அழுகியதைத் தின்று பெருத்த
பெருச்சாளிகள் எல்லாம்
சந்து பொந்துகளில்
பதுங்கியிருக்கும் பூனைகளைத்
துரத்தி வேட்டையாடத் துணிந்தன

கொம்பு முளைத்த சில பூனைகள்
போர்க்கொடி தூக்கி
தெருவில் இறங்கின

மாடி வீட்டில் இருக்கும்
அதானியும் அம்பானியும்
மதில் மேல் அமர்ந்திருக்கும்
சில கொம்பு முளைக்காத பூனைகளோடு
பரந்த சூன்யவெளியில் சஞ்சரித்துக் கொண்டு
பெருச்சாளிகள் தான் பூர்வகுடிகள் என்று
அறிக்கையிட்டுக் கொண்டுள்ளார்கள்

மதில் மேல் இருந்த பூனைகளோ
கொம்பு முளைக்க விடாமல்
தினமும் சிரைத்துக் கெண்டு இருந்தன

- செல்வின் AJ

Pin It