நீங்கள் திருநீறு பூசுவதாலேயே உங்களை யாரும் தீவிரவாதி என நினைப்பதில்லை. சிலுவை அணிவதாலேயே நீங்கள் பயங்கரவாதியாக முத்திரை குத்தப்படுவதில்லை. ஆனால் நீங்கள் தொப்பி அணிந்திருந்தால் மட்டும் போதும்… பயங்கரவாதியாகவும், தீவிரவாதியாகவும் சித்தரிக்கப்படுவதற்கான எல்லா சாத்தியங்களும் இங்கு இருக்கின்றன. இந்தியாவில் இஸ்லாமியனாக வாழ்வதென்பது துயர்மிகுந்த ஒன்று. சதா சர்வ நேரமும் தன்னை கண்காணிக்கும் அரசின் கண்களுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் எப்படி நிம்மதியாக வாழ இயலும்?

இந்த அரசும், ஊடகங்களும் ‘முஸ்லிம் என்றாலே உடம்புக்குள் நான்கைந்து குண்டுகளை கட்டிக்கொண்டுதான் அலைகிறான்’ என்பதான பிம்பங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. அவையே பொதுப்புத்தியை உற்பத்தி செய்கின்றன. அதனால்தான் ஒரு முஸ்லிம் சகோதரருக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது மிக சிக்கலானதாக இருக்கிறது. சென்னை மாதிரியான பெருநகரங்களில் மிக வெளிப்படையாகவே முஸ்லிம்களுக்கு வீடு மறுக்கப்படுகிறது.

muslim_man_300நான்கைந்து நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும்போது, அதில் ஒரு முஸ்லிம் இருந்தால் ’நீ எல்லாம் உங்க ஆளுகளுக்குதான் சப்போர்ட் பண்ணுவ’ என்று மற்றவர்கள் கமெண்ட் அடிப்பதும், அது இயல்பான ஒன்றாக இருப்பதும் எத்தகையது?

அப்பாவி முஸ்லிம் மக்களை ஆயிரக்கணக்கில் கொலை செய்த இந்து தீவிரவாதிகள் மீதான பல்வேறு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படுவது இல்லை; முக்கிய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படுவதும் இல்லை. அப்படியே வழக்கு நடத்தி, தீர்ப்பு கொடுக்கப்பட்டாலும் அது அமுல்படுத்தப்படுவது இல்லை. ஆனால் முஸ்லிம் கைதிகள் மீதான வழக்குகள் மட்டும் அதிவேகமாக நடத்தப்பட்டு அதிவேகமாக தண்டனை வாங்கித்தரப்படுகிறது. ப‌ல‌ர் விசார‌ணைகூட‌ இல்லாம‌ல் 5 ஆண்டுக‌ள், 10 ஆண்டுக‌ள் சிறையில் அடைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

திண்ணியம் தொடங்கி கயர்லாஞ்சி வரை நாடெங்கும் இந்து அடிப்படைவாதத்தின் சாதி வெறிக்கு லட்சக்கணக்கான தலித் மக்கள் நாள்தோறும் பலியிடப்படுகின்றனர். இந்த சமூக அசிங்கங்களை கொஞ்சமும் கண்டுகொள்ளாத சினிமா உள்ளிட்ட ஊடகங்கள் முஸ்லிம்களின் சிறு தவறுகளையும் மிகைப்படுத்தி பூதாகரம் செய்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு 'தாலிபான் பிராண்ட் முஸ்லிம்கள் இந்தியாவுக்குத் தேவையில்லை' என்று தெனாவட்டாக எழுதியது இந்தியா டுடே. 'உன்னைப் போல் ஒருவன்' என்னும் கடந்த பத்தாண்டுகளின் மோசமான இஸ்லாம் காழ்ப்பு திரைப்படத்தை எடுத்துவிட்டு அதைப்பற்றிய எந்த குற்றவுணர்வுமின்றி உலக நாயகன் உலவுவதும் இந்தப் பின்னணியில்தான்.

இப்படி அனுதினமும் இந்திய சமூகம் முஸ்லிம்கள் மீது வெறுப்பையும், காழ்ப்பையும் உமிழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் இன்னமும் இதன் பெயர் மத சார்பற்ற நாடுதான். காவல் நிலையம் உள்பட எல்லா அரசு அலுவலகங்களிலும் பிள்ளையார் கோயில் முதல், பெருமாள் கோயில் வரை வழிபாட்டிடங்கள் கட்டப்பட்ட நிலையிலும் கூட இது மத சார்பற்ற நாடுதான். இந்த பெரும்பான்மைவாத பூதத்தின் அசிங்கமான பிடிக்கு இடையிலே முஸ்லிம்கள் அனுதினமும் தங்கள் தேசபக்தியை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. தங்கள் மீதான காழ்ப்பு மிகுந்த சொற்களை கண்டும் காணாமல் நகர்ந்துசெல்ல வேண்டியிருக்கிறது. பெரும்பான்மையை அனுசரித்துச் செல்லாத சிறுபான்மையினர் பல்வேறு வகைகளில் அடக்கி, ஒடுக்கப்படுகின்றனர். இதன் மறுவளமாக  அப்துல் கலாம் பிராண்ட் முஸ்லிம்களை உற்பத்தி செய்து தனது ரத்தக்கறைகளை மறைத்துக்கொள்ளப் பார்க்கின்றனர் இந்து பாசிஸ்ட்டுகள்.

மதம் என்பது மனிதனுக்கு அபீனைப் போன்றது என்றார் காரல் மார்க்ஸ். அது இந்துவாக இருந்தாலும், கிறிஸ்தவமாக இருந்தாலும், இஸ்லாமாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் பொருந்தும். ஆனால் யதார்த்தத்தை முன்வைத்தே நாம் பேச வேண்டியிருக்கிறது. தேச எல்லைகளைக் கடந்து உலக அளவில் ஒடுக்கப்படும் இனமாக இருப்பது இஸ்லாம்தான். அமெரிக்க வல்லாதிக்கம் தனக்கான முகமாக முதலாளித்துவத்தை சூடிக்கொண்ட கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட்டுகளை எதிரிகளாகக் கட்டமைத்தது; இப்போதும் அது தொடர்கிறது. அதன் அடுத்த பதிப்பாக இப்போது உலக அளவில் இஸ்லாமியர்கள் அத்தனை பேரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது. இது வேறு எந்த மதத்துக்கும் நிகழாதது.

muslim_boy_330'கீற்று' இணையதளத்தின் ஆறாம் ஆண்டு தொடக்கவிழாவை ஒட்டி, இந்திய முஸ்லிம்களின் சமூக, அரசியல் வாழ்நிலை குறித்தான ஒரு அமர்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சகோதரர்கள் தங்களது வேதனைகளை, வலிகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். நம்மிடையே உருவாக்கப்பட்ட, உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டமிட்ட முஸ்லிம் காழ்ப்பை நாம் கலைந்தாக வேண்டும். அச்சுமூட்டுவதாகவும், பதற்றம் தருவதாகவும் இருக்கும் தினவாழ்வில் இருந்து முஸ்லிம் மக்களை விடுதலை செய்ய வேண்டும். இதற்கான முற்போக்கு சக்திகளின் பல்வேறு முயற்சிகளில் ஒன்றாக கீற்றின் ஆறாம் ஆண்டு தொடக்கத்தையொட்டி இந்த நிகழ்வை கீற்று இணையதளம் ஒருங்கிணைக்கிறது.

கீற்று இணைய தளத்தின் ஆறாம் ஆண்டு தொடக்க விழா

நாள்: 24.07.2010, மாலை 5.00 மணி
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், அண்ணா சாலை, சென்னை.

அமர்வு - 1

இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்
(பாதிக்கப்பட்ட சகோதரர்களின் நேரடி வாக்குமூலங்கள்)

கருத்துரை:

வழக்கறிஞர் புகழேந்தி (ஒருங்கிணைப்புச் செயலர், தமிழக மக்கள் உரிமைக் கழகம்)

'தலித் முரசு' புனித பாண்டியன்

அமர்வு - 2

"குடிஅரசு எவருடைய தயவுக்கோ, முகஸ்துதிக்கோ, சுயநலவாழ்வுக்கோ, கீர்த்திக்கோ நடைபெறவில்லை. யோக்கியமாய் உண்மையாய் நடக்கக்கூடிய காலம் வரை நடக்கும். அவ்விதம் நடக்க அதற்கு யோக்கியதை இல்லையானால், அதுதானே மறைந்துவிடுமேயல்லாமல், மானங்கெட்டு விலங்குகளைப்போல் வாழாது." - பெரியார், குடிஅரசு - தலையங்கம் - 01.05.1927

கீற்று.காம் - பயணமும், இலக்கும்

கருத்துரை:

சுப.வீரபாண்டியன்
விடுதலை இராசேந்திரன்
ஜெயபாஸ்கரன்
பாரதி கிருஷ்ணகுமார்
மாலதி மைத்ரி
பாஸ்கர் சக்தி
யுகபாரதி

அனைவரும் வருக

- கீற்று ஆசிரியர் குழு

தொடர்புக்கு: 99400 97994

Comments

100 comments

100
Guest
unmai than anal oru silarin thavarana nadavadikkaikalal mothha samuthayamum pathikkappadukirathu
tamil
Keetrukku enna ayitru? muslim meethana tavarana parvaikku avarkale karanam. Neengal varundhum alavirku avarkal ellai. Avarkarum inthiyarkalagave mathikkapadukirarkal. Veenaga...... neenkal yeen madhapirivinaikku adithalam akeerirkal.........Veendaam idupondra katturai......
இந்துத்தமிழன்
//நீங்கள் திருநீறு பூசுவதாலேயே உங்களை யாரும் தீவிரவாதி என நினைப்பதில்லை. சிலுவை அணிவதாலேயே நீங்கள் பயங்கரவாதியாக முத்திரை
குத்தப்படுவதில்லை. ஆனால் நீங்கள் தொப்பி அணிந்திருந்தால் மட்டும் போதும்… பயங்கரவாதியாகவும், தீவிரவாதியாகவும் சித்தரிக்கப்படுவதற்கான எல்லா சாத்தியங்களும் இங்கு இருக்கின்றன. இந்தியாவில் இஸ்லாமியனாக
வாழ்வதென்பது துயர்மிகுந்த ஒன்று. சதா சர்வ நேரமும் தன்னை கண்காணிக்கும் அரசின் கண்களுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் எப்படி நிம்மதியாக வாழ
இயலும்?
//
ரொம்ப சரி. ஏன் என்று கேட்டீர்களா? இருபது தடவை திருநீறு பூசிக்கொண்டு, சிவனுக்காக கொலை செய்கிறோம் என்று கூவிக்கொண்டு மற்ற மதத்தினரை சைவர்கள் கொன்று கொண்டிருந்தார்கள் என்றால், திருநீறு பூசியவனை பார்த்து மக்கள்
அஞ்சத்தான் செய்வார்கள். நேற்று பாகிஸ்தானில் சூபி தர்காவில் மூன்று தற்கொலைப்படை ஜிகாதிகள் வெடித்து, அந்த தர்காவில் வழிபட வந்த அப்பாவிகளான
40 முஸ்லீம்களை கொன்றார்கள். காரணம் என்ன? சூபி தர்காக்களில் வழிபடுவது இஸ்லாமுக்கு எதிரானதாம். அதே போல சென்ற வாரம் பாகிஸ்தானில் அஹ்மதியா
முஸ்லீம்களின் மசூதியில் இதே போல தாக்குதல் நடத்தி அப்பாவி அஹ்மதியா முஸ்லீம்கள் 100 பேரை கொன்றார்கள். ஏனென்றால், அஹ்மதியாக்கள் முஸ்லீம்கள் அல்லவாம். அவர்கள் காபிர்களாம். இதே போல இந்தியாவிலும் கோவில்களிலும் டிரெயின்களிலும், குண்டு வைத்து ஆயிரக்கணக்கான மக்களை கொன்றார்கள்.
அத்வானி கோயம்புத்தூருக்கு வந்தபோது குண்டு வைத்து நூற்றுக்கணக்கான மக்களை கொன்றார்கள். இந்தியாவில் முஸ்லீம்கள் நடத்தும் பாதக செயல்களுக்கு
எல்லாம் பாபர் மசூதியை இடித்ததுதான் காரணம் என்று சொல்லிக்கொண்டு இன்னும் எவ்வளவு பாதகச்செயல்களை நியாயப்படுத்தபோகிறீர்கள். இதற்கு 100 கோடி இந்துக்களிடமிருந்து என்ன எதிர்வினை வந்திருக்கிறது? ஒன்றுமே இல்லை.
மலேகான், ஜம்மா மசூதி என்று ஒரு சில மரைகழண்ட இந்துக்கள் குண்டு வைத்தார்கள். அதனை எந்த இந்துவாவது ஆதரித்தார்களா? அவனுக்கு வாதாட ஒரு
இந்து கூட இந்த 100 கோடி இந்துக்களில் இல்லை. ஏன் இல்லை? அவர்களுக்காக கூட்டம் போட்டார்களா? அவன் ஒல்லியாகிவிட்டான். அவனை கொடுமை செய்யாதே.
அவனுக்கு ஆயுர்வேத மசாஜ் கொடு, பிரியாணி போடு, அவனை விடுதலை செய் என்று உங்களை மாதிரி ஹிப்போகிரட்டுகளை வைத்து கூட்டம் போட்டார்களா? இந்துவானால் என்ன ? அவன் தப்பு செய்திருந்தால் அவனை தூக்கில் போடு என்று சும்மாதானே
100 கோடி இந்துக்கள் இருக்கிறார்கள்? இந்து கட்சி என்று சொல்கிறீர்களே பாஜக, அது வந்து இப்படிப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசியதா? ராம்சேனா என்று அடாவடி பண்னிக்கொண்டிருந்தவனை சிறையில் போட்டது பாஜக ஆளும் கர்னாடகா அரசுதானே? இங்கே திருத்திக்கொள்ள வேண்டியது முஸ்லீம்கள். மக்களுக்கு
தங்கள் உயிர்தான் முக்கியம். ஒரு முஸ்லீமை தன் வீட்டில் வாடகைக்கு வைத்து அவன் ஏதாவது பயங்கரவாத செயல் செய்து மாட்டிக்கொண்டால், கூடவே
விசாரணைக்கும் இன்னும் பல தொந்தரவுகளையும் சந்திக்கபோவது அந்த வீட்டு சொந்தக்காரர்தான். அதனால்தான் அவர் அய்யா சாமி வேண்டாம் என்கிறார். அது முஸ்லீம் மட்டுமல்ல, இன்னும் நாளைக்கு கிறிஸ்துவர்கள் அப்படி பயங்கரவாதத்தில் ஈடுபட்டால், கிறிஸ்துவர்களுக்கும் வாடகைக்கு வீடுகள்
கொடுக்கமாட்டார்கள். நாளைக்கு பாப்பான்கள் பயங்கரவாதத்தில் ஈடுபட்டால், பாப்பான்களுக்கும் வீடுகள் கொடுக்கமாட்டார்கள். சாதாரண மக்களுக்கு
உங்களுடைய மனித நேயம் புண்ணாக்கு எல்லாம் தேவையில்லை. அவர்களுக்கு தேவையானதெல்லாம் நிம்மதியான வாழ்க்கைதான். அவர்களுடைய நிம்மதியான வாழ்க்கையை கெடுத்துகொண்டு உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை தரவேண்டுமென்று எந்தவித கட்டாயமும் இல்லை. வேண்டுமானால், சென்னை முழுவதும் நிறைய கட்டிடங்களை கட்டி முஸ்லீம்களுக்கு வாடகைக்கு விடுங்கள். யாரும் உங்களை தடுக்கப்போவதில்லை. ஆனால், எல்லோரும் கட்டாயமாக முஸ்லீம்களுக்கு வீடு தரவேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.

-
ஊடகங்கள் இந்த பிம்பத்தை உருவாக்குகின்றன என்று சொல்கிறீர்கள். நீங்கள் ஊடகங்களை நடத்திகொண்டிருந்தால் என்ன செய்திகளை அளிப்பீர்கள்?
பாகிஸ்தானில் தர்காவை தாக்கி 40பேருக்கும் மேல் கொலை செய்த செய்தியை வெளியிட மாட்டீர்களா? அஹ்மதியாக்கள் மசூதியை தாக்கி 100 பேருக்கும் மேல்
கொன்ற செய்தியை வெளியிட மாட்டீர்களா? அல்லது அந்த தாக்குதல்களை செய்தவர்கள் கிறிஸ்துவர்கள் என்று திரித்து வெளியிடுவீர்களா? திண்ணிய
செய்தியையும் கயலாஞ்சி செய்தியையும் மக்களுக்கு அளித்தது ஊடகங்கள்தானே? அப்புறம் என்ன அந்த செய்திகளை ஊடகங்கள் மறைக்கின்றன என்று குற்றம்
சாட்டுகிறீர்கள்? அந்த செய்திகளை திரித்து ஸ்லீம்கள்தான் இந்த வன்கொடுமைகளை செய்தார்கள் என்று ஊட்கங்கள் வெளியிட்டார்களா? இல்லையே?
அப்புற்ம என்ன ஊடகங்கள் மீது காய்கிறீர்கள்?

--
//இப்படி அனுதினமும் இந்திய சமூகம் முஸ்லிம்கள் மீது வெறுப்பையும், காழ்ப்பையும் உமிழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்னமும் இதன் பெயர் மத
சார்பற்ற நாடுதான். காவல் நிலையம் உள்பட எல்லா அரசு அலுவலகங்களிலும் பிள்ளையார் கோயில் முதல், பெருமாள் கோயில் வரை வழிபாட்டிடங்கள்
கட்டப்பட்ட நிலையிலும் கூட இது மத சார்பற்ற நாடுதான். இந்த பெரும்பான்மைவாத பூதத்தின் அசிங்கமான பிடிக்கு இடையிலே முஸ்லிம்கள்
அனுதினமும் தங்கள் தேசபக்தியை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.// என்று புலம்புகிறீர்கள். சரி இந்தியாவை இந்து நாடு என்று அறிவித்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் இல்லையா? மதசார்பற்ற
நாடு என்று என்று சொல்லிக்கொண்டு இந்து அடையாளங்கள் அஙகங்கு இருந்தால்தானே பிரச்னை வருகிறது? பாகிஸ்தான் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா, கட்டார், ஓமன், எகிப்து, ஈரான் என்று மதசார்புள்ள நாடாக
அறிவித்துவிட்டு அதில் இஸ்லாம் தவிர வேறு எந்த மதத்துக்கும் அங்கீகரம் கிடையாது என்று அறிவித்துவிடுகிறார்கள். அதனை பார்த்து உங்களுக்கு உச்சி குளிர்ந்துவிடுகிறது. ஆகையால், இந்தியாவையும் இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று குரல் கொடுங்கள். அப்போது மதசார்புள்ள நாடாக
ஆக்கிவிட்டால், போலித்தனம் இருக்காதே?இந்தியாவிலும் இந்துமதமே இருக்கும்
மற்றவர்கள் எல்லோரும் இரண்டாம்தர பிரஜைகள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டால் உங்களுக்கு பிரச்னை இல்லைதானே? அப்போது இந்தியாவும் உங்களது ஆதர்ச நாடுகளான சவுதி அரேபியா, பாகிஸ்தான், ஈரான், எகிப்து மாதிரி ஆகிவிடும். சரியா?

//தேச எல்லைகளைக் கடந்து உலக அளவில் ஒடுக்கப்படும் இனமாக இருப்பது இஸ்லாம்தான்.//

இஸ்லாம் ஒரு கொள்கை. அவ்வளவுதான். மதம் என்பது ஒரு கொள்கை. அது இனம் அல்ல. இன்று கிறிஸ்துவராக இருப்பவர் நாளை முஸ்லீம் ஆகலாம். இன்று முஸ்லீமாக இருபப்வர் நாளை கிறிஸ்துவராக ஆகலாம். ஏன் இந்துவாகக்கூட ஆகலாம். இது திமுக அதிமுக மாதிரி. இன்றைக்கு திமுகவில் இருப்பவர் நாளை அதிமுக போகலாம். அதுமாதிரிதான் இது. இது வெறும் கொள்கைதான். அது ஒரு இனம் மாதிரி கட்டமைக்கும் உங்கள் போலித்தனத்தை என்னவென்று சொல்வது?

//அமெரிக்க வல்லாதிக்கம் தனக்கான முகமாக முதலாளித்துவத்தை சூடிக்கொண்ட கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட்டுகளை எதிரிகளாகக் கட்டமைத்தது; இப்போதும் அது தொடர்கிறது. அதன் அடுத்த பதிப்பாக இப்போது உலக அளவில் இஸ்லாமியர்கள்
அத்தனை பேரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது. இது வேறு எந்த மதத்துக்கும் நிகழாதது.//

கம்யூனிஸ்டுகளை எதிர்க்கவில்லை. கம்யூனிஸம் என்ற கொள்கையை எதிர்த்தது. அமெரிக்கா சோவியத் ரஷியாவோடு பனிப்போர் புரிந்த காலத்திலேயே ஏராளமான ரஷியர்கள் அகதிகளாக அமெரிக்காவுக்கு வந்திருக்கிறார்கள். அந்த காலத்திலிருந்தே அமெரிக்காவில் ஒரு அனுமதிக்கப்பட்ட கட்சியாக இருப்பது அமெரிக்க கம்யூனிஸ்டு கட்சி. அது இன்றும் இருக்கிறது. அது தேர்தலில் பங்கு பெறுகிறது. அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் கம்யூனிஸ்ததுக்கு
எதிரானவர்கள். அவர்கள் ஆட்சிக்கும் வருவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அமெரிக்க கம்யூனிஸ்டு கட்சியை இதுவரை தடை செய்யவில்லை. அதே போல இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்க்கும் அமெரிக்கா இஸ்லாமை தடை செய்யவில்லை. இன்றும்
சவுதி அரெபியா ஏராளமான பணச்செலவில் அமெரிக்காவில் மசூதிகளை கட்டி வருகிறது. மசூதிகளை கட்ட எந்த தடையுமில்லை. சொல்லப்போனால், செப்டம்பர்11 ஆம் தேதி நடந்த உலக வர்த்தக மையம் தகர்ந்து விழுந்த இடத்திலேயே மசூதி கட்ட அனுமதியும் அளித்திருக்கிறது நியூயார்க் நகரம். ஆனால் அதற்கு சற்று தூரத்தில் டைம்ஸ்குயரில் பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட அமெரிக்க
குடியுரிமை பெற்ற முஸ்லீம் குண்டு வைத்து பலரை கொல்ல திட்ட்மிட்டார். அவரை கைது செய்தார்கள். இப்போது நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அவரை கைது
செய்யாமல் அங்கே குண்டு வைத்து அப்பாவி மக்களை கொல்வதை அனுமதித்திருக்கவேண்டும் என்று சொல்கிறீர்களா? சரி பாகிஸ்தானில் தினந்தோறும் குண்டுவெடித்து அப்பாவி மக்கள் சாகிறார்கள். இப்படி அமெரிக்க கிறிஸ்துவர்கள்தான் தற்கொலைபபடையாக முஸ்லீம் முகமூடி அணிந்து பாகிஸ்தான் தர்காக்களிலும் அஹ்மதியா மசுதிகளிலும் தற்கொலை செய்துகொண்டு முஸ்லீம்களுக்கு கெட்டபெயர் வாங்கித்தருகிறார்கள் என்று சொல்கிறீர்களா?
durai ilamurugu
முன்பு பெரும்பன்மை தீவிரவாதம் தவறானது. அதற்கு எதிர்வினையாகத்தான் சிறுபான்மை தீரவிரவாதம் தலை தூக்கியது என்ற ஒரு கருத்தியல் இருந்த்தது. ஆனால் அது தற்பொழுது செல்லுடியாகது . முசுலீம்கள் நாடு இனம் மொழி இவற்றைக் கடந்து தாங்கள் இசுலாமியர்கள் என்ற எண்ணத்தில் தான் வாழ்கின்றனர் இல்லாவிட்டல் அயோத்தியில் நடந்த மசூதி இடிப்பிற்கு கோவையில் குண்டு வைப்பானேன்? தமிழ் நாட்டில் இசுலாமியர்களுக்கு எதிரான சூழல் அப்போது இல்லையே? ஆனாலும் முசுலீம்கள் தங்களைத் தமிழர்களாகப் பார்காமல் பாபரின் வாரிசுகள என்ற தான் பார்த்தார்கள். சீக்கிய தீவிரவாதம் தலைவிரித்து ஆடியபோது அவர்களுக்கும் இதே நிலை இருந்தது. இப்போது மாறிவிட்டது. அது போன்றே இசுலாமியர்களும் த்ங்கள் இடையே உள்ள மக்கள் எதிரிகளை அடையாளம் காட்ட முன் வந்தால் நிலை மாறும்.
இனி அகில உலக அள்வில் என்று வைத்துக் கொண்டாலும் இசுலமியர்கள் தாக்கப்படுவதைக் குறித்து சவுதி போன்ற இசுலமியா அரசுகளே கவலைப் படாமல் அமெரிக்கவுடன் நல்லுறவு கொள்கின்றன பிறகு அதைப் பற்றி நாம் ஏன் கவலைக் கொள்ள வென்டும்?முசுலிம்களின் ப்யங்கரவாத செயல்கள் எந்தவித சமரசமும் இன்றி ஒடுக்கபடவேண்டியவையே
மணி
// நம்மிடையே உருவாக்கப்பட்ட, உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டமிட்ட முஸ்லிம் காழ்ப்பை நாம் கலைந்தாக வேண்டும். // முஸ்லீம் காழ்ப்பு என்று ஒன்றும் இல்லை. நீங்களாக கற்பனை செய்துகொள்ளவேண்டாம். முஸ்லிம்களுக்கு காபிர்கள் மீது காழ்ப்பு இருக்கும் வரைக்கும் அவர்களால் காபிர்கள் மீது வன்முறையை தவிர்க்க முடியாது. அவர்கள் அஹ்மதியாக்கள், தர்கா வழிபாட்டாளர்கள் மீது காழ்ப்பை மீண்டும் மீண்டும் எல்லா கூட்டங்களிலும் பேசுகிறார்கள். அஹ்மதியாக்களை காபிர்கள் என்று அழைத்து தூற்றுகிறார்கள். தர்கா வழிபாட்டாளர்களை காபிர்கள் என்று அழைத்து தூற்றுகிறார்கள். அப்படியானால் உண்மையான காபிர்கள் மீது அவர்களுக்கு என்ன மரியாதை இருக்கிறது என்று தெரியவில்லையா? இப்படிப்பட்ட ஒரு தீவிரவாத கும்பல் ஒன்று வஹாபியிஸ்டுகள், தமிழ்நாடு தஹ்வீத் ஜமாத், இந்திய தவ்ஹீத் ஜமாத், தமுமுக என்ற பெயர்களில் தமிழகமெங்கும் முஸ்லீம் இளைஞர்களை திவீரவாத பாதைக்கும் காபிர்களை வெறுக்கவும், அஹ்மதியாக்களையும் ஷியாக்களையும், தர்காவுக்கு போகும் முஸ்லீம்களையும் வெறுக்கவும் சொல்லித்தந்து வருகிறது. இதன் விளைவு இப்போது உங்களுக்கு தெரியவில்லை. கோயம்புத்தூர் மாதிரி இன்னும் பல ஆயிரகணக்கான கோயம்புத்தூர்கள் நடந்ததும்தான் உங்களுக்கு புரியுமோ என்னவோ?
Guest
இந்திய முஸ்லீம்கள் மேல் மட்டும் தான் கீற்றுக்கு கரிசன்மிருக்கும் போலிருக்கிறது. இலங்கையில் புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லீம்கள் பற்றி வாய்திறக்காது. அங்கேயும் பெரும்பான்மை தானே சிறுபான்மை முஸ்லீம்களை விரட்டியது?
Keetru Nandhan
1915ல் பெரும்பான்மை சிங்களத்தவரால் முஸ்லீம்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டது, பின்னர் விடுதலைப் புலிகளால் அவர்களது வாழ்விடங்களில் இருந்து துரத்தப்பட்டது, ஆப்கானிஸ்தானில் ரஷ்யப்படையினரால் தாக்கப்பட்டது, பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்களால் கொடுமைக்குள்ளானது, அமெரிக்காவில், இங்கிலாந்தில் முஸ்லீம்கள் தாக்கப்படுவது பற்றியெல்லாம் பேச கீற்று தயாராகத்தான் இருக்கிறது. இங்கிருந்து எல்லாம் பாதிக்கப்பட்ட முஸ்லீம் பிரதிநிதிகளை அழைத்து வரும் பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டால் இதே கூட்டத்தில் எல்லாவற்றையும் பேசலாம்..

என்றும் அன்புடன்
கீற்று நந்தன்
அக்கரை மேஸ்திரி-1
"இந்திய முஸ்லீம்கள் மேல் மட்டும் தான் கீற்றுக்கு கரிசன்மிருக்கும் போலிருக்கிறது. இலங்கையில் புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லீம்கள் பற்றி வாய்திறக்காது. அங்கேயும் பெரும்பான்மை தானே சிறுபான்மை முஸ்லீம்களை விரட்டியது?" ஏப்பா வழக்கமா சொல்றதுதானெ அதையேன் அனானியா வந்து வுடுற...........ஆமாம் அங்கேயும் பெரும்பான்மைவாதம்தான் முஸ்லீமைத் துரத்துது...... அதுக்கும் பெரும்பான்மை வாதம் தமிழனைத் துரத்து........... பேரினவாத சிங்களன் துரத்துனப்போ சில முஸ்லீம்கள் சிங்களனோட சேர்ந்து நின்னு துரோகம் பண்ணினாங்க. அதான் புலிகள் துரத்தி விட்டாங்க. அப்புறம் கூட அவங்க முஸ்லீம்களை அழைச்சப்போ அவங்களும் வரலை. அவங்களை சிங்களனும் விடலை........... கடைசியில்............ ஒரு இலட்சம் மக்களை கதறக் கதற உன்னோட காந்தி தேசமும் புத்த தேசமும் சேர்ந்து கழுத்தறுத்தப்போ.......... சில முஸ்லீம் தலைவர்கள் ராஜபட்சே கூட சேந்து நின்னாங்க தெரியுமா? இப்போ கூட என்னவாம்........... ஆதவன், ஷோபாசக்தி, அ.மார்க்ஸ். இன்னும் அவங்கலோட அல்லக்கைகள் எல்லோருமே தமிழ் பாசிசம், புலிப்பாசிசம் என்று சொல்லி சிங்களனுக்கு கூஜா தூக்கிறியங்களேப்பா.... அது மட்டுமா? கொலைகார *** டக்ளஸ் தேவானந்தா செலவுல நீங்கள் இலங்கை போய் வரல்ல... கேட்ட நானும் தலித்து அவரும் தலித்துங்கிறீங்க... ஏம்பா பொறுக்கித் தின்னவா தலித் வேஷம் கட்டுறீங்க... நல்லாதான் இருக்கு உங்க வேஷம்...
தமிழ் கிறுக்கன்
மனித உரிமை, கருத்து சுதந்திரம் போன்ற ஜனநாயக சிந்தனைகளை அடி நாதமாக போற்றி வரும் அமெரிக்க பிரஜைகளே இஸ்லாமிய தீவிரவாதத்தை தங்கள் நாட்டின் பிரதம எதிரியாக கருதும் பொது, தனி நாடு கோரிக்கையை விடுதலை கோரிக்கையின் உள்ள நிபந்தனையாக்கி, ரத்த ஆறு ஓடவைத்து அரசியல் ரீதியாக ஒடுக்கபடுகிறோம் என்கிற ஒரே காரணத்திற்காக மத ரீதியாக ஒரு நாட்டை பிரித்து இந்தியாவின் தலையாகிய காஷ்மீரில் தீராத தலைவலி குடுத்து கொண்டு வரலாற்று எதிரியாகிய சீனாவுடன் கைகோர்ப்பது மட்டுலாமல் தீவிரவாத முகாமைத்து அவ்வபோது மும்பை, புனே, பெங்களூர் போன்ற நகரங்களில் குண்டு வெடிக்க செய்யும் இஸ்லாமிய தீவிர வாதத்தை வரலாற்று காயங்கள் ஆறாத இந்திய மக்கள் எப்படி மன்னிக்க முடியும் ! பகைவனிடத்தும் அருள் செய் நெஞ்சே என்று இனியும் வாழ்ந்து வீழ்ந்து போவதற்கு இஸ்லாமிய தீவிரவாதத்தால் வாடும் எந்த நாடுமகளும் முட்டாள்கள் அல்ல!

தமிழ் கிறுக்கன்.
அக்கரை மேஸ்திரி-2
ஏம்பா அனானி அங்கேயும் பெரும்பான்மை வாதம்தான் முஸ்லீம்களை துரத்துணு நீ சொல்ல வர்றதோட அர்த்தம் புரிந்து. ... இந்தியாவுல இந்துப் பாசிசம் தான் முஸ்லீம்களை துரத்திச்சு........ இலங்கையிலேயும் இந்துப்பாசிசம்தான் முஸ்லீம்களை துரத்திச்சுணு சொல்ல வர்றே இல்லையா? அடக் ***** அபப்டிண்ணா இலங்கைப் பிரச்சனை இனப்பிரச்சனை இல்லை மதப் பிரச்சனைங்கற? அட **** பயபுள்ள! அப்படீண்ணா ஒரு பேச்சுக்கு கேக்குறேன்...... இது வரை இரண்டு லட்சம் இந்துக்களைக் கொன்ற பௌத்தத்தை பாசிசம் என்று சொல்லலாமா? இங்கபாரு.... இதை நான் சொன்னதா தோசையை என் தலையிலெயே திருப்பிடத? நீதான் சிறுபான்மை சமூகங்களுக்கிடையே பெரும்பான்மை வாதத்தை திணிக்கிரெ........ நீ சொல்றபடி யோசிச்ச்சுப் பார்...........நிதானமா யோசி இலங்கையில் எது பெரும்பான்மை வாதம் என்று சொல்......... வடக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மை வாதம் என்றால் .கிழக்கின் சூழலை என்ன சொல்வதை? தவிறவும் மதவெறியன் பார்ப்பன வெறியன் இல.கணேசன் சமீபத்தில் சொன்ன சொன்னான் தெரியுமா? மலேஷியாவுல இந்துவெல்லாம் சாகறான் என்றால் தமிழன் ஆதறிக்க மாட்டேங்குறான்...... இலங்கையில தமிழன் சாகுறான் என்றால் இண்டியன் ஆதறிக்க மாட்டேண்ணான்......
C.Kandasami
வணக்கம் அனானி,
முஸ்லிம் மீது உண்மையான அக்கறை இருந்தால் பின்வரும் கேள்விக்கு பதில் எழுதி இருக்க வேண்டுமே. ஏன் எழுத வில்லை?

" நந்தி கிராமில் ஏழை விவசாயிகளின் நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிபிஎம் பிடுங்கிக் கொடுத்தபோது பாதிப்பிற்கு ஆளானவர்களில் பலர் ஏழை இஸ்லாமிய விவசாயிகள். நீங்கள் உலகமயமாக்கலும் எஸ் இ இசட்டும் (SEZ) தலித்துகளுக்கு விடுதலை அளிக்கும் என்று இதே கோவையில் பேசினீர்கள். மேற்கு வங்கத்தில் சிபிஎம்மின் உலக மயமாக்கல் கொள்கையால் நேரடியாக பாதிப்பிற்கு ஆளான இஸ்லாமியர்களின் நிலை குறித்து வாயே திறக்கவில்லை. அப்படியானால் உங்கள் இஸ்லாமிய ஆதரவு என்பது புலிகளை ஒழிக்க ஒரு கருவி மட்டும்தானா? " --> நன்றி மு.கார்க்கி

இந்த கேள்விக்கு பதில் எழுதலாமே நீங்கள்..

சரி அப்போது தான் எழுத வில்லை.
இப்போதாவது எழுதுவிர்களா என்ற பார்போம்.
Subash
புலிகள் முஸ்லிம் சமுதாயத்தை விரட்டியதும் உண்மை.
1983 ஜூலை கலவரத்தில் கொழும்புவில் உள்ள தமிழர்களது கடைகளை முஸ்லிம்கள் சூறையாடியதும் உண்மை.
பதிவு செய்யும்போது அனைத்தும் பதிவு செய்ய வேண்டும். எப்போது புலிகளை கண்ணை மூடி கொண்டு எதிர்க்க வேண்டும் என்பதற்காக
முஸ்லிம்கள் மீது அக்கறை கொண்ட மாதிரி நடிக்க கூடாது.
chandhiran
//நீங்கள் திருநீறு பூசுவதாலேயே உங்களை யாரும் தீவிரவாதி என நினைப்பதில்லை. சிலுவை அணிவதாலேயே நீங்கள் பயங்கரவாதியாக முத்திரை குத்தப்படுவதில்லை. ஆனால் நீங்கள் தொப்பி அணிந்திருந்தால் மட்டும் போதும்… பயங்கரவாதியாகவும், தீவிரவாதியாகவும் சித்தரிக்கப்படுவதற்கான எல்லா சாத்தியங்களும் இங்கு இருக்கின்றன. இந்தியாவில் இஸ்லாமியனாக வாழ்வதென்பது துயர்மிகுந்த ஒன்று. சதா சர்வ நேரமும் தன்னை கண்காணிக்கும் அரசின் கண்களுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் எப்படி நிம்மதியாக வாழ இயலும்? //
நீங்களே சொல்லி விட்டீர்கள். பார்சி, யூத, சமண, பௌத்த சிறுபான்மையினருக்கு இல்லாத ' துயரம் ' இவர்களுக்கு மட்டும் ஏன்?.

காரணம் இஸ்லாமியர்களே. அவர்களுக்கு மொழி சார்ந்த இன உணர்வோ ,தேசிய உணர்வோ சிறிதும் இல்லாதவர்கள். ஒரு செச்சன்யன்,ஒரு ஐரிஷ், ஒரு அசாமிய போடோ இவர்களது தீவிரவாதம் இவர்களது தேசியத்துக்கானது. செச்சன்யா, ஐரிஷ் தீவிரவாதத்தை இங்கே கிறிஸ்தவ தீவிரவாதமாகப் பார்க்க எந்த முகாந்திரமும் இல்லை.

ஆனால் இஸ்லாமியர்கள் மொழியையோ தேசியத்தையோ மதிக்காத காரணத்தால் தங்களை உலகளாவிய ஒரு குழுவாக கருதுவதால் அது மதத் தீவிரவாதமாக மட்டுமே பார்பதற்கான வாய்ப்பைத் தருகிறது. எனவே தான் நீங்கள் சொல்லும் நிலை. //தேச எல்லைகளைக் கடந்து உலக அளவில் ஒடுக்கப்படும் இனமாக இருப்பது இஸ்லாம்தான். //. இது அவர்களாய் ஏற்படுத்திக் கொள்வது.

//நான்கைந்து நண்பர்கள் ஒன்று சேர்ந்து இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும்போது, அதில் ஒரு முஸ்லிம் இருந்தால் ’நீ எல்லாம் உங்க ஆளுகளுக்குதான் சப்போர்ட் பண்ணுவ’ என்று மற்றவர்கள் கமெண்ட் அடிப்பதும், அது இயல்பான ஒன்றாக இருப்பதும் எத்தகையது?//
இந்தியாவில் வசிக்கும் ஒருவன் பாகிஸ்தான் அணியை வெறியுடன் ஆதரிக்க வேண்டிய காரணமென்ன? வெறும் விளையாட்டு தானே என்பீர்கள்.. அது அல்ல காரணம் ...தேசியம்,மொழியை மதிக்காதவர்கள். ஒரு தமிழ் முஸ்லிம் அல்லாவையே வணங்கட்டும். அதற்காக அரபு மொழியில் பெயர் வைத்துக் கொண்டு திரிய வேண்டுமா. தமிழில் பெயர் வைக்கக்கூடாதா.
ennar
intha ulakam enggo poi kontirukku
கலை
கொல்லைக் காட்டி குதிரையை ஓட வைப்பதுபோல இஸ்லாமிய பயங்கரவாதம் என்று ஓயாமல் பிரச்சாரம் செய்து மக்களின் கோவனத்தைக் கூட விட்டுவக்காமல் உருவிக்கொண்டிருக்கிறது முதலாளித்துவம். முன்பு கம்யுனிஸ்டுகளை பூச்சாண்டிகளாக காண்பித்து நரவேட்டையாடி அதன்பின்னே குளிர்காய்ந்த முதலாளிகள் இன்று இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காண்பித்து குளிர்காய்கின்றனர். உண்மையில் அல்கைதா என்ற அமைப்பு உலகில் எங்கும் இயாங்காவிட்டாலும் அமெரிக்காவில் ஆரம்பித்து இன்று உலகம் முழுதும் உள்ள ஊடகங்கள் அனைத்தும் அல்கைதா என்று இழுப்பதிலிருந்து இதனை புரிந்துகொள்ளலாம். நியூயார்க் இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்ட பிறகு முஸ்லீம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து மக்களை பயமுறுத்துவதில் வெற்றிபெற்றுவிட்ட அமெரிக்கா இதனை உலகமயப் படுத்தியிருக்கிறது. தனது இன்னல்களுக்கான காரணம் இன்னதுதான் (முதலாளித்துவம்) என மக்கள் அறிந்துகொள்ளாமலிருப்பதற்காக, மக்களின் சிந்தனைகளை மாற்ற ஏதேனும் ஒன்று முதலாளிகளுக்கு தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதனாலே புதிது புதிதாக நிகழ்வுகளும், எதிரிகளும் உருவாக்கப்படுகிறது/ படுகிறார்கள். இதன் பின்னனி புரிந்தால்தான் முஸ்லீம்கள் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்படுவதைப் பற்றி தெரிந்துகொள்ளமுடியும். முஸ்லீம்கள் தீவிரவாதிகளாக மாற்றப்படுவதும் நமது கோவனம் உருவப்படுவதும் வேறுவேறல்ல.
முகவை மைந்தன்
நீ தீவிரவாதி, நீ பயங்கரவாதி.. நீ சார்ந்த சமுகம் முழுதும் தண்டிக்கப்படும், நீ குரல் எழுப்பினால் அது சாத்தானின் குரல், ..ஒரு சமுகத்தை இன்னும் எத்தனை எத்தனை அடக்குமுறைகளுடன், அடக்கமுடியுமோ அத்தனை விதமான தாக்குதல்களுடனும் அடக்கி குற்றப் பரம்பறையாக மாற்றம் காண உலக ஆதிக்க சக்திகள் துடித்த வண்ணம் உள்ளனர்.

”இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்” என்று கீற்று குழுமம் ஒரு அறிவிப்பை தொடர்ந்து எத்தனை எத்தனை எதிர் விமர்சணங்கள்...?

தெரு நாய்க்கு கிடைக்கும் கரிசணம் கூட ஒரு சமுகத்திற்கு இல்லையென்றால்..

கேட்பதற்கு கூட நாதியில்லை என்றால் ...
தமிழ், இந்து தமிழன்,சந்திரியன்..தமிழ் கிருக்கன் துரை இழமுருகு போன்ற சான்றோர்களின் ஆசை படியே...

ஒரு உயிருக்கு உணவில்லை என்றால் ஜகத்தை அழித்துவிடு என்றானே பாரதி...இங்கு ஒரு சமுகமே
அழிக்கப்படும் போது ....இந்த உலகத்தையே சுட்டு பொசுக்கினாலும் தவறில்லை--எப்படியும் உன் சமுகம் தீவிரவாத சமுகம் தானே?..பேசாமல் இவர்களின் ஆசைப்படி உன்மையான தீவிரவாதியாகிவிடு....

இதுதானே இந்த இந்துத்துவா வெறியர்களின் ஆசை??

தமிழ், இந்து தமிழன்,சந்திரியன்..தமிழ் கிருக்கன் துரை இழமுருகு போன்ற சான்றோர்களின் உசுப்பேத்தும் பேச்சுக்கு இசுலாமியர்கள் எப்படியும் பலியாகிவிடுவார்கள் என்ற நப்பாசைக்கு..இசுலாமிய இளைஞர்களே நீங்கள் பலியாகிவிடாதீர்கள்.
வென்மணி மாறன்
பரவாயில்லை இராமகோபலன்களும், அத்வானிகளும், பிரவின் தொகாடியாவும், பிரமோத் முத்தாலிகளும்,இராமசேனைகளும், சிவ சேனைகளும்..இன்னும் ஆயிரமாயிரம் இந்துத்துவா தேச பக்திமான்கள், பாரத தாயின் அரும் புதல்வர்கள், உன்மையான மன்னின் மைந்தர்களும்
தமிழகத்தின் வலை பின்னல்களுக்குள் வருவதை பார்க்கும் போது.... ஒளிமயமான எதிர்காளம் தமிழகத்திற்கு நிச்சயம் உண்டு என்பது உறுதியாக தெரிகிறது.
இவர்களின் வாய் முகுர்ததிற்கு பின் ஒரு மதக்கலவரம் நிச்சயம் உண்டு அதை தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நடக்கும்.

இரத ஊர்வலம் எடுப்பாந் பின் இசுலாமியர்களின் உயிர்களை எடுப்பான், விநாயகர் ஊர்வலம் என்பான் பின் குண்டு வைத்து கொல்வான், ஆயுத பயிற்சி எடுப்பான் பின் பயங்கர வெளிப்படையாகவே சமுக கலவரங்களை உண்டாக்கி கொல்வான்...இந்த தேச பிதாமகன்களின் ஒவ்வொரு செயலும் மறைக்கபடும்/மறக்கடிக்கபடும்/இல்லை என்றால் தேச பக்தியாளராக மாற்றப்படும்..

உலகமே உறைந்து நின்று பார்த்த பாபர் மசூதி இடிப்பாகட்டும்,குஜராத்தின் கலவரத்தை எப்படி செய்து முடித்தோம் என்று உள்ளம் பூரித்து சொன்ன வாக்குமூலமாகட்டும்,
60 லட்சம் கொடுத்தால் ஒரு மதக்கலவரம் உருவாக்கி காட்டுவேன் என்று கூலி பேசும் பிரமோத் முத்தாலிக் ஆகட்டும், மாலேகான், மக்காமசூதி,பூனே, இராசஸ்தான் குண்டு வெடிப்பாகட்டும்,இன்னும் ஒரிசாவில் கிருச்துவ சமுகத்திற்கு எதிரான கலவரங்கள் ஆகட்டும்.... இவர்கள் எல்லாம் தேசபக்தியாளர்கள்....... உங்கள் தேச பக்தி தொடரட்டும்...

இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் கொல்வதற்கு பதில்
எல்லா இசுலாமியர்களையும் மொத்தமாய் கொன்று குவித்துவிடலாம் .. உங்களுக்கு எந்த பிரச்ச்னையும் இருக்காது தானே? முன் மாதிரி முதல்வர் நரேந்திர மோடி மாதிரி..??

உலகத்திக்கே எப்படி இனப்படுகொலை செய்வது என பாடம் எடுத்த உங்கள் ஆரிய குல விலக்கு ஹிட்லர் யூதர்களை கொன்றது போல் !.... எல்லா இசுலாமியர்களையும் கொன்று விடுங்கள்..
அப்படி கொன்றாலும் நீங்கள் இசுலாமியர்களுக்கு தீவிரவாத /பயங்கரவாத் முத்திரை குத்தி உலக சமுகத்தை சரி செய்யலாம். இசுலாமியர்கள் என்றால் அதுவும் யாரும் கேட்கமாட்டார்கள்...
ஈழத்தில் தமிழர்களை இராசபக்சே கொன்றது போல்...
இப்படி வெட்டியாய் கீற்றூக்கு எதிர் வினையாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
மணி
குற்றப்பரம்பரை என்றால் ஜாதி, இனம் ஆகியவைதான். அப்பா முஸ்லீமாகவோ அல்லது அமமா முஸ்லீமாகவோ இருப்பதால் மகனோ மகளோ முஸ்லீமாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. ஏராளமான மக்கள் பல்வேற் காரணங்களுக்காக மதம் மாறுகின்றனர். ஐரோப்பா அமெர்க்காவுக்கு மத்திய கிழக்கிலிருந்து வரும் பெரும்பாலான அரபுகள் இஸ்லாமை விட்டுவிட்டு கிறிஸ்துவராக மதம் மாறுகின்றனர். இது வெளியே தெரியாமல் ஏராளமாக நடைபெறுகிறது. ஓரிரு வெள்ளையர்கள் முஸ்லீமாக மதம் மாறுவதை வைத்துகொண்டு இஸ்லாம் பரவுகிறது என்று இங்கே கதை விடுகிறார்கள். ஏன் ஆப்கானிஸ்தானிலும் ஏராளமான ஆப்கானியர்கள் இஸ்லாமை விட்டுவிட்டு கிறிஸ்துவர்களாக ஆகியிருக்கிறார்கள். காஷ்மீரில் கூட ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் இஸ்லாமை விட்டுவிட்டு கிறிஸ்துவர்களாக ஆகியிருக்கிறார்கள். கிறிஸ்துவராக ஆன ஆப்கானியரையோ அல்லது காஷ்மீரியையோ யாரும் சந்தேகமாக பார்க்கப்போவதில்லை. ஆகவே இது பரம்பரை பிரச்னை இல்லை.
இந்துத்தமிழன்
சரி அமெரிக்காதான் முதலாலித்துவ நாடு. அது ரெட்டை கோபுரம் தாக்கப்பட்டபின்னால் உலகத்தில் இஸ்லாமிய பயங்கர்வாதத்தை பேசத்துவங்கியிருக்கிறது என்று சொல்லுகிறீர்கள். ஏன் ரஷியாவில் குண்டு வெடித்து அவ்வளவு பேர்கள் முஸ்லீம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்கள்? ஏன் ரஷியாவில் பெஸ்லானில் ஏராளமான சிறுகுழந்தைகளை சிறுவர் பள்ளியை கைப்பற்றி கொன்றார்கள்? ஏன் உகைய்ர் பகுதியில் ஏன் சீனர்களை முஸ்லீம்கள் கொன்று குவித்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் தாய்லாந்தில் பௌத்தர்களை முஸ்லீம்கள் கொன்று குவித்துகொண்டிருக்கிறார்கள? ஏன் பிலிப்பைன்ஸில் கிறிஸ்துவர்களை முஸ்லீம்கள் கொன்ற் குவித்துகொண்டிருக்கிறார்கள்/ ஏன் கேரளாவில் கிறிஸ்துவ புரபஸரின் கையை வெட்டி எடுத்தார்கள்? ஏன் மும்பையில் அப்பாவி மக்களை கொன்ற் குவித்தார்கள்? ஏன் ஆப்கானிஸ்தானில் பெண்கள் பள்ளிகளை குண்டு வைத்து தாக்கிபள்ளிக்கு போகும் முஸ்லீம் சிறுமிகள் மீது ஆசிட் ஊற்றுகிறார்கள்? ஏன் பங்களாதேஷில் நூற்றுக்கணக்கான குண்டுகளை இந்துக்கள் பகுதிகளில் வைக்கிறார்கள்?
பிரச்னை முஸ்லீம்களிடம் இல்லை. இஸ்லாமில் இருக்கிறது. இஸ்லாம் என்ற கொள்கையை விட்டு இந்த மனிதர்கள் வெளியேறும் வரைக்கும் இந்த பிரச்னை தொடரும்.
இந்துத்தமிழன்
வெண்மனிமாறன், மதானியின் முஸ்லீம் கும்பல் ஒரு கிறிஸ்துவ லெக்சரரின் கையை வெட்டியிருக்கிறது. இதே மதானிதான் ஒல்லியாய் விட்டான், பிரியாணி போடு, அவனுக்கு ஆயுர்வேத ம்சாஜ் கொடு என்று தமிழ்நாட்டில் உர்மைக்குரல் கொடுத்து அவரை கருணாநிதியும், கம்யூனிஸ்டு அச்சுதமேனனும், காங்கிரஸ் கட்சியும் தங்கதாம்பாளத்தில் வைத்து தாங்கி கேரளாவுக்கு கூட்டிப்போனார்கள். மதானியை பற்றி ஏன் பேசமாட்டேன் என்கிறீர்கள். முஸ்லீம் கும்பல் செய்வதெல்லாம் இந்துக்கள் செய்வதன் எதிர்வினையா? அல்லது இந்துக்களிடமிருந்து வர்ம் எதிர்வினை முஸ்லீம்களின் அராஜகத்தினால் தூண்டப்பட்டு வருவதா? கிறிஸ்துவ லெக்சரரின் கையை வெட்டுவதற்கு ஏதாவது பஜ்ரங்தளம் வந்து அவனை தூண்டியதா?
durai ilamurugu
நண்பர்களுக்கு
. என்னை இந்து தீவிரவாதி என்று அழைத்தமைக்கு நன்றி இசுலமியர்களை யார் குறை கூறினாலும் இதுதான் பெயர் போலும். பெரியரின் வழியில் வந்த யாரும் இந்து மட்டுமல்ல எந்த தீவிரவாதியாகவும் இருக்கமுடியாது.அவர் தமது போராடடங்களை அமைதி வழியெலே நடத்தினார்.

கோவை குண்டுவெடிப்பில் உயி இழந்தமனிதர்களைப் பற்ரிக் கவலை இல்லை என்றால் விட்டூ விடலாம்
'முசுலீம்கள் நாடு இனம் மொழி இவற்றைக் கடந்து தாங்கள் இசுலாமியர்கள் என்ற எண்ணத்தில் தான் வாழ்கின்றனர் இல்லாவிட்டல் அயோத்தியில் நடந்த மசூதி இடிப்பிற்கு கோவையில் குண்டு வைப்பானேன்? தமிழ் நாட்டில் இசுலாமியர்களுக்கு எதிரான சூழல் அப்போது இல்லையே? ஆனாலும் முசுலீம்கள் தங்களைத் தமிழர்களாகப் பார்காமல் பாபரின் வாரிசுகள என்ற தான் பார்த்தார்கள்."

இந்தகெள்விக்கு பதில் எழுதவதை எல்லொரும் தவிர்திருக்கிறார்கள்

என்னுடையே முதன்மையான கேள்வியே அதுதான்.
இசுலமியார்கள் தங்களைத் தமிழர்கள் ஆகப் பார்க்காமல் வெறும் மத்த்தின் அடிபடையில் இயங்குவது ஏன்? தேவை இல்லாமல் ஈழப் ப்ரச்சினையை இங்கு இழுக்கவேண்டாம் . நான் பேசுவது தமிழ் நாட்டைப் பற்றி மட்டும்தான் . இட்லட் கொன்றான் ராசபட்சே கொன்றன் என்பது எல்லாம் அரசியல் நிகழ்வுகள் இனத்தின் பெயரால் நட்ன்தவை. மத்தின் பெயரால் மட்டும் நிகழ்ந்தவை அல்ல. சிலுவை யுத்தம் என்ற பெயரில் 200 ஆண்டு கால்ம் கிறித்துவர்களுக்கும் . இசுலாமியர்களுக்கும் இடையே போர் நடந்த்தது. அதைவேண்டுமானால் மதத்தின் அடிப்படையில் நடந்த ஒரு போராகக் கருதலாம் .மறுபடியும் என்னுடைய கேள்வி இசுலாமியர்கள் தங்களுடைய மற்ற எல்ல அடையாளங்கலையும் மறுத்து மத அடிப்படடையில் வேற்று மொழிக்கரனுடனும் வேறு நாட்டுக்கரனுடனும் சேர்ந்து கொண்டு தன்னுடைய அணடை வீட்டானுக்கு குண்டுவைப்பது ஏன் ? இதற்கு ஒரு தெளிவன பதிலைச் சொல்லவும் மேற்கொன்டு வாதம் செய்யலாம் .
'அது போன்றே இசுலாமியர்களும் த்ங்கள் இடையே உள்ள மக்கள் எதிரிகளை அடையாளம் காட்ட முன் வந்தால் நிலை மாறும்.'
இந்தனிலை மாறினால் ஒரு சமுதாயம் முழுவதும் தீவிரவாதி என்றுக் கருதபபடுவது குறையும்.
மோடி கொன்றான் சரி அதற்கு தமிழ் நாட்டு தமிழர்கள் என்ன செய்யமுடியும்.
மத அடிப்படையில் இணயும் போது மற்றவற்றை விட்டு விடுகிறார்கள் என்பதே எமது வருத்தம். மற்றபடி இசுலமியர்களை மதத்தின் அடிப்படையில் வேடடை என்பது தமிழ் நாட்டில் நட்கக்கவில்லை மற்ற இடங்களில் நடப்பதைப் நானும் வ்ன்மையாகக் கண்டிகிறேன் அதற்கு காரணங்கள் மதம் மட்டும் அல்ல இன்னும் அழமானவை என்பது எனது கருத்து.
கலை
"அயோத்தியில் நடந்த மசூதி இடிப்பிற்கு கோவையில் குண்டு வைப்பானேன்?"

தென்னாட்டு ராமர் பாலத்திற்கு வடநாட்டு வேதாந்திகள் ஏன் கூவ வேண்டும்!

அயோத்தியில் ஒரு கட்டடம் மட்டும்தானா இடிக்கப்பட்டது? ராமர் கோயில் கட்டும் பேர்வழி என்று ரதயாத்திரை மூலம் போகும் இடமெல்லாம் மனித ரத்தம் குடிக்கவில்லையா அத்வானிகள்? பம்பாய் படுகொலை மூலம் மனிதக்கறி திங்கவில்லையா பால்தாக்கரேக்கள்? குஜராத் படுகொலை மூலம் வெறியைத் தீர்த்துக்கொள்ளவில்லையா மோடிகளின் சுன்னிகள்? இவர்கள்தான் முதன்மையான குற்றவாளிகள் என்று அப்பட்டமாக தெரிந்திருந்தும் ஏன் இவர்களை நமது நீதித்தேவன்கள் தூக்கில் போட மறுக்கிறார்கள் என்று கேட்கத் தோன்றவில்லையே நண்பா உங்களுக்கு!

சில மறைகழண்ட இந்துக்கள் குண்டு வைத்தார்களாம். நண்பர் இந்துத்தமிழன் எப்படி நாசூக்காக பேசுகிறார் பாருங்கள். மறைகழண்ட இந்துக்கள் குண்டு வைத்ததை இந்துக்கள் ஆதரிக்கவில்லையாம். ஆனால் முஸ்லீம்களில் சிலர் குண்டு வைப்பதை அனைத்து முஸ்லீம்களும் ஆதரிக்கிறார்களாம். அதாவது அனைத்து முஸ்லீம்களும் தீவிரவாதிகளே என்ற RSS பயங்கரவாத அமைப்பின் பிரச்சாரத்தை இங்கே வழிமொழிகிறார் இந்துத்தமிழன் என்ற இந்து வெறியன். மாலேகானில் குண்டு வைத்தவனை ஏன் மறைகழண்ட இந்து என்கிறாய் இந்துத்தீவிரவாதி என்று சொல்லேன் நண்பா!

அத்வானிகள் முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல இந்து என்று அழைத்துக் கொள்கிறீர்களே உங்களுக்கும் எதிரிதான். ஆதாரம் வேண்டுமா இந்துத்தமிழா?
வன்னிஅரசு
தமிழ்நாட்டில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை என்பதற்கு வரலாறே இல்லாமல் இருக்கும்போது, அனைத்து திராவிட கட்சிகளும் முஸ்லீம்களுக்கு அரணாக இருந்தபோதும் ஏன் இந்துக்களை கொல்லவேண்டும் என்று பழனிபாபா பேசினார்?
அயோத்தியில் மசூதி இடித்தது 1992இல்தான். ஆனால் அதற்கு முன்னாலேயே பழனிபாபா மிகுந்த வன்முறையோடு இந்துக்களை கொல்லவேண்டும் கோவில்களை இடிக்கவேண்டும் என்று பேசியிருக்கிறார். நானே கேட்டிருக்கிறேன். அவருக்கு பெரும் ஆதரவுக்கூட்டம் இருந்தது. இன்னும் கூட இணையத்தில் அவருக்காக எத்தனை எத்தனை இணையதளங்கள் இருக்கின்றன. இது வன்முறையை வழிபடும் முஸ்லீம் மனோபாவமினிறி வேறென்ன?
இங்கே எழுதும் கலை, வென்மணிமாறன், முகவைத்தமிழன் ஆகியோர் இந்துத்தமிழன் எழுதியிருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். கீற்று நடத்தும் கூட்டத்தில் இந்த கேள்விகள் பேசப்படவேண்டும். இந்த பிரச்னைகளை எதிர்கொள்ளாமல் சும்மா ஊடகங்கள் முஸ்லீம்கள் மீது காழ்ப்பை உருவாக்குகின்றன என்று பேசுவது எப்படி நியாயமானதாகும்? எதெற்கெடுத்தாலும் பாபர் மசூதி அத்வானி என்றுபேசுவதில் என்ன பயன்? ஏன் அத்வானிகள் உருவாகிறார்கள் என்று யோசியுங்கள். முஸ்லீம் காழ்ப்புணர்வே இல்லாத தமிழ்நாட்டில் பழனிபாபா வந்து குரூரமான வன்முறை பிரச்சாரம் செய்தபின்னர் தான் ஆர்.எஸ்.எஸே தமிழ்நாட்டில் வளர்கிறது. இன்றும் கூட ததஜ, தமுமுக ஆகியோர்கள் செய்யும் பிரச்சாரத்தினால்தான் இந்து அமைப்புகள் உருவாகின்றன. தங்களுக்கு இந்து என்ற அடையாளம் இல்லாமல் தமிழர்கள் என்று இருப்பவர்களிடம் நீ இந்து என்று பிரச்சாரம் செய்து, இந்து மதம் மாறினார் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து இந்து உணர்வை தூண்டுகிறார்கள். சவுதி அரேபியாவிலிருந்து வரும் பணம் தமிழ்நாட்டை வன்முறை காடாக ஆக்கிக்கொண்டிருக்கிறது. இதுதான் உண்மை
durai ilamurugu
நனபரே , குனண்டு வெடிப்பிற்கும் வெறும் கூவலுக்கும் வேறுபாடு இல்லை என்று எண்ணுகிற்றிர்களா. பாப்ர் மசூதி இடிக்கபட்டதைக் குறித்து இசுலமியர்கள் ஒரு போராட்டம் நடத்தியிருந்தால் . கணடனம் மட்டும் தெறிவித்து இருன்தால் உங்கல் வாத்ததை ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் சரமாரியாக மருதுவமனை . பேருந்து நிலையம் , என்று குறிப் பார்த்து பொதுமக்களை கொல்லும் நோக்கத்துடன் குண்டு வைப்பதும் வேதாந்திகள் கூவுவதும் ஒன்றாகிவிடுமா ?ஒப்பிட முடியாதவற்றை ஒப்பிட முயாலாதீர்கள்
இப்போதிய கேள்வி யார் முதலில் ஆரம்பித்தார்கள் என்பது அல்ல . அப்படிப் பார்த்தால் மீண்டும் பாபர் அவுரஙசீப் என்று ஆரபம்பிக்க வேண்டும் வரலாற்றை பின்னோக்கி ச்ழற்றவது தேவைஅற்றது.ஆபத்தானதும் கூட
என்னைப் பொறுதவறையில் இசுலாமியர்கள் தமிழ் நாட்டில் வே ட்டையாடப்படவில்லை. அது எமக்கு போதுமானது.
'பிரச்னை முஸ்லீம்களிடம் இல்லை. இஸ்லாமில் இருக்கிறது. இஸ்லாம் என்ற கொள்கையை விட்டு இந்த மனிதர்கள் வெளியேறும் வரைக்கும் இந்த பிரச்னை தொடரும்."
இந்த வாதம்ஏற்றுக் கொள்ள முடியாத வாதம் ஆகும்
பாகிச்தானில் குண்டு வைப்பது தாலிபாண்கள் எனும் முச்லீம்கள் இறப்பதும் முசுலீம்களே ஆப்கானிலும் அதுதான் பிரச்சினை. அப்படிஇருக்க இஸ்லாம் என்ற மத்தைல் தான் பிரச்சினை என்பது சரியன்று . எல்லாமதங்களும் அன்பையே போதிக்கின்றன. ஆனால் நடைமுறையில் வ்ண்முறையை ஆதிரிகின்றன சைவர்கள்
சமணர்களைஆயிரக்கணக்கில் கழுவில் ஏற்றவில்லையா? அதை இன்றும் திருவிழவாகக் கொண்டடவில்லியா?
ஆனால் இசுலாமியர்கல் இந்த 21 ஆம் நோற்றான்டிலும் அதை பொதுமக்கள் குழந்தைகள் என்கிற வேறுபாடின்றி செய்கிறார்கள் என்பதே வருதமாகும். கீற்று இணயதளம்ஒருங்கினக்கும் கூட்டம் இவற்றை வாதிடுமா? அல்லது வழக்கம் போல் இசுலாமியர்கள் கொடுமைபடுத்தப் படுகிறார்கள் என்பதை வேறு ராகங்களில் பாடி முடித்துவிடுமா என பார்க்கலாம்
கலை
இங்கு நமது இந்துத் தீவிரவாத நண்பர்கள் ஒரு பொய்யை திரும்பதிரும்ப கூறி உண்மையாக்கிட முயலுகின்றனர். 1997,நவம்பர் 30 அன்று கோவையில் இந்துமுன்னனியும் கோவையின் காவல்துறையினரும் இணந்து முஸ்லீம்களின் மீது திட்டமிட்டு நடத்திய தாக்குதலின் பதிலடியே கோவைக் குண்டுவெடிப்பு. வன்முறைகளுக்காக கைது செய்யப்பட்ட காவலர்களும் இந்துமுன்னனியினரும் சாட்சிகள் இல்லையென்று விடுவிக்கப்பட்டனர். இதுதான் கோவையில் கலவரம் செய்தவர்களுக்கு நமது நீதிமன்றங்கள் கொடுத்த தண்டனை.

"ஒரு இந்து ஏதாவது செய்து விட்டால் விசாரணைக் கமிசன் அமைக்கப்படுகிறது; ஆனால், ஒரு முசுலீம் ஏதாவது செய்துவிட்டால், அவன் தூக்கில் போடப்படுகிறான்.'' இது மும்பய்க் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜாகீர் உசைன் பத்திரிகையாளர்களிடம் சொன்ன கருத்து. "தடா''சட்டத்தின்கீழ் விசாரணை நடைபெற்ற மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில் கூட , நடிகர் சஞ்சய்தத் உள்ளிட்டு பலருக்குப் பிணை வழங்கப்பட்டது. ஆனால், சாதாரண குற்றவியல் சட்டங்களின் கீழ் கோவை குண்டு வெடிப்பு வழக்கிலோ, சிறையில் அடைக்கப்பட்டிருந்த 160 பேரில் ஒருவருக்குக் கூடப் பிணை வழங்கப்படவில்லை.” ”சுலைமான் பேக்கரி எனும் நிறுவனத்திற்குள் புகுந்து, அங்கு பாதுகாப்பிற்காகப் பதுங்கியிருந்த முசுலீம்களின் மீது கண்மூடித்தனமாகச் சுட்டு, ஆறு பேரைக் கொன்ற ஆர்.டி.தியாகி என்ற போலீசு அதிகாரி, நிரபராதி என விடுவிக்கப்பட்டதோடு, அவர் பதவியில் இருந்து நிம்மதியாக ஓய்வும் பெற்றும் விட்டார். ஆனால், மதானி மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித சாட்சியமும் இல்லை என்று வழக்கு விசாரணையில் நிரூபிக்கப்பட்ட பிறகும் கூட, இவருக்குப் பிணை வழங்க உச்சநீதி மன்றம் கூட மறுத்துவிட்டது.”
ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்கள் பெரிதும் நம்பியிருப்பது முதலாளித்துவ சனநாயகத்தினால் புனிதத்தூணாக காட்டப்படும் நீதிமன்றங்களைத்தான். ஆனால் இந்த நீதித்தேவதைகளோ இந்து (பார்ப்பன) மனசாட்சிக்கு விரோதமாக தீர்ப்பளிப்பதில்லை. முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல ஐயாயிரம் ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு வரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகவுமே இந்நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கின்றன. இஸ்லாமியத் தீவிரவாதம் களையப்பட வேண்டுமென்றால் இக்காவி தீர்ப்புகளுக்கு எதிராக குரலெழுப்ப வேண்டும். கீற்று இணயதளம் ஒருங்கினக்கும் கூட்ட்த்தை விமர்சிப்பவர்கள் ஒருதலைப்பட்சமான இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு எதிராக குரலெழுப்புவீர்களா!

முஸ்லீம் நண்பர்களே, நீங்கள் உங்கள்து மதம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து போராடுவது என்பது RSS காலிகளுக்கு வாய்ப்பாகவே அமையும். அதைத்தான் அவர்களும் எதிர்பார்க்கின்றனர். எனவே நீங்கள் ஏனைய புரட்சிகர இயக்கங்களுடன் இணைந்து போராட முன்வாருங்கள். தாழ்த்தப்பட்ட மக்களுடன் ஐக்கியப்படுங்கள். அதுவே இந்நாட்டைக் காவியிருளில் மூழ்காமல் காப்பாற்றும். எனது கடவுள் என்னைக் காப்பாற்றுவார் என்பது இருமாந்திருப்பது அறிவீனம்.
நன்றி.
முகவை மைந்தன்
இந்துத்துவா தீவிரவாத ஆதரவாளர்களே...!!!

எல்லா மதக்கலவரங்களுக்கும், குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் இசுலாமியர்களும் ,இஸ்லாம் தான் என்பதை
எத்தனை அழுத்தமாக பதிவுசெய்கிறீர்கள்??

வரலாற்று நிகழ்வுகளை மறப்பதும் ,அதை மாற்றி பதிப்பதும் இந்துத்துவவாதிகளின் ஆரிய தந்திரம் அது!!.

உள்ளூர் அரசியலில் நீங்கள் செய்யும் திரிபுவாதமே கண்னை கட்டுகிறதே.. பின் உங்கள் பாசிசத்திற்கெல்லாம் அப்பனாகிய அமெரிக்க -யூத பயங்கரவாதங்களின் ஊடகங்கள் வாந்தியெடுக்கும் செய்திகளை அப்படியே உங்கள் செய்தியாக சொல்லும் பாசிச வாதத்தை என்ன செய்ய ????

முதலில் மதானியை தீவிரவாதி என்று சொல்வதை நிறுத்தவும், எந்த ஒரு குற்றமும் செய்யாமல் ஒருவர் கைது செய்யப்படுவதும் அவரின் மீது நாட்டையே குலுக்கிய பயங்கர நிகழ்வுகளுக்கு காரணம் என குற்றம் சாட்டப்படுவதும் எந்த விசாரனையுமே இல்லாமல் 9 வருடம் 13 வ்ருடம் என கொடுமைப் படுத்துவதும் இசுலாமியர்களின் மீது தொடரும் அரசு பயங்க்ர வண்முறையாகும்.

1)மதானி அவர்களை கைது செய்து 13 வருடங்களாக விசாரனை கைதியாக வைத்திருந்து அவரின் வாழ்க்கையை அழித்த பார்பண நீதித்துறை,

கொலை, கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பார்பண சங்கரசாரியிடம் எப்படி நடந்து கொண்டது?
மாஜிச்ரேட் நீதி மன்றங்களில் ஜாமின் வாங்கினாலே போதும் என்ற நிலையில் உயர் நீதிமன்றங்களிலேயே ஜாமின் வழங்கினார்களே அது எப்படி? சிறை சாலைக்குள் பார்பண காவாலி ஒரு நாள் கூட தங்கி விட கூடாது என்ற பதட்டம்??? காவலாளிகள் பின்னே பதுங்கி பதுங்கி நடக்க மிகவும் பவ்வியமாக எல்லாருக்கும் அருளாசி கொடுத்து கொண்டே பெரிய பார்பணன் முன்னே நடக்க எல்லா போலிசும் பின்னே நடந்த காட்சிகளில் யார் போலிஸ், யார் குற்றவாளி என்பதே தெரிய வில்லை.

அதுவும் நீதிமன்ற விடுமுறை தினத்தன்று நீதிபதியின் வீட்டிலேயே ஜாமின் கிடைத்தது?

இசுலாமியன் என்றால் அவனுக்கு ஒரு சட்டம் , பார்பண உயர்சாதி சாமி யென்றால் இன்னொரு சட்டமா??

ஒருவர் கைது செய்யப்பட்டால் 90 நாட்களில் அவர் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப் பட வேண்டும் என்பது சட்டம், கைது செய்யப்பட்டு 9 வருட கொடும் சிறை தண்டனை அனுபவித்தும் குற்ற்ப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் இசுலாமியர்களை கொடுமை படுத்தி அழிக்க மட்டும் தனி சட்டங்கள் இருக்கிறதா??.

1200 சாட்சிகள் விசாரித்தும் ஒருவர் கூட திரு மதானி அவர்களுக்கு எதிராய் குற்றம் சாட்டாத நிலையில் ஒருவரை எப்படி 9 வருட கடும் காவலில் வைக்க முடிந்ததது? ----இது முன்னால் உயர் நீதிமன்ற நீதிபதி திரு பாலசுப்ரமனிய அய்யரின் கேள்வி.

110 கிலோவாக இருந்த திரு மதானி அவர்கள் திரும்பி வரும் போது வெரும் 45 கிலோ எடையுடன் திரும்பி வருகிறார்..ஒரு கால் இல்லாத ஊன முற்றவர் என்ற ஒரு கரிசணம் கூட இல்லாத கொடுரர்கள்.. அவர் விரும்பிய கேரளா சிகிசை கூட எடுக்க விடாமல் அடைத்து வைத்தனர்.

கடைசியில் திரு மதானி அவர்களுக்கு எதிராய் சாட்சிகளாய் கொண்டு வரப்பட்ட சில இளைஞர்கள் காவல்களை மீறி மீடியாக்கள் முன்பாக போலிசின் கொடுமையினால் தான் தங்களை பொய் சாட்சியம் சொல்ல வைப்பதாக வாக்கு மூலம் கொடுத்த விவகாரம் இன்னும் கேரளாவை சர்சைக்குள்ளானது.

அதற்கு பின்பு தான் கேரளாவில் பல நடு நிலை கட்சிகள் எல்லாம் அவருக்கு ஆதரவாய் குரல் கொடுகின்றன.

இத்தனை வருடம் அவர் இழந்த காலங்களை இனி எவராலும் மீட்டு தர முடியுமா?.

அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா????
அவர் தொலை பேசியில் கோயம்புத்தூருக்கு பேசியதுதான் இத்தனை ஆண்டுகள் அவர் அனுபவித்த கொடும் சிறைக்கு காரணம்.

அவர் கேரள அரசியலில் தலித்துகளையும் இசுலாமியர்களையும் இனைத்து முதல் அரசியல் எழுச்சி கொள்ள செய்தது தான் காரணம்.-

உலகிலேயே விசாரனைக்கு அழைத்து சென்று கடுங்காவலில் 9 வருடம்/13 வருடங்கள் சிறை தண்டனை அனுபவிப்பது இந்தியாவில் மட்டும் தான் உன்டு.

அவர் குற்றத்தை ஒப்பு கொண்டிருட்ந்தாலும் அதிகபட்சமாக 7 வருடம் தான் சிறை தண்டனை கிடைத்திருக்கும் ..குற்றமற்றவர் என சொல் வதற்குள் ஒரு ஆயுள் தண்டனை கொடுத்திருக்கும் இந்த பயங்கரவாத அரசின் பின்னால் இந்துத்துவம் இருக்கிறது.

இந்த நிலை உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் நடந்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனையாவது பண்ணமுடியுமா??

ஆக மொத்தம் சட்டங்களும் அரச பயங்கரவாதங்களும், மீடியாக்களும் எவனையும் பெரும் குற்றவாளியாக்களாம் ,யாரையும் நல்லவனாக சித்தரிக்கலாம்.

இது ஒரு மதானிக்கு மட்டும் நடந்த சோதனை காலம் அல்ல சிறை கம்பிகளுக்கு பின்னால்
ஆயிரமாயிரம் இசுலாமிய சகோதரர்களின் கண்ணீர் இருக்கிறது ,

எம்.ஜீஆர் முதல் ,கலைஞர் முதல் மருத்துவர் இராமதாசு வரை யிலும் நன் மதிப்பு உள்ள நாடறிந்த ஒரு நடு நிலை அரசியல் வாதி குணங்குடி ஹனிபாவை 13 வருட கொடும் சிறைதண்டனை வழங்கி கடைசியில் குற்றம் மற்றவர் என விடுதலை செய்யப் படுகிறார். அவர் இழந்த வாழ்க்கையை யாரினால் திருப்பி தரமுடியும்?

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும்
ஒரு நிரபராதி தண்டிக்கப் ப்ட கூடாது என்று சொல்லும்
சட்டம்தான் நிரபராதிகள் என்று சொல்வதற்கு ஒரு ஆயுள் தண்டனை கொடுத்து சொல்கிறது.

சந்தேக கேசில் உள்ளே போகும் பிக்பாகெட் போன்ற சிறு குற்றவாளிகளை தொடர் சந்தேக விசாரனை கைதுகள் மூலம் ஒரு பெரும் குற்றவாளியாக மாற்றும் காவல் /சட்டதுறைகள்.

அப்பாவி இளைஞர்க்ளை தொடர் தண்டனைகள் மூலம்
அவர்களை நிரந்தர தீவிரவாதிகளாக்கமல் இருந்தால் சரிதான்.
ஆதித்தன்
இந்து இந்து என குதிக்கும் இந்துதுத்துவாதிகளே ..
முதலில் யார் இந்து என்பதை விளக்குங்கள்.

பார்பான் ஒருவன் தான் நீங்கள் சொல்லும் ”இந்து”மற்ற எல்லாருமே பார்ப்பணணால் கட்டமைக்க பட்ட படிவங்களே..
தலித்துகள் எல்லோரும் இந்துக்களா?. பிற்படுத்தபட்ட எல்லோரும் இந்துக்களா? மலைவாழ் மக்கள் எல்லோரும் இந்துக்களா?....

எங்கிருந்தோ வந்த பார்பான் காலத்திற்கு ஏற்ப அவன் தினித்த விசமம் தான் இந்து என்ற அடையாளம்.

ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒரு வித உணவு, பழக்க வழக்க அடையாளம் இருக்கிறது..ஆனால் பார்பான் சொல்லும் சாத்திரப்படி நீங்கள் கூறுங்கள் யார் இந்து என்று?

இங்கிருக்கும் 139 மில்லியன் மக்களும் பாபரின் வாரிசுகளா? நாள் தோரும் மற்ற மதங்களில் இருந்து மாறிவரும் இசுலாமியர்களும் பாபரின் வாரிசுகளா?..

பவுத்த மததினர் எல்லாரும் சீனாவிலிருந்து வந்தவர்களா?.. கிருச்துவர்கள் எல்லாம் பிரிட்டனிலிருந்து வந்தவர்களா?

இந்தியாவில் இருக்கும் எல்லா மக்களும் இன் நாட்டின் மக்களே ...பார்பணர்களை தவிர.. அவன் இரத்தம் தான் யாருடனும் கலக்காமல் அப்படியே பாது காத்து வருகிறார்கள். அவர்களுக்கு அடிபணிந்து பணி செய்து கிடக்க சாதிய படிவங்கள் தேவை பட்டது. அதுவே இப்போது அடையாளமாகிவிட்டது.

இராமாயனத்தில் இராமன் சீதாவுடன் சேர்ந்து கொண்டு சாராயம் பருகி மாட்டுகறி திண்டதாய் வால்மீகி கூறுகிறார்.

அனால் கம்பராமயணத்தில் இராமர் ஒரு ஊன் .புழால் விரும்பாத சைவர் என்கிறார்.--

இதில் எந்த ராமனை பார்பது ? சான்றிதழ்களில் வேறு வழியில்லாமல் இந்து என்று போட்டு கொள்ளும் நிலை உள்ளதது.

ஒருவர் எந்த மதத்திற்கு வேண்டுமானாலும் மாறும் சூழல் வரலாம் அப்படி இருக்கையில் மத அடையாளம் கொண்டு மக்களை தண்டிப்பதும் , குற்றவாளிகளாக அடையாளப் படுத்துவதும் மிகப் பெரிய குற்றமாகும்
வன்னிஅரசு
கலை,
யாராவது கேள்வி கேட்டால், உடனே இந்து தீவிரவாதி என்று அழைக்க ஆரம்பித்துவிடுகிறீர்கள். நல்லா இருங்க*. தீவிரவாதி என்று அழைத்துவிட்டு
அப்புறம் என்ன நண்பர்கள்? இதெல்லாம் ஒரு பொழப்பா? இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். ஏதாவது ஒரு இந்து செய்துவிட்டால், விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது, முசுலிம்
செய்துவிட்டால் தூக்கில் போடப்படுகிறான் என்று சொல்கிறீர்களே. இதுவரை எத்தனை தீவிரவாத முஸ்லீம்கள் இந்தியாவில் தூக்கில்
போடப்பட்டிருக்கிறார்கள்? சொல்லுங்களேன். படு பயங்க்ரமான தீவிரவாத செய்ல்கள் செய்த முஸ்லீம்களுக்குக் கூட வக்கீல், பிரியாணி, சொகுசு
வாழ்க்கை என்று செட்டப் செய்து தர கம்யூனிஸ்டுகளும், மனித உரிமை ஆர்வலர்களும், கருணாநிதியும் காங்கிரசும் இருக்கும்போது அவர்களுக்கு என்ன
கவலை? இஸ்லாமிய தீவிரவாதம் களையப்படுவது இஸ்லாம் அழியும்போது மட்டுமே நடக்கும். சிலுவைப்போர்கள் என்று கிறிஸ்துவர்கள் முஸ்லீம்கள் மீது போர் தொடுத்தார்கள். முஸ்லீம்கள் உல்கெங்கும் ஜிகாத் செய்தார்கள். எப்போதாவது 1400 வருட இஸ்லாமிய வரலாற்றில் இந்துக்கள் முஸ்லீம்கள் மீது
போர்தொடுத்தார்களா? இந்துக்கள் இங்கிருந்து அரேபியாவுக்கு சென்று போர்தொடுத்தார்களா? அலலது அரபியர்கள் அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு
வந்து போர்தொடுத்தார்களா? இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற பாம்புக்கு பால்வார்ப்பது போல சப்பைக்கட்டு
கட்டும் கம்யூனிஸ்டுகளுக்கு எச்சரிக்கை. ஈரானில் ஆட்சிக்கு வந்ததும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் செய்த முதல் காரியம் அதுவரை இஸ்லாமிய
பயங்கரவாதத்தை ஆதரித்த எல்லா கம்யூனிஸ்டுகளையும் நாத்திகர்கள் என்று குற்றம் சாட்டி தூக்கில் போட்டதுதான். அதுதான் உங்களுக்கு நடக்கும்.
வரலாற்றிலிருந்து பாடம் கற்றுகொள்வது கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் தேவை. இல்லையேல் அந்த பாடம் உங்களுக்கு மீண்டும்
படிப்பிக்கப்படும். முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள். சாதாரண மக்கள் மடையர்கள் அல்ல. கடந்த லோக்சபா தேர்தலில் கேரளாவில் மதானியும் கம்யூனிஸ்டு பினாரயி விஜயனும்
சேர்ந்து தேர்தல் கூட்டங்களில் கம்யூனிஸ்டு கூட்டணிக்கு வாக்கு சேகரித்தார்கள். அதனை பார்த்து சாதாரண மக்கள் முஸ்லீம்கள் உட்பட காங்கிரசுக்கு பெருவாரியான வாக்களித்து வெற்றிபெற வைத்தார்கள். மதானியை
வைத்துத்தான் பாஜகவும் ஓட்டு கேட்டது. ஆனால், கேரளா மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை. மக்கள் மதச்சார்பற்று இருக்கத்தான் விரும்புகிறார்கள். நீங்கள்தான் அவர்களை மதகட்சிகளிடம் தள்ளுகிறீர்கள். நீங்கள் இப்படி இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்தால் முஸ்லீம்களின் ஆதரவை பெறலாம்
என்று திட்டம் போடுகிறீர்கள். இது உதவாது. எல்லா முஸ்லீம்களையும் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களாக கற்பனை செய்கிறீர்கள் என்று சாதாரண சைலண்ட்
முஸ்லீம்கள் உங்களுக்கு எதிராகத்தான் இருப்பார்கள். அதே போல இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதால், சாதாரண இந்துக்களும் உங்களுக்கு
எதிராகத்தான் இருப்பார்கள். இப்படி எல்லா கட்சிகளும் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்தால், அந்த பயங்கரவாதிகளுக்கு பிரியாணி போட்டுக் கொண்டிருந்தால், மக்கள் வேறு வழியின்றி பாஜகவுக்குத்தான் போவார்கள். எச்சரிக்கை.
durai ilamurugu
இங்கு நமது இந்துத் தீவிரவாத நண்பர்கள் ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறி உண்மையாக்கிட முயலுகின்றனர். 1997,நவம்பர் 30 அன்று கோவையில் இந்துமுன்னனியும் கோவையின் காவல்துறையினரும் இணந்து முஸ்லீம்களின் மீது திட்டமிட்டு நடத்திய தாக்குதலின் பதிலடியே கோவைக் குண்டுவெடிப்பு"

காவல் துறை தாக்கினால் அதற்கு பதில் அளிக்கும் முறை சரமாரிக் குண்டுவெடிப்பு தானா?

முதலில் இசுலமியர்களுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்களையெல்லம் இந்து தீவிரவாதி என்று அழைப்பதை நிறுத்தவும். ஒரு செய்தியை வாதம் செய்து கொண்டிரூம் போதே முத்திரைக் குத்துவது நேர்மையான செயல் அன்று. யார் முதலில் ஆரம்பித்தார்கள் என்று கணக்குப் போட்டடால் நாம் மாலிக்காபூர் வரை செல்லவேண்டியுருக்கும் அது தேவை அற்றது த்ழும்பை சொறிந்து காயமாக்கும் வேலை
நாம் இன்றிலிருந்த்துதான் நமது பயணத்தைத் தொட்ங்கவேண்டும் நேற்றிலிருந்து இல்லை
அதேயன்
முஸ்லீம் முஸ்லீம் என்று குதிக்கும் முஸ்லீம் தீவிரவாதிகளே, முதலில் முஸ்லீம் என்றால் யார் என்று சொல்லுங்கள். அரபியர் மட்டும்தான் முஸ்லீம். மற்றவர்கள் எல்லோரும் **** கட்டாய மதம்மாற்றப்பட்ட மனிதர்களே.
இந்துத்தமிழன்
ஆதித்தன் சொல்லுகிறார்//இந்து இந்து என குதிக்கும் இந்துதுத்துவாதிகளே .. முதலில் யார் இந்து என்பதை விளக்குங்கள். பார்பான் ஒருவன் தான் நீங்கள் சொல்லும் ”இந்து”மற்ற எல்லாருமே பார்ப்பணணால் கட்டமைக்க பட்ட படிவங்களே.. // இப்படியெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு உளறாதீங்க. பாவம் சுளுக்கிக்கப்போவுது. இதே மாதிரி, முஸ்ளீம் முஸ்லிம் என்று குதிக்கும் முஸ்லீம் பயங்கரவாதிகளே. முதலில் யார் முச்லிம் என்று சொலுங்கள். அரபி ஒருவன் தான் முஸ்லீம். மற்றவர்கள் எல்லோரும் அவர்களால் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டவர்கள் என்று சொன்னால் இன்னும் சரியாக இருக்குமே? இன்றைக்கு இருக்கும் ராவுத்தர்கள் துருக்கி படைவீரர்கள் என்று அவர்கள் எழுதும் சரித்திரமே சொல்லுகிறது. மரைக்காயர்கள் அரபியாவிலிருந்து இங்கு வந்து தங்கியவர்கள் என்று அவர்களது சரித்திரமே சொல்லுகிறது. இங்கே இருக்கும் உருது பேசும் முஸ்லீம்கள் மட்டுமே இந்தியர்கள். அவர்கள்தான் வடக்கில் அவுரங்கசீப்பால் கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட இந்துக்கள். முதலில் ஒன்றை கவனமாக வைத்துக்கொள்ளுங்கள். இங்கே யாரும் பௌத்தர்களையோ சமணர்களையோ பார்ஸிகளையோ யூத சிறுபான்மையினருக்கோ இல்லாத பிரச்னை ஏன் முஸ்லீம்களுக்கு வருகிறது?
அமீர் அப்பாஸ்
மனித உரிமை சார்ந்த விவாதம் என்கிற போதே பொறுத்து கொள்ள முடியாத இவர்களின் மனப்போக்கே தெளிவு படுத்துகிறது இந்துத்துவ வெறியின் இழிந்த அறிவு தளத்தை..! பார்ப்பனியம் என்பது மூளைக்குக்குள் சுமக்கிற மலத்தைப் போன்றது.
இந்துத்தமிழன்
அமீர் அப்பாஸ், மனித உரிமைகள் இந்தியாவில் நிச்சயம் முஸ்லீம்களுக்கு உண்டு. இந்திய பிரதம மந்திரி மன்மோகன்சிங் இரண்டு வருடங்களுக்கு முன்னால் பகிரங்கமாக, இந்தியாவில் முன்னுரிமை முஸ்லீம்களுக்குத்தான். பிறகுதான் மற்றவர்களுக்கு என்று சொன்னார். அதே போல ஒரு பாகிஸ்தான் மந்திரியோ அல்லது பங்களாதேஷ் மந்திரியோ அட அது கூட வேண்டாம். ஒரு சாதாரண பாகிஸ்தானியோ, பாகிஸ்தானில் இந்துக்களுக்குத்தான் முன்னுரிமை பிறகுதான் மற்றவர்களுக்கு என்று சொல்வாரா? பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் கொல்லப்படும் இந்துக்களுக்கும், கட்டாயமதம் மாற்றப்படும் இந்துக்களுக்கு மனித உரிமை பற்றி ஏதேனும் பேசியிருக்கிறீர்களா?
இராஜேந்திரன்
கண்ணதாசனின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது----

வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்.....

நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய்
நீதியும் நேர்மையும் தேடுவார் - தினம்
ஜாதியும் பேதமும் கூறுவார் - அது
வேதன் விதியென்றோதுவார்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்......
ஐ.மனோகரன்
ஒரு மதத்தின் மேல் மொத்தமாக தீவிரவாத முத்திரை குத்துவது தவறுதான்.
ஆனால் மதானிக்கு பரிந்து பேசுகிறவர்கள் 19 வருடமாக சிறையில் வாடி கொண்டிருக்கும் நளினி யை மட்டும் பாரா முகமாக இருப்பது ஏன்?
கலை
அதாவது பழையதை மறந்துவிடுவோம் புதியதை பற்றிமட்டுமே பேசுவோம் என்பதாகக் கூறுகிறார்கள் அதாவது கோவைக் கலவரத்தை மறந்துவிடு கோவைக்குண்டுவெடிப்பை மட்டும் பேசு. பாபர் மசூதி இடிப்பையும் அதன் நீட்சியான மும்பைப் படுகொலையையும் மறந்துவிடு மும்பைக் குண்டுவெடிப்பை மட்டும் பேசு. குஜராத் படுகொலை மாலேகான் குண்டுவெடிப்பை மறந்துவிடு டில்லி, ஹைதராபாத் குண்டுவெடிப்புகளை மட்டும் பேசு. என்கிறார்கள். – இப்படிக் கூறுப்ப்பவர்கள் யாராக இருக்கமுடியும்?

தனது நாட்டின் இறையாண்மையைக் காக்க வேண்டிய அரசு, தனது நாட்டு மக்களை காக்க வேண்டிய ஒரு அரசு, எதிரியைப்போல பாவித்து தப்பியோடக்கூட முடியாதவாறு முற்றுகையிட்டு கொன்றதே, அந்தக் கொலைகாரர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லையே இது அநியாயமில்லையா என்றால். அப்படியென்றால் அலாவுதீன் கில்ஜீயிலிருந்து ஆரம்பிக்கலாமா என்கின்றனர். அப்படியென்றால் ஏன் ஆரியர் படையெடுப்பில் இருந்து ஆரம்பிகக்கூடாது? அன்றிருந்த மன்னர்களின் ஆட்சிமுறை அது. தமிழ்நாட்டில் இருந்த சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் கூடத்தான் ஒருவருக்கு ஒருவர் போரிட்டுக் கொண்டனர். இங்கு பிரச்சினை அதுவல்ல. ஆனாலும் அப்பொழுதிருந்த பாபரோ, அக்பரோ கூட தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த மக்களை நிராயுதபானியாக்கி கொன்றொழித்தார்களா? என்பதுதான் பிரச்சினை. இஸ்லாமியர்கள் மேல் வெறுப்பைக் கொட்டி எழுதும் பெல்கியத்தில் பிறந்த கெய்ன்ராட் எல்ஸ்ட் என்பவன் கூறிய "not Muslims but Islam is the problem" என்பது இங்கு முன்வைக்கப்படுகிறது.( எல்ஸ்டினுடைய புத்தகம் ஒன்றை அத்துவானி வெளியிடும் அளவிற்கு இவன் இந்துத்துவ வட்டாரங்களில் செல்வாக்குப் பெற்றவன்.) – இப்படிக் கூறுபவர்கள் யாராக இருக்கமுடியும். எனவே தான் இவர்களை நான் இந்துத்தீவிரவாதிகள் என்றேன்.

பேசுங்கள். இரண்டையும் பேசுங்கள். இந்துத்தீவிரவாத்த்தை மறந்துவிட்டு முஸ்லீம் தீவிரவாதத்தை மட்டும் பேசமுடியாது. அது தீர்வல்ல. அதில் தீர்வுமில்லை.
முகவை மைந்தன்
கலை அவர்களுக்கு எனது பாராட்டுகள்.... நல்ல கருத்துக்களை பதிவு செய்துள்ளீர்கள்.

மனோகரன் அவர்களுக்கு, நளினி என்றில்லை அநீதி இழைக்கப்படும் ஒவ்வொரு மனிதனுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே காந்திய நாட்டில் பிறந்த நடு நிலையாளர்கள் எல்லாருக்குமான கருத்தாக இருக்கிறது,

இதில் இசுலாமியன் என்றால் அவன் தீவிரவாதி என்றும்
ஆதிவாசி என்றால் மாவோயிஸ்ட் என்றும்,
ஈழத் தமிழன் என்றால் விடுதலை புலி என்றும் பச்சையாய் முத்திரை குத்தும் ஃபாஸிஸ்ட்டுகளின் பிடியில் ஊடகங்களும் ஆட்சி அதிகாரங்களும் இருக்கும் வரையிலும் இந்த இனவாதமும் தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை.
இனவாதம் வளத்தல் பகைமை வளர்த்தல் என்பது பார்பாணியத்தின் முக்கிய பங்காகும் அது இருக்கும் வரைக்கும் ஒருவரையொருவர் பலித்து கொண்டும் ,இழித்து கொண்டும் இருக்கும் துர்பாக்கியம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

பழனி பாபாவின் பேச்சு பெரும் உணர்சியை தூண்டும் பேச்சு தான் சந்தேகம் இல்லை,
அவர் பேசிய பேச்சுகள் இதுவரை தானாக வம்பிழுத்து எந்த மதத்தையும் இழிவு படுத்தி பேசியது இல்லை,

ஒவ்வொரு முறையும் இராம கோபாலன் இசுலாமியர்களை எவ்வளவு கேவலமான வார்த்தைகளால் பேசமுடியுமோ அவ்வளவு கேவலமான வார்த்தைகளால் பேசுகிறான் அவனை போன்ற இன மதக் கலவரங்களை தூண்டும் தீவிரவாதிகளை இந்த சட்டமும் ஒன்று செய்யாது, காவல் துறையும் தடுக்காது ஆனால் அவன் மட்டும் பேசி கொண்டே இருப்பான்?..அதை அப்படியே கேட்டு விட்டு பினம் போல் இருந்தால் நல்லது ஏண்டா நாயே இப்படி பேசின எனக் கேட்டால் அவன் தீவிரவாதி - பழனி பாபாவின் எல்லா பேச்சுகளும் என்னிடம் இருக்கிறது உங்களுக்கு வேண்டுமெனில் நான் உதவுகிறேன் -எல்லா பேச்சுகளையும் கேட்டு விட்டு சொல்லுங்கள் எந்த கூட்டத்தில் அவராகவே இந்து மக்களையும் இந்து கடவுளர்களையும் தாக்கி பேசினார் என்று கூறுங்கள்.
மதுரையில் இராம கோபலன் பேசிய பேச்சினை நானும் கேட்டு இருக்கிறேன் “ துளுக்கனை வெட்டு , துளுக்கச்சைய கட்டு என்கிறான்”
துளுக்கச்சிகளின் கருவரைக்குள் இந்துக்களின் விந்து புக வேண்டும் என்கிறான் . இப்படியெல்லாம் பேசும் ஒருவனை இந்த சட்டம் என்ன செய்தது?..இல்லை காவல் துறை என்ன செய்தது?. இந்த கொடும் பேச்சுகளை கேட்கும் இளைஞர்கள் இயல்பாக என்ன செய்வார்கள்?.. அதற்கு பதிலடி கொடுத்தவர்தான் மரணித்த பாபா அவர்கள், அதற்காக அவர் தன் உயிரையும் தியாகம் செய்துள்ளார்.

மததீவிரவாதிகள் எதுவேண்டுமானாலும் பேசலாம் இசுலாமியன் பொத்தி கொண்டு இருக்க வேண்டும்???
மண் புலுவை மிதித்தால் கூட அது தன் எதிர்ப்பை காட்டும் என்பது தெரியாதா?
முகவை மைந்தன்
இந்து தமிழரே!!!

எதை எடுத்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் , அரேபியான்னு கண்டம் விட்டு கண்டம் பாய வேண்டாம்.

உள்ள என்ன நடக்குதுன்னு பேசும் போது எதுக்கு நண்பா அங்கெல்லாம் தாவுறிங்க??

மொதல்ல நம்ம ஊறு மேட்டர் பேசுவோம் அடுத்தவன் நாட்ட பத்தி நமக்கு என்ன கவலை.

கீற்று குழு ஆப்கானிஸ்தான், இல்லை பாகிஸ்தான் நாட்டு இசுலாமியர்களை பத்தி பேசினா அப்போது நீங்கள் அதை எல்லாம் இழுக்கலாம்.
இந்துத்தமிழன்
முகவைமைந்தன், பாகிஸ்தான் பங்களாதேஷில் இருக்கிற இந்துக்களுக்கு ஆதரவாக இந்திய இந்துக்கள் பேசக்கூடாதா? ஆனால், பாகிஸ்தான் பங்களாதேஷை விட ஆயிரம் மைல் தொலைவில் இருக்கும் இஸ்ரேலில் பாலஸ்தீன முஸ்லீம்களுககு ஆதரவாக இங்கே கொடி பிடிக்கிறீர்கள். அங்கே இருக்கும் பாபர் மசூதி உடைக்கப்பட்டதற்கு இங்கே கோயம்புத்தூரில் குண்டு வைக்கிறார்கள். ஆனால் காஷ்மீரிலிருந்து இந்துக்களை கற்பழித்து துரத்தியதை மட்டும் தமிழ்நாட்டில் பேசக்கூடாது. என்ன நியாயம்?
முகவை மைந்தன்
இந்து தமிழனுக்கு!!!

///முகவைமைந்தன், பாகிஸ்தான் பங்களாதேஷில் இருக்கிற இந்துக்களுக்கு ஆதரவாக இந்திய இந்துக்கள் பேசக்கூடாதா? ஆனால், பாகிஸ்தான் பங்களாதேஷை விட ஆயிரம் மைல் தொலைவில் இருக்கும் இஸ்ரேலில் பாலஸ்தீன முஸ்லீம்களுககு ஆதரவாக இங்கே கொடி பிடிக்கிறீர்கள். அங்கே இருக்கும் பாபர் மசூதி உடைக்கப்பட்டதற்கு இங்கே கோயம்புத்தூரில் குண்டு வைக்கிறார்கள். ஆனால் காஷ்மீரிலிருந்து இந்துக்களை கற்பழித்து துரத்தியதை மட்டும் தமிழ்நாட்டில் பேசக்கூடாது. என்ன நியாயம்? ////

தாராலாமா பேசாலாம்யா??.. உலகத்துல எந்த மூலையில மனித உரிமைகள் பாதிக்கப்படுதோ அதை பத்தி கவலை படுற உரிமை மனித சமுகத்திற்கு உண்டுய்யா..

நாம் எல்லோரும் சேர்ந்தே கவலை படுவோம்,

இந்தியாவில் இன வாததிற்கும், மத வாததிற்கும் காரணமான எல்லா தீய சக்திகளின் ஊற்றயும் கவணித்து
நிரந்தரமாக அடைத்துவிட்டால் நம்ம நாடு நல்லா இருக்கும்ல.

கேப்டன் விஜயகாந்த் , ஆக்ஸன் கிங் அர்ஜுன் படத்தில் பேசப்படும் ””பாகிஸ்தான் தீவீரவாதி அல்லக்கை ””போன்ற டயலாக் எல்லாம் விட்டு விட்டு

இந்து தமிழன் இனி தமிழனாக இருந்து மானுட சமுகத்திற்காகா குரல் கொடுக்கும் ஒரு நடு நிலை மனிதனாக காண்பதற்கு எனது வாழ்த்துகள்...

இந்துத்துவா, இசுலாமிய இன்னும் எல்லாவித தீவிரவாதத்தையும் எதிர்க்கும் நடு நிலை மனிதனாக எங்க ஆளு இந்து தமிழன்(இனி மேல் வெறும் தமிழன்) இனி இருப்பாருய்ய ...அதனால இனிமே எவன் தீவிரவாதி என்ற பேச்சையெல்லாம் விட்டு விடுவோம்.

அதையெல்லாம் கேப்டன் விஜயகாந்த் பாத்துகிருவாரு
கீழக்கரை இந்து
முக்வை மைந்தனுக்கும், கீற்றூ இணையத்தளக்காரர்களுக்கும் ஒரு வேண்டுகோள்

இந்த வீடியோ தமிழில் தான் இருக்கிறது. குரானும் ஹதீஸும் மேற்கோள் காட்டப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.

http://www.youtube.com/watch?v=OXwYIikeAWQ&feature=player_embedded#!

இந்த வீடியோவை பாருங்கள். உங்கள் பரிதாபமும் கவலையும் முஸ்லீம்களுக்கு கொடுக்கப்படவேண்டுமா அல்லது உங்களைப்பார்த்து மற்றவர்கள் பரிதாபப்பட வேண்டுமா என்று முடிவு செய்துகொள்ளுங்கள்.
முகவை மைந்தன்
தலைவா இது போல எத்தனை வீடியோக்கள் வேண்டும் எத்தனை கட்டுரைகள் வேண்டும் ,உங்கள் இந்துக்களின் பெருமையை பல ஆண்டுகளுக்கு முன்னரே பெரியார் இயக்கங்கல் பிரித்து மேய்ந்து விட்டன...
ஒரு மதத்தை பத்தி பேசுவாதால் அதன் நம்பிக்கை கொண்டோரின் மனம் புண்படுமே என்ற நாகரீகம் கருதுவதால் தான் இந்து மதத்தின் “ சிறப்புகளை” பேசாமல் விடுகிறேன்.

போதுமான அளவிற்கு பெரியாரின் பகுத்தறிவு இந்து மதத்தை பற்றி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியாச்சு ..இனி அதை போய் நான் என்ன பேச வேண்டும் என்று தான் விடுகிறேன்.

குடலில் சுமக்கலாம் மலத்தை ,தலையில் வச்சா கொண்டாட முடியும்???
இந்துத்தமிழன்
கீழக்கரை இந்துவுக்கு நன்றி, இந்த வீடியோவில், காபிர்கள் கொல்லப்பட வேண்டும், இந்துக்களையும் யூதர்களையும் கொல்லவேண்டும் என்று பேசுகிறார் இந்த மௌலவி டாக்டர் அஹ்மது அஷ்ரப். தமிழில்தான். இந்த போதனைகள் இந்துக்களின் எந்த செயலுக்கும் எதிர்வினையாக இல்லை. அல்லா சொல்கிறார். முஸ்லீம் கேட்கிறான் என்று இந்துக்களை கொல்லவேண்டும். அவ்வளவுதான்.
a.sivakalpavi
\\இப்படி அனுதினமும் இந்திய சமூகம் முஸ்லிம்கள் மீது வெறுப்பையும், காழ்ப்பையும் உமிழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் இன்னமும் இதன் பெயர் மத சார்பற்ற நாடுதான். காவல் நிலையம் உள்பட எல்லா அரசு அலுவலகங்களிலும் பிள்ளையார் கோயில் முதல், பெருமாள் கோயில் வரை வழிபாட்டிடங்கள் கட்டப்பட்ட நிலையிலும் கூட இது மத சார்பற்ற நாடுதான்.//
நீங்கள் சொல்வது சரிதான் இது மத சார்பற்ற நாடு இல்லை ஏனெனில் இங்குதான் ஓர் இந்து தன் நாட்டில் அமர்நாத் யாத்திரை செல்ல கட்டண வசூலும்.முஸ்லீம் மெக்கா செல்ல கட்டண சலுகையும் செய்யப்படுகிறது. எந்த இந்துவை கைது செய்தார்கள் என்று இங்கு யார் விமானம் கடத்தினார்கள். சரி எல்லாம் உங்கள் வாதப்படியே அயோத்தி பிரச்சனைக்கு பின்தான் அனைத்தும் நடந்தது என்றால் ஏன் 1947 ல் பாகிஸ்தானிலிருந்து இந்துக்களை விரட்டினார்கள். ஈராக்கில் எந்த மசூதி தகர்க்கப்பட்டது அங்கு தினமும் குண்டு வெடிக்கின்றதே.
மனிதன்
இந்து தமிழன் ஏதோ பெரிய அறிவாளியை போல கருத்தை கூறி உள்ளார்.
// பாஜக, அது வந்து இப்படிப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசியதா? ராம்சேனா என்று அடாவடி பண்னிக்கொண்டிருந்தவனை சிறையில் போட்டது பாஜக ஆளும் கர்னாடகா அரசுதானே? இங்கே திருத்திக்கொள்ள வேண்டியது முஸ்லீம்கள்.//
முதவல்லிக்கை சிறையில் போட்டது, அவருடைய தோலை ஆதாரத்துடன் தெகல்கா வெளியிட்டதால். இதற்க்கு முன்பு அவர் பப்களில் சென்று பெண்களை தாக்கிய போது என்ன கிழித்தது பி.ஜே.பி. அவர் ஏன் புப்களை தாக்கவில்லை? பப்கள் எல்லாம் பெரிய பண முதலைகளுடையது, அதை நடத்துவதே இந்து மத தலைவர்கள் தான், பார்களை தாக்கினால், சாராய முதலி மல்லையாவிடம் தேர்தலுக்கு சென்று பிட்சை கேட்க்க முடியாது அல்லவா? இதே முதல்வர், பதவிக்காக எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டார் என்பதை நாடறியும்.நாட்டுக்காக போரிட்ட பகத் சிங்கிற்கு தூக்கு, சுதந்தர போராட்ட வீரர்களை காட்டி கொடுத்த வாஜ்பாயிர்க்கு பிரதமர் பதவி, காந்தியை கொன்ற கோட்சே கூட தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தி இருந்தான். முதவல்லிக்கை போன்றே அவனும் இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்டவே இது, இன்னும் நிறைய பேருடைய வேஷம் கலையாமல் இருக்கிறது, நேற்றுவரை சாமியாக காலில் விழுந்து கும்பிட்ட நித்யானந்த ஆதாரத்துடன் மாட்டிகொண்ட பிறகும் அவர் மேல் தவறில்லை ஏறு வாதம் செய்கிறார்கள்.சங்கர ராமனின் குடம்பதிடம் சென்று கேட்டால் தெரியும் சங்கராசிரியரை பற்றி.
ஒரு மாநில முதவரின் தலைமையில் குஜாரத்தில் போட்ட வெறியாட்டம், போலி என்கௌன்ட்டர் எல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பது? கர்ப்பிணி பெண்ணை கொன்று, அவள் வயிற்றிளிருத குழந்தையையும் கிழித்து எடுத்து கொன்றது, பேக்கரியில் ஒரு பாவமும் அறியாதவர்களை உயிரோடு எரித்து கொன்றது, பாதிரியார் குடும்பத்தை உயிரோடு எரித்து கொன்றது எல்லாம் உங்கள் மதத்தில் சாந்தி என்று குறிப்பிட்டுள்ளதா? சாமி, சாமியார்கள் என்று சொல்லிக்கொண்டு கருவறைக்குள் கற்பழிப்புகள் நடக்கும், புராணங்களை வரலாறு என்று திரித்து, அரசியல் நடத்தும் கேவலமான பிறவிகள் இவர்கள்.
உலக வரலாற்றில் தோன்றிய, தோன்றிக் கொண்டிருக்கும் பாசிசக் கட்சிகள் எவையும் மக்களது நல்வாழ்விற்கான திட்டத்தை, சித்தாந்தத்தை கொண்டிருக்க வில்லை. மாறாக, இனவெறி, மதவெறி, சாதிவெறி முதலான சிறுபான்மையினர் மீதான வெறுப்பையே பெரும்பான்மையினரின் நலனாக முன்வைக்கின்றன. ஹிட்லரையும், முசோலினியையும் வெளிப்படையாக ஆதரித்த கோல்வால்கரின் ஆர்.எஸ்.எஸ்., அதன் நிறுவனரான ஹெட்கேவார் காலத்திலேயே பார்ப்பன மேல்சாதியினரின் அதிகார வேட்கை நலனையும், முசுலீம்களை எதிர்த்து ஒடுக்குவதையுமே திட்டமாகக் கொண்டிருந்தது. அதனால்தான் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் கலந்து கொள்ள மறுத்த ஆர்.எஸ்.எஸ்., முசுலீம்களின் எதிர்ப்புக்காக பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்ததார்கள்.
பா.ஜ.க.வைக் கண்காணிப்பதற்காக பா.ஜ.க. பொதுச்செயலாளராக ஆர்.எஸ்.எஸ்.ஆல் அனுப்பப்பட்டவர் சஞ்சய் ஜோஷி. இவர் ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும் ""சி.டி.'' சுற்றுக்கு விடபட்டதன் பின்னணியில் சில பா.ஜ.க. தலைவர்கள் இருப்பதாக எம்.ஜி.வைத்யா எனும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் குற்றம் சாட்டுகிறார். இங்கும் ஆர்.எஸ்.எஸ்.இன் ஒழுக்கம் கேவலமானது குறித்து வருத்தமில்லை. அது வெளியே வந்ததுதான் பிரச்சினை. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தலைவர்களின் இத்தகைய கள்ள உறவுக் கதைகள் இதற்கு முன்னரே அரசல் புரசலாக வெளிவந்திருப்பினும், தற்போதைய ""சி.டி.'' அளவுக்கு நாறவில்லை. இதை யாருக்கும் தெரியாமல் அமுக்குவதே ஆர்.எஸ்.எஸ்.இன் "கட்டுப்பாடு' ஆகும். ஜெயேந்திரன் சங்கரமட லீலைகள் தெருவுக்கு வந்து நாறினாலும், ஆர்.எஸ்.எஸ். அதை மறுப்பதையே கட்டுப்பாட்டுடன் செய்து வந்தது.
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எபதுதான் இந்து மத தலைவர்களின் கொள்கை. எவ்வளவுதான் ஆதருதடன் நிரூபித்தாலும், நாங்கள் புனிதமானவர்கள் என்பார்கள்.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் காவல்துறையில் ஐ.ஜியாக பணியாற்றி விருப்ப ஒய்வுபெற்ற, கர்கரேயைக் கொன்றது யார்? என்ற நூலின் ஆசிரியருமான எஸ்.எம். முஷ்ரிஃப் அப்புத்தகத்தின் மலையாலப் பதிப்பை வெளியிட கோழிக்கோட்டிற்கு வரிகைத் தந்தபொழுது தேஜஸ் பத்திரிக்கையின் செய்தியாளருக்கு அளித்த பேட்டி:
ஐ.பிக்கும் இந்தியாவில் செயல்படும் ஹிந்துத்துவா இயக்கங்களுக்கும் இடையேயான ரகசிய கூட்டணி குறித்து காவல்துறையில் பணியாற்றியபொழுதே கண்காணித்து வந்தேன். இது தொடர்பாக ஏராளமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ஐ.பி.யின் முஸ்லிம் விரோத திட்டங்களை வெளிப்படுத்தும் பத்திரிக்கைச் செய்திகளை பாதுகாத்து வைப்பது எனது வழக்கமாகும். நாட்டில் நடைபெறும் மதமோதல்களை மிக ஆழகமான ஆய்வுக்கு உட்படுத்தியதில் எனக்கு புரிந்த ஒரு விஷயம் என்னவெனில், இரு சமூகங்களுக்கிடையேயான தவறான புரிந்துணர்வின் மூலம் இம்மோதல்கள் நடைபெறவில்லை என்பதுதான். நூற்றாண்டிற்கும் மேலாக புலனாய்வுத்துறைக்கும் ஹிந்துத்துவா இயக்கங்களுக்குமிடையே நிலவும் ரகசிய கூட்டணியின் உருவாக்கம்தான் இக்கலவரங்கள் என்பதை பணியிலிருந்து நான் ஒய்வு பெற்றபொழுது தெரிந்து கொண்டது. நான் தெரிந்து வைத்திருந்த விஷயங்களை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினேன். மதக்கலவரங்களைக் குறித்து எழுதத் துவங்கியபொழுது தான் மும்பை தாக்குதல் நடைபெற்றது. எனது ஊகங்கள் தவறில்லை என்பதை தெளிவுபடுத்தும் நிகழ்வுகள்தான் பின்னர் நடந்தேறியது. இது தான் கர்கரேயின் கொலை குறித்த புத்தகம் எழுதும் ஆர்வத்தை இன்னும் அதிகரித்தது என்று வேண்டுமானால் கூறலாம்.

கர்கரேயின் கொலைக்கு பின்னணியில் ஐ.பி - ஹிந்துத்துவா கூட்டணி உள்ளது என்பது ஊகம் மட்டும்தானா?
இந்துத்தமிழன்
மனிதன், நீங்கள் அறிவாளியாக இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் முட்டாள்களும் அல்ல. பத்திரிக்கைகளை படிக்காதவர்களும் அல்ல.மனிதன், நீங்கள்
திரும்பத்திரும்ப கூறுவன அனைத்தும் பொய்கள் என்று சொல்கிறேன். உதாரணமாக கர்ப்பினிப் பெண்ணை வயிற்றை கிழித்து பிள்ளையை எடுத்து வீசினார்கள் என்று சொல்லுகிறீர்களே. அது நடக்கவே இல்லை.
http://www.deccanherald.com/content/58606/naroda-riots-case-doc-says.html
Dr Jayant Kanoria, who was in-charge of postmortem at the city civil hospital in 2002, today told designated judge Jyotsna Yagnik that he
had conducted the post mortem on the body of Kausar and two others on March 2, 2002.He said Kausar, who was pregnant, died due to shock
after she sustained third degree burn injuries

http://en.wikipedia.org/wiki/2002_Gujarat_violence#Riot_cases_controversy

Riot cases controversy
In April 2009, the Special Investigation Team (SIT) setup by the Supreme Court of India to investigate and expedite the Gujarat riot
cases submitted before the Court that Teesta Setalvad had cooked up
cases of violence to spice up the incidents. The SIT which is headed by former CBI director, R K Raghavan has said that false witnesses
were tutored to give evidence about imaginary incidents by Teesta Setalvad and other NGOs[141]. The SIT charged her of “cooking up
macabre tales of killings”[142][143].

The court was told that 22 witnesses, who had submitted identical affidavits before various courts relating to riot incidents, were
questioned by SIT and it was found that the witnesses had not actually witnessed the incidents and they were tutored and the affidavits were handed over to them by Setalvad[142].

The report which was brought to the notice of the bench consisting of Justices Arijit Pasayat, P Sathasivam and Aftab Alam, noted that the
much publicised case of a pregnant Muslim woman Kausar Banu being gangraped by a mob and foetus being removed from sharp weapons, was
also cooked up and false[141][144].

http://economictimes.indiatimes.com/News/PoliticsNation/Setalvad-in-dock-for-cooking-up-killings/articleshow/4397849.cms

Setalvad in dock for 'cooking up killings'

நீங்கள் எழுதியிருக்கின்றன ஒவ்வொரு புளுகையும் எடுத்து அம்பலப்படுத்த முடியும். இன்று இது போதும்.

கௌசர் பானு மாதிரி ஏராளமான இந்துப்பெண்களும் அந்த கலவரத்தில் முஸ்லீம்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்ட இந்துக்கள் உங்கள் கண்களில் படுவதே இல்லை. இந்துக்களும் மனிதர்கள்தான். இந்து என்றால் திருடன். இந்து என்றால் அவன் காபிர் அவனை கொல் என்று போதனைகள் கேட்டுக்கொண்டே இருப்பதால் இந்துப்பெண்கள் கொல்லப்பட்டால் உங்களுக்கு
முக்கியமான விஷயமாக தெரியவில்லை போலிருக்கிறது.

உங்களைப் போன்றோர்களால் மதத்தை தாண்டி மனிதர்களை பார்க்கமுடியவில்லை
என்பதால்தான் நான் இந்துத்தமிழன் என்று பெயர் போட்டு எழுத வேண்டியதாக இருக்கிறது. இதே போல இந்துக்கள் செத்தால் கவலையில்லை என்று நீங்கள்
எழுதிக்கொண்டே இருங்கள். அதுதான் முற்போக்கு. இந்துக்களும் மனிதர்கள்தான் என்று நினைத்தால் பிற்போக்கு.
JUDGE
soathanai
chandhiran
முகவை மைந்தன் அவர்களே,
நான் தீவிர இந்து மதப் பற்றாளன் என்றோ இந்து மதத்தின் சிறப்பைப் பற்றியோ எந்த இடத்திலும் விளக்கவில்லை..பிறகு எப்படி முடிவு செய்தீர்கள் நான் இந்துத்வா வெறியன் என்று. உங்கள் அகராதியில் இஸ்லாமை எதிர்த்தால் இந்துத்வா வெறியனா .? நான் இந்துமதம் தவிர உள்ள மதங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளேனே . எங்கே உங்கள் இஸ்லாமிய நண்பர்களிடம் உண்மையான மொழி உணர்வோ,தேசிய உணர்வோ இருக்கிறதா என்று கேட்டு சொல்லுங்கள். ஓட்டுப் பிச்சைக்காக இஸ்லாமியர்களுக்கு செல்லம் கொடுத்து வளர்க்க நாம் என்ன கருணாநிதியா ,லாலுவா,முலாயமா,நிதிஷ் குமாரா.?
இந்தியன்
சஹோதரர் இந்துதமில்ழா, நீங்கள் குறிப்பிட்டு காட்டியது பத்திரிகை செய்தி ஆனால் மனிதன் குறிப்பிட்டு காட்டியது வீடியோவில் நேரடியாக காண்பிக்கபட்ட செய்தி. நீங்கள் முன்பு குறிப்பிட்டது போல் முஸ்லிம்கள் குண்டு வைப்பதால்தான் அவர்களுக்கு வீடு தரக்கூட இந்துக்கள் மறுக்கிறார்கள் என்று கூறியிருந்தீர்கள்.
இதோ குண்டு வைத்த பட்டியல் தருகிறேன். முதன் முதலில் முஸ்லிம்கள் மீது பலி சுமத்தப்பட்டு பின் R.S.S தான் என நிருபனமான குண்டு வெடிப்புகள்.
மாலேகான் குண்டு வெடிப்பு-1, சம்ஜவ்தா குண்டு வெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு, அஜ்மீர் குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டு வெடிப்பு-2 . இது போக R.S.S நேரடி தலையீட்டு குண்டு வெடிப்பு தெரிய வேண்டுமா. இதோ "தானே சினிமா குண்டு வெடிப்பு", கான்பூர், நந்திக் குண்டு வெடிப்பு முயற்சிகள், கோவா குண்டு வெடிப்பு முயற்சி, தமிழ் நாட்டில் தென்க்காசி குண்டு வெடிப்பு. இன்னும் முஸ்லிம்கள் மேல் பலி சுமத்தப்பட்டு இன்னும் விசாரைனியாயில் இருக்கும் கேஸ்கள் எத்தனையோ எத்தனை.
joe Ravikumar
வீடொயோ ஆதாரம் காட்டிய கீழகரை இண்டுவுக்கு நன்றி
டாக்டர் அகமது அச்ரப் என்ற மௌலவி குரானில் அல்லா காபிர்களை கொல்லச்சொல்கிறார்; ஹதீஸில் முகம்மது காபிர்களை கொல்லச்சொல்கிறார் என்று சொல்கிறாரே.. அதை தினமும் முஸ்லீம்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் முஸ்லீம்கள் மதவெறி பிடித்து அலைகிறார்கள். காபிர்கள் மீது குண்டு வைக்கிறார்கள். இப்படி முஸ்லீம்கள் க்ரிஸ்துவர்க்அளயும் இந்துக்களையும் கொன்றுகொண்டே இருப்பார்கள். மற்ற்அவ்அர்க்அள் திருப்பி அடிக்கமாட்டஅர்களா? எந்த இடத்திலிருந்தாவது எதிர்வினை வந்தால், முஸ்லீம்களின் இப்படிப்பட்ட போதனைகள்தான். இந்து மதத்தில் இந்துக்கள் அல்லாவதவர்களை கொல்லச்சொல்கிறதா? அல்லது கிறிஸ்துவ மதத்தில் கிறிஸ்துவர்கள் அல்லாதவர்களை கொல்லச்சொல்கிறதா? முதலில் இஸ்லாமை திருத்தப்பாருங்கள். இஸ்லாமின் வன்முறை போதனைகளை திருத்திவிட்டால் மற்றவர்கள் உங்களையும் கொண்டாடுவார்கள். இதே மாதிரி ஒரு கிறிஸ்துவ பாதிரி, கிறிஸ்துவர்கள் அல்லாதவர்களை கொல்லலாம் என்று போதனை செய்து அதனை யூடியூபில் போட்டால் நீங்கள் என்னமாக “ஆதாரம்” காட்டுவீர்கள் !
உயிர் தமிழ்
அருமை நன்பர்களெ,

இஸ்லாம் எனும் ஒர் மதம், மொழி இனம் நாடு இவைகளை தாண்டி மத உணர்வே முக்கியம் எனும் கோட்ப்பாடோடு வாழிந்து கொண்டிருப்பவர்கள், இதெ கேள்விக்ளை சௌதி அரேபிய அரசுக்கு எதிராக எழுத முடியுமா.. அங்கே சென்று இஸ்லாத்க்கு எதிராக எழுதி பாரும்... என்ன் விலைவு சந்திக்க நேரிடும் என்று...>>>>> இது தான் இந்திய நாட்டு சுதந்திரம்....
மோனா மாலிக்
இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை என்று பெரியார் தவறாக கருதினார். அதனால் இந்தியாவில் தீண்டாமையால் அல்லறுற்ற தோழர்களுக்கு இஸ்லாத்தின் மூலம் இழிவு நீங்க பரிந்துரை செய்தார். அதனை பிடித்துகொண்ட இஸ்லாமிய பிரச்சாரர்கள் பெரியாரையே இஸ்லாத்தின் பிரச்சாரராக மாற்றிவிட்டனர். உண்மையில் இஸ்லாத்தில் தீண்டாமை உண்டு. குரானின் ஒரு வசனம் காபிர்களை தீண்டத்தகாதவர்களாகவும் அசுத்தமானவர்களாகவும் வரையறை செய்கிறது. இதனால், இன்றும் மெக்கா நகரத்துக்குள்ளேயே போக காபிர்களுக்கு அனுமதி கிடையாது. 9:28 ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே¢ ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப் பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது.
இந்தியன்
உலக அறிவாளி மோனா மாலிக் அவர்களே எதிலும் ஒரு புரிந்துணர்வு வேண்டும். அங்கு என்ன தீண்டாமை அப்படி தலைவிருத்து ஆடுகிறது?. அங்கு எதற்க்காக மக்கள் செல்கிறார்கள்?. உணவுக்கும், உடைக்கும், தங்குவதற்கும் இப்படிப்பட்ட அத்தியாவசிய தேவைக்குமா போகிறார்கள்.இல்லை இறைவனை நினைத்து பார்பதற்கும், அவனை வணங்குவதற்கும் செல்கிறார்கள். உங்களுடைய எதிரியையும், துரோகியையும் நீங்கள் வீட்டிற்குள் அனுமதிப்பீர்களா அதே போல்தான் அன்று இணைவைப்பவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரிகளாக இருந்தார்கள் அதோடு மட்டுமல்லாது முஸ்லிம்களை கடுமையாக துன்பம் செய்யக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். இத்தகைய எண்ணம் கொண்டவர்களை உள்ளே அனுமதித்தால் என்ன செய்வார்கள். இறைவனின் புனித ஆலயத்தை அசுத்தம் செய்வதற்கு முயல்வார்கள். இதனாலேயே இறைவன் நிராகரிப்பவர்களை தடுத்தான். இறைவனை வணங்காத நிராகரிப்பலர்களுக்கு இறைவனை வணங்கும் இடத்தில் என்ன வேலை!. முஸ்லிம் உடைய புனைப்பெயரில் இருக்ககூடிய உங்களுக்கு எங்கே இது தெரிய போகிறது.
imran
சனி, 17 ஜூலை, 2010Home விம‌ர்ச‌ன‌ம் ஊடகங்கள் மறைத்த குண்டுவெடிப்பு விசாரணைகள்
ஊடகங்கள் மறைத்த குண்டுவெடிப்பு விசாரணைகள் Post under விம‌ர்ச‌ன‌ம் நேரம் 07:47 இடுகையிட்டது பாலைவனத் தூது
முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறுகளையும்,காவல்துறையோ, உளவுத்துறையோ வெளியிடும் புதிய பெயர் தெரியாத இயக்கங்களோடு செய்திகளை புணைந்து மேலும் அச்செய்திக்கு வலுசேர்க்கும் வகையில் கட்டுக்கதைகளையும் வெளியிடும் ஊடகங்களுக்கு, சமீப காலங்களில் இந்தியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளின் விசாரணைகள் தெரியாமல் போயினவோ! என்னவோ?

குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் வழக்கமாக அறிவிக்கும் லஷ்கர்-இ-தொய்பா, ஹர்கத்-உல்-ஜிகாத், இந்திய முஜாஹிதீன்கள், சிமி ஆதரவு தீவிரவாதிகள் ஆகியவற்றோடு சேர்த்து அச்சமயத்தில் கைது செய்யப்படும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும் வரிந்து கட்டி செய்திகளையும், கட்டுக்கதைகளையும் மற்றும் அவதூறுகளையும் பக்கத்திற்க்கு பக்கம், நொடிக்கு நொடி வெளியிடும் ஊடகங்களுக்கு இக்குண்டுவெடிப்பு பற்றிய சமீபத்திய விசாரணகளும், கைதுகளும் தெரியாமல் போனது ஏனோ?

இதில் வேடிக்கை என்னவென்றால் இக்குண்டுவெடிப்பில் பலியாவதும், கைது செய்யப்படுவதும், விசாரணை என்ற பெயரில் பல ஆண்டுகள் சிறையில் அடைத்து சித்திரவதை செய்து பின்னர் நிரபராதி என விடுதலை செய்யப்படுவதும் முஸ்லிம்களே என்பது வாடிக்கையாகி வருகிறது.

அவ்வாறு சமீபத்தில் நடைபெற்ற ஹிந்துத்துவத்தின் பயங்கரவாத செயல்களையும், சமீபத்திய சி.பி.ஐ., ஏ.டி.எஸ்.ன் விசாரணைகளையும் இங்கு காண்போம்.

மாலேகான் குண்டுவெடிப்பு-1 Sep 8 2006 - 37 முஸ்லிம்கள் பலி கைது செய்யப்பட்டவர்கள் - சல்மான் பார்சி, பாருக் இக்பால், ரயீஸ் அஹமத், நூருல் ஹுதா, ஷபீர் ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் - ஹிந்துத்துவ தீவிரவாதிகள்

சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு Feb 18 2007 - 68 பேர் பலி, அதிகமானோர் பாகிஸ்தானியர்
குற்றம் சுமத்தப்பட்டது - லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் முஹம்மத்
சி.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள் – ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள்

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு May 18 2007 - 14 முஸ்லிம்கள் பலி
கைது செய்யப்பட்டவர்கள் - 25 முஸ்லிம்கள் குற்றவாளிகளாக. 80 முஸ்லிம்கள் சந்தேகத்தின் அடிப்படையில்.
சி.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள்- ஹிந்துத்துவ தீவிரவாதிகளான சந்தீப் டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா, லோகேஷ் சர்மா

அஜ்மீர் குண்டுவெடிப்பு
Oct 11 2007 - 3 முஸ்லிம்கள் பலி
குற்றம் சுமத்தப்பட்டது - லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ் முஹம்மத் சி.பி.ஐ., ஏ.டி.எஸ். விசாரணைகளில் உண்மை குற்றவாளிகள் - ஹிந்துத்துவ தீவிரவாதிகளான தேவேந்திர குப்தா, சந்திரசேகர், பிரசாத், அனில் ஜோஷி.

தானே சினிமா குண்டுவெடிப்பு
Jun 4 2008
ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்களான ஹிந்து ஐங்காகிருதி சமீதி, சனாதன் சன்ஸ்தா. ‘ஜோதா அக்பர்’ என்ற முஸ்லிம் சம்பந்தப்பட்ட ஹிந்திப் படத்தை எதிர்த்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு.

கான்பூர்,நந்தித் குண்டுவெடிப்பு முயற்சிகள்
Aug 2008
இரு இடங்களிலும் குண்டு தயாரிக்கும் சமயத்தில் வெடித்து 4 ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் பலி

மாலேகான் குண்டுவெடிப்பு-2

Sep 29 2008 - 7 பேர் பலி
குற்றம் சுமத்தப்பட்டது - இந்திய முஜாஹிதீன்கள்
ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் - அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரிய ஜாக்ரன் மன்ச் ஆகிய ஹிந்துத்துவ தீவிரவாதிகள்

கோவா குண்டுவெடிப்பு
Oct 16 2009
குண்டு வைக்கும் முயற்சியில் சனாதன் சன்ஸ்தா என்ற ஹிந்துத்துவ தீவிரவாதிகள் 2 பேர் பலி

தமிழ்நாட்டில் தென்காசி குண்டுவெடிப்பு
இதுபோன்று பல பயங்கரவாத சம்பவங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

இவை அனைத்தும் அதிகரித்து வரும் ஹிந்துத்துவ தீவிரவாதத்தையே காட்டுகின்றன.

ஊடகங்கள் தங்கள் பத்திரிகை தர்மத்தை கடைபிடித்து உண்மையான, நேர்மையான செய்திகளை வெளியிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மேல் அநியாயமாக பழி போடுவதும், தொடர்ந்து பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதும் அந்த சமுதாயத்தை மட்டும் பாதிக்கப்போவதில்லை.மாறாக அது ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியையும் பாதிக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
மோனா மாலிக்
இந்தியன் என்ற பெயரில் எழுதிய முஸ்லீமின் கருத்துக்களை பார்த்தால் எப்படி இஸ்லாமின் ஆதாரத்திலேயே விஷக்கருத்துக்களை முஸ்லீம்களின் மனத்தில் விதைக்கிறது என்பது தெரியும். முஸ்லீம் அல்லாதவர்கள் துரோகிகளாம். எதிரிகளாம். அதனால் அவர்களை விடுவதில்லையாம். இப்படி போதிக்கும் மதம் எப்படி மக்களிடையே மத நல்லிணக்கத்தை உண்டு பண்ணும்? ஒரு மக்கள் இறைவன் என்று கருதி ஒரு ஆலயத்தை அமைத்தால், அதனை நம்பாதவன் கூட அசுத்தம் செய்யமாட்டான். இந்தியாவில் ஆயிரக்கணக்கான கோவில்கள் இருந்திருக்கின்ற்ன. ஒரு கோவிலும் மற்ற மதத்தினரால் இடிக்கப்பட்டதில்லை. வந்தார்கள் அரேபியாவிலிருந்து. அவர்கள்தான் மற்றவர்களின் கோவில்களை இடித்து அதன் மீது மசூதி கட்ட ஆரம்பித்தார்கள். அதனால் தங்களைப் போல மற்றவர்களையும் கேடுகெட்டவர்களாக நினைத்துவிட்டார்களோ என்னவோ. இஸ்லாமின் ஆதார புத்தகங்களிலும் போதனைகளிலும் முஸ்லீம் அல்லாதவர்கள் அசுத்தமானவர்கள், நரகம் அவர்களுக்கு, அவர்களை அல்லா வழிகேட ****. அவர்களை அடியுங்கள், கொல்லுங்கள், அவர்களை கொன்றால் முஸ்லீம்களுக்கு சொர்க்கம் என்று பண்ணி பண்ணி சொல்லுகிறது. அதனால் தான் வெறிபிடித்து அலைகிறார்கள் இந்த மனிதர்கள்.
Joe Ravikumar
When there is lot of killings of Hindus and Christians by Muslims, the people are bound to react. Dont use the ruse of these people's reaction. Punish the guilty. Why afzal Guru is not hanged? Why Madani is gone scot free? Dont you think the people are bound to get angry at the inept govt who protects the islamist terrorists?
இந்தியன்
மோனா மாலிக் இன்னும் உங்களுக்கு புரிந்துணர்வு போதவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றல் "அன்று இணைவைப்பவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரிகளாக இருந்தார்கள் அதோடு மட்டுமல்லாது முஸ்லிம்களை கடுமையாக துன்பம் செய்யக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்." என்று நான் எழுதியதை நீங்கள் நம் உளவுத்துறை அதிகாரிகள் குண்டுவெடிப்பை முஸ்லிம்கள் மேல் உடனே சித்தரிப்பது போல "முஸ்லிம் அல்லாதவர்கள் என அனைவரையும் சேர்துகொல்கிரிர்கள்". நான் சுட்டிக்காட்டியது அன்று மக்காவின் சுழ்நிலை. இந்தியாவின் சுழ்நிலை அல்ல. நீங்கள் அதிகமாக கற்றுகொள்ளவேண்டியது உள்ளது. (குறிப்பு : இந்தியன் என்பது என் நாற்றுபற்றால் நான் பத்து வருடங்களுக்கு முன்னாள் சூட்டிகொண்டது).
இந்தியன்
இன்றைய முக்கிய செய்தி.

இந்துத் தீவிரவாதிகளுடன் தொடர்பு; CBI கண்காணிப்பில் RSS

செய்திகள் - இந்தியச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த அஷோக் பெர்ரி, அஷோக் வர்ஷ்னே ஆகிய இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவ்விருவரும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளியாகிய தேவேந்தர் குப்தாவுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

புலனாய்வுத் துறை கண்காணிப்பில் இருந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த இரு மூத்த செயல்வீரர்களின் விசாரணை அறிக்கை, தற்போது CNN-IBN நிருபர்கள் கைவசமுள்ளது. முக்கியக் குற்றவாளியோடு அவ்விருவருக்கும் தொடர்புள்ளதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயினும், ஆர்.எஸ்.எஸுக்குப் புதிய தலைவலியாக இப்போது உருவாகியுள்ளவர் அதனுடைய தலைமைச் செயற்குழுவின் உறுப்பினரும் மூத்தத் தொண்டருமான இந்திரேஷ் குமார் என்பவராவார். இவருக்குத் தீவிரவாதச் செயல்களோடு தொடர்புடைய பல குற்றவாளிகளோடு நெருக்கமுள்ளதாகக் கருதப்படுகிறது. மேலும் இந்தோரில் உள்ள 12 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிலும் அஜ்மீர் குண்டு வெடிப்பிலும் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்பட்டு அப்பன்னிருவரும் தற்போது புலனாய்வுத் துறையின் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களும் இந்திரேஷுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

ஸீபிஐ எனும் புலனாய்வுத்துறை இத்தகவல்களை வெளியே விடாமல் இருப்பதற்கு எவ்வளவோ முயன்றும் இத்தகவல் இப்போது கசிந்து வெளிவந்திருப்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மிகப் பெரும் பின்னடைவுக்கு இட்டுச் செல்லும் என்பதால் சென்ற வாரம் ஆர்.எஸ்.எஸின் உயர்மட்டத் தலைவர்கள் அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டும் கட்டாயத்துக்குள்ளாயினர்.

கூட்டத்திற்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ், "சங் பரிவாரம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும்" என்று வாக்குறுதியளித்தார்.

"நாங்கள் எவ்வித விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிப்போம். ஆனால், அதில் எங்களைக் களங்கப் படுத்தும் முயற்சியோ முறைக்கேடோ இருக்கக் கூடாது" என்று ராம் மாதவ் நிபந்தனை விதித்திருக்கிறார்.

2007ஆம் ஆண்டு மே 18 அன்று ஹைதராபாத் பழைய நகரப் பகுதியிலுள்ள மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் 9 பேர் மாண்டனர். குண்டு வெடிப்பு என்றால் உடனேயே கைது செய்யப் படுவதற்கு முஸ்லிம்களுக்கா பஞ்சம்? "மஸ்ஜிதில் குண்டு வைத்தவர்கள்" என்பதாகக் கூறி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஷுஹைப் ஜகிர்தர், அவரின் மருமகன் இம்ரான்கான், முஹம்மது கலீம், அப்துல் மஜீத் என்ற நால்வரைக் கைது செய்து வழக்கு ஜோடித்தது காவல்துறை. வழக்கு நடந்தது. காவல்துறையின்மீது காறித் துப்பாத குறையாக, "நால்வரும் அப்பாவிகள்" என நீதிபதி தீர்ப்பளித்து விடுவித்தார்.

அதற்கு முன்னரே, மக்கா மஸ்ஜித் வழக்கை ஸீபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என நாடு முழுதும் கோரிக்கைக் குரல் உயர்ந்தது. மஸ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் எச்சரிக்கை விடுத்தது. தமிழகத்திலும் தவ்ஹீது ஜமாஅத் போராட்டம் நடத்தியது. முதலாவது நாடகம் முடிவுக்கு வந்தது. மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கு ஸீபீஐயிடம் ஒப்படைக்கப் பட்டது.

இப்போது, அந்தக் குண்டு வெடிப்பில் தொடர்புள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, ஏற்கனவே கைதாகியுள்ள தேவேந்திர குப்தாவுக்கு அதே குண்டு வெடிப்பில் வர்ஷனேயும் பெர்ரியும் முழு ஒத்துழைப்பு நல்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூன் 21முதல் ஜுன் 25வரை வர்ஷ்னே, பெர்ரி மற்றும் தேவேந்திர குப்தா ஆகிய மூவர் மீதும் ஹைதராபாத்தைச் சேர்ந்த புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தினர்.

இவ்விசாரணையின்போது மூவரும் தாங்கள் ஒருவரையொருவர் நன்கு தெரிந்தவர்கள்தாம் என்பதை ஒப்புகொண்டதோடு, தாங்கள் கான்பூர், அயோத்தி, மற்றும் ஃபைஸாபாதில் தனியாகச் சந்தித்ததையும் வெளிபடுத்தியுள்ளனர். ஆயினும் வர்ஷ்னேவும் பெர்ரியும் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புச் சதியில் தங்களிருவருக்கும் பங்கில்லை என்று மறுத்தனர்.

விடை காணமுடியாத வினாக்கள்:

"ஆர்.எஸ்.எஸ் காரர்கள்மீது விசாரணை ஏதும் நடக்கவில்லை" என்று ஸீபீஐ புலனாய்வுத்துறை மூலம் தொடர்ந்து அதிகாரபூர்வமாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் காரர்கள்மீது விசாரணை நடத்தப்பட்டது உண்மை; அந்த விசாரணையின் ஆவணங்கள் தங்கள் கைவசம் உள்ளன என IBN-CNN நிருபர்கள் ஆணித்தரமாகக் கூறுகின்றனர். இந்த முரண்பாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஸீபீஐயின் 'விசாரணை முறை'யைப் பற்றிப் பல கேள்விகள் எழுகின்றன:

1.

முதலாவதாக, குண்டு வெடிப்புடன் தொடர்புடையதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கும் குற்றவாளி தேவேந்திர குப்தாவின் முன்னிலையில் வைத்து ஆர்.எஸ்.எஸ் காரர்களான வர்ஷ்னேயும் பெர்ரியும் விசாரணை செய்யப்பட்டது ஏன்?
2.

தேவேந்திர குப்தாவிற்கு இவ்வருவரும் ஸிம் கார்டு மற்றும் தங்குமிடம் போன்ற இதர முக்கிய வசதிகள் ஏற்பாடு செய்தபோது, அவருடைய குற்றப் பின்னணி இவ்விருவருக்கும் தெரியாதா?
3.

இந்தோரில் புலனாய்வுத்துறையின் கண்காணிப்பில் உள்ள ஆர்.எஸ்.எஸ் காரர்கள், மாலேகாவ் குண்டு வெடிப்பின் முக்கியக் குற்றவாளியாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஸாத்வீ பிரக்யா தாகூரோடு தொடர்புடையவர்களா?
4.

ஆர்.எஸ்.எஸ்ஸின் மடியில் கனமில்லை என்றால் அவர்களது உயர்மட்டத் தலைவர்களின் அவசரக் கூட்டங்கள் தில்லியிலும் இராஜஸ்தானிலும் நடைபெற வேண்டிய கட்டாயம் என்ன?

இந்துத்துவத் தீவிரவாதம் என்பதை மத்திய அரசு இந்நேரம் பார்த்து வெளிக்கொணர்வது, தம் தொண்டர்களைச் செயலிழக்கச் செய்யப்படும் உத்தி என்பதுதான் ஆர்.எஸ்.எஸின் இப்போதைய அச்சங் கலந்த குற்றச்சாட்டு. அதன் தொண்டர்கள் தீவிரவாதிகளோடு கலந்து களத்தில் நிற்பதைக் கண்ணாரக் கண்டு கொண்டே அந்த யதார்த்ததை அச்சம் எனும் முகமூடியைப் போட்டு மூடிக் கொள்ளப் பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ்.

கருத்துச் சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசுகின்ற சங்பரிவார், தீவிரவாதிகளுடனான இந்திரேஷ் குமாரின் தொடர்பை வெளியிட்ட ஐபிஎன்-ஸீஎன்என் தொலைக்காட்சி நிலையத்தைத் தாக்குவதற்காகத் தன் தொண்டர்களை இன்று அனுப்பி வைத்துத் தன் உண்மை முகத்தைச் சற்றே வெளிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், தீவிரவாதப் பின்னணி உள்ளவர்களோடு எந்த மாதிரியான அணுக்கத்தைக் கடைப்பிடிப்பது? என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரம் எதிர் நோக்கும் தற்போதைய தலையாயக் கேள்வி.

நன்றி : இந்நேரம், ஐபிஎன்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தடை செய்வதற்குப் போதுமான சான்றுகளுடன் நமது பழைய பதிவுகள்:

குண்டு வெடிப்புகளுக்குக் காரணம் ஹிந்துத்துவா

வெடிகுண்டுகளின் பிறப்பிடம் ஆர்.எஸ்.எஸ்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் வீட்டில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள்

ஆர்.எஸ்.எஸ்ஸும் விஹெச்பியும் வெடிகுண்டுகள் தயாரிக்கின்றன

கீற்று இணையதளம் ஒரு கட்டுரை முஸ்லிம்கள் மேல் இறக்கம் காட்டி எழுதுகிறது அதற்க்கு எத்தனை பேர்கள் எதிர் விமர்சனம் செய்கிறார்கள். இதோ பாருங்கள் இந்து தீவிரவாதிகளின் செயலை!.
மோனாமாலிக்
சரி அந்த வசனம் இறங்கியது அந்த காலத்தில்தான் இந்த காலத்துக்கு பொருந்தது என்றால் இப்போது மெக்காவுக்கு அனைத்து மதத்தினரும் வரலாம் என்று எந்த முஸ்லீமாவது சொல்வாரா?
முகவை மைந்தன்
இந்தியன் - பாராட்டுக்கள்..

காவிகளை பொத்தி பாதுகாத்த காங்கிரஸ் கூட இன்று மெளனம் கலைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது,
இன்று ஆர்.எஸ்.எஸ் -ன் பயங்கரவாத திட்டம் தெரிந்து அவர்களின் கொலை கார மிருக முகம் தெரிந்த பின்
ஜெயந்தி நடராஜன் அவர்கள் காவிகளின் அரசியல் கட்சி பி.ஜே.பி யிடம் தீவிரவாத தொடர்பை பற்றி கேட்டுள்ளார்.

முசுலீம் என்றால் கொல்வதற்கும் கொன்ற பின்
கொலை பழி சுமத்துவதற்கும் மட்டும் பயன்படும் ஒரு சொல்லாடல்.

இந்துத்துவா தீவிரவாதிகளின் வெறி செயல்களால் இன்றும் நாடு முழுவதும் கேள்வி கேட்க கூட நாதியில்லாமல் பல நூறு சிறை சாலை கைதிகள் தங்களின் வாழ்க்கையை தொழைத்து நொந்து போய் உள்ளனர். பழங்குடி விச்யத்திலும், இசுலாமியர்களி விசயத்தில் மட்டும் நடுனிலையாளர்கள் கூட நீதி கேட்பதற்கு அஞ்சுகின்றனர்.

அரசாங்கத்தின் உலவுத்துறை, பாதுகாப்புதுறைகளிலேயே இந்துத்துவா, சங்பர்வார ஆர்.எஸ்.எஸ் காலிகள் இருந்து நடத்தும் இந்த பயங்கரவாதத்தை யார் தான் தட்டி கேட்க முடியும் .

கீற்று போல சமுக அக்கரையுள்ள இனையதளங்கள் செய்யும் இது போன்ற முயற்சிகளை கூட இந்து தீவிரவாதிகள் (தயவு செய்து தமிழன் என்று அசிங்கப்படுத்தாதே) எதிர்க்க் துணியும் கூட்டம் ஹிடலர்களின் வழி வந்த பார்பணர்கள் என்பதை நிருபிக்கிறது.
இந்தியன்
Mr . மோன மாலிக் அதான் நான் முன்பே குறிப்பிட்டு விட்டேனே மக்காவில் உள்ள காபத்துல்லாஹ் (புனித ஸ்தலம்) இறைவனை வணங்குவதற்கு மட்டும் தான். அது ஒன்றும் சுட்ட்ருளா ஸ்தலம் இல்லை. வேணுமென்றால் நீங்கள் இறைவனை வணங்குவதற்காக அங்கு செல்லலாம். இப்பவாவது புரிந்து இருப்பீர்கள் என்று நம்பும் உங்கள் சகோதரன்.
மனிதன்
தீண்டாமை, சமத்துவம் இதற்கெல்லாம் பெரியாரை இழுக்கிறார்கள் என்று சொல்லுபவர்களுக்கு, ஒரு சாமியின் சிலையை செய்யும் உழைப்பாளி, அதை செய்யும் போது அவன் கால்கள், விவர்வை போன்றவை அதன் மேல் படுகிறது,அதை செய்து முடித்தவுடன் பார்பனன் அந்த சிலையின் மீது ஏதோ மக்திரம் ஓதி தீட்டு கழிக்கிறான் பிறகு சிலையை செய்த உழைப்பாளி அதை தொட்டால் தீட்டு என்று அவனை அவனாப்படுதுகிறான். ஏன் அந்த சிலையை போல அவன் மீது ஏதாவது மந்திரம் ஓதி தீட்டை கழிக்கலாமே? ஒரு தாழ்த்தப்பட்டவன் வேறு மதத்திற்கு மாறினால் அவனை அவர்கள் சரி சமமாக நடத்துவார்கள். தாழ்த்தபட்டவனும் இந்து என்றால் ஏன் அவனை மதிப்பதில்லை? அட அவன் அருகில் ஒரு பார்பான் சரிசமாமாக உட்கார்ந்து உணவாது உன்னுவானா? மெக்காவை பற்றி பேசுபவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறினால் வரலாம், அவன் தாழ்த பட்டவனாக இருந்தாலும் கூட, ஒரு தலித்தை இந்து என்று கூறும் நீங்கள், இந்து கோவிலின் கருவறைக்குள் நுழைய அனுமதிப்பதில்லை, இதில் மெக்காவை பற்றி பேசுவது வேடிக்கை.
இந்துத்தமிழன்
மனிதன், இந்தியன் என்று எழுதுபவர்கள் திரும்பத் திரும்ப இஸ்லாமிய பிரச்சாரத்தையே செய்துவருகிறார்கள். இவர்களுக்கு உண்மையோ வரலாறோ தேவையில்லை. 1400 ஆண்டுகளாக இந்துக்கள் இந்த நிலத்தில் அடிமைகளாக இருந்தார்கள். இங்கே இலலாத தீண்டாமையை உருவாக்கியது இஸ்லாம். மனிதர்களை மலம் சுமக்க வைத்தது இஸ்லாம். அதன் பின் வந்த கிறிஸ்துவர்கள் “நாய்களுக்கும் இந்தியர்களுக்கும் அனுமதி இல்லை” என்று போர்டு வைத்து தங்களது இன மேலாண்மையை காட்டிகொண்டார்கள். இன்று இவர்கள் தங்களை இந்துக்களின் அடிமைத்தனத்திலிருந்து காப்பாற்றுபவர்களாக வேஷம் போடுகிறார்கள். 1400 ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் இன்று தலை நிமிர்கிறது. அது தலை நிமிர்வதை பார்த்து முன்னாள் இந்துக்களாக இருந்தவர்கள் வெளியிலிருந்து வந்த மொகலாயர்களுக்கு விலைபோனவர்கள், வெள்ளைக்காரர்களுக்கு விலை போனவர்கள் தாங்கள் இந்த மண்ணின் மக்கள் என்பதை மறந்து தங்களது இழிவை மறைக்க இந்துமதத்தின் மீதும் இந்தியாவின் மீது சேறள்ளி வீசுகிறார்கள். இதற்கு மதிகெட்ட இந்துக்கும்பலும் துணை போகிறது. (தொடரும்)
இந்துத்தமிழன்
மனிதன், இந்தியன் என்ற பெயரில் எழுதுபவர்களிடம் இந்தியாவின் மீதும் இந்துக்களின் மீதும் எவ்வளவு வன்மம் கொப்பளிக்கிறது! பார்ப்பனர்கள் மட்டுமே இன்னமும் பூஜாரிகளாக இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். ஆயிரக்கணகான கோவில்களில் தலித்துகள் பூஜாரிகளாக இருக்கிறார்கள். வன்னியர்கள் நடத்தும் மேல்மருவத்தூர் கோவில்களில் யார் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம். மீனவகுடியில் பிறந்தமாதா அமிர்தானந்தமயி உருவாக்கும் கோவில்களில் அனைவரும் பூஜை செய்கிறார்கள். அத்னால் இன்று கிறிஸ்துவ மீடியாவும் முஸ்லீம் மீடியாவும் இந்த துறவிகளை கேவலப்படுத்த இறங்கியிருக்கின்றன. இவர்களுக்கு இந்து மதம் சீரடைவது வயிறெறிகிறது. ஆனால் இவர்களது கடன்வாங்கிய மதங்களில் சீர்திருத்தம் என்று யார் பேசினாலும் அவர் கொல்லப்படுகிறார். அதனைப் பற்றி இந்த மீடியாக்கள் பேசுவதில்லை. 1400 வருடங்களுக்கு முன்னரே இவர்களது மதம் முழுமைப்படுத்தப்பட்டு விடுகிறது. பெண் போடும் பர்தா, காபிர்களை கொல்லுவது, முழுமையான இஸ்லாம் என்ற் இவர்கள் வரையறைக்குள் வராதவர்களை கொல்லுவது எல்லாமே 1400 வருடங்களுக்கு முன்னாலேயே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. மற்றவர்களை குறை சொல்லுவதற்கு முன்னால், அவை உண்மையா என்ற் யோசியுங்கள். அதே போல உங்கள் மதங்களில் இருக்கும் தீமைகளை முதலில் ஒழிக்க பாருங்கள். உங்கள் கண்களில் இருக்கும் உத்திரத்தை எடுங்கள். பிறகு மற்றவர்கள் கண்களில் இருக்கும் துரும்பை எடுக்கலாம்.
சாத்வீகம்
ஆமாய்யா.. நாங்கள் தேசபக்தி என்ற போர்வையில் இந்துத்துவாவை முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதமாகத்தான் பயன்படுத்துவோம். அது தான் இந்து என்ற புள்ளியில் தலித்துகளுடன் எங்களை ஒருங்கிணைக்கும் என்று நம்புகிறோம். தலித்துகளும் மற்ற இந்துக்களும் இணைய முஸ்லிம்களை பலியிட்டால் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை. ஏனென்றால் எவ்ளோ அடித்தாலும் வாய் மூடி கூட அழாத சமூகமாகத்தான் முஸ்லிம்களை வைத்திருக்கிறோம்.

எப்படி தந்திரமாக நாங்கள் நடத்திய குண்டு வெடிப்புகளையும் இளிச்சவாய சமூகமான முஸ்லிம்களின் மேல் பழி போட்டு தப்பித்து வருகிறோம். அந்த கர்கரே மட்டும் குறுக்கே வரலைன்னா எவன்யா கண்டுபிடிக்க முடியும்? அதக்குண்டான விலையை தான் கர்கரேவுக்கு கொடுத்தோம். இது தான் பாடம். ஹாஸ்மி கதி என்னா?

பாகிஸ்தான் பிரிவினையையும் அவனுங்க மேல் பழிய போட்டு அவனுங்களை இன்ன வரைக்கும் அச்ச நிலையிலே வச்சிருக்கும். உஷ்.. காத கொடுங்க பாகிஸ்தானை பிரிக்காம இருந்திருந்தா முஸ்லிம்கள் தான் ஆட்சி அதிகாரங்களில் கோலோச்சிருப்பார்கள் ஏன்? பிரிக்காத இந்தியாவில் முஸ்லிம்களின் ஜனத்தொகை அப்போதே 40 வீதம் இந்துக்கள் 50 வீதம் என்றால் மற்றவர்கள் 10 வீதம். ஆகவே இந்துக்கள் ஜாதிகளாய் பிரிந்து கிடக்கும் போது முஸ்லிம்கள் ஆட்சியை பிடித்திருப்பார்கள்.

பாகிஸ்தான் பிரிவிணை வேண்டும் என்று கோல்வார்கர் 1930 லேயே பேசியது வரலாற்றில் மறைக்கப்பட்ட பாடு எங்களுக்கு தான் தெரியும். இதுவரைக்கும் இந்தியாவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளையும், மதக்கலவரங்களயும் ஆராய்ந்தால் எங்கள் தொழில் பெருமை உங்களுக்கு தெரியும். கச்சிதமாக செய்யவும் முஸ்லிம்களின் மேல் பழியை போடவும் நாங்கள் எடுத்து வரும் முயற்சிகள் சாதாரணமான வேலையில்லை. எங்கள் ஆட்கள் இல்லாத துறையே இல்லை இந்தியாவில்.

காங்கிரசிலேயே எங்காட்கள் இருக்காங்களே.. இல்லாட்டி அவனுங்க ஆட்சிலேயெ அந்த பாபர் கட்டிடத்தை எப்படி இருக்க முடியும். நீதிபதிகளும் நாங்க சொல்ற தீர்ப்பை சொல்லும் அளவிற்கு எங்களுக்கு செல்வாக்கு இருக்கு. அப்சல் குருவுக்கு எதிரான எந்த உறுதியான சாட்சியிலும் இல்லாத நிலையில் எப்படி வந்தது தீர்ப்பு? அதுவும் "இந்துக்களின் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில்"" என்ற வாசகங்களுடன்.. ஹா..ஹா.

பார்க்கத்தான் போகிறீர்கள் ராமர்ஜென்ம பூமி வழக்கின் தீர்ப்பை எங்களுத்தான் தீர்ப்பு சாதகமாக வரும். அல்லது வர வைப்போம். இந்தியா இந்துக்களுக்கே.. பாபரின் பிள்ளைகளே ஓடுங்கள் பாகிஸ்தனுக்கு.
Guest
இந்துக்களின் மூடநம்பிக்கையை திருத்துவதும், இஸ்லாமியர்கள் இந்தியாவில் இருந்துக் கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிலர் செயல்படுவதை தடுப்பதே முற்போக்கு.
இங்கு நாத்திகம் பேசும் பெரும்பாலோர் இந்து மதத்தை சார்ந்தவர்கள் என்பதை உணரவேண்டும்,
இன்று நாம் இந்து மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் மற்றும் சாதி பாகுபாடுகளை எதிர்ப்பதற்காக ,இந்து மதத்தையே அகற்ற நினைத்தால் அந்த இடத்தில் இஸ்லாமும்,கிறிஸ்துவமும் வந்து விடும்,பிற்கு பெரியாரையும்,நாத்திகத்தையும்,தமிழையும் பேச யாரும் இருக்கமாட்டார்கள்,இஸ்லாமியராக் மாறியவர்கள் ,அல்லா என்று கிறிஸ்துவர்கள் யேசு என்றும் ,போர் தான் தங்கள் போதகர் என்றும் போய்விடுவார்கள்,
இது இந்தியாவின் இறையாண்மைக்கும்,தமிழர்களுக்கும் எதிராக தான் அமையும்,
இஸ்லாமியர்கள் பெரும்பாண்மையானவர்கள் ,இந்தியாவின் தேசிய கீதத்தை பாடுவதில்லை,சுதந்திர தினத்தை கொண்டாடுவதில்லை,இதில் என்ன கொடுமை என்றால்,அவர்களும் இந்நாட்டு மக்கள் தான்,ஆனால் அவர்கள் மதம் மாறியதால் அவர்களின் வழி தோன்றல்களுக்கு மதபற்று தான் அதிகம் உள்ளது ,நாம் இந்தியர் என்ற தேச பற்று குறைந்து விடுகிறது,சிலர் விதி விலக்குகள் உள்ளனர்.அதே போல் கிறிஸ்துவர்கள் அமெரிக்க,ஐரோப்பிய கிறிஸ்துவநாடுகளை ஆதரிக்கும் மனபாண்மை வந்து விடுகிறது,
இங்கு முற்போக்காளர்கள் என்று தங்களை கூறிக்கொள்பவர்களின் கண்மூடித்தனமான இந்து எதிர்ப்பும்,இஸ்லாமியர் ஆதரவும் பயன் அற்று போய்விடும்,பெருவாரியான மக்கள் இஸ்லாம்,கிறிஸ்துமதத்திற்கு மாறிய பிறகு உங்கள் கூட்டத்திற்கும் நாத்திக போதனைக்கும் வரமாட்டார்கள்,இதை பெரியார் தொண்டர்கள் உணரவேண்டும்,ஆகவே இன்று இந்து மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை எதிர்ப்பதும்,சாதி பாகுபாடை ஒழிப்பதும் ,அதே சம்யம் அடியோடு இந்து மதத்தை ஒழிக்க நினைப்பது மிகப்பெரிய தவறு,பிறகு தமிழனும் இருக்கமாட்டான்,தமிழும் இருக்காது,
உருதுவும்,ஆங்கிலமும் தான் அட்சி செய்யும்,
தயவு செய்து பெரியார் இயக்கத்தினர் இதை உணர்ந்து தங்கள் பிரச்சார உத்திகளை மாற்றிக்கொள்ள வேண்டுகிறேன்.

இதற்கு உதாரணம் ஈழத்தில் தமிழ் இஸ்லாமியர்கள்,மத ரீதியாக ஒதுங்கி இருந்தார்கள் அன்றி மொழி ரீதியாக தமிழர்களாக் ஒன்று பட்டு தமிழ் ஈழத்திற்காக போராடவில்லை.
காராணம் மொழி பற்றை விட அவர்களுக்கு மதபற்று அதிகம் வந்துவிடுகிறது,ஆனால் இந்து தமிழன் என்று வரும் போது மதத்தை ஒதுக்கி விட்டு தமிழனாக தமிழுக்காக குரல் கொடுக்கிறான்,
ஆகவே தமிழ் நாட்டில் தமிழ் வளர வேண்டும் என்றால் இந்து மதத்தை அடியோடு விமர்சிக்காமல்,அதன் மூடநம்பிக்கையை கலைய முயலுங்கள்,நான் இஸ்லாத்திற்கும்,கிறிஸ்துவத்திற்கும் எதிரானவன் அல்ல,ஆனால் மதமாற்றம் இத்தகைய மக்களிடம் சில மனமாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது என்பதையே இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
இரா.வெங்கடேஷ்
பெரியார் தான் கூறிய கருத்துக்களும் மாற்றத்திற்கு உட்பட்டவை தான்,நான் கூறுகிறேன் என்று அப்படியே எடுத்துக்கொள்ளாதீர்கள் என்று தான் கூறினார்,
அன்றைய காலக்கட்டத்திற்கு தேவைப்பட்ட சில கருத்துக்களின் அழுத்தம் இன்று தேவை இல்லை, ஆகவே பெரியார் தொண்டர்கள் காலத்திற்கு ஏற்ப கொள்கைகளை மாற்றி ,சீர்திருத்தி அதன்படி நடந்தால் அது மக்களுக்கு பயன்படும் அதை விடுத்து,பெரியார் சொன்னதை எல்லாம் வரிக்கு வரி அப்படியே இன்றும் பினபற்றி அதன்படி பிரச்சாரம் செய்தால் அது வீணாய் தான் போகும்,.அன்று பிராமணர்களுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் இன்று தேவையில்லை,இன்று நிறைய பிராமணர்களே நாத்திகரக்ளாக ,பெரியாரின் கொள்கைகளில் ஈடுப்பாடு உள்ளவர்களாக உள்ளனர்,சில பிரபலங்கள் கூட அப்படி இருக்கிறார்கள்,
இன்று அவரகளையும் தமிழர்கள் என்ற கண்ணோட்டத்துடன்,அவர்களின் தவறான கொள்கைகள் இருந்தால் அதை நயமாக திருத்தி தமிழராக ஒன்றுபட வேண்டும்,அப்போது தான் தமிழன் உயர்வான்,
அதே போல் இந்து மதத்தினரின் மத உணர்வையும் புரிந்துக் கொண்டு,அவர்களின் மூடநம்பிக்கைகளை திருத்தவேண்டும்,இஸ்லாமியர்கள்,கிறிஸ்துவர்களையும் பேசும் தாய் மொழியால் நாம் அனைவரும் தமிழர் என்ற உணரச்செய்ய வேண்டும்,தமிழ்ராய ஒன்றுபட வைக்கவேண்டும்,
மனிதன் மொழியால் முதலில் ஒன்றுபட வேண்டும்,மொழி பற்று முதன்மையாக இருக்க வேண்டும்,மதபற்று பின்னுக்கு போக வேண்டும்.
ஆனால் இங்கு நாம் இந்து மதத்தை மட்டும் குறைக்கூறுவதால்,நம் பேச்சை கேட்கும் மக்கள் வேறு ம்தத்திற்கு மாறும் வாய்ப்புள்ளது.,இது நம் தமிழக ,இந்திய ஒற்றுமைக்கே தீமையாக முடியும்,
ஆகவே இந்து மதத்தின் மீது உள்ள கோபத்தால்,இஸ்லாமியர்களை,கிறிஸ்துவர்களை கண்மூடிதனமாக ஆதரிக்காதீர்கள்,
அது தாங்கள் கொண்ட கொள்கைக்கே எதிராக தான் முடியும் என்பதை உணர்க.
ஈழ்ப்போராட்டத்தில்,தமிழ் இஸ்லாமியர்கள் ஒதுங்கி இருந்தார்கள்,அதன் விளைவே அவர்கள் இஸ்லாமியர்கள் வேறு இடத்திற்கு அணுப்ப பட்டார்கள்,ஆனால் இதில் கிறிஸ்துவர்கள் பரவாயில்லை,கிறிஸ்துவ தமிழர்கள் ,ஈழப்போராட்டத்தில் கலந்துக் கொண்டார்கள்,
இங்கு உள்ள முஸ்லீம்கள்,கிறிஸ்துவர்கள் மத ரிதியாக தங்கள் பிச்சனையை அணுகாமல்,மொழி ரீதியாக ஏற்படும் பிரச்சனைக்கும் ,உரிமைக்கும் பாடுபட வேண்டும்,
மதம் தான் சிறுபாண்மை மதம்,மனிதர்கள் அல்ல,இஸ்லாம்,கிறிஸ்துவர்,இந்து எம் மதம் என்றாலும் நாம் அனைவரும் தமிழர்.பிறகு எப்படி சிறுபாண்மை ஆக முடியும்,
மத ரீதியாக சிறுபாண்மை ,பெரும்பாண்மை என்று பார்த்து தமிழர்கள் தங்களுக்கு பிரிந்து கிடப்பது,தவறு.,
நாம் இன ரீதியாக ,மொழி ரீதியாக தமிழர்கள்,நாம் இந்தியாவில் சிறுபாண்மையினர்,நம்மை இந்தி பேசும் இந்தியர்கள் அடிமைகளாக வைத்துள்ளான் என்று எண்ணுங்கள்,மொழி ரீதியான,இன ரீதியான விடுதலை நோக்கி போராடுங்கள்,அது இந்தியா என்றாலும் இலங்கை என்றாலும் தமிழ்ராய் ஒன்றுபடுவோம்,சுதந்திரம் பெறுவோம்.,
உண்மையன்
மணிக்கு தெரியாது போல .

RSS , bjp, மற்றும் இந்துத்துவா போன்ற ஹிந்து இயக்கங்கள் மிக நல்ல இயக்கமா?. இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் பெரும்பானவைகளை நடத்தியது யார்? அதனை கண்டுபிடித்த கர்க்கறேவையும் கொன்றது யார்?. எல்லாம் rss, bjp மற்றும் அதனை சார்ந்த இயக்கங்கள்தான் இதுதான் உண்மை. இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கவில்லை. எதிரிகளிக்கு கூட போர் நடந்து முடிந்தஉடன் அவர்களுக்கு முதல் உதவி செய்து காப்பாற்றவேண்டும் மேலும் மற்ற மத தளைவர்களையும் பெண்களையும் ஒன்றும் செய்யகூடாது என்று வலியுறித்திய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம். ஆனால் நீங்கள் வாய் கூசாமல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் பிற அமைப்புகளை தீவிரவாத அமைப்பு என கூருகிரிர்களா?
கலை
RSS ஒரு பயங்கரவாத அமைப்பு. அவ்வமைப்பின் உறுப்பினர்கள் பயங்கரவாதிகள் என்பதற்கான ஆதாரம்.

http://indiatoday.intoday.in/site/Video/105552/42/saffron-brigades-terror-plots-exposed.html
மனிதன்
//இங்கே இலலாத தீண்டாமையை உருவாக்கியது இஸ்லாம். மனிதர்களை மலம் சுமக்க வைத்தது இஸ்லாம். //

இததான் வேடிக்கையின் உச்ச கட்ட உளரல், பிரபாலேயே பார்பனர் அல்லாதவர்களை இழிவு படுத்தும் இந்து மதம்.உங்களால் முடிந்தால் மனு தர்மத்தை கொஞ்சம் படித்து பாருங்கள், எனக்கு தெரிந்த சிலவற்றை இங்கு பதிவு செய்கிறேன்.
வள்ளுவர் கூற்று தெரியுமா?
"பிறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்."

மெளண்ட்யம் ப்ரணாந்தி கோதண்டப்ராஹ்மணானாம் விதீயதே இதரேஷாம்து, வர்ணானமதண்ட; ப்ராணாந்தி;கோபவேத" என்று மனு கூறுகிறார்.

கொலைத் தொழில் புரிந்த பிற சாதிக்காரர்களைத் தூக்கிலிட வேண்டும். ஆனால் பிராமணன் கொலைக் குற்றம் செய்தால், அவனது தலைமயிரை மொட்டையடித்து விடுதலே அதற்குரிய தண்டனையாகும் என்பதே மனு கூறுவதற்கு அர்த்தம். இப்படிப்பட்ட மனு ஸ்மிருதிதான் இந்து மதத்தின் நீதி நூலாகும். அப்படியென்றால் இந்து மதத்தின் லட்சணம் எப்படியிருக்கும் என்று நீங்கள் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

" சூத்ரந்து காரயேத் தாஸ்யம் க்ரீதமக்ரீ தமேவவா;
தஸ்யாயைய ஹீஸ்ரூஷ்டோஸெளப்ராஹே மணஸ்ய ஸ்வம்புவா"என்று மனு கூறுகிறார்.

அதாவது, கூலி கொடுத்தாகிலும் அல்லது கூலி கொடுக்காமலும், சூத்திரனைப் பிராமணன் வேலை வாங்கலாம். ஏனென்றால் பிராமணனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டே சூத்திரன் பிரம்மாவால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான் என்பதே மனு கூறுவதற்கு அர்த்தம்.

பார்பன வர்க்கத்தை சேர்ந்த பாரதியார் சொல்லுவதை கேளுங்கள்:
சூத்திரனுக் கொருநீதி;- தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொருநீதி;
சாத்திரம் சொல்லிடுமாயின் - அது
சாத்திரமன்று சதியென்று கண்டோம்."
- பாரதியார்

" ஊர்பானை தன்னை
உருட்டி உயிர்வாழும்
பார்ப்பானை நீக்கி
பழிகள் தீர்ப்பானை
கையும் சடங்கு
அகற்றி நற்றமிழர்
ஒப்புமணம் செய்வாயோ?"
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

ஸுமித்ரிய ந ஆப ஒஷதய ஸந்து துர்மித்ரியா
ஸதஸ்மை ஸந்து யோஸ் மான் த்வேஷ்டியம் சவயம் த்விஷ்ம" (யஜுர்வேதம்)

பார்ப்பனர்கள் நாள்தோறும் பாடுகின்ற யஜுர்வேதப் பாடல் பகுதியே இது இதன் பொருள் என்ன தெரியுமா?

கண்ணீர், தானிய வகைகள், பிராணவாயு முதலிய உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருட்கள் யாவும் எங்களுக்கு (பிராமணர்களுக்கு) நன்மை பயப்பனவாகவும் எங்களால் வெறுக்கப்படுகின்ற மனிதர்களுக்குத் தீமையைச் செய்வனவாகவும் ஆகவேண்டும். வேத ஸ்மிருதிக்கு இணங்கி நடக்காத பகுத்தறிவுவாதிகளுக்கு இவ்வுலகம் விஷமாகப் போகட்டும் என்பதே.

மலம் அல்லுபவனின் மலம் அல்லவேண்டும், நாவிதனின் மகன் நாவிதன், என்று பிறப்பால் இழிவு படுத்தும் மதம் இந்து மதம்.
மூக்கறுபடும் மூன்று வழக்குகள்

பாபர் மசூதி இடிப்பு

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலைவழக்கு

மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு

1) இம்மூன்று வழக்குகளின் தீர்ப்பை இந்திய மக்கள் வெகுவாக எதிர்பார்க்கிறார்கள். நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னதாகவே இது சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யார் யார் என்ற எண்ணம் பொது மக்களின் அடி மனத்திலே பதிந்து விட்டவையே. ஆனால் வழக்கு போகும் போக்கைப்பார்த்தால் மக்கள் மத்தியில் பல அய்யப்பாடு அலைகள்...

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் 49 பேர் வெளியில் சுதந்திரமாகத் திரிகிறார்கள்.
இவ்வளவுக்கும் வீடியோ சாட்சியங்கள்கூட வெளிப்படையாக இருக்கின்றன.

குற்றங்களோ சாதாரணமானவையல்ல. கலகம் விளைவித்தல் (இபிகோ (147), குரோத உணர்வைத் தூண்டுதல் (153ஏ) சட்ட விரோதமாகக் கூடுதல் (149) தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், ஒரு சமுதாயத்துக்கு விரோதமாகக் குற்றம் செய்யத் தூண்டுதல் பா.ஜ.க., சங்பரிவார் பெருந் தலைவர்களின்மீது இவ்வளவு பெரிய குற்றச்சாற்றுகள்!

இவ்வளவு இருந்தும் ஒன்றுமே நடக்காததுபோல நாட்டிலே ஒரு மவுனம் நிலவுகிறது. 17 ஆண்டுகள் ஓடி விட்டனவே. மக்கள் மறந்தே போய்விட்டனர். எந்த யுகத்தில் தீர்ப்பு வரும் என்று யாருக்கும் தெரியாது. காந்தி-யார் படுகொலை வழக்கில் வெளிவந்த செய்தி போலவே, இவ்வழக்கறிஞர் சில ஆவணங்கள் காணவில்லை என்று தகவல் வெளி வந்துள்ளது.

2) சங்கரராமன் கொலை வழக்கு

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு. இதில் முக்கிய குற்றவாளிகள் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி ஆகிய இருவரும் உள்பட மொத்தம் 24 பேர்கள்மீது வழக்கு. என்னென்ன குற்றங்கள்? அந்த வழக்கின் நிலையும் என்ன? மிக முக்கிய சாட்சிகளான படுகொலை செய்யப்பட்ட சங்கரராம-னின் மனைவி, பத்மா மகள் உமாமைத்ரேயி, மகன் அனந்தகிருஷ்ணன் வர்மா ஆகியோர்கூட பல்டி அடித்து விட்டனர்; நேரடி சாட்சிகளான கணேஷ், குப்புசாமி, துரைக்கண்ணு மற்றும் சங்கராமன் குடும்பத்தினர் நழுவலாக சாட்சியளித்தனர்.
குஜராத் பெஸ்ட் பேக்கரியில் 14 பேர் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சியான ஜாஹிரா அடித்த பல்டிக்கு நிகரானது இது.

வழக்குகளோ சாதாரணமானவையல்ல கொலை செய்யத் தூண்டுதல் (இபிகோ 302) கூட்டுச் சதி (120பி) பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல் (34) கொலை (201).

இத்தனை ஆண்டு கால இடைவெளி நாட்டில் என்னதான் நடக்கிறது? குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றோர் சாதாரணமானவர்களா? வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாற்றம் மறுபடி ஏமாற்றம்!

மாலேகவ்ன் குண்டுவெடிப்பு வழக்கு!

மூன்றாவது, மகாராட்டிர மாநிலம் மாலேகான் சிமி அலுவலக முன் குண்டு வெடிப்பு! (29.9.2008)

5 பேர் பலி, 90 பேர் படுகாயம் மோட்டர் பைக்கில் டைமர் கருவி பொருத்தப்பட்டு வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்ட சதி!

அந்த மோட்டர் பைக்குக்குச் சொந்தக்காரர் பெண் சாமியார் சாத்வி பிரக்யா தாக்கூர் என்பவர் மாணவப் பருவந்தொட்டு ஆர்.எஸ்.எஸில் தொடர்பு கொண்டவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் குஜராத் முதல் அமைச்சர் மோடியின் அன்புக்குப் பாத்திரமானவர் ஆதலால் குஜராத்தில் சூரத்தில் குடியேறியவர்.

இதில் மிக முக்கிய குற்றவாளி கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித் - இராணுவத்தில் புலனாய்வுத்துறையில் பணி புரிந்தவர். பயிரை மேய்ந்த வேலி இவர். மகாராட்டிர மாநிலம் நாசிக் அருகில் போன்ஸ்லா என்ற இடத்தில் இராணுவக் கல்லூரி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தவர்.

வெடிகுண்டுகளைத் தயாரிப்பது எப்படி? கையாள்வது எப்படி போன்ற பயிற்சிகளை இந்துத்துவவாதிகளுக்கு அளிக்கும் இராணுவ அதிகாரி. வெடிகுண்டுக்குப் பயன்படுத்தப்-பட்ட வெடி மருந்தோ வெளியில் எங்கும் கிடைக்காதது. பாகிஸ்தான், இந்தியா இராணுவத் துறையில் மட்டும் கிடைக்கக் கூடியதாம். இராணுவத்தையே இந்துத்துவாவுக்குப் பயன்படுத்தும் பயங்கரவாதிகள் இவர்கள்.
இந்துத்தமிழன்
மனிதன், கலை என்ற பெயரில் எழுதும் முஸ்லீம் நண்பர்களுக்கு, முதலில் இந்துக்கள் மீதும் இந்து மதத்தின் மீதும் இருக்கும் காழ்ப்பை, வெறுப்பை முதலில் உதறுங்கள். இங்கே கோடானு கோடியாக வாழ்ந்துவரும் இந்துக்கள் உங்களுக்கு எந்த பாதகமும் விளைவிக்கவில்லை. இந்த நாட்டை மதசார்பற்ற நாடாக அறிவித்து இதில் அனைத்து மக்களும் தங்கள் தங்கள் வழிப்பாட்டை தொடரலாம் என்று வைத்திருப்பவர்கள் இந்துக்கள்தான். உங்களுக்கு தெரிந்த அரைகுறை இந்து மதத்தையும், அங்கங்கு பிய்த்து உங்களுக்கு முல்லா ****** கொடுக்கும் மதப்பிரச்சாரத்தையும் தாண்டி சுற்றுமுற்றும் பாருங்கள். எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலும் ஒரு இந்துவுக்கு கொடுக்காத சுதந்திரம், இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் இந்தியாவில் கொடுத்திருப்பது பெரும்பான்மை இந்துக்கள்தான். அவர்களது பரந்த மனம் கொண்ட இந்துமதம்தான். உங்கள் மதத்தை பிரச்சாரம் செய்ய அனுமதி கொடுத்திருப்பதால், இந்து மதத்தை தூற்ற வேண்டும் என்று அவசியம் இல்லை. எந்த முஸ்லீம் நாட்டில் இந்துக்களுக்கு மதப்பிரச்சாரம் செய்யவும் கோவில் கட்டவும் அனுமதி தருகிறார்கள்? உலகத்தில் 100க்கும் மேற்பட்ட முஸ்லீம் நாடுகள் இருக்கின்றன. ****** ******** *********** *******. அதற்காக இந்திய இந்துக்கள் கொந்தளிக்கவில்லை. இங்கே இருக்கும் முஸ்லீம்கள் மீது சண்டைகள்போடவில்லை. அப்படி ஓடிவரும் இந்துக்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுப்பதற்கு கூட இந்தியாவில் பிரச்னை இருக்கிறது. இந்து மதத்தை அழித்தால் இந்த் நாடு இன்னொரு இஸ்லாமிய நாடு மாதிரித்தான் இருக்கும். காஷ்மீரிலிருந்து துரத்தப்பட்ட இந்துக்கள் காஷ்மீரை விட்டு ஓடி வந்தார்கள். இந்தியாவிலிருந்து துரத்தப்பட்டால் இந்துக்கள் எங்கே ஓடுவார்கள்?
venkatesh
நேற்று நான் தங்களின் 6 ஆவது ஆண்டு தொடக்க விழாவுக்கு வந்திருந்தேன், கிற்றுக்கு தன் கொள்கைகளில் முரண்பாடு உள்ளது அப்பட்டமாக தெரிந்தது, குழப்பமான கொள்கைகளை வைத்துக்கொண்டு முற்போக்கு என்று பேசுவது அறியாமை.,கிற்று முதலில் தன் கருத்தை மறுபரிசிலனை செய்ய வேண்டும்.

பல்வேறு வழக்குகளில் இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டு ,கொடுமைபடுத்தப்பட்டார்கள்,,இதை பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு,பின்னர் விடுதலையாகி வெளிவந்துள்ள சிலரை அழைத்து அவர்கள் பட்ட துன்பங்களை
அவர்களே பேசும்படி செய்தார்கள்,.

அவர்கள் உண்மையில் நிரபராதி என்றால் அது வருந்ததக்கது தான்,ஆனால் இதை ஏதோ இஸ்லாமியருக்கு எதிரான நடவடிக்கை போல் சித்தரிப்பது அறியாமை,,அறிந்து செய்தால் அது கயமை.
கோவை குண்டு வெடிப்பில் உயிர் இழந்த குடும்பங்களின் இன்றைய நிலையை பற்றி ஏன் நீங்கள் கவலைப்படவில்லை. அவர்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரை அழைத்து பேசி இருந்தால் அவர்களின் துன்பம் எத்தகையது என்பது தெரியும்.

சில இஸ்லாமியர்கள் பயங்கிரவாதத்தில் ஈடுபடுகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை, அப்படி இருக்க கைது செய்யபடுபவர் ஒரு இஸ்லாமியராக தானே இருப்பார்,.இதை ஒரு குற்றவாளி பிடிப்பட்டான் என்று தான் பார்க்கவேண்டுமே ஒழிய ,இஸ்லாமியருக்கு எதிரான கைது நடவடிக்கை என்று பார்ப்பது தவ்று.

பொதுவாக சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் கைது செய்வது இயல்பு. இதில் இந்து,முஸ்லீம் என்ற பாகுபாடு கிடையாது.

அப்படி கைது செய்து விசாரிக்கும் போது தான் உண்மையான் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும்,

எந்த குற்ற செயலிலும் உண்மையான குற்றவாளி யார் என்று தேடி அவரை மட்டும் கைது செய்வது இயலாது, யாரும் நான் தான் செய்தேன் என்று சொல்லி விட்டு குற்றச் செயலில் ஈடுபடுவதில்லை.,
அப்படி இருக்க சிலரை காவல் துறையினர் கைது செய்கிறார்கள், அதில் சில நிரபராதிகளும் கைது செய்யபட்டு பாதிக்கப்பட்டிருக்கலாம்,அதற்காக வருந்தலாம் அன்றி, அதை இந்து வெறியர்கள் இஸ்லாமியருக்கு எதிராக பழிவாங்குகிறாரக்ள் என்று பார்க்க கூடாது.

அப்படி இஸ்லாமியர்கள் யாரும் குண்டு வைக்கவில்லை என்றால் பிறகு இந்துக்கள் குண்டு வைத்தார்களா?

அவர்களும் இல்லை என்றால் பிறகு யாரைத் தான் கைது செய்து விசாரிப்பது,
venkatesh
சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்படுவது இஸ்லாமியர்கள் மட்டும் அல்ல மற்றவர்களும்,

கைது செய்யும் காவல் துறையினர் இந்து வெறியர்கள், நிதிபதிகள் இந்து வெறியர்கள் என்று சொல்கிறீர்களா?சுத்த பேத்தல்.

நேற்று நடந்த தொடக்க விழாவில் இஸ்லாமியர்,தான் வாரம் மற்ற மதத்தினரிடம் புரிந்துணர்வு நிகச்சிகளை நடத்துவோம் என்றார். பிறகு சிலர் விரும்பினால் ,இஸ்லாம் மதத்திற்கு மாற்றுவோம் என்கிறார், அப்படி என்றால் அது மதமாற்றத்திற்கான ஒரு செயல் தானே,

இது தவறல்லவா? புரிந்துணர்வு என்பது என்ன, உண்மையில் ஒரு மதத்தினர் மற்ற மதத்தினரை மதிக்க வேண்டும்,வெறுக்க கூடாது என்பது தானே,அப்படி யாராவது மதம மாறுகிறேன் என்றால் ,அது தேவை இல்லை,நீங்கள் ,எங்கள் மதத்தை புரிந்துக் கொண்டு வெறுக்காமல் இருந்தால் போதும் என்று தானே கூறவேண்டும்.அதை விடுத்து ஏன் மதமாற்ற முயற்சி,

மேலும் ஒரு பெண் பேசும் போது நான் பாகிஸ்தானுக்கு போகமாட்டேன் என்கிறாள்,மகிழ்ச்சி,ஆனால் அவ்வாறு சொல்வதே தவறு அலலவா?

அவ்வாறு அங்கு சென்றால்,அந்த இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக அவளுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்புகிறாரா?அது சுத்த முட்டாள் தனம்,நிச்சயம் அங்கு பாதுகாப்பு கிடைக்காது.

காரணம் மதம் ஒன்று என்றாலும்,இனம் வேறு,ஆபத்து தான் அதிகம்,அங்குள்ள இஸ்லாமியர்களே தங்களுக்குள் சன்னி,ஷியா என்று தங்களுக்குள் பிரிந்து சண்டை இட்டுக்கொள்கிறார்கள்,ஒரு பிரிவின் மசூதி மீதே குண்டு வீசு தாக்குகிறார்கள்,அதில் பல்லாயிரம் பேர் இறப்பதை நாம் செய்தியில் படித்துக் கொண்டு தான் இருக்கிறோம்,

உலகில் உள்ள முஸ்லீம்கள் எல்லாம் ஒன்று போல்,மூஸ்லீம் பிரச்சனைகளாக அனைத்தையும் பார்ப்பது அறியாமை,

அப்படி மொழி ,இனம் வேறு என்றாலும் முஸ்லீம் எல்லோரும் ஒன்று என்றால்,ஈராக் ஏன் குவைத் மீது படை எடுத்தது,அஃப்க்கானில் தலிபான்கள் மற்ற முஸ்லீம்களை ஏன் தாக்குகிறார்கள், பாகிஸ்தானும், பங்களாதேஷ்ம் ஏன் பிரிந்தது,
மலேசியாவும், சிங்கபூரும் ஏன் தனி தனி நாடாக மாறியது,

இன்று இலங்கையில் ,பாகிஸ்தான் கொடுக்கும் ஆயுதம் தமிழ் இஸ்லாமியருக்கு எதிராகவும் தான் பயன்படுகிறது.

ஆகவே மத ரீதியாக,சிறுபாணமை என்று பார்ப்பது தவறு .
இனம் மொழி மூலம் தான் சிறுபாண்மை ,பெரும்பாண்மை என்று நாம் பார்க்கவேண்டும்
அப்படி மொழி,இன ரீதியாக பார்க்கும் போது ,நாம் மதத்தால் வேறுபட்டாலும் மொழியால் நாம் அனைவரும் தமிழர் என்ற உணர்வு வரவேண்டும்,

அவ்வாறு இல்லாமல் இஸ்லாம்,இந்து என்று வேற்றுமை என்று பேசினால் ,பிறகு அவர்கள் தமிழ்,தமிழர் நலம்,தமிழர் உரிமை என்று பேசுவதற்கு தகுதி அற்றவர்களாகிவிடுகிறார்கள்,
venkatesh
ஈழத்தில் தமிழ் இஸ்லாமியர்கள், தங்களை மதரிதியாக அடையாளபடுத்திக் கொண்டு சிங்களவர் பக்கம் சென்றதால் தான் அவர்களை விடுதலை புலிகள், பாதுகாப்பு கருதி முஸ்லீம்களை அங்கிருந்து வெளியேற்றினார்கள். இதில் கிறிஸ்துவர்கள் மேல், அவர்கள் மதத்தால் கிறிஸ்துவர்கள் என்றாலும் ,தங்கள் இனம், மொழி என்று வரும் போது தமிழனாக ஒன்றிணைந்தார்கள்,

ஆனால் உலகில் இஸ்லாமியத்தை பின்பற்றுபவர்கள் நாளடைவில், அவர்கள் தாங்கள் சார்ந்த இனத்திற்கும், தங்கள் தாய் மொழிக்கும்,தங்கள் சொந்த கலாச்சாரத்திற்குமே எதிராக மாறிவிடுகிறார்கள், இது இஸ்லாம் மதத்தின் மீது கொள்ளும் அதீத பற்று , வெறியால் அவர்கள் தங்களை சார்ந்த இனத்திற்கே எதிராக மாறிவிடுகிறார்கள்,

இலங்கையில் முஸ்லீம் ,தமிழர்களிடையே பிளவு என்கிற சொல்லாடல் வருகிறது, இதிலே நீங்கள் உணரலாம். யாரும் மூஸ்லீம்கள் ,இந்துக்கள் அல்லது கிறிஸ்துவர்கள் இடையே பிளவு என்பதில்லை. காரணம் கிறிஸ்துவனும்,இந்துவும் தன்னை தமிழனாக தான் முதலில் எண்ணுகிறான், ஆனால் தமிழ் முஸ்லீம்கள் தங்களை மூஸ்லீம்களாக பார்க்கிறார்கள். அதன் விளைவு,தங்கள் மொழி பேசு மற்ற தமிழருடன் ஒன்றுபடாமல் ,தனித்து நிற்கிறார்கள்,

கிற்று தன் கொள்கையை மறுப்ரிசிலனை செய்யவேண்டும். இஸ்லாமியருக்கு ஆதரவாக பேசுவது தான் முற்போக்கு அல்ல, உண்மையில் முஸ்லீம்களின் மனநிலையை நாம் மாற்ற வேண்டும், மதத்தால் வேறுபட்டாலும் நாம் அனைவரும் தமிழர் என்று உணரச்செய்ய வேண்டும், அது தான் முற்போக்கு,

ஆனால் இந்து மதத்தின் மீது உள்ள் கண்மூடித் தனமான் வெறுப்பால் ,இந்த குழப்பம் கீற்றுக்கு உள்ளது,

தமிழ் தேசியம், தமிழர் உரிமை, பெரியார் என்று பேசுபவர்கள் யோசிக்க வேண்டும், பெரியார் தான் கூறிய கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ள சொல்லவில்லை, அது காலத்திற்கு ஏற்ப மாற்றத்திற்கு உட்பட்டது, நீங்கள் உங்களுக்குள் கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள், சரி எனறால் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார்.

பெரியார் சொன்ன காலகட்டம் வேறு இன்றைய காலகட்டம் வேறு, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப நாம் சிந்திக்க வேண்டும். சும்மா பார்ப்பான்,பார்ப்பனியம் என்று பேசினால் யாரும் கேட்கமாட்டார்கள்,
venkatesh
தமிழ் தேசியம்,நாத்திகம் , இந்து துவேஷ்ம் செய்வோர் இதை உணரவேண்டும், நீங்கள் சொல்வது போலவே வைத்துக் கொள்வோம்,

பார்ப்பானர்களை விரட்டியாகிவிட்டது, இந்து மதத்தில் உள்ள அனைவரும் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவர்கள் ஆகிவிட்டார்கள், அப்பறம் தம்ழ் தேசியம் பேசுவீர்களா? அப்படி தான் பேச மூடியமா?

இஸ்லாமியர்கள் உருது ஆட்சி மொழியாக வேண்டும் என்பான், நாத்திகம் பேசினால் சிறையில் அடைப்பான், பெரியார் புத்தகங்களுக்கு தடை விதிப்பான், கிறிஸ்துவன் ஆங்கில மொழி தான் சிறந்தது என்பான், நிங்கள் யாருக்காக போராடினீர்களோ ,அந்த தாழ்த்தபட்ட, பழங்குடி மகக்ள் இஸ்லாமியனாக , கிறிஸ்துவனாக பிரிந்துகிடபபான்,

பிறகு எங்கே அம்பெதகரை ,பெரியாரை பற்றி பேசுவது,

நான் இந்து மதத்தை அப்படியே ஆதரிக்கவில்லை,அதில் மூடநம்பிக்கை உள்ளது, அதை மறுக்கவில்லை. அந்த மூடநம்பிக்கைகளை அகற்ற நாம் போராட வேண்டும்,

அப்போதுதான் மக்களிடம் நல்லிணக்கம் ஏற்படும்,மதமாற்றதால் தம்ழ், தமிழன் வாழ்ந்திட மாட்டான்,

கிற்று இதை உணர வேண்டும், அது இஸ்லாமியா அல்லாதவர் நடத்தும் இணைய தளம் என்றால் இந்த வேண்டு கோளை முன் மொழிகிறேன்,
இல்லை என்றால் முற்போக்கு .,பெரியார்,அம்பெதகர் என்று கூறிக்கொண்டு இஸ்லாமியர்கள் திரைமறைவில் செய்யும் சதியாகவே இந்த இணையத்தை எண்ண தோன்றும்,
venkatesh
பெண்களை அடிமையாக வைத்திருப்பது இஸ்லாம் மதம், புர்கா அணியாத பெண்னின் முகத்தில் ஆசிட் வீசுகிறார்கள்,

தலீபான்கள், அல்கொய்தா போன்ற அமைப்பினர் இஸ்லாத்தின் பெயரால், அல்லாவின் பெயரால் என்று கூறிக்கொண்டு மனிதர்களை கடத்தி வந்து ஆடு மாடுகளை போல் கழுத்தை அறுத்து கொல்கிறார்கள் , இவை இனையதளங்களிலும், தொலைகாட்சியிலும் கண்டிருக்கிறோம்,
ஆனால் இஸ்லாத்தை ஆதரிக்கும் சிலர் ஏதோ, பயங்கிரவாததிற்கும் இஸ்லாமியருக்கும் சம்பந்தம் இல்லாதது போல் பேசுவது அறியாமை, வேதனை,
venkatesh
இங்குள்ள தமிழ் மூஸ்லீம் பாலீஸ்தானுக்காக கவலைப்படுகிறான். ஆனால் அவன் மொழி பேசும் அவன் இனம் தமிழ் ஈழம் வேண்டி போராடுவது அவன் கண்னுக்கு தெரியவில்லை.
உலகில் உள்ள மூஸ்லீம்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன், மொழி கடந்து, நாடு கடந்து ஒன்றாக இருப்பது போல் கற்பனையாக நம்பிக்கொண்டு இருக்கிறான், அதில் இந்திய மூஸ்லீமும் விதிவிலக்கல்ல,

இங்குள்ள மூஸ்லீம்கள் சிறிது காலம் பாகிஸ்தான், அஃப்கானிஸ்தான் போன்ற மூஸ்லீம் நாடுகளுக்கு சென்று தங்கி வர வேண்டும். அப்போது தான் தெரியும் மதம் மனிதரிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் காரணியல்ல, அங்கு வாழமுடியாமல் இந்தியாவிற்கு ஓடி வந்து விடுவார்கள், காரணம் அவர்கள் மதம் இஸ்லாம் என்றாலும் அவரகளும் இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி இனத்தை சேர்ந்தவர்கள், அவர்களின் முன்னோர்கள் ஒருகாலத்தில் மதமாறிவிட்டார்கள், அதன் விளைவு தன் சகோதரனையே வேற்று மனிதனாக எதிரியாக பார்கிறான்,

இனம், மொழி, கலாச்சாரம் தான் ஒரு மனித இனத்தை வேறு ஒரு மனித இனத்திலிருந்து வேறு படுத்துகிறது,இது தான் உண்மை அது இந்து என்றாலும் முஸ்லீம் என்றாலும் எந்த மதம் எனறாலும் மதம் ஒரு ஒற்றுமைக்கான் காரணியாக் இருக்க முடியாது. அப்படி இருந்திருந்தால், இலங்கையில் பெரும்பாண்மையான தமிழர்கள் இந்துக்கள், அதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து இந்துக்களும், நம் இந்திய அரசும் ஆதரித்திருக்க வேண்டும்,.
இந்தி பேசும் இந்துக்கு தமிழ் பேசும் இந்துவின் பிரச்சனை பற்றி கவலை இல்லை, அது போல் தான் மூஸ்லீம் மதத்தினருக்கும்.

எனக்கு தெரிந்த முஸ்லீம் நண்பரிடம் கேட்டேன்,ஏன் இந்தியாவில் உள்ள மூஸ்லீம்கள் பெரும்பாண்மையானவர்கள் பாகிஸ்தானை ஆதரிக்கிறார்கள் என்று,அதற்கு அவர் சொன்னார்,உண்மையை உணர்ந்த இந்திய முஸ்லீம் ,பாகிஸ்தானை ஆதரிக்க மாட்டான் என்று,
அப்படி ஆதரிக்கும் முஸ்லீமை பாகிஸ்தானில் கொண்டு போய் விட்டால் தான் தெரியும் நாம் தவறாக மத அடிப்படையில் பாகிஸ்தானை ஆதரித்தது தவறு என்பது,
இந்தியாவில் இருக்கும் நிம்மதி பாகிஸ்தானில் கிடையாது என்பது புரியும் என்றார்.
venkatesh
கோவை குண்டு வெடிப்பில் கைது செய்யப்படடவர்களை மட்டும் இஸ்லாமியர் மீது பழி வாங்குதல் என்கிறார்கள்,

ஏன் நளினையை ,இந்து அடிப்படையில் இந்துக்களின் மீது ஒடுக்குதல் என்று பார்க்கபடுவதில்லை,

இந்து மதத்திலும் சில இந்து வெறியர்கள்,இந்து வெறியை தூண்டும் அமைப்புகள் உள்ளன்,ஆனால் அவை பெரும்பாலான இந்துக்கள் ஏற்க வில்லை, அதே போல் இஸ்லாமியர்களிடமும் சில பயங்கிரவாதத்தை ஆதரிக்கும், தேசத்திற்கு ஏதிராக செயல் படும் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் இஸ்லாமியார்கள் யாரும் தவறு செய்யாதது போல் இங்கு மூஸ்லீம்களுக்கு பரிந்து பேசுபவர்க்ள் பேசுவது வேதனை
மனிதன்
//அமெரிக்க கிறிஸ்துவர்கள்தான் தற்கொலைபபடையாக முஸ்லீம் முகமூடி அணிந்து பாகிஸ்தான் தர்காக்களிலும் அஹ்மதியா மசுதிகளிலும் தற்கொலை செய்துகொண்டு முஸ்லீம்களுக்கு கெட்டபெயர் வாங்கித்தருகிறார்கள் என்று சொல்கிறீர்களா//நீங்கள் தான் முதன் முதலில் இஸ்லாமியர்களை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்தீர்கள்.
தெரிந்தோ தெரியாமலோ தாங்கள் இந்த உண்மையை பதிவு செய்துள்ளீர்.உலகத்தில் ஆயுதங்கள் தயாரிக்கும் நாடுகள் எவை? அந்த ஆயுதங்கள் விற்க வேண்டும் என்றால் பயன் அதிகமாக பயன் படுத்தப்படவேண்டும், பயன் படுத்தபட வேண்டும் என்றால் நாட்டில் தீவிரவாதமோ, போரோ நடக்கவேண்டும். கிருச்துவதிர்க்கு அடுத்தபடியாக உள்ள இஸ்லமிய மதம்.ஈராக், ஈரான் போரை ஏழு வருடங்களுக்கு மேலாக நடத்தியது அமெரிக்காதான். ஆயுதங்களும் விற்கவேண்டும், இஸ்ல்மியர்களையும் அழிக்க வேண்டும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பாகிஸ்தானை இன்றளவும் ஆதரிப்பது அமெரிக்காதான். உலகில் தீவிரவாதிகளால் அதிக அளவு இறப்பது இஸ்லாமியர்கள் தான்.அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் ஒசாமா, தாலிபான்கள்,லஷ்கர் எ தொய்பா, R.S.S. இந்து மத வெறியர்கள், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் இந்திய உளவு துறையினர். ராஜ பக்ஷே,L.T.T.E யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்க பட வேண்டியவர்களே.குரானில் எங்கும் இது போன்ற செயல்கள் செய்யும் படி சொல்லவில்லை. இவர்கள் செய்வதற்கு ஒட்டு மொத்த சமுதாயத்தையே குறை சொல்வது எப்படி சரியாகும்?
அப்புறம் இன்னொரு விஷயம், இந்தியாவில் எல்லா மத பிரசாரங்களும் அனுமதிக்கபடுகிறது என்று சொன்னீர்கள். இந்திய ஒரு இந்து நாடு என்று சொல்ல முற்பட்டால் அது உங்கள் முட்டாள்தனம, வரலாறு தெரியவில்லை உங்களுக்கு.
அனானிமஸ்
வெங்கடேஷ், என்ன இப்படி அப்பாவியாக இர்க்கிறீர்கள்? இஸ்லாமிய பயங்கரவாத்த்தால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு இந்து புழுவை பேட்டி கண்டாலும் மதச்சார்பினை முற்போக்கு எல்லாம் டமால் ஆகிவிடும். பாதிக்கப்பட்ட இந்துக்களை (அவர்கள் மனிதர்கள் இல்லை. அவர்களெல்லாம் மனிததன்மையே இல்லாத புழுக்கள். ஆகவே அவர்கள் செத்தால் அது மனித உரிமை கீழ் வராது.) பேட்டி காணாமல் குண்டு வைத்ததற்காக கைது செய்யப்ப்பட்ட
மனிதர்களின்” மனித உரிமை பற்ற் மட்டுமே கவலைப்பட்டு மனித உரிமையை காப்பாற்றிய கீற்று தளத்துக்கும் மற்ற முற்போக்காளர்களுக்கும் நன்றி நன்றி நன்றி
riyasudeen
india vil muslimkalin nilamai patri neenkal sonna visayankalai yettru kolkiren. thank you
G u l a m
என் இந்திய சகோதரர்களே! இங்கிருக்கும் முஸ்லிம்கள் யாவரும் அரேபிய பாலையிலிருந்து வந்து குதித்தவர்கள் அல்லர். இந்திய பிரஜையாக, இனத்தால் தமிழராக உங்கள் மத்தியில் உலா வரும் உங்கள் சகோதரர்கள் தான்.ஆனால் அந்த அரேபிய மண்ணில் முஹம்மது (ஸல்)அவர்களால் தொடரப்பட்ட அந்த இஸ்லாத்தை எங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றிருக்கிறோம் தாங்கள் எங்களை அரேபிய வந்தேறியாக ஒருவேளை நினத்தால் கூட எங்களை பொறுத்தவரை நீங்கள் எங்களின் சகோதரர்களே ., ஏனெனில் இஸ்லாம் அப்படித்தான் எங்களுக்கு கற்றுக்கொடுத்துருக்கிறது காழ்ப்புணர்ச்சி காரணமாக இஸ்லாத்தை குறைக் கூறுவதற்கு முன்பாக இஸ்லாமும்,நபிகளாரின் பொன்மொழிகளும் என்ன சொல்கிறது என அறிந்துக் கொள்ளுங்கள். உங்கள் அறிவு வெளிச்சத்தை சில இஸ்லாமிய பெயர் தாங்கிகளின் இருண்ட பக்கத்தில் பரப்புவதை விட, முஹம்மத் எனும் முழு மனிதரின் வரலாற்று பக்கத்தில் நிரப்புங்கள். மேற்கத்திய ஊடகங்களின் பயங்கரவாத சாட்சியாக சித்தரிக்கபடும் முஸ்லிம்கள் ஆளுயர ஆடையும், அதைவிட பெரிதாக ஆயுதமும் கொண்டு காட்சியளிக்கும் நிலை மாற்றி., உங்கள் தெரு கோடியில் டீ கடை வைத்திருக்கும் அப்துல் ரஹ்மானும்,உங்கள் கண்ணெதிரே ஐஸ்கிரிம் வண்டி தள்ளும் அப்துல்லாஹ்வும் முஸ்லிம்கள் தான் என்பதை உணருங்கள்.எங்கோ உயிர்க்கொலைகள் -முகவரியில்லா முஸ்லிம் முகங்கள் செய்வதாக கூறப்படுபவை உண்மையல்ல.அஃது அது உண்மையென்றால் அவன் உண்மை முஸ்லிம் அல்ல! ஏனெனில் எந்த காரணமுமின்றி ஒருவனை கொலை செய்தவன் சமுகம் முழுவதையும் கொலை செய்தவன் போலாவான் என்ற நபிவழியில் வார்ர்த்தெடுக்கப்பட்டவர்கள் தான் உண்மை முஸ்லிம்கள். எங்கோ இருக்கும் அல் கொய்தாவையும்.பின் லாடனையும் விடுங்கள் (அவர்கள் செய்வதை நான் அறியேன்) உங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கும் முஸ்லிம்கள் எத்தனை முறை உங்களை வாளெடுத்து வெட்ட வந்திருக்கிறார்கள்? தாங்கள் இல்லாத பொழுது எத்தனை முறை உங்கள் வீட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளை தாக்க முற்பட்டிருக்கிறார்கள்...? அல்லது யாரும் இல்லாதபோது உங்கள் வீடுகள் குண்டு வைத்து எத்தனை முறை தகர்க்க பட இருந்தது...? சற்று நடு நிலையோடு சிந்தித்து சொல்லுங்கள் தாங்கள் சொல்வது போல் இஸ்லாமியர்களாகிய நாங்கள் எங்களின் சுய நல தேவைக்காக அதிகபடியான செல்வாக்கு,பணம்,ஆளுமை போன்ற பின்புலங்களுடன் இங்கு கலவரங்களை நிகழ்த்தினோம் என கூறினால் அதன் உச்சக்கட்டமாக இன்று எந்த இந்துவாவது உயிரோடு இருக்க முடியுமா...? என் இந்திய சகோதரர்களே! நாங்களும் உங்களை போன்றே பயம்,கோபம்,விரக்தி,வலி,ஆசை,ஏழ்மை,சிரமம், -ஆகிய பண்புகளை கொண்ட மனிதங்கள் தான்! வாழ்வளித்த இன்னாட்டில் தானே எங்களின் தேவையே முன்னிறுத்தி எதையும் கேட்க வாய்ப்பிருக்கிறது..?பசித்தவன் தன் தாயிடம் தானே பால் கேட்பான்? ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்., "தாய் மண்ணே வணக்கம்" என முழங்கி தான் தேசப்பக்தியென்னும் அடையாளத்தை நாங்கள் வெளிபடுத்த வேண்டும் என்றால் அது எங்களால் இயலாது.ஆனாலும் எம் தாய் நாட்டின் மண்ணைக் கூட கவர நினைக்கும் கயவர்களின் கைகளையல்ல... அவர்களின் கருவறையே கூட அறுத்திட ஒருகணம் தாமதிக்க மாட்டோம்.
என் இந்திய சகோதரர்களே! இஸ்லாம் மீதான தாங்கள் எண்ணங்களை மீண்டுமொருமுறை மறுபரிசீலனை செய்யுங்கள்.இந்துக்களாக வாழ்வது போல இஸ்லாமிய அடையாளங்களுடன் முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் இந்தியாவின் வளர்ச்சிக்கு எந்த ஒரு வித தடையுமில்லை என கூறி முடிக்கிறேன்
-இறை நடினால் இனியும் சந்திப்போம்.
Rahattullah Khan
சகோதரர் குலாம் உணர்ச்சிப்பிழம்பாக கருத்துக்களை கொட்டியிருக்கிறார். //தாங்கள் சொல்வது போல் இஸ்லாமியர்களாகிய நாங்கள் எங்களின் சுய நல தேவைக்காக அதிகபடியான செல்வாக்கு,பணம்,ஆளுமை போன்ற பின்புலங்களுடன் இங்கு கலவரங்களை நிகழ்த்தினோம் என கூறினால் அதன் உச்சக்கட்டமாக இன்று எந்த இந்துவாவது உயிரோடு இருக்க முடியுமா...? // உண்மையான கேள்வி. நாம் இஸ்லாத்துக்காகத்தான் போராடுகிறோமே அன்றி சுயநலத்தேவைக்காக அல்ல. நாம் கேரளா போல சுமார் 30 சதவீத அளவுக்கு வந்த பின்னரே வலிமையுடன் போராடுவோம். //"தாய் மண்ணே வணக்கம்" என முழங்கி தான் தேசப்பக்தியென்னும் அடையாளத்தை நாங்கள் வெளிபடுத்த வேண்டும் என்றால் அது எங்களால் இயலாது// நிச்சயமான வார்த்தை. நமது வதன் என்றால் அது இஸ்லாமும் உம்மத்தும் தானே அன்றி, தேச எல்லைகளுக்கு நாம் தலை வணங்கமாட்டோம். //இந்திய பிரஜையாக, இனத்தால் தமிழராக உங்கள் மத்தியில் உலா வரும் உங்கள் சகோதரர்கள் தான்.// ஆனால் இது தவறு சகோதரர் குலாம், மூமீன்களான நீங்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் என்று முஸ்லீம்களை நோக்கி மட்டுமே அல்லாஹ் கூறியுள்ளான். காபிர்களிடமும் கிறிஸ்துவர்களிடமும் நட்பு பாராட்ட வேண்டாம் என்று கூறியுள்ளான். தாங்கள் எழுதியதை சிந்தித்து எழுத கேட்டுகொள்கிறேன்.
ரபீக்
இந்துத் தமிழன் அவர்களுக்கு ///எந்த முஸ்லீம் நாட்டில் இந்துக்களுக்கு மதப்பிரச்சாரம் செய்யவும் கோவில் கட்டவும் அனுமதி தருகிறார்கள்?/// மலேசியாவிலும், இந்தோனேசியாவிலும் இருக்கும் கோவில்களைப்பற்றி தெரியாதா? ஆசியாவிலேயே அதிக உயரமான முருகன் சிலை மலேசியாவில் உள்ளது தெரியாதா? இரு நாடுகளுமே இஸ்லாமிய நாடுகள் என்று தெரியாதா? தைபூசத்திற்கும், தீபாவளிக்கும் மலேசியாவில் பொதுவிடுமுறை என்று தெரியாதா? இந்நாட்டிலுள்ள இஸ்லாமியர்களுக்கு பரந்த மனப்பான்மை இல்லையா? பொது விவாதத்தில் கலந்துக்கொள்பவர்களுக்கு பொது அறிவு வேண்டும். இல்லாவிட்டால் பொத்திக்கொண்டு இருக்க வேண்டும்.
அப்துர் றஹ்மான்
Mr. Rahatullah Khan,

//சகோதரர் குலாம் உணர்ச்சிப்பிழம்பாக கருத்துக்களை கொட்டியிருக்கிறார்.// என்று கூறும் நீங்கள் இங்கு உளறி இருக்கின்றீர்கள். உங’களை நான் இரண்டு விதமாகத் தான் பார்க்க முடிகிறது. 1. இஸ்லாத்தினை சரியாக விளங்கிக் கொள்ளாத முஸ்லிம் அல்லது 2. முஸ்லிம்களின் பெயரில் முஸ்லிம்களை போன்று எழுதி முஸ்லிம்களுக்கும் மற்ற மாற்று மத சகோதரர்களுக்கும் இடையில் சிண்டு முடிந்து ஆதாயம் தேடும் இந்துத்துவாவைச் சேர்ந்தவர். இவ்விரணடில் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போங்கள். ஆனால் தயவு செய்து இஸ்லாத்தினை தெரிந்துக் கொண்டு, புரிந்துக் கொண்டு கருத்துக் கூற வாருங்கள்.
//நமது வதன் என்றால் அது இஸ்லாமும் உம்மத்தும் தானே அன்றி, தேச எல்லைகளுக்கு நாம் தலை வணங்கமாட்டோம்.// தேசபக்தி என்பது ஈமானில் (இறறை நம்பிக்கையில்) பாதி என்று கற்றுக் கொடுத்து பக்குவப் படுத்திய மார்க்கமய்யா இஸ்லாம். அதனால் தான் எம் சமுதாயம் இந்திய திருநாட்டின் விடுதலைப் போரில் தேசத்தின் மக்கள் தொகையில் தனது சதவீதத்திற்கு மேல் உயிர் தியாகம் செய்தது. இன்னும் எம் மக்களின் விடுதலை வேட்கையை அதிகப் படுத்த ‘ஆங்கிலம் கற்பது ஹராம்’ என்று எங்கள் மார்க்க அறிஞர்கள் ஃபத்வா கொடுக்கும் அளவிற்கு சென்றது. (அதன் பலனை(!) தான் எங்கள் சமுதாயம் பலவிதமான அடக்கு முறைகளின் மூலம் அனுபவித்து வருகிறுது.) இன்னும் அதனால் தான் எங்களால் //எம் தாய் நாட்டின் மண்ணைக் கூட கவர நினைக்கும் கயவர்களின் கைகளையல்ல... அவர்களின் கருவறையே கூட அறுத்திட ஒருகணம் தாமதிக்க மாட்டோம். என் இந்திய சகோதரர்களே!// என்று சூளுரைக்கும் அளவிற்கு எங்களை பக்குவப் படுத்தி இருக்கிறது.
// //இந்திய பிரஜையாக, இனத்தால் தமிழராக உங்கள் மத்தியில் உலா வரும் உங்கள் சகோதரர்கள் தான்.// ஆனால் இது தவறு சகோதரர் குலாம், மூமீன்களான நீங்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் என்று முஸ்லீம்களை நோக்கி மட்டுமே அல்லாஹ் கூறியுள்ளான். காபிர்களிடமும் கிறிஸ்துவர்களிடமும் நட்பு பாராட்ட வேண்டாம் என்று கூறியுள்ளான்.// முற்றிலும் தவறான விளங்குதல். நீங்கள் என்ன தான் சொல்ல வருகின்றீர்கள்? முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாத அனைவரையும் அழித்து விட வேண்டும் என்கின்றீர்களா? அல்லது குறைந்த பட்சம் அவர்களோடு எந்ந விதமான தொடர்புகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்கின்றீர்களா? போங்க சார். போய் இஸ்லாத்தினை நன்கு படித்து விட்டு வாருங்கள். // மூமீன்களான நீங்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் என்று முஸ்லீம்களை நோக்கி மட்டுமே அல்லாஹ் கூறியுள்ளான்.// அப்படியென்றால் மற்றவர்கள் எல்லோரும் எதிரிகள் என்று சொல்லி இருக்கின்றானா? இஸ்லாத்தினையும், முஸ்லிம்களையும் அழித்து ஒழிக்க நினைப்பவர்கள் மட்டுமே எதிரிகளாக இருக்க முடியும். இஸ்லாத்தினை ஏற்காத மற்ற அனைத்து மதத்தினரும் இஸ்லாத்தின் எதிரிகள் அல்ல. அதனால் தான் இஸ்லாம் “உங்கள் மார்க்கம் உங்களுக்கு. எங்கள் மார்க்கம் எங்களுக்கு’ என்று கண்ணியமான முற்போக்கு சிந்தனையை கற்று தந்திருக்கின்றது. ஒரு முஸ்லிம் எப்படி மற்றொரு முஸ்லிமுக்கு (மார்க்த்தில்) சகோதரனோ அவ்வாறே ஒரு தமிழன் மற்றொரு தமிழனுக்கு சகோதரனாவான். அது போலவே ஒரு இந்தியன் மற்றொரு இந்தியனுக்கும் இன்னும் தேசம், இனம், மொழிகளை கடந்து ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு சகோதரனாவான். இஸ்லாம் கற்று தந்த இந்த சகோதரத்துவத்தை புரிந்துக் கொண்டு முதலில் மனிதனாக வாழ கற்றுக் கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் மனிதராக மாறி வரும் பட்சத்தில் நாம் நம் இந்திய தேசத்தை ஒரு வலிமையான வல்லரசாக கட்டமைத்து இன்னும் அந்த வலிமையைக் கொண்டு மற்றவர்களை அடக்கி ஒடுக்காமல் நாமும் வாழ்ந்து இந்த உலகத்தில் உள்ள மற்ற அனைத்து மாந்தர்களையும் வாழ வைக்க முடியும்.
// நாம் இஸ்லாத்துக்காகத்தான் போராடுகிறோமே அன்றி சுயநலத்தேவைக்காக அல்ல. நாம் கேரளா போல சுமார் 30 சதவீத அளவுக்கு வந்த பின்னரே வலிமையுடன் போராடுவோம்.//
இது போன்று பகிரங்கமாக சிண்டு முடியும் வேலையை நினைத்து சிரிப்பதா அல்லது அழுவதா என்று எனக்கு புரிய வில்லை. இந்தியர்களே இல்லை இல்லை மனித நேயம் உள்ள மனிதர்களே தயவு செய்து எனக்கு தெளிவு படுத்துங்கள்.
இந்துத்தமிழன்
ரபீக், நான் கேட்டது எந்த முஸ்லீம் நாட்டில் இந்துக்களுக்கு மதப்பிரச்சாரம் செய்யவும் கோவில் கட்டவும் அனுமதி தருகிறார்கள் என்று.
நீங்கள் சொல்வது ஏற்கெனவே இருக்கும் கோவில்களைப் பற்றி. மலேசியாவில்
நடக்கும் செய்திகளை நீங்கள்படிப்பதில்லை போலிருக்கிறது. மலேசியாவில் ஒரு முஸ்லீம் மற்ற மதத்துக்கு மதம் மாற முடியாது. இந்து மதப்பிரச்சாரம் அனுமதிக்கப்படாது. ஒரு மலாய் இந்து மதத்துக்கு மதம் மாற விரும்பினாலும் முடியாது. பிறந்த போது முஸ்லீமாக தவறாக பதியப்பட்டு விட்டவர்கள் கூட ஒரு இந்துவை திருமணம் செய்து இந்துவாக வாழமுடியாது. இதற்கு பல செய்திகள்
இருக்கின்றன. நான் தேடித்தரப்போவதில்லை. நீங்களே தேடிக்கொள்ளுங்கள். இந்தோனேஷியாவில் அப்படியே. ஒரு முஸ்லீம் இந்துவாக ஆகமுடியாது. சரி
கோவில்களுக்கு வருவோம். இந்தோனேஷியாவில் ஏராளமான கோவில்கள் இருந்தன. அவை
இஸ்லாமிய ஆக்கிரமிப்பின்போது மசூதிகளாக ஆக்கப்பட்டுவிட்டன. கட்டாய மதமாற்றத்தினால் இந்துக்கள் முஸ்லீம்களாக ஆக்கப்பட்டனர். பலர் இன்னும் பிடிவாதமாக இந்துக்களாக மதமாறமுடியாது என்று இருந்தனர் . அவர்கள் நாடுகடத்தப்பட்டு பாலி என்ற தீவுக்கு அனுப்பப்பட்டனர். அதனால்தான்
பாலித்தீவு இந்தோனேஷியாவில் அமைதிப்பூங்காவாக இருகிறது. அதனையும் குலைக்கு தற்போது அங்கு குண்டுவெடிப்புகளையும் தற்கொலை படைகளையும்
அனுப்பி நரகமாக்க முனைகிறார்கள் அங்குள்ள முன்னாள் இந்துக்கள்/இன்னாள் முஸ்லீம்கள். மலேசியாவில் விடுமுறை வாங்குவதற்கு எவ்வளவு இந்துக்கள் தெருக்களில் வந்து போராடினார்கள் என்று தெரியுமா? மலேசியாவில் அங்கிருக்கும் கோவில்கள் அனைத்தும் பிரிட்டிஷ் ஆண்டபோது கட்டப்பட்டவை.
சுதந்திரத்துக்கு பின்னால் அங்கு ஒரு கோவிலும் கட்ட அனுமதிக்கப்படவில்லை. ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த பல ஆயிரக்கணக்கான கோவில்கள்
இடிக்கப்பட்டுகொண்டிருக்கின்றன். யாராவது மலேசியாவில் வாழும் தமிழரை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.//பொது விவாதத்தில் கலந்துக்கொள்பவர்களுக்கு பொது அறிவு வேண்டும். இல்லாவிட்டால் பொத்திக்கொண்டு இருக்க வேண்டும்.//
என்று சொல்கிறீர்கள். அது உண்மைதான்.
முகம்மது பெரோஸ்
Gulam, அப்துர் றஹ்மான் ஆகிய சகோதரர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள். இந்தியாவை பாராட்டுவதும், இந்தியாவின் சட்டங்களை மதிப்பதும், இந்திய அரசியலில் பங்கு பெறுவதும் ஹராமாகும். இது என் கூற்று மட்டுமல்ல,

இந்திய அரசியல் ஹராமா ? – ஸலபுகள், முன்னோர்களின் கூற்றுபடி
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்கள் தனது அல்பதாவா (Vol 35-1373) வில் கூறும் போது “குர்ஆன் மற்றும் சுன்னாவில் தான் கற்றதை விட்டொழித்து அல்லாஹ், அவன் தூதரின் படி ஆட்சி செய்யாத ஆட்சியாளரை பின்பற்றும் அறிஞர் இறைநிராகரிப்பாளர் ஆவார். இவ்வுலகிலும் மறுமையிலும் தண்டனை பெறுவதற்கு தகுதியானவர்” என்று கூறுகிறார். இமாம் இப்னு ஜரீர், இப்னு ஹஜ்ம் அல் அந்தலூஸி போன்றோரும் இதே கருத்தின் அடிப்படையில் தீர்ப்பு கொடுத்துள்ளனர். தன் வரம்புகளை மீறி செயல்படுவர்கள் அவர்கள் வணங்கப்பட்டாலும், பின்பற்றப்பட்டாலும், அவர்களின் சட்டங்கள் பின்பற்றப்பட்டாலும் அவர்கள் தாகூத்தே என இமாம் இப்னு கய்யூம் அல் ஜவ்ஜியா குறிப்பிடுவது போல் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், அஹ்மத் ஷாக்கிர் போன்ற எண்ணற்ற முன்னோர்கள், ஸலபுகள் ஜனநாயக அரசியல் ஷிர்க் என்பதில் கருத்தொற்றுமை கொண்டவர்களாக உள்ளனர்

இந்திய அரசியல் ஹராமா ? – சமகால அறிஞர்களின் கருத்து
சமகால அறிஞர்கள் பலரும் ஜனநாயகம் ஹராம் என கூறுகின்றனர். உதாரணத்துக்கு ஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உதைமீன் அவர்கள் மனித சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் ஆட்சியை பற்றி குறிப்பிடும் போது “அல்லாஹ்வின் அதிகாரம் நீக்கப்பட்டு அது இன்னொரு அதிகாரத்தை கொண்டு நிரப்பப்படுகிறது. மக்களிடத்தில் ஷரீஆவின் அதிகாரம் நீக்கப்பட்டு மனித கற்பனைகளில் உருவான அதிகாரத்தை கொண்டு நிரப்பப்படுகிறது. இது தெளிவான குப்ராகும். ஏனென்றால் அவன் இறையடிமையாய் இருக்கும் போது இறைவனுடன் தன்னை சமமாக்கி கொள்கின்றான். இதை அல்லாஹ் கண்டிக்கிறான். இந்த அடிப்படையில் தான் ஷேக் முஹம்மது நஸீருத்தின் அல்பானி அவர்கள் கூட மதசார்பின்மையை அடிப்படையாக கொண்ட முஸ்தபா கமாலின் ஆட்சியை இஸ்லாத்துக்கு முரணானது என தீர்ப்பளித்தார்.
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல அறிஞர் அப்துர் ரஹீம் கீரின் அவர்கள் 2004-ல் சென்னையில் நடைபெற்ற PEACE கருத்தரங்கில் “இஸ்லாமும் ஜனநாயகமும்” எனும் தலைப்பில் பேசும் போது “இஸ்லாம் சொல்லும் கடமையை ஒருவர் செய்யத் தவறினால் அவர் பாவியாக கருதப்படுவார். ஆனால் அவரது செயலை நியாயப்படுத்தினால் அவர் இஸ்லாத்தின் வரையறையை விட்டு வெளியேறியவராக கருதப்படுவார். உதாரணமாக ஒருவர் தொழவில்லையானால் அவர் பாவியாக கருதப்படுவார். ஆனால் தொழுவது தேவையில்லை என்று வாதிட்டால் அவர் நிராகரிப்பாளராக கருதப்படுவார். அது போல் ஒருவர் இஸ்லாத்துக்கு முரணாண மனித சட்டங்களுக்கு அடிபணிந்து வாழ நேரிட்டால் அவர் பாவியாக கருதப்படுவார். அவர் அந்த மனித சட்டங்களை ஆதரித்தால் அதை நியாயப்படுத்தினால் அதற்காக போராடினால் அவர் நிராகரிப்பாளராக கருதப்படுவார்” என்றார். மேலும் அப்துர் ரஹீம் க்ரீன் அவர்கள் “ஜனநாயகமும் இஸ்லாமும் ஒன்று என்று யாராவது சொன்னால் ஒருவர் திருமணம் செய்யும் போது மஹராக பணம் கொடுக்கிறார், விபசாரத்துக்கும் பணம் கொடுப்பதால் இரண்டும் ஒன்று என்று சொல்வதற்கு சமமாகும்” என்று விளக்கினார்.
G u l a m
நம் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக!
சகோதரர் Rahattullah Khan, அப்துர் றஹ்மான் -தங்களின் பகிர்வுக்கு நன்றி!
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (04:01)
சகோதரர், Rahattullah Khan அவர்களுக்கு மேற்கண்ட வசனத்தை முன்னிறுத்தியே நான் சகோதரர்கள் என்ற கருத்தில் சொன்னேன். இந்தியர்கள் மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்துப்பேர்களும் நம் சகோதரர்கள் தான் அன்பரே!
ஆனால் இங்கு பேசப்படும் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துக்களுக்கு விளக்கமளிப்பதற்க்காகவே அனைவரும் அறியும் பொருட்டு எளிமையான நிகழ்கால புரிதலுடன் சொன்னேன். இங்கு முஸ்லிமல்லாதவர்களை சகோதரர் என்று சொல்லலாமா? என்பது விவாத பொருளல்ல., முஸ்லிமல்லதவர்கள் சகோதர முஸ்லிகளை எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதே. தாங்களே உண்மையாக என்னை விட உணர்ச்சிவசப்படக்கூடியவராக இருக்கிறீர்கள்., தங்களின் கருத்துக்கள் தவறாக புரிதல் கொண்டு படிக்கும் சக இந்து சகோதரர்கள் இஸ்லாம் மீது மேலும் வெறுப்புக்கொள்ள தேவையில்லாமல் வழிவகுக்குமோ என அச்சப்படுகிறேன். என் வார்த்தைகள் மார்க்கத்திற்கு முரணாண அமைந்திருப்பின் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன்.அந்த கடமை என் சகோதரர் என்ற முறையில் உங்களுக்கு உண்டு.
சகோதரர் அப்துர் றஹ்மான் அவர்களுக்கு சிலர் அறியாமை காரணமாகவோ, கோபத்தின் காரணமாகவோ சற்று கடுமையான வார்த்தைகளை உபயோகித்தால் அதனை அவர்களிடத்தில் நல்ல முறையில் எடுத்து இயம்புவதே மாநபி வழி வந்தவர்களுக்கு அழகு. தாங்களும் பதிலுக்கு கோபப்பட வேண்டாம். ஏனெனில் பேசுப்பொருளான இந்திய சமுகத்தில் இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள் என்பதை சக மக்களுக்கு தெளிவுறுத்துவதே நமது நோக்கம். அதை முன்னிறுத்தியே இங்கு நமது ஆக்கங்கள் அமைய வேண்டும் என்பதே ஆவா., எனவே இஸ்லாமியர்களுக்காக கேட்க வேண்டியதை தர்க்க ரீதியாகவும்.இஸ்லாமியர்கள் இடத்தில் கேட்கப்படுவதை (சகோதரர் ரபீக் போல்) ஆதார ரீதியாகவும் விளக்க முற்பட வேண்டும் என்பதே என் தாழ்மையான் கருத்து
-இறை நாடினால் இனியும் சந்திப்போம்
அப்துர் றஹ்மான்
சகோ. குலாம். தங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக. தாங்களும் குறிப்பிட்டபடியே – நானும் பயம் கோபம், விரக்தி… போன்ற இயல்புகளைக் கொண்ட சாதாரண மனிதன் தான். அதனால் தான் சற்று கடுமையான வாரித்தைகளை உபயோகித்து விட்டேன். ‘பிறர் மனதை புண்படுத்துவதும் கூட மனித உரிமை மீறல் தான். சம்பந்தப் பட்டவர்கள் மன்னிக்கும் வரை இறைவன் மன்னிக்க மாட்டான்’ என்ற உன்னதமான கொள்கைகளை கற்றுத் தந்த மாநபிகள் வழி வந்தவன் என்பதை சற்றே மீறி விட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி. எனது வார்த்தைகள் யாருடைய மனதையாவது கஷ்டப் படுத்தி இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.
இங்கு நான் ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். இஸ்லாத்தினை பற்றி நன்கு விளங்கியவர்களால் கூட சட்டென தவறாக புரிந்துக் கொள்ள கூடிய வகையில் இஸ்லாத்தின் பெயரில் சில கருத்துகள் (சில முஸ்லிம்களின் அறியாமையினாலும் – மற்றும் முஸ்லிம்கள் மீது தவறான காழ்ப்புணர்வை வளர்க்க வேண்டும் என்ற தீய எண்ணத்தினால் மற்றவர்களாலும்) பரவலாக இணையத்திலும் வைக்கப் படுகிறது. இதனால் ஏற்கனவே முஸ்லிம்கள் மீது தவறான புரிந்துணர்வைக் கொண்டிருக்கும் அல்லது பெரும் பெரும் பொய்களையும், வரலாற்று புரட்டுகளையும் கூறி மூளை சலவை செய்து மக்களின் பொது புத்தியில் காழ்ப்புணர்வு பதியப் பட்டிருக்கும் சூழ்நிலையில் இதுபோன்ற மாற்று மத அன்பர்களிடம் காழ்ப்புணர்வு அதிகரிக்குமேயல்லாது வேறில்லை.
உதாரணமாக ‘சரியான வழியில்’ செல்லும் சகோ. பெரோஸ் கான் எழுதியுள்ளதை பாருங்கள். //இந்தியாவை பாராட்டுவதும், இந்தியாவின் சட்டங்களை மதிப்பதும், இந்திய அரசியலில் பங்கு பெறுவதும் ஹராமாகும்.// அவரின் தவறான இந்த புரிதலுக்கு நாம் விளக்கமளித்தாலும் கூட – அதற்கு முன் இந்த கருத்துகளை படித்த அனைத்து அன்பர்களும் மீண்டும் இங்கு வந்து நம்முடைய விளக்கத்தினை படித்து தெளிவடைவார்கள் என்று கூற முடியுமா? எங்கு எதை எங்கு சொல்வது என்ற அடிப்படை கூட தெரியாமல் இங்கு பேசுபடு பொருளுக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் இங்கு இதை கூறுவதன் அவசியம் தான் என்ன? நாம் எங்காவது இஸ்லாமும் ஜனநாயகமும் ஒன்று தான் கூறியுள்ளோமா? அவற்றிடையே சிற்சில வேறுபாடுகள் உள்ளது போலவே – பல ஒற்றுமைகளும் உள்ளனவே. இந்தியா போன்ற பன்முக கலாச்சாரம் கொண்ட நாடுகளில் முஸ்லிம்கள் ஆன்மீக வாழ்வில் இஸ்லாத்தினையும் பொது வாழ்வில் முடிந்த வரை இஸ்லாத்திற்கு முரணில்லாமல் ஜனநாயகத்தையும் பின்பற்றுவதில் இஸ்லாமிய அடிப்படைக்கு உட்பட்டு நாம் சிந்தித்த வரை யாதொரு தவறையும் காண முடியவில்லை. பற்பல மார்க்க அறிஞர்களின் கருத்துக்களை கூறும் அவர்-அந்த கருத்துக்கள் எந்த சூழ்நிலைக்குரியது என்பது குறித்து சிந்திக்க தவறி விட்டார் என்றே தோன்றுகிறது. இது சம்பந்தமாக சகோதரருக்கு மேலும் விவாதிக்க வேண்டுமெனில் ‘அந்த தலைப்பில்’ பகிரங்கமாக என்னுடனோ (நிபந்தனைக்குட்பட்டு) அல்லது பொது வாழ்வில் முழுமையாக ஈடுபட்டுள்ளவரிடமோ விவாதிக்கலாம். ஆனால் இங்கு அல்ல. ஏனெனில் இங்கு பேசுபடு பொருள் அதுவல்ல.
நிச்சயமாக இன்றைய சூழ்நிலையில் இப்பூமியில் எங்கும் இஸ்லாமிய ஆட்சி நடை பெறாத நிலையில் – தன் சொல் மற்றும் கருத்துகளுக்கு மாற்றம் இல்லாமல் சகோதரர் நிலவிலிருந்துக் கொண்டு பின்னூட்டமிடுகின்றார் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.
ஆகையால் சகோ. பெரோஸ்கான் போன்றவர்கள் ஏற்கனவே அடக்கி ஒடுக்கப் பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு – மாற்று மதத்தவர்களின் இஸ்லாம் பற்றிய தவறான புரிந்துணர்வை நீக்குவதற்கு உதவி செய்யவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. தயவு செய்து இந்துத்துவா தீவிரவாதிகளுக்கு ‘மொட்டையான’ ஆதாரங்களாக தன்னுடைய கூற்றுக்கள் அமைந்துவிடக் சுடிய சாத்தியத்தை ஏற்படுத்திக் கொடுத்து அதன் மூலம் முஸ்லிம்களுக்கு உபத்திரவம் கொடுக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். (தனிப்பட்ட முறையில் சகோ. பெரோஸ் கான் அவர்களுக்கு. நான் இங்கு தங்கள் கருத்துக்கள் குறித்து வேறு வழியில்லாமல் சற்று கடுமையான வார்த்தைகளை உபயோகித்திருப்பதற்கு மன்னிக்கவும். நான் அவ்வாறு பயன் படுத்துவதற்கு காரணம் தங்களை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. இதே கருத்துகளை தாங்கள் பல இடங்களில் பதிவு செய்திப்பதை நான் கண்டிருக்கின்றேன். அதற்கான விளக்கங்கள் நம் சகோதரர்கள் மூலம் கொடுக்கப் பட்ட பின்னரும் (நினைவில் உள்ளதை எழுதுகின்றேன். எங்கே என்றெல்லாம் கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்) தாங்கள் தங்களுடைய நிலையை சிறிதும் மறு பரிசீலனை செய்யவில்லை வில்லை என்று நினைக்கும் போது சற்றே வருத்தமாகத் தான் இருக்கின்றது. எனவே இறைவனுக்காக என்னை மன்னித்து விடுங்கள்).
கலை
மனிதன், கலை என்ற பெயரில் எழுதும் முஸ்லீம் நண்பர்களுக்கு, முதலில் இந்துக்கள் மீதும் இந்து மதத்தின் மீதும் இருக்கும் காழ்ப்பை, வெறுப்பை முதலில் உதறுங்கள்.

எமதருமை நண்பா! இந்துத்தமிழா! நான் இங்கு எவ்விடத்திலேயும் இந்து மக்களின் மீதோ அல்லது அம்மதத்தின் மீதோ காழ்ப்பையோ, வெறுப்பையோ உமிழவில்லையே. நான் Rss குறித்தும் இந்திய அரசு குறித்துமே குற்றம் சாட்டுகின்றேன். ஆனால் நீங்கள்தான் முஸ்லீம் மக்களனைவருமையுமே குற்றவாளி ஆக்குகிறீர்கள். நீங்கள் ஒரு சமுதாயத்தையே குற்றவாளியாக்குகிறீர்கள். ஆனால் நான் ஒரு அமைப்பின் மீது மட்டும்தான் குற்றம் சுமத்துகின்றேன்.
பிறகு... இந்த இந்துக்கள் இந்துக்கள்னு சொல்றீங்களே அவர்களைப் பற்றி இந்துமதம் என்ன சொல்லுதுன்னு கொஞ்சம் சொல்றீங்களா?
அப்துல் அஜீஸ்
இந்துக்களான நீங்கள் இந்துமதத்தை பற்றி ஆழ விமர்சிக்கிறீர்கள். ஆனால் ஒரு முஸ்லீம் மட்டும் இஸ்லாமை விமர்சிக்கக்கூடாது என்பது போல என்னுடைய மறுமொழிகளை மட்டுறுத்துகிறிர்கள். முஸ்லீமாக பிறந்த அனைவரும் இஸ்லாமை பாராட்டியே ஆகவேண்டும் என்பது போலத்தான் உங்களது முற்போக்கு சொல்லித்தருகிறதா?
ரியாசுதீன்
அப்துர் றஹ்மான்,
சகோதரர் பெரோஸ்கானுக்கு நீங்கள் என்ன பதில் அளித்தீர்கள் என்று காட்டுங்கள். எந்த இடத்திலும் அவரது வலிமையான வாதங்களுக்கு பதில்களை நான் பார்க்கவில்லை. மேலும் அவர் தானாக எதையும் எழுதவில்லை. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் கற்றறிந்த அறிஞர்களது வார்த்தைகளையேயுமே அவர் மேற்கோள் காட்டுகிறார். நீங்கள் இப்படி நாஸ்திகர்களிடமும் காபிர்களிடமும் நல்ல பெயர் வாங்குவதற்காக திரிபுதாளத்தை செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்களெ உங்கள் வாக்குமூலமாக மேற்கண்ட பின்னூட்டத்தில் தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள். காபிர்களது நட்போ, அல்லது நாஸ்திகர்களது நட்புக்காகவோ திரித்து பேசுதல் தவறாகும். உள்ளே பேசிகொள்வோம். ஆனால் பகிரங்கமாக பேசவேண்டாம் என்று பலமுறை சொல்லியிருக்கிறீர்கள். இது அல்லாவைத்தவிர வேறொருவருக்கு அஞ்சுவதற்கு ஒப்பாகும். அல்லாஹ் போதுமானவன்

(ரலி) அறிவித்துள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) கூறினார்கள்.

"...இஸ்லாத்தின் பக்கம் அவர்களை அழைப்பீராக. அவர்கள் உமக்கு பதிலளித்தால் அதை ஏற்றுக்கொள்வீராக. பிறகு அவர்களிடமிருந்து (போர் புரிவதிலிருந்து) விலகிக்கொள்வீராக, பின்னர் அவர்களின் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து
முஹாஜிர்கள் வாழும் பிரதேசத்திற்கு ஹிஜ்ரத் செய்யும்படி அவர்களுக்கு அழைப்பு விடுப்பீராக. அவர்கள் இவ்வாறு செய்தால் பிறகு முஹாஜிர்களுக்கு
உரியதைப் போன்ற சாதகங்களும் பாதகங்களும் (உரிமைகளும் கடமைகளும்) அவர்களுக்கும் உண்டு (என்று கூறுவீராக) ..."(ஸஹீஹ் முஸ்லிம் 4294)

இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும் விஷயம் என்னவென்றால். அவர்கள் வாழும்
நிலப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து முஹாஜிர்கள் (ஹிஜ்ரத் செய்தவர்கள்) வாழும் நிலப்பகுதிக்கு ஹிஜ்ரத் செய்யாவிட்டால் முஹாஜிர்கள் பெற்றுள்ள
உரிமைகளை பெறமுடியாது. அதாவது இஸ்லாத்தின் நிலப்பரப்பில் வாழ்கின்ற முஸ்லிம்களின் உரிமைகளை பெறமுடியாது, ஆகவே இந்த ஹதீஸ் முஹாஜிர்கள் வாழும் நிலப்பகுதிக்கு ஹிஜ்ரத் செய்பவர்களுக்கும் ஹிஜ்ரத் செய்யாதவர்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை தெளிவாக விளக்குகிறது, ருல் முஹாஜிரீன் என்பது அல்லஹ்வின்தூதர்(ஸல்) காலத்தில் இஸ்லாத்தின் நிலப்பகுதியாக இருந்தது.
அதாவது தாருல் இஸ்லாமாக இருந்தது. இதற்கு அப்பால் இருந்த அனைத்து நிலப்பகுதிகளும் தாருல்குப்ர் என்று கருதப்பட்டது.
அப்துர் றஹ்மான்
சகோ. ரியாசுதீன். தங்கள் மீது அந்த ஒரே இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக. தாங்கள் இந்தளவிற்கு ஆவேசப் படுவதற்கு பதில் என் கருத்துகளை ஒரு முறை கவனமாக படித்திருக்கலாம். எல்லோருக்கும் புரிய வேண்டும் என்பதற்காகவே என்னால் முடிந்த அளவிற்கு எளிமையான தமிழில் எழுதுகின்றேன். சொல்லப் போனால் சாதாரணமாக முஸ்லிம்களால் பயன் படுத்தப்படும் சில அரபி வார்த்தைகளைக் கூட தமிழ் படுத்தியே எழுதுகின்றேன் (உதாரணம்: அஸ்ஸலாமு அலைக்கும் = தங்கள் மீது அந்த ஒரே இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக). இருந்தும் என் தமிழ் தங்களுக்கு புரியாதது ஆச்சர்யமே. என்னுடைய இந்த சாதாரண கருத்துக்களை நுனிப்புல் மேய்ந்து அதன் கருத்தை நேர் எதிர்மறையாக புரிந்துக் கொள்ளும் நீங்கள் – அதேபோல் தான் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் (நபிமொழிகள்), வேற்றுமொழியில் உள்ள கற்றறிந்த அறிஞர்களின் வார்த்தைகளையும் புரிந்துக் கொண்டிருப்பீர்கள் என்று தோன்றுகிறது. என்னுடைய கருத்துகளுக்கு மேலதிக விளக்கங்கள் தேவைப்பட்டிருந்தால் என்னிடம் கேட்டிருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு மிகக் கேவலமான அவதூறு சேற்றை என்மீது வீசி இருக்கின்றீர்கள். இதுபோல் செய்வதற்கு தாங்கள் குறிப்பிட்டுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும், கற்றறிந்த அறிஞர்களின் வார்த்தைகளிலும் அனுமதி இருக்கின்றதா? நல்லது. நான் தங்களின் ஒவ்வொரு அவதூறுக்காக பதிலளிக்கின்றேன். 1. நான் காபிர்கள் மற்றும் நாத்திகர்களின் நட்பிற்காக (இல்லாததை உள்ளது என்றும் – உள்ளதை இல்லை என்றும்) திரிபுதாளம் செய்வதாக கூறியுள்ளீர்கள். ஒரு உண்மையான முஸ்லிமான எனக்கு பொய் சொல்வதற்கோ அல்லது திரிபுதாளம் செய்வதற்கோ அனுமதியில்லை. நம்முடைய ஒவ்வொரு அசைவுகளும் சக மனிதர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் படைத்த இறைவன் (நம் உள்ளத்தில் உள்ளவை உட்பட) அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. அவ்வாறு நம்பவில்லையானால் நானும் (இஸ்லாத்தின் கொள்கைகளை விட்டு விட்டதால்) இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களில் ஒருவனாகி விடுவேன். அவ்வாறு ஆகிவிட்ட நிலையில் மீண்டும் எதற்காக நீங்கள் குறிப்பிட்ட காபிர்கள் மற்றும் நாத்திகர்களின் நட்பை பெற முயற்சிக்க வேண்டும்? இதை நீங்கள் சிந்தித்திருக்க வேண்டாமா? மேலும் இஸ்லாம் மிகவும் வெளிப்படையானது. குர்ஆன் உலக மாந்தர்கள் அனைவருக்காகவும் அருளப்பட்டதே அல்லாமல் முஸ்லிம்கள் மட்டும் ரகசியமாக வைத்துக் கொண்டு பின்பற்றுவதற்கு அல்ல. இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை. நான் எனது பின்னூட்டத்தில் “இது சம்பந்தமாக சகோதரருக்கு மேலும் விவாதிக்க வேண்டுமெனில் ‘அந்த தலைப்பில்’ பகிரங்கமாக என்னுடனோ (நிபந்தனைக்குட்பட்டு) அல்லது பொது வாழ்வில் முழுமையாக ஈடுபட்டுள்ளவரிடமோ விவாதிக்கலாம். ஆனால் இங்கு அல்ல. ஏனெனில் இங்கு பேசுபடு பொருள் அதுவல்ல.” என’று மிகத் தெளிவாக ‘பகிரங்கமாக’ என்ற வார்த்தையையும் சேர்த்து தானே எழுதியிருக்கின்றேன். இந்த ‘பகிரங்கமாக’ என்ற வார்த்தைக்கு எந்த அகராதியிலிருந்து – உள்ளே ரகசியமாக பேசிக் கொள்வோம். பகிரங்கமாக பேச வேண்டாம் – என்று அர்த்தம் கண்டீர்கள்? தாங்களும் உபயோகித்துள்ள ‘பகிரங்கமாக’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன? ஒருமுறை இக்கட்டுரையின் தலைப்பை படித்துப் பாருங்கள். அது இஸ்லாம் பற்றியம் ஜனநாயகம் பற்றியுமா விவாதிக்கிறது? இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள் பற்றியல்லவா விவாதிகிறது. இந்த பேசுபடு பொருளுக்கு (ஒருவேளை இவ்வார்த்தை தங்களுக்கு புரியவில்லையோ?) சற்றும் சம்பந்தமில்லாமல் எதையும் இக்கட்டுரையின் பின்னூட்டத்தில் எழுத வேண்டாம். அவ்விஷயம் சம்பந்தமான தலைப்பில் ‘பகிரங்கமாக’ விவாதிக்கலாம் என்று தானே கூறி இருக்கின்றேன். பிறகு ஏன் என்மீது அவதூறு சொல்கின்றீர்கள்? 2. // அப்துர் றஹ்மான், சகோதரர் பெரோஸ்கானுக்கு நீங்கள் என்ன பதில் அளித்தீர்கள் என்று காட்டுங்கள்.// என்று கேட்கின்றீர்கள். மேற்கண்ட எனது பின்னூட்டத்தில் ‘பெரோஸ்கானுக்கு நான் பதில் அளித்துள்ளேன்’ என்று எங்கே குறிப்பிட்டுள்ளது? பிறகு ஏன் இந்த அவதூறு?
// மேலும் அவர் தானாக எதையும் எழுதவில்லை. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் கற்றறிந்த அறிஞர்களது வார்த்தைகளையேயுமே அவர் மேற்கோள் காட்டுகிறார்.// என்று கூறியுள்ளீர்கள். சரிதான். நீங்கள் மற்றவர்களின் கருத்துக்களை நுனிப்புல் மேய்கின்றீர்களே தவிர அக்கருத்துக்கள் சரியா தவறா என்றோ அல்லது குறைந்தபட்சம் அக்கருத்துக்கள் எதற்காக எந்த சூழ்நிலைக்காக கூறப்பட்டுள்ளது என்றோ சிந்தித்திருந்தீர்கள் என்றால் நான் எனது முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பட்டப்படி சில அறியாமை முஸ்லிம்களுக்கு தாங்களே மிகச் சிறந்த உதாரணமாக இருந்திருந்திருக்க மாட்டீர்கள்.

(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும். – (அல்குர்ஆன் 38:43)

அல்லாஹ்வினால் அருளப் பட்ட எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாத குர்ஆனின் வசனங்களையே ஆராய்ந்து பார்க்குமாறு அல்லாஹ் கூறியுள்ளானே. அவ்வாறு இருக்கையில் மற்ற அனைத்தும் எம்மாத்திரம். அனைத்தையும் நாம் சிந்தித்து ஆராய வேண்டாமா? சிந்திப்பதைக் கூட மார்க்க கடமையாக ஆக்கியுள்ள பாரம்பரியத்தில் வந்த எனது சகோதரரே, மற்றொரு தளத்திலிருந்து எதையும் copy & paste செய்வதற்கு முன் நன்கு சிந்தித்து செயல் படுங்கள். நான் ஏதாவது தங்களை தவறாக கூறியிருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள்.

எனவே எனதருமை மனிதகுல சகோதரர்களே, நானும் என்போன்ற பெரும்பான்மை முஸ்லிம்களும் – இஸ்லாத்தினைப் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் மற்ற மாற்று மத சகோதரர்களிடம் புரிந்துணர்வை ஏற்படுத்தி நாம் அனைவரும் மனிதர்களாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் முயற்சிக்கின்றோம். இருப்பினும் சில முஸ்லிம்களின் தவறான விளக்கங்களைக் கொண்டு – இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீதான உங்களது காழ்ப்புணர்வை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அதுபோல் இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வை ஏற்படுத்தி இரத்த ஆற்றை ஓட்டி அதன் மூலம் மற்ற மக்களின் மீது தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள துடிக்கும் 'தன்னைத் தானே உயர்த்திக் கொண்ட' இந்துத்துவ தீவிரவாதிகள் – அவர்கள் கூறும் பொய்களுக்கும் வரலாற்றுப் புரட்டுகளுக்கும் ஆதாரமாக இத்தகைய சில முஸ்லிம்களின் வார்த்தைகளையே ‘மொட்டையான ஆதாரங்களாக’ மேற்கோள் காட்டுகின்றார்கள். எனவே யாராக இருந்தாலும் மேம்போக்காக எந்த முடிவுக்கும் வராமல் அன்பையும் சகோதரத்துவத்தையும் நீதியையும் நேர்மையையும் போதிக்கும் இஸ்லாத்தில் இப்படியெல்லாம் இருக்காது என்றும் – அது சம்பந்தமான விளக்கங்களை சகோதர முஸ்லிம்களிடம் கேட்டு தெளிவடையுமாறும் கேட்டுக் கொள்கின்றேன். என்றால் தான் இந்த உலகத்தினை நாம் ஒரு அமைதிப் பூங்காவாக கட்டமைக்க முடியும்.

(குறிப்பு: மூன்று பேர்கள் இருக்கும் இடத்தில் இரண்டு பேர்கள் மூன்றாமவருக்கு தெரியாத மொழியில் அந்த மூன்றாமவரைப் பற்றி சாதாரணமாக பேசினால் கூட அதை அவர் தவறாகத் தான் விளங்கிக் கொள்வார். எனவே தான் நான் அனைத்தினையும் தமிழில் மொழிபெயர்த்தே எழுதுகின்றேன். அதைப் போலவே இங்கு சகோ. ரியாசுதீன் பயன் படுத்தியிருக்கும் சில அரபி வார்த்தைகளுக்கும் பொருள் எழுதுகின்றேன்.
1. காபிர் - இஸ்லாமிய கொள்கைகளின் மீது நம்பிக்கையில்லாத - முஸ்லிம் அல்லாத மற்றவர்களை குறிக்க பயன்படும் பொதுவான வார்த்தை. அதாவது ஆங்கிலத்தில் Non-Muslim என்று கூறலாம். இது மற்றவர்களை இழிக்கவோ பழிக்கவோ பயன் படுத்தப் படும் சொல் அல்ல. சாதாரணமான சொல் தான். இதைப் பற்றி பெரும்பாலான மாற்று மத சகோதரர்கள் தவறாகவே விளங்கி வைத்திருக்கிறார்கள். அல்லது விளங்க வைக்கப் பட்டிருக்கின்றார்கள்.
2. சகோதரர் சம்பந்தமேயில்லாமல் குறிப்பிட்டுள்ள அந்த ‘பாதி’ நபிமொழியில் வரும் ‘தாருல் இஸ்லாம்’ என்றால் இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் படி நேர்மையாகவும் நியாயமாகவும் ஆட்சி நடைபெறும் பகுதிகளைக் குறிக்கும். ‘தாருல் குப்ர்” என்றால் அவ்வாறு இஸ்லாமிய ஆட்சி நடைபெறாத இடங்களை பொதுவாக குறிப்பிடும்.
3. ஹிஜ்ரத் – முஸ்லிம்களால் தங்கள் இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்ற முடியாமல் மற்றவர்களால் அச்சுறுத்தப் படும் போது தங்கள் கொள்கைகளை காப்பாற்றிக் கொள்ள தனது அத்தனை சொத்துக்களையும் விட்டு விட்டு வேறு பாதுகாப்பான இடத்திற்கு செல்வதை குறிக்கும். அவ்வாறு ஹிஜ்ரத் செய்பவர்கள் முஹாஜிர்கள் எனப்படுவர். இவையெல்லாம் சாதாரண அரபி வார்த்தைகள் தானே தவிர எந்த சங்கேத வார்த்தைகளம் அல்ல. தவறான அர்த்தம் கொண்ட வார்த்தைகளும் அல்ல. அர்த்தம் விளங்கிக் கொண்டால் தவறான புரிதலுக்கு வாய்ப்பிருக்காது என்பதாலேயே குறிப்பிடுகின்றேன். எனது வெளிப்படையான நோக்கம் அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன்.
ரியாசுதீன்
அப்துர் றஹ்மான்
உங்களுக்கு சொல்ல எனக்கு இரண்டு வசனங்கள்தாம் உண்டு. பிறகு உங்களுடைய நிலைப்பாட்டை சொல்லுங்கள்.

5:51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்

4:139. இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது.

அல்லாஹ் போதுமானவன்.
அப்துர் றஹ்மான்
சகோ. ரியாசுதீன். தங்கள் மீது அந்த ஒரே இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக. நான் மீண்டும் மீண்டும் தங்களிடம் ஒன்றை மட்டும் கூறிக் கொள்கின்றேன். இங்கு இக்கட்டுரை சம்பந்தமான விசயங்கள் பற்றி மட்டும் விவாதியுங்கள் என்று. தாங்கள் குறிப்பிட்டுள்ள வசனங்களுக்கும் இக்கட்டுரைக்கும் சிறிதும் சம்பந்தமில்லை என்றாலும் ஒரு சில விளக்கங்களை மட்டும் தங்களுக்கு தர விரும்புகின்றேன். நான் எவ்விடத்திலும் முஸ்லிம்கள் தங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டு மற்ற முஸ்லிமல்லாதவர்களை தங்களுக்கு பாதுகாவலர்களாக நியமித்துக் கொள்ள கூறவேயில்லை. மற்ற மதத்தினருடன் புரிந்துணர்வை ஏற்படுத்தி சகோதரத்துவத்துடன் வாழவும், இந்துத்துவ தீவிரவாதிகளின் சதிக்கு பலியாகி விடவேண்டாம் எனவும் தான் கூறுகின்றேன். மேலும் ஒரு சிறிய உதாரணத்தையும் கூறுகின்றேன். இந்தியர்களாகிய நாம் சீனர்களையோ அல்லது மற்றவர்களையோ பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்வோமென்றால் அதை அறிவுடைமை என்று எவரும் கூற மாட்டார்கள். அதே சமயம் அவர்களையும் சக மனிதர்கள் என்று பார்க்காமல் எதிரிகளாக மட்டும் பார்ப்போமானால் அது மனிதத் தன்மையே கிடையாது. என்னுடைய முந்தைய பின்னூட்டத்தின் // நாம் நம் இந்திய தேசத்தை ஒரு வலிமையான வல்லரசாக கட்டமைத்து இன்னும் அந்த வலிமையைக் கொண்டு மற்றவர்களை அடக்கி ஒடுக்காமல் நாமும் வாழ்ந்து இந்த உலகத்தில் உள்ள மற்ற அனைத்து மாந்தர்களையும் வாழ வைக்க முடியும்.// என்ற வரிகளையும் படித்துக் கொள்ளுங்கள். மேலும் குர்ஆனின் வசனங்கள் அனைத்தும் வரிசைக் கிரமமாக இறக்கப் படவில்லை. அதன் சில வசனங்களை எதற்காக – எந்த சூழ்நிலைக்காக இறக்கப் பட்டது என்பதை மற்ற வசனங்களை வைத்து தான் புரிந்துக் கொள்ள வேண்டும். குர்ஆனில் சகோதரத்துவத்தையும், அமைதியையும் வலியுறுத்தும் ஏராளமான வசனங்கள் இருக்கின்றன. அவற்றோடு நான் கீழே குறிப்பிட்டுள்ள வசனத்தையும் பார்த்து விட்டு தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்து கொள்ளுமாறு கூறி நேரத்தை கருத்தில் கொண்டு இத்தோடு முடித்துக் கொள்கின்றேன். எல்லாவற்றையும் அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.
EBU PARIS
ADVAANI KOVAI VARUVATHARKKU MUN VARAVAENDAAM ENA ADVAANIKKU THAGAVAL KODUTHATHU YAAR?JAYALAITHAA. KONNDU VAIKKA SONNATHUM JAYAA KAAPPAATRIVITTATHUM JAYAA. IRANTHTHATHU APPAAVIGAL.
venkatesh
இப்படி உலக்ம் முழுவது இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் வன் முறை சமபவங்களில் ஈடுபடும் போது, அனைத்து நாடுகளுமே இஸ்லாமியர்களை சற்று சந்தேக கண் கொண்டு பார்ப்பதில் என்ன தவறு,

நான் அனைத்து இஸ்லாமியர்களும் பயுங்கரவாதத்தில் ஈடுபடுவதில்லை,ஆனால் ஒரு சிலர் செய்தாலும்,அது அந்த மொத்த மதத்தை சார்ந்தவரை பாதிக்கிறது,
நாட்டின் பாதுகாப்பு கருதி,காவல் துறையினர் சில சமயங்களில் சந்தேகத்தின் பேரில் சில நிரபராதி முஸ்லீம்களையும் கைது செய்ய நேரிடுகிறது, இதை தவிர்க்க முடியாது, அதற்காக இந்திய அரசு இஸ்லாமியருக்கு எதிராக் செய்லபடுகிறது என்று பேசுவது போலி முற்போக்கு சிந்தனை,
venkatesh
தமிழர்கள் மீதான் ஒடுக்கு முறை,காஷ்மீர் மக்கள் மீதான் ஒடுக்குமுறை என்று இனரிதியாக பார்த்து அதை எதிர்ப்பது தான் முற்போக்குசிந்தனை,
thamilansheik
vanakkam

Keetru.com il pothuvana karuthukalai sonnerkal anal sila madhavathikal ithanaium thavaraga purinthu melum melum INTHU THAMILAN, MUSLIM ena mari mari mudintha oru visayathil athigam akkari kattum makkal yen ezha piratchanaiyil entha amaippum neradiyaga ilangai sellavillai muthalil nam manithan piragu than MATHAM, MOZHLI ellam yenedral pala andukalukku munnal moliye illai irunthalum manithan valthan, netraya munnorkal than saathi matham ena pirithu vittargal pavam avarkalukku enna therium anal indraya samuthayathil eththanai arivial valarchi innum nam yen muttal thanamaga valavendum satru yosikkavum manithaaa.......................
sheik,
tirupur..
zobra
iஇஸ்லாமியர்கள் என்றால் எல்லோரும் தீவிரவாதிகள் என்ற தவறான எண்ணம் மக்களிடையே இருப்பது உண்மைதான். ஆனால் இதற்க்கு காரணம் இஸ்லாமியர்கள்தான் ! ஒரு பிரிவு இஸ்லாமியர்கள் மற்றொரு பிரிவு இஸ்லாமியர்கள் அவர்கள் மசூதியில் தொழுகை நடத்தும் பொழுது அவர்களை கண்மூடித்தனமாக சுட்டு வீழ்த்தும் *** இஸ்லாமிய சமூகத்தில் மட்டும் தான் இருக்கிறது. இந்து மதத்தில் எவ்வளவோ கோளாறுகள் இருக்கின்றன. ஆனால் சிவன் கோயில் பக்தர்கள் பெருமாள் கோயில் பக்தர்களை சுட்டு வீழ்த்துவதில்லை.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.