தொன்மையில்லாத மனிதருக்கு வாழ்வு உண்டா? தொன்மையில்லாத இனத்திற்கு வரலாறு உண்டா? தொன்மையில்லாத வாழ்வு என்ன வாழ்வு” (பிரேம்-அதிமனிதரும், எதிர்மனிதரும்-2009 )

அலையும் நமது புலன்களுக்கு தட்டுப்படும் எல்லாவற்றிற்கும் மூலத்தைத் தேடுகிறோம். நாம் தேடி போகும் மூலம் என்பது மனிதம் என்ற சொல்லைப் போலத்தொல்நினைவாக எஞ்சியிருப்பதைக் கண்டு திணறுகிறோம், ிமிருகிறோம் . திமிருதல் தொன்மையடையாளமாக உருவகப்படுகிறபோதுதான் நமது இருப்புக்கான ஓரிடம் உறுதி செய்யப்படுகிறது. இன்று உறுதி செய்யப்பட்டிருக்கிற எல்லா இருப்பிடங்களுக்கு உள்ளும் புறமும் இது போன்றதொரு தொன்ம விளக்கங்கள் நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றன. அல்லது தொன்மங்கள்தான் இருப்பிடங்களாக சிலருக்குக் கிடைத்துவிடுகின்றன. எந்த ஒருநிலையிலும் இரண்டு குடிகளுக்கான போரில் முதலில் அழிக்கப்படுவதும் காக்கப்படுவதும் தொன்மையடையாளங்கள்தான். ஓரினத்தை அழிக்கவேண்டுமானால் தொன்மை அடையாளங்களை அழித்துவிட்டால் போதும். அல்லது தொன்மை அடையாளங்களைக் கைப்பற்றிவிட்டால் போதும். பூக்கள் மாலைகள் , விலங்குகள், காவல்மரங்கள், குடைகள் , முரசுகள், கொடிகள், கோட்டைகள் , மதில்கள், மொழிகள், கதைகள் , இவற்றில் வரும் பெயர்த் தொடர்கள் அடைகள், உவமைகள் , உருவகங்கள் இப்படி எத்தனையோ அடையாளங்கள் ஒவ்வொரு குடிமரபுக்கும்வாழ்க்கைக்கான  உந்துவினையை நிகழ்த்துகின்றன. 

Moovendar

பழந்தமிழக அரசியலில் பெரிதும் செல்வாக்கு செலுத்திய சேர, சோழ, பாண்டிய  அரசமரபுகள் இனக் குழு சமுதாயத்திலிருந்துதான் தோன்றின . ஆயினும் பழங்குடி மரபுகளின் அடையாளங்களை அழித்தும் கைப்பற்றியும் தங்களை நிலை நிறுத்திக் கொண்டனர். 

மூவேந்தர்களின் இலச்சினைகளில் ஒன்றான வில், புலி,மீன (கொடி) தோன்றிய முறைமை மற்றும் குடிமரபுப் பெயர்கள் தோன்றிய முறைமை இவை மட்டுமே இக்கட்டுரைக்கான பொருள்களாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன .

மூவரும் இலச்சினைகளும் :

பழந்தமிழகத்தில் அரசர்கள் என்றால் அது சேர , சோழர் , பாண்டியர் ஆகிய மூவரைக் குறிக்கிறது. இவர்களே தமிழ் காக்கும் மூவர் எனப் போற்றப்படுகின்றனர் . ( அகம்.131-14. ;திரு .162; புறம்35 -4;122-5;205-1; 3 57-2; பெ 33; பொ54.). ஆனால் மூவேந்தர்களுக்கு பூக்கள் , மாலைகள் உள்ளிட்ட இலச்சினைகள் இருந்தன . ஒவ்வொரு அரசமரபுக்கும் வெவ்வேறு இலச்சினைகள் இருந்திருக்கின்றன .

தமிழகப் பேரரசர்களாகிய மூவேந்தர்களும் அடையாளப் பூக்களையும் சின்னங்களையும் கொண்டிருந்தனர் . சோழர் ஆத்திப் பூமாலையும் , சேரர் பனம்பூமாலையும் , பாண்டியர் வேப்பம்பூமாலையும் வைத்துக் கொண்டிருந்தனர் . தவிரவும் ஒவ்வொரு அரசரும் தங்களது சின்னங் பொ றித்துவைத்துக் கொண்டிருந்தனர் . சோழர் புலிக் கொடியையும் , சேரர் வில் கொடியையும் , பாண்டியர் மீன் கொடியையும் கொண்டிருந்தனர் . இவை யாவும் கைப் பற்றப்பட்ட எதிரிகளின் நிலத்தில் பொ றிக்கப்பட்டிருந்தன . ( புறம். 33, 39, 58)

கோட்டைகள் மீதும் , யானைகள் மீதும் , படகுகள் மீதும் தேர்களின்மீதும் அகன்ற தெருக்களிலும் , வணிக வீதிகளிலும் , கடைகளிலும் , கோவில்களிலும் கொடிகள் வைக்கப்பட்டிருந்தன . புறம் 9. 38. அகம் 162. புறம் 69. புறம் 31. அகம் 114. புறம் 377. அகம் 83. 126. அகம் 110. திருவிழாவின்போதும் கொடி ற்றப்பட்டது . அகம் 149. பழந்தமிழகத்தில்  பழங்குடி த் தன்மையிலான அரசுகள் குறுநில அரசுகள் போன்றவை இருந்தபோதிலும் அவை பெரிய அளவிற்கு ப் பூக்களையும் கொடிகளையும் குடைகளையும் தங்களுடைய அடையாளங்களாகக் கொண்டிருப்பதற்கான பதிவுகள் இல்லை . ஆனாலும்  .’ .. .. .. .. குருந்தே முல்லை யென்று இந்நான் கல்லது பூவும் இல்லை’( புறம்335) ; இனக் குழு சமுதாயத்திலிருந்துதான் பூக்கள் போன்ற புனிதத்துவம் வாய்ந்த அடையாளங்கள் உருவாக்கப்பட்டன என்பதற்கு ச் சிறிய சான்றாகக் கருதலாம். பெருவேந்தர் பேரரசு இவற்றிற்கு மாற்றான பதிவு இது என்பதிலிருந்தும் இக்கருத்தை உறுதி செய்ய முடிகிறது.

குறுநில அரசர்கள் இம்மாதிரியான அடையாளங்களைக் கண்டுகொள்ளவில்லை. இவர்களுடைய அடையாளங்கள் நிலவளத்தோடு ஒருங்கிணைந்துள்ளது. மேலே காட்டப்பட்டுள்ள புறம் 335 ஆம் செய்யுள்கூட இதைத்தான் உணர்த்துகிறது. இலச்சினைகள் அல்லது சின்னங்கள் என்பவை நிலத்தோடும் அந்நிலத்தில் வாழும் மக்களின் தொழிலோடும் தொடர்புடையவையாக ம். குலக் குறி என்று சொல்லப்படுகிற குலச் சின்னங்கள் கூட இப்படித்தான் உருவாக்கப்பட்டன. சேரருக்குரிய வில்கொடியையும், பாண்டியருக்குரிய மீன்கொடியையும், சோழருக்குரிய புலிக் கொடியையும் அந்த அந்த அரசருக்குரிய குலக் குறியாகக் கருதமுடியவில்லை. ஏனெனில்,  பல குலங்களைச் சார்ந்த குடிமக்களை ஒருங்கிணைத்துச் சேர , சோழ, பாண்டிய அரசுகள் உருவாக்கப்பட்டன. சேரநாடு மலையும் மலையைச் சார்ந்த நிலமும் ஆகும். இங்கு வேட்டை தலைமைத் தொழில் வேட்டுவர்களே தலைமை மக்கள் ; வில் இவர்களுடைய குலச் சின்னம். ஆனால், சேர அரசர்கள் இக்குடிமக்களின் வழிவந்தவர்கள் என்பதற்கு வெளிப்படையான சான்றுகள் இல்லை.

பேரரசு என்பது ஒரு குல அரசன்று. பல குடிகளை உள்ளடக்கியது. சேர அரசுக்கான பெருவருவாய் கடல்வணிகத்தின் மூலமே கிடைத்தது. அதனால்தன் ‘1கடல் பிறக்கோட்டுதல் புலவர்களால் மதிப்போடு பேசப்படுகிறது. வேட்டுவமக்கள் சேரநாட்டின் வலிமையான பழங்குடி மக்கள் என்பதால் பிட்டன்கொற்றன் போன்ற குலத் தலைவர்களோடு தொடர்பு கொண்டு வில்லை அடையாளமாகத் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும். பாண்டிய நாட்டின் பெரும் பகுதி காடும் காடு சார்ந்த இடமும் ஆகும். பாண்டிய அரசர்கள் தங்களுடைய படை வலிமையால் தங்கள் நாட்டை விரிவுபடுத்தினர். இதனால் கடலும் அவர்களுடைய எல்லையானது. இதனால் முத்து பாண்டியருக்குச் செல்வமாக மாறியது . கடல்வளத்தைக் குறிக்கும் மீன் கொடி பாண்டியருடைய சின்னமானது மீன் கொடி பாண்டியருக்குரியதாகப் பரவலாகப் பேசப்படுகிறது . பாண்டியர் கொற்கைப் பகுதியில் வலிமையாகத் திகழ்ந்த பரதவர் மீது பெரும்போர் தொடுத்து ப் பரதவரைக்  கைப்பற்றி மீன் கொடியைத் தங்களுக்குரியதாக்கிக் கொண்டனர் .ஒன்று மொழி ஒலி யிருப்பில் தென் பரதவர் போரேறே’ ( மதுரைக்காஞ்சி.618.)   கொற்கைப் பாண்டியன் என்பது கூட குடிப் பெயராக இல்லாமல் கொற்கைப் பகுதியில் வலிமையோடு விளங்கிய ஒரு தலைவனுக்குரிய பட்டப் பெயராக இருக்கிறது. இந்தக் கொற்கைப் பாண்டியன் பாண்டியருக்கு அடங்கி உதவி செய்தான். இவன் பரதவரின் தலைவனாக இருக்கவேண்டும். சோழநாடு மிகவும் தொடக்க காலத்தில் இவ்வளவு வளமுடைய மருதநிலமாக இருந்திருக்கவில்லை. அது சதுப்புநிலமாக இருந்தது. கரிகாலன் போன்ற அரசர்களின் முயற்சியால் காவிரிப் பாசனம் முறைப்படுத்தப்பட்டு வளம் தரும் மருதநிலமாக மாற்றப்பட்டது என்பதைப் பட்டிணப்பாலை உள்ளிட்டவை நமக்குத் தெரிவிக்கின்றன. ஆனால் சோழருக்குரிய கொடியாகப் புலிக் கொடி சுட்டப்படுகிறது .

மாவே, எறிபதத்தான் இடங் காட்டக் ,

கறுழ் பொருத செவ் வாயான்,

எருத்து வவ்விய புலி போன்றன;’ (புறம் .4.) ‘‘இவன் யார் ?’ என்குவை ஆயின், இவனே,

புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய,

எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்,’ ( புறம்.13.) து ,

புலிபுறங் காக்கும் குருளை போல,

மெலிவில் செங்கோல் நீபுறங் காப்ப’ ( புறம்.42.) விடர்ப்புலி பொறித்த கோட்டைச், சுடர்ப் பூண்,’ (புறம்.174. ) புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து உரனுடை யாளர் கேண்மையடு’ ( புறம்.190.) புலி சோழரின் குலக் குறி என்பதற்கு ச் சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. சோழர் ஆண்ட நிலம் கூட புலிவாழும் பெரும் காடாக இல்லை. இந்நிலையில் இந்தப் புலிக் கொடி அடையாளத்தைச் சோழர்கள் எங்கிருந்து பெற்றார்கள் என்பது நமக்குத் தெரியவில்லை . புலி சோழரின் குலத் தெய்வமான திருமாலின் வாகனமாகக் கூட இல்லை. இன்றைய கேரளாவில் உள்ள (அன்றைய சேரநாடு) அயப்பன் என சொல்லப்படுகிற சாஸ்த்தாவின் வாகனமாக புலி இருப்பதை அறியமுடிகிறது. சாஸ்த்தா புத்தரோடு தொடர்புடையது

புத்தநெறியைப் பரப்புவதற்கு மவுரியர் உள்ளிட்டோர் மேற்கு தொடர்ச்சி மலைவழியாகத்தான் தமிழ் நாட்டிற்குள் வந்தனர். மேற்குத் தொடர்ச்சிமலையில் தான் புலிகள் அதிகமாக வசிக்கின்றன. எனவே சாஸ்த்தா தன்னுடையவாகனமாகப் புலியைத் தெரிவு செய்தது இயல்பு. புத்தசமயம் சோழநாட்டில் பரவியபோது சோழர்கள் புத்தசமயத்தாரோடு போரிட்டும் தொடர்பு கொண்டும் இச்சமயத்தாரிடமிருந்து புலிச் சின்னத்தைக் கைப் பற்றியிருக்கலாம். என்று சிந்திக்க இடம் உண்டு.   என்றாலும் இதற்கான வலுவான சான்றுகளைத் திரட்டமுடியவில்லை. வேங்கைமார்பன் என்கிற போர் வீரன் ஒருவன் புலியை வென்றவனாக அகநானூற்றில் பேசப்படுகிறான். வேளிர் மரபில் வந்த நாற்பத்தொன்பதாவது பட்டத்திற்குரியவனாக இருங்கோவேள் புலிகடிமால் புலியோடு தொடர்பு படுத்திப் பேசப்படுகிறான் (புறம்201-202 ). எருமை நாட்டையாண்ட இந்த புலி கடிமாலுக்கும் சோழருக்கும் உள்ள தொடர்பை அறியச் சான்றுகள் எதுவுமில்லை. சோழர்களின் தலைநகரான உறை யூருக்கு இன்னொரு பெயர் கோழியூர் என்பதாகும். கோழி யானை சண்டையில் யானையைக் கோழி வெற்றி கொண்டதால் இவ்வூருக்கு இப்பெயர் வந்தது. இதற்குச் சங்க இலக்கியம் சான்று அளிக்கிறது. ஆனால் சோழர்கள் புலியைத் தங்களுக்குரிய அடையாளமாகத் தெரிவு செய்தது குறித்து உறுதியாக எதுவும் கூறுவதற்கில்லை. 

மூவேந்தரும்   குடிமரபுப் பெயர்களும்

பழந்தமிழில் அரசுருவாக்கம் குறித்து அறிவதற்கு மூவேந்தர்களின் குடிமரபுப் பெயர்கள் குறித்து ச் சிந்திப்பது மிகவும் இன்றியமையாததாகிறது மூவேந்தர்களின் இலச்சினைக்கு இணையாக அவர்களுடைய குடிமரபுப் பெயர்கள் புலவர்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றன. இந்தக் குடிமரபுப் பெயர்கள் அரசமரபின் செயல்களையும், குடிமரபின் பெருமைகளையும், குடிமரபின் தொன்மைகளையும் உணர்த்துவனவாக அமைந்துள்ளன. பழந்தமிழகத்தில் முதலில் தோன்றிய அரசு எது என்பதை விளக்குவது எளிதன்று. ஆனால் சேர, சோழ, பாண்டியர் என வரிசைப்படுத்தி வழங்கும் மரபையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. அதற்குமுன் தமிழ் இனம் மேற்காசியாவில் தோன்றி இன்றை தென்னகத்தை வந்தடைந்தவர்கள் என்றும் இன்றைய தென்னகத்திலேயே தோன்றி உலகமுழுதும் பரவியவர்கள் என்றும் இருவேறு கருத்துகள் ஆய்வாளர்கள் இடையில் காணப்படுகின்றன. கனகசபை முதல் கருத்தை உடையவர். பாவானர் உள்ளிட்ட அறிஞர்கள் இரண்டாம் கருத்துக்குரியவராகவும் காணப்படுகின்றனர்.ஏறத்தாழ இன்று ஒவ்வொரு இனமும் எந்தெந்த நிலங்களைத் தாயகமாகக் கொண்டுள்ளனரோ அதே நிலங்களில்தான் தோன்றியுள்ளனர் .” (! பண்டை இந்தியா t.d. கோசாம்பி) வரலாற்றுக் காலத்தில் புராதன எச்சங்கள் என்கிற கட்டுரையில் அமைந்துள்ள இக்கருத்து தமிழர் தாயகம் தென்னகம் என்கிற கருத்துக்கு வலு சேர்க்கிறது தமிழர்கள் இன்றைய தென்கோடி இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவர்கள் என்றாலும் பழந்தமிழகத்தை ஆண்ட அரசர்கள் பெரும்பாலோர் தமிழகத்தைத் தாயகமாக உடையவர்கள் அல்லர் இந்தக் கருத்தைப் புரிந்து கொள்ளுவதற்கு அரசரின் குடிமரபுப் பெயர்களை ஆராய்வது இன்றியமையாததாகிறது.

சேரரின் குடிமரபுப் பெயர்கள் 

 வில்லவன் , வானவன் , வானவரம்பன் , இமயவரம்பன் , குட்டுவன் , குடக்கோ , பொ றையன் ஆகியவை சேரருடைய அரசமரபுக்குரிய பெயர்களாகும் . வில்லவன் என்பது சேரருடைய வில்லாற்றலைக் குறிக்கிறது . சேரநாட்டில் வேட்டுவ மக்கள் பழங்குட ிகளாக வாழ்ந்தனர் . இந்த க் குடியிலிருந்து கூட சேர அரசமரபு ஒன்று உருவாகியிருக்க ிறது. மலைநாட்டுக்கு வேட்டுவமக்களே தலைவர்கள் என்பதுவு ம் குறிப்பிடத்தக்கது. பிட்டன்கொற்றன் போன்ற தலைவர்களைச் சேரர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததன் அடையாளமாகக் கூடச் சேரர் வில்லைத் தெரிவு செய்திருக்கலாம். வில்லவன் என்பது சேர ருக்கு ஒரு தொன்மையான அடையாளத்தை வழங்குகிறது. வானவரம்பன், வானவன் என்பவை மலைநாட்டை ஆண்டதால் சேரருக்கும் உரியதாயிற்று. வங்காளத்துக்கு வடக்கே உள்ள ஒரு மலைநாட்டை ஆண்ட மரபினர் இவ்வாறு பெய்ர் பெற்றிருந்ததாக குறிப்பிடும் கனகசபை அவர்களே தமிழ்நாட்டு மலைப்பகுதிகளை ஆண்டவர்களாக் குற ிப்பிடுகிறார் .சேர அரசர்களேயன்றி முதிரைமலைக் கோமான் நன்னன் அழும்பில்வேள் ஆகிய பிற மலைப்பகுதித் தலைவர்களும் தங்களை வானவிறல்வேள் அல்லது வானவர் கோமான்கள் என்று குறித்துக்கொண்டனர். (1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் ப.97.) தமிழகத்து மலைநாட்டையாண்ட குறுநில அரசர்களும் வானவர் எனச் சுட்டப்படுகின்றனர். வானவர் என்ற தொடருக்கு இந்த நில உலகத்திற்கு அப்பால் உள்ள மேலுலகம்  என்ற  பொருள் கொள்ளுவது கூடாது. அம்மரபினரின் சொந்த நிலம் குறித்த அல்லது கடந்துவந்த நிலம் பற்றிய பதிவு  எனக் கொள்ளுவது தகும்.

 இமயவரம்பன் என்ற தொடருக்கு  சேரர் இமயத்தோடு தொடர்புடையவர்கள் என்பதைக் குறிக்கிறது . குட்டுவன் குட்டநாட்டை ஆண்டவன் என்பதைக் குறிக்கிறது . குடவர்கோ அல்லது குடக்கோ என்பது குடநாட்டை ஆண்டதனால் வந்த பெயராகும் . ஆதன் என்னும் சேர அரசன் கரிகால சோழனோடு பொருது விழுப்புண் பட்டு வடக்கிருந்து உயிர்நீத்தான் .தங்களுடைய தாய்நிலத்திற்குத் திரும்பிச் செல்லமுடியாத சூழ்நிலையில் தாய்நிலம் இருக்கும் திசைநோக்கி வழிபடுதல் அல்லது நன்றிக் கடன் செலுத்துதல் என்பது எல்லா தொல்குடிமரபுகளிலும் காணப்படுகிற பொதுவான பண்பாடாகும் வடக்கிருத்தல் என்பது அவர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பதை நமக்குக் காட்டுகிறது . 

சோழர்  குடிமரபுப் பெயர்கள் 

சென்னி, செம்பியன் கிள்ளி என்பவை சோழருக்குரிய குடிமரபுப் பெயர்களாகும். சோழர் என்பது சோரர் ( திருடர்) கள்ளர் என்பதிலி ருந்து வந்தது எனக் கனகசபை எழுதுகிறார். இதே கருத்தினைப் பந்தார்க்கரும் கொண்டுள்ளார். பந்தார்க்கரின் இந்தக் கருத்தை மறுக்கும் கா. சுப்பிரமணியன் இது ஆயத்தக்கது என்கிறார். சென்னி என்பது தலைமையைக் குறிக்கிறது. தலைவன் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. செம்பியன் என்பது சிபியன் வழி வந்தவர் என்ற பொருளை தருகிறது என்கிறார் k.n. நீலகண்ட சாஸ்த்திரி. வளவன் வளமை என்ற பொருளைத் தருகிறது. கிள்ளி என்பது தோண்டுதல் என்ற பொருளைத் தருகிறது என்கிறார் தச்சிணாமூர்த்தி. சோழரின் குடிப் பெருமையை உணர்த்தக் கூடிய தொன்மக் கதையொன்று புறநானூற்றில் காணப்படுகிறது. அடிபட்டுத் தசையை இழந்த  புறாவின் துயர் துடைக்க தன் தசையைக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தியின் மரபில் வந்ததாகச் சோழர்களைக் காட்டுகிறது இத்தொன்மக் கதை. இக்கதையை மாரோக்கத்து நப்பசலையார், (புறம் 37, 39) தாமப்பலகண்ணனார் ( புறம்43 ) கோவூர்க்கிழார் (புறம் 46) ஆகிய புலவர்கள் இந்த கதையை நினைவுகூர்கின்றனர். இதனால் செம்பியன் என்பது சிபியைக் குறிக்கிறது என்கிற நீலகண்ட சாஸ்த்திரியின் கருத்து உறுதியாகிறது. சிபி வடபுலத்து அரசன் கோப்பெருஞ்சோழன் என்ற சோழ அரசன் வடக்கிருந்து உயிர் துறந்தான். இந்நிகழ்வு கூடச் சோழர்கள் வடபுலத்திலிருந்து வந்தவர் என்கிற முடிவுக்கு நம்மால் வரமுடிகிறது. காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டையாண்ட திரையரும் சோழரும் திருமால் வழிவந்தவர்களாகப் பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பட்டி ப்பாலை ஆகிய நூல்களின் துணை கொண்டு அறியமுடிகிறது. சோழ அரசனுக்கும் நாக கன்னியான பீலிவளைக்கும் இடையிலான களவுப் புணர்ச்சி கரணத்தில் முடியாததனால் களவாகவே நின்றுவிடுகிறது . இவர்களுக்குப் பிறந்த மகன் திரையன் என்று அழைக்கப்படாமல் இளந்திரையன் என்றே அழக்கப்படுகிறான் . பெரும்பாணாற்றுப்படை , இளந்திரையனை முந்நீர் வண்ணன் பிறங்கடை ' என்று குறிப்பிடுகிறது .

 

   முந்நீர் வண்ணனாகிய சோழனின் பிறங்கடை மரபில் இளந்திரையன் உதித்துள்ளான் என்பது இதன் பொருளாகும் .”(தமிழரைத் தேடி பிரகஸ்பதி ). கடலோடிகளான திரையர் சாகர்கள் எனச் சுட்டப்படுகிறது . அவர்கள் தாயகம் வங்கத் தாழ்நிலம் என்று தோன்றுகிறது. அவர்கள் கடல் வழியாகப் பர்மா, கொச்சின், சீனா, இலங்கை, தென்னிந்தியா ஆகிய இடங்களில் பரவினர். இம்மரபின் அரசருள் ஒருவன் கரிகால் சோழன் சமகாலத்தவனாக, காஞ்சி அல்லது தற்கால காஞ்சிபுரத்தில் திரையன் என்ற பெயருடன் ஆண்டான். இந்து புராணக் கதையின்படி ஆழியில் பள்ளி கொண்ட திருமாலின் வழிவந்தவன் என்று அவன் உரிமை கொண்டாடினான்.

          சோழ அரசர்களும் இதே மரபுக்குரியவர்களே. தாம் கதிரவன் மரபினர் என்று அவர்கள் பெருமை கூறிக்கொண்டது இந்த அடிப்படையிலேயே ”(கனகசபை 1903-98). தொண்டை நாட்டையாண்ட திரையரும் சோழரும் ஒரே குடிமரபினர் என்கிற கருத்தைக் கனகசபை பிரகஸ்பதி ஆகியோரின் கூற்றுகளின் மூலம்   உறுதிப்படுகிறது .

பாண்டியர் குடிமரபுப் பெயர்கள் : 

கவுரியர் , பஞ்சவர் ,அருநரை உருமின், பெருநரைப் பொறாஅச் செருமாண் பஞ்சவர் ஏறே ; நீயே ,’(புறம் .58.) வழுதி , மீனவர் , மாறர் , செழியன் போன்றவை பாண்டியரின் குடிமரபுப் பெயர்களாகும் . பாண்டியர் என்பதற்கு பண்டையர் எனப் பொருள் கூறுவார் கா .சுப்பிரமணியன் . பாண்டவரோடு ”  மஹாபாரதத்தில் பாண்டியர் பற்றிய குறிப்பு காணப்படுகிறது . கவுரியர் கவுரவரோடு தொடர்புடையவர் என்பதை க் காட்டுகிறது . குரு மரபிலிருந்து வந்தவர்கள் பஞ்சவர் என்பதும் கூடப் பஞ்சபாண்டவரையே நினைவூட்டுகிறது. கவுரவரைப் போலப் பாண்டியரும் சந்திரவமிசத்திலிருந்து வந்தவர்கள் என்பதுவும் இங்கு  சுட்டிக்காட்டத்தக்கதுஏழுமுனிவர்களின் ஏழு மனைவிகளும் ஏழு குழந்தைகளைப் பெற்று ப் பூலோகத்தில் விட்டுவிட வைகைக்கரை கட்டுவதற்கு அந்த ஏழு குழந்தைகளும் ஒத்துழைக்காதபோது அரசன் இருவர் தலைகளை வெட்டி மற்ற வரை விட்டுவிட்டான். அந்த ஐவரும் தங்களைப் பாண்டிய மரபில் வந்தவர்களாகக் கூறிக் கொண்டனர்” ( பக்த்தவச்சலபாரதி 2002-107 ).

நாடார் குறித்த இந்தத் தொன்மக் கதையில் ஐவர் என்பது பஞ்சவர் என்பதோடு பொருந்துகிறது. தமிழகத்தில புகழ் பெற்ற தெருக் கூத்துக் கதைகளுள் ஒன்று அல்லிராணிக் கதை. பாண்டியன் மகளான அல்லி அர்ஜுனனுக்கு மணமுடித்துத் தரப்படுகிறாள். இக்கதை பாண்டியர்கள் பஞ்ச பாண்டவர்களோடு தொடர்புடையவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. மீனவன் கொற்கைப் பகுதியில் வலிமையாக இருந்த பரதவரைக் கைபற்றிப் பாண்டியர் தங்களை மீனவர் என்று அழைத்துக் கொண்டனர். தென்னவன் பாண் டியர்கள் தெற்கு பகுதியைக் கைப்பற்றியதால் தென்னவன் எனப் பெயர் பெற்றனர். செழியன் என்பது செழிப்பைக் குறிக்கிறது என்கிறார் கா. சுப்பிரமணியன். றன் என்பதற்குக் கூற்றுவன் என்ற பொருளும் உண்டு. பாண்டியன் கூற்றுவனைப் போல போரில் உயிர்களைப் பறி ப்பவன் என்ற பொருளும் காணப்படுகிறது. நன்மாறன், மாறன் என்ற இப்பெயர் கி.பி.முதல் நூற்றாண்டுக்கு முன் பர்மாவை வென்ற “ம்ரான்மர்” என்ற மரபே என்று கூறத்தகும். பாளியில் எழுதப்பட்ட பர்மிய வரலாறுகளில் அந்நாடு மாரம்மதேசம் என்றே அழைக்கப்படுகிறது. ” (1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் பக்க எண் 96)

இதிலிருந்து மாரம தேசத்திலிருந்து மாற் என்ற குடிப் பெயர் பாண்டியருக்குச் சென்றுள்ளதை அறியமுடிகிறது. கவுரியர், பஞ்சவர், மாறன் பாண்டியர் ஆகிய பெயர்களுக்கான மூலங்களைத் தொகுத்துப் பார்த்தால்  பாண்டியர்கள் வடக்கத்திய பின்புலத்தை உடையவர்கள் என்பது தெரிகிறது.  மேலே காட்டப்பட்டுள்ள தரவுகளிலிருந்து பார்க்கிறபோது அரசர்களின் குடிமரபுப் பெயர்களின் மூலங்கள் பெரும்பாலும் தமிழகத்துக்கு வெளியில் இருப்பதை அறியமுடிகிறது. தமிழகத்தை ஆண்ட மூன்று  அரசமரபுகளுள் எது மிகவும் தொன்மையானது என்பது குறித்து விவாதிப்பது மிக இன்றியமையாதது. அதிகாரத்தைக் கைக் கொள்ளும் அனைத்து அரசுகளும் தங்களுக்கென ஒரு தொன்மை அடையாளத்தைக் கற்பிப்பதில் பேரார்வம் காட்டுகின்றன. தம் தம் பரம்பரைக் கதைகளின் வழியாகத்தான் அரச அடையாளங்கள் வீருகொள்ளுகின்றன.  ஓரரசர் மற்றோர் அரசரோடு போட்டியிடுவதற்கும் கைப் பற்றப்பட்ட நிலத்தின் மீது உரிமை கொண்டாடுவதற்கும் தொன்மை என்கிற அடையாளம் மிகவும் உதவுகிறது. இலச்சியமயமான அதிகாரவேட்கையும், அதன் மீதான பெருவிருப்பும், நம்பிக்கையும் தொன்மை அடையாளங்களால் உருவாக்கப்பட்டு நிறுவப்படுகின்றன. இங்கு மேலும் முன்னோர்களைக் குறித்த புகழ், மரபு உரிமைகள் பற்றிய பழைய நினைவுகள் விளக்கம் தரக்கூடும்.

1.     மூத்த விழுத்திணை

2.     பெரும்புகழுடைத் தொல்குடி

3.     முன்னோரின் பிறங்கடை

4.     முதுகுடிப் பிறந்த வேந்தன்

5.     பழைய  வலியைப் பெற்றோன்

6.     தொன்னிலை மரபு

7.     தொன்னிலக் கிழமை

8.     தொல்லிசை”

(க.கைலாசபதி 245). தொல் அல்லது பழைய என்கிற சொற்கள் ஒவ்வொரு அரச குடிக்கும் ஈடு இணையற்ற பெருமிதத்தை அளித்தது. கடும்போர் புரிவதற்கும், தங்களுடைய உயிரைத் துச்சமென மதிப்பதற்குமான உந்து ஆற்றலாக இச்சொற்கள் விளங்கின. அதனால்தான் புகழ்ச்சிப் பாடலுக்கான வாய்ப்பாட்டமைப்பில் இச்சொற்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. மோகூரை ஆண்ட குறுநில அரசன் ஒருவனுடைய பெயர் பழையன் என அறியமுடிகிறது. மோகூர்ப் பழையன் பணியாமையால் வடுகரையும், கோசரையும் கொண்டு மலைப் பாதையைச் செப்பனிட்டு மவுரியர் மோகூர்ப் பழையனுக்கு எதிராகத் தேரோட்டிப் போர் தொடுத்தனர்(அகம்.151).  இந்தப் போரில் பழையன் தோற்றானோ வெற்றியடைந்தானோ தெரியவில்லை. பிற்காலத்தில் பழையன் அவையில் கோசர்கள் பணியாற்றியதாகத் தெரிகிறது. பழையன் என்பது குடிப் பெருமையை உணர்த்தக் கூடியதாக இருக்கிறது.

பின்னாளில் சேரன் செங்குட்டுவன் பழையனின் காவல் மரமான வேப்பமரத்தை வெட்டிப் பழையனைக் கொன்றதாக பதிற்றுப்பத்து வழி அறியமுடிகிறது. இந்நிகழ்வின் மூலம் வலிமையான பழையன் சேர அரசுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்தான் என்பதை அறிய முடிகிறது.   தங்களுடைய குடிமரபுகளை நிலை நிறுத்திக் கொள்ளப் பழம்பெருமைகளைப் பேசுவதில் அரசர்களுக்கிடையில் போட்டிகள் இருந்திருக்கவேண்டும். அல்லது முன்பே சொன்னது போல நிலத்தின் மீதான உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்ளுவற்குப் பழம் பெருமை உதவுகிறது என்கிற அரசர்களின் விருப்பத்திற்கேற்பப் புலவர்கள் குடிமரபுகளின் பழம் பெருமைகளைப் புகழுரையாகப் புனைகின்றனர். பழந்தமிழகத்தைப் பொருத்தவரை சேர, சோழ, பாண்டிய அரசமரபுகளே நீண்டகாலம் பெரும் புகழோடு இருந்திருக்கின்றன. தமிழ்காக்கும் மூவர்’(அகம்131)‘வன்புகழ்மூவர்’ (தொல் பொருள்)  போன்ற வரிகள் இம்மூவரைச் சுட்டுகின்றன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த அசோகன் கல்வெட்டு சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர என்று இம்மூவரைக் குறிப்பிடுகிறது.  இதனால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே மூன்று அரசமரபுகள் இருந்திருக்கின்றன.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த காரவேலனின் ஹதிகும்பா கல்வெட்டிலும் இந்த அரசர்கள் குறித்த பதிவுகள் காணப்படுகின்றன.ஆதன், இரும்பொறை, பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ ஆகிய சேரர்களின் குடிமரபுப் பெயர்கள் புகலூர்க் கல்வெட்டில் காணப்படுகின்றன. இதன் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்கிறார் மையிலை சீனி. அடுத்தநிலையில் 2 நெடுஞ்செழியன், கடலன், பணவன், வழுதி ஆகிய பாண்டியரின் குடிமரபுப் பெயர்கள் மாங்குளம் கல்வெட்டில் காணப்படுகின்றன. இதில் கூறப்படுகிற நெடுஞ்செழியன் மதுரைக்காஞ்சி பாட்டுடைத் தலைவனான தலையாலங்காணத்து நெடுஞ்செழியனுக்கும் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியனுக்கும் முற்பட்டவன். இக்கல்வெட்டு கி.மு.  மூன்று அல்லது கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்கிறார் மையிலை சீனி. இவ்விரு சாசனங்களிலும் சேர,பாண்டிய அரச மரபுகளின் பரம்பரைப் பெயர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் தமிழகம் வந்த கிரேக்கப் பயணிகளான பிளினி, தாலமி ஆகியோருடைய குறிப்புகளில் தொண்டி, முசிறி, கொற்கை, புகார் ஆகிய துறைமுகப் பட்டிணங்கள் குறிப்பிடப்படுகின்றன.

சேரநாட்டுத் துறைமுகப் பட்டிணங்களானதொண்டியைத் திண்டிஸ் என்றும் , முசிறியை முஸிரிஸ் என்றும் , பொற்காட்டைப் பகரி என்றும் , குமரியைக் கொமாரி என்றும் ரோமர்கள் குறிப்பிட்டுள்ளனர் . அவற்றைப் போலவே , தமிழகத்தின் கீழைக்கடற்கரைத் துறைமுகங்களான கொற்கையைக் கொல்சாய் என்றும் ,  நாகப்பட்டினத்தை நிகாமா என்றும் , காவிரிப்பூம்பட்டினத்தைக் கமரா என்றும் , புதுச்சேரியைப் பொதுகே என்றும் , மரக்காணத்தைச் சோபட்மா என்றும் , மசூலிப்பட்டினத்தை மசோலியா என்றும் அந்நூல்கள் குறிப்பிடுகின்றன .”(கே.கே. பிள்ளை தமிழக் வரலாறும் மக்கள் பண்பாடும் ப.)” தமிழக அரசர்கள் வனர்களோடும், பிற மேற்குலக நாடுகளோடும் வணிகம் செய்ததைத் தொகைநூல்கள் குறிப்பிடுகின்றன. கி.பி. ஒன்று மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில்தான் தமிழகத்தில் பேரரசுகள் உருவாயின என்பதை ரோமாபுரி நாணயங்களின் மூலம் அறியமுடிகிறது.

1 Iravatham Mahadevan, "Tamil Brahmi Inscriptions of the Sangam Age," Proceedings of the Second International Conference Seminar of Tamil Studies (Madras, 1971), 1:94-95.பழந்தமிழக அரசர்கள் மேற்கு உலக நாடுகளோடு வணிகத் தொடர்பினை வைத்திருந்தனர் என்பதை இச்சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.

 கி.மு.நான்காம் நூற்றாண்டில் சந்திரகுப்த மவுரியரின் அரசவையிலிருந்த மெகஸ்தனிசு கிரேக்கத்திலிருந்து வந்து வடநாட்டையாண்ட ஹெர்க்லஸ்  என்ற அரசன் தன்னுடைய மகளுக்குப் பரிசாகத் தரப்பட்ட பகுதி பாண்டியநாடு எனச் சுட்டப்படுகிறது. கண்ணகி மதுராபதி தெய்வத்திடம் முறையிடுவதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. பெருங்கதையில் வரும் கள்ளமர்தேவிஎன்ற தொடரைச் சான்றுகாட்டி முதன் முதலில் மதுரையை ஆண்டது ஓர் அரசி என்பதைச் சுட்டுகிறார் ந.ராமச்சந்திரன். மதுரை மீனாட்சி என்பதுவும்கூட இதனுடைய தொல் உருவகமாக இருக்கலாம்.  இத்தரவுகளிலிருந்து நாம் தொகுத்துக் கொள்ளவேண்டிய கருத்தாவது கி.மு. நான்காம் நூற்றாண்டுக்குப் பிறகே வலுவான பாண்டிய அரசமரபு தோன்றியிருக்கவேண்டும் என்பதே. திராவிடர்கள் பஞ்சாபிலிருந்து வந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொண்டால் அவர்கள் மேற்குக் கடற்கரையில்தான் குடியேறியிருக்கவேண்டும்” (தச்சிணாமூர்த்தி, தமிழர் நாகரிகமும் பண்பாடும் ப.12) பிறகு அங்கிருந்தே பரவியிருக்கவேண்டும்.

இக்கருத்தினை ஏற்றுக் கொள்ளுவதில் இரண்டுவிதமான தடைகள் உண்டு. ஒன்று பஞ்சாப் மலைநிலம் அல்ல. சேர்ர்களுக்கு வில்லவர் என்ற ஒரு பெயர் இருக்கிறது. இது அவர்கள் வேட்டுவக் குடியிலிருந்து தோன்றினார்கள் என்பதைக் காட்டுகிறது.தொடக்கக் காலத்தில் சிறந்த வில்லாளிகளே குடிகளின் தலைவர்களாயினர். பின்னாளில் இவர்களே அரசத் தலைவர்களாக உயர்ந்தனர். இந்தப் படிமலர்ச்சியின் படி சேரர்கள் தமிழகத்தில் தோன்றினர் என்பது பெறப்படுகிறது. “போந்தை வேம்பே எனத் தொல்காப்பியரும் சேரரை முதன்மைப்படுத்துகிறார்.சேரன் என்பதற்குச் சிறிய குட்டையான (தாழ்வான) வயல்களை உடைய தலைவன். என்றும் சேரமான்களின் தலைவன் என்றும் பொருள்படுகிறது. சேரமான் என்பது 39 குலங்களை உடைய பழங்குடிகளைக் குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாகும். சேர என்பதற்குச் செரு என்ற பொருள் உள்ளது. ( தர்ஸ்ட்டன் தென்னிந்தியாவில் குலங்களும் குடிகளும்தொகுதி 2.  ப.) செருமான் பழங்குடிகள் இன்றும் கேரளப் பகுதியில் காணப்படுகின்றனர். செருமான்களின் தலைவர்களே சேரமான்கள் எனப்பட்டனர். மட்டுமல்லாமல் சேரர் குறித்த இலக்கியச் சான்றுகளும் பல கிடைக்கின்றன. புறநானூற்றில் முதல் செய்யுள் சேரரைப் பற்றியது.

புறநானூற்றில் ’27 செய்யுள்களில் 18. சேர அரசர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.பதிற்றுப்பத்தில் உள்ள 80 செய்யுள்கள் 8 சேர அரசர்களின் வரலாற்றைப் புகழ்ந்து பேசுகின்றன. யானைகட்சேரல் மாந்தரல் இரும்பொறையால் தொகுப்பிக்கப்பட்ட ஐங்குறுநூற்றில் சேரமரபின்  முன்னோர்களான ஆதனும் அவினியும் வாழ்த்தப்படுகின்றனர். ‘வாழி ஆதன் வாழி அவினி நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க’(ஐங்-வேட்கை பத்து முதல் பத்துப் பாக்கள்) கி.மு. பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த சாலமன் அரசனுக்குச் சேரநாட்டிலிருந்து வணிகம் மேற்கொள்ளப்பட்டது என்கிறார் மா.ராசமாணிக்கனார்.  “22     அரசரின் வணிகக் கப்பல்கள், ஈராமின் கப்பல்களோடு சென்று கடல் வாணிபம் செய்தன. வணிகக் கப்பல்கள் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, பொன், வெள்ளியையும் தந்தம்குரங்கு, மயில் ஆகியவற்றையும் கொண்டு வந்தன. “ (பழைய ஏற்பாடு பகுதி11-அதிகாரம்9-21, 22.) மேலும் சாலமன் அரசன் யானைகளின் தந்தத்தால் அரியணை செய்து கொண்டதாகத் தெரிகிறது. 18    அரசர் தந்தத்தினால் பெரியதோர் அரியணை செய்து அதைப் பசும்பொன்னால் வேய்ந்தார்.  (மேலது) இது சேரநாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தந்தம் எனத் துணியலாம். 

இறுதியாகச் சேர அரசரின் பழைமையை உணரக் கொடுமணல் அகழாய்வைக் குறிப்பிடலாம். ஈரோட்டுக்கு அருகில் கொடுமணலில் பண்டைய இரும்புத் தொழில்சாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது சேர நாட்டுக்குட்பட்ட பகுதியாகும்.  இது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்கின்றனர் ஆய்வாளர்கள்.  இங்குத் தரப்பட்டுள்ள தரவுகளிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே சேரர்கள் தமிழ்நாட்டை ஆண்டுள்ளனர் என்று முடிவு செய்யலாம்.சேரமரபுக்குரிய மூலத் தொன்மங்கள் சோழர், பாண்டியருக்கு இருப்பதைப் போல வெளிநாட்டைச் சார்ந்ததாகவோ! அல்லது வடக்கத்திய மரபைச் சார்ந்த்தாகவோ! இல்லை. சேரர்கள் பழங்குடித் தன்மையிலான இனக்குழு மரபிலிருந்து தோன்றியவர்கள் என்பதற்குச் சான்றுகள் பல உள.

நாடன் என்கோ? ஊரன் என்கோபாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ?’ (புறம்49) கோ கோதைமார்பன் என்பதில் உள்ள கோ இனக் குழு நிலையை உறுதி செய்கிறது. 

- மு.ரமேஷ்

More articles by மு.ரமேஷ்

Comments

7 comments

7
mahalingam
childish interpretation.
vimal
all people came from tribe there fore all are chera ! chera having Pam flower there fore they may sanar, pandiya having fish there fore they hails from fisherman but chola having tiger and chalukkiya having pig, where they came from. mr rameh telling history JOKE?
Renu
Pl.don't change history as u wish.Tamils spread from north to south before Aryan invation.So u can't
tell Chola came from North.They spread from south only
Renu
Are u nuts?பாண்டியர்க்கு வடக்கத்திய பின்புலம் என்று ாெல்ல நீர் தமிழர் அல்ல என்று புலப்படுகிறது. JUST CLOSE UR SHOP. U ARE NO TAMIL..
Joe vimal
Biased article, inconsonance with sangam literature
Vil
வில்லவர் மற்றும் பாணர்
____________________________________

பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

வில்லவர் குலங்கள்

1. வில்லவர்
2. மலையர்
3. வானவர்

வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

4. மீனவர்

பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.

பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

வில்லவர் பட்டங்கள்
______________________________________

வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

1. சேர வம்சம்.
2. சோழ வம்சம்
3. பாண்டியன் வம்சம்

அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

முக்கியத்துவத்தின் ஒழுங்கு

1. சேர இராச்சியம்

வில்லவர்
மலையர்
வானவர்
இயக்கர்

2. பாண்டியன் பேரரசு

வில்லவர்
மீனவர்
வானவர்
மலையர்

3. சோழப் பேரரசு

வானவர்
வில்லவர்
மலையர்

பாணா மற்றும் மீனா
_____________________________________

வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

அசாம்

சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

மஹாபலி

பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

ஹிரண்யகர்பா சடங்கு

வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

வில்லவர் மற்றும் பாணர்

நாகர்களுக்கு எதிராக போர்
__________________________________________

கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

1. வருணகுலத்தோர் (கரவே)
2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
3. கவுரவகுலத்தோர் (கரையர்)
4. பரதவர்
5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

கர்நாடகாவின் பாணர்களின் பகை
_________________________________________

பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

வில்லவர்களின் முடிவு

1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
__________________________________________

கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

ஆந்திரபிரதேச பாணர்கள்

ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

1. பாண இராச்சியம்
2. விஜயநகர இராச்சியம்.

பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

பாண வம்சத்தின் கொடிகள்
_________________________________________

முற்காலம்
1. இரட்டை மீன்
2. வில்-அம்பு

பிற்காலம்
1. காளைக்கொடி
2. வானரக்கொடி
3. சங்கு
4. சக்கரம்
5. கழுகு

திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவர்.

வில்லவர் மற்றும் பாணர்

வட இந்திய பாண குலங்கள்

வட இந்திய பாணர்களுக்கு பாண, வட பலிஜா, அக்னி, வன்னி, திர்கலா போன்ற பட்டங்கள் இருந்தன. வட இந்திய பாணர்கள் ஜாட்கள், ராஜபுத்திரர்கள் போன்ற பல்வேறு சமூகங்களுடன் இணைக்கப்பட்டனர். சில பாணர்கள் ராஜபுத்திரர்களுக்கும் ஆரிய ஆட்சியாளர்களுக்கும் அடிபணிந்தனர். சில பாணர்கள் வில் மற்றும் அம்பு தயாரிப்பதை தங்கள் தொழிலாக ஏற்றுக்கொண்டனர்.

பல்லவ பாணர்

பல்லவ மன்னர்கள் பண்டைய உத்தர பாஞ்சால நாட்டிலிருந்து (உத்தரபிரதேசம் மற்றும் நேபால்) ஆந்திராவுக்கு கிமு 200 இல் குடிபெயர்ந்தனர். உத்தர பாஞ்சால நாட்டின் தலைநகரம் அஹிச்சத்திரம் ஆகும். பல்லவ மன்னர்கள் பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்த பிராமணர்கள் மற்றும் அஸ்வத்தாமாவின் வழித்தோன்றல்கள் ஆவர், ஆனால் பார்த்தியன் வம்சத்துடன் கலந்தவர்கள். பல்லவ மன்னர்களுடன், காடுகளை வெட்டுவதைத் தொழிலாகக் கொண்டிருந்த பாணர்களின் ஒரு இராணுவம், பாஞ்சால நாட்டிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தது. பாஞ்சால நாட்டிலிருந்து வந்த பிராகிருத மொழி பேசும் பாணர் குலங்களுக்கு வன்னி, திகலா (திர்கலா) மற்றும் வட பலிஜா என்ற பட்டங்கள் இருந்தன. கி.பி 275 இல் பல்லவர் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர்.. பல்லவக் கொடிகளில் பாண குலத்தின் காளை சின்னம் இருந்தது. பல்லவர் தலைநகரான மகாபலிபுரம் பாண வம்சத்தின் மூதாதையர், மகாபலி மன்னரின் பெயரால் அழைக்கப்பட்டது.

பாணா வம்சம் மற்றும் மீனா வம்சம்

வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர் மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

மீனா வம்சம்
___________________________________

ராஜஸ்தானின் மீனா குலங்கள் பில் குலங்களுடன் கலந்து பில்-மீனா வம்சங்களை உருவாக்கின. மீனா வம்சம் ராஜஸ்தானை கிமு 1030 வரை ஆட்சி செய்தது. ஆலன் சிங் சான்ட மீனா கடைசி சிறந்த ஆட்சியாளராக இருந்தார்.

சத்தீஸ்கர் பாண இராச்சியம்

பல்லவர்கள் ஒரு பாண இராச்சியத்தை கி.பி 731 இல் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் உள்ள தெற்கு கோசல இராச்சியத்தில் நிறுவினர். பாலி தலைநகரமாக ஆண்ட விக்ரமாதித்யா ஜெயமேரு கடைசி மன்னர்.

திக்கம்கரின் பாண்டிய வம்சம்

பாண்டியா பட்டமுள்ள பாணர் குண்டேஷ்வர் தலைநகராக வைத்து மத்தியப்பிரதேசத்தை ஆட்சி புரிந்தனர்.

பாண வர்த்தகர்கள்

இடைக்காலத்தில் பாணர்கள் தங்களை ஒரு வெற்றிகரமான வணிக சமூகமாக மாற்றிக் கொண்டனர். பலிஜாக்கள் அஞ்சு வண்ணம் மற்றும் மணிகிராம் போன்ற பல்வேறு வர்த்தக குழுக்களை உருவாக்கி வர்த்தகத்தை கட்டுப்படுத்தினர். இந்த வர்த்தகர்-போர்வீரர்கள் பலிஜா நாயக்கர்கள்(வளஞ்சியர்கள்) ஆவர்.
பலிஜாக்கள் ஆந்திரப்பிரதேசத்தின் பாண இராச்சியத்தைச் சேர்ந்தவர்கள் (வடுக நாடு).

பலிஜா வர்த்தக குழுக்கள் ஜெர்மன் ஹான்ஸியாடிக் லீக்கை நெருக்கமாக ஒத்திருந்தனர்.

முடிவுரை
____________________________________________

இதனால் பாண்டியர்கள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளவர்கள் இல்லை. மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பாண்டியர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. சில பாண்டியர்கள் பாண்டவர்களை ஆதரித்தனர், மற்றவர்கள் கவுரவரை ஆதரித்தனர். பாணப்பாண்டியர்கள் இந்தியா முழுவதையும் ஆட்சி செய்தனர். சில பாணர்கள் பாண்டிய பட்டத்தை பயன்படுத்தினர். மற்றவர்கள் பாண்டியன் பட்டத்தை பயன்படுத்தவில்லை.
பாணர் கலவையுடன் பல்வேறு ராஜ்யங்கள் தோன்றின.

சாகர் மற்றும் ஹூணர் போன்ற காட்டுமிராண்டித்தனமான வெளிநாட்டு படையெடுப்பாளர்களின் படையெடுப்புகளுக்குப் பிறகு பல வட இந்திய பாண ராஜ்யங்களும் வீழ்ச்சியடைந்தன.

________________________________________________

வில்லவர் மலையர் வானவர் சங்ககால நாணயம்.
வில்-அம்பு மலை மற்றும் மரம் சின்னம்

https://3.bp.blogspot.com/-Q5Ebqb5XTE4/W1LYuq2vnrI/AAAAAAAAEH4/1b-_GJRcWWoS9FdoOaLnvyUiGU3_BJJSQCLcBGAs/s1600/new.png

.
Vil
இந்திய துணைக்கண்டத்தின் அசுர-திராவிட ஆரம்பம்

பண்டைய வட இந்தியாவில் திராவிட ஆட்சி

பல திராவிட இராச்சியங்கள் வட இந்தியாவிலும் பண்டைய காலங்களில் இருந்தன. பண்டைய இலக்கியங்களில், திராவிட ஆட்சியாளர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர். பண்டைய இந்தியாவில், தானவர், தைத்யர், பாணர், மீனா மற்றும் வில்லவர் ராஜ்யங்கள் இருந்தன. கங்கை நதியின் வடக்குப் பகுதியில் மட்டுமே ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். திராவிட வேர்களைக் கொண்ட பல பாணாசுரர்கள் வட இந்தியாவை ஆண்டனர்.

திராவிட வில்லவர்-பாணர் வம்சங்கள்
1. தானவர் தைத்யர்
2. பாண மீனா வம்சங்கள்.
3. வில்லவர் - மீனவர் வம்சங்கள்

தானவரும் வில்லவரும் பாணரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், அவர்கள் மகாபலி பட்டம் பெற்ற அரசர்களால் ஆளப்பட்டவர்கள்.

தானவர் மற்றும் தைத்யர்

இந்தியாவின் ஆரம்பகால இலக்கியங்களில் தானவா மற்றும் தைத்யா என்று அழைக்கப்படும் இரட்டை பழங்குடியினரும், சிந்து பகுதியில் அவர்களின் மன்னரான மகாபலியும் குறிப்பிடப்பட்டனர். தனு என்பது வில் என்று பொருள். தானவா குலங்கள் திராவிட வில்லவர் - பாண மக்கள் ஆயிருக்கலாம். வில்லவர் மற்றும் பாண மக்களும் மஹாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். வில்லவர் மற்றும் பாண மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகசிபு மன்னர் மகாபலியின் மூதாதையர் ஆவார்.

தானவர் , தைத்யர், பாணர் அனைவரையும் அசுரர்கள் என்று அழைத்தனர். திராவிடர்களும் அசுரர்களும் ஒரே குல மக்களாக இருக்கலாம்.

சிந்து சமவெளியில் தானவர்(கிமு 1800)

சிந்து மன்னர் விரித்ரா (விருத்திரர்)

விரித்ரா ஒரு ஆரம்பகால தானவா மன்னர், அவர் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தை ஆட்சி செய்திருக்கலாம்.

நீர்ப்பாசனத்தைக் கட்டுப்படுத்த சிந்து நதியின் கிளைகளில் பாம்புகளின் வடிவத்தை ஒத்த பல கல் அணைகளை விரித்ரா கட்டியிருக்கலாம். சிந்து பகுதியில் விரித்ராவுக்கு 99 கோட்டைகள் இருந்தன.

ரிக் வேதத்தின்படி, விரித்ரா இந்திரனால் கொல்லப்படும் வரை உலகின் அனைத்து நீரையும் சிறைபிடித்தான். விரித்ராவின் 99 கோட்டைகளையும் இந்திரன் அழித்தான்.

விரித்ரன் போரின் போது இந்திரனின் இரண்டு தாடைகளை உடைத்தார், ஆனால் பின்னர் இந்திரனால் வீசப்பட்டார், வீழ்ச்சியடைந்தபோது, ​​ஏற்கனவே சிதைந்துபோன கோட்டைகளை நசுக்கினார்.

இந்த சாதனை காரணம், இந்திரன் "விரித்ரஹான்" அதாவது விரித்ராவின் கொலைகாரன் என்று அறியப்பட்டார்.

விரித்ராவின் தாய் தனு அசுரரின் தானவா இனத்தின் தாயாகவும் இருந்தவர், பின்னர் இந்திரனால் அவரது இடியால் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்.

மூன்று தேவர்கள், வருணன், சோமன் மற்றும் அக்னி ஆகியோர் வ்ரித்ராவுக்கு எதிரான போராட்டத்தில் அவருக்கு உதவுமாறு இந்திரனால் வற்புறுத்தப்பட்டனர். அதேசமயம் அதற்கு முன்பு அவர்கள் விரித்ராவின் பக்கத்தில் இருந்தபோது விரித்ராவை தந்தையே என்று அழைத்து வந்தனர்.

சிந்து மன்னர் வாளா

விரித்ராவின் சகோதரர் தடுப்பவரான விரித்ராவுக்கு இணையாக அணை கட்டிய நதிகளை விடுவிப்பதற்காக இந்திரனால் கொல்லப்பட்ட ஒரு கல் பாம்பு (அணைக்கட்டு) உண்டாக்கியவர்.

ரிக் வேதம் 2.12.3 இந்திரன் டிராகனைக்(அணைக்கட்டு) கொன்றது, ஏழு நதிகளை(சப்த சிந்து நதிகள்) விடுவித்தது, மற்றும் வாலாவின் குகையில் இருந்து கின்களை (பசுக்களை) வெளியேற்றியது.

சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவு

சிந்து சமவெளியில் சிந்து நதியி்ன் ஏழு துணை நதிகளிலும் பாம்புகளின் வடிவத்தில் விரிவான அணைகள் கட்டப்பட்டிருந்தது. சிந்து சமவெளி ஒரு விவசாய நாடாக இருந்ததால் அசுர- தானவா மன்னர் விருத்திரர் பல அணைகளைக் கட்டினார். ஆரியர்கள் பெரும்பாலும் ஆயர்களாதலால் ஆறுகள் தடுக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை . ஆரியர்களின் மன்னனான இந்திரன், அசுர மன்னன் விருத்திரருடன் சண்டையிட்டு அவரைக் கொன்றார். இந்திரன் விரித்ரன் கட்டிய அனைத்து அணைகளையும், விரித்ரனுடைய 99 கோட்டைகளையும் அழித்தார்.

விரித்ராவுக்குப் பிறகு அவரது சகோதரர் வாளா சிந்து பள்ளத்தாக்கின் மன்னரானார். மீண்டும் வாளா அனைத்து கிளை நதிகளிலும் அணைகள் கட்டினார். வாளா ஆரியர்களின் கால்நடைகளையும் கைப்பற்றி ஒரு குகையில் அடைத்தார். இந்திரன் வாளா மன்னரையும் கொன்றார். வாளா மன்னர் கட்டிய நீண்ட கல்பாம்பு போல காணப்பட்ட அணைகளையும் இந்திரன் தகர்த்தார். இந்திரன் அவர்களின் கால்நடைகள் அனைத்தையும் குகையிலிருந்து விடுவித்தார். அணைகள் அழிக்கப்பட்டதால் நீர்ப்பாசனம் மற்றும் வேளாண்மை தோல்வியடைந்தது. இறுதியில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் முடிவுக்கு வந்தது.

பிராஹுய்

பலூசிஸ்தான் பகுதியில் உள்ள மெஹர்கரில், ஹரப்பா-சிந்து சமவெளிக்கு முந்தைய நாகரிகம் (கிமு 7000 முதல் சி. 2500 கிமு வரை) இருந்தது. பலூசிஸ்தான் மாகாணத்தில் மக்கள் இன்றும் பிராஹுய் என்ற வட திராவிட மொழியைப் பேசுகிறார்கள்.

அசுர திராவிட துடக்கம்

தைத்யர் மற்றும் தானவர் குலங்களின் கிளர்ச்சி

தைத்ய குலத்தின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார். தைத்ய மன்னர் மகாபலியின் தலைமையில் தானவர்கள் தேவர்களுக்கு (ஆரியர்களுக்கு) எதிராக கிளர்ச்சி செய்தனர். சத்திய யுகத்தின் போது தேவர்கள் (ஆரியர்கள்) தானவர்களை சொர்க்கத்திலிருந்து (வட இந்தியாவிலிருந்து) நாடுகடத்தினர்.

நாடுகடத்தப்பட்ட பின்னர், தானவர்கள் விந்திய மலைகளில் தஞ்சம் புகுந்தனர். தானவா என்றால் தனு உள்ளவர்கள் அதாவது வில் உள்ளவர்கள், வில்லவர். பாணா மற்றும் அவர்களது கிளைக்குலங்களான தைத்யா மற்றும் தானவா ஆகியோர் அசுரர்களாக கருதப்பட்டனர். திராவிட வில்லவர், மீனவர் மற்றும் அசுர பாணா, மீனா குலங்கள் பொதுவான மூதாதையர்களைக் கொண்டிருந்தனர்.

தானவா மல்யுத்த வீரர்கள்

கம்ச மன்னரின் உத்தரவின்படி, அக்ரூரா என்ற யாதவ மூப்பர் கிருஷ்ணர் மற்றும் பலராமரை,மதுராவில் நடந்த ஒரு தனுஷ் யாகம் மற்றும் நட்பு மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள அழைத்திருந்தார். பயங்கரமான தானவா மல்யுத்த வீரர்கள் சானுரா மற்றும் முஷ்டிகா ஆகியோர் இளம் கிருஷ்ணர் மற்றும் பலராமனால் கொல்லப்பட்டனர்.

புத்தமதத்தில் தானவர்

புத்தமதத்தில் அவர்கள் வில் தரிக்கும் தானவேகச அசுரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

முந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் வசித்து வந்தவர்கள் பெரும்பாலும் திராவிடர்கள் ஆவர். அவர்கள் பல திராவிட நாடுகளை உண்டாக்கினர். தென்னிந்தியாவில் பல பாண்டியன் ராஜ்யங்கள் வில்லவர்-மீனவர் குலங்களால் நிறுவப்பட்டன.

வட இந்தியாவில் வில்லவர் தொடர்புடைய பாணா-மீனா வம்சங்கள் மகாபலி என்று அழைக்கப்படும் மன்னர்களால் ஆளப்பட்ட ஏராளமான பாணப்பாண்டியன் ராஜ்யங்களை நிறுவினர்.

மகாபலி வம்சம்

வில்லவர் மற்றும் பாணர்கள் இருவரும் அசுர மன்னர் மகாபலி மற்றும் அவருடைய மூதாதையரான ஹிரண்யகசிபு ஆகியோருடைய வம்சத்திலிருந்து வந்ததாகக் கூறினர். தென்னிந்திய பாண மற்றும் பாண்டியன் மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தி வந்தனர். ஹிரண்யகசிபுவின் பண்டைய தலைநகரம் இரணியல் (ஹிரண்ய சிம்ஹ நல்லூர்) என்று அழைக்கப்படுகிறது.

கன்னியாகுமரி புராணத்தில் பாணாசுரன்

பாணாசுரன் தேவர்கள் மற்றும் அசுரர்களின் பொதுவான கடவுளான பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்தார். முழு பிரபஞ்சத்திலும் ஆணின் அல்லது பெண்ணின் கைகளில் கொல்லப்படமாட்டார் என்ற அழியாத வரத்தை பாணாசுரன் பெற்றார். திருமணமாகாத பெண் அல்லது குழந்தையால் மட்டுமே பாணாசுரனை கொல்ல முடியும். கன்னியாகுமரி பராசக்தியின் அவதாரமாக பிறந்தார். பாணாசுரன் கன்னியாகுமரியை கடத்த முயன்றார் ஆனால் கன்னியாகுமரி தேவியால் கொல்லப்பட்டார்.

சீதையின் சுயம்வரத்தில் பாணாசுரன்பாணாசுரன் மற்றும் ராவணன் இருவரும் சீதா தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டனர். ஆனால் இராவணனும் பாணாசுரனும் வில்லைப் பார்த்தவுடன் அமைதியாக நழுவி விட்டனர்.

மகாபாரத காலத்தில் பாணாசுரன்

பாணாசுரனின் மகள் உஷா பகவான் கிருஷ்ணரின் பேரன் அனிருத்தனை கனவு கண்டார். உஷாவின் தோழி சித்ரலேகா, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் மூலம், கிருஷ்ணரின் அரண்மனையில் இருந்து அனிருத்தனை கடத்தி, உஷாவிடம் கொண்டு வந்தார். அனிருத்தன் உஷாவை விரும்பினார் ஆனால் பாணாசுரன் அவனை சிறையில் அடைத்தார். இது பகவான் கிருஷ்ணர் பலராமன் மற்றும் பிரத்யும்ன னுடன் ஒரு போருக்கு வழிவகுத்தது, பாணாசுரன் தோற்கடிக்கப்பட்டார். அதன் பிறகு உஷாவுடன் அனிருத்தனுக்கு திருமணம் நடந்தது.

ஆந்திராவில் ஒரு பாண இராச்சியம் இருந்தது, இது விஜயநகர நாயக்கர்கள் உட்பட பலிஜாக்களின் பல ஆளும் வம்சங்களை உருவாக்கியது. மன்னன் மகாபலியில் தோன்றியதால் அவர்கள் பலிஜாக்கள் என்று அழைக்கப்பட்டனர். பலிஜாக்கள் பாணாஜிகா அல்லது வளஞ்சியர் என்றும் அழைக்கப்பட்டனர்.
வாணாதி ராயர், வன்னியர் மற்றும் வாணர் ஆகியவையும் தெலுங்கு பாணர்களின் பாண வம்ச பட்டங்கள் ஆகும்.

வாணர்

பாணர் காடுகளில் தங்க விரும்பினர். எனவே கடம்ப பாண தலைநகரான பாணவாசியை வனவாசி என்றும் அழைத்தனர். அவர் வாணர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வானர அரசர் பாலியின் தலைநகரம் கிஷ்கிந்தா. பலிஜா நாயக்கர் அரச குடும்பத்தினர் கிஷ்கிந்தா அருகே உள்ள ஆனேகுண்டியில் தங்கியுள்ளனர்.
விஜயநகரை ஆட்சி செய்த பலிஜா நாயக்கர்களின் தலைநகரம் கிஷ்கிந்தாவிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள ஹம்பி ஆகும்.

கர்நாடகாவில் பாணப்பாண்டியன் இராச்சியங்கள்

கர்நாடகாவில் கடம்ப இராச்சியம், நூறும்பாடா பாண்டியன் இராச்சியம், சான்றாரா பாண்டியன் இராச்சியம், உச்சாங்கி பாண்டியன் இராச்சியம், ஆலுபா பாண்டியன் இராச்சியம் உள்ளிட்ட பல பாணப்பாண்டியன் இராச்சியங்கள் இருந்தன.

கடலோர கர்நாடகாவை ஆண்ட துளுவ வம்சம் பாணப்பாண்டியன் குலமாகும். பாண சாளுவ வம்சம் கோவாவை ஆண்டது. சாளுவ மற்றும் துளுவ பாணகுலங்கள் விஜயநகர் பேரரசின் இரண்டு வம்சங்களை உண்டாக்கின.

அசுர திராவிட துடக்கம்

பாண்பூர்

வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாண்பூர் அல்லது பான்பூர் என்று அழைக்கப்படும் பண்டைய பாண வம்ச தலைநகரங்கள் உள்ளன. அங்கிருந்து பாணர் அந்த பிரதேசங்களை ஆட்சி செய்தார்கள்.

மகாபலி

மகாபலி / மாவேலி பட்டத்துடன் பல மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். ஒரு மகாபலி அசாமில் சோனித்பூரரில் இருந்து ஆட்சி செய்தார், மற்றொரு மகாபலி கேரளாவிலிருந்து ஆட்சி செய்தார், மேலும் மற்றொரு மகாபலி சிந்து சமவெளியில் தைத்யா மற்றும் தானவர்களின் ராஜாவாக இருந்தார். அவர் ஆரம்பகால ஆரியர்களுக்கு எதிராக போராடினார்.

மீனா வம்சம்

இதேபோல் மீனா வம்சம் ராஜஸ்தான், சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரியர்க்கு முந்தைய ஆட்சியாளர்களாக இருந்தனர், அவர்கள் திராவிட வேர்களைக் கொண்டிருக்கலாம். பாணா இராச்சியம் மற்றும் மீனா-மத்ஸ்ய ராஜ்யம் ஆரியவர்த்தம் கங்கை சமவெளியில் உருவாக்கப்பட்ட பின்னரும் இருந்து வந்தது. பாணா-மீனா ராஜ்யங்கள் வேத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

மத்ஸ்ய ராஜ்யத்தின் மன்னராகிய விராட மன்னர் பாண்டவர்களை அஞ்ஞாதவாச காலத்தில், அங்கு ஒரு வருடம் வரை மறைத்து வைத்திருந்தார்.
மீனா-மத்ஸ்ய மன்னன் விராடனின் மகள் உத்தரா பின்னர் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை மணந்தார்.

பாணா மீனா குலங்கள்

வட இந்தியாவில் வில்லவர் மற்றும் மீனவர் ஆகியவர்கள், பாணா மற்றும் மீனா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணா வடக்கில் பாணப்பாண்டியன் இராச்சியங்களையும், மீனா வட இந்தியாவில் மீனா அல்லது மத்ஸ்ய ராஜ்யத்தையும் நிறுவினார்கள். மலைப்பாங்கான பகுதிகளை ஆண்ட பில் பழங்குடியினர் வில்லவரின் துணைக்குழுக்களாகவும் இருக்கலாம்.

கி.பி 1030 வரை மீனா ராஜ்ஜியம் ராஜஸ்தானை ஆட்சி செய்தது. நவீன ஜெய்ப்பூர் மீனா குலத்தாரால் நிறுவப்பட்டது. கடைசி சக்திவாய்ந்த மீனா ஆட்சியாளர் ஆலன் சிங் சாந்தா மீனா. இந்தக் காலத்தில் கச்வாஹா ராஜபுத்திரர்களால் மீனாக்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

பண்டைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ராஜ்யங்கள் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை. சில ராஜ்யங்கள் பண்டைய அசுர-திராவிட வம்சாவளியைக் கொண்டிருக்கலாம், மற்றவை நாக மற்றும் ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவை. சிலர் வெளிநாட்டினர்.

பாண ராஜ்யங்களின் வீழ்ச்சி

வட இந்தியாவை ஆக்கிரமித்த சித்தியன், பார்த்தியன் மற்றும் ஹுண படையெடுப்பாளர்களின் வருகையின் பின்னர் பாண ராஜ்யங்கள் வலிவிழந்தன. பாணா-மீனா ராஜ்யங்கள் ராஜபுத்திர ராஜ்யங்களால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். மீனா இராச்சியம் கிபி 1036 வரை நீடித்தது. அதன் பிறகு ராஜபுத்திரர்களும் டெல்லி சுல்தானகமும் மீனா ராஜ்யத்தின் பிரதேசங்களை இணைத்து கொண்டனர்.

ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழா

ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழாவின் போது, ​​பில் அல்லது மீனா குலத்தினரின் கட்டைவிரலிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தை ராஜாவின் நெற்றியில் பூசுவது வழக்கம். ஏனென்றால், வட இந்தியாவின் அசல் ஆட்சியாளர்கள் பாணா, பில், மீனா மக்கள் ஆயிருந்தனர்.

திராவிட பாரம்பரியம்

உடல் ரீதியாக அனைத்து இந்தியர்களும் பழுப்பு நிறம் மற்றும் திராவிட முக அம்சங்களைக் கொண்டுள்ளனர். அது அவர்களின் திராவிட தோற்றம் காரணமாகும்.

சித்தியன் படையெடுப்பு (கிமு 150)

ஆனால் வட இந்தியாவின் கங்கை சமவெளியில் உள்ள இந்த திராவிட பழங்குடியினர் சித்தியன் படையெடுப்பாளர்களால் தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கங்கை பகுதிகளை ஆட்சி செய்த வில்லவர் குலங்களை சித்தியர்கள் தம்முடன் சேர்த்திருக்கலாம். ஜாட் சமூகத்தில் பல வில்லவர்-நாடார் குடும்பப் பெயர்கள் உள்ளன. ஜாட் சமூகம் சித்தியன் வம்சாவளியைக் கொண்டிருந்திருக்கலாம்.

நாடார், சாணார், சாந்தார் பில்வன், பாணா, சேர, சோழர் பாண்டியா போன்ற பல வில்லவர் குடும்பப்பெயர்கள் ஜாட் சமூகத்தின் குடும்பப்பெயர்களில் காணப்படுகின்றன.

அசுர திராவிட துடக்கம்

வில்லவர் மீனவர்

தமிழ் வில்லவர் மற்றும் அதன் துணைக்குழுக்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் என்று அழைக்கப்பட்ட அவர்களின் கடலில் செல்லும் உறவினர்கள், இவர்கள் அனைவரும் பண்டைய பாண்டியன் இராச்சியத்தை நிறுவியவர்கள் ஆவர். பண்டைய பாண்டியன் மன்னர்கள் தங்கள் துணைக்குலங்களால் அறியப்பட்டனர் எ.கா. மலையர் குலம்-மலயத்வஜ பாண்டியன். வில்லவர் குலம்-சாரங்கத்வஜ பாண்டியன் மீனவர் குலம்-மீனவ பாண்டியன்போன்றவர்கள்.

வில்லவர் குலங்களின் இணைப்பு

பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் மீனவர் குலங்களுடன் ஒன்றிணைந்து நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கின.

பாண்டிய ராஜ்ஜியத்தின் பூர்வீகம்

பாண்டிய ராஜ்ஜியத்தின் ஆரம்பம் குமரிக்கண்டத்தில் வரலாற்றுக்கு முந்தையது. தலைநகரங்கள் தென் மதுரை, கபாடபுரம் மற்றும் மதுரை.

காலவரிசை

1. முதல் பாண்டிய இராச்சியத்தின் அடித்தளம் (கிமு 9990)
2. முதல் பிரளயம் (கிமு 5550)
3. இரண்டாவது பாண்டிய சாம்ராஜ்யம்
4. இரண்டாம் பிரளயம் (கிமு 1850)
5. மூன்றாவது பாண்டிய சாம்ராஜ்யம்
6. சங்க யுகத்தின் முடிவு (கி.பி. 1)

பாண்டியன் ராஜ்யத்தின் பிரிவு

பண்டைய பாண்டிய இராச்சியம் தமிழத்தில் சேர, சோழர் மற்றும் பாண்டியன் ராஜ்யங்களாக பிரிக்கப்பட்டது.

வில்லவர் ராஜ்யங்களின் முடிவு.

கி.பி 1120 இல் அரேபியர்களின் உதவியுடன் கேரளாவைத் தாக்கிய துளு-நாயர் படையெடுப்பைத் தொடர்ந்து சேர வம்சம் கொடுங்கலூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. கி.பி 1310 இல் மாலிக் கஃபூரின் பாண்டிய ராஜ்ஜியத்தின் மீதுள்ள தாக்குதல் மற்றும் தோல்விக்குப் பிறகு, வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கேரளா முழுவதும் துளு-நேபாள ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி 1335 க்குப் பிறகு கேரளாவில் அஹிச்சத்திரம்-நேபாளத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

தமிழ்நாட்டை தெலுங்கு பலிஜாக்கள் மற்றும் வாணாதிராயர்கள் ஆக்கிரமித்தனர். வாணாதிராயர்கள் தமிழ்நாட்டின் கங்கை நாகர்களின் தலைவர்கள் ஆனார்கள். கி.பி 1377 க்குப் பிறகு கேரளாவும் தமிழகமும் பாண மன்னர்களால் ஆளப்பட்டன. கேரளா மற்றும் தமிழ்நாடு வடுக நாகர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

தெற்கே வில்லவர் குடியேற்றம்
கேரளா
1. கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு இடம்பெயர்வு (கி.பி 1102)
2. கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம், கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு இடம்பெயர்வு (கி.பி 1335)

தமிழ்நாடு
1. தஞ்சாவூரில் இருந்து களக்காட்டுக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
2. மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
3. திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்திற்கு இடம்பெயர்வு (கி.பி. 1377 முதல் கி.பி .1640 வரை)

வட இந்தியாவில் வில்லவர்
வில்லவர் குலங்கள்
1. வில்லவர் = பில்
2. மலையர்
3. வானவர் = பாணா
4. மீனவர் = மீனா

வில்லவர் பட்டங்கள் மற்றும் பாணரின் பட்டங்கள் வில்லவர் = பில், பில்லவா, சாரங்கா, தானவா
மலையர் = மலெயா, மலயா
வானவர் = பாணா, வானாதிராயர்
மீனவர் = மீனா, மத்ஸ்யா
நாடாள்வார் = நாடாவா, நாடாவரு, நாடாவரா.
நாடார் = நாடோர்
பணிக்கர் = பணிக்கா
சான்றார் = சான்றாரா, சான்தா
பாண்டியன் = பாண்ட்யா
மாவேலி = மகாபலி

முடிவுரை

வில்லவர்-நாடார் குலங்கள் இந்தியா முழுவதையும் ஆண்ட வில்லவர் மற்றும் பாண குலங்கள் என்று அழைக்கப்படும் பழங்குடி ஆட்சியாளர்களைச் சேர்ந்தவை. டெல்லி படையெடுப்பைத் தொடர்ந்து நடந்த இனப்படுகொலைதான் வில்லவரின் வீழ்ச்சிக்குக் காரணம். மற்றொரு காரணம் வில்லவர் மற்றும் பணிக்கர் மற்ற நாடுகளுக்கு வெளியேறியது.

__________________________________________

.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.