மனிதம் கடந்த
சக்தி ஏதுமில்லாத சிவா
தன் இளநீர் வண்டியை
சாக்கைப் போட்டு மூடி
காவலரைப் பற்றியும் பயமின்றி.
சாலையோர மரத்தடியில் விட்டுச் செல்கிறான்
பக்கத்தில் ஓர் அறையில்
தங்க நகை சூடி அமர்ந்திருந்த
சக்தியை உள்ளே வைத்து,
வெளிப்பக்கம் பூட்டிச் சொல்கிறான் பூசாரி.
- சேயோன் யாழ்வேந்தன்
பொன்னை தேக்கி வைக்காத சமூகம்
நீட்டப்படாத கைகள்
நெஞ்சில் பிறர்பொருள் நினையா நிலை
நாட்டப்படும் நாளில்
சக்தி கோயில் திறந்திருக்கும்
பொன்னை தேக்கி வைக்காத சமூகம்
நீட்டப்படாத கைகள்
நெஞ்சில் பிறர்பொருள் நினையா நிலை
காட்டப்படும் இரக்கத்தில்
கஞ்சி இலவசம் நாடா மக்கள்
நாட்டப்படும் நாளில்
நம் சக்தி கோயில் திறந்திருக்கும்
RSS feed for comments to this post