caa protest student roseதுப்பாக்கிகளோடும் லத்திகளோடும் காத்திருக்கும்
அரசாங்கத்தின் அடியாட்களிடம்
உயிர் பறிப்பதால்
உயர்பதவி அடையும்
சட்டத்தின் கொலைகாரர்களிடம்
ரோஜாப்பூக்களை நீட்டுகிறார்கள் மாணவிகள்.

அரச பயங்கரவாதிகளும்
வழிதவறிய மனிதர்களே
என்னும் நேசிப்பின் வழியாக
சொற்களால் இட்டு நிரப்ப முடியாத
அன்பை மலரச் செய்கிறார்கள்.

மண்ணைத் தீண்டும் மழையைப்போல
அடையாளங்களைக் கடந்து
அன்பின் உன்னதங்களை ஆராதிக்கிறார்கள்.

- அமீர் அப்பாஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.