எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்.
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாங் கண்டு
தெளியுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்.
உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்
ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்!
தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்.
இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்.
எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந் தோமில்லை.
தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்!
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- சர்வாதிகாரப் பெற்றோர்கள்
- வகுப்புவாதிகள் அயோக்கியர்களா?
- சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன் (1934 - 2021)
- அனல் காற்று
- கண் சிமிட்டும் காகிதங்கள்
- எழுதப்படாத ஒரு கவிதை
- தமிழ்த் தேசியத்தின் இலக்கு எதுவாக இருக்க வேண்டும்?
- 'உலக அரசியல் சினிமா - 16 இயக்குநர்கள்' - நூல் அறிமுகம்
- இந்திய அரசியலமைப்பின் பிரிவு 351-ஐ நீக்குக!
- எரியும் இலங்கை உணர்த்தும் பாடம்
- விவரங்கள்
- பாரதிதாசன்
- பிரிவு: பாரதிதாசன்