கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
கோமா நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு உள்ளே நினைவிருந்தும் அதை வெளிப்படுத்த முடியாமல்கூட இருக்கலாம். மயக்க மருந்து கொடுத்து படுக்க வைத்திருப்பவரும்உணர்வில்லாமல் இருப்பார் அதே சமயல் நினைவில்லாமலும் இருப்பார். இந்த வித்தியாசம் மிக முக்கியம். கோமா நிலையிருப்பவர் நினைவுடன் இருக்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு ஸ்கேன் எடுத்து மூளையைப் பார்க்க வேண்டும். இதை விட எளிய முறையை அர்ஜென்டினா நாட்டு மருத்துவர்கள் வேறு நாட்டு மருத்துவர்களுடன் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.
கோமா நிலை நோயரின் கண்களைத் திறந்து லேசாக காற்றை பீய்ச்சி அடிப்பார்கள். அதற்கு முன் மெல்லிய மணி ஓசையைக் கேட்கச் செய்வார்கள். இப்படி மூன்று நான்கு முறை செய்த பிறகு வெறும் மணி ஓசை சப்தம் கொடுத்தாலே போதும் நோயர் கண் இமைகளை அசைப்பார். காற்று அடுத்து படுமே என்று அவர் உணர்ந்திருக்கிறார் என்பதற்கு இது அடையாளம். இதிருந்து கோமா நிலையில்கூட மனிதன் ஐவகை உணர்வுகளையும் கவனிக்க முடியும் என்பது தெரிகிறது.
-மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்
விக்ரம் பிரபு லயோலா யூனிவர்சிட்டி ஹாஸ்ப்பிட்டலின் தலைமை நரம்பியல் மருத்துவர். இவர் நோயாளியின் மண்டையைத் திறந்து மூளையில் உள்ள கட்டிகளை வெட்டி எடுக்க முயலும் முன்பு அவர்களை மயக்க நிலையிருந்து எழுப்பி பேசுகிறார். கட்டியின் பக்கத்தில் இருக்கும் மூளைத் திசுக்களை தொட்டபடி பேச்சுக் கொடுப்பார். தொடும்போது அதன் காரணமாக அவர்களது பேச்சில் அல்லது உடல் அங்க அசைவுகளில் ஏதேனும் பங்கம் ஏற்பட்டால் அந்த இடத்தை சிதைக்காமல் கட்டியை அறுக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்கிறார். இப்படி நோயளரின் மூளையை மேப் செய்து சாதக பாதகங்களை தீர்மானித்துக்கொண்ட பிறகு கட்டியில் கத்தியை வைக்கிறார். கேட்பதற்கே வியப்பாக இருக்கிறது அல்லவா!
உடலின் எல்லா பாகங்களின் வலி முதலான உணர்வுகளை அறியும் மூளைக்கு தனது வலியை அறிய முடியாது என்பதால் பிரபு இப்படி துணிச்சலாக காரியம் ஆற்றுகிறார்.
மூளை ஆப்பரேஷன் நடுவில் பேச்சுக் கொடுக்கும்போது நோயாளிகள் தெளிவாகவே பேசுகிறார்கள். வீடு, வேலை, பொழுதுபோக்கு, அரசியல் என்று சகல விஷயங்களையும் அவர்கள் சர்வ சாதாரணமாகப் பேசுகிறார்கள். அவர்களிடம் பேசி விபரீதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிந்து கொண்டபிறகே கத்தியை வீசுகிறார்.
இந்த சாகசமான வேலைக்கு மயக்க மருந்தாளரின் உதவி மிகவும் அவசியம். பூசணிக்காயில் உண்டியல் ஓட்டை போடுவது போல மண்டையை வெட்டித் திறந்து மூளையை அடையும் வரை ஒருவருக்கு மயக்க மருந்து தேவை. அதன் பிறகு மூளையை வெட்டும்போது மயக்கம் அவசியமில்லை!
- முனைவர் க.மணி (
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்

- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
உயிரி கார்பன் என்பது பாறைவடிவிலான செறிவுமிகுந்த கார்பன் ஆகும். சாதாரண கரியில் நீர் மூலக்கூறுகள் காணப்படும். ஆக்சிஜன் இல்லாத சூழலில் சாதாரணகரியை வெப்பப்படுத்தினால் இந்த நீர் மூலக்கூறுகளை அகற்றமுடியும். நீர் மூலக்கூறுகள் அற்ற கார்பன் ‘உயிரி கார்பன்’ (bio char) எனப்படுகிறது. ஆதிவாசிகளான அமேசான் இந்தியர்கள் மண்வளத்தைப்பெருக்குவதற்காக உயிரி கார்பனை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதுபற்றிய கட்டுரை அண்மையில் வெளிவந்த Environmental Science & Technology இதழில் வெளியாகியுள்ளது.
கார்பன் டை ஆக்சைடு ஒரு பசுமை இல்ல வாயு. புவி வெப்பமடைவதற்கு காரணமான கார்பன் டை ஆக்சைடில் கார்பன் என்னும் கரிமம் அடங்கியுள்ளது. உயிரி கார்பனை அதிக அளவில் தயாரிப்பதன் மூலம் காற்றில் கலந்துபோகும் கரிமத்தை மண்ணிலேயே நிலைபெறச் செய்யலாம்.இதன்மூலம் மண்வளம் பெருகும் என்பது இந்தக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொலம்பியாவின் ஆதிவாசிகளான அமேசான் இந்தியர்கள் வேளாண் கழிவுகளில் இருந்து உயிரி கார்பனை உற்பத்தி செய்திருக்கிறார்கள். மரம், புல், தட்டைகள் இவற்றை காற்றில்லா சூழலில் எரித்து மண்வளத்தை பெருக்கியிருக்கிறார்கள். மக்கும் பொருட்களுடன் இந்த உயிரி கார்பனையும் கலந்து நிலத்திற்கு உரமாக இட்டார்கள் என்னும் செய்தி விஞ்ஞானிகளிடம் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. மேலும் கரிமப்பொருளை காற்றில் கலக்கவிடாமல் நிலத்திலேயே உயிரி கார்பன் வடிவில் நிலைபெறச்செய்தார்கள் என்பது நமக்கெல்லாம் வியப்பூட்டும் செய்தி ஆகும்.
காற்றில்லா சூழலில் கரிமப்பொருட்களை எரிக்கும்போது கார்பன் மோனாக்சைடு - ஹைட்ரஜன் வாயுக்கலவை (synthesis gas) வெளியாகும். இந்த வாயுவை சேமித்து எரிபொருளாக பயன்படுத்தலாம். இது ஒரு ஆற்றல் குறைந்த எரிபொருள். ஆனால் வற்றாத வளமுடையது.
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2010/01/100113172252.htm
தகவல்: மு.குருமூர்த்தி
- கார்பன் டை ஆக்சைடில் இருந்து எரிபொருள்
- நின்றொளிரும் விந்தை
- 2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்
- மர எண்ணெயில் கார்கள் ஓடப் போகின்றன
- வைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக் கருவி
- ஆர்டரின் பேரில் உடல் உறுப்புகள்
- பளபளக்கும் நிக்கல் - டங்ஸ்டன்
- செயற்கையாக ஓர் உயிரினம்
- உலோக ரப்பர்
- கட்டுச்சோறை கெடாமல் பாதுகாக்க...
- இரைச்சலில் இருந்து பாதுகாக்கும் கருவி
- சிறிய ரோபோ... பெரிய உதவி..
- மனம் என்பது என்ன?
- பயோ-மிமடிக்ஸ் - பூக்களும் பூச்சிகளும் வழங்கும் புதிய தொழில்நுட்பங்கள்
- நினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன?
- வண்ண விளக்குகளின் ரகசியம்
- இசை மருத்துவம்
- பழங்கள் பழுப்பதும் பூக்கள் உதிர்வதும் ஏன்?
- ஒளிரும் கிண்ணம்
- காரோட்டிகள் கண் அயர்ந்தால் என்ன ஆகும்?