யானை வழித்தடத்தினூடே
வளைந்து செல்கிறது
நீள்அரவ கருஞ்சாலை!

தொடர்பறுந்த வழித்தடத்தை
பிளிறல்பிசின் கொண்டு
ஒட்ட முயல்கிறது
ஒற்றை யானை!

அடர்வனத்தை
அறுத்துச் செல்லும்
சாலையெங்கும்
புதைந்திருக்கும்
எத்தனையோ
காலடித் தடங்கள்!

ஒலியெழுப்பும் வாகனங்கள்
அறிவதில்லை
வனவிலங்குகளின்
அந்தரங்கத்தை!

"வனவிலங்குகள் ஜாக்கிரதை!"
அறிவிப்புப் பலகைகளைப்
பார்த்து தலையிலடித்துச் செல்கின்றன
வனத்தை இழந்து கொண்டிருக்கும்
விலங்குகள்!

- பா.சிவகுமார்

More articles by பா.சிவகுமார்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.