவது எந்த லாஜிக்?
நகேன்
கெட்டிபொம்மு வீராதி வீரனா! :-)
அவரு வழி வந்த சந்ததியே
கூறக்கேட்டிருக்கிறேன் அவர் ஒரு
கொள்ளைக்காரரெண்டும் பெண்
பித்தெரெண்டும்! ஆனால் தாங்கள்
கூறுவதைப் பார்க்கும்போதே
தெறிகிறது நீங்கள் பொதுவுடமைப்
போர்வையிலுள்ள தெலுங்கெரெண்டு,
kumar
biased informations
மணி
பண்டைய தமிழர்கள் பற்றி கூறுகையில் புறநானூற்றில் உள்ளது தொல்காப்பியத்தில் உள்ளது என்கிறார் , அந்தப்பாடல்களை குறிப்பிட்டிருக்க வேண்டும் . இந்தக் கட்டுரையின் நோக்கம் தமிழர்கள் இழிவானவர்கள் என நஞ்சை விதைப்பதே ஆகும் . இந்த கட்டுரையை படிக்கிற எவரும் ராசராசன் காலத்தில் உலகில் உள்ள மற்ற நாடுகளில் நடந்தவைகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
சுடலைமனியன்
தனித் தமிழ் வாதிகளின் தவறான பிரச்சாரங்களை எதிர்கொள்ள வேண்டியது தேவைதான். எனினும் கார்க்கி அவர்களும் திராவிட இயக்கங்களின் ஊதுகுழலாய் இக்கட்டுரையை எழுதியுள்ளதாகவே பார்க்கவேண்டியுள்ளது.
முதலில் பார்ப்பனரை மட்டுமே பிற தமிழ் சாதிகளின் எதிரியாகக் கூற முனைவது கலப்பிலாத சைவர் சூழ்ச்சியாகும். அடுத்தபடியாக பார்ப்பனர் நலனுக்காகவே தமிழ் மன்னர்கள் செயல்பட்டனர் என்பது காமெடியாகும். பார்ப்பனரையும் சைவரையும் தங்கள் மந்திரி தந்திரியாக நியமித்தனரேயன்றி அவர்கள் சொல்படியெல்லாம் ஆடவில்லை. இங்கு சேரர், சோழர், பாண்டியர், வேளிர் ஆகிய மன்னர் மரபினரையே தமிழக அரச குலம் என்கிறேன். இவர்களே சங்ககாலத்திலிருந்து முடிமன்னர் மரபினராவர். பல்லவர், மலையமான், களப்பிரர் உட்பட்ட மன்னர் மரபினர் முடிமன்னர் மரபினர் அல்ல என்பதை உமாபதி சிவாச்சாரியார் குறிப்பிடுகிறார்.
களப்பிரர் காலத்திற்குப் பின் பார்ப்பனரும் சைவரும் அரசர்களின் எடுபிடிகளாக அரசனின் குறிப்பறிந்து வெகுஜன விரோதிகளாக செயல்பட்டனர். அதேவேளையில் தவறு செய்த பார்ப்பனர் தண்டிக்கப்பட்ட செய்திகளை பதிவு செய்துள்ள கல்வெட்டுகளும் உள்ளன. தன் ஆலோசனையாளர்களின் கைப்பாவையாக செயல்பட்ட எந்த அரசனும் சாம்ராஜ்யங்களை தோற்றிவித்ததாக சரித்திரம் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அடுத்து பறையர் இன மக்கள் தீண்டாச்சேரி மக்கள் போல் தனி சேரிகளில் வாழ்ந்த குறிப்புகளை யாரோ சொல்லக் கேள்விப்பட்டு அவர்களும் சோழர் காலத்தில் தீண்டத்தகாத சாதியினராக இருந்தனர் எனக் குறிப்பிடுவது அச்சாதி மேல் ஏவப்படும் வண்முறையாகும். பார்ப்பனச்சேரிகளும் கம்மாளச்சேரிகளும் ஈழச்சேரிகளும் இன்னும் பல சாதிகளின் சேரிகளும் சோழர் காலத்தில் காணமுடிகிறது.
தங்கவேல் என்ற பொறியாளர் எழுதிய கல்வெட்டுகளின் மூலம் பறையர் இனமக்களின் கடந்த கால வாழ்க்கை என்ற கட்டுரை இந்திய கல்வெட்டியல் மானாட்டு மலரில் வெளியிடப்பட்டதைப் படித்திப் பார்க்கவும்.
மற்றபடி சீமானின் தம்பிகளும், தங்களைப் போன்ற சைவ ஆதரவாளர்களும் எங்கு தவறு செய்கின்றனர் என்பதை சுட்டிக் காட்ட கீற்றில் தனிக் கட்டுரையே எழுத எண்ணியுள்ளேன்.
nagarasan
nalla aaiyvu nanri
mithulan
தமிழ்மண்ணைத்தமிழன் ஆளவேண்டும்என தமிழன் நினைப்பதுஒன்றும் தவறில்லை. வேறு இனமக்கள் வெளியிடத்திலிருந்துவந்து ஒருஇனத்தை ஆண்டுகொண்டும், அந்த இனத்தை லட்சக்கணக்கில் கொன்றொழிக்க உதவி செய்தும் ஒருஆட்சி உலகில் வேறு எங்காவது நடந்திருக்குமா என்பது சந்தேகமே. ஆனால் தெலுங்கரின்ஆட்சியில் அது தமிழனுக்கு நடந்ததால்தான் தமிழனை தமிழன்ஆளும்முறை வேண்டும் என கோரிக்கைவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுரையாளர் தமிழனுக்கு இப்போது மட்டுமல்ல ஆதிகாலத்திலும்கூட நடந்த அனைத்து இழிவுகளையும் பட்டியலிடுகிறார். அதன்வழியே என்னசொல்ல வருகிறார் என்பதை வெளிப்படையாக சொல்லாமல் ஏதேதோ பிதற்றுகிறார். இவரும் திராவிட வந்தேறிகளின் குரலையே சொல்லி இன்னமும் திராவிட தெலுங்கு வடுகர்களின்ஆட்சிக்கு வக்கலாத்து வாங்குகிறார்போலவே படுகிறது
செ.கார்கி
தமிழ்த்தேசியவாதிகளுக்கு எதிராக கட்டுரை எழுதுபவர்கள் அனைவரையும் தெலுங்கர்கள் என்று முத்திரை குத்துகின்றார்கள். நான் தெலுங்கனா இல்லை கன்னடனா என்று தமிழ்த்தேசியவாதிகளிடம் இருந்தும் சான்றிதழ் வாங்கவேண்டிய எந்த அவசியமும் எனக்குக் கிடையாது என்பதையும் அந்தச் சான்றிதழை கொடுக்கும் உரிமையும் தமிழ்த்தேசியவாதிகளுக்குக் கிடையாது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் சில நண்பர்கள் ஆதாரங்களைக் கேட்டிருக்கின்றார்கள். ஆதாரம் இல்லாமல் நாம் எதையும் எழுதுவதில்லை. அப்படி எழுத வேண்டிய எந்த அவசியமும் இல்லை. நான் கட்டுரையின் கீழே குறிப்பெடுக்கப் பயன்படுத்திய புத்தகத்தின் பெயர்களைக் குறிப்பிட்டு இருக்கின்றேன். ஆதாரம் வேண்டுபவர்கள் அந்தப் புத்தகங்களைப் படிக்க வேண்டுகின்றேன். இந்தக்கட்டுரையில் இருக்கும் பெரும்பாலான கருத்துக்கள் அய்யா பொ.வேல்சாமி அவர்களின் புத்தகங்களில் இருந்தே எடுத்தாளப்பட்டுள்ளது. ஆதாரம் வேண்டுபவர்கள் கீழே நான் சொன்ன அவரின் புத்தகங்களையும் மற்ற புத்தகங்களையும் படிக்கவும்
Karuppusamy
கார்கி, இயக்க இயல் பொருள் முதல்வாதத்தின் அடிச்சுவடியே தெரியாமல் தன்னை ஒரு மார்சியவாதியாக காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறார். நிலபிரபுத்துவ சமூகத்தின் எந்த மன்னனும் சமதர்மவாதியாக இருக்கமுடியாது என்பதைக் கூட இவரால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. மேலும் தேசிய இனப் பிரச்சினையை கையிலெடுக்கும் அரசியல்வாதிகள் செய்வதைத்தானே சீமானின் தம்பிகளும் செய்கின்றனர்.
கி.பி.1000இல் தங்கள் தேசிய இனத்தை சேர்ந்த ஒரு மன்னர் சமகாலத்திய உலகின் மிகப் பெரிய நிலப்பரப்பை ஆண்டதுடன் மிக வலுவாக இருந்தான் என இவர்கள் பெருமிதம் கொள்கின்றனர். கார்கி அவர்களோ கட்டப்பொம்முவை பாராட்டலாமே தவிர மக்கள் விரோதியான ராஜராஜ சோழனை பாராட்டமுடியாது என்கிறார்.
கட்டப்பொம்முவை நீங்கள் வலிந்து பாராட்டலாம். ஆனால், திருச்செந்தூர், திருவைகுண்டம் வட்டார மக்கள் அவனை ஒரு கொள்ளைக்காரனாகவேப் பார்க்கின்றனர். திராவிட இயக்கத்தின் குரலாகவே கார்கியின் இக்கட்டுரை உள்ளது.
இக்கட்டுரையில் 8ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் தீண்டாமை இல்லை என்பதை ஏற்கின்றார். அதன்பின்னரும் பறையர் போன்ற இன்றைய தாழ்த்தப்பட்ட சாதிகள் தீண்டாச்சாதிகளாக நடத்தப்பட்டனர் என்பதற்கு கல்வெட்டு சான்று இல்லை. தீண்டாச்சேரியில் புலையர் போன்ற பழங்குடிகள் குடியிருந்திருக்கலாம். சோழர்காலத்தில் பறையர் சிவன் கோயில் பூசாரிகளாகவும், கோயில்களுக்கு நன்கொடை வழங்கியவர்களாகவும் பல கல்வெட்டுகளில் பார்க்கின்றோம்.
உண்மையில் நாயக்கர் ஆட்சி காலத்தில்தான் பறையர், பள்ளர் போன்ற தமிழ் சாதிகள் தீண்டாச்சாதிகளாகினர். ஆனால் இச்செயல் தெலுங்கர்களால் மேற்கொள்ளப்பட்டது என்று தனித்தமிழ் வாதிகள் கூறுவது ஏற்புடையது அல்ல. நாயுடு, ரெட்டியார், பார்ப்பார், சைவ வேளாளர், முக்குலத்தோர், கொங்கு வேளாளர் ஆகிய சாதிகளின் கூட்டணியே இதனை செய்தது.
இவற்றில் தெலுங்கு சாதிகளைவிட தமிழ் சாதிகளே கடுமையான சாதிய அடக்குமுறைகளை செய்தனர் எனலாம். இதை மேலும் விளக்குவோம்.
Karuppusamy
கார்கி அவர்கள் பொ.வேல்சாமி மற்றும் ஆ.சிவசுப்ரமனியன் ஆகிய சைவ (வேளாள) மாயை என்ற வைரஸ் தாக்குதலுக்குட்பட்ட மார்க்சியம் படித்த ஆய்வாளர்களையே பெரிதும் சார்ந்து தன்னுடைய கட்டுரைகளை எழுதியுள்ளார். சமீபத்தில் த.தங்கவேல் எழுதிய “மீண்டும் ஆரியரைத் தேடி” என்ற நூல் வெளிவந்துள்ளது. அந்நூலில் வட ஆரிய சமூகத்தை வளர்த்தெடுத்தது தமிழ் சார்ந்த அறிஞர்களே என்றும் தங்களைப் போன்ற திராவிட அபிமானிகளால் பார்ப்பனரால் தமிழ் சமூகத்தில் புகுத்தப்பட்டதாகக் கருதப்படும் சாதியம், வர்ணப்பகுப்பு போன்றவை இந்திய சமூகத்தில் தமிழரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. மறைமலை அடிகள் கூறும் கருத்துக்களை சற்று மாற்றி இந்நூல் விவரிக்கின்றது. இந்நூலை வாசித்துவிட்டு கீற்றுலேயே விமர்சிக்கவும். எதிர்கொள்ள என்னைப் போன்றோர் தயாராக இருக்கிறோம். தேவைப்பட்டால் நூலை விமர்சனத்திற்கென்று விலையில்லாமல் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யலாம். [email protected] என்ற முகவரிக்கு தங்கள் முகவரியை அனுப்பினால் நூல் வந்து சேரும். பொ.வேல்சாமி அவர்களே கூட இந்நூலை விமர்சிக்க முடிந்தால் விமர்சிக்கக் கூறுங்கள். எதிர்கொள்ளலாம்.
Karuppusamy
சோழர் காலத்திற்குப் பின் நாயக்கர் காலத்தில் பிற தமிழ்ச் சாதிகளை இழிவுப்படுத்திய நாயுடு, ரெட்டியார், சைவ வேளாளர், பார்ப்பார், முக்குலத்தோர், கொங்கு வேளாளர் ஆகிய சாதிகளில் பின் மூன்று சாதிகளும் அ.இ.அ.தி.மு.க வின் சமூக அடித்தளமாக உள்ளன. முன் மூன்று சாதிகளும் தி.மு.கவின் சமூக அடித்தளமாக உள்ளன. சீமானின் தம்பிகள் பின் மூன்று சாதிகளையும் தீண்டாமையை தினித்த குற்றத்திலிருந்து விடுவிக்க அ.இ.அ.தி.மு.கவின் ஊதுகுழலாக செயல்பட்டு தமிழ் தேசியம் பேசுகின்றனர். கார்கி போன்றோரோ இக்குற்றச்சாட்டை பார்ப்பார் மேல் சாத்திவிட்டு முன் மூன்று சாதிகளையும் விடுவிக்க தி.மு.க.வின் ஊதுகுழலாக செயல்படுகின்றனர்.
இந்த யுக்தியைத் தான் திராவிட இயக்கத்தினர் தொடக்க காலங்களில் பயன்படுத்தி அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் பார்ப்பார் மேல் ஏற்றிவிட்டு பிற மேல் சாதிகளை குற்றமற்றவராகக் காட்டினர். தமிழ் தேசிய உணர்வுகளைத் தூண்டி பார்ப்பனரை தனிமைப் படுத்துவதே இவர்களின் நோக்கம். இதைப் பயன்படுத்திக் கொண்ட தமிழக பெருவணிக வர்க்கத்தினர் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற கோசத்தை எழுப்ப வைத்து தங்களுடைய தொழில் தொடங்கும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டனர். உண்மையில் அன்றிலிருந்து இன்றுவரை தெற்கு வாழ்ந்தது வடக்கு தேய்ந்தது என்பதுதான் நிலை. ஆனால் அன்று வட முதலாளிகள் வாழ்ந்தார்கள். தமிழ் முதலாளிகள் தேய்ந்திருந்து இன்று நிகர் செய்து கொண்டனர். அதன்பின் அகில இந்திய சந்தை தங்களுக்கும் வேண்டும் என்ற நோக்கில் தமிழ் தேசிய உணர்வுகளை மழுங்கடிக்க செய்தனர்.
திராவிட இயக்கத்தினர் இன்றும் அவ்வப்போது தமிழ் தேசிய உணர்வுடம் பேசுவதெல்லாம் தமிழ் தொழில் அதிபர்களுக்கு உரிய பங்கை மைய அரசு கொடுத்திடவேண்டும் என்ற நோக்கிலேயேயாகும். ஆனால் தமிழ் தேசிய உணர்வுகள் எல்லை மீறிப் போவதை தமிழக பெருமுதளாளிகள் விரும்புவதில்லை.
இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க. அம்பலப்பட்டு நின்றாலும் உயர்குடி வேளாள-முதலியார் சாதி அறிஞர்கள் அ.இ.அ.தி.மு.க வை பார்ப்பனக் கட்சியாக காட்டி தி.மு.க. வை தமிழருக்கான கட்சியாக முன் நிறுத்துகின்றனர். இதை எதிர்கொள்வதற்கே அ.இ.அ.தி.மு.க வினால் சீமான் வளத்து விடப்படுகிறார்.
உண்மையில் தமிழக முதலாளி வர்க்கத்தினர் தேசிய இன உணர்வு ஒரு அளவிற்கு மேல் அதிகரிக்க விரும்புவதில்லை. எனவே தமிழகத்தில் சீமான் போன்றோரை நாம் ஒருபோதும் பொருட்படுத்தத் தேவையில்லை.
Ravi-Swiss
வடுகர்கள் பண்ணும் குற்றங்களை மறைக்க பழசு வரலாறுகளை தோண்டி எடுக்கின்றார்கள் , அதனால் தமிழர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும், ஓரணியில் நின்று தமிழன் தமிழகத்தை ஆழ வழி சமைக்க வேண்டும், வடுகர்கள் இனி தமிழகத்தை ஆழ விடக்கூடாது
Ravi-Swiss
இன்று கார்க்கி போன்ற பலர் திமுகவிடம் பெரும் பணம் வாங்கிக்கொண்டு தங்கள் இஸ்ரம் போல் எழுதிக் குவிக்கின்றார்கள் ,இப்படியான துரோகிகள் அன்றும் உண்டு இன்றும் உண்டு ,நான்கு புத்தகத்தை இவர் படித்து விட்டு இதனை எழுதியவுடன் இவர் சொல்வது எல்லாம் உண்மை என்று நாம் எடுத்துக் கொள்ளவேண்டி இல்லை, உண்மையில் சோழன் பார்பானின் அடிமையாகவே இருந்து இதனை செய்தான், காரணம் பார்ப்பானின் சுல்சிக்கு இறையாகி விட்டான், தன் மக்களின் எதிர்கால நன்மைகளை அவன் பார்க்கவில்லை, தவிர ஏட்டிக்குப் போட்டியாகவே பார்ப்பானும் வடுகனும் தமிழர்களை அடிமைகள் ஆக்கினார்கள், இதில் இருந்து இவர்கள் தப்ப இப்போ சாதி சாயம் பூசுகின்றார்கள், ஒட்டு மொத்தமாக அன்று நடந்தவைகளை நாம் இன்று பேசாமல் ஒட்டு மொத்த தமிழர்களின் நன்மைகளைப் பற்றி பேசவேண்டும், பழசு வரலாறுகளை குப்பையில் எறிவோம், அதனால் கேரளா முதல்வர் சொன்னவற்றை வேத வாக்காக எடுத்து தமிழர்கள் ஒன்று சேரவேண்டும், மதங்களை கடந்த அன்பு தமிழர்களுக்குள் வரவேண்டும், சீமானும் நல்ல தமிழன் என்று நான் கூற வரவில்லை, அனைவரும் திருந்தி நடந்து தமிழர்களின் நலனுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் நன்மை பண்ணவேண்டும், அதனை விட்டு திமுகவை மீண்டும் கொம்பில் ஏற்றிவிட யாரும் முஜலக் கூடாது , இதுவே ஒட்டு மொத்த தமிழர்களின் ஆதங்கமாக இருக்கவேண்டும்,
இளமுருகு
இடைக்கால சோழர்மன்னர்கள் மட்டும் அல்ல சஙக்காலம் தொட்டே மன்னர்கள் இதில்சிறு மன்னர்கள் முடிசூடிய மன்னர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் பார்ப்பனர்களையே தூக்கிப்பிடித்து நிறுத்தி அவர்களுக்கு வேண்டியதை செய்யூம் அடிமைகளாகவே இருந்திருக்கின்றனர் ஒரு எ.கா மாமன்னனென்று கருதப்படும் கரிகலன் ஒரு முழு பார்ப்பனப்ப்ரியன் என்பதை இச்சங்கப்பாடல் கூறும் பார்ப்பனர்களின் யாகங்களுக்கு தொண்டு செய்வதையே முதல் கடமையாக்கொண்டவன் இவன்

எருவை நுகர்ச்சி, யூப நெடுந் தூண்,
வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்;
வேதியர்கள் விருப்பத்திற் கியைந்து வேள்விபல
முடித்த வீறுடைமையும், பிறவும் கரிகாலனுடைய புகழ்க் கூறுகள் இது கருங்க்குழல் ஆதனார் என்ற புலவர் பாடிய புற நானூற்றுப்பாடலாகும்
Karuppusamy
பார்ப்பனர்கள் அரசர்களின் நன்மைக்காக யாகங்கள் செய்த ஒரு வகையான பணிமக்களே. இதனால்தான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பார்ப்பனரை கரும வினைஞர் எனக் குறிப்பிட்டார். மந்திரவாதிக்குப் பணம் கொடுத்து பூசைகள் செய்வது போல் தான் பார்ப்பனரைக் கொண்டு யாகங்கள் செய்வதும். மந்திரவாதிகளிடம், அவர்களுக்கு மந்திரம் தெரியும் என்பதற்காக பயபக்தியுடன் எஜமான் (யாகத்தை நடத்துவிக்கும் அரசனோ வணிகனோ எஜமானனாவான்) நடந்துகொள்வது போல் தான் பார்ப்பனரிடமும் எஜமான்கள் பயபக்தியுடன் நடந்துகொண்டனர். இது உலகம் முழுக்க அனைத்து சமூகங்களிலும் காணப்படும் வழக்கம்தான்.
இளமுருகு, கார்கி போன்ற சைவ அடிவருடிகளும் சீமானின் தம்பிகளும் இனியும் பிற தமிழ் சாதிகளை (பார்ப்பனர், நாயுடு, ரெட்டி, வேளாளர்-முதலியார், முக்குலத்தோர், கொங்கு வேளாளர் அல்லாத சாதிகள்) ஏய்க்க முடியாது. அனைத்து தமிழ் சாதிகளும் இந்த மேட்டுக்குடி சாதிகளைப் போல் சாதிய ரீதியாக சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். தமிழ் தேசியம், திராவிட தேசியம், இந்து தேசியம் என்ற மேல் சாதிகளின் தூண்டில்களில் பிற தமிழ் சாதிகள் சிக்குவதாக இல்லை நண்பரே.
செ.கார்கி
கருப்புசாமி அண்ணே, இந்தச் சட்டையைப் போட்டுகிட்டு பேசுங்க, எல்லாரும் உங்க பூணூலையே பார்த்துக்கிட்டு இருக்காங்க பாருங்க, கண்ணு வைச்சிர போராங்க
Amalan
Car key avargale, ungal vaadhangalil parppana vaasam adhigam veesukirathu.

"This particular content has more innocence details and reference too".

Better to remove this content.

I Oppose Strongly
இளமுருகு
அண்ணண் கருப்பு சாமி அவர்கள் எனக்கே தெரியாத என்னைப்பற்றிய உண்மையை வெளியிட்டுள்ளார் அவர்க்கு எமது நன்றி ! நான் சைவர்களின் அடிவருடி என்பதே அது! ஆனால் எந்த சைவனின் எந்த அடியை எப்போது வருடினேன் என்பதையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும் அது செல்க அண்ணண் கருப்பு சாமி ராசராச சோழனையை ஆதரிக்கிறாராஅல்லது எதிர்க்கிறாரா /
Karuppusamy
கார்கி அவர்களே ஏதோ அரைகுறை மார்க்ஸிய வெளிச்சத்தில் தனித்தமிழ் வாதிகளை விமர்சிப்பதாகக் காட்டிக் கொண்டீர்கள். இதற்கு பொ.வேல்சாமி, ஆ.சுப்ரமணியன் போன்ற மார்க்ஸியம் அறிந்த ஆய்வாளர்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டீர்கள். இப்பொழுது என்னுடைய விமர்சனத்தைத் தாங்கமுடியாமல் சாயம் வெளுத்து சுத்த சைவராக நிற்கின்றீர்.

பூனூலை பார்பனர், கம்மாளர், செட்டியாரின் சில பிரிவுகள், சத்திரிய அந்தஸ்து கோரும் தமிழ்ச் சாதிகளில் சில பிரிவினர் என பலரும் அணிகின்றனர். எனினும் நான் அணிந்துள்ள பூனூல் பார்ப்பன பூனூல் என்பதை தாங்கள் அறிந்து அம்பலப்படுத்தியுள்ளீர்கள். தங்கள் திறமையைப் பாராட்டலாம். ஆனால் பார்ப்பனரிடம் வாதம் செய்யக் கூடாது என்பதுதான் தாங்கள் கற்ற பாடமா. வாதமே இல்லாதபோது இவ்வாறு நழுவுவதே உங்களைப் போன்றோரின் வழக்கமாக உள்ளது.
எங்கள் பார்ப்பன அடிவருடி தங்கவேல் அவர்கள் எழுதிய “ மீண்டும் ஆரியரைத் தேடி ...” நூலை பெற்று வாசித்து விமர்சிக்கும் திராணி இருந்தால் செய்ய முயற்சி செய்யவும். நூல் விலையில்லாமல் விமர்சனத்திற்காகக் கொடுக்கப்படும் என்றும் கூறிவிட்டோம்.
செ.கார்கி
கருப்பு சாமி தன்னைப் பார்ப்பனர் என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி. மேலும் நீங்கள் குறிப்பிட்ட தங்கவேலுவும் பார்ப்பன அடிவருடி என்று வெளிப்படையாக சொன்னதற்கும் நன்றி. உங்களுக்கு திராணியிருந்தால் நான் எழுதிய கட்டுரைக்கு மறுப்பு கட்டுரை எழுதுங்கள். நீங்கள் தான் மார்க்சியத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர் ஆயிற்றே. அந்தக் கொட்டையை நாங்களும் கொஞ்சம் பார்க்கின்றோம். மேலும் என்னை சைவ அடிவருடி என்று சொன்னீர்கள். மனிதக்கறியைத் தவிர மற்ற அனைத்து கறியையும் வெளுத்துக்கட்டும் என்னைப் போய் சைவ அடிவருடி என்று சொன்னால் எதனால் சிரிப்பது என்று தெரியவில்லை. போன்டி ஆகாமல் தங்கள் கைவசம் வைத்திருக்கும் அந்த நூலை எடைக்குப் போட்டுப் பேரீச்சம் பழம் வாங்கித்தின்னவும். வாழ்த்துக்கள்.
N Nagarajan
சீமானின் தம்பிகள் இப்பொழுது விடை சொல்லுங்கள்.

இந்த சவாலை (கந்தசாமி) நாம் சேர்த்து சந்திபோமா ?? இல்லை நாங்கள் (திராவிடன்/ மார்க்ஸியன் ) மட்டும்
சமாளிக்கவேண்டும?? !!!
Surya
Someone told Mr. Karki getting money from DMK. Surely I objected it. Avar money than mukiyam yenru karuthi iruthal RSS I'll iruthirupar. He is not like that person. Avar oru nala kolhaivathi.
Karuppusamy
மறைமலை அடிகள், கனகசபை பிள்ளை போன்ற சைவர்களின் சமூக ஆய்வுகளைத் தூக்கிப் பிடிக்கும் திராவிட இயக்க ஆதரவாளர்களை சைவ அடிவருடிகள் என்கிறேன். மற்றபடி கார்கி, இளமுருகு போன்றோர் தி.மு.க. விடம் பணம் வாங்கிக் கொண்டெல்லாம் அக்கட்சிக்கு சாதகமாக எழுதவேண்டியதில்லை. தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்பது போல் இவர்களின் சாதிய சமூகப் பின்னணி இவ்வாறு எழுத வைக்கின்றது. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பெருவாரியான தமிழ்ச் சாதிகளை கீழ்நிலைக்குக் கொண்டு சென்ற சாதிகளில் பார்ப்பன சாதியை விடுவிக்கும் நோக்கில் (அ.தி.மு.க. வின் ஊதுகுழல்) தனித்தமிழ் வாதம் பேசும் சீமானின் தம்பிகளை இப்போது துணைக்கழைக்கின்றீர்கள். நாயக்கர் காலத்திலிருந்து இன்றுவரை தமிழ்ச் சாதிகளை ஏய்த்து வரும் ஆதிக்க சாதிகள் பலவிதமாக வேசமிடுகின்றன. அதில் ஒரு வேசம்தான் சீமானின் அவதாரம். இவ்வாறு தமிழ்ச் சாதிகளின் எதிரிகள் பிரிந்திருந்து ஏமாற்றுவதை விடுத்து இணைந்து செயல்பட்டால் பிற தமிழ் சாதிகள் முழுவதுமாக விழித்துக் கொள்ள வழி பிறக்கும்.
கருப்பசாமியின் பூணூல் பார்ப்பன பூணூல் என்று ஏற்றுக் கொண்டதும் மகிழ்ந்த கார்கி அவர்களுக்கு சிறு விளக்கம். உங்களுடைய சிவப்பு சாமியாகிய சிவன் பைங்கட் பாப்பானாவான் (பரிபாடல்). பைங்கட் பாப்பானின் அப்பன் கருப்புசாமிதான் (ஐயனாரப்பன்) முதல் பூணூல் தரித்தவனாவான். இந்த முதல் பூணூல் தரித்த பாப்பானுக்கு முந்திய பறையரைதான் தாங்கள் சோழர்காலத்திலேயே தீண்டத்தகாத சாதியாக இருந்ததாக எழுதியுள்ளீர்கள் என சுட்டிக் காட்டினேன். சோழ்ர்கால கல்வெட்டுகளில் தீண்டாச்சேரி வேறு பறைச்சேரி வேறு என்பதையும் சுட்டிக் காட்டினேன். தீண்டாச்சேரி குறிப்பிடப்படும் அதே கல்வெட்டில் பறைச்சேரியும் குறிப்பிடப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
இத்தரவுகள் த.தங்கவேல் எழுதிய “கல்வெட்டுகளின் மூலம் பறையர் இனமக்களின் கடந்த கால வாழ்க்கை” என்ற கட்டுரையில் படித்துக் கொள்ளலாம். இக்கட்டுரை அனைத்திந்திய கல்வெட்டியல் மாநாட்டில் வாசிக்கப்பட்டு மாநாட்டு மலரிலும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழரை ஏய்த்த அவாளும், சைவாளும் இரு அணியாக செயல்பட்டு சுகமாக இருந்து வருகிறார்கள். இன்று பிற சாதிகளிடம் விழிப்புணர்வு வந்துள்ளதை இரு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. பார்ப்பன அடிவருடியான சீமானையும் சைவ அடிவருடிகள் துணைக்கழைக்கும் நிலைக்கு என் விமர்சனம் தங்களிடம் பாதிப்பு ஏற்படுத்தியது என்பது மகிழ்ச்சியே.
கார்கி அவர்களின் சாரமற்ற கட்டுரைக்கு இதற்கு மேல் விமர்சனம் தேவையில்லை. என்னுடைய கருத்துக்களை தனிக் கட்டுரையாக கீற்றில் எழுத உள்ளேன். முடிந்தால் அக்கட்டுரையின் மீது வாதம் செய்யுங்கள்.
Raja
இந்த கட்டுரையை எழுதியவன் நிச்சயம்
தமிழன் அல்லாத திராவிடன் அல்லது பிறர் என்பது தெளிவு

கட்டுரையும் கருபோருளும்
கழுதைக்கு கடிவாளமிட்ட கதையாகி போனது

தமிழ் தேசியம் என்பது அடிப்படையில்

தமிழில் பேச வேண்டும்

(குறிப்பு எந்த தெலுங்கரும் , நாயக்கரும் , செட்டியாரும் தமிழ் வளர்க்க வில்லை திராவிடம் என்ற விஷத்தையே விதைகிறர்கள் அவர்களின் தாய் மொழி தமிழ் இல்லை )

தமிழன் பேச்சிலும் மூச்சிலும் நடத்தையிலும்
தமிழனாக வாழ்பவன் அவனுக்கு தமிழ் மட்டுமே உயிர் அதன் பண்பாடு கலாச்சாரம் அத்தனையும் உயிர் நாடி

இக்கட்டுரைக்கு சீமான் தம்பிகள் விளக்கம் தரத்தேவையில்லை
தன்மான தமிழர் நாம் விளக்கம் தந்தாலே போதும்!

திராவிடம் என்ற கொள்கை
கர்நாடகம், ஆந்திரா, கேரளா , தமிழ்நாடு என எப்போதோ பிரிந்துவிட்டது.

தமிழ் நாட்டில் மட்டும் தமிழ் வளர்க்காமல் திராவிடம் ஏன் வளர்க்க வேண்டும் ?

இக்கேள்வி கேட்காததால் தான்

தமிழ் நாடு தமிழன் கையில் இல்லாமல் திராவிடன் கையில் . , .

இலங்கையில் வாழ்பவன் தமிழனாகவும்
தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் திராவிடர்களாகவுமே பாகுபாட்டுடன் இருந்து வருகின்றனர்

அதன் விளைவு : கொத்து கொத்தாக நம் இன மக்களின் வாழ்கை
பின வாழ்க்கையாகி மயானமனது

அருணகிரி நாதர் திராவிட ஆரிய மொழி கலந்தே கந்தனை பாடியுள்ளார்
தமிழ் கடவுளை முழு தமிழ் கொண்டு அல்ல

தமிழ் வாழ்க ! தமிழ் வளர்க ! தமிழர் இணைக!

ஆதி தமிழரிடம் கற்றுக்கொண்டும், ஆதி தமிழரிடம் உண்டு குடித்த பிறகும்

மீதி தமிழர்களின் தலை மிதிக்க ?

துனிகிறையா திராவிடனே ? இனி காலம் பதில் சொல்லும் - - - - - - -
கட்டுரைக்கு ஒரே வரியில் தன்மான தமிழரின்

~~~ """""" தமிழின் """"~~~~~~
பிள்ளைதான் தாய் அன்பு தெரியா
x திராவிடம் x

ராஜா ராஜன் மட்டும் அல்ல எல்லா அரசனுக்கும் தவறான சில பக்கம் உண்டு.
பல திராவிட மன்னர்களுக்கு இதைவிட பக்கங்கள் அதிகம்

நாங்கள் ராஜா ராஜனை அவன் அரசியலை பார்க்கவில்லை (அவன் செய்த நற்செயல்கள் பற்றி பார்க்கிறோம்) .
தமிழனும் எம் தமிழ் தாய்த்திருநாட்டில்
அரசனாக ஆண்டிருகிரானே என்று வியந்து
பார்க்கிறோம் !

நாங்கள் ஆரியத்தை பற்றி பேசவில்லை
ஆதி தமிழையே பேசுகிறோம்

நங்கள் மீதியை பார்க்கவில்லை ஆதியை பார்க்கிறோம் !

சரி ஒரு தமிழரை தவறானவன் என்று சுட்டிக்காட்டி இன்னொரு தமிழனை தலைவனாக்காமல் !
திராவிடன் தலைவனாக . . . . . ..

தமிழரை சாதியை கொண்டு பிரிப்பதன் பேர் தான் இன்றைய திராவிட கொள்கை ! இது சீமானையும் விட்டுவைக்கவில்லை.

சீமான் சாதியை நம்புபவர் இல்லை தமிழை நேசிப்பவர் .

ஊர் ரெண்டனால் குத்தாடிக்கு கொண்டாட்டமாம்
ஆடு நனையுதே என்று ஓனான் அழுததாம்
என்பது போலும் உள்ளது உங்கள் கட்டுரை

ஆரியத்தை காக்க ஆரியனும் திராவிடத்தை காக்க திராவிடனும் இருக்கையில்
ஆதி தமிழன் ஏன் தமிழை காக்க கூடாது
தமிழன்
ஏன் தமிழ் நாட்டை ஆள கூடாது ?

தமிழன்
ஏன் தமிழ் நாட்டை ஆள கூடாது ?

தமிழ் வாழ்க ! தமிழ் வளர்க ! தமிழர் இணைக!
தமிழர் சாதி கடந்து இணையும் நேரம் !!!!!
சாதி மதம் கடந்து
!!! நாம் தமிழர் என்றே இணைவோம்!!!!!
தமிழ் தாயின் நல்ல பிள்ளைகள் ஆவோம் .

தமிழ் வாழ்க ! தமிழ் வளர்க ! தமிழர் இணைக!
தமிழ்பாலன்
அட திராவிட எச்சைங்களா!!!! இன்னும் எத்தனை நாட்கள் தமிழர் சொத்துக்களை திருடுவிங்க. புலித்தோல போர்த்திய புலி உண்டு, இன்று தமிழர் என்ற போர்வையில் திராவிட பன்றிகள் உண்டு, ஜாக்கிரதை தமிழா விழித்துக்கொள். அது 68 வயதில், 18 வயது பெண்ணை திருமணம் செய்து வைக்க கேட்கும்.....
selva murugan
எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசியா அந்த திருட்டுப்பய
கொட்டிபொம்முலுவையும், ஊமத்துரையும் ஆதரிக்குறதாக சொன்னியே அப்போதே உன் கொல்டிக்கொண்டை வெளியே வந்துவிட்டது. அட நாதாரிகளா தெலுங்கு கொல்டிகளை ஏன் எதிர்க்க வேண்டும் என்பது இப்போது புரிகிறது. திராவிடத்தை வேரறுப்போம் தமிழ் தேசியம் நிலைநாட்டுவோம்.
வீரா
சு.ப. வீ கூட நாயக்க மன்னர்ளையும்....சர பே ாஜி மன்னர்ளையும் செல்லமாகத்தான்
கடிந்து கெ ாண்டார். திராவிட சிந்தனை
ஆயிற்றே....இடதுசாரி சிந்தனை கெ ாண்ட இக்கட்டுரையாளர்..கெ ாஞ்சம் கடிந்து தான் எழுதியுள்ளார்...நாயக்க மற்றும்
மற்ற வகையறாக்களை....
ஆக .....இக்கட்டுரையின் படி...எந்த தமிழ் பெருமைகளும் கெ ாள்ளாமல்....ஜெய் திராவிட பவ என உரக்க முழக்கமிட்டு வேரெந்த சிந்தனையுமின்றி வாழ்வே ாம்...
கட்டுரையாளர் சமகால திராவிட பஞ்சமி நில ஆக்ரமிப்பு மற்றும் ொள்கைகள் பற்றியும் கட்டுரை எழுதி திராவிடத்திற்கு மேலும் பெருமை சேர்க்கலாம்...
தமிழ்மாறன்
தமிழ்தேசியத்தால் பிளவு வருகிறது என்றால் அந்த தமிழ் தேசியத்தை ததூக்கி எறிவோம்.
Vil
போலி தமிழ் இனம்

தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இன ரீதியாக தமிழர்கள் அல்ல திராவிடரும் அல்ல. தமிழ்நாட்டின் பெரும்பாலான நாக குலங்கள் திராவிடத் தமிழர்கள் அல்ல. மறவர், முக்குவர் மற்றும் சிங்களவர்கள் முற்குஹர் எனப்படும் கங்கை நதிக்கரையிலிருந்த குஹன் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

கள்ளர் மற்றும் வெள்ளாளர் போன்ற களப்பிர வம்சாவளியினர் சேதி ராஜ்ஜியத்திலிருந்து அதாவது மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கலாம். வெள்ளாளர்கள் கலிங்க நாட்டிலிருந்து வந்தவர்கள் எனவே மட்டக்களப்பு மான்மியத்தில் கலிங்க வேளாளர் என்று அழைக்கப்பட்டனர். வேளாளர்கள் கலிங்க நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்ததால் மட்டக்களப்பு மான்மியத்தில் கலிங்க வேளாளர் என்று அழைக்கப்பட்டனர். வேளாளர்களின் மூல மொழி பிராகிருதம் அல்லது தேவநாகரி மொழியாக இருந்திருக்கலாம்., திராவிட மொழிகள் அல்ல. வேளாளர் மற்றும் கள்ளர் யாதவ-நாக இனங்களின் வேர்களைக் கொண்டிருக்கலாம்.

பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தானில் உள்ள பரதா ராஜ்ஜியத்திலிருந்து பரதவர் குடிபெயர்ந்தார்கள். அகமுடையார் என்பவர்கள் கள்ளர், மறவர், பரதவர் மற்றும் கி.பி 1330 இல் ஹொய்சள பல்லாளனால் கொண்டுவரப்பட்ட துளுவ படையெடுப்பாளர்களின் கலவையாவர்.

பண்டைய நேபாளத்தில் உள்ள அஹிச்சத்ராவிலிருந்து கடம்ப மன்னன் மயூரவர்மாவால் கி.பி 345 இல் நாயர்கள் கர்நாடகாவிற்கு கொண்டு வரப்பட்டனர். தமிழ் மக்களில் பெரும்பாலோர் முதலில் பிராகிருதம் பேசி வந்த நாகர்கள்.

இலங்கை கரையர் மற்றும் சிங்கள கரவே இருவரும் பொதுவான தோற்றம் கொண்டவர்கள். கரையர் மற்றும் கரவே ஆகியோர் நாக வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பாண்டவ வம்சத்தின் குருகுல வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தமிழர்களும் அல்ல திராவிடர்களும் அல்ல. இலங்கையில் நடந்த வன்முறை இனப் போராட்டத்தின் பின்னணியில் கரையரும் கரவேயும் இருந்தனர்.

கேரளாவின் பல தமிழ் குலங்கள் இப்போது மலையாளம் மட்டுமே பேசுகிறார்கள். நவீன மலையாளம் என்பது நாயர்களின் நேபாள மொழி மற்றும் மேற்கத்திய தமிழின் கலவையாகும். நாடார்கள் தமிழையும் மலையாளத்தையும் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். கர்நாடகாவில் நாடார்கள் உருது மொழி பேசும் பட்டாணி முஸ்லிம்களின் உபசாதி. ஆனால் நாடார்கள் அனைவரும் பண்டு தமிழர்களாகவே இருந்துள்ளனர்.

தமிழர்கள் போல் நடிக்கும் முதலியார்களில் பெரும்பாலானோர் ராயலசீமா கடலோரப் பகுதியில் வசித்த தெலுங்கு கைகால சாதியைச் சேர்ந்தவர்கள். தெலுங்கு கைகால சாதியில் இருந்து தமிழ் கைக்கோள முதலியார்களும் செங்குந்த முதலியார்களும் வந்தவர்கள்.

தமிழ் பிராமணர்கள் மகாராஷ்டிராவின் தேசாஸ்த பிராமணர்களிடமிருந்து வந்தவர்கள். தமிழ் பிராமணப் பெண்கள் இன்றும் மகாராஷ்டிர பாணியில் ஆடை அணிகின்றனர். தமிழ் பிராமணர்களும் மகாராஷ்டிர உடையையே அணிந்தனர். கவிஞர் பாரதியார் மகாராஷ்டிர பாணி தலைப்பாகை மற்றும் கருப்பு கோட் அணிந்திருந்தார்.

எனவே தமிழ் இனம் என்று எதுவும் இல்லை. மீனா, பில், கோண்ட்டுகள், ஓரான், மால்டோ போன்ற பல வட திராவிட குலங்கள் இப்போதுதான் இந்தி மட்டுமே பேசுகின்றன. எனவே மொழியின் அடிப்படையில் மக்களை பிரிக்க முடியாது.

நாடார்கள் பலிஜா நாயக்கர்களுடன் இனரீதியாக தொடர்புடையவர்கள், அவர்கள் அவர்களின் பரம எதிரிகளாகவும் இருந்தனர். நாடார்கள் ராஜஸ்தானின் இந்தி பேசும் மீனா சாதியினருடன் இனரீதியாக தொடர்புடையவர்கள்.

எந்த இனத்தவரும் தமிழ் பேசலாம். தமிழர்கள் மற்ற திராவிட மொழிகளையும், ஹிந்தியையும், ஒரு ஐரோப்பிய மொழியையும் கற்க வேண்டும். தமிழக அரசியல்வாதிகளின் மகன்களில் பெரும்பாலானோர் சரளமாக ஹிந்தி பேசக்கூடியவர்கள். தமிழ் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

______________________________________

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.