ஊரின் தாகம் தீர்க்கக்
கால்வாய் வெட்டுகையில்
தன் தாகம்
தீராமல் மாண்டவர்கள்

தான் விளைவித்த
அரிசியை
உண்ண வழியின்றி
பட்டினியில்
செத்தவர்கள்

சாலை சமைப்பதில்
ரயில் தடங்கள் அமைப்பதில்
தடம் தெரியாமல்
போனவர்கள்

ராஜகாதலுக்கான
நினைவுச் சின்னம்
கட்டுகையில்
மடிந்து
தன் காதலியைத்
தவிக்கவிட்டவர்கள்

கம்பீரமான
கற்கோயில் எழுப்புதலில்
தவறி விழுந்து
சமாதியானவர்கள்

நிலத்தை மாற்றியவர்களின்
நினைவுகளை
அதே நிலத்தில்
புதைத்துவிட்டு
மாற்றி எழுதப்படுகிறது
வேறொரு வரலாறு

- ஆலங்குடி வெள்ளைச்சாமி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.