lonely loverநான்கு வேளைகளும் 
உன்னோடு பேசவில்லை 
ஒரு தேநீர் 
கூடுதலாய்த் தலையிடும் 
அவலமும் வேறு 
இரவுகளில் விழிக்கோளங்களை 
மொய்க்கின்றன 
உன் நினைவுகள் 
என்னை மீறும் கலக்கத்தில் 
ஏகாந்தவாதியாய்த் தாழிடுகிறாய் 
ஒரு கோபம் உன்னுடையது 
மற்றொன்றும் உன்னுடையது தான் 
வீங்கிக் கொண்டிருக்கும் 
காரணங்களுக்கு 
ஊடலென்றா பெயரிடுவது 
ஊடகமென்றால் கூட தகும் 
எப்பொழுதாவது 
ஒரு பைத்தியக்காரனோடு 
முரண்படுகிறது காதல் 
ஆனாலும் காதலைப் பித்தென்பார் 
பித்தைப் பிறையாக்குவார் 
சுடரின் திரியை 
கவனக் குறைவாய் நீட்டிவிடும் 
ஊதுபத்திக் குச்சி 
முடிந்து போன ஒன்று 
அறியா  ஜூவாலைக்குத் 
தூண்டுகோல் 
தப்பித் தவறி ஏங்கும் 
உள்ளத்தில் 
இரண்டு மூன்று முறை 
மணியடிக்கும் அலைப்பேசி 
இம்சையின் 
நான்காவது சாக்கில் 
வெறுப்பையேனும் கொட்ட 
ஒரு வாய்ப்பமையும் திருநாளில் தான் 
முதன்முறைக் 
காதலைத் தெரியப்படுத்தியிருந்தோம்...

- புலமி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.