கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- நெல்லை சலீம்
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஃபாலஸ்தீன் காஸாவில் ஏற்பட்டு வரும் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான நெருக்கடியான நிலைமை, இஸ்ரேலில் உடனடியாக சில சீரமைப்புகளை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது. காஸா கிட்டத்தட்ட ஒரு திறந்தவெளி சிறைச்சாலை என்றே அழைக்கப்படுகிறது. இங்கு தினம் தினம் இஸ்ரேல் வீசும் குண்டுகளால் கட்டிடங்கள் இடிந்து விழுகின்றது. முற்றிலும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளது காஸா.
இஸ்ரேல் அரசு காஸாவில் மேற்கொண்ட சுற்றுச்சுழல் பாதிப்புகள் அனைத்தும், அதனுடைய தலைநகரான டெல் அவிவில் ஆபத்துக்கான எச்சரிக்கை மணியாக ஒலிக்கத் தொடங்கி விட்டது என்பது தான் தற்போதுள்ள செய்தியாக இருக்கிறது.
ஜுன் 3ம் தேதி இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் பென்குரியோன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அறிஞர்கள் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் “காஸாவில் இடிந்து விழும் கட்டிடங்கள், முறையின்றி வெளியாகும் கழிவுநீர், மின்சார பாதிப்புகள் அனைத்தும் இஸ்ரேலின் நிலத்தடி நீர், கடல்நீர், கடற்கரைப் பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும், உடனடியாக இதற்கு ஒரு தெளிவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றும் கூறியுள்ளனர்.
கடந்த 12 ஆண்டுகளாக இஸ்ரேலிய இராணுவம் ஏற்படுத்திய தொடர்ச்சியான தாக்குதல்கள், முற்றுகையால் காஸா சிதைந்து போயுள்ளது. இதுவரை அதனுடைய பாதிப்புகள் எதையும் இஸ்ரேலிய அரசு வெளியிடுவதை தடுத்தே வந்துள்ளது. இதனால், அந்தப் பகுதி 2020ம் ஆண்டில் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற பகுதியாக இருக்கும் என்று காஸாவைப் பற்றி அறிந்த பலரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இப்படியிருக்கையில், இஸ்ரேலின் வாழ்வு மற்றும் மரணம் காஸாவின் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதிலே இருக்கின்றது என்றும், காஸாவில் சுற்றுச்சூழல் மோசமானதற்கான முழு காரணமும் இஸ்ரேல் தான் என்றும், அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதில் இருந்து, இஸ்ரேலின் அரசு பத்திரிகையான ஹெராட்ஸும் தேசிய பாதுகாப்பு பிரச்சனையாக விவாதத்தைக் கிளப்பி உள்ளது.
இஸ்ரேல் அரசு ஃபாலஸ்தீன் காஸாவில் மேற்கொண்ட ஆக்கிரமிப்புகள், ராக்கெட்டு மற்றும் குண்டுவீச்சுகள், முற்றுகைகள் அனைத்தும் ஃபாலஸ்தீன் மற்றும் ஃபாலஸ்தீனியர்களுக்குத்தான் ஆபத்தாகவும், அச்சுறுத்தலாகவும் இருந்து வந்தது.
இப்போது, அந்த பாதிப்பை இஸ்ரேலிய நாடும், இஸ்ரேலிய மக்களும் அனுபவிக்கத் துவங்கியுள்ளனர். இதுகுறித்து சீக்கிரமாக ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் அரசுக்கு நாட்டு மக்களும், பத்திரிகை ஊடகங்களும் வலியுறுத்தத் தொடங்கி உள்ளனர். இதனால், இஸ்ரேலில் ஓர் அச்சம் உருவாகி உள்ளது என்பது மட்டும் உண்மையாகும்.
- நெல்லை சலீம்
- விவரங்கள்
- செந்தூவல்
- பிரிவு: சுற்றுச்சூழல்
பானி புயல் வங்கக் கடலில் மையங்கொண்டு தீவிர சூறாவளியாக மாறி ஒடிசாவைத் தாக்கியுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 170 கிலோமீட்டரில் இருந்து 180 கிலோமீட்டர் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. இப்புயல் ஒடிசாவின் பூரி மற்றும் பாலசபூர் இடையே கரையை கடக்கும் என அறிவித்தது வானிலை ஆய்வு மையம். கடந்த 118 ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்களில் மிக வலிமையான புயல் பானி புயல்தான் என்று கூறியுள்ளார் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலர் ராஜீவன்.
2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிழக்கு கடற்கரையை அதிகமான புயல்கள் தாக்கி உள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:
1.ஜல் 2010
2. தானே 2011
3.நீலம் 2012
4.மடி 2013
5.ரோனி 2016
6.கியான்ட் 2016
7.நாட 2016
8. வர்தா 2016
9.ஒக்கி 2017
10.கஜா 2018
11.பானி 2019
கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக 11 புயல்கள் கிழக்கு கடற்கரையைத் தாக்கி உள்ளன. இவற்றில் நான்கு புயல்கள் தமிழகத்தைத் தாக்கி உள்ளன. அதாவது வங்கக்கடலில் ஏற்படும் மொத்த புயல்களில் மூன்றில் ஒரு புயல் தமிழகத்தைத் தாக்குகிறது. இயற்கை நிகழ்வுதானே என்று நாம் யோசிப்போம். ஆனால் புயல்கள் பின் உள்ள பருவநிலை மாற்றம்தான் முதன்மையான காரணம் ஆகும். இந்த பருவநிலை மாற்றத்தின் காரணமாகத்தான் புவியின் வெப்பநிலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி, புயல்களாக மாறி கரையைத் தாக்குகிறது. இந்தப் புயல்கள் ஏற்படும்போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் அதிகளவிலான மழைப்பொழிவு ஏற்படுத்துகிறது.
புயல்கள் ஏற்படும் கால இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. அதனாலதான் கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 11 புயல்கள் வங்கக் கடலில் ஏற்பட்டு உள்ளது. அதாவது 11 மாதங்களுக்கு ஒரு புயல் என்ற விகிதத்தில் வங்கக் கடற்கரை பகுதிகளை தாக்குகிறது. இது வெறுமனே வங்கக் கடற்கரை மட்டுமான பிரச்சனை அல்ல, உலகம் முழுவதும் பல நாடுகளில் இதுபோல தொடர்ச்சியாக புயல்கள் தாக்குகின்றன. அதுவும் குறிப்பாக பருவ காலங்களில் அல்லாமல், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் புயல்கள் கடற்கரையில் உள்ள பகுதிகளைத் தாக்குகிறது.
பருவநிலை மாற்றம் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் என்ன? இதற்கு முதன்மையான காரணம் புதைபடிம எரிபொருட்கள் எரிப்பதனால் ஏற்படும் பசுமை இல்ல வாயுக்கள் நேரடியாக வளி மண்டலத்தைத் தாக்குவதால் தொடர்ந்து புவியின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே வருகின்றது. புதைபடிம எரிபொருட்களான டீசல், பெட்ரோல், நிலக்கரி மற்றும் மீத்தேன் போன்ற எரி வாயுக்கள் அதிகமாக உபயோகப்படுத்துவதன் காரணமாக பசுமை இல்ல வாயுக்கள் அதிகமாக வெளிப்படுகிறது. இதன் காரணமாக புவி வெப்பமயமாதல் ஏற்படுகிறது.
உலகம் முழுவதும் பல நாடுகள் புதைபடிவ எரிபொருட்களை குறைத்துக் கொண்டு, வேகமாக புதுப்பிக்கத்தக்க எரிபொருட்களை பயன்படுத்துவதை அதிகப்படுத்தியுள்ளன. அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்திற்கான ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டுள்ளன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் உலகில் உள்ள பல நாடுகள் மிக வேகமாக புதைபடிவ எரிபொருட்களை பயன்பாட்டை குறைத்துக் கொண்டுள்ளன. உலகம் முழுவதும் உள்ள பல நாட்டு மக்கள் தங்கள் நாட்டு அரசு, புதைபடிம எரிபொருட்களின் பயன்பாட்டு அளவை குறைக்கக் கோரி போராட்டம் நடத்திக் கொண்டுள்ளனர். ஆனால் தமிழகத்தில் அதிக அளவிலான அனல் மின் நிலையங்களை உருவாக்கிக் கொண்டுள்ளது இந்திய அரசு. இது போதாதென்று டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது இந்திய அரசு. இது மட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல், நிலக்கரி மற்றும் எரிவாயுவின் பயன்பாட்டைக் குறைப்பதற்கு இந்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை அதிகப்படுத்திக் கொண்டு உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பதினோரு மாதங்களுக்கு ஏற்படும் புயல் என்பது ஆறு மாதங்களுக்கு ஒரு புயல் என்ற நிலைக்கு மாறும். இது மட்டுமல்லாமல் தற்போது 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் புயல்களின் வேகத்தின் அளவு மேலும் அதிகமாகும்.
இந்தியாவின் அடிமைக் காலனியாக இருக்கும் தமிழகம் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இல்லை. காரணம் தமிழகத்தின் இயற்கை வளங்கள் மட்டுமல்லாமல் ஜிஎஸ்டி போன்ற வரிகள் மூலம் இந்திய அரசு அனைத்தையும் கொள்ளை அடித்துச் செல்கிறது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் இயற்கைப் பேரிடர்களான புயல், பெருவெள்ளம், காட்டுத்தீ மற்றும் வறட்சி போன்றவற்றில் இருந்து மீள்வதற்கான நிதியை இந்திய அரசு கொடுப்பதில்லை. இதன் காரணமாக தமிழக மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய இயற்கைப் பேரிடர்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான ஆய்வுகள் எதனையும் பெரிய அளவில் இந்திய அரசு செய்வது இல்லை.
தமிழ்த் தேசத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஓரணியில் திரளுவதுதான் பருவநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பேரழிவுகளில் இருந்து தமிழகத்தைப் பாதுகாப்பதற்கான வழியாகும்.
- செந்தூவல்
- விவரங்கள்
- அப்சர் சையத்
- பிரிவு: சுற்றுச்சூழல்
எச்சரிக்கும் போலந்து மாநாடு....!!!
போலாந்தின் கடோவைஸ் நகரில் பருவநிலை மாறுபாடு தொடர்பான மாநாடு நடைபெற்றது. இதில் பாரிஸ் பருவநிலை மாறுபாடு உடன்பாடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதில் பருவநிலை மாறுபாட்டால் உலகிற்கு பேராபத்து காத்திருப்பதாகவும், இப் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணாவிட்டால், உலக நாடுகள் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும் என்றும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான மூல காரணம் பூமி வெப்பமயமாதலாகும். இன்றைக்கு உலகம் முழுவதும் வெப்பமயமாதல் பிரச்னை பெரும் சவாலான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்பதை உலக நாடுகள் அனைத்தும் ஓப்புக்கொண்ட உண்மையாகும். அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக கரியமில வாயுவைக் குறைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என பாரிஸில் வலியுறுத்தப்பட்டது.
இம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கிப் பங்கேற்ற ஐ.நா.வின் முன்னாள் தலைவர்கள் 4 பேரின் கலந்துரையாடலில், இந்த பருவநிலைப் பிரச்சனையை கட்டுப்படுத்தாவிட்டால் பாரிஸ் மட்டுமின்றி உலக நாடுகளின் நிலைமை மோசமடையும் என எச்சரித்ததுடன் அதற்கான
காலக்கெடுவாக அடுத்த இரு ஆண்டுகளில் பருவநிலை மாறுபாடு பிரச்னைக்குத் தீர்வு காணாவிட்டால், உலக நாடுகள் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும் என்றும் இம்மாநாட்டில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இப்பிரச்சனையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட உலக வங்கி பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு உடனடி தீர்வு காண 14 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்யப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளதாம், இது போன்ற பருவநிலை மாற்றம் மற்றும் பூமி வெப்பமயமாதல் பிரச்சனையால் கடந்த சில வருடங்களாக உலகில் பல்வேறு இடங்களில் சுனாமி போன்ற பேராபத்துகளும், புயல்களும், நிலநடுக்கங்களும், காற்று மாசுபாடும் ஏற்பட்டு வருவதாக அண்மையில் சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாட்டிற்கு பொருளாதார வளர்ச்சியைவிட முக்கியமானது இயற்கை வளங்களைக் காத்தல். நாம் வாழும் பூமியை வாழ்வதற்கு ஏற்றதாக அமைத்துக் கொள்ள வேண்டும். இயற்கையை அழித்து பொருளாதார வளம் பெருக்கிக் கொள்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இயற்கை வளத்தைப் பெருக்கி, பசுமையைக் காப்பது மட்டுமே எதிர்கால சந்ததிகளின் நலனுக்கு உகந்தாகும்.
நாட்டின் வளங்களில் மூன்றில் ஒரு பங்கு வன வளம் இருக்க வேண்டும். அதாவது 30 லிருந்து 35 சதவீதம் இருக்க வேண்டிய வனங்கள், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தற்போது 14 லிருந்து 19 சதவீதமாக உள்ளது. இதற்கான முழுமுதற் காரணம் மனிதனே ஆகும். மனிதன் தனது சுயலாபத்திற்காக வனங்களை அழித்துகொண்டு வருகின்றான். மரங்களை வெட்டுதல், காடுகளை விளைநிலங்களாக ஆக்கிரமித்தல் போன்ற நடவடிக்கையினால் இயற்கை வளங்களின் பரப்பளவு குறைந்து வருகின்றது..
இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட. இயற்கை வளங்களின் அவசியம் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்தும் இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நம் அரசுகளும் தொலைநோக்குப் பார்வையுடன், மனித குலத்திற்குப் பயன்படுவதுமான இயற்கை வளங்கள் பற்றிய படிப்பை பரவலாக்க வேண்டும். புவியியல், இயற்கை வளங்கள், காலநிலை, கடல், மனிதப் புவியியல், புவித் தகவல் தொழில்நுட்பம் போன்ற படிப்பு வகைகளை மாணவர்கள் மத்தியில் பரவலாக்கி அவர்களை இக்கல்வி கற்க ஊக்கப்படுத்த வேண்டும்.
தனி மனிதர்களாகிய நாமும் தனியாகவோ அல்லது குழுவாகவோ, தன்னார்வலர்களை இணைத்துக்கொண்டு, மக்களிடையே இயற்கை வளமிக்க பசுமையான சோலைகள், காடுகள், மரங்கள், உயிரினங்கள், புல்வெளிகள், விளைநிலங்கள், ஆறுகள், ஏரிகள், கடலோர நீர் வளம் போன்றவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று என்பதை விளங்கும் வகையில் விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தி இயற்கை வளங்களைக் காத்து பூமி வெப்பமயமாக்கலைத் தடுத்தல் வேண்டும்,
இது நம் அனைவரின் கண் முன்னே நிற்கும் சவாலான பிரச்சனையாகும்...
- அப்சர் சையத்
- விவரங்கள்
- அப்சர் சையத்
- பிரிவு: சுற்றுச்சூழல்
கரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக்குகளைத் தின்று பலரது கண்களுக்கு முன்பே பசுமாடு ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணெயிலிருந்தும், எரிவாயுவிலிருந்தும் உருவாக்கப்படுகிற பிளாஸ்டிக்களில் நச்சுத் தன்மையுள்ள பல வேதிப் பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. அவை நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றை, நிலத்தடி நீரை, மண்ணை மாசாக்குவதுடன் மிக விரைவாக அனைத்து உயிரினங்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
சூழலியாளர்கள் கூற்றுப்படி ஒரு பிளாஸ்டிக் குடுவை மண்ணோடு மண்ணாக முற்றிலும் அழிந்துபோக 450 வருடங்களாவது ஆகுமாம். கிட்டத்தட்ட மனிதனின் சராசரி வயது அளவீட்டில் 6லிருந்து 8 மனிதர்களின் ஆயுட்காலம் அல்லவா இது? நாம் அழிவதுடன் வரும் அடுத்த தலைமுறையையும் சேர்த்து அழித்து வருகின்றோம் அல்லவா?
நாம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி விட்டு வீதியில் எரிந்துவிடுவதால், பெருமழை பெய்து நீரால் அடித்து ஆற்றில், குளங்கள், ஏரிகள் என அனைத்திலும் கலப்பதால், நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த பிளாஸ்டிக் பைகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றது, சாலை ஓரங்களில் இவ்வகைப் பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெருவழியே பிதுங்கி வழிந்து சாலையில் ஒடுகின்றது. அதன்மீது நாம் நடக்கும் போதும், அதிலிருந்து வரும் தூர்காற்றை சுவாசிக்கும் போதும் பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சில வருடங்கள் முன் சென்னையில் கொட்டித்தீர்த்த பெரு மழை வெள்ளத்தால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புதான்.
மக்களே, நம் வீட்டிலிருந்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பைகள் பல்வேறு உயிரினங்களுக்கு விஷமாவதுடன், மண்ணின் உயிர்வேதியியல் தன்மையையும் பாதிக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டு, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்திடுவோம்.
பிளாஸ்டிக்கள் சுற்றுச் சூழலுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களின் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை உடனடியாகத் தவிர்த்திடுவோம். கடைகளுக்குப் போகும் போது வீட்டிலிருந்து துணிப் பை போன்றவற்றை எடுத்துச் செல்வோம்.
பிளாஸ்டிக்கை ஒழிப்போம்
நீர் வளம் காப்போம்!
பிளாஸ்டிக்கை ஒழிப்போம்
மண் வளம் காப்போம்!
பிளாஸ்டிக்கை ஒழிப்போம்
உயிரினங்களைக் காப்போம்!
பிளாஸ்டிக் ஒழிப்போம்
கேன்சரைத் தடுப்போம்!
பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்கி நம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பேன் என்னும் உறுதிமொழியை நாம் எடுத்துக்கொள்வோம்.
- அப்சர் சையத், சுற்றுச்சூழல் ஆர்வலர்
- ஆற்றுநீர் கடலில் கலப்பது வீணானதா?
- அமெரிக்காவில் நீரியல் விரிசல் முறை ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளும், அறிவியல் வல்லுநர் குழுக்கள் கண்டறிந்த படிப்பினைகளும்!
- நதிகளை ஏன் இணைக்கக்கூடாது?
- இந்திய கிராமப்புறங்களில் திறந்தவெளி மலம் கழித்தலைப் புரிந்து கொள்ளல் - தீண்டாமை, மாசு, மலக்குழிகள்
- சூழல் அகதியா நாம்..?
- காலநிலையும், அரசியலும்
- செம்பரம்பாக்கம் ஏரி வரலாறும், திமுக - அதிமுக கட்சிகள் ஆட்சியும்
- நீலம் பாரித்துக் கிடக்கிறாள் மலைகளின் இளவரசி
- போஸ்கோ வெர்டிகல் மற்றும் சூரியச் சாலை
- மீத்தேன் - குழம்பிய குட்டையாக தமிழகம்!
- களத்தூர் மணல் குவாரி எதிர்ப்பு போராட்டமும் - இன்றைய நிலையில் நாம் செய்ய வேண்டியதும்
- பெரம்பலூர் சட்டவிரோத அனல்மின் நிலையம் கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு
- அறிவாளிகளும், அப்பாவிகளும் - நியூட்ரினோ ஆய்வகம் - ஓர் அலசல்
- நியூட்ரினோ - அமெரிக்காவுக்கா? இந்தியாவுக்கா?
- கொலைக்கூடங்களாக உள்ள தோல் தொழிற்சாலைகளும்... சாவுப்பட்டறைகளாக உள்ள சாயப்பட்டறைகளும்...
- தமிழகத்தின் இயற்கையை, வளங்களை அழிக்கும் திட்டங்கள்
- அறிவியலை ஓரங்கட்டும் அரசியல்
- ஏன் மரபணு மாற்றுப் பயிர்கள் கள பரிசோதனைகள் தடை செய்யப்பட வேண்டும்?
- பிரச்சினை அறிவியலில்; தீர்வு அரசியலில்
- மீத்தேன் எரிவாயுத் திட்டத்தால் காவிரிப் படுகை பாலைவனமாகும்!