“பலவீனம் அதிசயங்களை நம்புவதில் அடைக்கலம் பெற்றுவிடுகிறது” என்றார் மார்க்ஸ். மார்க்சின் கூற்று ஓர் அறிவியல் உண்மை. இதற்கான உதாரணத்தை நாம் தமிழகத்திலேயே காண்போம். வடிவேல் ஒரு படத்தில் காலை எழுந்ததும் தன் தாயையும், தந்தையையும் வணங்கி உலகில் அவர்களை விட சிறந்த கடவுள் யாரும் இல்லை என்கிற பயபக்தியுடனும், அளவிலா அன்புடனும் பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசி வாங்கிக்கொண்டு வேலைக்குச் செல்வார். மாலை வேலை முடிந்த பிறகு புல் மப்பை ஏற்றிக்கொண்டு வீட்டிற்குள் நுழையும் போதே கடவுள்களான தன் தாயையும், தந்தையையும் கெட்ட கெட்ட வார்த்தைகளைப் போட்டு அர்ச்சனை செய்து கொண்டே நுழைவார். இவருக்கு பயந்து கொண்டே அவருடைய அப்பா ஆறு மணிக்கெல்லாம் முழுக்க போர்த்திக்கொண்டு படுத்துவிடுவார். திட்டிக்கொண்டே அப்பாவை எழுப்பி நல்லா சாத்து சாத்தென்று சாத்துவார். அம்மாவையும் அப்பாவையும் நன்றாக பந்தாடிவிட்டு கடைசியாக தான் ஏன் அவ்வாறு அடித்தேன் என்பதை அழுதுகொண்டே விளக்குவார். ஆனால் அடியும் அரவணைப்பும் அன்றோடு முடியாது. அடுத்த நாள் காலை அளவிலா அன்பும், மாலை அளவிலா அடியும் கிடைக்கும். இது தினமும் தொடரும். 

அதே போலத்தான் சில சமயங்களில் தமிழர்கள் தான் உலகிலேயே சிறந்தவர்கள் என்றும், அறிவாளிகள் என்றும், மூத்தகுடிகள் என்றும் புகழ்ந்துவிட்டு பிறிதொரு சமயத்தில் தமிழர்கள் தான் உலகிலேயே அடி முட்டாள்கள், சொரணையற்றவர்கள், ஏமாளிக்கூட்டம் என்று தமிழ் மக்களை கண்டபடி புகழ்வதும் கண்டபடி ஏசுவதுமாக இருக்கும் ஒரு கூட்டம் ’தமிழ் தேசியம்’ என்கிற அதிசயத்தை நிகழ்த்திக்காட்டுவதற்காக அந்த சூடு, சொரணையற்ற மக்களைத் திட்டித்திட்டி திரட்டும் பகீரத முயற்சியில் பல ஆண்டு காலமாக ஈடுபட்டு வருகிறது. முதிர்ச்சியின் கிழட்டுத்தன்மையும் அதன் விளைவாக பலவீனமும் அடைந்துவிட்ட ’தமிழ்தேசியம்’ பல அதிசயங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. சாதி உணர்வுள்ள தமிழன் இன உணர்வுள்ளவனாக மாறி விடுவான் என்றும், பிரபாகரன் மார்க்சியவாதி என்று ’மார்க்சியவாதிகள்’ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், “பிரபாகரன் மீண்டும் உயிர்த்தெழுவார்” என்றும் காத்துக்கொண்டிருக்கிறது. அதிசயங்கள் நிகழுமா? நிகழும் ஆனால் நிகழாது! சாதி உணர்வுள்ள தமிழனுக்கு வர்க்க உணர்வை ஊட்டலாம் ஆனால் உயிரோடிருந்தாலும் பிரபாகரனை மார்க்சியவாதியாக்க முடியாது.

இன்று தமிழ்நாட்டிலுள்ள பல வண்ண தமிழ் தேசிய கற்பனாவாத அரசியலின் மயக்கத்தில் ஆழ்த்தப்பட்டுள்ள சில இளைஞர்கள் கற்பனாவாத தத்துவத்திற்கேற்பவே ஈழமும், தனித் தமிழ்நாடும் தானாகவே அமைந்து விடும் என்கிற கற்பனை மயக்கத்திலிருக்கும் இந்த சூழலில், தத்துவ அடித்தளமே இல்லாத தமிழ் தேசியத்தின் ’வீரம்’ என்ன என்பதை இங்கு பார்ப்போம். தமிழகத்தில் பல பல வண்ணங்களில் ஆவிகளாக மட்டுமே உலா வரும் தமிழ் இனவாதிகள் உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்காக இயங்கும் புரட்சிகர அமைப்புகளான எம் மீது சில நேர்மையற்ற ’விமர்சனங்களை’ வைக்கிறார்கள். தோழர் மருதையன் பார்ப்பனர், பார்ப்பனத் தலைமை, புலிகளை எதிர்ப்பவர்கள், தமிழ் தேசியத்தை எதிர்ப்பவர்கள், இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் என்கிற சில ’நேர்மையான’ விமர்சனங்களை வைக்கிறார்கள். இந்த அக்கப்போர்களுக்கு ஆயிரம் முறை பதிலளித்த பிறகும் ‘இல்ல, இல்ல மொதல்ல இருந்து வா’ என்கிற ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

எனினும் இந்த மொக்கை விமர்சனங்களுக்கு மீண்டும் ஒரு முறை ஒரு சில வரிகளில் மட்டும் பதிலளித்துவிட்டு மேலே செல்வோம்.

எங்களைப் பொறுத்தவரை தோழர் மருதையன் பார்ப்பனர் இல்லை, அவர் ஒரு கம்யூனிஸ்ட் அவ்வளவே. மற்றபடி ஒரு நபரின் சாதியை கொண்டு அவருடைய நடவடிக்கைகளை அளக்கும் கண்ணோட்டம் தான் பார்ப்பனீய கண்ணோட்டம். ஒருவரின் குணாதிசயங்கள், நடவடிக்கைகள் எல்லாம் பிறப்பின் அடிப்படையில் தான் அமையும் என்று பார்ப்பனீயம் தான் வரையறுத்து வைத்துள்ளது. இப்போது பார்ப்பனீயத்தின் இளைய பங்காளிகளாகி விட்ட தமிழ்பார்ப்பனியவாதிகளும் அதையே சொல்லி வருகிறார்கள். உங்கள் பார்வையில் மருதையன் பார்ப்பனர் எனில் தலித் மக்களின் பார்வையில் தமிழ்தேசியம் பேசும் நீங்கள் எல்லோரும் ஆதிக்க சாதி வெறியர்கள் தான் ! இதை ஒத்துக்கொள்வீர்களா ?

இரண்டாவதாக புலிகளை ம.க.இ.க ஏன் ஆதரிக்கவில்லை என்கிறார்கள். ஏன் ஆதரிக்க வேண்டும்? ஈழத்தின் விடுதலைக்காக நின்ற மார்க்சிய லெனினிய தோழர்களையே கொன்றொழித்தார்களே அதற்காக ஆதரிக்க வேண்டுமா? இல்லை ராஜீவ் கொலையை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்த எங்கள் மீதே அந்த கொலைப் பழியை போட்டு துரோகம் செய்யப் பார்த்தார்களே அதற்காக ஆதரிக்க வேண்டுமா? அல்லது மக்களையே கேடயமாக்கி கொன்றார்களே அதற்காகவா அல்லது இறுதி நாட்களில் தப்பித்து ஓட நினைத்தார்களே அதற்காகவா? எதற்காக ம.க.இ.க புலியை ஆதரிக்க வேண்டும்?

ம.க.இ.க இடஒதுக்கீட்டை எதிர்க்கிறது என்கிறார்கள். உண்மை தான், ஆனால் யாருக்கு? தமிழ்தேசியவாதிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு தான் இடஒதுக்கீட்டை கொடுக்கவே கூடாது என்று ம.க.இ.க தீவிரமாகவும், வன்மையுடனும் எதிர்க்கிறது. ஆனால் ’ஒடுக்கப்பட்ட மக்களுக்கு’ இடஒதுக்கீடு கிடைப்பதை நாம் என்றைக்கும் எதிர்க்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் இடஒதுக்கீடு ஒரு முழுமையான தீர்வு இல்லை என்றும் சொல்கிறோம். ஆனால் தமிழ் தேசியப் பித்தலாட்டக்காரர்கள் ம.க.இ.க வின் இடஒதுக்கீடு பற்றிய இந்த நிலைப்பாடு தமக்கும் தமது சாதிக்கும் எதிராக இருப்பதால் அதை திரித்து, வெட்டி, சுருக்கி ம.க.இ.க இடஒதுக்கீட்டுக்கு எதிரானது என்று சொல்லி தலித் மக்களையும் தம்மோடு சேர்த்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். ஆனால் பாவம் ஒடுக்கப்பட்ட மக்கள் என்றும் தம்மை தமிழராய் எண்ணியதுமில்லை. இந்த தமிழ்த்தேசிய கனவான்களும் அவர்களைத் தன் உறவாய் ஏற்பதுமில்லை. எம்மை பற்றிய இந்த அவதூறுகளுக்கு நாம் பல முறை பதிலளித்து விட்டோம். இருந்தும் பாசிச ஜெயலலிதாவிடம் கூட நேர்மையான சந்தர்ப்பவாதத்தைக் காணும் இந்த நேர்மையற்ற சந்தர்ப்பவாதிகள் மீண்டும் மீண்டும் அதே அவதூறுகளை கொஞ்சமும் வெட்கமின்றி கக்கி வருகிறார்கள்.

தமிழ் தேசியம் என்பதன் ஆன்மாவே பார்ப்பனியம் தான். ஒரு இனம் என்கிற வரையறையின்படி முழுமை அடையாத தமிழர்களை, சாதிப் பெருமை பாராட்டும் நிலப்பிரபுத்துவ அடையாளத்தை மகிழ்ச்சியுடன் சுமக்கும் தமிழர்களை, அவர்களின் மனம் கோணாதபடி அணி திரட்டி இவர்கள் தமிழ் தேசியம் அமைப்பார்களாம். தமிழனுடைய சாதிப்பற்றை ஒழிக்க விரும்பினால் தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கும் ஆதிக்க சாதி தமிழனுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு இவர்கள் இடஒதுக்கீடு கேட்பார்களா? ஒடுக்கும் ஆதிக்க சாதிக்காரனுக்கு இடஒதுக்கீடு தரக்கூடாது என்று சொல்கிற ம.க.இ.க வை எதிர்ப்பார்களா? ஆதிக்க சாதிக்காரனுக்கு இடஒதுக்கீடு கேட்பது மட்டுமல்ல பார்ப்பன இந்து மதத்தை ஒழிக்காமலேயே தமிழனுடைய விடுதலையைப் பற்றி பேசுகிற யோக்கியர்களும் கூட இந்த தமிழினவாத கூட்டத்தில் உண்டு.

மேலும் கற்பிலிருந்து பூ, பொட்டு, தாலி என்று அனைத்திலும பார்ப்பனிய பண்பாடே தமிழ் பண்பாடு. கண்ணகியின் கற்பு உயர்ந்தது, பூ, பொட்டு தமிழர்களின் அடையாளம், தாலி (சிலர் மாறுபடலாம்) தமிழ் பெண்ணின் அடையாளம் என்பது தான் இவர்களின் உயர்ந்த ’தமிழர் பண்பாடு.’ மொத்தத்தில் பார்ப்பனியத்திற்கு முற்போக்கு சுண்னாம்பு அடித்தால் அது தான் தமிழ் பார்ப்பனியம்.

தமிழ், தமிழ் என்று வாய் கிழிய பேசும் தமிழினவாதிகள் அனைவரும் தமிழ் நாட்டில் தான் இருக்கிறார்கள். ஆனால் தமிழுக்காக இவர்கள் ஒன்றையும் செய்தது கிடையாது. அப்படி ஏதேனும் இருந்தால் அந்த சாதனைப் பட்டியலைத் தரட்டும், பார்க்கலாம். ஆனால் சர்வதேசியம் பேசும் ம.க.இ.க தமிழுக்காக செய்தது ஏராளம். திருவையாற்றில் பார்ப்பன கூட்டம் தமிழை நீச மொழி என்று சொல்லி தமிழில் பாட மறுத்ததையொட்டி திருவையாறு உற்சவத்திற்குள் புகுந்து பறையிசை முழங்கி ’தமிழில் பாடு இல்லையேல் தமிழ்நாட்டை விட்டு ஒடு’ என்று பார்ப்பன கும்பலின் மொழி வெறித் தீண்டாமையை தமிழகம் முழுவதும் அம்பலமாக்கியது ம.க.இ.க. தான். இதை தமிழினவாதிகள் செய்திருக்க வேண்டியது தானே, யார் தடுத்தார்கள், ஏன் செய்யவில்லை ?

அதன் பிறகு பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து ’அனைவரும் இந்து, இந்துவே ராமர் கோவிலை கட்ட வா’ என்று தமிழ் மக்களையும் இந்து என்று கூறி கரசேவைக்கு அழைத்த பார்ப்பன கும்பலை அம்பலமாக்கும்வகையில் ’எல்லோரும் இந்து என்றால் எங்களையும் கருவறைக்குள் விடு’ என்கிற முழக்கத்துடன் சேரி மக்களையும்,பெண்களையும் அணிதிரட்டிக் கொண்டு திருவரங்கம் கருவறைக்குள் நுழைந்தோம். தமிழகம் முழுவதும் இது விவாதத்தை கிளப்பியது. தமிழுக்காக இந்த நடவடிக்கையை செய்ய வேண்டாம் என்று தமிழினவாதிகளை தடுத்தது யார், ஏன் செய்யவில்லை? இதை செய்யாதது மட்டுமல்ல தமிழ் தேசப் ‘பொதுவுடைமை’க் கட்சி என்கிற ஒரு தமிழ் தேசியக் கட்சி பார்ப்பன தேசியத்தின் நாயகனான ‘இராமனை தமிழ்ப் பழங்குடி’ என்று கூறி பெருமை கொள்கிறது. பார்ப்பன தேசியத்தின் உதவியோடு தான் தமிழ் தேசியம் அமைக்கப்போகிறார்கள் போலிருக்கிறது.

பாசிச ஜெயல்லிதாவின் பண்பாட்டு ரீதியான பார்ப்பனமயமாக்கல் திட்டப்படி நாட்டார் கோவில்களில் ’கிடா வெட்டத் தடைச்சட்டம்’ கொண்டு வந்த போது எந்த தமிழ் தேசியவாதியும் மீசையை முறுக்கிக்கொண்டு, அருவாளைத் தீட்டிக்கொண்டு போய் கிடாவை வெட்டவில்லையே ஏன்? ம.க.இ.க தானே தமிழ் மக்களிடம் போய் ’சாமி பேச்சக் கேப்பியா மாமி பேச்சக் கேப்பியா’ என்று கிடாவை வெட்டியது.

அதன் பிறகு பார்ப்பன கும்பல் திருச்சியில் பெரியார் சிலையை இடித்து தள்ளியபோது உடனே இராமன் உருவப்படத்தை செருப்பால் அடித்து அய்யா சிலையின் காலடியில் இழுத்து வந்து போட்டது யார்? அதையும் நாங்கள் தானே செய்தோம். அதை ஏன் நீங்கள் செய்யவில்லை, நாங்கள் செய்து விட்டோம் என்பதாலா?

தில்லையில் நடராசனை விட பெரிய ஆட்டம் காட்டிய திமிர் பிடித்த தீட்சித பார்ப்பனக் கும்பலின் குடுமியை பிடித்து ஆட்டி பத்து ஆண்டுகளாக விடாப்பிடியாக போராடி தமிழுக்கு உரிய மரியாதையை பெற்றுத்தந்தவர்கள் யார்? தமிழை சிற்றம்பல மேடையில் ஏற்றியவர்கள் யார்? தமிழ், தமிழ் என்று மந்திரம் பாடும் நீங்களா இல்லை நாங்களா? நீங்கள் ஏன் இதை செய்யவில்லை. சிதம்பரம் எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாதா?

மேற்கண்ட நடவடிக்கைகள் சில தான். இது போன்று இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இதையெல்லாம் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் தேசியம் பேசும் கற்பனாவாதக் கூட்டம் செய்யவில்லை மாறாக சோசலிசம், கம்யூனிசம், சர்வதேசியம் பேசும் ம.க.இ.க தான் செய்துள்ளது. இதையெல்லாம் ஏன் தமிழ்த் தேசியவாதிகள் செய்யவில்லை இந்த கேள்விகளுக்கெல்லாம் அவர்களிடம் நேர்மையான பதில் இருக்கிறதா? இருக்காது, சந்தர்ப்பவாதத்திலேயே நேர்மையான சந்தர்ப்பவாதம் நேர்மையற்ற சந்தர்ப்பவாதம் என்று வகை பிரிக்கும், என்ன வகை என்றே தெரியாத சந்தர்ப்பவாதிகளிடம் இதற்கெல்லாம் பதில் இருக்காது. மாறாக அவதூறுகள் தான் இருக்கும்.

தற்போது எமது அமைப்பை பற்றியும், தோழர்களைப் பற்றியும் அவதூறைக் கிளப்ப ’அதிரடியான்’ என்கிற, தன்னை யார் என்று அறிவித்துக்கொள்ளாத நபர் கிளம்பியுள்ளார். அவர் எம்மைப் பற்றி தொடர்ச்சியாக எழுதப்போகிறாராம். அதாவது அம்பலப்படுத்தப்போகிறாராம். ”மருதையன், பார்ப்பனத்தலைமை, புலியை எதிர்ப்பவர்கள், தமிழ் விரோதிகள், இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள்” என்பதைத்தவிர இவர்களிடம் எம்மைப் பற்றி ‘அம்பலப்படுத்த’ ஒன்றும் இல்லை. குருட்டுத்தனமான புலி ஆதரவு, குருட்டுத்தனமான ம.க.இ.க எதிர்ப்பு நிலையிலிருக்கும் அதிரடியான் போன்றவர்களிடமும் விவாதிக்க நமக்கு விரும்பமும் இல்லை நேரமும் இல்லை, அந்த நேரத்தில் மேற்கண்ட எமது நடவடிக்கைகளைப் போல ’தமிழ் மக்களுக்கு’ உருப்படியான காரியத்தையாவது செய்வோம். எனவே அவர்கள் தாராளமாக,ஆசை தீர எம்மை வைய்யட்டும். நாம் அதைப் பற்றி இனி சட்டை செய்வதில்லை என்கிற முடிவுக்கு வந்து விட்டோம். இனி இதில் நாம் பங்கு பெறப் போவதுமில்லை. நன்றி.

- சர்வதேசியவாதிகள் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

29 comments

29
புரச்சி
இடஓதுக்கீடு குறித்து ம க இகவினரின் வெளியீடு:

http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3675:2008-09-06-21-17-42&catid=183:2008-09-04-19-44-07&Itemid=109

இதிலுள்ள கேள்விகள் அதிரடியானுக்கு புரிய வாய்ப்பில்லை. ஏனெனில், அவரது கட்டுரைகளிலிருந்து அவர் கடைசியாக படித்த புத்தகம் புலிகளின் சோசலிசம் குறித்தது என்று தெரியவருகிறது.

அவருக்கு புரியும் விதத்தில் கேள்விகளை எளிமைப்படுத்தியும் கொடுக்கத் தயார்.

புரச்சி
புரச்சி
http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3675:2008-09-06-21-17-42&catid=183:2008-09-04-19-44-07&Itemid=109
புரச்சி
//அதன் பிறகு பார்ப்பன கும்பல் திருச்சியில் பெரியார் சிலையை இடித்து தள்ளியபோது உடனே இராமன் உருவப்படத்தை செருப்பால் அடித்து அய்யா சிலையின் காலடியில் இழுத்து வந்து போட்டது யார்? அதையும் நாங்கள் தானே செய்தோம். அதை ஏன் நீங்கள் செய்யவில்லை, நாங்கள் செய்து விட்டோம் என்பதாலா?//

கருணாநிதியின் நாக்கை வெட்டுவேன் என்று ஒரு ஆர். எஸ். எஸ் பன்றி சொன்ன போது இந்து மதத்தை கருணாநிதி விமர்சிப்பது தவறு என்று கட்டையை திருப்பிப் போட்டு அடித்தவர்தான் பார்ப்பன, இந்து மத ஆதரவு பெ.மணியரசன் என்ற தமிழ்தேசியவாதி. இதே வசனத்தை வேறு சொற்களில் பேசியவர் இவரிடமிருந்து பிரிந்து சென்ற ராசேந்திரசோழன்
புரச்சி
//சில தினங்களுக்கு முன்பு, இவர்கள் பாடும் சாவேஸ், இலங்கை ரத்தக் காட்டேறியிடம், லிபியாவில், பிரபாகரனின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வெற்றியடைந்தமைக்காக கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார். அவர் பிடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய தோழர். இந்த வெட்கங்கெட்ட மகஇக வைப்போலவே, ஒரு "சர்வதேசியவாதி". அந்த சாவேஸ், கம்பிவேலி மக்களை விடுவிக்கக் கேட்கவில்லை. சாவேஸுக்கு இலங்கை செய்வது பயங்கரவாதமல்ல. பிரபாகரனின் விடுதலை இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம். இவர்களின் "சர்வதேசியத்தின்" அழகு இது தான்!//

சாவேஸையும், பிடலையும் கம்யூனிஸ்டுகள் என்று என்றைக்கு ம க இக சொன்னது? கற்பனையான புனைவுகளுக்கு பதில் தர இயலாது

சவேஸின் கொள்கைகள் குறித்து விமர்சித்து எழுதியுள்ளது புதிய ஜனநாயகம்.

இப்படியாப்பட்ட மொன்னையான முட்டாள்த்தனமான அர்த்தமற்ற கேள்விகளையும், அவதூறுகளையும்தான் இதுவரையான எல்லா கட்டுரைகளிலும் கேட்டு வருகிறார்கள். தமிழ்தேசியவியாதிகள்.

பாண்டியனுக்கு அவரது பாணியிலேயே ஒரு கேள்வி,

இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயல்படுகிறதே இதற்கு பதில் சொல்லுங்கள். இதிலிருந்தே தெரியவில்லை பாண்டியனின் தேசியவாதம் என்னவென்று?

(இது எந்தளவுக்கு சம்பந்தமில்லாத முட்டாள்தனமான கேள்வியோ அதேயளவுக்கானது பாண்டியனின் சாவேஸ் குறித்த கேள்வி)

புரச்சி
புரச்சி
ஆண்ட சாதிகளும், இடஓதுக்கீட்டின் உள் அரசியலும்

http://poar-parai.blogspot.com/2007/07/blog-post_17.html

இடஒதுக்கீடு குறித்து குழலி பல்வேறு வாதங்களை வைத்துள்ளார். அவற்றிற்கெல்லாம் மையமாக இருக்கும் ஒரேயொரு அம்சம் கீழே உள்ளதுதான். அதனை மட்டும் உடைத்து வாதிட்டால் போதும் என்று கருதுவதால் இந்த பதிவு.

அது தவிர்த்து இந்த கீழ் கண்ட குழலியின் புரிதலை அடிப்படையாகக் கொண்டு வைக்கப்பட்ட பிற வாதங்களை முந்தைய அசுரன் கட்டுரையின் பின்னூட்டங்களில் தோழர்களும், நண்பர்களும் உடைத்துள்ளனர். அந்த பின்னூட்டங்களின் அடிப்படையிலான வாதங்களும் இந்த கட்டுரையில் முன்னெடுக்கப்படும்.

//பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு ஆண்ட சாதிகள் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் ம க இ க தோழர்கள், சற்று யோசித்து பார்க்க வேண்டும், இடஒதுக்கீடு புள்ளிவிபரங்கள் சொல்வது இந்த ஆண்ட சாதிகள் எத்தனை சதவீத இடங்களை பிடித்துள்ளனர், பார்ப்பனர்களோடு சேர்ந்து இவர்களும் சுரண்டுபவர்கள் என்றால் பார்ப்பனர்களும் இவர்களும் இணையாகவோ அல்லது ஓரளவிற்காவது நிரம்பியிருக்க வேண்டுமே, ஆனால் இடஒதுக்கீட்டிற்கு முன் இவர்கள் நிரம்ப வில்லையே ஏன்?//

இது குழலி சொன்னது,

நாங்க சொல்வது இங்கு பார்ப்பன்ர்களுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளதை ஏன் தாழ்த்தப்பட்டவர்களுடனும், பிற பிற்படுத்தப்பட்டவர்களுடனும் ஒப்பிட்டு எழுதவில்லை என்பதுதான்.

ஏனெனில் பாப்பனரின் மேலாதிக்கம் குறித்த விசயத்தில் எமக்கு, உங்களுக்கும் கருத்து வேறுபாடு இல்லை. அதாவது மேற்சொன்ன விசயத்தில் எமக்கும் உங்களுக்கு கருத்து வேறுபாடு இல்லை.

மாறாக, பிற்படுத்தப்பட்டவர் இடஓதுக்கீட்டில் ஒரு சில ஆதிக்க சாதியினர் மட்டும் பயன்பெறுவதும் அந்த சாதியினர் எல்லாம் தமது சாதி வெறி ஆதிக்கத்தை வலுப்படுத்தி வருவதும் குறித்தே எமக்கும் உங்களுக்கு கருத்து வேறுபாடு.

இத்துடன் நாளும் வலுப் பெற்று வரும் சாதி உணர்வுக்கு எதிராகவும். அதன் பாற்ப்பட்ட வன்முறைக்கெதிராகவும் என்ன நடைமுறை தந்திரம் வைத்துள்ளீர்கள் என்பதை கேள்வி கேட்க்கிறோம். குறிப்பாக ஆதிக்க சாதியினரை கண்டுகொள்ளாமல் அவர்களை இடஓதுக்கீட்டுக்காக மட்டும் அணி திரட்டும் போக்கு எங்கு கொண்டு விட்டுள்ளது என்பதை சாதி சங்கங்களின் வலிமை பறை சாற்றுகிறது. பெரியார் திக சாதி வெறிக்கெதிராக பிரச்சாரம் செய்தால், திக ன்னு சொல்ற இடஓதுக்கீடை மட்டும் பேசு ஏன் ரெட்ட டம்ளர பத்தி பேசுற என்று கவுண்ட சாதி வெறியர்கள் அடிக்க வெரும் திமிர்த்தனத்துக்கு குழலி உள்ளிட்டவர்களின் பதில் என்ன என்று கேட்க்கிறோம்.

இந்த காரணத்தினாலேயே மேலேயுள்ள உங்களது ஒப்பீடு எந்த வகையிலும் எமது குற்றச்சாட்டிற்க்கான பதிலாக இல்லை.

இங்கு பார்ப்பன்ரையும் பிற்ப்படுத்தப்பட்டவர் பட்டியலில் உள்ள ஆதிக்க சாதியினரையும் ஒப்பிட்ட குழலி அதே கையோடு பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் உள்ள ஒடுக்கப்ப்ட்ட சாதியினருடன் ஆதிக்க சாதியினரை ஒப்பிட்டால் இந்த வகை இடஓதுக்கீட்டின் மோசடி தெரிய வரும். அதாவது ஆதிக்க சாதியினர், உண்மையிலேயே ஒடுக்குமுறைக்காளான பிற பிற்படுத்தப்பட்ட சாதியினரின் இடஓதூக்கீட்டை தின்று வருவது தெரியவரும். அத்துடன் இல்லாமல் சாதி வெறியுடன் துடுக்குத்தனம் செய்து வருவதும் தெரியவரும்.

பிறபடுத்தப்பட்டோர் குறித்த வரையறையை, பட்டியலை மாற்றியமைக்க கோரும் மகஇகவின் வாதம் இங்குதான் நிலை கொண்டுள்ளது.

இதுதான் நாம் வாதிடும் மையமான விசயமாக உள்ளது.

மேலே சொன்ன விசயத்தை கவனத்தில் கொண்டுதான் பிற்படுத்தப்பட்டோர் இடஓதுக்கீட்டை பெருவாரியாக விழுங்கி வரும் ஆதிக்க சாதியினரை தனியாக பிரித்தோ அல்லது உள் ஒதுக்கீடு கொடுத்து பிற ஒடுக்கப்ப்ட்ட பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடஓதுக்கீட்டின் பலன் போய்ச் சேர வழி வகுக்க வேண்டும் என்பதுதான் மகஇக கோரிக்கை.

இந்த விசய்த்தில் ஏன் உங்களிடமிருந்து பதில் இல்லை.

இந்த உள் ஒதுக்கீடு செய்வதில் அல்லது ஒதுக்கீடு செய்யாமல் சமூக புறக்கணிப்பு செய்வதில் என்ன சிக்கல் வந்து விடப் போகிறது?

இந்த விசயத்தை வலியுறுத்தியே யாரோ ஒரு தோழர் BC1, BC2 என்று உட்பிரிவு ஒதுக்க வேண்டும் என்ற ஒரு பரிந்துரை செய்திருந்தார். இது நல்ல யோசனையாகத்தான் படுகிறது.

இத்துடன் சேர்ந்து சாதி மறுப்பு திருமணம் செய்தவருக்கு இடஓதுக்கீட்டில் முன்னுரிமை, தனி ஒதுக்கீடும் செய்வது.

ஆதிக்க சாதி வெறியர்கள் ஆட்டம் போடும் இடங்களில் ஒட்டு மொத்தமாக இடஓதுக்கீட்டை ஆதிக்க சாதிகளுக்கு ரத்து செய்வது. அங்கு நடைபெறும் வளர்ச்சிப் பணிகளில் ஆதிக்க சாதி வெறியர்கள் புறக்கணிக்கப்படுவது. அதாவது ஒட்டு மொத்தமாக ஆதிக்க சாதியினர் ஆட்டப் போடும் இடங்களில் அவர்களை சமூக புறக்கணீப்பு செய்ய ஜனநாயக சக்திகளையும், பொது மக்களையும் அணி திரட்டுவது. அந்த பகுதிகளில் ஆதிக்க சாதிகளின் இடஓதுக்கீட்டு பங்கை பிற பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒதுக்குவது உள்ளிட்ட செயல்பாடுகள்.

இந்த வேலைகளை செய்வதில் என்ன சிக்கல் வந்து விடப் போகிறது?

இதைச் சொன்னால் மறைமுகப் பார்ப்னியம் என்று அவதூறு சொல்லும் பொழுது நமக்கு சந்தேகம் வருகிறது, சமூக நீதி பேசும் இவர்கள்தான் உண்மையான மனு நிதியின் காவலர்களாம பார்ப்னர்களோ என்று.

இது சந்தேகம்தான். எதுவும் ஊர்ஜிதப் படுத்தி சொல்லவில்லை. நண்பர்கள் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது.

இது தவிர்த்து இடஓதுக்கீடு என்பது ஒரு சீர்திருத்தம் தானேயொழிய சர்வரோக நிவாரணி அல்ல என்பதும். அந்த காரணத்தினாலேயே அதை நடைமுறைபடுத்துவது இருக்கின்ற சமூக பொருளாதார பிரச்சனைகளை வேறு வடிவங்களுக்கு பரிணமிக்க்ச் செய்யும் இயல்புடையது என்பதையும் நாம் குற்றச்சாட்டாக வைக்கிறோம். இப்படி சொல்வதின் அர்த்தம் இடஓதுக்கீட்டை எதிர்ப்பது அல்ல. மாறாக இடஓதுக்கீடு என்ற சீர்திருத்தத்துடன் ஒடுக்கப்பட்டவர்கள் திருப்திப் பட்டு நின்று விடக் கூடாது என்பதை அவர்களுக்கு புரிய வைத்து, நிரந்தர தீர்வு நோக்கி மக்களை அரசியல்படுத்தும் தேவைக்காகவே இப்படி சொல்கிறோம். இங்கு நடப்பதோ இடஓதுக்கீடு ஒன்றே எல்லா சாதிய, சமுக பொருளாதார சிக்கல்களையும் தீர்த்துவிடும் என்ற மயக்கத்தின் பாற்ப்பட்ட பிரச்சாரமே. இந்த அம்சம் குறித்தும் விவாதம் செய்யலாம்.

அசுரன்

இந்த அம்சத்தில் சிந்தனையை தூண்டும் சில பின்னூட்டங்கள்(முந்தைய கட்டுரையிலிருந்து):

//உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினராகிய பார்ப்பனரல்லாத தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டடீரும், சாதி மறுப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தடையாக உள்ள சிறு கருத்தும் செயலும் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களுக்கே சாதகமாக அமையும். பார்ப்பனரல்லாதவர்களின் ஒற்றுமையில் நீடிக்கும் ஊனங்களால்தான் பார்ப்பனீயம் இன்னும் நீடிக்கிறது என்பதை யாவரும் உணரவேண்டியுள்ளது.//

குழலி, இது தான் மோசடியென்பது. பார்ப்பனரல்லாத "தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டோ ரும்" என்று சொல்வதன் மூலம் தலித், பழங்குடி, பிற்பட்டோ ர் எனப்படுவோர் அனைவரையும் ஒரே தட்டில் நிற்க வைக்க முடியாது. இங்கே பிற்பட்டோ ர் என்று வகைப் படுத்தப்பட்டுள்ள எல்லோரையும் ம.க.இ.க ஆண்ட பரம்பரையென்று சொல்லி நிராகரிக்கவில்லை. அவர்களுக்குள்ளும் சேவைச் சாதிகளாய் இருக்கும் குயவர், தச்சர், குரும்பர், வெள்ளாளர்களில் ஒரு சில வகையினரை இடஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் என்றே சொல்கிறார்கள். அதாவது இடஒதுக்கீடு அதன் முழுமையான பலன் யாருக்குச் செல்ல வேண்டுமோ அவர்களுக்கே செல்ல வேண்டும் என்பதே ம.க.இ.க நிலை.

இதில் உங்கள் மோசடி எங்கே வருகிறது? "பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்டோ ர்" என்கிற வகையின் கீழ் ஆதிக்க சாதிகளான தேவர், மறவர், செட்டியார், வெள்ளாலக் கவுண்டர்கள், முதலியார்கள், நாயுடுக்கள், நாயக்கர்கள்.. இப்படி பண்ணெடுங்காலமாக பார்ப்பனியத்தின் செயல் வீரர்களாய் இருந்தவர்களையெல்லாம் ஒரே பட்டியலில் அடைப்பது என்பது எப்படி சரியானதாகும்? 1987 - 88 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின் படியே நாட்டில் உள்ள 77 சதவீத முற்பட்ட பிற்பட்ட சாதியினர் 83% நிலத்துக்கு உடைமையாளர்களாய் இருப்பது வெளிப்பட்டுள்ளது ( இதில் பார்ப்பனர்கள் உள்ளடங்கவில்லை )

இதற்கு நீங்கள் முன்னே வைத்த வாதம் என்ன?

//பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு ஆண்ட சாதிகள் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் ம க இ க தோழர்கள், சற்று யோசித்து பார்க்க வேண்டும், இடஒதுக்கீடு புள்ளிவிபரங்கள் சொல்வது இந்த ஆண்ட சாதிகள் எத்தனை சதவீத இடங்களை பிடித்துள்ளனர், பார்ப்பனர்களோடு சேர்ந்து இவர்களும் சுரண்டுபவர்கள் என்றால் பார்ப்பனர்களும் இவர்களும் இணையாகவோ அல்லது ஓரளவிற்காவது நிரம்பியிருக்க வேண்டுமே, ஆனால் இடஒதுக்கீட்டிற்கு முன் இவர்கள் நிரம்ப வில்லையே ஏன்?//

அரசுப் பணிகளில் அமரவோ, டாக்டர் போன்ற சேவைத் தொழிலில் இறங்க வேண்டிய கட்டாயமோ இந்தச் சாதிகளுக்கு 1800களின் பிற்பகுதி வரையில் எழவில்லை என்பது தான் உண்மை. கவுண்டர் தேவர் போன்ற சாதிகளெல்லாம் வரலாற்று ரீதியில் நிலவுடைமையாளர்களாவே இருந்து வந்துள்ளனர் ( பெருமளவிலோ, குறைந்தளவிலோ ).. இவர்களுக்கு கல்வி மறுக்கப்படவில்லை. அப்படி இவர்களை ஒடுக்கியிருந்தால் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த இந்த சாதியினர் பார்ப்பனர்களை எப்போதோ ஒழித்துக் கட்டியிருப்பார்கள். சமூகத்தில் பார்ப்பனர்கள் மேலே ஏறினார்கள் என்றால் அப்படி அவர்கள் மேலேயே உட்கார்ந்திருப்பதற்கான தேவை இவர்களுக்கும் இருந்தது. இவர்களுக்கும் கீழே அடக்கி ஒடுக்கப்பட்டு கடுமையாக சுரண்டப்பட்டு, நிலத்தின் மேல் ஆதிக்கம் இல்லாதிருந்த சாதிகளிடம் "பார் எனக்கு மேலே அவன் உனக்கு மேலே நான்" என்று நியாயப்படுத்துவதற்கு தேவையாய் இருந்தது.

அரசு வடிவம் மாறி ஆங்கிலக் கல்வியுள்ளவர்களுக்கு ( மாண்டேகு- சிம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் இரட்டை ஆட்சிமுறை ) அரசுப் பணி என்றும் அவர்களுக்கு சமூக அந்தஸ்தும் கிடைக்க ஆரம்பித்த புள்ளியில் தான் இவர்களுக்கும் அரசுப்பணியின் அவசியம் ஏற்பட்டது. அது நிராகரிக்கப்பட்டவனின் உரிமைக் குரல் அல்ல - மாறாக இது வரையில் இருந்த ஆதிக்கத்தை நிலை நிறுத்தியாக வேண்டியதன் கட்டாயத்தில் எழுந்ததே. உங்கள் மூலமான நீதிக் கட்சியின் நிறுவனர்கள் பழைய ஜமீந்தாரிகள், மன்னர்கள் என்பது நினைவிருக்கட்டும் ( பொப்பிலி மகாராஜா போல ).. இவர்கள் ஆரம்பத்திலேயே பெரியார் போல பகுத்தறிவு இயக்கம் நடத்தவோ பார்ப்பனிய எதிர்ப்பிலோ ஈடுபட்டிருக்கவில்லை.. மாறாக பார்ப்பனியத்தின் அத்துனை கூறுகளையும் உட்செறித்து மேலே வந்து விட முடியுமா என்கிற முயற்சியில் தான் ஈடுபட ஆரம்பித்தனர். ..

மேலும் நீங்கள் கேட்பது போல இடஒதுக்கீட்டுக்கு முன் இவர்கள் நிறம்பவில்லையே ஏன்? என்கிற கேள்வியே அப்போது எழவில்லை. இடஒதுக்கீடு அமுலான ஆரம்ப காலத்திலேயே அதன் பலன்களை அதிகம் சுருட்டிக் கொண்டதும் ( தமிழக அளவில் உதாரணம் தர முடியும் ) இந்த "பிற்படுத்தப் பட்டோ ர்" என்னும் போர்வைக்குள் புகுந்து கொண்ட ஆண்டைகள் தான்.

இவர்கள் அதிகாரத்திற்கு வந்த பின் 1927ம் ஆண்டே வகுப்புவாரி உரிமை என்னும் அரசானையின் படி தமக்கான உரிமையை நிலை நாட்டிக் கொண்டனர்.. இடஒதுக்கீடு அமுலான முதல் (20 ஆண்டுகளில் ஆண்டைகளும் நிலவுடைமையாளர்களும் தமது ஆதிக்கத்தை அரசு மட்டத்திலும் உறுதிப்படுத்திக் கொண்டனர். அதற்கு முன் - குறிப்பாக மாண்டேகு - சிம்ஸ்போர்ட் சீர்த்திருத்தங்களுக்கு முன் - இட ஒதுக்கீட்டுக்கான தேவை சாதி இந்துக்களுக்கு எழவே இல்லை.. ஏனெனில் அவர்கள் நிதர்சனத்தில் ஆதிக்க சாதிகளாகத் தான் இருந்தனர்.

இப்போது மீண்டும் உங்கள் பதிவுக்கு வந்தால், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் - தமிழகத்தில் எல்லோருமே தங்களை ஆண்ட சாதிகள் என்று தான் பெருமையடித்துக் கொள்கிறார்கள் என்கிறீர்கள். இது பார்ப்பனியம் தோற்றுவித்த காரணிகளில் ஒன்று தான். எல்லோரும் தங்களை ஆண்ட சாதி என்று சொல்லிக் கொண்டாலும் - நடைமுறையில் யார் நிலவுடைமையாளர்கள், ஆதிக்க சாதிகள் என்பதைக் கொண்டு தான் முடிவெடுக்க முடியும். இந்த வாதத்தை நீங்கள் விரிவாக்கிச் சென்றால் - தெற்கே திராவிடர்கள் வருவதற்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு ஆண்ட
சாதி என்பது இப்போது மலைவாழ் மக்கள் என்று அறியப்படுபவர்கள் தான் எனவே ம.க.இ.க மலைவாழ் மக்களுக்கும் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லுமா என்று கேணத்தனமாகக் கேள்வி கேட்கும் அளவிற்கும் போகலாம்... ஆனால் துரதிர்ஷ்டவசமாக ம.க.இ.கவின் நிலை அதுவல்ல.. நாம் அறிந்த வரலாற்றிலும், நிதர்சனத்திலும் எவர் ஆதிக்க சாதியாய் இருக்கிறார்கள் என்பதைத் தான் கணக்கில் எடுக்கச் சொல்கிறார்கள். எனவே நீங்கள் கேட்கும் கேள்வி அர்த்தமற்றது மட்டுமல்ல முட்டாள்தனமானதும் கூட.

பல்லவன் குடிசையில் பன்றி மேயுது என்கிற பம்மாத்து இல்லாமல் நேரடியாகச் சொல்லுங்கள் - வன்னியர்கள் அடிமைச் சாதி தானா? அடிமைச்சாதியென்றால் "வன்னிய குல சத்திரியர்" என்கிற வெட்டிப் பெருமை மட்டும் எதற்கு? அப்படி வெட்டிப் பெருமையடிப்பதற்காக ராமதாஸ் போன்றவர்களை நீங்கள் கண்டிக்க தயாரா?

இல்லை வன்னியர்கள் குடிசையில் பன்றி மேய்வது உண்மையானால் அதற்கும் சக்கிளியன் சேரியில் பன்னி மேய்வதற்கும் ஒரே காரணம் தானா? அதாவது பார்ப்பனியம் தானா? தீண்டாமையால் கொடுமைப் படுத்தப்பட்ட சாதி தான் வன்னிய சாதியா?

வன்னியர்களையும் காட்டு நாயக்கர்களையும் ( அவர்கள் தங்களை ஆண்ட சாதி என்று கருதிக் கொள்வதால் ) ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது என்பது முழு முட்டாள் தனம்.

***************

ஆண்ட பரம்பரைகள்னு போகிற போக்கில் சொல்லி ரகசியமாய் மகிழ்ந்து கொள்ளும் அறியாமையில் கிடக்கும் ஜனங்களை நோக்கிக் கூறப்பட்டதல்ல 'ஆண்ட பரம்பரையா! அடிமைப்பரம்பரையா?" என்பது.

நாங்கள் மூவேந்தரின் வாரிசுகள் என்றும், பல்லவனின் பரம்பரை என்றும் மேடை போட்டு முழங்கி முக்குலத்தோரின், வன்னியரின் உணர்வுகளை முறுக்கேற்றி, அவர்களின் போலி கவுரவத்தை வளர்த்தெடுத்து, பிற சாதியினரை (வேறு யாரை தலித்துகளைத்தான்) தங்களுக்கு அடிபணிந்து போகச்சொல்லி மிரட்டும் 'ஆண்ட பரம்பரை'ப் பொறுக்கிகளுக்குத்தான்...இட ஒதுக்கீட்டை ரத்து செய்யச் சொல்லுகிறோம்.

பொன்.பரமகுருவில் இருந்து மலைச்சாமி வரை எத்தனையோ பேர்கள் இட ஒதுக்கீட்டால் படித்து முன்னேறினார்கள்தான். அவர்கள் தங்கள் பணிக்காலத்தில் செய்தது என்ன? தங்கள் சாதிக்காரனாகப் பார்த்து போலீசுதுறையில் ரொப்பிக்கொண்டார்கள். ஓய்வு பெற்றவுடன் ஓடிச்சென்று தேவர்பேரவை போன்ற சாதித்தீ மூட்டும் அமைப்பில் ஒட்டிக்கொண்டார்கள் என்பதில் இருந்தே இவர்களின் அரசுப்பணியின் லட்சணத்தை நல்லாவே யூகிக்கலாம். யூகம் என்ன எல்லாமே நெசந்தான். 70% பேர் போலீசுக்காரங்களா இருப்பது..ஆண்ட பரம்பரை 'தேவர்'தான். தேவர் சாதிப்போலீசின் மிருகத்தனத்தை ஒவ்வொரு தலித் - தலித் அல்லாதோரின் மோதல்களிலும் பார்க்க முடியும்.. சமீபத்தில்--கடந்த 10 ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டில் வந்த தேவர் சாதி போலீசுக்கும்பல் கொடியங்குளத்திலும் தாமிரபரணிக்கரையிலும் போட்ட வெறியாட்டம்...2 வயது சிறுவன் விக்னேசைக்கூட விட்டு வைக்கவில்லை.
.......
பறையர் பையனைக்காதலித்த குற்றத்துக்காக கண்ணகி-முருகேசனைக்கொன்ற சாதி வெறியர்களைக் காப்பாற்ற உள்வேலை செய்பவனோ, இட ஒதுக்கீட்டில் படித்து கலெக்டராக இருந்தவன்..இவன் திருநெல்வேலிக்கு கலெக்டராக இருக்கும்போதுதான் 17 தலித்கள் போலீசால் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. அன்று போலீசின் அத்துமீறலை ஆரம்பித்து வைத்து வன்கொடுமை சாதி வெறியந்தான் அந்த கலெக்டர்.. இவர்களுக்கு இட ஒதுக்கீட்டை தரக்கூடாது என்கிறோம்.

பிற்பட்டோ ர் பட்டியலுக்குள் ஆதிக்க சாதிகள் எல்லாம் உட்கார்ந்து கொண்டு உண்மையிலே பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடமில்லாமல் ஆக்குகிறார்கள் என்பதற்கு புள்ளிவிவரங்களைத்தேடி எல்லாம் செல்ல வேண்டாம்.

தென் மாவட்டக்கல்லூரிகள் எங்கும் நடக்கும் மாணவர் மன்றத் தேர்தல்களே இதற்கு சான்று. BC பட்டியலில் 80 சதவீத இடங்களை நாடார்களோ நாயுடுகளோ (அதாவது வடுகன் என்பவர்கள்) ஆக்கிரமித்துக்கொண்டு சாதிச் சங்கமே மாணவர்கள் மத்தியில் அமைத்து சாதி வெறி உண்டாக்கி தேர்தலில் நிற்கின்றனர். MBC ஒதுக்கீட்டில் பெருமிடங்களை தேவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு சாதிச்சங்கம் கட்டி, உணவு விடுதிகளில் தலித் மாணாக்கரை 'ஓசிச்சோறு' என்றும், தலித் மாணவிகளை பாலியல்ரீதியாகக் கொச்சைப்படுத்திப்பேசி வக்கிரமாய் நடந்து கொள்வதும், சேவைத் தொழில் செய்யும் சாதியில் இருந்து வரும் ஒன்றிரண்டு மாணவர்களிடம் 'எனக்கு சிரைத்து விடு' என்றோ 'என் செருப்பைத் தைடா' என்றோ சாதித்திமிரோடு நடந்து கொண்டு வருவது வெளிப்படையான விசயம்.

அக்கல்லூரிகளில் உட்கார்ந்திருக்கும் ஆசிரியர்களும் தங்களைஆதிக்க சாதி சங்கங்களுக்குள் இணைத்துக் கொண்டு அதே சாதி மாணவர்களைக் கொம்பு சீவி விடுகின்றனர்.. இதை எல்லாம் சொல்லி இந்தக் கேடு கெட்ட சாதிவெறியன் களுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்.. பிற்பட்டோ ர் பட்டியலை சீர் செய் என்றால்...மறைமுகப் பார்ப்பனீயம் என்கிறார்கள்..

ஆதிக்க சாதிகள் என நாம் சொல்லிடும் நாயுடு,கவுண்டர்,தேவர்,நாடார்,வன்னியர் எனப்படும் சாதியினரிடம் நூற்றுக்கணக்கிலும்,ஆயிரக்கணக்கிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் கல்லூரிகளும் குவிந்து கிடக்கின்றன. அங்கு இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றதாக வரலாறு உண்டா? எப்படி நாடார் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பியூனில் இருந்து தலைமை ஆசிரியர் வரை நாடார்களாகவே இருக்க முடிகிறது? நாயுடு கல்லூரியும் அப்படித்தான்..கவுண்டன் கல்லூரியும் அப்படித்தான். ஆனால் பட்டியலில் இருக்கும் பல நூறு சாதிகளால் ஒரு நர்சரி பள்ளி ஆரம்பிக்கக் கூட தெம்பு கிடையாது என்பதுதான் உண்மை. எங்காவது வண்ணார் சங்கப் பள்ளியையோ மருத்துவ சாதி சங்க கலைக்கல்லூரியையோ காட்ட முடியுமா?

இதே மாதிரி எண்ணற்ற உதாரணங்கள் தமிழகம் எங்கும் பெருத்துக் கிடக்கும்போது சமூக நீதிப் புடுங்கிகள் இதற்கு எதிராக என்ன புடுங்கினார்கள்?

கல்லூரிக்கு அடுத்து வேலை செய்யும் இடங்களைப் பார்த்தால் பொதுத்துறை நிறுவனங்களுக்குள் ஆதிக்க சாதிக்கும்பல்தான் வேலை வாய்ப்பில் பெரும் இடங்களைப் பிடித்துக் கொண்டு சாதி ரீதியாய் தொழிற்சங்கம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தொழிற்சங்கம் என்றால் ஏதோ தொழிலிடப் பிரச்சினைகளுக்காகப் போராடும் அமைப்பு என்றெல்லாம் எண்ண வேண்டாம். யார் யார் வீட்டில் கல்யாண வயசில் பொண்ணு இருக்கு? என்பதை விசாரித்து தங்களுக்குள் திருமணம் மூலம் மேலும் சாதியாய் இறுகிக்கொள்ளவும், மறக்காமல் ஆண்டுதோறும் தங்கள் குலதெய்வத்தின் விழா எடுக்கவும்தான் இச்சங்கங்கள்.. திருச்சி பெல்லில் பார்க்கலாம்..பெல்-சேனைத்தலைவர் சங்கம்..பெல்-வன்னியர் சங்கம்..லொட்டு லொசுக்கு எல்லாம்.

விப்ரோ டெக்னாலஜியில் பார்ப்பனர் சங்கம் கட்டி இருக்கிறார்கள்.. சவுராஸ்டிரா சங்கம் வைத்திருக்கிறார்கள்.. நவீன தொழில்நுட்பவாதிகள் இல்லையா? மெயிலிங் லிஸ்ட்டில் - ஈ-சாதிச்சங்கமாய் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு சங்கமாய்த் திரண்டு சாதியைக் காப்பாற்றும்/ சாதி வன்முறையை (கல்லூரி அளவிலேயே) வளர்க்கும் சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். அல்லது BC ஐ இரண்டாகப்பிரித்து இந்த மாதிரி ஆதிக்க சாதிகளை BC1ல் வைத்து 3 சதவீதம் அவர்களுக்கும்... இதர 200 BCகளை 27% கொடுத்து BC 2லிலும் வைப்பதுதான் உண்மையான சமூக நீதி.

சமூகநீதிப் புடுங்கிகள் என்றைக்காவது சாதிமறுப்புத் திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று கோரி இருக்கிறார்களா? சாதி ஒழிப்புதானே - சமூக நீதியாகும்! சாதி ஒழிப்பை சாதிமறுப்பு திருமணம் தானே சாதிக்கும்!

சாதி மறுப்புத் திருமணம் மூலம் பிறந்தவர்களுக்கு பெயரளவில் இருந்த சிறு வீத ஒதுக்கீட்டையும் 'சமூக நீதியை' காத்த வீராங்கனை ஒழித்துக்கட்டியது.. ஆனாலும் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த 'சமத்துவப் பெரியாரும்' இதைக் கண்டு கொள்ளவே இல்லை.

***********

சாதி ஒழிப்பைத் தவிர்த்து விட்டு, இட ஒதுக்கீட்டில் மட்டும் அழுத்தம் கொடுக்கும் திராவிட,தமிழ்தேசிய,வன்னியவிய,தேவர்வெறியியக் கட்சி/குழுக்களால் ஏற்பட்ட சமூகவியல் மாற்றங்களைப் புரிந்து கொள்ள சில சான்றுகள்.

1) திண்ணியம் ஊரில் சக்கிலியர் வாயில் மலத்தைத் திணித்த சாதிவெறியர்களில் ஒருவர் - அரசுப்பணியில்-ஆசிரியராகப் பணியாற்றியவர். பெயர் என்ன தெரியுமா? குடியரசு.

2) சமதாக் கட்சியின் தமிழ் நாடு பிரிவுக்கு ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டார். பெயர் குடியரசுத் தேவர். (1929இலேயே வாலை நறுக்கிய இயக்கப்பின்னணி கொண்ட பெயருடையவருக்கு வால் முளைக்கிறது)

3) பெரியார் திராவிடர் கழகத்தினர் பழனி ஒன்றியத்தில் கவுண்டர் சாதிவெறியர்கள் நிறைந்த பகுதியில் 'தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரப் பயணம்' மேற்கொண்டிருந்தபோது 'இரட்டைக்குவளைகள் முறை பற்றி'கண்டித்துப் பேசி வந்தனர். ஆத்திரமுற்ற கவுண்ட சாதி வெறியர்கள் பெ.தி.க. தொண்டர்களைத் தாக்க முயன்றனர். அப்போது அவர்கள் சொன்னது "தி.க.ங்கிற..சாமியப் பத்திப் பேசு..இட ஒதுக்கீடு பத்திப் பேசு..ஆனால் ரெட்டக்கிளாஸ் அது இதுன்ன..கொளுத்திப்புடுவோம்.."

****************

ராமதாசின் குடும்பத்தில் நடைபெற்ற சாதி மறுப்பு திருமணங்கள் எத்தனை?

ஆனைமுத்துவின் கட்சி ஏன் வன்னியர் சங்கம் மாதிரியே இருக்குது?

தமிழரசனின் தனித்தமிழ் நாடு படை ஏன் வன்னியர் படையாக மட்டுமே இருக்குது?

தமிழ் தேசியம் என்பது வன்னியர் தேசியமா?

ஆண்ட பரம்பரன்னு சொல்லுர ராமதாசு ரிலயன்சு போன்ற சேட்டுகிட்ட போய் நாய் மாதிரி வாலாட்டுறப்ப ஆண்ட பரம்பரையின் குலப்பெரும கெட்டுடாதா?

இதற்கெல்லாம் குழலி எனும் ஆண்டபரம்பரைகள் பதில் சொல்ல வேண்டும்..

*************

கம்யுனிஸ பூச்சாண்டி சொல்வதை பார்த்தால் படித்தவன் எல்லாம் சாதி வெறயில்லாம இருப்பதாக இருக்க வேண்டும். அப்ப்டி இல்லை என்பதைத்தான் கனேசு, அன்பரசன், குரல்கள், புல்டோ சர் உள்ளிட்டவர்களின் எ-கா சொல்கிறது. இன்னும் சொன்னால் கல்வி நிலையங்க்ளில் சாதி ரீதியாக திரண்டு பிற சாதியினரை இழிவுபடுத்தும் போக்கு உங்களது வாதத்திற்க்கு முரனாகவே இருக்கிறது.

கல்வியறிவினால் சாதி ஒழியும் என்பதே ஒரு அப்பட்டமான மோசடி.

எப்படி பொருளாதார விடுதலை மட்டுமே சாதியை ஒழித்துவிடும் என்று கம்யுனிஸ்டுகள் சொன்னது அடிப்படையற்றதோ அதே போல வெறுமே பண்பாட்டு சீர்திருத்தங்களால் மட்டும் சாதி ஒழிந்து விடும் என்பதும் அடிப்படையற்றதே.

தத்துவம், பொருளாதாரம், அரசியல் என்று மூன்று முனைகளிலும் சம்ரசமற்ற போராட்டமே சாதியை ஒழிக்கும்.

இடஓதுக்கீட்டை சர்வரோக நிவாரணியாக காட்டும் உங்களது சித்தாந்த ஓட்டாண்டித்தனத்தையே படித்தவன் முதல் பலரும் தமது சாதி வெறியை விடாமல் இருப்பதும், இன்றைக்கு திராவிட அரசியலுக்கு உரிமை கொண்டாடும் பாமக உள்ளிட்டவர்கள் சாதி ரீதியாக அணி திரண்டு உரிமை பெறுங்கள் என்று அப்பட்டமாக பிழைப்புவாதம் பெசுவதும், குஜ்ஜார் பிரச்சனைகளும் காட்டுகின்றன. இடஓதுக்கீடு ஒரு சீர்த்திருத்தம் என்பதை புரிந்து கொள்ளாத நண்பர்கள் அதனது யாதர்த்த விளைவுகளை கண் கொண்டு நோக்கும் வலுவின்றி இருப்பது பரிதாபமே.

****************

Gopalan Ramasubbu said...

இது சட்டநாதன் அவர்கள் எழுதிய புத்தகத்தில் இருக்கும் ஒரு பத்தி(Page-188),

[http://books.rediff.com/bookshop/bkproductdisplay.jsp?PLAIN-SPEAKING-by-A-N-SATTANATHAN&prrfnbr=60109970&multiple=true&frompg=_]

"There are two tendencies which have become noticeable.Reservationhas helped the backward classes for nearly six decades from the 1920's to the 1980s-practically three generations.The benefit of reservation has gone mostly to the top few castes amongst the backward,and to an increasing layer of upper crust in each caste.The filtration process has not been through or uniform.This is not surprising,and is to some extent unavoidable.It would be a step in the larger interest of society and of the backward classes themselves,if a check is applied to both tendencies.There has been thinking on these lines among administrators;but the opposition of vested interest has been too strong to carry out the necessary pruning.But sooner or later,the removal of the two kinds of upper crust will become un-avoidable;otherwise we will be encouraging the caste to form a class system within caste system-not an altogether desirable trend in a democratic and sicialitic society"

***********

முருகேசன் கண்ணகியை எரித்துக்கொன்ற வன்னிய சாதி வெறியர்களைக் காப்பாற்றத் துடிக்கும் முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவரும் இட ஒதுக்கீட்டில்தானே படித்து முன்னேறி வந்திருக்கிறார்? இப்பேர்ப்பட்ட சாதி வெறி நாய்களுக்கு இட ஒதுக்கீட்டை இரத்து செய்யச் சொல்வதுதானே சரியாகும்?

கண்டதேவியில் தேர் இழுக்கப்படாது..வன்னியன் தெருவழியே பறையன்பிணம் வரப்பிடாது...கட்டினால் வன்னியகுல சத்திரியகுலத்திலேதான் செவப்பா அழகா கட்டுவோம் (இருப்பது இங்கிலாந்தில்) எனும் சாதி வெறியுடனும், பஞ்சாயத்து தலைவரா தலித் வந்தா ஆத்தாவுக்கு ஆகாது...ரெட்டை டம்ளர் டீ க்கடை... எல்லாவும் செஞ்சுப்புட்டு இட ஒதுக்கீடு வேணும்...நாங்கள்ளாம் மிகவும் பிற்பட்டவங்க என்பதும், சாதிக்கூட்டங்களிலே போய் நாங்க பல்லவர்களின் வழித்தோன்றல்...பாண்டிய மன்னர்கள்தான் எங்களோட 56 வது கொடிவழி பாட்டனாரு...ன்னு மீசையை முறுக்கறதும்... ஆண்ட பரம்பரைதானடா...உனக்கு எதுக்கு இட ஒதுக்கீடு...

என்னக் கேட்டால், எவன் சாதி மறுப்பு திருமணம் செய்கிறானோ, ஆதிக்க சாதி சங்கத்திலே ஒட்டாம இருக்கிறானோ அவனுக்க மட்டுமே இட ஒதுக்கீடு தரணும்...ம.க.இ.க.வும் இதத்தான் சொல்லுதுன்னு நினய்க்கேன்.

அது கிடக்கட்டும்... பெரியாரின் கொள்கையில் இட ஒதுக்கீட மட்டுமே முன்னிறுத்தி வரும் ராமதாசும், ஆனமுத்துவும் ஏன் சாதி ஒழிப்பு பத்தி பேச மாட்டக்காக?
***************

Related Articles:

புரளி பேசும் போலி தமிழ தேசியவாதிகள்
http://poar-parai.blogspot.com/2007/07/blog-post_11.html

இட ஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்து தான் சமூகநீதியா?
http://tamilarangam.blogspot.com/2007/07/blog-post_6678.html

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு : மீண்டும் தலைதூக்கும் பார்ப்பனத் திமிர்! சமூகநீதிக் கட்சிகளின்: சமரசம்!
http://tamilarangam.blogspot.com/2007/07/blog-post_4632.html
புரச்சி
//சர்வதேசியவாதியின் எழுத்துக்களில் விரக்தி தெரிகிறது. வாழ்த்துக்கள். //

எனக்கென்னவோ அதிரடியான் மற்றும் பாண்டியனின் எழுத்துக்களில்தான் விரக்தியும், ஊக்கமின்மையும் தெரிகிறது. என்ன செய்ய அரைத்தத மாவு எத்தனை நாள்தான் அரைபடும்....

புரச்சி
Dr. V. Pandian
பதற்றம்! பதற்றம்!! பதற்றம்!!!

நான் இந்தக் கட்டுரைக்குறிய பின்னூட்டத்தைக் கொடுத்தேன். ஆனால், "சர்வதேசியவாதியோ" எங்கெங்கோ, யார்யாரோ எழுதியதெல்லாவற்றையும் இங்கே கொண்டுவந்து கொட்டி "அரைக்கிறார்".

அரைத்த மாவை அரைப்பது நானா அல்லது இவரா?

தமிழருக்கும் ஆரியருக்கும் 4000 ஆண்டுக்காலப் பகை. தமிழனுக்கு தனி தேசம் அமைவதை மருதய்யன்களால் சீரணிக்க இயலவில்லை. சொற்ப மக்களாகிய ஈழத்தவர், காற்றைக் கிழித்துக்கொண்டு மேலே செல்லும் வானூர்தியைக் கட்டினார்கள். நீரைக் கிழித்துக்கொண்ட்டு கீழே செல்லும் நீர் மூழ்கியைக் கட்டினார்கள். தற்சார்பு பொருளாதாரத்தைக் கட்டினார்கள். இந்திய, உலக ஆரியர்களுக்கு பொறுக்கவில்லை. இப்போதே இவர்கள் இவ்வளவு செய்தால், தனி நாட்டில் என்னவெல்லாம் சாதிப்பார்களோ? விடவே கூடாது! கொல்லுங்கள் இவர்களை! கடைசிப் போராளி வரை அழியுங்கள்.

அழித்தவர்கள் இந்தியர்களும், உலக ஏகாதிபத்தியங்களும் மட்டுமல்ல. இந்தக் குப்பலும் தான்.

நாம் விரும்புவது வகுப்புவாரி இடஒதுக்கீடு! அனைத்து வேலை வாய்ப்புகளிலும், அனைத்து மக்களுக்கும் அவரவர் மக்கள் தொகை அடிப்படையில் வேலை வாய்ப்பு ஒன்று தான் முறையானது. இதை அமுல் படுத்தினால் சாதியைப் பயன்படுத்தி நடைபெரும் சூட்கேஸ் மற்றும் குடும்ப அரசியலை ஒழிக்க முடியும்.
இளஞ்செழியன்
//பலவீனம் அதிசயங்களை நம்புவதில் அடைக்கலம் பெற்றுவிடுகிறது” என்றார் மார்க்ஸ்.

"அனைத்தையும் சந்தேகி" என்றார் மார்க்ஸ். நாங்கள் மருதையன் கும்பலை மட்டுமல்ல. இந்த நவீன மார்க்சியர்களையும், சர்வதேசியம் என்ற வார்த்தையையும் ஐயுறுகிறோம். (மருதனா? மருத ஐயனா? விளங்கலையே.)
புரச்சி
இளஞ்செழியன்,

சந்தேகிப்பது நல்லதே. ஆனால் அதனை தெளிவுபடுத்திக் கொள்வதே அறிவு வளர்ச்சி, இல்லையெனில் அதன் பெயர் புரளி.

அதிரடியானும் அவரது அடி பொடிகளும் எழுதியுள்ள கட்டுரைகளில் இருந்து இதுவரை ஒரு டஜன் அப்பட்டமான பொய்களை நாங்கள் எடுத்துக் காட்டிவிட்டோம். ஆனால் எதற்கும் பதில் இல்லை.

அதிரடியானின் ஆசி பெற்ற தமிழ் தேசியவியாதிகள் இந்திய தேசத்திற்கும், பார்ப்பனியத்திற்கும் காவடி தூக்குவதையும் பட்டியலிட்டு விட்டோம். இதற்கும் பதில் இல்லை.

எதையும் சந்தேகித்து ஆராயும் நீங்களாவது இவற்றை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அப்புறம் ஒரு சந்தேகம் உங்கள் பெயர் இளஞ்செழியனா அல்லது இளஞ்செழி ஐயனா?

புரச்சி
புரச்சி
//மற்றபடி ஒரு நபரின் சாதியை கொண்டு அவருடைய நடவடிக்கைகளை அளக்கும் கண்ணோட்டம் தான் பார்ப்பனீய கண்ணோட்டம். ஒருவரின் குணாதிசயங்கள், நடவடிக்கைகள் எல்லாம் பிறப்பின் அடிப்படையில் தான் அமையும் என்று பார்ப்பனீயம் தான் வரையறுத்து வைத்துள்ளது. இப்போது பார்ப்பனீயத்தின் இளைய பங்காளிகளாகி விட்ட தமிழ்பார்ப்பனியவாதிகளும் அதையே சொல்லி வருகிறார்கள். உங்கள் பார்வையில் மருதையன் பார்ப்பனர் எனில் தலித் மக்களின் பார்வையில் தமிழ்தேசியம் பேசும் நீங்கள் எல்லோரும் ஆதிக்க சாதி வெறியர்கள் தான் ! இதை ஒத்துக்கொள்வீர்களா ?//

மேலே உள்ளது சர்வதேசியவாதி சொன்னது.

//இன ரீதியான குணங்கள் மாற்றமடைய நூற்றாண்டுகளாகும். அதுவும் மாற்றத்திற்கான தொடர்ந்த, கடுமையான விழைவு இருந்தால் மட்டுமே! //http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=405-2009-09-03-10-18-32&catid=1&Itemid=3&joscclean=1&comment_id=251#josc251

மேலே உள்ளது டாக்டர் பாண்டியன் சொன்னது.

எனவே, டாக்டர் பாண்டியன் கீழே உள்ள சர்வதேசியவாதிகளின் கருத்து குறித்தும் இதே போலான ஆய்வை முன்வைப்பாரா?

//தலித் மக்களின் பார்வையில் தமிழ்தேசியம் பேசும் நீங்கள் எல்லோரும் ஆதிக்க சாதி வெறியர்கள் தான் ! இதை ஒத்துக்கொள்வீர்களா ?//

புரச்சி
இவான்
ஆரிய திராவிட பகை!

இப்போ திராவிடருக்குள்ளேயே பகை இருக்கே, அதை நீங்க இன்னும் கொம்பு சீவி விடுறீங்களே???

ஆதிக்க சாதி - தாழ்தப்பட்டோர் பகை இருக்கே, அதை கண்டுக்கவே மாட்டேங்றீங்களே?

////////தமிழகத்தின் பிற்படுத்தப்ட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் பிரிவினையை, திட்டமிட்டு உருவாக்குகின்றனர்///////

ஆமா தின்னியத்தில் மலம் திணித்ததற்க்கும், மேலளவு முருகேசன் படுகொலைக்கும், உத்தபுரம் சுவருக்கும் பிரிவினையை உருவாகும் மகஇக தான் காரணம், மகஇக தான் பிரிவினையை, திட்டமிட்டு உருவாக்கியது.

//////சமூகத்தை மீட்க கடினமாக உழைக்க வேண்டியுள்ளது.//////

முதல்ல நீங்க உங்களுக்குள் இருக்கும் ஆதிக்க சாதியர்களை விமர்சிங்க அப்புறம் பார்க்கலாம்!

பார்பனியத்திடம் இருந்து மீட்டு ஆதிக்க சாதிகளிடம் அடகுவைக்கவா உழைக்கிறீர்கள்?

//////எழுதியதெல்லாவற்றையும் இங்கே கொண்டுவந்து கொட்டி "அரைக்கிறார்"//////////////

சாதி எதிர்ப்பு, பார்பனிய எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு, தமிழுக்காக போராட்டங்கள், விழா இத்துனையையும் செய்யும் ஒரு அமைப்பை எதுவுமே செய்யாத இவர்கள், எந்த ஒரு தரவுகளும் இல்லாமல் விமர்சனம் செய்வது அரைத்த மாவு இல்லையாம்.
ஏன் நீங்க எதுவுமே செய்யலைன்னு கேட்டாலும் பதில் சொல்ல மாட்டாங்களாம். அவங்க கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக நாம் பழைய பதிவை மறு பதிப்பு செய்தால் அது அரைத்த மாவு.

இது தான் அரசியல் வாதமாம், விவாதமாம்.

நாங்க பதற்றப்படுகிறோமா?

நீங்க பதற்றப்படாமல் பதில் சொல்லுங்க!!!
அப்புறம் பார்க்கலாம்.
இவ்வளவு வயசான பின்னும் அழுகுனி ஆட்டம் விளையாடிகிட்டு....

"பார்ப்பனத் தலைமை, புலிகளை எதிர்ப்பவர்கள், தமிழ் தேசியத்தை எதிர்ப்பவர்கள், இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள்" இதை தவிர வேறு எதாவது இருந்தால் சொல்லுங்கள், பேசலாம்.
புரச்சி
http://kalaiy.blogspot.com/2009/08/blog-post_29.html
இனியொரு: தமிழகம் குறித புலிகளின் அரசியல் தமிழ் நாட்டில் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்திற்று?

புலிகள் யாருடை அரசியலை, ஆதரவை தமிழ் நாட்டில் விரும்பினார்களோ, கோரினார்களோ அவர்களெல்லாம் ஆளும்வர்க்கக் கட்சிகளாக அல்லது முழு நிறைவான சந்தர்ப்பவாதிகளாகவோ தான் இருந்தார்கள். அவர்கள் தங்களது சந்தர்பவாத அரசியலுக்கு உட்பட்ட அளவில் தான் இதில் பாத்திரமாற்றியிருக்கிறார்கள், ஆற்ற முடியும்.
ஒரு நல்ல உதாரணம், யாழ் கோட்டை புலிகளால் சுற்றி வளைக்கப்பட்ட போது, பாரதீய ஜனதா வின் ஆட்சி இருந்தது. அப்போது, பா.ம.க, தி.மு,க, ம.தி.மு.க ஆகிய அனைவருமே மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார்கள்.
அப்போது அந்த முற்றுகையைப் புலிகள் கைவிட வேண்டும் என்றும், இந்திய அரசு தலையிட்டு அதைத் தடுக்கவேண்டும் என்று இலங்கை அரசு இந்திய அரசைக் கோருகிறது. புத்த பிக்குகள் உட்பட பல இலங்கை அரசு சார்ந்தவர்கள் இந்தியாவிற்கு வருகிறார்கள்.

இங்கு வந்து இந்திய இராணுவத்தைப் புலிகளுக்கு எதிராக அனுப்புமாறு கோருகிறார்கள். அப்போது கருணாநிதி யூகோஸ்லாவியா போன்ற ஒரு தீர்வை முன்வைக்கலாம் எனக் கூறுகிறார். அதைப் வாஜ்பாய் கடுமையாகக் கண்டிக்கிறார். அப்போது மாறன் பின்வாங்கி அது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்கிறார். கருணாநிதி மௌனம் சாதிக்கிறார். தனி நாடு ஒருபோதும் சாத்தியமில்லை என்றும் முற்றுகையை விலக்கிக் கொள்ளச் சொல்லியும் இந்திய அரசு புலிகளை மிரட்டுகிறது. அந்தத் தருணத்தில் புலிகளின் ஆதரவாளர்களாகச் சொல்லிக் கொண்டிருந்த நெடுமாறனின் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் இம்மிரட்டலை ஒரு மிகப்பெரிய வெற்றியாகச் சொல்லுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் சிங்களப் பேரினவாத அரசிற்கு ஆதரவாக, தமிழ் மக்களின் உரிமைக்கு எதிராக இந்திய அரசு தலையிடுகிறது என்ற அரசியல் ரீதியான விமர்சனத்தைக்கூட இவர்கள் முன்வைக்கவில்லை.

இப்படிப்பட்ட மண்குதிரைகள் மீது தான் புலிகள் சவாரி செய்தார்கள். இவ்வான முழுச் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளை நம்பித்தான் தமிழ் நாட்டில் தமது ஆதரவுத் தளத்தை நெறிப்படுத்தினார்கள்.
இந்தமாதிரியான சக்திகள் அவர்களின் சொந்த நலன்களிற்கு ஏற்றவாறே தமது ஈழ அரசியலை நகர்த்திச் சென்றனர்.
83 இல் இனப்படுகொலை நடந்த போது தமிழ் நாடே ஸ்தம்பித்துப்போனது. ஆனால், இந்தக் காரணிகள் எல்லாம் சேர்ந்தே 2009 இல் கொத்துக் கொத்தாக மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது எதிர்ப்பார்த்தளவில் எதுவும் நடக்கவில்லை.
Dr. V. Pandian
தோழர்களே!
இந்த "இவான்" நான் சொன்னதை அப்படியே நிரூபிக்கிறார் பாருங்கள்!

எனது மடலைக் கவனமாகப் படித்தாலே போதும் இவரின் புலம்பல்களுக்கெல்லாம் அதில் பதில் உள்ளது.

//
"பார்ப்பனத் தலைமை, புலிகளை எதிர்ப்பவர்கள், தமிழ் தேசியத்தை எதிர்ப்பவர்கள், இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள்" இதைத் தவிர வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள், பேசலாம்.
//

அட கன்றாவியே! இதைத் தவிர வேறு என்ன எழவு இருக்கிறது உங்கள் இயக்கத்தில், அதைப் பற்றி விவா.....திக்க! எல்லாமே தமிழனைத் திட்டமிட்டுக் கெடுக்கும் நிலைப்பாடுகள். வேறு என்ன உள்ளது?

உலகில் இன்று எவனுமே சர்வதேசியவாதி இல்லை. தமிழர்கள் மிகவும் நம்பிய பிடல் காஸ்ட்ரோவும், சாவேசும் கூட ஓனாய்க்காக ஓட்டுப் போட்டபின், என்ன மசிர் சர்வதேசியம் வாழ்கிறது?

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்று, உலகின் தற்போதய 80% மொழிகள் உருவாவதற்கு முன்பே, உன்னதமான சர்வதேசியம் பேசிய தமிழனுக்கு, பாடம் எடுக்க வந்துவிட்டான்கள் இந்த நவீன பார்ப்பான்கள்.

உலகின் மக்கள் தொகையில் மங்கோலியரும், வௌ்ளையரும் தான் பெரும்பாண்மையினர். இவர்கள் கருப்பர்களைக் கேவலமாக நினைப்பவர்கள். உலக வரலாறு கறுப்பர்கள், மற்ற வண்ணத்தினரால் வதைபட்டார்கள் என்று தான் சொல்கிறது. அப்படி இருக்கும் போது, மருதய்யப் பார்ப்பான் சர்வதேசியம் பேசுகிறாறென்றால் அதன் பொருள் என்ன?

தமிழரின் ரத்தத்தை அட்டை போல காலாகாலமாக உருஞ்சிய மருதய்யன்களுக்கு என்ன புதிய கரிசனம்? பார்ப்பானை நம்பிக் கெட்டதெல்லாம் போதாதா?
Dr. V. Pandian
இந்தப் புரச்சியாளர்கள், ஏதோ தமிழ் தேசியம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரானதென்பது போல, திட்டமிட்டு திரிக்கிறார்கள்.

உண்மை என்ன?

இன்று பீகார், உ.பி, ம.பி போன்ற மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான வன்முறை சற்றும் தளராமல் உள்ளது. அங்கு பள்ளிகளில் கூட தனியாகத்தான் அமர்கிறார்கள்.

ஆந்திராவில் கூட ஆயிரம் ஏக்கர் நில உடைமையாளர்கள் எண்ணற்றோர் உள்ளனர். தமிழகத்தில் உண்டா? தமிழகத்தில் தாழத்தப்பட்டோரின் நில உடைமை வெகுவாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் தான் 69% சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. அதுவும் இஸ்லாமியர்களுக்கும், அருந்ததியினருக்கும் உள் ஒதுக்கீடு கொடுத்த மாநிலம் தமிழ்நாடு.

நாங்கள் சொல்வதும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சமூகத்துக்கும், மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்பது தான். அந்த இட ஒதுக்கீடு சட்டசபை இடங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பது தான். போதுமா?

தமிழ் தேசியத்தின் நோக்கம், இங்கு பல்நெடுங்காலமாக வசித்துவரும் அனைத்து மக்களுக்கும், சம உரிமையுள்ள நல்வாழ்வு அமைவதே!
Dr. V. Pandian
பெரியார் ஒரு தமிழ்த்தேசியவாதி தான். அவர் மேல்சாதிக்காரர் தான். ஆனால், தமிழக ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை மாற்றத்தில், சென்ற நூற்றாண்டில் அவரது பங்கு மகத்தானது.

அதற்கு முந்தய நூற்றாண்டிலே வள்ளலார் அவர்கள் ஆதிக்க சாதியைச் சேரந்தவர் தான். வேறுபாடுகளற்ற "தூய நல்வழி" (சுத்த சன்மார்க்க) கொள்கையை வகுத்து, எந்தவித பேதங்களற்ற சமூகத்தை உருவாக்கவே வாழ்ந்தவர்.

தமிழகம் உலகிலேயே அற்புதமான தத்துவங்களும், வாழ்வியலும் தோன்றிய இடம்.

ஆசீவகம்.
வள்ளுவம்.

அறிவியல் தோன்றிய இடம்.

ஆதிகாலத்தில் மக்களின் சிக்கல்களை பட்டி மன்றங்கள் மூலம் தீர்த்துக்கொண்ட, ஒரு பகுத்தறிவு இனம் தமிழினம்.

நம்முள் தோன்றிய வேறுபாடுகள் இங்கு வந்தேறிய பல்வேறு வந்தேறிகளால் தான். வந்தேறிகள் மன்னின் மக்களைப் பிறித்தாள்வார்கள் என்பது வரலாறு சொல்லும் பாடம்.

தமிழருக்குள் உள்ள சிக்கல்களைக் கலைந்துகொள்ளக் கூடிய அடிப்படைகள் தொன்மை வாய்ந்த நம்மினத்திற்கு உண்டு.

கெடுக்கும் எண்ணத்துடன் செயல்படும் கட்சிகள், இயக்கங்களால் உருவாக்கப்படும் சிக்கல்களை, உணர்வின் அடிப்படையில் அனுகாமல், சிந்தித்து காரண, காரியங்களை அலசி, செயல்பட்டால் வெற்றி நமதே!

தமிழினத்தின் அனைத்துப் பிறிவுகளிலுமே "கருணாக்கள்" உண்டு என்ற எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.
Dr. V. Pandian
நிர வேறுபாடு இந்த உலகை ஆள்கிறது. கறுத்த நிரமுடைய மக்கள் அவதியுறும்போது இந்த உலகம் கண்டுகொள்ள மறுக்கிறது. இது பிரான்ஸிஸ் பாய்ல் என்ற இனப்படுகொலைக்கெதிரான அமெரிக்க போராளி சொன்னது. அதோடு இந்தியா ஆரியர் எனப்படும் வௌ்ளையர்களால் ஆளப்படும் நாடு. ஈழம் சார்ந்த இந்தியாவின் நிலைப்பாடு அபாயகரமானது, என்றெல்லாம் சொன்னார்.

இந்த உலகத்தில் கறுத்த இனமக்களைவிட, இரண்டு மடங்கு அதிக தொகையில் உள்ளனர் கறுப்பரல்லாத, ஆப்பிரிக்க, மங்கோலிய, ஆரிய, யூத, ஆங்லோ சாக்ஸ, ஹிஸ்பானிய போன்ற பல மக்கள் கூட்டங்கள்.

கறுப்பர்கள், தமிழர்கள் உட்பட, வராலாற்றில் மாபெரும் துன்பங்களை காலாகாலமும் அனுபவித்து வாழந்துவரும் சமூகம். கறுப்பர்கள் கஷ்டப்பட்டால் ஆடு, மாடுகள் கஷ்டப்பட்வதைப் போலத்தான் இந்த "வௌ்ளை" உலகம் பார்க்கிறது.

ஈழத்தவர் கறுத்தவர் என்பதால் தான் அழிக்கப்பட்டார்கள் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார், பிராஸிஸ் பாய்ல். ஆதேபோலத்தான், எந்த வௌிநாட்டிற்கும் எந்த தீங்கும் செய்யாத புலிகளை இந்த ஒட்டுமொத்த வௌ்ளை உலகம் தடைசெய்தது, "வௌ்ளை" இந்தியா உட்பட. புலிகள் அழிவதை அனைத்து "வௌ்ளை" உலகமும் ஆதரித்தது, அவர்களோடு அப்பாவி மக்கள் அழிவதையும் கண்டு கொள்ளவில்லை. எல்லாமே தெரிந்திருந்தும்!

அதையேதான் "சர்வதேசியம்" பேசும் மகஇக வும் செய்தது. ஏனென்றால், மகஇக வின் மகுடமே "வௌ்ளைப் பார்ப்பாரியம்" தான். இவர்களின் சர்வதேசியம் நம்மை எங்கு கொண்டு விடும் என்று ஊகிக்க முடிகிறதா?

ஒடுக்குகின்ற வௌ்ளையன் சர்வதேசியம் எண்ணமாட்டானாம்!

ஒடுக்கப்படும் கறுப்பன் சர்வதேசியம் பேசி, நாசமாய்ப்போக வேண்டுமாம்!

நமக்கான ஒரு வலுவான தேசத்தைக் கட்டமைத்துக் கொண்டு, "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற உன்னதமான சர்வதேசியத்தை உருவாக்கப் பாடுபடுவோம் தோழர்களே!

உலகின் மூத்தக்குடியான நமக்கு அந்தப் பொறுப்பும் கடமையும் உள்ளது. அதை அடைய தமிழ் தேசியம் ஒரு அடிப்படையானத் தேவை.

1.4 கோடி சிங்களன் சொல் அம்பலமேறுகிறது. 10 கோடி தமிழனின் கதறல்கள் உலகின் காதில் விழவில்லை. சிங்களனுக்கு தேசமுள்ளது. தமிழன் நாதியற்றவன்!

நமக்கான தேசம் இன்றியமையாதது! இதற்கெதிராகப் பேசுபவன் கடைந்தெடுத்த அயோக்கியன்!
லார்ட் லபக்கு தாஸ்
மாண்புமிகு புரச்சி அவர்களே !!

தமிழ் தேசிய புரச்சி கற்பனாவாதத்தை அடிப்படையாக கொண்டது எனில்...இந்திய தேசிய புரச்சி எதை அடிப்படையாக கொண்டது ? அது சாத்தியமா ?
லார்ட் லபக்கு தாஸ்
சர்வதேசியம் பேசும் ம.க.இ.க தான் செய்துள்ளது. ////

ஒங்களுக்கே இது தமாசா தெரியலையா, இந்திய தேசிய புரச்சிக்கே வழிய காணோம் இண்டர்நேசனல் புரச்சிக்கு போயிட்டாங்களா, ஏனுங்க தெரியாம தான் கேக்குறேன் ஸ்டாலின், மாவோ இப்படி மத்த நாட்டு தலைவர்கள பத்தி பேசிட்டாலே அது சர்வதேசியமா ?
புரச்சி
//
சாதி எதிர்ப்பு, பார்பனிய எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு, தமிழுக்காக போராட்டங்கள், விழா இத்துனையையும் செய்யும் ஒரு அமைப்பை எதுவுமே செய்யாத இவர்கள், எந்த ஒரு தரவுகளும் இல்லாமல் விமர்சனம் செய்வது அரைத்த மாவு இல்லையாம்.
ஏன் நீங்க எதுவுமே செய்யலைன்னு கேட்டாலும் பதில் சொல்ல மாட்டாங்களாம். அவங்க கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக நாம் பழைய பதிவை மறு பதிப்பு செய்தால் அது அரைத்த மாவு.//

லபுக்கு தாசு... மேல உள்ளதுக்கும் அப்படியே ஏதாவது காமேடி பீஸா பதில் சொல்லிரு கண்ணு... வாய் விட்டுச் சிரிச்சு ரொம்ப நாளாகிப் போச்சி... ஒன்ன மாதிரி ஆளுங்கதான் இணையத்துல ஒன்னாம் நெம்பர் எண்டடெயின்மெண்டு

புரச்சி
புரச்சி
////.ம.க.இ.க..பார்ப்பான் தலைமை..ன்னு சொல்லச் சொல்லுது. அப்படின்னா சின்னக்குத்தூசி..வ.கீதா இவங்கள் எல்லாம் எப்படிப்பட்டவங்க? இவங்களும் பார்ப்பன சாதிக்காரங்கதானே?//

கவி கேட்டது மேலே இருக்கிறது, இதுக்கு நெரடியா ஆம் இல்லைனு சொல்லிட்டு அத விளக்குவது சுலபமான வேலை. அதை விட்டு விட்டு சம்ப்ந்தா சம்பந்தமில்லாமல் லெக்சர் அடிக்கிறார் பாண்டியன்... டாக்டர் பாண்டியன்.... இதுல பில்டப்பு வேற...

மருதையன் பார்ப்பன தலைமை எனில் வ. கீதா, சின்னக் குத்தூசி போன்றோருடன் கூடிக் குலாவும் பெரியாரிய, தமிழ்தேசியவியாதிகள் யார்? அவர்கள் பார்ப்பன தலைமைகளின் நண்பர்களா?

மேலும், செயா மாமியுடன் கும்மி அடித்தவர்களும், ஆர் எஸ் எஸ்க்கு ஜால்ரா தட்டி பெதிக தோழர் ராமகிருஷ்ணனை மேடையில் அவமானப்படுத்திய நெடுமாறன் போன்றோரும், இந்து பார்ப்பன் மதத்துக்கு வக்காலத்து வாங்கிய பெ. மணியரசன், ராசேந்திர சோழன் போன்றோரும் பார்ப்பன தலைமைகளா அல்லது கருப்பு பார்ப்பனத் தலைமைகளா?

டாக்டர் பாண்டியன் தனது சீரிய அறிவை பயன்படுத்தி இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்..,...

ஆமாம்... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி...

புரச்சி//

டாக்டர் பாண்டியன் மேலே உள்ள எமது பின்னூட்டத்திர்கு பதில் சொல்லாமலேயே ஓடி வந்துவிட்டார். அவருடன் கவி நடத்தி வந்த கிடுக்கிப் பிடி விவாதத்திலிருந்து எஸ்கேப் ஆகி இங்கு ஒளிந்து கொண்டுள்ளார். அவரை அன்புடன் கீழே உள்ள கட்டுரைக்கு வந்து விவாதத்தை தொடருமாறு நிர்பந்திக்கிறேன்.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=405:2009-09-03-10-18-32&catid=1:articles&Itemid=3

டாக்டரிடம் விளக்க்ம் கோரும்,
புரச்சி
Dr. V. Pandian
கவி அவர்கள் எனது பதிலில் ஏற்படைந்திருக்கிறார். கேள்வி கேட்ட அவர் எனது பதிலுக்கு மறுப்பளிக்கவில்லை. ஆனால், புரச்சியாளர் புரியாமல் திகைக்கிறார். தொந்தரவு செய்கிறார். பேராசிரியர்கள் தங்களின் கல்வித்தகுதிக்குகந்த வகுப்புகளுக்குத் தான் பாடம் எடுக்க வேண்டும். சிறுவர்களுக்கும் சிறது கல்வி புகட்டலாம். ஆனால், அங்கேயே அதிக நேரம் செலவிடுவது, பேராசிரியர் தனது கல்வித்திறனை வீணடிக்கிறார் என்றே பொருள்படும்.

புரச்சியாளர் எனது பதிலை ஒன்றுக்கு பல முறை படித்துப் பார்க்கட்டும். பல முறை படித்தால் புரிய வாய்ப்புண்டு. இல்லையேல் எனது விடையை மற்றவர்களிடம் காட்டி விளக்கம் கேட்டுக் கொள்ளட்டும்.

ஆனால், இதுவரை நான் கீற்றில் பதியாத ஒரு கருத்து பற்றி அவர் கேட்டதை மட்டும் சற்று விளக்கிவிடலாம் என்று நினைக்கிறேன். நான் தமிழ்த்தேசியம் பற்றி மணியரசன் கொள்கையுடன் ஒத்துப் போகிறவர். மற்றும் தியாகு, ராஜேந்திர சோழன் போன்றவர்களின் கருத்துகளும் பெருமளவு ஒன்றே என்று கருதுகிறேன்.

மணியரசனின் நாத்திக நிலைப்பாட்டைப் பற்றித் தான் இங்கு கேள்வி. அவர் இந்து மதத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், மக்களின் ஆன்மீக சிந்தனைகளை சற்று பரிவோடு எதிர்கொள்வோம் என்கிறார். அதோடு, நமது முதன்மையான சமுதாயப்பணி நிகரமை சமூகம் அமைப்பதே! அது அமையும் போது இயல்பாகவே இவை எல்லாம் சரியான பாதைக்கு வந்துவிடும்.

வழமையாக, இந்த பதில் புரச்சியாளரை திருப்திப் படுத்தாது. அதனால், கீற்றில் தௌிவான ஒரு கட்டுரை பிறகு எழுதிவிடலாம்.

இப்போதைக்கு சில சிந்தனைகள்.....

அறிவும், அஞ்சாமையும் கொண்டவர்களுக்கு ஆன்மீகம் தேவையில்லை. இவை இரண்டும் ஒரு சேரப் பெற்றவர்கள் மிகச் சொற்பமான மக்களே! பலவந்தமாக நாம் திணிக்க நினைக்கும் எதற்கும், நேரெதிரான விளைவுகளே கிட்டும்.

எளிய மக்களின் ஆன்மீக சிந்தனை, ஒரு மனோதத்துவ மருத்துவரின் தேவையை தவிற்கிறது. ஆன்மீகத்தோடு கலைகளும் வளர்கின்றன. சிற்பக்கலை, நாட்டியக்கலை, இசைக்கலை, நாடகக் கலை, கட்டிடக் கலை, இன்னும் எவ்வளவோ!

இந்து மதம் என்ற கீழ்மைக்கும் அப்பால், நமது கோயில்கள், நமது முன்னோர்களின் மாண்புகளின் நிலைக்களன்களாக உள்ளன. பலப்பல தமிழர் கோயில்கள் "World Heritage Monuments" ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அக்கோயில்கள் நமது வரலாற்று ஆவணங்ளாகவும் உள்ளன. அவை நமது பழம்பெரும் மரபுகளின் நிலைக் களன்களாகவும் உள்ளன.

ஒரு சிறிய எடுத்துக்காட்டாக, "சிவலிங்கத்தின் கதை (வரலாறு)" என்ற எனது கட்டுரை கீற்றின் இலக்கியப் பகுதியில் உள்ளது. படித்துப் பார்க்கவும்.

தமிழ் மக்களின் ஆன்மீகம் அவர்களின் பொழுது போக்கிற்கான தளமாகவும் இருந்துள்ளன. ஊரே கூடிக்குலாவும் ஒரு பண்பாட்டுக் களமாகவும் உள்ளன.

இன்னும் எவ்வளவோ.... ஆக, வரட்டுத் தனமான நிலைப்பாடுகள் வேண்டாம். மனிதன் ஒரு "Robo" இல்லை. மனிதனை எந்திரமாக மூட்டை கட்டாதீர்கள்.

பெரியார் என்ற ஒரு மாமனிதன் தனது வாழக்கையை முழுதும் அற்பனித்தும் இந்த திசையில் பயணளிக்கவில்லை என்பதை அறிந்து, வரலாற்றைக் கொண்டு நமது தத்துவங்களைச் செழுமையாக்கிக் கொள்வோம்.

இங்கே எமது அண்ணன் "தம்பி பிரபாகரன்" சொன்னதை நினைவு கூர்ந்து முடிக்கிறேன்.

"இயற்கை எனது நன்பன். வரலாறு எனது தத்துவாசிரியன். வாழ்க்கை எனது வழிகாட்டி."
தியாகு
//அதையேதான் "சர்வதேசியம்" பேசும் மகஇக வும் செய்தது. ஏனென்றால், மகஇக வின் மகுடமே "வௌ்ளைப் பார்ப்பாரியம்" தான். இவர்களின் சர்வதேசியம் நம்மை எங்கு கொண்டு விடும் என்று ஊகிக்க முடிகிறதா?//

வெள்ளையா இருக்கிறவன் கருப்பா இருக்கிறவன அழிக்கிறான். குண்டா இருக்கிறவன் ஒல்லியா இருக்கிறவன உதைக்கிறான். ஆணா இருக்கிறவன் பெண்ணா இருக்கிறவள கற்பழிக்கிறான். இளமையா இருக்கிறவன் முதுமையாய் இருக்கிறவன அவமதிக்கிறான்

இதை சொல்ல ஒரு பாயில் வரவேண்டியதில்லை
நம்மல்ல நிறைய பேரு வாயிலயே இதெல்லாம் வரும்.
இதுதான் ஒரு சமூக அறிவியல் கண்ணோட்டமா
இயங்கியல் சிந்தனையா

சமூக அரசியல் வர்க்கத்தன்மை இதில் என்ன உள்ளது

வெள்ளையா இருக்கிறவனெல்லாம் ஈராக்கில் கொள்ளப்பட்டத்த்ற்கு வெள்ளையா இருக்கிறவந்தான் காரணமா

சேர்மார்க்கெட் வீழ்ச்சிக்கு வெள்ளையா இருக்கிறவன் காரணமா பொருளாதார காரணமா

என்ன பாண்டியன் சார் ரொம்ப உளர்றீங்களே

தியாகு
Dr. V. Pandian
வௌ்ளையன் கறுப்பனை அழிக்கிறான் என்பது ஒரு அடிப்படையான சமூக, அறிவியல் கண்ணோட்டம் தான். அது தான் அப்பட்டமான இந்திய இயங்கியலின் நடுப்பகுதி.

இங்கு வந்தேறிய "வௌ்ளைப்" பார்ப்பான் இந்தியாவில் "வர்ணங்களை" உருவாக்கினான். வர்ணங்கள் என்றால் என்ன தோழரே! அது நம்மை எல்லாம் எப்படி நாசப்படுத்தியது என்று அறிந்துள்ளீர்கள் தானே!

நமது சமூகம் சார்ந்த "இயங்கியலையும்" சற்று உள்வாங்கிக் கொள்ளுங்கள். மார்க்ஸிய "அடிப்படைவாதிகளான" உங்களுக்கு பகுத்தறிவு எட்டுமா?

அடுத்து, வௌ்ளையர்கள் செய்த அட்டூழியங்களை எல்லாம் பட்டியலிட்டுள்ளீர்கள். வௌ்ளையர்கள் கறுப்பர்களை அழிக்கிறார்கள் என்பது மட்டும் முழுஉண்மையல்ல. வரண்ட பனிப்பிரதேச மக்களான அவர்கள், பற்றாக்குறையால் சூதாலும், வன் கவர்தலாலும் ஒருவரை ஒருவர், தம்மினத்துக் குள்ளேயே, அழித்துக் கொண்டுதான் வாழந்து பழகியவர்கள். ஆக, இவை அவர்களுக்கு புதிதல்ல.

அப்படிப்பட்ட மக்கள், கறுத்த, தம்மினமில்லாத, இந்திய மக்களை என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்று நீங்கள் கற்பனை செய்து பார்க்க வேண்டியதில்லை. சற்று, நமது வரலாற்றை மட்டும் திரும்பிப் பார்த்தாலே போதும்.

மனிதன் தோன்றிய, வளமான மன்னில் வாழும் கறுத்த தமிழன், இங்கு பிழைக்க வந்த கண்டவனையெல்லாம் தன்னை ஆள்கின்றவர்களாக ஏற்றுக்கொள்ளும் பரந்த(?), இளித்த வாயர்களாக(?) உள்ள வரலாறும் நீர் அறிந்த ஒன்றுதான்.

எனவே மீண்டும் சொல்கிறேன்! பார்ப்பானை நமது தலைவனாக ஏற்பது என்பது வரலாற்றைப் புறந்தள்ளிய, தற்கொலைக்கீடான செயல். அறிவீனம்!

மீண்டும் சொல்கிறேன்! ஈழப் படுகொலையின் பின்னால் மருதய்யன்கள் தான் உள்ளார்கள்.
புரச்சி
டாக்டர் பாண்டியன் பேராசிரியராம் அதனால அவர் சொன்னத எல்லாரும் நம்பிடுங்கப்பா.. மேலும், சின்னப் பயபுள்ளைக்ளுக்கெல்லாம் அவ்ரலா பாடம் நடத்த முடியாதாம். ஏன்னா அவர் பேராசிரியராம். இப்படியாப்பட்ட பேராசியர்தான் படித்தும் முட்டாளாக இருக்கும் முக்கால்வாசி தமிழனுக்கு தமிழ்தேசியத்தின் தேவையை உணர்த்திவிடுவார் என்பதையும் நாம் நம்புவோம்.

கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல் முடியல இதுல சமாளிப்ஸ் வேற...

ஒரு சவால் வைச்சிக்கலாமா பாண்டியன்? நீங்க உங்க அரசியலை வைச்சி கட்டுரை எழுதுங்க் அத நான் டவுசர் கழுட்டுறேன். ரெடியா? நீங்க பேராசியரா இல்ல நானான்னு பாத்துறலாம்.
புரச்சி
//மீண்டும் சொல்கிறேன்! ஈழப் படுகொலையின் பின்னால் மருதய்யன்கள் தான் உள்ளார்கள். //

ஈழப் படுகொலைகளின் பின்னால், புலிகளின் அழிவின் பின்னால் பிழைப்புவாத, சந்தர்ப்பவாத தமிழ் தேசியவாதிகள்தான் உள்ளனர் என்பதை பாண்டியன் சொல்லுவது போல புரளி போல பேசவில்லை நாங்கள். ஆதாரப் பூர்வமாகவே, தர்க்கரீதியாகவே பேசினோம்.

அவ்வாறு எதுவும் செய்யத் துணிவில்லாத பேராசியர் தமது அறிவு மேதமையை அங்கீகரிக்கக் கோரி எஸ்கேப் ஆகிறார்
புரச்சி
எமது ஈழ நிலைப்பாடு குறித்து பொய்யையும், புரட்டையும் மட்டுமே கொண்டு அவதூறாக எழுதியுள்ள அதிரடியான் மற்றும் அவரது அடிபொடிகள் மேலும் டாக்டர் பாண்டியன் போன்றோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள ம க இ க வெளியீடை படித்து தெளிவடையுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் !
http://www.vinavu.com/wp-content/uploads/2009/09/Eelam_Santharpa.pdf

http://www.vinavu.com/2009/09/11/eelam-book-1/

புரச்சி
Dr. V. Pandian
புரச்சியாளர் குழந்தாய்!

அடுத்தவர்களின் "டவுசர் கழட்டுரது" தான் உங்கள் இயக்கத்தின் அடிப்படையான தராதரம் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், பாவம் அம்மனமாகி நிற்பவர்கள் நீங்கள் தான். எனவே, இனி அடுத்தவன் "டவுசரைக் கழட்டுரதுக்கு" முன்பு, தானாக தளர்ந்து விழும் உங்கள் டவுசரின் நாடாவை சற்று இறுக்கமாக கட்டிக் கொள்ளுங்கள். ஏனென்றால், ஈழக்காற்று சற்று கனமாகத்தான் வீசுகிறது. பல டவுசர்கள் தானாக கழண்டு விழும் ஆபத்து உள்ளது. உஷார்!!!!

சரி.......! மேல் வகுப்பிற்கு வாருங்கள் குழந்தாய். பிறகு விவாதிக்கலாம்!

முற்றும்.
Dr. V. Pandian
சர்வதேசியவாதியின் எழுத்துக்களில் விரக்தி தெரிகிறது. வாழ்த்துக்கள். எங்களுக்கும் நேரமில்லை தான். என்ன செய்ய, பார்ப்பனீயத்தால் முட்டாளாக்கப்பட்ட எமது சமூகத்தை மீட்க கடினமாக உழைக்க வேண்டியுள்ளது.

தமிழர்கள் மூத்தக்குடிகள் தான். உலகிலேயே சிறந்த மக்கள் தான். அறிவாளிகளாகவும், தொழுல்நுட்ப அறிஞர்களாகவும் இருந்தவர்கள் தான். ஆனால் என்ன செய்ய, 4000 ஆண்டுகளுக்கு முன்பு "மருதய்யன்கள்" இங்கு நுழைந்தார்கள்.

பிடித்தது தருத்திரம் எங்களுக்கு!

இன்று நாங்கள் அடிமைகள். அம்மாஞ்சிகள். சொறனையற்றவர்கள். ஏமாளிகள். எதிரியின் காலை நக்கிப் பிழைப்பவர்கள். சாதிகளாகப் பிரிந்து ஒருவரோடு ஒருவர் அடித்துக் கொள்பவர்கள். அத்தனையும் உண்மை! என்ன செய்ய 4000 ஆண்டுகளாக "மருதய்யன்கள்" சாதித்த "சாதனை" இது.

வள்ளுவத்தைக் கொடுத்த மாண்புமிகு கறுத்த தமிழ் மக்களை, அவர்களின் அறிவு நுட்பத்தைக் கண்டு அழுக்காறு கொண்ட மருதய்யன்கள், அவர்களை, மன்னர்களின் துணைகொண்டு, அடக்கி, ஒடுக்கி, அவர்களின் அறிவுச்செல்வங்களைப் பிடுங்கிக் கொண்டு, நிரத்தைக் காட்டி தீண்டத் தகாதவராக்கி, தாழ்த்தி, அத்தகு மறையர்களை பறை அறிவிக்கும் பறையர்களாக ஒடுக்கினார்கள். வௌ்ளைப் பார்ப்பானிலிருந்து கறுத்த பறையன்வரை ஐந்து வர்ணங்களை உருவாக்கி, தமிழர்களைப் பிறித்து, அவர்களுக்குள் சிண்டு முடிக்கவிட்டு, வளமாகப் பிழைத்தனர், இந்த மருதய்யன்கள். (இந்த "அழுக்காறு" பற்றி நன்றாக புரிய வேண்டுமானால், சிங்கள ஆரியர்களால் 1981ல் கொளுத்தப்பட்ட, யாழப்பான தமிழ் நூலகத்தை நினைவு கூறுங்கள்.)

அதையே தான் இந்த மருதய்யனும் செய்கிறார். மாயாவதி உத்திரப் பிரதேசத்தில் பாரப்பானோடு கூட்டு சேரந்து ஜெயித்த உடன், இங்கே ஒரு குருமூர்த்தி என்ற பாரப்பான் கட்டுரை எழுதினார். தமிழகத்திலும் பாரப்பனர்கள், தாழ்த்தப்பட்டவர்களோடு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று எழுதினார். அவரது ஒவ்வொரு எழுத்திலும் அடக்கமுடியாத நஞ்சு வௌிப்பட்டது. இந்த அடிப்படையில் "சர்வதேசியர்களை"ப் புரிந்து கொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை இவர்கள் எதிர்க்கவில்லையாம். பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை மட்டும் தான் இவர்கள் எதிர்க்கிறார்களாம்.

பொதுவாகவே ஒரு கனமான உண்மையை நாம் உணரவேண்டும்.

தமிழகத்திலுள்ள சிறபாண்மையினர், பார்ப்பனர் உட்பட, தமிழகத்தின் பிற்படுத்தப்ட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் பிரிவினையை, திட்டமிட்டு உருவாக்குகின்றனர். இந்த இரு சமூகங்களும் அடித்துக் கொள்வது தான் அவர்களது பாதுகாப்பு என்பது அவர்களின் புரிதல். அதனால், அவர்கள் திட்டமிட்டு தாழ்த்ப்பட்ட மக்களுக்கு ஆதரவாக எழுதுவது போல வேடமிட்ட்டு நமக்குள் சிண்டு முடிக்கின்றனர். இதில் சில பெரியார் புகழ்பாடும் "பெரியாருக்கெதிரான" குப்பல்களும் அடங்கும். அடித்துக் கொள்ளும் சமூகங்கள் வளர்ச்சி காணாது அல்லவா? ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல, இவர்கள் நன்றாக கொழுப்பார்கள் பாருங்கள்!

பிரம்மா போன்ற சில தெய்வங்களைத் தவிர, "இந்து" மதம் எனப்படும் மதத்தில் உள்ள தெய்வங்களெல்லாம், தொல்பழங்கால தமிழ் மக்களின் வழிபடு தலைவர்கள் தாம். அந்த தெய்வங்களை பாலியல் ரீதியாக, திட்டமிட்டு கெடுத்து,, அக்கப்போறு புராணக்கதைகளைச் சொல்லித்தான், இந்து மத தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர். இவற்றை மீட்டெடுப்பது என்பது ஒரு வரலாற்றுக் கடமை. பிராமணனுக்கு முந்தய பண்பாடு ஒன்று இருந்ததே! அது "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற அடிப்படைப் பண்பாடு.

ஆக, ஒரு இனத்தின் வரலாற்றை மீளாய்வு செய்வது வெவ்வேறுபட்ட பலப்பல துறைகளிலும் புதிய வௌிச்சத்தைக் கொடுக்கும். வரலாற்று ஆய்வு என்பது ஒரு இனத்தின் இறையண்மைக்கு உட்பட்ட விடயம். இதில் வேற்றினத்தார் நம்மை வழிநடத்த வேண்டியதில்லை! வேற்றினத்தார் பிழையில்லாமல் சொல்லும் நல்லவற்றை ஏற்போம்! நமது நல்ல குணங்கள் நமது ஏமாளித்தனத்தின் முகமூடியாக அமைந்து விடக்கூடாது.

பார்ப்பானின் மொழி வெறியை பெரியார் என்ற பிற்படுத்தப்பட்ட தமிழத்தேசியவாதி எதிர்த்துப் போராடவில்லையா? பச்சைப் பொய் சொல்வது சீர்குலைவு சக்திகளின் இயல்பு.

சர்வதேசியர்களுக்கு ஒரு கேள்வி:

சில தினங்களுக்கு முன்பு, இவர்கள் பாடும் சாவேஸ், இலங்கை ரத்தக் காட்டேறியிடம், லிபியாவில், பிரபாகரனின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வெற்றியடைந்தமைக்காக கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார். அவர் பிடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய தோழர். இந்த வெட்கங்கெட்ட மகஇக வைப்போலவே, ஒரு "சர்வதேசியவாதி". அந்த சாவேஸ், கம்பிவேலி மக்களை விடுவிக்கக் கேட்கவில்லை. சாவேஸுக்கு இலங்கை செய்வது பயங்கரவாதமல்ல. பிரபாகரனின் விடுதலை இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம். இவர்களின் "சர்வதேசியத்தின்" அழகு இது தான்!

இவ்வளவுக்கப்புரமும் "சர்வதேசியம்" பேசும் இந்த நாசகாரக் கும்பல் தமிழகத்தில் எதற்கு?
வர்க்க உணர்வுள்ள தமிழன்
இந்த டாக்ட்டர் பாண்டி பேராசிரியரா ? சரி அப்படினா கேட்க வேண்டியத‌ கேட்டுற வேண்டியது தான் உங்கள் தமிழ்தேசிய புரட்சிக்கு திட்டம் என்ன, எப்படி புரட்சியை நடத்தப்போகிறீர்கள் ? எந்த தத்துவத்தின் ஒளியில் உங்கள் புரட்சி பயணம் போகிறது. இதை சாதிப்பதற்கான கட்சி அமைப்பு எது ? ‌இதையெல்லாம் கொஞ்சம் விளக்குறீங்களா அய்யா ?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.