lady 393ஒவ்வொரு முறை
ஊருக்கு கிளம்புகிறேன்
எனும் போதெல்லாம்
என்னுள் நிகழும்
மௌன ஒத்திகையை
நீ
அறிவாய்!
கடும் சிரத்தைகள்
நடுவே
உன் கண் பாராது
வழியனுப்பி வைக்கிறேன்.

போய் வா!
என்று
குரல் கம்முவதை
காட்டாது
போலி கம்பீரம்
உடைவதற்கு முன்
நீ புறப்படு!

என்னை
கோழையாக்கிய
குற்றவுணர்வினை
உனக்குத்
தர விருப்பமில்லை!

போய் வா!
என் பவித்ர அன்பு
உன்னைப்
பாதுகாக்கும்!

- இசைமலர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.