3600 அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வியை தமிழகஅரசு துவங்கப்போகிறது என்ற செய்தி வந்துள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் வாய்ப்பு இருக்கும் எல்லாப்பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வியை செயல்படுத்தலாம் எனக்கூறியுள்ளார். ஆங்கிலவழிக்கல்வி பற்றிய எண்ணங்கள் பலகாலமாகவே அலசப்படுகின்றன.
ஆங்கில அடிமைக்காலத்தில் கல்வி.
இந்த நாட்டை அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளையர்கள் மெக்காலே கல்வித்திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர்கள். இந்தியப்பண்பாடு, அறிவுத்திறன் மீதான் விழுமங்களைத் துடைத்து ஆங்கிலேய சமுதாய மேன்மையை மனதில் பதித்துக்கொண்டு ஆங்கில அரசுக்கு பணிவுடன் வேலைசெய்ய ஒரு கூட்டத்தை உருவாக்கியது இந்த கல்விமுறை. இந்த அடிமைச்சமூக கல்விக்கூடங்களில் ஆங்கிலம் மொழியாக போதிக்கப்பட்டது. தரமாக எழுத்து, பேச்சுகளில் சிறப்பாகவே கற்றுத்தரப்பட்டது. ஆனால் பிற பாடங்கள் வரலாறு, கணிதம், அறிவியல் போன்றவை தமிழில்தான் போதிக்கப்பட்டன.
1947 விடுதலைக்குப் பின்னரும் தொடர்ந்த மக்காலே கல்வி.
விடுதலைக்குப்பின்னர் தொடக்கக் கல்வி, 11ஆம் வகுப்பு வரை இருந்த உயர்நிலைக்கல்வி முற்றிலும் தமிழிலேயே இருந்தது. ஆங்கிலம் ஆறாவது வகுப்பு முதல் மொழிப்பாடமாக இருந்தது. இந்தி மொழிப்பாடமாகவும், சமற்கிருத பாடமும் இருந்தன. இந்தப்பள்ளிகளில் படித்து தேர்ந்தவர்கள் மருத்துவம், பொறியியல் கால்லுரிகளிலும் , கலைஅறிவியல் கல்லூரிகளிலும் சேர்ந்து அங்கிருந்த ஆங்கில வழிக்கல்வியில் உயர்கல்வியைத் தொடர்ந்தார்கள். பயிற்று மொழி மாற்றம் அவர்களைப் பெரிதாக பாதிக்கவில்லை. மிகவும் பின் தங்கிய குக்கிராம மாணவர்கள் கூட கிராமப்பள்ளிகளில் பயின்று சென்னை மாநகரப் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு வென்றும் உள்ளனர். கிராமப்பள்ளிகள் முறையான கண்காணிப்பின் கீழ் இருக்கின்ற பொருள் வளத்தை முறையாகச் செலவிட்டு மக்களின் ஆதரவையும், மரியாதையையும் பெற்று விளங்கின. 1947 முதல் 1965 வரையிலான காலத்தை ஒரு வகைப்படுத்தலாம்.
1965 ல் வெடித்த மாணவர் புரட்சி தமிழக கல்வியிலும் , தமிழக அரசியலிலும் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தன. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற முழக்கமும், இந்தி வேண்டவே வேண்டாம் , தமிழ் எங்கள் தாய், ஆங்கிலம் எங்கள் செவிலித்தாய் என்ற மொழிபற்றிய முழக்கமும் ஓங்கின. உலக அறிவை பெற ஆங்கிலம் என்ற சாளரம் ஒன்று போதும் அது என்றும் நமக்கு வேண்டும் என பரப்புரை செய்யப்பட்டது. 1967 ல் தமிழகத்தில் ஆண்ட காங்கிரசு கட்சி தோற்கடிக்கப்பட்டு தி. மு. க ஆட்சிக்கு வந்தது. தமிழை ஒரு கடவுளாக்கி உலகே வியக்கும் வண்ணம் முதலாம் உலகத்தமிழ்மாநாடு என்ற பெயரில் விழா எடுக்கப்பட்டது. பக்திப் பரவசத்தோடு கோவிலுக்கு காவடி எடுத்து சிறப்புகளுடன் பூசனை செய்கின்ற மக்கள்கூட்டம் அதே உணர்வோடு தமிழ்த்தாய்க்கும் பெரிய விழா எடுத்தார்கள். உருவகங்கள் உண்மையைக் கண்களில் படாமல் மறைத்தன. 1964ல் தொடக்கப்பள்ளிகள் பற்றிய நிபுணர்களின் பரிந்துரைகள் அரசின் முன் வைக்கப் பட்டன. ஆனால் நடைமுறைப்படுத்தப்படவில்லை ?? பள்ளிக்கூடங்கள், கல்விமுறை ஆகியவற்றில் பெரிய மாற்றமின்றி சுமார் 1970 வரை சென்றிருக்கும். இடையில் நாட்டின் உழவர்களின் வாழ்வை பெரிதும் மாற்றிய “பசுமைப்புரட்சி 1967ல் இந்திய அரசால் பிரகடனப் படுத்தப்பட்டது.
1970 ஐ தொடர்ந்த தொலைநோக்கற்றத் திட்டங்கள்.
முதல் முறையாக ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினர் உறுதியான கொள்கையின் அடிப்படையில் ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர். மாணவர் புரட்சியே அவர்களை மன்றத்தில் ஏற்றியது. மலையாளிகள், கன்னடர், தெலுங்கர்களைக் குறித்த இல்லாத ஒரு சகோதரமாயை திராவிடம். ஒரு ஒருதலைக்கூக்குரல். எல்லையின் அடுத்த பக்கத்தில் தமிழன் என்றாலே பன்றி, நாய், அரை என்ற வசவுகள். பெருவாரி தமிழர்களைக்கொண்ட தமிழ்நாட்டில் திராவிட மாயை கொண்டுவந்த இழப்புகளில் பேரிழப்பு தமிழ் வழிக்கல்வி பற்றியது. மொழிப் பிரச்சினையில் ஆவேசப் பேச்சுகளையும், தமிழன்னையைப் பற்றிய உருவகங்களையும் போற்றுதல்களையும் கொண்டு காலம் தள்ளினார்கள். அறிவியல் தமிழ் பற்றிய பாவலர் பெருஞ்சித்திரனார், தேவநேவப்பாவாணர் போன்றோரின் ஆய்வுரைகளை அறிந்து செயல்படும் பொறுமையோ அறிவோ, அணுகுமுறையோ இவர்களுக்கு இல்லை. 1970 களிலேயே தமிழக மாணவர்கள் நமது அரசு என்று ஓடிவந்து உரிமையோடு வேண்டிய கலைச் சொல்லாக்கம் பற்றிய முயற்சிகளுக்கு கழகத்தலைவர்கள் செவி சாய்க்கவில்லை. எளிதாக்க் கிடைத்த ஆட்சிமேலாண்மையின் மகிழ்வுகளும் மற்ற வசதிகளும் , மொழிப்பிரச்சினையில் அவர்களே துவக்கம்-முடிவு என்ற எண்ணமும்அவர்களை மயக்கத்தில் ஆழ்த்தின.
1967ல் இந்திய அரசு கொண்டுவந்த பசுமைப்புரட்சி, அமெரிக்க அரசின் ஆதரவுடன் துவக்கப்பட்ட ஒரு அரவமற்ற நீண்ட நெடுந்திட்டம். இதன் உண்மையான நோக்கங்களைப் புரிந்துகொள்ளவதற்குள் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆரம்ப ஆண்டுகளில் நடைமுறைகு வந்த வேதியல் உரங்கள். பூச்சிக்கொல்லிகள், உழவு சாதனங்கள், , அதிக விளைச்சல், அப்போது இருந்த விளைபொருளுக்கான லாபமான விலை ஆகியவைகள் கிராமப்புற நிலவுடமைச் சமுதாயத்தின் உணர்வுகளை உயர்த்தியது. தங்கள் பாரம்பரிய வேளாண்மையின் சிறப்புகளை அறியமுடியாத அவர்கள் தங்கள் பாரம்பரிய விதைச்செல்வத்தை கைவிட்டனர். தங்கள் நிலங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் பிழைப்புக்காக புலம் பெயர்ந்து போனபோது அது அவர்களை பாதிக்கவில்லை. கூலித்தொழிலாளிகளில் எந்த வழியுமற்றோர் மட்டுமே ஊரில் தங்கினர்.
வசதி பெருகிய உழவர்கள் கிராமத்து பள்ளிகளை விடுத்து தங்கள் பிள்ளைகளை பட்டணங்களில் படிக்க வைக்கவும், ஆங்கில வழிப்படிப்பு முன்னேற்றத்திற்கு வழிகோலும் என்று நம்பவும் ஆரம்பித்தனர். இவர்களைப்பார்த்து வசதிக்குறைவான மக்கள்கூட தங்களை வறுத்திக்கொண்டு தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு உத்திரவாதம் என நம்பி ஆங்கில வழி பட்டணத்து பள்ளிகளை நாடினர். இந்த மன மாற்றத்தினை பயன் படுத்திக்கொண்டு புற்றீசல்போல பல தனியார் பள்ளிகள் துவங்கப்பட்டன. ஆங்கில வழிக்கல்வி என்பது அவர்களின் கவர்ச்சிகரமான கல்வி முறை ஆனது. மாணவர்களின் உயிர்த் தியாகம், போராட்டம் மூலம் பதவிக்கு வந்த திராவிட அரசு தமிழ்வழிக்கல்வியை போதித்த கிராமப்புற பள்ளிகளை மேம்படுத்த எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஆனால் அந்தப் பள்ளிகளில்தான் கிராமப்புற ஏழைமக்களின் குழந்தைகளில் முக்கால்பங்கிற்கும் அதிகமானோர் வேறு வக்கற்றோர், வழியற்றோர் படித்தார்கள். படிக்கின்றார்கள். மிக மோசமான பள்ளிச்சூழலிலும் சிறப்பான தேர்வு முடிவுகளைத் தருகின்றார்கள். திராவிட அரசுகள் இந்த பள்ளிகளுக்கு போதிய கவனம் செலுத்தியிருப்பார்களேயானால் தமிழ்வழிக் கல்வியில் இருந்து மாறுவது என்ற பேதமையான வாதமே இன்று எழுந்திருக்காது.
இன்று நம் முன் எழுந்துள்ள பூதாகாரமான கேள்வி: அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்விக்கு மாறுவது தேவையா இல்லையா எனபதுதான்.
இந்த நாட்டின் பெரும்பாலான உழவர்கள் தங்கள் தொழிலையே எப்படிச்செய்வது—என்ன விதை, உரம், பூச்சிக்கொல்லி, பயிர்வகை என்ன செய்யலாம் என்று வேளாண் அதிகாரிகள் முன்பு குனிந்து கிடக்கிறார்கள். சுய சிந்தனையைவிட்டு லாபம் வேண்டுமென்றால் அதிகாரி சொல்வதை செய்யவேண்டியதுதான் என்று குருகிப்போனார்கள். இவர்களுக்கு பரந்த சமுதயத்தில் தங்கள் குழந்தைகளுக்கு என்ன வகையான கல்விவேண்டும் என்ற அறிவு இல்லை. அதிகபட்சம் எங்கு எவ்வளவு செலவு செய்தால் சில வாய்ப்புகளை வாங்கலாம் போன்ற தகவல்களை மட்டும் கொண்டுள்ளார்கள். கிராமப்புற ஏழைகளுக்கு தேர்ந்தெடுக்க ஏதுமில்லை. இருக்கிற பள்ளிக்கு பிள்ளையை அனுப்பி வைக்கின்றார்கள். கட்டாயக்கல்வியாக அரசு தர வேண்டிய கல்வியை தராமல் அரசு தங்களுக்கு செய்யும் துரோகம் அவர்களுக்கு தெரியாது. சில்லரை இலவசங்களில் உச்சி குளிர்ந்துபோய் விடுகிறார்கள்.
அடுத்ததாக, 1970 களுக்கு முன்பு பட்டம் பெற்றோர் தாங்கள் பெற்ற கல்வி, அதனால் பலவித பதவிகளில் தாங்கள் செய்த ஆய்வுகள், இந்த நாட்டிற்காக செய்த சிறப்பு சாதனைகள் பற்றி கூறவேண்டும். கூறட்டும்.
1970 களுக்கு பின் தமிழ் வழியில் படித்தவர்கள் என்ன இழப்புகளுக்கு ஆளானார்கள் என்று சொல்லட்டும். அல்லது ஆங்கில வழிப்படிப்பில் பெற்ற அசாத்திய அறிவு பற்றி , செய்த சாதனைகள் பற்றி சொல்லட்டும். மனம் திறந்து பயப்படாமல் சொல்ல வேண்டுமானால் கடந்த 40 ஆண்டுகளில்தான் சமுதாயம் மிகவும் கீழ்த்தரமான ஊழல் மிக்க வாழ்வில் சிக்கி சீரழிகின்றது. படித்தவர்களும் அரசியலரும் பகுத்தறிவு, அறநெறி, தம் வினைப்பயன் பற்றி எவ்வித கலக்கமும் இன்றி எல்லாவித சீரழிவுகளிலும் இரங்கியுள்ளனர். இதுதான் பணிகளுக்கு உரிய தேவை என்றால் தமிழ்வழி/ஆங்கிலவழி பள்ளிகளைத் தேடக்கூடாது. சாத்தானின் பள்ளிகளைத் தான் அமைக்கவேண்டும்.
தான் சார்ந்த துறை, அரசு, சட்டம், மக்கள்நலம் , அற நெறி எதற்கும் கலங்காமல் தன் சுய நலனுக்காக சமுதாய விரோதிகளின் நலனுக்காக வீசியெறிகின்ற கையூட்டிற்காக சமரசம் செய்துகொள்ளாத அதிகாரிகள், அமைச்சர்கள் எவ்வளவு பேர்கள் இருப்பார்கள். இவர்களைத் தவிர ஏனையோர் குற்ற நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு நாட்டு நலனுக்கு எது சிறந்தது என்றுகூடத் தெரியாது. இவர்கள் ஆங்கிலவழியில் படித்தவர்களோ தமிழ்வழியில் படித்தவர்களோ அறவழியைப் படித்தவர்கள் இல்லை. சமுதாயத்திற்கு தேவைப்படாத கசடர்கள் இவர்கள்.
குருடனிடம் யானை எப்படி இருக்கும் என்று கேட்பதுபோன்ற முட்டாள்தனத்தை விடுத்து , இன்று அறிவியலில், ஆள்வினையில் சிறந்து விளங்கும் மாணவர்களை அமெரிக்கா, ஐரோப்பா, சீனா , சப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் எப்படி உருவாக்குகிறார்கள் என்று பாருங்கள். உணருங்கள்.
கல்வியாளர்கள், மனவியல் நிபுணர்கள் கல்விக்கு தாய்மொழிவழி எப்படி சிறந்தது என அறிவோம். படிப்பது காசு தேட்த்தான் என்ற மனநிலையோடு குழந்தைகள் வளர்ந்தால் அவர்களின் மூளை சாத்தானின் செயற்கூடம் ஆவதை தடுக்கமுடியாது.
1964 லேயே இந்த நாட்டுக்கல்வி சிறக்க அண்மைப்பள்ளி, தாய்மொழி வழிக்கல்வி பற்றி நிபுணர்கள் பரிந்துரைத்தார்கள். அதை தமிழ்காக்கும் அரசுகள் ஏன் நடைமுறைப் படுத்தவில்லை. இந்த பள்ளிகளால் சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் பயன் பெற்றிருப்பார்கள். திராவிட இயக்கங்கள் நம்பிய ஆரிய மாயையைப் பரப்பிய பார்ப்பனர்கள் இந்த கூட்ட்த்தில் இல்லையே. பின் என்ன? தலித்துகள் , எளியோர் கல்வி பெறுவதை சகித்துக் கொள்ள முடியாத இவர்கள் யார் ?. தனியார் ஆங்கிலப்பள்ளிகளை ஊக்குவித்தவர்கள், பெரும் பொருட் செலவில் அவைகளைகட்டி பொருள்ளீட்டியவர்கள் யார்? விசாரியுங்கள்.
போதிய ஆசிரியர்கள், உதவியாளர்கள், கல்வி சாதனங்கள் , வகுப்பறைகள், கழிவறை, நூலகம், ஆய்வகம், கணினிமையம், விளையாட்டுத்திடல் ஆகியவைகளுடன் ஒரு தரமான பள்ளியை கட்டி ஏழைமக்கள் கற்க வழி செய்யாத திராவிட அரசுகளே! உங்கள் சொந்தப்பணத்திலா அதைக்கட்டப்போகிறீர்கள். சாலைகளில் நீங்கள் கொட்டும் பல லட்சம் கோடிகளில் கொஞ்சம் இங்கு கொட்டக்கூடாதா? ஏன் செய்யவில்லை. ஏழையின் சிரிப்[பில் இறைவனைக் காண்போம் என்று கேட்க எவ்வளவு மகிழ்வாக இருந்தது. இன்றோ தமிழர்களையும், தமிழையும் அல்லவா சிரிப்புக்கு ஆளாக்கிவிட்டீர்கள்.
சாலைகளுக்கு வந்த பணம் வெளியில் இருந்து வந்தது. உள்ளூரிலும் கசிந்தது. கார் விற்க , டீசல் விற்க , பெற்றோல் விற்க பின்னாலேயெ வந்தவனுக்கு உதவியது. அரசுக்கு செலவில்லாத பெருமிதங்கள். உற்சாகங்கள். அன்னிய உறவுகள். ஏழைகள் படிப்பதில் என்ன கிடைக்கும்?. ஏழைகளின் கல்விக்கு உதவாத இந்த நாட்டின் தேசியக்கொடி அந்தக் கம்பங்களில் தொங்கிக்கிடக்கட்டும்.
உலகின் முதல்குடி தமிழன், முதல் மொழி தமிழ் என்பதற்கு சான்றாக பல கல்வெட்டு ஆய்வுகள் வந்துகொண்டு இருக்கும் நேரத்தில் தமிழ்க்குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுத்தால்தான் புரியும் என்ற அற்ப வாதம் முன் வைக்கப் படுகின்றது. மெக்காலே பற்றி இனி பேசக்கூடாது. மெக்காலேயைவிட அதிக புத்தியுள்ள திட்டம் இது. தமிழர்களை இது கோமாளியாக்கிவிடும்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து சிறந்த தமிழினம் , நம்மை ஒன்று படுத்தும் தாய்மொழி என்ற உறவை, அடையாளத்தை காக்கவேண்டும். இன்றைய பொருளாதார சீரழிவுகளின் அடிப்படை அரசியலில் கோலோச்சும் ஊழலும் கையூட்டும்தான். தமிழனின் வீரமும், மான உணர்வும்தான் சீரிய கல்வி, நேரியவாழ்வு அனைத்திற்கும் வழிகாணமுடியும்.
ஆங்கில வழிக் கல்வியை அடியோடு ஒழிக்கவேண்டும். கல்வியில், ஆட்சியில், நீதியில் அனைத்திலும் தமிழ் வேண்டும்.
தமிழ் அரசாக வேண்டும். தமிழர்கள் அரசாள வேண்டும்.
திருநங்கைகளின் பேரால் திராவிட இயக்கத்தவருக்கு ஒரு வேண்டுகோள்!
எதிரொலி
திராவிடர் இயக்கத்தின் பேசப்படாத பல பெருமைகளில் ஒன்று ஒட்டுமொத்த சமூகமும் ஒதுக்கித்தள்ளிய , கேலிபேசிய, எள்ளிநகையாடிய, எண்ணிக்கை அடிப்படையில் என்றுமே வாக்குவங்கியாக மாறவே முடியாத, கட்சி/தேர்தல் அரசியலுக்கு பயன்படாதவர்களுக ்காகவும் அது குரல் கொடுத்தது என்பது தான்.
நூற்றாண்டு கண்ட திராவிடர் இயக்க வரலாறு நெடுக இந்த உண்மை பதிவாகி வந்திருக்கிறது.
"தேவடியாள்" என்று, ஒட்டுமொத்த ஊருக்கும் நேர்ந்து விடப்பட்டவர்களு க்காகவும், "விபச்சாரிகள்" என்று ஒட்டுமொத்த ஊரும் ஒதுக்கித் தள்ளியவர்களுக்க ாகவும் முதன்முதலாக உரிமைக்குரல் கொடுத்த அரசியல் சக்தி திராவிடர் இயக்கம்.
அவர்களுக்காக தனியாக மாநாடு நடத்தி, அவர்களையே மேடையேற்றி பேசவைத்து "பொட்டுக்கட்டும ்" பழக்கத்தை பட்டுப்போகவைத்த வர்கள் திராவிடர் இயக்கத் தலைவர்கள்.
அதே அணுகுமுறையைத்தா ன் கைம்பெண்கள் மறுமணம் தொடர்பிலும் திராவிடர் இயக்கம் கடைபிடித்தது. இந்த இரண்டிலுமே பெரும்பான்மை சமூக கருத்துக்கு எதிராகவும், வாக்குவங்கி அரசியல் நலனுக்கு முரணாகவுமே திராவிடர் இயக்கம் எதிர்நீச்சல் போட்டது.
காரணம் தமிழ்ச் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர் களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் ஒரு இயக்கம், அந்த சமூகத்தில் ஜாதி, மதம், கலாச்சாரம், ஒழுக்கம், பாலினவேறுபாடு, பணவசதி என்று எல்லாவிதமான ஒடுக்கு முறைகளையும் எதிர்க்கவேண்டும ் என்கிற தெளிவு திராவிட இயக்கத்தின் ஆரம்பகால தலைவர்களுக்கு இருந்தது.
அதனால் தான் மகாத்மா காந்தி போன்ற "மகான்களே" தொடுவதற்கு முகம் சுளித்த பிரச்சனைகளை பெரியார் தொட்டார். பெரும்பாலும் அவை துலங்கின.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் "தேவடியாள்"களின ் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த அதே திராவிடர் இயக்கம் தான், ஏறக்குறைய நூறாண்டுகள் கழித்து அதேபோன்றதொரு செயலை 2006 ஆண்டு தமிழக சட்டமன்றத்தேர்த லின்போது செய்தது.
அலிகள் என்று அருவெருப்புடன் அழைக்கப்பட்டவர் களை அரவாணிகள் (தற்போது திருநங்கைகள் என்று அழைக்கப்படுகிறா ர்கள்) என்கிற கவுரவப் பெயரால் அழைத்து, அவர்கள் பிரச்சனையையும் தேர்தல் அறிக்கையில் சேர்த்து திமுக புதிய வரலாற்றை உருவாக்கியது. அதன் மூலம் அவர்களின் உரிமைகளை தேர்தல் அறிக்கையில் சேர்த்த முதல் இந்திய அரசியல் கட்சி என்கிற பெருமையை திமுக தேடிக்கொண்டது.
திருநங்கைகளின் பிரச்சனையை தேர்தல் அறிக்கையில் சேர்த்தது மட்டுமல்ல, தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி அரவாணிகள் நல வாரியம் அமைக்கப்பட்டு, அவர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட ்டு, அவர்களின் கோரிக்கைகள் பெரும்பாலானவற்ற ை படிப்படியாக நிறைவேற்றவும் செய்தது.
இந்த செயல், திமுகவுக்கு வரலாற்றில் பெற்றுத்தர இருக்கும் இடம் என்ன என்பது இன்றுள்ள திமுகவினர் பலருக்கே கூட முழுமையாக விளங்கவில்லை என்றே எதிரொலி நம்புகிறது. அதற்கு காரணம் இருக்கிறது.
மனிதர்களின் பாலின சமத்துவ வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பெண்களின் நூற்றாண்டாக வர்ணிக்கப்படுகி றது. காரணம் இன்றைய இருபத்தி ஓராம் நூற்றாண்டில் பெண்கள் அனுபவிக்கும் பற்பல உரிமைகள், இருபதாம் நூற்றாண்டில்தான ் அவர்களுக்கு கிடைத்தன.
அந்த அளவுகோளின்படி பார்த்தால் இருபத்தி ஓராம் நூற்றாண்டு உலக அளவில், மனித உரிமை ஆர்வலர்களால் மாற்றுப்பாலினத் தவர் நூற்றாண்டாக பார்க்கப்படுகிற து. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இன்று முக்கிய அரசியல் விவாதப்பொருளாக இருப்பது மாற்றுப்பாலினத் தவரின் மனித உரிமைகள். அதற்கான புதிய சட்டங்கள் கொண்டுவருவது எப்படி என்பது தான் பல நாட்டு நாடாளுமன்றங்களி ன் முக்கிய விவாதமாக இருக்கிறது.
திருமணம் உள்ளிட்ட அனைத்து மனித உரிமைகளும் மாற்றுப்பாலினத் தவருக்கும் உண்டு என்கிற ஐநாவின் மனித உரிமை கவுன்சிலின் வழிகாட்டு நெறிமுறைகள் வேக வேகமாக மேற்குலக நாடாளுமன்றங்களி ன் சட்டங்களாக மாறிவருகின்றன.
இந்த ஆரோக்கியமான, முற்போக்கான மாற்றம் இந்தியாவிலும் எதிரொலிக்கத் துவங்கிவிட்டது என்பதற்கான அறிகுறிதான் ஒருபால் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று இந்தியாவின் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. அது தொடர்பான மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்த ில் விசாரணையில் இருக்கிறது. உச்சநீதிமன்றமும ் ஒருபால் உறவுக்காரர்களின ் உரிமைகளை அங்கீகரிக்கும் என்பதே எதிரொலியின் புரிதல்.
இதன் தொடர்ச்சியாக திருநங்கைகள் உள்ளிட்ட மாற்றுப்பாலினத் தவர்களின் உரிமைகள் இந்தியாவிலும் படிப்படியாக அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட ுவது காலத்தின் கட்டாயம். அது நடக்கும்போது, திமுகவின் 2006 ஆம் ஆண்டைய தேர்தல் அறிக்கை, என்பது தமிழ்ச்சமூக திருநங்கைகளின் உரிமை வரலாற்றின் துவக்கப்புள்ளிய ாக வர்ணிக்கப்படும் .
திராவிடர் இயக்கம், அதிலும் குறிப்பாக திமுகவின் இந்த பெருமைக்குரிய வரலாற்றை எதிரொலி இப்போது நினைவு படுத்துவதற்கு காரணம் இருக்கிறது. இப்படிப்பட்ட பெருமைக்குரிய வரலாறுக்குச் சொந்தக்காரர்களா ன திராவிட இயக்கம் மற்றும் திமுக ஆதரவாளர்கள் முகநூலில் சமீப காலமாக பயன்படுத்தும் வார்த்தைகள் திருநங்கைகளின் உரிமைக்காக திராவிடர் இயக்கம் செய்த இந்த வரலாற்று உதவியை அவர்கள் உணரவில்லை என்கிற கசப்பான உண்மையை எதிரொலிக்கு உணர்த்தியது.
எதிரொலி பெரிதும் மதிக்கும் திராவிடர் இயக்கம் மற்றும் திமுக ஆதரவு எழுத்தாளர்கள் தங்களின் முகநூல் பதிவுகள், கருத்துக்களில் சர்வசாதாரணமாக, பொட்டை, பேடி போன்ற வார்த்தைகளை வசைச் சொற்களாக பயன்படுத்துவது கண்டு எதிரொலி அதிர்ந்து போனது. அலி, பேடி, பொட்ட, பொட்டை, பெட்டை, ஒம்போது, ஊசை என்பதெல்லாம் தமிழ்ச்சமூகம் பல நூற்றாண்டுகளாக திருநங்கைகளை கேவலப்படுத்தி அவர்களின் சுயமரியாதையை வார்த்தையால் குத்திச் சிதைத்த சித்திரவதைச் சொற்கள். நாகரிக சமூகத்தில் இந்த நாராச சொற்களுக்கு சுத்தமாக இடமில்லை.
இதைச் சொல்லும் நண்பர்களுக்கு இந்த வார்த்தைகளின் உண்மையான அர்த்தமோ, அவற்றை காதால் கேட்க அல்லது படிக்க நேரும் திருநங்கைகளுக்க ு ஏற்படும் வலியின் ஆழமோ தெரியாமல் சொல்லிவிடுகிறார ்கள். அப்படிப்பட்டவர் கள் இனிமேல் இந்த வார்த்தைகளை எந்த சந்தர்ப்பத்திலு ம் சொல்லாதீர்கள் என்பதே எதிரொலியின் பணிவான வேண்டுகோள்:.
காரணம், அவை கேவலமானவை. திருநங்கைகளை கேவலப்படுத்தும் நோக்கிலானவை .நாகரிக சமூகத்தில் தடைசெய்யப்படவேண ்டிய வார்த்தைகள். சரியாக சொல்வதானால், தலித்துக்களை ஜாதிப்பேரைச் சொல்லி திட்டுவது எந்த அளவுக்கு தவறோ, அதே அளவுக்கு தவறான செயல் திருநங்கைகளை மேலே சொன்ன வசைச் சொற்களைக்கொண்டு திட்டுவது.
ஒருவேளை இந்த வசைச்சொற்களை நாங்கள் திருநங்கைகளை நோக்கிச் சொல்லவில்லை என் எதிர்தரப்பில் இருக்கும் ஆணை திட்டவே பயன்படுத்தினேன் என்று நீங்கள் கூறினால், எதிர் தரப்பில் இருக்கும் ஆணை திட்ட இந்த வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன என்கிற எதிர்கேள்வி எழுகிறது.
அந்த கேள்விக்கான உண்மையான பதில், ஒரு ஆணை பார்த்து இந்த வார்த்தைகளால் நீங்கள் திட்டுவதன் மூலம் அவன் ஆண்மையற்றவன் என்று நீங்கள் அவனை அழைக்கிறீர்கள் என்பதே உண்மை. அதாவது “ஆண்மையற்ற” ஆண் கேவலமானவன் என்கிறீர்கள். அந்த கேவலமான “ஆண்மையற்ற ஆணின் நிலைதான் திருநங்கையின் நிலை என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதே சக ஆணைப்பார்த்து நீங்கள் இந்த சொற்களை பயன்படுத்தி திட்டுவதன் நோக்கம். அதனால் தான் இந்த வார்த்தைகளை இரண்டு ஆண்கள் தங்களுக்குள் திட்டுவதற்கு பயன்படுத்தினாலு ம் அந்த வார்த்தைகள் குறிப்பது திருநங்கைகளை என்பதால் அதன் வலி திருநங்கைகளுக்க ே கூடுதல் என்கிற உண்மையை “ஆண்கள்” அனைவரும் உணரவேண்டியது அவசியம்.
இதில் விசித்திரம் என்னவென்றால், தற்கால தமிழ்ச்சமூகம் வீரமற்ற ஆணை குறிக்க இந்த சொற்களை பயன்படுத்துகிறத ு. ஆனால் பண்டைய கிரேக்க சாம்ராஜ்ஜிய ராணுவத்தில் வீரம் செறிந்த பிரிவுவாக பாராட்டப்பட்டது ஒருபால் உறவுக்காரர்களுக ்கான ராணுவ வீரர் பிரிவு. அதாவது கிரேக்க ராணுவத்தின் ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் என்பது ஒருபால் உறவுக்காரர்களை மட்டும் கொண்ட தனிப்பிரிவு. அவர்களின் வீரமும் அர்ப்பணிப்பும் மற்ற ஆண்களைவிட அதிகம் என்பது வரலாற்று ஆய்வாளர்கள் தரும் சுவாரஸ்யமான செய்தி.
இதுபோல வரலாறு நெடுக ஒருபாலுறவும், திருநங்கைகளும் இருந்தே வந்திருக்கிறார் கள். கிரேக்கத்தின் சிந்தனையாளர் பிளாட்டோ ஒருபால் உறவுக்காரர். இங்கே இந்தியாவில் இந்துமதத்தின் இருபெரும் கடவுள்களான சிவன், விஷ்ணு. இருவருமே திருநங்கை வடிவில் வழிபடப்படுகிறார ்கள். இந்தியாவின் மஹாத்மாவும், தமிழ்நாட்டின் கவியரசுவும் தம் வாழ்நாளில் ஒருபாலுறவில் ஈடுபட்டிருக்கக் கூடுமென பதிவுகள் சொல்கின்றன.
இது இயற்கை. சிலருக்கு இட்லி பிடிப்பதும், சிலருக்கு தோசை பிடிப்பதும் எப்படி இயற்கையானதோ, அதே அளவு இயற்கையானது சிலருக்கு பெண்களைப் பிடிப்பதும், சிலருக்கு ஆண்களை பிடிப்பதும். அதே போல சிலருக்கு வேட்டி கட்ட பிடிப்பதும் சிலருக்கு பேன்ட் சட்டை பிடிப்பதும் எப்படி இயற்கையானதோ அதே அளவு இயற்கையானது சில ஆண்களுக்கு சேலை கட்டுவதும் சில பெண்களுக்கு பேன்ட் சட்டை மட்டுமே பிடிப்பதும். பெரும்பாலானவர்க ள் வலது கையால் எழுதினாலும் சிலருக்கு இடது கை பழக்கம் இருப்பது எந்த அளவுக்கு இயற்கையானதோ அதே அளவுக்கு இயற்கையானது ஒருபால் உறவும். இது விசித்திரமோ, வேடிக்கையோ அல்ல. அதைவிட முக்கியம் இது கேவலமானதும் அல்ல. கண்டிப்பாக நோயுமல்ல. எனவே ஒருவரின் பாலின தேர்வை வைத்து அவரை கேலி பேச யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.
அதிலும் குறிப்பாக மாற்றுப்பாலினத் தவர்களின் உரிமைக்காக அரசியல் ரீதியில் முதன்முதலில் குரல் கொடுத்த திராவிடர் இயக்கம் மற்றும் திமுககாரர்கள் இதை செய்யக்கூடாது என்பதே எதிரொலியின் கூடுதல் கோரிக்கை.
எதிரொலியின் இந்த கருத்துடன் ஒத்துப்போகும் நண்பர்கள் இந்த பதிவை லைக் செய்வதைவிட பகிர்வது நன்மை பயக்கும் என்பதால் பகிரும்படி கேட்டுக்கொள்கிற ோம். நன்றி
பின்குறிப்பு: தாங்கள் அலிகள் என்று அழைக்கப்படுவது கேவலமாக இருப்பதாக நினைத்த இவர்கள், 1990 களில் தங்களை அரவாணிகள் என்று அழைக்கத் துவங்கினார்கள். காரணம், மஹாபாரத இறுதிப்போரில் பாண்டவர்கள் சார்பில் களப்பலி கொடுக்கப்பட்ட அர்ச்சுனன் மகன் அரவாணின் மனைவியின் மனித வடிவம் தாங்கள் என்று இவர்கள் நினைப்பதால், அரவானின் மனைவி அரவாணி என்று இவர்கள் இந்த சொல்லை வடிவமைத்தார்கள் . ஆனால் இந்த சொல் இந்துமத அடையாளத்துடன் இருக்கிறது, இவர்களில் கணிசமானவர்கள் மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மதம் சாராத பொதுவான சொல் வேண்டும் என்று தேடியபோது தமிழ் இலக்கியத்தில் பயன்படுத்தப்பட் ட திருநங்கை என்கிற சொல் மத அடையாளமற்ற பொதுவான பெயராக இருக்கும் என்று தேர்வு செய்யப்பட்டது. எனவே இப்போது இவர்கள் தங்களை திருநங்கைகள் என்றே அழைக்கத்துவங்கி யிருக்கிறார்கள் . இதில் திரு என்பது ஆண்பால், நங்கை என்பது பெண்பால், இரண்டும் கலந்த தங்களின் நிலைமையை உணர்த்த இந்த சொல் பொறுத்தமாக இருக்கும் என்பது இவர்களின் விளக்கம்.
RSS feed for comments to this post