வலையுலக நண்பர்களுக்கு,

இம்மாதம் இருபதாம் தேதி(டிசம்பர் 20,2009) என்னுடைய சிறுகதை தொகுப்பு "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" வெளியாகிறது.

திரிசக்தி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. எழுத்தாளர் இந்துமதி வெளியிடுகிறார்.அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி

தேதி: 20 டிசம்பர் 2009

இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna Salai,Chennai - 2 ]

நூல் விபரம்:

பெயர்: யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்

பகுப்பு : சிறுகதைகள்

பக்கம் : 90

விலை: ரூ.70

பதிப்பகம் :திரிசக்தி

கிடைக்குமிடம் :

டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் திரிசக்தி அரங்கில் நூல் விற்கப்படும். மற்றும் தமிழகத்தின் அனைத்து முன்னணி புத்தக கடைகளிலும் கிடைக்கும்.

மேலும், மொத்தம் இருபது எழுத்தாளர்களின் நூல்கள் இருபதாம் தேதியன்று திரிசக்தி பதிப்பகம் வெளியிடுகின்றது.நண்பர் விழியனின் "காலப் பயணிகள்" சிறுவர் நாவலின் வெளியீடும் இதிலடங்கும். அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நட்புடன்,

நிலாரசிகன்.

Pin It