அடர்ந்த மழையொன்றில்
தன் வழித்தடம் தேடிய
ஆறொன்றால்
மீட்டெடுக்கப் பட்டிருந்தது
மனிதம்..

...

வங்கக் கடலுக்குள்
மூழ்கியிருந்த குப்பைகளுள்
பெருங்குப்பையாக
சாதிய பேதம்..

...

நிலமெங்கும்
சூழ்ந்திருந்த ஈரத்தை
உலர்த்திக் கொண்டிருந்தது
பள்ளிவாசல்களில்
கசிந்திருந்த ஈரம்...

..

இயல்பு வாழ்க்கை
திரும்புவதை எச்சரித்தது
கீழ்த்தரமான பாடலொன்றின்
சர்ச்சை..கள்..

......

இயல்பான வாழ்வின்
பின்னிரவுகளில்
இப்போதெல்லாம்
நாய்கள் குரைப்பதில்லை..
குரைப்பதேயில்லை..

- சிந்தா

Comments

1 comment

1
Minbazee
அருமையான கவிதை
இன்றை நிகழ்வை அழகாக கவிதையாக்கி உள்ளார்
மழைவெள்ளத்தில் பாலுக்காக பரிதவித்த கூட்டம்
வெள்ளம் வடிந்த பின் தன் நட்சத்திர நாயகனின் கட் அவுட் யில் பாலபிசேகம் செய்ந்து தம் இயல்பு வாழ்க்கையை பறைசாட்டிய கூட்டம்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.