எனது கோபம்

உனக்குப் பொருந்திப் போவதில்

பெருமையென்ன இருக்கிறது...

 

நான் நிஜம்

நீ நிழல்...!

 

எனது தாகம்

உனக்கு உடனிசைவாவதில்

உண்மையென்ன இருக்கிறது

நான் தண்ணீர்

நீ சுனை...!

 

எனது கனவு

உனக்கு இரவுகளாவதில்

இன்பமென்ன இருக்கிறது...!

நான் இரவு

நீ நிலவு...!

 

எனது நினைவுகள்

உனக்கு சுவர்க்கங்களாவதில்

சுகமென்ன இருக்கிறது...!

 

நான் மகாதவம்

நீ அழகிய தேவதை...!

 

இன்னுமென்ன

இது போதும் நாம் வாழ...!

Pin It