இருதய ஆபரேஷன் செய்து கொள்பவர்களில் சிலர் ‘பேஸ் மேக்கர்’ என்னும் கருவியை உடம்போடு பொருத்திக் கொள்கிறார்கள். இந்த பேஸ் மேக்கரின் வேலை என்ன தெரியுமா?

ஒரு மனிதனின் இருதயத் துடிப்பு சீராக இருக்க வேண்டும். ஆரோக்கியமான மனிதர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் இதய நோயாளிகளின் இருதயத் துடிப்பு தினத்துக்கு தினம் மாறுபட்டுக் கொண்டிருக்கும். இதை சரி செய்ய கண்டுபிடிக்கப்பட்ட கருவியின் பெயர்தான் பேஸ் மேக்கர். இதனுடைய வேலை, ஒரு இதய நோயாளியின் இதயத் துடிப்பை சம்பந்தப்பட்ட நோயாளியின் உடல் நிலைக்கு ஏற்ப தானே சரி செய்து கொண்டு கூடுதலாகவோ... குறைவாகவோ தானாகவே இயங்கும். பேஸ் மேக்கர் நிமிடத்துக்கு 60 முதல் 140 தடவைகள் நோயாளியின் இருதய நிலைமைக்கு ஏற்றவாறு துடிக்கும். இதன் காரணமாக நோயாளிகள் தங்களின் வழக்கமான பணிகளை சிரமம் இல்லாமல் செய்து வரலாம்.

பேஸ்மேக்கர்கள் இப்போது புதிது புதிதாய் வந்து கொண்டிருக்கின்றன. சிறிய பேட்டரியில் இங்கும் இந்த பேஸ் மேக்கரில் உள்ள மோட்டார் அதிர்வுகளை உண்டாக்கி இதயத் துடிப்பை சீராக வைத்திருக்கும் பணியைச் செய்கிறது. இதய நோயாளி ஒருவருக்கு இந்த பேஸ் மேக்கர்கள் பொருத்தும் போதே அதில் உள்ள ‘கம்ப்யூட்டர் சிப்’பில் கீழ்கண்ட தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. 1.இதய நோயாளியின் இதயத் துடிப்பை ஒவ்வொரு நிமிடமும் கணக்கிட வேண்டும். 2. இதயத் துடிப்புகள் கூடும்போதோ குறையும்போதோ அது பற்றிய தகவலை டாக்டருக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். (டாக்டரின் செல்போன் எண் மற்றும் ஹாஸ்பிட்டலின் கம்யூட்டர் கட்டுப்பாட்டு அமைப்புக்கு தொடர்பு வசதி இந்த பேஸ் மேக்கரில் உண்டு.) 3.இதயத் துடிப்பில் ஏற்படும் மாற்றத்தை பேஸ்மேக்கர் கருவியே டாக்டரின் செல்போனுக்கு SMS மூலம் தகவல் கொடுத்துவிடும். டாக்டர் அந்தத் தகவலைப் பெற்று போன் மூலம் அடுத்த ட்ரீட்மெண்ட் கொடுப்பார்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.