மண்பானையிலிருந்து வழியும் நீருடன்
ஒவ்வொரு செடிக்கும்
குடுகுடுவென நடக்கிறான்
கூன் துறவி.
யாருமற்ற பெருவனத்தின் நடுவே
அவனது சிறுகுடில்
பாசிக்குளத்தில் மிதக்கும்
பழுப்புநிற தக்கைபோல் காட்சியளிக்கிறது.
சிறு விளக்கொளியில் எழுதுகிறான்.
"தனிமையை ஒரு நாளேனும் உணர்ந்துவிட
வேண்டும் என்று நினைத்து தோற்கிறேன்.
செடிகள்,கொடிகள்,மரங்கள்,,
இன்னும் இன்னும் இன்னும்"
சிறு விளக்கின் தலையில் வந்தமர்ந்த
இரவுப்பூச்சி
பட் பட் பட் என சப்தமிடுகிறது.

- நிலாரசிகன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.