மழைநீர்
சொட்டும் பாத்திரங்களை
நகர்த்தி வைக்கிறான்..

துணி மூட்டையை
வெளியே தள்ளி
ஓலையால் மூடுகிறான்..

விளையாட்டு சைக்கிளை
சுத்தமாகட்டுமே
எனும் சாக்கில்
நனைய விடுகிறான்..

மல்லாக்கப் படுத்துறங்கும்
தகப்பனை
ஒருக்களிக்கப் பணித்துவிட்டு
தாயையும் தங்கையையும்
நகரச் செய்கிறான்..

இனி வரவேற்கலாம் -
எனும் ஆசுவாசத்தில் !!
புத்தகப் பையை
வாரிக் கட்டிக் கொண்டு
குத்த வைத்த
அவன் –

அந்தத் தெருநாய்க்கும்
அதன் குட்டிகளுக்குமான
பரப்பை
ஃப்ளக்ஸ் கூரையின் கீழ்
உருவாக்கித் தருகையிலே…

மனிதத்திற்காக
காத்திருந்தது போலவே
மழையின் நடனமோ
துள்ளலெடுக்கிறது !!

- த.கமல் யாழி

Comments

11 comments

11
கவின்
அருமையான கவிதை..
சாந்தி சரவணன்
மாரிதுள்ளல் மழையின் மனிதத்தை பிரதிபலிக்கும் விதமாகவும், குடும்பத்தின் ஏழ்மை நிலையை வெளிக்காட்டி, மழலையின் செயலை பதிவு செய்தவிதம் அருமை. வாழ்த்துகள் தோழர்
ஜெ.சக்திபானு
மனிதத்தை பிரதிபலிக்கும் மாரிதுள்ளலின் அருமையான கவிதை.ஏழ்மையின் சூழலை ஒலி பிம்பங்களாய் காட்டியிருக்கின்ற துள்ளல் கவிதை.
DHANANCHEZHIYAN M
மழையில் நனைந்து கனிந்த இதயங்கள்.
Jayabal
மனிதம் தாண்டிய உயிர்மம். அருமை
Suganya R
அருமையான கவிதை. கண்முன்னே அழகிய காட்சியை விரித்து போகிறது மாரித்துள்ளல். வாழ்த்துகள்
பரிமளா செல்வமணி
மழையின் ஈரத்தை போலவே மனிதத்தின் ஈரம்!.
அருமை. நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
Sathya sampath kumar
இயற்கை என்றும் தவறு செய்யாது, மனிதனுக்கு வாய்ப்பு அளித்துக் கொண்டே தான் இருக்கும் என்ற உண்மையை மறைமுகமாக மிக எதார்த்தமாக வெளிப்படுத்தும் கவிதை, மாரித்துள்ளல்,அருமை.
Sakthi bahadur
இதயத்தை நனைத்த வரிகள்..... வாழ்த்துகள் தோழர்...
தமயந்தி ரமேஷ், கேரளா.
மனிதத்தை மதித்த மழை. படிக்கும்போதே கண்முன்னே விரியும் காட்சிகள் .வாழ்த்துகள் தோழர்.
Chandrakanth
இயற்கையை போற்றும் விதமாக உங்கள் கையில் இருந்த வந்த கவி துளிகள் அற்புதம் கமல்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.