பறையர்களின் வன்கொடுமைக்கு தீர்வு இல்லாத போது அடுத்த மரணம் அருந்ததியர் மீது பள்ளர்களால்.

பள்ளர்களால் ஒரு அருந்ததியர் கொலை. மதுரை மாவட்டத்தை சேர்ந்த குச்சம்பட்டியில், நடக்கவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலை ஒட்டி, அருந்ததியர் சார்பாக திரு. ராஜேந்திரனை நிற்கவைக்க முடிவெடுத்த அன்பர் செல்வராஜ் (வயது-28, கிராம நிர்வாக அலுவலர்-இவர் அங்குள்ள அனைத்து மக்களுக்கும் இணக்கமான முறையில் நலவிடயங்களை செய்வதிலும், முழுமையான நிர்வாக திறனையும் ஜீரணிக்க முடியாத அங்குள்ள பள்ளர்களை தவிர மற்ற அனைத்து ஜாதியினரும் ஒருங்கிணைப் போடு ஏற்றுக்கொண்டு எந்தவித சச்சரவும் இல்லாமல் வளர்ந்த கிராமம்).

எப்படி ஒரு சக்கிலியன் சொல்லி, இன்னொரு சக்கிலியன் ஊராட்சி மன்ற தலைவர் போட்டிக்கு விண்ணப்பம் கொடுக்கலாம் என்பதும், அதே ஊரில் பள்ளர்களும் போட்டியிட போவதாகவும், ஆண்ட பரம்பரை எங்களை எதிர்த்து ஒரு சக்கிலியனை நிறுத்த எவ்வளவு திமிறுடா உனக்கு என்று பலரது மத்தியில், பள்ளர்கள் ஓன்று சேர்ந்து, அதில் போட்டியிட விரும்பிய பள்ளர் ஜாதியை சேர்ந்த ஆறுமுகம்-உடன் சேர்ந்து மைக்கேல், ராமர், சங்கிலி, ராமய்யா, பாண்டி, ராமு, முத்து முழு மூச்சுடன் ஆயுதத்தால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே நினைவு இழந்தவரை விருதுநகர் மருத்துவனை கூட்டி சென்றதில், உயிருக்கு பேராபத்தான நிலை உரிய உபகரணங்கள் ஏதும் இல்லை, என்று மதுரை திருப்பி அனுப்பி வைக்கப் பட்டு, செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை காவல்துறையும் ஒரு பொருட்டும் கருதாமல், செல்வராஜின் தாயின் முன்னிலையில், சந்தேக மரணம் என்று கையொப்பம் வாங்கிய காவல்துறை, கொடுத்த புகாரை வாங்காமல் புறக்கணிக்கப்பட்டு, உடல் பரிசோதனை செய்யாமல், உடனே உடலை எரிக்க உயரதி காரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனை அறிந்த உறவினர்கள் தோழர்கள் உதவியுடன் பலகட்ட போராட்டத்திற்கு பின் வழக்கு பதியப்பட்டு, மீண்டும் உடல்கூறு செய்ய போராடி வருகின்றனர் அனால் காவல்துறை மறுப்பு தெரிவித்து வருகிறது .

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.