பரம ஏழை
இவன் திருடியிருப்பான்
பரம்பரைப் பணக்காரன்
எதுக்குத் திருடுவான்?
வெள்ளையாய் இருப்பவன்
பொய் சொல்ல மாட்டான்
என்பது போல்
கொள்ளையடிப்பதிலும்
நம்பிக்கைகள்
திருடியதால் தான்
அவன் பணக்காரனாய் இருப்பதையும்
திருடத் தெரியாததால்
இவன் ஏழையாய் இருப்பதையும்
தெரிந்துகொள்ளாமல்...
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
திருட்டு
- விவரங்கள்
- சேயோன் யாழ்வேந்தன்
- பிரிவு: கவிதைகள்