மெல்லிய தூறல் விழுந்த நாளின் இரவில்

செல்பேசியில் கவிதைகளோடு படபடத்துக் கொண்டிருந்தாய்

மிதந்தேன் வெடித்த எருக்கம் பூவாக

அழைப்பு அடுத்தடுத்து தொடர

மழைபட்ட தகரமாக தடதடத்து

பேசியவைகளைத் திரும்பத் திரும்ப பேசி

கட்டமைத்தோம் நமக்கான மணல்வீட்டை

உரையாடலற்ற பொழுதினில் எழுத ஆரம்பித்தோம் எஸ்.எம்.எஸ்களில்

நீ இட்டுச் சென்ற கோலத்தினுள் அமர்ந்தேன்

மார்கழி மாதப் பரங்கிப் பூவாகவெனும்

காதல் வசனமில்லாவிடினும்

செல்லம் தங்கமெனும் சிணுங்கலுண்டு

அறிந்தே இருவரும் அனுப்பிக் கொண்டிருக்கும் அபத்தங்கள்

தொடர்ந்து கொண்டிருக்கட்டும்

நேர்படக் காணும் வரை.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.