உனக்கான என்
வார்த்தைகள்
மொழி பெயர்த்தாலும்
மௌனமாகவே
இருந்து விடுகிறது......
என்னிலிருந்து
என்னையே பிரிக்கும்
யுக்தி தெரிந்தவன் நீ
மட்டுமாகவே
இருக்கிறாய்........
உனக்கு மட்டும்
புரிந்து விடுகிறது
என் தேவைகளின்
நீளமும் அவசியமும்
என்னவென
சில நேரங்களில்
புரியாமலும்.....
என்னை விட்டு நீ
விலகி நிற்பதும்
ஒருவித
நேசமாகவே இருக்கலாம்.....
என் மௌனம்
உடைக்க மலையை
தகர்க்கிறாய் - உன்
கண் அசைவில்
கரைவேன் இப்பதுமை
என தெரியாத
அப்பாவியாக......
பின்னொரு நாளில்
இன்னொரு
பிரபஞ்சத்திற்குள்
புரட்டிப் போடுவோம்
நம் நேசத்தையும்
முடிந்தால்.......
- ஆனந்தி ராமகிருஷ்ணன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- விவரங்கள்
- ஆனந்தி ராமகிருஷ்ணன்
- பிரிவு: கவிதைகள்