கருத்துச் சுதந்திரம் பாகம் 1
'விஸ்வரூபம்’ என்ற, திரைக்கு வந்து சில நாட்களே ஆன 'திரைக் காவியத்தைக்' காண நேர்ந்தது. சர்ச்சையே அப்படத்திற்கு விளம்பரத்தைத் தேடித் தந்தது. முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரித்தவுடன், நான் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று கமல் அறிவித்தார். பிறகு அவர்களிடம் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு வெளியேறும் முடிவை தள்ளிப் போட்டிருக்கிறார். தேசப்பற்று காரணமாக இருக்கலாம்.
விஸ்வரூபம் திரைப்படம், முஸ்லீமாக இருக்கும் கதாநாயகன், விஷ்ணுவின் ரூபம் எடுக்கிற படம். அதாவது நல்லது செய்யும் எந்த முஸ்லீமுக்கும் ஓர் இந்து சாயல் இருக்க வேண்டும்.
அவரது ‘விஸ்வரூபம்’ திரைப்படம் புரியவில்லை என்று பலர் கூறுகின்றனர். அதெல்லாம் பொறாமை காரணமாக சொல்கிறார்கள். அது மிக எளிதாக புரியும் படம். ஏதாவது ஒரு ‘கான்’ வில்லனாக வரும் சில அமெரிக்க ஜேம்ஸ்பாண்ட் படங்களின் காட்சிகளையும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடித்த சில இந்தி சினிமாக்களின் காட்சிகளையும், இந்திய ‘தேசபக்தி’ பொங்கும் சில தமிழ் சினிமாக்களின் காட்சிகளையும் வெட்டி ஒட்டிவிட்டு, 11வது அவதாரத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் சேர்த்துவிட்டால் அதுதான் இந்த விஸ்வரூபம். ஆனால் கமல்சார் இதற்காக ஏன் சொத்தை அடகுவைத்தார் என்று புரியவில்லை.
இப்படத்தில் கமலின் பெயர் விஸ்வநாதன். புத்திசாலியான அதிகாரியாக ஒருவர் நடித்தால் நாயகன் ஒன்று ‘ராகவனாக’ இருப்பார் அல்லது இந்த படத்தின் பாத்திரம் போல ‘விஸ்வநாதனாக’ இருப்பார். ஏதாவது ஒரு அம்பிமார். கமல் இந்தப் படத்திலும் ஒரு பார்ப்பனர். இதனால் அவர் சாதிப்பற்று கொண்டவர் என்று நீங்கள் தவறாக புரிந்துகொள்ளக் கூடாது அல்லவா! அதனால், அவாள் பாசையில் அச்சுப்பிசகாமல் பேசும் அவரது மனைவி, கோழிக்கறி விரும்பிச் சாப்பிடுவார். இப்படி ஆராய்ச்சி செய்வது சரியா என்று யாராவது என்னைக் கேட்டால் நடிகர் ரஜினிகாந்த், கமலைப் போல அடிக்கடி பார்ப்பன வேடத்தைப் பூணுவதில்லையே, ஏன் என்ற கேள்விக்கு பதில சொல்வீர்களாக.
கமல் சாரின் பார்ப்பன மனைவி ‘அடக் கடவுளே’ என்று சொல்லும்போது கமல் ‘எந்தக் கடவுளே’ என்று கேள்வி கேட்டு, தான் நாத்திகன் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் முஸ்லீம்கள் இப்படத்தின் நோக்கத்தைக் கேள்வி கேட்பார்களே என்பதற்காக கமல் உண்மையிலேயே தொழுகை நடத்தக் கூடிய முஸ்லீமாம். மச்சம் மட்டும் வச்சு மாறுவேடம் போடும் நாயகன் மாதிரி, இதுல முஸ்லீம் பாத்திரம் மச்சம் வச்சவரு மாதிரி இருக்கும். விஸ்வநாதன் என்ற தொழிலுக்காக வேடம் போடும் பாத்திரத்துக்கு பார்ப்பன குடும்பமே இருக்கு.. ஒரு பாட்டு இருக்கு.. கமல் பரத நாட்டியம் ஆடுகிறார் மாமிகள் புடை சூழ. ஆனால் படத்தில் நிஜமாக வரும முஸ்லீம் பாத்திரம் அம்புட்டு அநாதை. படத்துல வரும் கமல்பாய் பேரு 'தௌபீக்’கா அல்லது நாசரா என்று என்னால் இதுவரை கண்டே பிடிக்க முடியவில்லை. கவுண்டமணி சொல்ற மாதிரி நல்ல டகால்ட்டி.
கருத்துச் சுதந்திரம் பாகம் 2
முல்லா ஒமர் மதுரையிலும், கோவையிலும் தங்கியிருந்ததாக சொல்லியிருக்கிறார். இன்னும் ஏதாவது ஒரு முஸ்லீமின் ரேஷன் கார்டையும் சேர்த்து காண்பித்திருக்கலாம். நோக்கம் இனிதே நிறைவேறியிருக்கும். அகில உலகமெங்கும் உளவுத்துறை வலைப்பின்னலை வைத்திருக்கும் அமெரிக்க சி.ஐ.ஏ அதிகாரிகளை விஞ்சிய அகில உலகநாயகனாக நீங்கள் ரெண்டு சண்டை போடுவதற்கும், நாலு பாட்டும் பாடுவதற்கும் முஸ்லீம்கள் பலிகடாக்களா? தசாவதாரத்தில் அதிபர் 'புஷ்' வேடமே போட்டாச்சு அப்பறம் ஏன் கமல் சார் தேவையில்லாம இப்படியொரு ஜீனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.
நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று சொன்னதை விட நேராக அமெரிக்கா போகிறேன் என்று சொல்லியிருக்கலாம். கமலஹாசனில் ‘ஹாசன்’ என்ற வார்த்தைக்காக தங்களை ஜட்டியைக் கழற்றி சோதனை போட்ட நல்ல நாடான அமெரிக்காவிற்கு தாங்கள் போய் வாருங்கள்; நாங்கள் வழியனுப்பி வைக்கிறோம். ஜார்ஜ் பெர்னாண்டஸை.. ஷாரூக்கானை.. அப்துல் கலாமை அதேபோல் சோதனை நடத்திய அமெரிக்கா, தங்களுக்குப் பிடித்த நாடு. இப்படி எந்த அரபுநாடும் நம்நாட்டின் பிரபலங்களை இழிவுபடுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால், அரபுநாடுகளின் மீது உங்களுக்கு என்ன கோபமோ?
கருத்துச் சுதந்திரம் பாகம் - 3
ஓர் இந்திய உளவு அதிகாரி நம்ம கமல். உளவுப்பணிக்காக தனது துணைவியாரையே தாரை வார்த்து அவர் உளவு பார்க்கிறார். அந்த நாயகி ஆன்ட்ரியாவை அபூர்வ சகோதரன் படத்தில் வரும் ஏட்டு போல ‘தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க’ என்று கமல் சொல்லாத குறையாக, கூடவே சொட்டர போட்டுக்கிட்டு அலையவிடுகிறார். அரவாணியாக இருக்கும் நாயகன் கமலை மணந்தவள் மற்றொருவரை விரும்புவதை வில்லத்தனமாகக் காட்டுகிறார். ‘அமெரிக்காவில் மழை பெய்யாதா போயிட்டுப் போது’ என்று நாயகி கலக வசனம் பேசினாலும் மொத்தத்தில் அவளை வில்லியாக்கி விடுகிறார். நல்ல பெண்ணுரிமைவாதி நீங்கள்.
ஆண் அடையாளத்தைத் துறந்து, தாம்பத்தியத்தைத் துறந்து, அமெரிக்காவுக்கு வேலை செய்யும் தியாகி நம்ம கமல். அமெரிக்காவைக் காப்பாற்ற இந்திய அரசு வெட்டியாக சம்பளம் கொடுக்கிறது. முல்லா ஒமர் 'தமிழ் பேசும் ஜிகாதி வான்டட்' என்று கேட்டதால் கமல் சென்று இறங்கிவிட்டார். உயிரையே பணயம் வைத்து முல்லா ஒமரை நெருங்கிவிட்டார்.
அமெரிக்க ராணுவம் தமது வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டார்கள் என்ற ஒரு நியாயமான காரணம் இருப்பதாலேயே ஆப்கனில் ஒரு கிராமத்தைத் தாக்குகிறது. காரணமில்லாமல் தாக்க மாட்டார்களாம்! ஹெலிகாப்டரில் இருந்து சுடும் அமெரிக்க வீரர் ஒரு பெண்ணைத் தவறுதலாக சுட்டுவிட்டதற்காக தன்னைத் தானே சபித்துக் கொள்கிறார். ஏனென்றால் அமெரிக்க வீரர் சாதாரண ஆப்கானிய மனிதனை சுட்டுவிட்டால் தன்னைச் சுட்டுவிட்டதாக எண்ணுவாராம்! கடைசி ஆபரேசனில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அனைவரும் நிற்கும்போது முஸ்லீம் அதிகாரியாகிய கமல் தொழுவதை வாஞ்சையுடன் ஒரு அமெரிக்க அதிகாரி சக அதிகாரிக்கு விளக்குகிறார்! ஏனென்றால் நேர்மையான முஸ்லீம் அதிகாரிகளை அவர்கள் மதிப்பார்களாம்!
ஆமாம் கமல், இந்த குவான்டனாமோ சிறைச்சாலை தெரியுமா? அதில் முஸ்லீம் சிறைவாசிகளை கழுத்தறுத்து வீடியோவில் காட்டுவது; ஒருவரின் உடல் முழுவதும் மலத்தைப் பூசி அவரது முகத்தில் ராணுவ அதிகாரி ஒருவர் தனது ஜட்டியால் மூடுவது; நிர்வாணமாக நிற்கும் ஒருவரின் மீது நாய்களை விட்டுக் குதறவிடுவது ஆகிய காட்சிகள் அனைத்தும் வெளியானதைத் தாங்கள் அறிவீர்கள் தானே.. இன்னும் வர்ணிக்க முடியாத கொடூரங்களை நிகழ்த்தியதன் காரணமாக அமெரிக்க மக்களின் எதிர்ப்பினால் அந்த சிறை மூடப்பட்டதையும் அறிவீர்களா?
கருத்துச் சுதந்திரம் பாகம் - 4
சி.என்.என், ஐ.பி.என்., பி.பி.சி உட்பட சர்வதேச ஊடகங்களும் இந்தியாவிலுள்ள நூற்றுக்கணக்கான ஊடகங்களும் செப் - 11, 2011க்குப் பிறகு அடித்துத் துவைத்த ஒரு கருத்தைத்தான் இப்போது கமல் விஸ்வரூபம் எடுக்க வைத்திருக்கிறார். அதுதான் இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது. ஆனால் அமெரிக்க பயங்கரவாதத்தைப் பற்றி சொல்லத்தான் ஒரு ஊடகத்தைக் கூட காணோம்! அல்ஜசீரா தொலைக்காட்சி அந்த வேலையைச் செய்தது. அதன் அலுவலகத்தை அமெரிக்கா குண்டுவீசி அழித்தது. கருத்துச் சுதந்திரத்தை இப்படி குண்டு போட்டு அழிக்கலாமா என்று அமெரிக்காவுக்கு பாடம் சொல்லி கமல் ஒரு படம் எடுப்பாரா?
அமெரிக்காவுக்கு கைவந்த கலை, திரைப்படங்களில் அரசியல் செய்வது. ஜப்பானைக் அணுகுண்டு போட்டு அழித்துவிட்டு ‘பியர்ல் ஹார்பா’ என்று ஜப்பானையே வில்லனாக்கி ஒரு படம் எடுத்தார்கள். வெளியிட்ட திரையரங்கில் எல்லாம் நம்ம தமிழன் அதை வெற்றிப்படம் ஆக்கினான்.
இப்போது இரட்டைக் கோபுரத் தாக்குதலை வைத்து ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அது இந்தியாவில் சக்கைப் போடு போடுவதற்குள், பேசாம நான் இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாம் என்று இருக்கிறேன்.
நம்ம கமல் அமெரிக்க லட்சியப் படங்களை தமிழ் மண்ணில் எடுக்க ஆரம்பித்துவிட்டார். இனி அமெரிக்க தூதரகத்தைத் தாக்க வந்த தமிழ்த் தீவிரவாதிகளைப் பற்றி நிறைய படம் வந்தாலும் வரும்.
கருத்துச் சுதந்திரம் பாகம் - 5
'உன்னைப் போல் ஒருவன்’ல் பயங்கரவாதத்தில் ஈடுபடும் முஸ்லீம்களை பயங்கரவாதத்தால் தான் அழிக்க வேண்டும் என்று சொன்னார். கேள்வி வருமே என்பதற்காக காவி அணியாமல் ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பஸ்தரின் வேடம் பூண்டார். அடுத்து விஸ்வரூபத்தில் அவர் ஒரு நல்ல நேர்மையான முஸ்லீமுக்கு இலக்கணம் சொல்லி இருக்கிறார். 'நீ குரானைத் தொழு. ஜிகாதிகளைக் காட்டிக் கொடு. அமெரிக்காவின் அடியாளாக இரு. அணு ஆயுதங்களை அப்பாவி அமெரிக்காவின் மீது பிரயோகம் செய்ய முனையாதே. மனிதாபிமானமில்லாமல் இருக்காதே. சிறுவர்களை குண்டு கொடுத்து அனுப்பாதே. ஈவிரக்கமில்லாமல் கொலை செய்யாதே..' என்று ஒரு முஸ்லீமாக வந்து சொல்கிறார்.
ஆனால் பயங்கரவாதத்தில் ஈடுபடும் முல்லா ஒமர் மற்றும் அவரது குழுவை பயங்கரவாதத் தன்மையில் அழிக்கச் சொல்கிறார். 'ஒரே நேரத்தில் எத்தனை பேரை வேண்டுமானாலும் துவம்சம் செய். அனைவரையும் மரண அடி கொடு.. வெட்டிவீசு கண்களைப் பிடுங்கு.. கையை வெட்டு வாளால் சொருகு.. துப்பாக்கியால் கண்ணில் படுபவனை எல்லாம் போட்டுத் தள்ளு. இத்தனையும் ஒரே சண்டைக்காட்சி நேரத்தில் முடித்து விடு..' என்று ஆணித்தரமாக புரிய வைப்பதற்காக ஒரு சண்டைக்காட்சி வைத்திருக்கிறார். நியாயத்திற்காக கொடூர வன்முறையில் இறங்கு; நியாயத்தின் பேரால் பயங்கரவாதத் தாக்குதல் நடத்து என்கிறார். கமல் ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்திலும், இந்தப்படத்திலும் ஒரு புனிதப்போர் நடத்தச் சொல்கிறார். அதாவது இவர் ஒரு புதியவகை ஜிகாதி.
கருத்துச் சுதந்திரம் பாகம் - 6
கமலின் நியாயத் தீர்ப்பை அப்படியே எடுத்துக் கொள்வோம். அவர் சொல்கிறபடி பயங்கரவாதத்தில் ஈடுபடுவோரை பயங்கரவாதத்தால் அழிக்க வேண்டும்.
ஓசாமா இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தவர் 2000 அமெரிக்கர்களைக் கொன்றார். அது கண்டிக்கத்தக்கது; ஏற்க முடியாதது. சரிதான். இதை வைத்தே அமெரிக்காவில் பல படங்கள் வந்துவிட்டன.
இப்ப கமலுக்கு ஒரு ஸ்கிரிப்ட் சொல்லுவோம். இந்த கதையை படமாக்க கமல் விரும்பினால் கதை இலவசம்.
இரட்டைக் கோபுரத் தாக்குதலிலிருந்து படத்தின் கதை விரிகிறது. பிளாஷ்பேக்கில் கேமரா ஆப்கானைக் காட்டுகிறது. இப்போது கதை.
ஆப்கனின் தலைநகரமான காபூலுக்கு உலகின் விதவைகளின் தலைநகரம் எனறு பெயர். கடந்த 30 ஆண்டுகாலப் போரில் 15 லட்சம் விதவைகள் அந்நாட்டில் உள்ளனர். அமெரிக்கப் படையும் அதன் கூட்டுப்படைகளும் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஆப்கானியர்களில் 37 சதவீதம் பேர் ஆண்கள். அவர்கள் அனைவரையும் விதிவிலக்கில்லாமல் தாலிபான்கள் என்றே வைத்துக் கொள்வோம். மீதி 63 சதவீதம் பேர் குழந்தைகளும் பெண்களும். இதயபலவீனம் உள்ளவர்களுக்காக இதை நாம் காட்சிப்படுத்தாமல் விடுவோம்.
15 லட்சம் விதவைகளின் கதைகள் எப்படியிருக்கும்? தகப்பன் இல்லாத 15 லட்சம் குடும்பங்களின் பிள்ளைகள் ஓயாத போரில் உணவுக்காக என்ன செய்யும்? படிப்புக்காக என்ன செய்வார்கள்? தன் தகப்பனைக் கொன்றவர்கள் மீது என்ன உணர்வைக் கொண்டிருப்பார்கள்?
அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையால் மட்டும் ஈராக்கில் 5 லட்சம் குழந்தைகள் மாண்டனர். ஈராக்கை ஆக்கிரமித்து அதன் அதிபரை ஒரு போலி நீதிமன்றத்தால் கொன்றொழிக்கும் அமெரிக்காவின் நோக்கம் நிறைவேற கொல்லப்பட்ட மக்கள் பல லட்சம் பேர். பாலஸ்தீனம், லெபனான் என பட்டியல் நீளும் இந்த நாடுகளுக்குச் சென்றால் விதவிதமான கதைகள் கிடைக்கும்.
ஆப்கனில் ஒரு திருமணத்தில் குண்டு போட்டு 80 பேரையும், மற்றொரு விழாவில் குண்டு போட்டு 200 பேரையும் கொன்றது அமெரிக்கப் படை. அதை ஒரு சிறுவன் வர்ணிக்கிறான். “ நான் குண்டு சத்தம் கேட்டேன். விழித்துப் பார்த்தால் மருத்துவமனையில் கிடக்கிறேன். என் இரண்டு கால்களும் இல்லை. என் கால்களைப் பறித்தவர்களைப் பலி எடுப்பேன்”. கமல் இந்தக் காட்சியிலிருந்து கூட தங்களது படத்தைத் தொடங்கலாம். கதை இலவசம்.
கருத்துச் சுதந்திரம் பாகம் - 7
ஒரு பெரும் பணக்கார பின்னணி கொண்ட இளைஞன் ஒசாமாவை ரஷ்யாவுக்கு எதிராக முஜாகிதீன் படைகளுக்குத் தலைமை தாங்கப் பணித்தது அமெரிக்கா. அப்போது விடுதலை வீரனாக சித்தரிக்கப்பட்ட ஒசாமா, அமெரிக்காவின் அடியாளாக அரபுநாடுகளுக்கு எதிராக செயல்பட வேண்டுமென்ற அமெரிக்க நிர்பந்தத்தை உயிருக்கஞ்சாமல் எதிர்த்தான். அதற்கு தன் குடும்பத்தோடு தன் உயிரையும் விலையாகக் கொடுத்திருக்கிறான்.
ஓசாமாவின் லட்சியம் என்ன? அரபுலகம் அந்நிய ஆக்கிரமிப்பிற்கு ஆளாகக் கூடாது. அரபுலக மக்களின் எண்ணெய் ஆதாரம் அந்நியர்களால் களவாடப்படக் கூடாது என்பது தானே. அமெரிக்காவின் லட்சியம் என்ன? அரபுலகை அடிமைப்படுத்த வேண்டும்; உலகின் எண்ணை ஊற்றான அரபுலகை தனது பிடிக்குள் கொண்டுவர வேண்டும் என்பது தானே.
ஒசாமா 'எண்ணைய் வளங்கள் எமக்கே சொந்தம். நீ என்ன எண்ணை வயலுக்கு வந்தாயா? கிணறு தோண்டினாயா?' என்று கேள்வி கேட்கிறார். தமது சொந்தச் சகோதரிகள் கண்முன்னால் தெருக்களில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதற்கும், தம் சின்னஞ்சிறு குழந்தைகள் கொத்துக்குண்டுகளால் குதறி எறியப்பட்ட கோரத்தைப் பார்க்க சகியாமலும், மண்ணும் மக்களும் அடிமைப்பட்டப் புழுவாய் நெளியும் காட்சியைக் கண்டு குமுறி எழுந்தும் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் பொருளாதார - அரசியல் பயங்கரவாதத்திற்கு எதிராகக் களம் இறங்குங்களடா என் தம்பிகளே, செத்தால் பாடை பத்துமுறை வராது.. என்று பயிற்றுவிக்கிறார். இரட்டைக் கோபுரத்தைத் தாக்கி அழிக்கிறார்.
ஒசாமாவின் போராட்ட வழிமுறைகள் பயங்கரவாதத் தன்மை கொண்டதுதான். கொடிய துன்பங்களை விளைவிப்பவர்களுக்கு கொடிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற கமலின் தர்க்கம் தான் ஒசாமாவின் தர்க்கமும். கமலின் வரையைறையைத்தான் ஆப்கான் தேசத்துத் தாலிபான்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால், தாலிபான்களை மட்டும் விமர்சிக்கும் கமல், நவீன வல்லரசுகளின் கொடூரமான பயங்கரவாதப் போரைப் பற்றி மௌனம் சாதிக்கிறார்.
ஒரு ஆய்வாளர் சொன்னது போல ‘தற்கொலை கார்குண்டு’ என்பது ‘ஏழைகளின் விமானப்படை’. ஆயுதம் தாங்கிய ரோபோக்களை ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களைக் கொன்றொழிக்க அனுப்பும் வல்லரசுகளின் வக்கிரப்போர்களை எதிர்க்க கமலின் நியாயத்தைப் பொருத்துவோம்.. 63 சதவீதம் பெண்களையும் குழந்தைகளையும் கொன்ற செயல் பயங்கரவாதம் இல்லையா? பொதுமக்களைக் கொல்வது பயங்கரவாதம் எனும் போது, தம் நாட்டின் பொது மக்களைக் கொல்லும் வல்லரசுக்கு அந்த வலி எப்படியிருக்கும் என்று புரிய வைக்க ஒரு போராளிக் கூட்டம் எண்ணினால் அது கமலின் தர்க்கப்படி முழு நியாயம் தானே.
இஸ்லாமியப் போராளிகளின் பயங்கரவாதம் கூடாது என்று சொல்பவர், முதலில் அதனைத் தூண்டக் காரணமாக இருக்கும் அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளின் பயங்கரவாதத்தைத் தடை செய்தபிறகு பேசலாம். அல்லது இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பின் நியாயத்தை ஏற்றுக்கொண்டு, பயங்கரவாதமும் ஜனநாயக விரோத ஆட்சி முறையும் இஸ்லாமியப் போராளிகளின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்திவிடும் என்ற அக்கறையிலிருந்து சொல்லலாம். அப்போது ஏற்கலாம். ஆனால் அமெரிக்காவின் எடுபிடியாக நின்று கொண்டு பேசுபவர்களுக்கு எந்த தார்மீக உரிமையுமில்லை.
“யோக்கியர்களே கல்லெறியுங்கள்”
இஸ்லாமிய பயங்கரவாதம் என்று பொதுமைப்படுத்தும் வார்த்தையே கண்டிக்கத்தக்கது. அது குரான் படிப்பவர்களை எல்லாம் பயங்கரவாதி என்று அறிவிப்பு செய்கிறது. உலகிலேயே அதிகமாக முஸ்லீம்கள் இருக்கும் நாடான இந்தோனேசியாவில் பயங்கரவாதம் இல்லையே ஏன்? அங்கும் குரான் இருக்கிறது; இஸ்லாம் இருக்கிறது. ஆனால் எண்ணை இல்லை. அதனால் அங்கே அமெரிக்கா தாக்குதல் நடத்தவில்லை. அந்நாட்டை ஆக்கிரமிக்கவில்லை. எனவே முஸ்லீம்கள் ஜிகாத் நடத்தவில்லை. உலகிலேயே இரண்டாவதாக அதிக முஸ்லீம்கள் வசிக்கும் இந்தியாவில், முஸ்லீம்கள் பயங்கரவாதத்தை கையிலெடுக்கவில்லை. நடக்கும் ஓரிரு சம்பவங்களும் இங்குள்ள பி.ஜே.பி.யும், ஆர்.எஸ்.எஸ்.சும் அவர்களை அழிக்க முயல்வதன் விளைவாக நடக்கின்றன. பாபர் மசூதிக்குப் பிந்தைய இந்தியாவையும் முந்தைய இந்தியாவையும் ஒப்பிட்டால் தெரியும்.
கருத்துச் சுதந்திரம் - 8
மற்றொரு விஸ்வரூபமாக, கருத்துச் சுதந்திரம் பற்றி வடஇந்திய ஊடகங்களும் தமிழ் ஊடகங்களும் கொதித்தெழுந்து விட்டன. நடிகர்கள், எழுத்தாளர்கள், பெண்ணியவாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் கமலுக்குக் கருத்துச் சுதந்திரம் இல்லையா என்கின்றனர்.
அதிலும் தூய கருத்துச் சுதந்திரவாதிகளாக சிலர் கலைஞனுக்கு கருத்து வேலி கூடாது என்கின்றனர். சென்சார் போர்டே கூடாது என்கின்றனர். சமத்துவமற்ற சமுதாயத்தில் எது ஒன்றையும் வரம்பின்றி அனுமதிக்க முடியாது. ஒரு சமுதாயத்தின் உயர்ந்த அரசியல் விழுமியங்களால் அது கண்காணிக்கப்பட வேண்டும்.
இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றால் மதச்சார்பின்மை என்ற நுண்ணோக்கி கொண்டு அனைத்துக் கருத்துக்களும் கண்காணிக்கப்பட வேண்டும். இந்தியா சோசலிச சனநாயகக் குடியரசு என்று பிரகடனம் செய்யப்பட்டால் அதனடிப்படையில் அனைத்துக் கருத்துக்களும் கண்காணிக்கப்பட வேண்டும். மேலும் வரம்பற்ற கருத்துச் சுதந்திரம் என்பது பணபலமும், அதிகார பலமும் கொண்ட கும்பல்களுக்கு சேவை செய்யும் கருத்தாகும். மக்களிடம் ஊதுகுழல் கூட இல்லாத நிலையில் உலகின் அனைத்து ஊடகங்களையும் வைத்துள்ளவர்கள் யார்? வரம்பற்ற கருத்துச் சுதந்திரம், உண்மையில் குரலற்ற மக்களின் குரல்வளையை நெறிக்கும் தூக்குக் கயிறாகவே மாறும்.
முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பைப் பொருத்தவரை அவர்களின் எதிர்ப்பும் கருத்துச் சுதந்திரத்தின் அங்கமாகவே பார்க்கப்பட வேண்டும். எந்தத் தரப்பானாலும் இவ்விதமான தவறான சித்திரிப்புகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் உரிமையுள்ளது. டேம்’99 என்ற படத்தின் தவறான சித்திரிப்புக்கு எதிராக தமிழகம் கிளர்ந்ததைப் போல், பாதிக்கப்படும் தரப்பு தமக்கெதிரான அவதூறுகளுக்காக தடை கோர உரிமையுள்ளது.
ஆனால் குரானையோ அல்லது முஸ்லீம் தலைவர்களையோ அல்லது அதன் மரபுகளையோ, பழக்க வழக்கங்களையோ எவ்விதத்திலும் விமர்சிக்கவே கூடாது என்பது கருத்துரிமைக்கெதிரானது; ஜனநாயக விரோதமானது. உலகில் நிலவும் அனைத்தின் மீதும் கருத்து சொல்லவும் விமர்சிக்கவும் அனைவருக்கும் உரிமை உள்ளது.
ஆனால் சொந்த ஆதாயத்துக்காக யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கவும், மதவாதப் பற்களை மறைத்துக்கொண்டு பொதுவாக விமர்சிப்பதாக நாடகமாடும் ஆசாமிகளுக்கும் மத அடிப்படைவாதிகளுக்கும் மற்ற மதங்களை விமர்சிக்க எவ்வித தார்மீக உரிமையுமில்லை.
கருத்துச் சுதந்திரம் பாகம் - 9
பொய்யின் துணையுடன் பயங்கரவாத தர்க்கம் பேசும் கமல் சாரே!
இதோ உண்மை பேசுபவரின் 'பயங்கரவாத' தர்க்கத்தின் சுருக்கம்.
2004ல் அல்ஜசீரா தொலைக்காட்சியில் ஒசாமா பின்லேடன் அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய உரையின் சுருக்கம்.
“அல்லா போற்றி!
அமெரிக்க மக்களே!
நான் பேசத் தொடங்குமுன் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். பாதுகாப்பு என்பது மனித வாழ்வின் அசைக்க முடியாத தூண். 'நாங்கள் சுதந்திரத்தை வெறுக்கிறோம்' என்று புஷ் சொல்வது மோசடி. சுதந்திர மனிதன் தனது பாதுகாப்பைப் கெடுத்துக் கொள்ளமாட்டான்.
மற்றவர்களின் பாதுகாப்போடு விளையாடும் ஒரு செவிட்டுக் கொள்ளையனைத் தவிர வேறு யாரும் விளையாடவோ, தாம் பாதுகாப்பாக இருப்போம் என்று நம்பவோ மாட்டார்கள். அதே நேரத்தில் சிந்திக்கும் திறனுடையோர் பேரழிவு தாக்கும் போது அது மீண்டும் நடைபெறாமல் தடுக்க அதன் விளைவுகளை பரிசீலிப்பதற்கு கவனம் கொடுப்பார்கள்.
ஆனால் உங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். செப் - 11ன் சம்பவங்களுக்கப் பிந்தைய நான்காம் ஆண்டில் நாம் இருக்கும் போதும் புஷ் இன்னமும் பேரழிப்பை நடத்திக் கொண்டிகருக்கிறார். உங்களை ஏய்த்து, உங்களிடமிருந்து உண்மையான விளைவுகளை மறைத்து வருகிறார். இவ்வாறு ஏற்கனவே நடந்ததே திரும்பவும் நடப்பதற்கு காரணங்களை உருவாக்குகிறார்.
ஆகவே அந்த முடிவை எடுத்தற்கான தருணங்களைப் பற்றிய உண்மையைச் சொல்கிறேன். அந்நிகழ்வுகளுக்குப் பின்னுள்ள கதையைச் சொல்கிறேன். தங்களின் பரிசீலனைக்காக...
அல்லா அறிவார். நாங்கள் அந்த கோபுரங்களைத் தாக்கும் நிலை ஒருபோதும் நேர்ந்திருக்கக் கூடாது என்பதை அல்லா அறிவார். அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுப் படைகள் பாலஸ்தீனிலும் லெபனானிலும் உள்ள எமது மக்கள் மீது நடத்திய ஒடுக்குமுறையும் கொடுங்கோன்மையும் தாங்க முடியாததாக இருந்தது. அது என் மனதைப் பிசைந்தது.
1982ல் இஸ்ரேலியர் லெபனானை ஆக்கிரமிக்க அனுமதித்ததும் 6வது போர்க்கப்பலை அனுப்பியதும் தான் என் ஆன்மாவை நேரடியாக பாதிக்கத் தொடங்கியது. குண்டுவீச்சு தொடங்கியது. பலர் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமுற்றனர். மீதி இருந்தவர்கள் அச்சுறுத்தப்பட்டு இடம்பெயர்க்கப்பட்டனர்.
கண் முன் ஓடும் அக்காட்சிகளை என்னால் மறக்க முடியாது. இரத்தமும் சிதறிய உறுப்புகளுமாய் பெண்களும் குழந்தைகளும் எங்கெங்கும் சிதறிக் கிடந்தனர். குடியிருந்தவர்களோடு சேர்த்து வீடுகள் அழிக்கப்பட்டன. எமது வீடுகளின் மேல் ராக்கெட் மழை பொழிந்து தகர்த்தது.
அந்தச் சூழ்நிலையைப் பார்க்கையில் ஆதரவற்ற நிலையில் கதற மட்டுமே திராணி கொண்ட ஒரு குழந்தையை ஒரு முதலை சந்திப்பது போல் இருந்தது. முதலை ஆயுதங்கலக்காத உரையாடலைப் புரிந்து கொள்ளுமா? உலகமே பார்த்தது. கேட்டது. ஆனால் ஏதும் செய்யவில்லை.
அந்தக் கடினமான தருணத்தில் என் மனதில் குமிழ்விட்ட எண்ணங்களை விளக்குவது கடினம். இறுதியில் அது கொடுங்கோன்மையை மறுதலிக்கும் தீவிர உணர்வை உண்டு பண்ணியது. ஒடுக்குமுறையாளர்களை தண்டிக்க வேண்டும் என்ற தீவிர வைராக்கியத்தைப் பிறப்பித்தது.
லெபனானின் இடிந்த கோபுரங்களை நான் பார்த்தபோது ஒடுக்குமுறையாளர்களை அவர்களது வழிமுறையிலேயே தண்டிக்க வேண்டுமென்றும் நமது குழந்தைகளையும் பெண்களையும் காக்கவும், நாம் ருசித்ததை அவர்களையும் ருசிக்க வைக்கவும் அமெரிக்காவின் கோபுரங்களை அழிக்க வேண்டும் என்று என் மனதிற்குப் பட்டது.
அந்த நாளில் தான், பெண்களையும் குழந்தைகளையும் திட்டமிட்டே கொல்வதும் ஒடுக்குமுறை செய்வதும் அமெரிக்காவின் உள்நோக்கமுடைய கொள்கை என்பது உறுதியானது. அழிவே சுதந்திரம் ஜனநாயகம் என்று போற்றப்பட்டு, எதிர்ப்பு என்பது பயங்கரவாதமாகவும் சகிப்பின்மையாகவும் சித்தரிக்கப்பட்டது.
இது, சீனியர் புஷ் மனிதகுலம் இதுவரைக் கண்டிராத அளவில் இராக்கில் குழந்தைகளை மொத்தப் படுகொலை செய்ததைப் போலவும், ஜீனியர் புஷ், ஒரு ஏஜென்டின் ஆட்சியை அகற்றுவதற்காகவும் இராக்கிலிருந்து எண்ணெயைச் சுரண்டவும் தனது கைப்பாவையை ஆட்சியலமர்த்துவதற்காகவும் இராக்கிலும் மற்ற பகுதிகளிலும் பல மில்லியன் பவுண்டு கணக்கான குண்டுகளை பல மில்லியன் குழந்தைகள் மீது வீசியதையும் பொருள்படுத்துகிறது.
எனவே அவர்களின் மாபாதகத் தவறுகளுக்கான பதில், பெரிய ஒளிவட்டத்தையும் இப்படிப்பட்ட பிம்பங்களையும் கொண்டவர்கள் மீது செப்- 11 ஆக வந்தது. தனது சரணாலயத்தை ஒருவன் காக்க முற்பட்டதற்காக இதில் குற்றம் சொல்லலாமா?
தனது ஆக்கிரமிப்பாளனை தக்க வழிமுறைகளில் தண்டித்து தன்னைத் தற்காத்துக் கொள்வது ஆட்சேபிக்கத்தக்க பயங்கரவாதமா? அப்படித்தான் என்றால் எமக்கு வேறு வழியில்லை.
முடிவாக ஒன்றைச் சொல்கிறேன். உங்களின் பாதுகாப்பு புஷ்ஷின் கையிலோ ஜான் கெர்ரியின் கையிலோ அல்கொய்தாவின் கையிலோ இல்லை. அது உங்கள் கையில் தான் இருக்கிறது. எமது பாதுகாப்போடு விளையாடாத எந்த அரசும் தானாகவே அதன் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திக் கொள்கிறது.
அல்லாவே பாதுகாவலன்.. உதவியாளன்.. உங்களுக்குப் பாதுகாவலனோ உதவியாளனோ இல்லை. இந்த வழிகாட்டலை பின்பற்றுவோருக்கே பாதுகாப்பு.”
- ஓசாமா, Aljazeera.net (online publication), Doha, Qatar, October 30, 2004
இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல், நாயகன் விஸ்வநாதன் (எ) கமலைவிட, ஒசாமா பாத்திரத்துக்கும் ஒமர் பாத்திரத்துக்கும் தான் மிகப் பொருத்தம்.
“யாரென்று தெரிகின்றதா
இவன் யாரென்று தெரிகின்றதா
இவன் யாருக்கும் அடிமையில்லை
யாருக்கும் அரசனில்லை’
ஊரைக்காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்
சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்
பூமியைத் தாங்க வரம் கேட்கின்றோம்
புயலை சுவாசிக்க வரம் கேட்கின்றோம்
போர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை
போர்தான் எங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டது
நீதி காணாமல் போர்கள் ஓயாது..”
கருத்துச் சுதந்திரம் பாகம் - கடைசி.
கமலின் விஸ்வரூபம் உலக அர்த்தத்தில் அமெரிக்க பயங்கரவாதத்திற்கு அடியாள் வேலை செய்கிறது. இந்திய அர்த்ததில் வளர்ந்துவரும் இந்துத்துவ பயங்கரவாதத்திற்கு கொம்பு சீவுகிறது. தமிழ்நாட்டு அர்த்தத்தில் மதுரையையும் கோவையையும் குறிவைக்கச் சொல்கிறது.
கமல் தனது திரைப்படம் வெற்றியடைவதை ஒரு வியாபாரியின் துல்லியத்துடன் திட்டமிடுகிறார். இந்தியளவில் முஸ்லீம் வெறுப்புக்கும் அமெரிக்க மோகத்திற்கும் ஒரு சந்தை வாய்ப்பு இருப்பதை உள்ளுணர்வாக அறிந்து வைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து திரைப்படமாக்கி வருகிறார். அதற்காக எந்த நியாயத்தையும் குழிதோண்டிப் புதைக்கவும் தயாராக இருக்கிறார். ஒரு வகை பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார்.
ஆஸ்கர் விருது வாங்குவது அவருக்கு வாழ்வின் லட்சியமாக இருக்கிறது. சென்ற முறை “ஹர்ட் லாக்கர்” என்ற திரைப்படம் ஆஸ்கர் விருது வாங்கியது. ஈராக் போரை நியாயப்படுத்தி எடுக்கப்பட்ட படம் அது. கமல் சார் அந்தப் போட்டியில் இறங்கிவிட்டார். கொஞ்சம் மாற்றி அமெரிக்காவின் ஆப்கன் போரை நியாயப்படுத்தி எடுத்தாலாவது கொடுக்க மாட்டார்களா என்ற ஆசைதான். ஆசை வெட்கம் மட்டுமல்ல, உண்மையும் அறியாது போலும். மனிதப் பிணங்களின் மீது டாலர்கள் புரள்வதைப் பார்த்து அதன் விளம்பர வியாபாரத்தில் இறங்கிவிட்டார். அது அவருக்கு சாகச வெற்றியாகத் தெரிகிறது. நமக்கு அது சவப்பெட்டி வியாபாராமாகத் தெரிகிறது.
“தீயை, பெருந்தீ கொண்டு அணைக்காதே
காயத்தை ரத்தத்தால் கழுவாதே” – ஜலாலுதீன் ரூபி.
“யாரென்று தெரிகின்றதா
இவர் யாரென்று தெரிகின்றதா
எந்த ரூபம் எடுப்பான்
எவருக்குத் தெரியும்
சொந்த ரூபம் மாற்றி மாற்றி
எடுப்பான் விஸ்வரூபம்.” நன்றி – வைரமுத்துவுக்கு
- தங்கப்பாண்டியன், மதுரை (7708 543 572, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கலை என்ற பெயரில் கொலைஞர்களுக்கு குலையடிக்கும் கமலை தோலுரித்துக் காட்டிய கட்டுரையாசிரியர ுக்கு பாராட்டுக்கள்.!
Interesting facts about Viswaroopam! Which many of us missed to notice in the film! Sply for ppl who need deep understanding!
These are just spoilers,if you haven’t watched viswaroopam yet,Don't go further.Let me get to core of the movie.Right from first scene,Kamal uses pigeon to paddle the boat ;Pigeon signifies peace,and so it does in the film too, it signifies peace loving 'Muslims',or "ISLAM THE RELIGION OF PEACE".Many believe "People gotta have some global knowledge to understand Kamal's film".
I'd to like make some changes on the words,"People don't have to have global knowledge to understand the story/film of Kamal sir's,but they gotta have global knowledge to understand the buried messages/inform ation in kamal sir's film"
When I saw the first time I never realized,but after i had come to home i realized,film does not start with the Nirupamma's narration ,rather the story starts right immediately after the title.
While title credit goes on at the back ground,one can notice pigeons in their own cages until a man/terrorist walks in, feeds (thoughts of Jihad) those pigeons. He chooses a white pigeon and sends it,and it ain't white anymore,it has some black spots on it; It symbolizes Muslims are brainwashed to Jihads; the black spotted pigeon flies across Wall street,and lands at charging bull; Charging bull implies aggressive financial optimism and prosperity of the American economy at Wall Street,i guess; Kamal sir tries to explain how terrorists had brought American economy down by bombarding Twin tower,and post military,and army expenses which brought down America's economy.
Coming to the main plot,film was banned at many places during the initial release,because Muslims thought the film had had scenes which were offensive to their religious practices,and their religion,but the film proves jihads have got wrong perception over Koran,and they follow Islam in a wrong way.
1) The scene where boys dance wearing female attire to entertain the public,Omar and his men destroy the dance and give punishments to all those boys as it’s a sin but the same Omar allows his son to wear burka to demolish few of the American's tanks.This shows Omar and his men do not follow or do not know what the true meaning of Islam is. They ain't Islams; they just use Islamism as a Blanket/coverle t to justify their opinions.
2) After the damage done by the US army,Severely wounderd Omar asks Wisam(Kamal) why is "OUR RELIGION" treated this way? Why Muslims are being tortured so much in this world?Why should we shed tears? Wisam replies "WE ARE JIHADS" (replacing "religion" to "jihads" from Omar's question) we are not meant to shed tears,but to shed blood. "You have answered your question in your question itself, if there were a fight there, would be some death too" .Omar,the jihad does not know the difference between Islam and the Jihad,But Wisam explains it clearly.Muslims shed tears,jihads shed blood.Muslims take not violence as their weapon at any cost.
3) It's unfortunate that terrorist are Muslims ,and they strongly believe in God.They believe,they kill people for the betterment of Islam.Omar and his men pray before any killings or bombings.In the end, Abassi,the Nigerian prays to god before the sets the bomb,Omar and Salim pray before the detonation too.So does Wisam; when a FBI officer (Israeli) asks Tom,what is Wisam doing? he says "he is praying for you".Israeli asks "God Vadim"? Tom replies "Exactly, except it is in Arabic version" So Wisam, the Muslim prays for that Israeli too.These three guys pray to the same god,but their prayers differ.Director portrays the difference between the real Muslim and a terrorists who use Islamism as a blanket.Also one can connect Israeli and Palestinian wars when Tom answers Israeli's question.
4) I believe there's a scene in this film where a Muslims shaves all his hair from the body.I happened to notice,many didn't understand,why does he shave all over his body.It's an Islamic tradition to cut nails,remove all pubic hairs from the corpse.Accordin g to the Islams one's gotta be clean before he enters heaven.He knows he's gonna die,when he detonate the bomb; he does not have any one to do the spiritual activities,so he removes all his pubic hair by himself.Jihads believe,if they kill Tom,dick,and Harry,they shall go to heaven.So they're prepared for all the things.Even Wiz (kamal) shaves his pubic hair (After the interval scene),because he knows he may die saving the New York people.So in order to go to heaven,he shaves his pubic hair.Both the Abassi and Wiz do shave their hairs,but for the different reason.One of the greatest directorial touches.
5) In the public hanging scene, which according to jihads is justice done to a sinner. Almost everyone wears a white Taqiyya (worldly called as Muslim caps) or imama in Arabic. except for Wisam,who wears Black taqiyya; Black signifies sadness,but however it signifies evil,according to Koran and Bible. One can relate what director is trying prove by wearing the black cap at the so called justice done to the sinner.They don't give justice to sinner,instead they're doing the sin (Evil activities) in the name of justice
6) The little boy is ambitious about becoming a doctor,but Omar restricts him to be a Jihad as his brother Mammu; Wisam (Kamal) swings the little boy on the swing board,but the boy says “I am not a child" and walks away from the swing,but his elder brother asks Wisam to push the swing,and he enjoys the swing by closing his eyes against light,though the light falls on him,he ignores to accept it by closing his eyes. Proving the difference between a matured little boy,and immature grown up brother.Reason is obvious...
7) Pigeons roam beside the mosque or tomb in the film.When Omar walks beside the mosque he walks against those pigeon, symbolizing that Jihads hate peace,and hence they kick pigeons with their foot.Since,pige on is a metonymy for peace.
During the Public Hanging scene,there are lots of people observing the death of Nasir.During the hanging,Omar eats something and feeds a Pigeon (It symbolizes Omar's feeding his thoughts to good Muslims).Omar sits beside 2 pigeons on his right side with a Gun,and on left side Nasir's mom cries out of depression and curses Omar and his men,Omar had the option to choose between Peace (Pigeons) and War (Gun),but still he chose to pick up the gun..
9) The scene where sheik is introduced to wisam,one could notice the red roses behind them,and when a jihads car come near by the roses seem to be very red,but when the cars passed the rose,it became dark since there ain't any light to see the light up the red color of the roses,logically and scientifically the scene is justified,but what the director has tried to portray his,anything may turn dark when a jihad passes by.Good Muslims may turn dark/evil when they come across a jihad.
10) When Deepak questions Wisam about his religious faith, his wife says "Avar ADHU dhan" it’s quite obvious that she ain't comfortable with the name of the religion and hence addresses as ADHU rather dhan Islam. She had hated Vishwa,even before she didn't know he is a Muslim,but she starts to love him when she knew he is a Muslim.The scene when Kamal walks down the stairs with black leather jacket, Nirupama admires him,and so the pleasant BGM goes instead of Thunderous mass BGM which most of us would have expected when Kamal walks down. She hated him when he was a Brahmin and now he is a Muslim and she loves him.I guess director Kamal tries to prove Love > Religion
11) When the director introduces the detective Peter, Peter leans on an advertisement hoarding that says "Americas Most Favorite", explaining CIA and detective agencies of US which is being US’s most favorite from Director’s point of view.
12) In the news Obama says that Laden is killed praising America while below the news is "Petroleum hike by 3%" and on the right side "WORLD ALERT". Self-explainabl e. LOL
13) Some scenes show 2 sided statue is shown in the movie. One side being a man and another a woman. While the first song the statue is placed against a mirror, the camera shows the mirror and the statue. One can see both the faces of status in the same frame,
and again in the end once Kamal's boss says that he is the only live agent,and the status is shown both the sides. 2 sides of one statue and 2 sides of Wisam. Represents the role of Wisam in the movie as double agent.
14) At the last minute of the movie, director shows how Wisam enters the territory of Al Queada by landing/droppin g from a helicopter. According to Islam half-moon ain't really related to the Koran,however some Muslims started using it as symbol of Islam.In fact Islam is against using such symbols;The crescent is mentioned in the Koran as the non-Muslims. Haj-Koran 2:189.However,s ome Muslims believe, crescent moon is coming of second son,and also representation of new day, as according to Islam and Jewish a new day does not start by sunrise,but at sunset. A crescent comes after sunset,while Kamal Hassan falls from the sky entering Al Queda territory a crescent moon is seen, so you can connect to the previous 2 sentences Symbolizing start of new day or start of new Muslim era in this Muslim hated world. As Wisam is an Indian Muslim Raw agent,and saves 1000's of lives in the movie,proving worth of Muslims to this world. If I were a Muslim,I would thank Kamal Hassan,and would not protest.
Finally film ain't an Anti-Muslim, its Pro Muslim This movie has been taken to prove ,good Muslims are overshadowed by many things,and most of the times are swept away with odd things around this world. I would say this movie as a tribute to Muslims.So has he proved through this movie? Well audience gotta understand the movie to answer this question.
According to me Viswaroopam's one of the greatest cinematic achievements,no t only in the Indian cinema,but also in the world cinema.
While many films portray Muslims as a Somalian terrorists/Afgh an terrorists etc.
This film has clearly explained the differences between a jihad and a Muslim.
The best Muslim friendly film ever made.
We're able to trace out only these much interesting things from the film,but think How much things Kamal sir would have buried in this film.
We gotta dig deeper,or in other words We gotta watch it for N number of times,to get all the details/things from the film.
Overall it's a tribute to peace loving Muslims
Viswaroopam - A celluloid poem !
Binladen brainwashed the muslims in the name of Jihad and ruined their life .
Note one thing Bin Laden is not killed in Bush presidency period.
Laden is a clean chit criminal please dont portray him as a martyr.
அப்படியா ஐயா, உங்கள் அறிவு மிகவும் அற்புதமானது.
எதற்கும் கூகுளில் தேடிப் பாருங்கள், உண்மை தெரியும்.
ஒசாமா பின் லாடனிற்கு ஆதரவு என்றால் அதை நேரடியாக எழுதலாம்.விஸ்வர ூபம் வரும் வரை காத்திருந்தீர்க ளா.
சோவியத் யூனியனிற்கு எதிராக அமெரிக்க உதவி பெற்று போரிடும் போது அமெரிக்கா வேண்டும்,அதன் ஆயுதங்கள் வேண்டும்.அமெரிக ்கா அப்போதும் இஸ்ரேலை ஆதரித்து வந்தது. இது உலகமறிந்த உண்மை.
ஈரானும் ஈராக்கும் சண்டைப் போட்டுக் கொண்டன,அதற்கு காரணம் யார். குர்து இனமக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த சதாம் மிகவும் நல்லவரா.இல்லை தலிபான்களும்,அல ்கொய்தாவும் அமைதி மூலம் மாற்றம் கொண்டு வருவதில் நம்பிக்கை கொண்டவர்களா. ஒசாமாவிற்கும்,அ மெரிக்காவிற்கும ் பிரச்சினை என்றால் நீங்கள் ஏன் ஒசாமாவை ஆதரிக்கிறீர்கள் . ஒசாமா என்ன தமிழர்களின் ஆதரவாளரா இல்லை இந்தியாவின் நலம் விரும்பியா. ஒசாமாவும் மோசம், அமெரிக்காவும் மோசம் என்று ஏன் உங்களால் நடுநிலையாக எழுத முடிவதில்லை. ஒசாமா உங்களுக்கு பங்காளியா இல்லை உங்கள் மொழியை,பண்பாட்ட ை பாதுக்காக்க பிறந்தவரா.
பின் ஏன் இத்தனை பாசத்தைப் பொழிந்து அவர் பேச்சையெல்லாம் எடுத்து எழுதி நியாயம் கற்பிக்கிறீர்கள்.
கமலை அமெரிக்க அடிவருடி என்று எழுதுபவர் உண்மையில் தலிபான்களுக்கு, ஒசாமாக்களுக்கு அடிவருடி தான் என்பதை கட்டுரையில் வெளிப்படுத்தியு ள்ளார்.
ஒரு திரைப்படம் எடுத்ததுக்கே கமலை இந்த வாங்கு வாங்கும் நீங்கள் அமெரிக்காவுக்கு குடை பிடிக்கும் சவூதி மற்றும் இன்ன பிற நாடுகளையும்;லட் சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள்
ஈழத்தில் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட போதும் சரி இன்றுநட்டாற்றில ் நாதியற்று நிற்கும்போதுசரி நாங்கள் முஸ்லிம்கள் "அவங்கதான் தமிழர்கள்" என்று எங்கள் மொழி
பேசி எங்களையே காட்டிக் கொடுத்து காலமெல்லாம் கருவறுத்துக் கொண்டிருக்கும் ஈழமண்ணின் உள்ளூர் தலைபான் அபிமானிகளையும் உங்கள் பாணியிலேயே ஒரு வாங்கு வாங்கினால் மெத்தப்பெரிய உபகாரமாயிருக்கு ம்.அப்போதுதான் உங்களுக்கே நீங்கள் யார் அவர்கள் யார் எனும் வித்தியாசம் புரியும்.நன்றி.
இந்த ஒரு அமெரிக்க பெருமையை(?) கூட, விஸ்வரூபத்தில் பிடுங்கி எடுத்து... அதை, இந்திய ரா உளவுத்துறைதான். ... காஷிமிரிக்கும் தமிழச்சிக்கும் கேள்விக்குறியோட ு பிறந்த ஒரு முஸ்லிமாகவும் பார்ப்பனராகவும் நடிக்கும் ஓர் 'ரா' அலுவலர் மூலம் அல்கொய்தாவுக்கு ட்ரைனிங் தந்ததாக அப்பட்டமாக உலகப்படம்(?) எடுத்து பொய் புளுகிய 'உலக வில்லனின் அடிவருடி' மிகவும் அசிங்கப்பட்டு விட்டான் இப்பதிவில்.
..../////இப்போது இரட்டைக் கோபுரத் தாக்குதலை வைத்து ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார ்கள். அது இந்தியாவில் சக்கைப் போடு போடுவதற்குள், பேசாம நான் இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாம் என்று இருக்கிறேன்////
முதலில் அதைச் செய்யுங்கள்
you are seeing the fishes but not observe the stream. your are paying attention to the whirling things but not the storm.
but the total impression of the film is that “Jihadis are the enemy of the world and peace.” but even a primary student of the political economy can’t accept this.
but blatantly you are negating by saying that Kamal sir, is neutral. you are thinking that he is neutral. Oil war is the sole thing produced by the thirst of American Oil companies and the war mongering Military Generals of America.
Worldwide the role of American political intervention is totally aggressive. Even few years back there was a train blast in Bengal. An America diplomat intervened by saying that “we can investigate it”. The left parties of this country condemned it .. than all parties also condemned.
And His division that “Islam is not but Jihadis” is childish. Every country resist by their ideologies which are available in their native. In Vietnam they opposed with Buddhism. In Iraq they opposed By both shia and Sunny sections of Islam. In Ireland it with Catholic Christianity against the England aggressors.. So, In Muslim countries the resisting people are Muslims.
The question is then you advice them how to fight the aggressors by moderate Islam. If you give a certificate to them moderate, than they have to leave beard and their cultural identities. I think it is unnecessary to leave their identities to open your blind folded eyes filled with ignorance.
People like kamal sir, are pseudo intellectuals shaking hands with the people, standing side with the tyranny. There is no media for the people. There is no food for the people and nothing for their economy through this imported war. But kamal sir worrying about the degrading trend of economy of America.
And you say “Kamal sir tries to explain how terrorists had brought American economy down by bombarding Twin tower,and post military,and army expenses which brought down America's economy.” Now if you have the tolerance to hear the other view pls “
About this, Osama saying this,
“So I say to you, over 15,000 of our people have been killed and tens of thousands injured, while more than a thousand of you have been killed and more than 10,000 injured. And Bush's hands are stained with the blood of all those killed from both sides, all for the sake of oil and keeping their private companies in business.”
I am not agree with the fundamentalist and undemocratic way of thinking of Osama. But if Kamal is neutral he should talk about the things of the otherside of Osama or Taliban or Al-Qaida. Simply he reduce it to the “they kill people for the betterment of Islam” is totally the thing of omission. Than how can be he is neutral. Following his traces of films like Unnai pol oruvan and this Vishwaroopam both are anti muslim pretending as neutral.
‘Down with pseudo people’ acting with peace.
பிரிட்டிஷ் பெண்மணி எழுதியதுதான் .
IN THE HANDS OF TALIBAN BY YVONNE RIDLEY
எதிர்ப்புபோர் நடத்துவோரின் மதம் குறித்து இத்தனை ஆராய்ச்சி செய்யும் அனைவரும் எதிர்போரின் தேசம் , நாடு , பொருளாதாரம் அரசியல் நிலை குறித்த ஆராய்ச்சியுடன் வாருங்கலேன் .
இதற்கு கமல் போன்று ஆப்கன் போக வேண்டாம் ஜுச்ட் செஅர்ச் கோக்லெ
Read the book titled 'India varalaatril bagavat gita'(The Role of bagavath Gita in indian History) by Premnath Bazaz.This will reveal the hidden faces and agenda of the sons of brammaa against Sudhraas.
சதாம் ஹூஸைன் அமெரிகாவுக்காக ஈரானோடு போராடியதும், தனது நலன்கள் மறுக்கப்பட்டபோத ு குவைத்தைத் தாக்கியதும் பின்னர் அமெரிக்காவின் எதிரியானதும் பின்னர் அமெரிக்காவால் கொல்லப்பட்டதும் ஒரு கோர்வை அது போல
ஒசாமா அமெரிக்காவுக்கா க ரஷ்யாவை எதிர்த்துப் போராடியதும் பின்னர் அமெரிக்காவுக்கு எதிராகப் போராடியதும் அமெரிக்காவினெதி ரியானதும் கொல்லப்படடதாய்ச ் சொல்லப்படுவதும்..
ஆக இங்கு தொக்கி நிற்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தி ன் நலன் மட்டுமே
ஒசாமா உலக முஸ்லிம்களுக்கு ப் பெற்றுத் தந்தது என்ன?
'முஸ்லிம்கள் என்றால் தீவிர வாதிகள்' என்பதைத் தவிர????
இப்போது அமெரிக்கா இலங்கைக்குஎதிரா கப் பிரேரனை கொண்டுவருவதால் புலம் பெயர் தமிழர்கள் அமெரிக்காவை ஆஹா ஓஹோ புகழ்கிறார்கள் அதே அமெரிக்கா தடைசெய்யப்பட்ட பயங்கரவாதப் பட்டியலில் விடுதலைப் புலிகளைச் சேர்த்திருந்தது என்பதையும் அவர்கள் பார்வையில் தமிழீழ விடுதலைப் போராட்டமும் அல் குவைதாவின் போராட்டமும் ஒன்றுதான் என்பதை பலர் வசதியாக மறந்துவிட்டார்க ள்,
ஒன்றை அடைவதற்கு இன்னொன்று தேவை ஆப்கானின் இயற்கைப் படிமங்களை அபகரிக்க அமெரிக்காவுக்கு ஒசாமாவை சர்வதேச வில்லனாக்க வேண்டி வந்தது,
ஈராக்கின் எண்ணெய் வளங்களைச் சூரையாட பேரழிவு தரும் ஆயுதங்களும் அதைப் பதுக்கிய வில்லன் சதாமும் இப்போது இலங்கையிலும் மறுதலிக்கப்ட்ட அமெரிக்க நலனுக்காக ராஜபக்ஷவை மிரட்டிப் பார்க்கிறது அமெரிக்கா அவ்வளவுதான்
அதுபோல கமலுக்கு அஸ்கார் வேண்டும் சும்மாவா உலக நாயகனல்லோ!!?? அதனால் முல்லா ஒமரைப் பிடிப்பதிலும் தப்பில்லை,
பார்ப்பனியப் பங்குச் சந்தைக்கு அப்பால் கமலுக்கு நிறைவேராத ஆசை இருக்கிறது விடுங்கள் அதை இப்படியாவது நிறைவேற்றிக் கொள்ளட்டும்.
யாராவது அமெரிக்காவின் கையில் காலில் விழுந்து கெஞ்சிக் கூத்தாடி ஒரு ஆஸ்கர் விருத வாங்கிக் கொடுத்துவிட்டால ் கமலின் காய்ச்சல் குணமாகி விடும்.
எல்லாத் தளங்களிலும் நியாயப்படுத்தல் இருக்கிறது,
உதாரணம் 01: பயங்கரவாதத்துக் கு எதிரான போர் - உலக சமாதானத்தை நோக்கியது- அமெரிக்கா (ஆகவே, ஆப்கானிலும் ஈராக்கிலும் அப்பாவிகளைக் கொன்று குவித்தாலும் அது சரியானது, நியாயமானது)
உதாரணம் 02: பயங்கரவாதத்துக் கு எதிரான போர் - மனிதக் கேடயத்தை உடைத்து மக்களைக் காப்பாற்றும் மனிதாபிமானத்தை நோககியது - இலங்கை (ஆகவே வடக்கு கிழக்கில் அப்பாவிகள் கொல்லப்பத்ல் அது நியாயமானது)
ஏற்றுக்காள்ள முடிகிறதா??
ஏற்றாலும் ஏற்காவிடடாலும் அதுதான் உலக நியாயம்.
குழப்பம் இருந்தால்தால்தா ன் நிறையப் பேர் பிழைக்க முடியும் (கமலைப் போல குழப்பத்தை உண்டுபண்ணியாவது)
இப்போது ஒரு கேள்வி: ஒரு பயங்கரவாதி இன்னொரு பயங்கவாதியைத் தண்டிப்பதும் நடத்தையில் குறைகண்டுபிடிப் பதையும் ஏற்றுக் கொள்ளுவதா நிராகரிப்பதா?
தங்க பாண்டியன் அருமையான பதிவு, உணர்ச்சி வேகத்தில் கொஞ்சம் சறுக்கிவிட்டீர் கள், வாழ்த்துக்கள்.
@R Chandrasekaran கேட்டது போல kumar uk யின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஒன்றுமேயில்லை
//தமிழர்கள் ஈழத்தில் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட போதும் சரி இன்றுநட்டாற்றில ் நாதியற்று நிற்கும்போதுசரி நாங்கள் முஸ்லிம்கள் 'அவங்கதான் தமிழர்கள்' என்று எங்கள் மொழி பேசி எங்களையே காட்டிக் கொடுத்து காலமெல்லாம் கருவறுத்துக் கொண்டிருக்கும் ஈழமண்ணின் உள்ளூர் தலைபான் அபிமானிகளையும் உங்கள் பாணியிலேயே ஒரு வாங்கு வாங்கினால் மெத்தப்பெரிய உபகாரமாயிருக்கு ம;///
காட்டிக் கொடுத்தல் தொடர்பில் தங்களுக்கு என்ன விளக்கம் வேண்டும் தப்பான உங்கள் அபிப்பிராயத்தைய ும் போக்கையும் உடைத்தெறிய ஆயிரம் விளக்கம் என்னிடமுண்டு ஜிஜி. பொன்னம்பலம் தொடக்கம் சேர் பொன் ராமநதன் என்று கே.பத்மநாதன் வரை காட்டிக் கொடுத்தல் தொடர்பில் பேசமுடியும் உங்கள் பாணியில் மெத்தப் பெரிய உபகாரம் செய்ய நான் தயாழ்
முதலில் யார் தவறு செய்தது? பின்லேடனா, அல்லது அமெரிக்கவா?
மத அடிப்படை வாதத்தை நாம் ஆதரிக்க முடியாது, ஆனால் அமெரிக்கா நாளை, வால்மார்ட் நிருவனத்திற்காக வும் சந்தைக்காகவும் நம் இந்தியா மீது போர் தொடுக்காது என்பது என்ன நிச்சையம் கண்டீப்பாக நம் நாட்டை ஆக்கிரமிக்கும் அப்போது பின்லேடனுக்கும் , சதாமுக்கும், என்ன நடந்ததோ அதுதான் நமக்கும். ஈராக்கிலும், ஆப்கானிலும் என்ன நடக்கிறதோ அதுதான் நம் நாட்டிற்கும்.
கமல் ஒரு கைக்கூலி, மோசடியாக படம் எடுத்துள்ளார்.
"ஹெலிகாப்டரில் இருந்து சுடும் அமெரிக்க வீரர் ஒரு பெண்ணைத் தவறுதலாக சுட்டுவிட்டதற்க ாக தன்னைத் தானே சபித்துக் கொள்கிறார். ஏனென்றால் அமெரிக்க வீரர் சாதாரண ஆப்கானிய மனிதனை சுட்டுவிட்டால் தன்னைச் சுட்டுவிட்டதாக எண்ணுவாராம்!"
தன்னுடைய படம் வியாபாரம் ஆகவேண்டும் என்பதற்க்காக நியாய உணர்ச்சி இல்லாமல் இது மாதிரி நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டுல் லது. அமெரிக்க எசமானனை இந்த காட்சி கூச்சப்பட வைத்திருக்கும்.
கடைசி காட்சியில் பாரத பிரதமரோடு பேசிவிட்டு
'செய் ஹிந்த்' என்ரு சொல்லும் போது நம் காதுகளில் ரத்தம் வருகிறது.
2-பாகம் இந்தியாவாம், காசுமீரை மீட்டுவிடுவார் கமல்.
இனி அவரும் அல் கொய்தா தான்.
afghan within Two weeks.
hence, Afghan president also be considered as islamic terrorist or al - quitha terrorist
அரபு நாடுகளில் அதிக அளவு வேலை பார்க்கும் மலயாள முஸ்லீம்கள் விச்வரூபத்தை ஏன் எதிர்க்கவில்லை?
பாபரி மசூதிக்காக இன்றளவும் போராடிக்கொண்டிர ுக்கும் வட இந்திய முஸ்லீம்களில் ஒருவர் கூட விஸ்வரூபத்தை எதிர்க்கவில்லைய ே!
மும்பாயிலும் ஆந்திராவிலும் கர்னாடகாவிலும் முஸ்லீம்கள் எதிர்க்கவில்லைய ே!
ஏன், தமிழர்களோடு தமிழர்களாகத் தமிழ் பேசிக்கொண்டே, ராஜபக்சேயின் அடிவருடிகளாய், தமிழர்களின் நல்வாழ்வை எதிர்த்துக் கொண்டிருக்கும் ஒரு சில இலங்கை முஸ்லீம் குழுக்கள் கூட எதிர்க்கவில்லைய ே!
தமிழ்நாட்டிலும் , அறிவுஜீவிகளான முஸ்லீம்கள் எதிர்க்கவில்லைய ே! பாண்டிபஜாரிலும் ரங்கனாதன் தெருவிலும் ஜாம்பஜாரிலும் உள்ள முஸ்லீம்கள் எதிர்க்கவில்லைய ே!
தமிழ்நாட்டிலுள் ள அமைதி விரும்பும் முஸ்லீம்களின் நற்பெயரைக் கெடுப்பதற்கென்ற ே, சமூக விரோதிகளின் துணைகொண்டு காசுக்கு விலை போனவர்கள் சிலர் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்துச் செய்த காரியம் இது என்பதை உடனடியாகப் புரிந்துகொண்டதன ால் தானே ஒரு சரித்திரத்திலேய ே முதல்முறையாக ஒரு சினிமாவுக்கு ஆதரவாகத் தமிழகமே கொதித்தெழுந்தது !
இந்தச் சுயநலமிகளை நம்பி, சுய சிந்தனை உடையவர்கள் தங்கள் நேரத்தைச் செலவிடவேண்டியதி ல்லை என்பது என் தாழ்மையான கருத்து. (அடுத்த முறை 'விச்வரூபம்- இரண்டாம் பாகம்’ வெளியாகும்போது முன்கூட்டியே உரிய தொகை தந்து இவர்கள் சரிக்கட்டப்படலா ம்). மற்றபடி, அமெரிக்கவுக்கும ் அரபு நாடுகளுக்கும் உள்ள பகைமை, எண்ணை வளம் சுரண்டுதல் போன்ற பிரச்சினைகள் வேறு தளத்தில் விவாதத்திற்குரி யவை. கேவலம் ஒரு சினிமாவைச் சார்ந்த நிகழ்வுகள் அல்ல இவை.
RSS feed for comments to this post