காற்று இல்லாமல் இறக்கும் மனிதன்
காற்று இல்லாமல் எரிவது இல்லை
ஒற்றை சிறகில் பறக்கும் பட்டாம்பூச்சி
எரிந்த பின்பு காற்றில் பறக்குது சாம்பலாய்.

ஒற்றை காலை ஊன்றி நடந்தோம்
கட்டை கொம்பும் கையில் இல்லை
மயக்கம் வந்தது என மெல்லப் படுத்தோம்
எழுந்து பார்க்கையில் எரியூட்டப் பட்டோம்

வாக்காளர் பெட்டி போல
பிணங்கள் கிடந்தன ஓரமாய்
எனக்கு இறக்க விருப்பமில்லை..
எனது அரசு விரும்பினால்
எரியும் குழியில் இறங்கச்சொல்லும் என்னை…

பிணங்களுடன் காத்து இருந்தவர்களும்
சேர்ந்து எரிக்கப்பட்டார்கள்
செந்தாமரை தழலில்…

வரலாற்றில் மறைக்க
பள்ளங்கள் எடுக்கவில்லை
சாம்பல் நிறைந்தது
சடங்குகள் நடக்கவில்லை
மரங்களை வெட்டியதால்
விரகும் நனைய வில்லை…

நாங்கள் வேந்து விட்டோம்
எங்களில் எதுவுமில்லை
இது தான் எங்கள்
இந்தீயா…

- மு.தனஞ்செழியன்

Comments

4 comments

4
Veeramani
தினம் தினம் பிணம் எரிகிறது மதம் இல்லை மொழியில்லை மரணம் பொதுவானது.

என்று தனியும் இந்த நெருப்பு,. யார் இதற்கு பொறுப்பு..
உன் கவிதைகளை காலத்தின் கையில் தந்து விட்டாய் காலம் பதில் சொல்லட்டும் காத்திருப்போம்...
Priya Jayakanth
Nice kavithai thozhar
மூ.ஜெயபால்
இந்திய மக்களின் கையறு நிலை

கவிதை வரிகள் கனக்கிறது கனலாய் .
Bharathi chandran
நாட்டின் சோகம் அதன் ஆழமான வடுக்கள் உள்ளார்ந்த ஜீவனின் மனப் போராட்டங்கள் இவைகளைத் தாண்டி இது அரசியல் நோக்கில் யாரையும் பார்க்க வேண்டிய நிர்பாக்கியநிலை யாரைச் சொல்லி என்ன சொல்வது கவிதை சோகத்தை கோபத்தோடு கூறி இருப்பதாக அறிகிறேன்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.