கைகால் முளைத்த நாட்கள்
வர்ணம் பூசிய சுவரை விடவும்
அழகாக கைவீசி
வருகிறது அனுதினமும்...

எல்லா நாட்களும் காரசாரமாய்
நாட்குறிப்பின் பக்கங்களில்
பூ வரைந்து அழகுபடுத்தும் அளவில்
நகர்வதில்லை...

நிரப்பப்படாமல் வெள்ளையாய்
புரட்டியதும் கறைபடிந்த
தேதியைக் காட்டியவாறு
கிழித்து வீசவும் மனமின்றி
மனதின் ரணங்களாய்
கண்ணீர்த் துளிகளை
காவு வாங்கும் அளவில்
மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்
அந்நாட்கள்
கீறல் விழுந்த நாட்கள் என்று...

- நல முத்துகருப்பசாமி

More articles by நல முத்துகருப்பசாமி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.