நம் இருவருக்கான
பயணத்தில்...
இடைச்சொருகலென
மௌனம்
நுழைந்தெப்படி?

தொடர்ந்து வரும் மௌனத்தை
தொலைக்கவியலாது..
திக்கொரு விக்ரகமாய்
திரும்பியிருக்கிறோம் நாம்!

மெல்ல கைகள் பற்று!
உதறி உருவினாலும்..
இறுகப் பற்று!
இன்னும் நெருக்கமாயிரு!
காதுமடல் வருடு!
கன்னத்தில் முத்தமிடு!
காதல் கொள்!
முன்னிலும் அதிகமாய்..

உடனிருக்கையில்
உள்ளமரும் மௌனத்தைப் போல்
ஆகச்சிறந்த தண்டனை
வேறெதுவுமில்லை!
மௌனம் உடை!
மனந்திற!

- இசைமலர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.