கீற்றில் தேட...

1 *இரவென்பது
ஒளியின்
மாயை.

2* இரவென்பது
ஸ்பரிசத்தின்
தேடல்.

3* இரவென்பது
ஏக்கத்தின்
பெருமூச்சு.

4 * இரவென்பது
பௌர்ணமி
காணல்.

5* இரவென்பது
பலரது
வீடடங்கல்.

6* இரவென்பது
முற்றத்து
இளந்தென்றல்.

7* இரவென்பது
காதலர்களின்
கனவு நீட்சி.

8* இரவென்பது
இராவுலாவிகளின்
கொண்டாட்டக் காலம்.

9* இரவென்பது
கடலலைகளின்
கானப்பொழுது.

10* இரவென்பது
சில்வண்டுகளின்
காதற்வேளை.

- இசைமலர்