மாங்கிளியும் மரங்கொத்தியும்
கூடு திரும்பத் தடையில்லைmother cry eelam
நாங்கள் மட்டும் உலகத்திலே
நாடு திரும்ப முடியவில்லை
நாடு திரும்ப முடியவில்லை

சிங்களவன் படைவானில்
நெருப்பை அள்ளிச் சொரிகிறது
எங்கள் உயிர்த் தமிழீழம்
சுடுகாடாய் எரிகிறது

தாயகத்துப் பிள்ளைகளின்
நெஞ்சுகளைக் கிழிக்கிறான்
காயாகும் முன்னே இளம்
பிஞ்சுகளை அழிக்கின்றான்

பெற்றவங்க ஊரிலே
ஏங்குறாங்க பாசத்திலே
எத்தனை நாள் காத்திருப்போம்
அடுத்தவன் தேசத்திலே

உண்ணவும் முடியவில்லை
உறங்கவும் முடியவில்லை
எண்ணவும் முடியுதில்லை
இன்னும்தான் விடியுதில்லை

கிட்டிப்புள்ளு அடித்து நாங்கள்
விளையாடும் தெருவிலே
கட்டி வைத்து அடிக்கிறானாம்
யார் மனதும் உருகவில்லை

ஊர் கடிதம் படிக்கையிலே
விம்மி நெஞ்சு வெடிக்குது
போர்ப்புலிகள் பக்கத்திலேயே
போகமனம் துடிக்குது

- ஆபேல்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.