கண்ணோர மச்சம்
புறங்கை தழும்பு நடுநெற்றி வடு
போதவில்லை என்றான்

கை காசு கடன் காசு
கொண்டுருவாக்கிய நூல்கள்
அவனுக்கு வெறும் பார்சல்

ஊரறிந்த பெர்சனாலிட்டி
அவனுக்கு நவுரு நவுரு தான்

வரிசையில் முகமற்று தான் நிற்க
கற்றிருக்கிறோம்
முதுகற்றும் பழக வேண்டும் போல

புகைப்படமும்
சடை நீண்ட நிஜ சிகையும்
ஒத்து போகவில்லை

அடையாளத்துக்கு அகப்படும்
புகைப்படங்கள்
அடையாளமின்மைக்கு உதவுவதில்லை

எத்தனை சொல்லியும் நம்பாத
அவன் கண்களில்
நகராத பொருளென எனது புனைப்பெயர்

செய்வதறியாது நின்று நெளிந்து
நான் யாரென்று சொல்ல
நானே யாரோவாகவும் ஆக வேண்டியிருந்தது

- கவிஜி

Comments

1 comment

1
குமரன்
இதைத்தான் கவிதை என்று உங்கள் ஊரில் சொல்வார்களா

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.