எதிரில் வந்தமர்ந்தவள் சொன்னாள்
வெகு நேரமாய் என்னை
உங்கள் கண்களில் வைத்திருக்கிறீர்கள்
தயை செய்து இறக்கி விடுங்கள்
வீட்டிற்குப் போக வேண்டும்
சட்டென்று இறக்கிவிட்டவன்
ஒன்றும் தெரியாதவன் போல
முகத்தை வைத்துக்கொண்டான்
மீண்டும் கேட்டாள்
எங்கே என் உதடுகள்
கண்களிருந்து பிரித்துக்கொடுத்தான்
என் காதிலாடும் ஜிமிக்கி
என் கன்னத்தில் தீண்டும் கூந்தல்
ஒவ்வொன்றாய் திரும்பிக் கொடுத்தான்
என் பார்வைகளைக் கொடுங்கள்
கொடுக்கும் போது
அவனுடைய பார்வையும் சேர்ந்தே வந்தது
சிரித்துக்கொண்டே வாங்கிக் கொண்டவள்
சொன்னாள் இன்னும் ஒன்றை நீங்கள்
திருப்பி தரவில்லையென்றாள்
எல்லாவற்றையும் கொடுத்து விட்டேன்
உங்களிடம் என் மிச்சமிருக்கிறதென்றாள்
மெளனங்களா
தலையாட்டினாள்
உடலசைவுகளா
இல்லையென்றாள்
சொல்லுங்கள்
இருக்கிறதாவென்று பார்க்கின்றேன்
கண்களில் இருப்பது தெரிகிறது
அப்படியெனில் எடுத்துக் கொள்ளுங்களென்றான்
சுற்றி ஒரு முறை பார்த்தவள்
அவன் கண்களில் அவசரமாக இறங்கினாள்
இமைகளை இறுக்கமாக மூடிக்கொண்டான் அவன்.
கீற்றில் தேட...
கண்களிலிருந்து விடுதலை செய்!
More articles by கோசின்ரா
- உன் கொடூரத்தை எனக்கு மட்டும் பங்கிடு (22 ஆக 2015)
- ஒளிரும் வானம் (14 மே 2015)
- என் சாம்பலில் உன்னைத் தேடாதே (30 ஏப் 2015)
- முதல் முத்தம் (22 ஏப் 2015)
- முடிவில்லாத உரையாடலின் முதல் வார்த்தை (13 ஏப் 2015)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.