1
பவிக்குட்டி
கதைகேட்கும் நேரங்களில்
சொல்லியிருக்கிறேன்
கல் ஒன்று
உயிர் பெற்று
சிங்கமாக மாறியதையும்
அது
ஒரு தேவதையின் காலடியில்
வீழ்ந்து கிடப்பதையும்
இது
உண்மைக்கதை
என முடிவில்
கூறுபவனைக் கேட்பாள் பவிக்குட்டி
‘இது எப்படி சாத்தியம்?’
உண்மைதான்
சந்தேகமெனில்
சித்ராவைக் கேள் என்பேன்.
2
நள்ளிரவுப் பேருந்தின்
ஜன்னலோர இருக்கையில்
அழுதபடி
பயணிக்கும் ஒருவனை
கண்டிருக்கிறீர்களா?
கூடத்தில்
கிடத்தப்பட்டிருந்த
ஷபியின் அம்மாவுக்கு
மாலை வாங்க
விரைபவனைப் பார்த்து
கையசைத்த குழந்தைக்கு
பதிலுக்கு
கையசைக்காமல் வந்தது
நினைவுக்கு வந்திருக்கலாம்.
பிற்பகல் கிடைத்த
தோழியின் விவாகரத்து
நகல்
அவன் கையில்
இருந்திருக்கலாம்.
புதரடியில்
கிடந்த சிசுவை
கண்டு
வெறுமனே திரும்பியது
உறுத்தியிருக்கலாம்.
அல்லது
இன்றைக்கும்
அவனைச் சந்திக்க
சித்ரா வராதிருந்திருக்கலாம்.
3
இன்றும் நிகழவேயில்லை
சித்ராவின் வருகை
வழக்கமாய்
சித்ரா வராத நாட்களில் அகப்படும்
ஏதோவொரு வாகனத்தில்
அடிபட்டு
முகம் சிதைந்த மனிதன்
அல்லது விலங்கு
தார்ச்சாலையில்
கால்களில் மிதிபடும்
ஒற்றைரோஜா
அல்லது மல்லிகைச்சரம்
எதுவும் இன்றில்லை
இசையால்
சொல்லிச் சென்றான்
சித்ரா வராததை
பேருந்து நிறுத்தத்திலிருக்கும் எல்லோரிடமும்
பார்வையற்ற குழல் விற்பவன்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- வே.பாபு
- பிரிவு: புதுவிசை - ஜனவரி 2006