மூன்று புகைப்படங்கள் அனுப்பியிருந்தாள்
என் வீட்டுக்கு முன் எடுத்ததென்று
ஒன்றில் நிழல்கள் மேய்ந்து கொண்டிருந்த
மந்தைகளுக்கு நடுவே
நீண்ட கோடுகளாய் ஒளியின் கைகள்
அதன் நடுவே உயரமாக வளர்ந்து நிற்கும்
இரண்டு ரோஜாக்கள் சிறியதும் பெரியதுமாய்
இரண்டாவது புகைப்படத்தில்
சரிவுகளில்
தேயிலைகளின் அணி வகுப்பு
மூன்றாவது ஒன்றில்
இலைகளின் மீது சாய்ந்த படி
தோளோடு தோள் உரசி
நிற்கும் இரண்டு செர்ரி பழங்கள்
அவள் சொன்னாள்
மூன்று படங்களிலும் நானிருக்கின்றேன்
செர்ரி பழங்களாய் அவள்
சரிந்து கிடக்கும் மலையாய் அவள்
நிமிர்ந்து நிற்கும் ரோஜாக்களாய் அவள் என்றேன்
பதில் அனுப்பினாள்
எல்லாவற்றிலும் ஒளிரும்
வானம் நானென்றாள்.
கீற்றில் தேட...
ஒளிரும் வானம்
More articles by கோசின்ரா
- உன் கொடூரத்தை எனக்கு மட்டும் பங்கிடு (22 ஆக 2015)
- கண்களிலிருந்து விடுதலை செய்! (06 மே 2015)
- என் சாம்பலில் உன்னைத் தேடாதே (30 ஏப் 2015)
- முதல் முத்தம் (22 ஏப் 2015)
- முடிவில்லாத உரையாடலின் முதல் வார்த்தை (13 ஏப் 2015)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.