அன்பார்ந்த தோழர்களே!
மக்கள் அதிகாரம் குழுமத்தின் ஓர் அமைப்பாகிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் திருவாளர் சுப. தங்கராசு அவர்கள் பெல் நிறுவன ஒய்வு பெற்ற தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு வீட்டு மனை வாங்கித் தருவதாகக் கூறி, அவர்களிடம் நூறு கோடி ரூபாய் வசூல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக 29.07.2020 அன்று நக்கீரன் வார இதழ் செய்தி வெளியிட்டது. அப்படி வெளியான செய்தியில் சுப.தங்கராசு என்று குறிப்பிடாமல் வெறுமனே தங்கராஜ் என்று குறிப்பிட்டுள்ளதோடு, அவர் புஜதொமு மாநில பொதுச் செயலாளர் என்பதையும் குறிப்பிடவில்லை. ஆனாலும் நக்கீரன் குறிப்பிடும் அந்த நபர் சுப.தங்கராசுதான் என்பது எங்களுக்குத் தெரியும். இதனோடு நக்கீரன் செய்தி வெளியான பின்னர், மக்கள் அதிகாரம் குழுமத்தின் புஜதொமு தலைமை சுப.தங்கராசுவை தற்காலிக இடைநீக்கம் செய்து தமது அணிகளுக்கு அனுப்பிய ரகசிய சுற்றறிக்கை பற்றிய செய்தியும் எமக்குக் கிடைத்தது.
எனவே, மேற்கண்ட செய்திகளின் அடிப்படையில், எமது ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு 04.08.2020 அன்று “சீரழிவு சகதியில் மூழ்கிவிட்ட புஜதொமு மற்றும் அதன் சகோதர அமைப்புகள்” என்ற கட்டுரையை கீற்று இணையதளத்தில் வெளியிட்டோம். எமது அந்தக் கட்டுரையில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருவாளர் ராஜு அவர்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 1 கோடி ரூபாய் சொத்து வாங்கிய விவகாரத்தில் அப்பகுதி தோழர்கள் விளக்கம் கேட்டதற்கு, அந்த அமைப்பின் அரசியல் தலைமையின் அணுகுமுறை குறித்தும் குறிப்பிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையில் திருவாளர் ராஜு பற்றிய பகுதிக்கு மட்டும் முதலாவதாக புஜதொமு அமைப்பினர், தமது இணைய தளமான வினவில் மறுப்பும், கண்டனமும் தெரிவித்து பத்திரிக்கைச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
அதில் மக்களுக்காகப் போராடும் புரட்சிகர அமைப்புகளின் தலைவர்களைப் பற்றி இப்படியான செய்திகள் வரும்போது, அதற்கான அடிப்படை ஆதாரத்தைக் கேட்டுப் பெறாமல் செய்தி வெளியிடக் கூடாது என்று கீற்று ஆசிரியருக்கு மிரட்டலும் விடுத்திருந்தனர்; அதற்கான ஆதாரத்தையும் கேட்டிருந்தனர். அவர் எங்களிடம் உரிய ஆதாரத்தைத் தருமாறு கேட்டிருந்தார். எமது பதில் கட்டுரையைத் தருவதில் ஏற்பட்ட சிறிது கால தாமதம் காரணமாக திருவாளர் ராஜு பற்றிய பகுதியை நீக்கிய கீற்று ஆசிரியர், மக்கள் அதிகார குழுமத்தின் அணுகுமுறை பற்றிய தனது கருத்தையும் பின்னூட்டமாக வெளியிட்டிருந்தார்.
அதில், "நீண்ட நாட்களாக இக்குற்றச்சாட்டு கூறப்பட்டு வரும் நிலையில், கட்சித் தலைமையின் சர்வாதிகாரப் போக்கில் அதிருப்தியுற்று தோழர்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறி வருவதும், தலைமையின் மீதான விமர்சனங்கள் பொதுவெளியில் அதிகரித்து வருவதுமான நிலையில், தேர்தல் கட்சிகளுக்கு நிகரான ஊழல் குற்றச்சாட்டில் தற்போது கட்சி அணி ஒன்றின் பொதுச் செயலாளரே சிக்கியிருக்கும் நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஜனநாயகத் தன்மையையும், வெளிப்படைத் தன்மையையும் கடைபிடிப்பது மட்டுமே அமைப்பின் மீதான நம்பகத் தன்மையை அதிகரிக்கும். அமைப்பிற்குள் இருக்கும் ஒருவர் எவ்வளவு சொத்து சேர்க்கலாம் என்பதையும், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் அவரது நெருங்கிய குடும்பத்தினரின் சொத்து மதிப்பு என்ன, source of income என்ன என்பதையும் கட்சி இணையதளத்தில் வெளியிட்டு விட்டால் இத்தகைய விமர்சனங்களை எளிதாகத் தவிர்க்க முடியும். பொதுவெளியில் வைக்கப்பட்ட விமர்சனங்களை பொதுவெளியில் சந்திப்பதே சரியான அணுகுமுறையாகும். அதை விடுத்து 'என் ஏரியாவுக்கு வா' என்று பதில் சொல்வது ஒரு புரட்சிகர அமைப்பிற்கு அழகல்ல. குற்றம் சாட்டியவர்கள் கட்சியின் முன்னாள் தோழர்கள் எனும்போது, இத்தகைய பதில்கள் கட்சி மீதான நம்பகத் தன்மையைக் குலைக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
கீற்று இணைய தள ஆசிரியரிடம் கையாண்ட அவர்களின் அணுகுமுறையின் ஊடாக மக்கள் அதிகாரம் குழுமத்தினர் தாங்கள் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளனர்.
‘சீரழிவு சகதியில் மூழ்கிவிட்ட புஜதொமு மற்றும் அதன் சகோதர அமைப்புகள்’ என்ற எமது கட்டுரைக்கான அவர்களின் பத்திரிக்கை செய்திக்கு, நாங்கள் 11.08.2020 அன்று ‘மக்கள் அதிகாரம் குழுமத்தின் நிதி முறைகேடுகளும், விதிமுறை மீறல்களும்’ என்ற கட்டுரையை கீற்று இணையதளத்தில் வெளியிட்டோம். அந்தக் கட்டுரையில் மக்கள் அதிகாரக் குழுமமும், அதன் அரசியல் தலைமையும் பாட்டாளி வர்க்க அமைப்புகள் அல்ல; அவை உடைமை வர்க்கங்களின் கைப்பாவைகள் என்பதை அரசியல், சித்தாந்த ரீதியாக நிறுவியிருந்தோம்.
எமது அந்த கட்டுரை வெளியாவதற்கு முன்பாக 08.08.2020 அன்று, புஜதொமு மாநிலப் பொதுச் செயலாளர் திருவாளர் சுப.தங்கராசு அவர்களை தாங்கள் அமைத்த விசாரணைக் குழு அறிக்கையின் அடிப்படையில், அவர் வீட்டுமனை முறைகேட்டில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருக்கிறது; எனவே நக்கீரன் செய்தி வந்த அன்றே, அவரை எமது அமைப்பின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும், புஜதொமு மாநில பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக இடை நீக்கம் செய்திருப்பதாக மக்கள் அதிகாரம் குழுமத்தினர் தமது இணைய தளத்தில் பத்திரிக்கைச் செய்தியாகக் கூறியிருந்தார்கள்.
அதனோடு, “எந்த கட்டுரையை வெளியிடுவது என்பது கீற்று இணையதளத்தின் உரிமை என்ற போதிலும், பல்லாயிரம் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள புரட்சிகர தொழிற்சங்க அமைப்பான புஜதொமு மீதான குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டு வெளியிடுவதுதான் ஊடக தர்மம்”, என்று தமது ஆள் பலத்தைக் காட்டி மிரட்டிடும் பார்ப்பன பாசிஸ்டுகளின் குணாம்சத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
ஆட்களின் எண்ணிக்கைதான் ஓர் அமைப்பின் நம்பக தன்மைக்கான, நேர்மைக்கான தகுதி என்றால் மத்திய, மாநில அரசுகள் அனைத்துமே பெரும்பான்மை பலத்துடன் தான் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே கறை படியா கரத்திற்கு சொந்தக்காரர்கள் என்று பொருளாகி விடுகிறது. அதிலும் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
மக்கள் அதிகாரக் குழுமத்தின் எந்த ஒரு அமைப்பு தலைமையையும், அந்த அமைப்புகளின் உறுப்பினர்கள் தேர்வு செய்வதில்லை. அதற்கு மாறாக அதன் அரசியல் தலைமைதான் அவர்களை நியமனம் செய்கிறது. அதன் அரசியல் தலைமையோ, அமைப்பு மாநாட்டைக் கூட நடத்தாமல் தம்மால் முடிந்த அளவுக்கு தவிர்க்கும் உத்திகளைக் கையாண்டு வந்துள்ளது. இதன் மூலம் தமக்குத் தாமே தலைமை என்ற மகுடத்தை சூட்டிக் கொள்வதில் கைதேர்ந்த திறமைசாலிகள் என்பதை நிரூபித்து வந்திருக்கிறது.
இவர்களை விட, இவர்களால் போலி கம்யூனிஸ்டுகள் என்று கூறப்படும், தேர்தல் பாதையில் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகளின் தொழிற்சங்கங்கள் பல நூறு மடங்கு அளவுக்கு தொழிலாளர்களை தமது சங்கத்தில் உறுப்பினர்களாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை இவர்கள் புனிதமானவர்களாகத் தானே ஏற்க வேண்டும். அப்படி அல்லாமல் 1.திரிபுரா மாநில சிபிஎம் கட்சியின் சமர் ஆச்சார்யாவின் கழிவறை ஒப்பந்த ஊழல். 2.தமிழகத்தின் திருப்பூர் சிபிஎம் கோவிந்தசாமி மூன்று கோடி ரூபாய்க்கு வீடு கட்டிய ஊழல் ஆகியவற்றை 2013 அக்டோபரில் தமது வினவு இணையதளத்தில் வெளியிட்டு அவர்களை ஊழல்வாதிகள் என்று கூறுவது இவர்களின் வரையறுப்புக்கு முரணாகத் தெரியவில்லையா?
சரி அவர்களை விடுங்கள், அவர்கள் ‘போலி கம்யூனிஸ்டுகள்’. இவர்களின் வரையறுப்பின் படியே இவர்கள் மக்களுக்காகப் போராடும் புரட்சிகர அமைப்புகள் என்று கூறிக் கொள்வதால், இந்த அமைப்புகளின் தலைமையில் உள்ளவர்கள் உத்தமர்களாகத்தானே இருந்திருக்க வேண்டும்? அதற்கு மாறாக அவர்களே ஊழல்வாதி என்று கூறுவதற்கான முகாந்திரம் உள்ளதாகக் குறிப்பிடும் திருவாளர் சுப.தங்கராசு எப்படி அவர்களின் தொழிற்சங்கத் தலைமை பொறுப்பில் இருக்க முடிந்தது? அப்படியானால் அவர்களின் வரையறுப்பு தவறானது என்பது புலனாகிறது. இதன் மூலம் மக்கள் அதிகாரம் குழுமத்தினர் தமது ஆள் பலத்தைக் குறிப்பிட்டிருப்பது அவர்களின் நேர்மையை அளப்பதற்கான அளவுகோலாக இருக்க முடியாது என்பதும் தெளிவாகி விடுகிறது. இப்போது அந்த ஆள்பலம் என்பது அந்த குழும அமைப்புகளின் முறைகேடுகளை அம்பலப்படுத்துவோரை மிரட்டிப் பணிய வைப்பதற்கான கருவி என்பதும் தெரிந்து விட்டது. இப்படிப் பட்டவர்கள்தான் புரட்சியாளர்களாம்! கேழ்வரகில் நெய் வடிகிறது நம்புங்கள் என்கிறார்கள்!
ஊடக தர்மம் பற்றி பேசும் இவர்கள் நக்கீரன் பத்திரிக்கை செய்தி வெளியிடுவதற்கு பல மாதங்களுக்கு முன்பே சுப.தங்கராசு பற்றி விசாரணைக் குழு அமைத்து, அவர் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதும், அதுபற்றி ஊடகங்களில் அப்போதே அதை வெளியிட்டு தமது நேர்மையை நிரூபித்துக் கொண்டிருக்கலாமே? ஏன் அதைச் செய்யவில்லை? அப்படி வெளியிட்டிருந்தால் நக்கீரன் போன்ற இதழ்களும், எம்மைப் போன்றவர்களும் அதைப் பற்றி பேச வேண்டிய தேவையைத் தவிர்த்திருக்கலாமே. அதற்கு மாறாக அந்த அறிக்கையை ஏழு மாதமாக தமது அணிகளிடம் கூட இருட்டடிப்பு செய்ததுதான் புரட்சியாளர்கள் என்பதற்கான அடையாளமா?
நக்கீரன் குறிப்பிட்டுள்ள தங்கராஜ் தான் சுப.தங்கராசு என்ற உண்மை தெரிந்த தமது அணிகளுக்கு மட்டுமே, அவரை அமைப்பு பொறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்திருப்பதாக ரகசிய சுற்றறிக்கை மூலம் தெரிவித்து தாங்கள் உத்தமர்கள் என்று அவர்களிடம் நாடகம் ஆடியுள்ளனர்.
ஆனால் நாங்கள் 04.08.2020 அன்று கீற்றில் வெளியிட்ட கட்டுரையின் மூலம் நக்கீரன் குறிப்பிட்டுள்ள தங்கராஜ் என்பவர்தான் புஜதொமு மாநில பொதுச்செயலாளர் சுப.தங்கராசு என்றும், அதனோடு அவர்களின் புதிய கதாநாயகன் திருவாளர் ராஜு அவர்கள் சொத்து வாங்கிய விவகாரத்தில், அந்த குழுமத்தின் அரசியல் தலைமையின் அணுகுமுறை குறித்தும் குறிப்பிட்டிருந்தோம். இதன் மூலம் இவர்களின் முகத்திரையை நாங்கள் கிழித்திருந்தோம்.
இதன் பிறகுதான் - வேறு வழியேதும் இல்லாத கையறு நிலையில்தான் – பத்து ஆண்டுகளாக சீந்துவாரற்றுக் கிடந்த செய்திக்கும், ஏழு மாதமாக இவர்களால் இருட்டடிப்பு செய்து வைத்திருந்த விசாரணைக் குழு அறிக்கைக்கும் வினவு இணைய தளத்தில் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தத்தை இவர்களுக்கு நாங்கள் ஏற்படுத்தி விட்டோம். ஆனால் இந்த உண்மைகளை மூடி மறைத்து விட்டு, தாங்களே வகுத்துக் கொண்ட விதிகளுக்கு ஏற்ப சுப.தங்கராசு மீது நடவடிக்கை எடுத்து விட்டதாக வினவு இணைய தளத்தில் வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் அவர்கள் சவடால் அடித்துள்ளனர். இதன் மூலமும் தமது நேர்மையற்ற தனத்தை அவர்கள் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளனர்.
வேறு யாரைப் பற்றியாவது ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியானால், அதற்கு அடுத்த நிமிடமே அவர்களைப் பற்றி பொரிந்து தள்ளும் இவர்கள், அப்படியான செய்திகளின் நம்பகத் தன்மையைப் பற்றி எப்போதாவது அடிப்படை ஆதாரங்களை திரட்டிக் கொண்டுதான் அதுபற்றி செய்திகளையும், விமர்சனங்களையும் வெளியிட்டார்களா அல்லது இனி அப்படித்தான் வெளியிடப் போகிறார்களா?
உதாரணத்திற்கு 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக புதிய ஜனநாயகம் நவம்பர் 2009 இதழில் (வினவில் இருக்கிறது) பின்வருமாறு எழுதினார்கள்:
"அலைக்கற்றை விற்பனையில் ஊழலும், மோசடியும் நடந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க மூளையைக் கசக்கிப் புலனாய்வு நடத்த வேண்டிய அவசியமேயில்லை. தனியார்மயம் என்பதே சட்டப்படி நடக்கும் கொள்ளைதான் என்பதற்கு இந்த ஊழல் விவகாரம் இன்னுமொரு சான்றாய் அமைந்திருக்கிறது. இந்த விற்பனையில் கிடைத்த இலஞ்சப் பணத்தை வாரியிறைத்துத்தான் தி.மு.க.-காங்கிரசு கூட்டணி, அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எதிர்பாராத வெற்றியை அடைந்தது என்பது ஊரறிந்த உண்மை."
இதை எந்த ஆதாரத்தை வைத்து எழுதினார்கள் என்பதை மக்கள் அதிகாரக் குழுமம் சொல்ல முடியுமா? அல்லது காமன்வெல்த் ஊழல், வியாபம் ஊழல் என எந்த ஊழல் பற்றிய ஆதாரங்களை மக்கள் அதிகாரம் குழுமத்தினர் புலனாய்வு செய்து எழுதினார்கள்? வெறும் பத்திரிக்கை செய்திகளின் அடிப்படையில்தானே… அதே போன்று, நக்கீரன் பத்திரிக்கை செய்தியை ஆதாரமாகக் கொண்டு இவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டினை விமர்சித்தால் அது மட்டும் அவதூறாம்!?
ஆளுக்கொரு நீதி என்பதுதான் பார்ப்பனியத்தின் தர்ம கோட்பாடு. அந்த தர்மக் கோட்பாட்டினை பிசகில்லாமல் கடைபிடிக்கும் புனிதப் பிறவிகள் தாங்கள் என்பதையும் கூட நமக்கு உணர்த்தி விட்டார்கள் மக்கள் அதிகாரம் குழுமத்தினர்.
புரட்சிகர அமைப்பு என்றாலே அவர்கள் நிதிமுறைகேடுகளில் ஈடுபட மாட்டார்கள், நேர்மையாகத்தான் வாழ்வார்கள் என்று எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக அவர்கள் கீற்று ஆசிரியருக்கு அறநெறி போதனை செய்துள்ளனர். ஆனால், அதே கட்டுரையில், அவர்களின் மாபெரும் தொழிற்சங்க அமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளரும், புரட்சியாளருமான திருவாளர் சுப.தங்கராசு அரசு நிலத்தை முறைகேடான வழியில் அபகரிக்க முயன்றதன் மூலம் மக்கள் விரோத, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். புரட்சிகர அமைப்பு மற்றும் அதன் தலைவர்கள் என்றாலே அவர்கள் நேர்மையானவர்களாகவும், உத்தமர்களாகவுமே இருப்பார்கள் என்பதுதான் அவர்களின் வரையயறுப்பு. எந்த அடிப்படையில் புரட்சிகர அமைப்புகளுக்கான இந்த அவர்களின் வரையறுப்பு, அவர்களுக்கே பொருந்துவதாக அவர்கள் கருதுகிறார்கள்? அவர்களின் அமைப்பு புரட்சிகர அமைப்பு என்றும், அவர்களெல்லாம் புரட்சியாளர்கள் என்றும் உலகின் எந்த பல்கலை கழகம் அவர்களுக்கு பட்டம் கொடுத்தது? அல்லது எந்த திருச்சபை அவர்களைப் புனிதர்களாக அறிவித்தது?
அவர்களுக்கு, அவர்களே புரட்சியாளர்கள் என்று பட்டம் கொடுத்துக் கொண்டால் அதை மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டுமாம். சமூக மாற்றத்திற்கும், வளர்ச்சிக்குமான புரட்சிகர சித்தாந்தம், அதற்கான அமைப்புகள், அப்படியான புரட்சிகர அமைப்புகளின் நடைமுறை, அவைகளின் முரணற்ற, செயல்பாடுகளில் இருந்து, மக்கள் தான் யார் புரட்சியாளர்கள் என்பதைத் தீர்மானிப்பவர்கள். பல்கலை கழகங்களோ, நீதிமன்றங்களோ அல்ல. புரட்சியாளர்கள் என்ற பட்டத்தை எம்.ஏ பட்டத்தைப் போன்று மக்களிடம் விலை கொடுத்து வாங்கிவிட முடியாது.
மக்களில் ஒருவரான கீற்று ஆசிரியர், இவர்கள் புரட்சியாளர்களா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான உரிமை உள்ளவர். அவரை மிரட்டுவதன் மூலம் அந்தத் தகுதியை அவர் அவர்களுக்கு வழங்கி விட மாட்டார். அதற்கு மாறாக அவர்கள் தாங்கள் யார் என்பதை, அவரும் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பையே தமது மிரட்டல்கள் மூலம் வழங்கியிருக்கிறார்கள். தமது மிரட்டல்கள் மூலம் அவர்கள் தமது முகத்திரையை தாங்களே கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக கீற்று ஆசிரியர், அவர்களுக்கு நன்றி சொல்கிறாரோ இல்லையோ நாங்கள் எமது ஒருங்கிணைப்புக் குழு சார்பில் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமல்ல மனித சமூகத்திற்கே தமது உழைப்பின் மூலம் உணவிலிருந்து, உயிர் வரை அனைத்தையும் அளிப்பவர்கள் உழைக்கும் மக்கள்தான். எனவே ஒரு கம்யூனிஸ்டுக்கு மக்கள் மன்றத்தின் தீர்ப்பே அனைத்திலும் மகத்தானதும் இறுதியானதுமாகும். மக்களின் நலனே தனது நலன் அவர்களின் நேர்மையும் தன்மானமுமே தன்னுடையது என்று கருதுவதே ஒரு கம்யூனிஸ்டின் பண்பாக, வாழ்வியலாக இருக்க முடியும். மக்கள் தங்களைப் புரட்சியாளர்களாகவும், நேர்மையானவர்களாகவும் ஏற்பதுதான், ஒரு கம்யூனிஸ்டுக்கான உயிரினும் மேலான உயரிய பட்டமாகும்.
மாபெரும் புரட்சியாளர்களாக தம்மை பீற்றிக் கொள்ளும் மக்கள் அதிகாரம் குழுமத்தினரோ, அந்தப் பட்டத்தை நிலவுகிற சொத்துடைமை சமூகத்தின் பாதுகாவலனான நீதிமன்றத்தின் மூலம் வாங்கப் போவதாக ஊடகவியலாளர்களை மிரட்டுகிறார்கள். அவதூறு வழக்கு தொடுத்து, நீதிமன்றத்தின் மூலம் கிடைக்கும் பணம் அவர்களின் புரட்சிகர நேர்மைக்கு சமமானதாக, ஈடு செய்யக்கூடியதாகக் கருதும் அவர்களின் பார்வையே, இவர்கள் கம்யூனிச விரோதிகள், மக்கள் விரோதிகள் என்பதற்கான சிறந்த உதாரணமாகவும், அவர்கள் சொத்துடைமை வர்க்கத்தின் அடியாட்கள் என்பதையும் கூட வெளிப்படுத்தி விட்டது.
இவர்களின் முறைகேட்டை அம்பலப்படுத்துகிறவர்கள் மீது, நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கப் போவதாக கூறியதன் மூலம் மீண்டும் ஒருமுறை தங்களைத் தாங்களே அவர்கள் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மல்லாந்து படுத்துக் கொண்டு மார்பில் துப்பிக் கொள்வது அவர்களுக்கு அவ்வளவு சுகமாய் இருக்கிறது போலும்! என்னதான் குப்புற விழுந்தாலும் தங்கள் மீசையில் மண் ஒட்டவில்லை என்றுதான் அவர்கள் கூறுவார்கள்.
தமது தவறுகளை ஒப்புக் கொண்டு விட்டால், போட்டி நிறைந்த இந்த சமூகத்தில் அது தமது வாழ்வாதாரத்திற்கான அடிப்படையாக விளங்கும் ஒன்றை இல்லாமல் செய்து விடுவதைத் தவிர்ப்பதற்காக நீதிமன்றத்தின் மூலம், தான் நேர்மையானவன் என்று சான்று பெறுவது என்பது உடைமை வர்க்கத்தின் பண்பாகும். அவர்களின் அந்த உடைமை வர்க்கப் பண்புதான் மக்கள் அதிகாரக் குழுமத்தினரையும் நீதிமன்றக் கதவுகளைத் தட்டத் தூண்டுகிறது.
மிகத் திறமையாக உழைப்பாளிகளின் உழைப்பை சுரண்டுகிறவன் எவனோ அவனே மிகச் சிறந்த முதலாளி என்ற பட்டத்தைப் பெறுகிறான். மிக நேர்த்தியாக யார் மக்களை ஒடுக்குகிறார்களோ அவர்களே மிகச் சிறந்த ஆட்சியாளர்களாக இவ்வுலகில் வலம் வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களின் காலை நக்கிப் பிழைக்கும் மக்கள் அதிகார குழுமத்தினரிடம் உடைமை வர்க்கத்தின் வாடை அடிப்பதில் அதிசயிப்பதற்கு ஏதுமில்லை.
- ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு
பொம்பல பொறுக்கி பல பேரு உங்கள் குழுவுல இருக்குறத முதல்ல சரி பன்னுங்க. பின்னால் புரட்சிகர கட்சிய அவதூறு பண்ணலாம்..
இல்ல இப்படி பேசாதிங்க, கம்யூனிசுட் மாதிரி வாதம் இல்ல .. பாசிஸ்ட் மாதிரி இருக்கு பேச்சு
அதுக்கு இந்தக் கட்டுரையை வினவில் போடனும்... :-)
இது எப்ப நடந்தது? ஏம்ப்பா காமெடி பண்ரதா இருந்தாலும் முதல்லயே சொல்லிட்டுச் பண்ணுங்கப்பா.. அப்பதானே சிரிக்க முடியும்.
எனக்கு ஒரு அடிமை ரப்பர் ஸ்டாம்ப் பார்சேல் பண்ணு...
வரலாற்றில் முரண்பாடு முற்றும் போது நண்பர் யார், எதிரி யார் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடு ம். இந்த புரச் ச் ச் சியாளர்களின் நிலை தான் சந்தி சிரித்துவிட்டதே , பின்பும் உள்ளே இருப்பதற்கு மொக்கையான காரணங்களைச் சொல்லி திருடர்களுக்கு முட்டுக்கொடுப்ப தை என்னவென்று சொல்லி அழைப்பது. உங்களை அடிமை என்றால் தானே வருத்தமாக இருக்கிறது. வேண்டுமென்றால் அதிமுக அமைச்சரே என்று அழைக்கலாமா ? எனக்கு ஒரு கலைப்புவாதி முத்திரை பார்சல்ல்ல்ல்ல் ...
உங்களுக்காக ரெண்டு பாட்டு:
1) வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே –
அட பல நாள் இருந்தேன் உள்ளே
அந்த நிம்மதி இங்கில்ல…
உள்ள போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லீங்க
வெளியே உள்ள அத்தனை பேரும்
புத்தன் காந்தி இல்லீங்க...
***
2) மனிதன் மனிதன் எவன்தான் மனிதன் ?
வாழும்போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா ?
வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா ?
பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்..
அடுத்தவீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா ?
அந்தநேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா ?
அடுத்தவீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா ?
அந்தநேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா ?
கொடுமைகண்டு கண்ணைமூடி கிடப்பவன் மனிதனா ?
கோபம்கொண்டு நியாயம்கேட்டு கொதிப்பவன் மனிதனா ?
***
கூட்டிக் கழிச்சு பாருங்க கணக்கு சரியா வருதான்னு பாப்போம்..
***
அண்ணே இங்க யாரோ சித்தாந்த ரீதியா பேசுறாங்கன்னு கேள்விப்பட்டேன் ...
குத்தி வாயடைக்க முயற்சிக்கிறார் . அய்யா
கனவானே! உங்கள் அமைப்பில் மாநிலத்தின்
தெற்கு தொடங்கி வடக்கு வரை எத்தனை
எத்தனை பாலியல் குற்றவாளிகள் கண்டறி
யப்பட்டனர் என்பதையும், அதில் எத்தனை
பேர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட ு -
இடை நீக்கம் செய்யப்பட்டனர் - இடை
நீக்கக் காலம் முடிந்து பின்னர் அமைப்பில்
சேர்த்துக் கொள்ளப்பட்டனர் என்பதையும்,
இன்னும் சில பாலியல் குற்றவாளிகள்
குறித்து ஆதாரபூர்வமாக அணிகள் குற்றச்
சாட்டுக்களை முன் வைத்தும், அந்தக்
குற்றவாளிகளால் அமைப்பு பெறும்
ஆதாயத்தைக் கணக்கிற்கொண்டு
விசாரணைக்குக்கூட எடுத்துக் கொள்ள
வில்லை என்பது குறித்தும் உங்கள்
அமைப்பின் தலைமைப் பீடத்தையே
கேட்டுப் பாருங்கள். சந்தி சிரித்துவிடும்.
எனவே, அரசியல் ரீதியாக ஆம்பள்ளி
குழுவோ, செங்கனல் குழுவோ எழுப்பி
யிருக்கும் ஆழமான கேள்விகளுக்கு
பதில் கூற வக்கற்று புழுதி வாரித்
தூற்றுவது இழிவானது; அவமானகரமானது
.அமைப்பில் இருக்கும்வரை புரட்சியாளர்கள்
; தியாக சீலர்கள்; அமைப்பிலிருந்து வெளி
யேறிவிட்டாலோ அல்லது வெளியேற்றப்
பட்டாலோ அவர்கள் சீர்குலைவு வாதிகள்;
கலைப்பு வாதிகள்; அராஜகவாதிகள்;
பாலியல் குற்றவாளிகள்...அப்படித்தானே
உங்கள் வாதம். இனி எடுபடாது உங்களது
செப்பிடுவித்தையெல்லாம். மாநிலத்தின்
பலதரப்பட்ட அறிவு ஜீவிகளும், தொழிலாளர்
களும் உங்களது வண்டவாளத்தை
நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார்கள்.
அடிப்படைக் கொள்கைகள், கோட்பாடுகள்,
தத்துவங்கள் இல்லாததன் ஓட்டாண்டித்
தனங்களின் விளைவே முதலாளித்துவக்
கட்சிகளை விட இப்படி (புரட்சி பேசிக்
கொண்டே) சகல வழிகளிலும் சீரழியக்
காரணம் என்பதை உணர்ந்திடுவீர்.
இல்லையேல் இன்னும் அவமானப்படுவீர்!
//உள்ள போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லீங்க
வெளியே உள்ள அத்தனை பேரும்
புத்தன் காந்தி இல்லீங்க...//
// அடுத்தவீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா ?
அந்தநேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா ?
அடுத்தவீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா ?
அந்தநேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா ?//
அருமையான வரிகள். உங்களின் பாட்டுக்கு நான் எதிர் பாட்டு பாடப்போவதில்லை. கதையாகச் சொன்னால் பொருத்தமாக இருக்கும். உங்கள் அமைப்பில் இப்போது ’புதிதாக’ இணைந்திருக்கும் மருதையர் (இங்கு ஐயர் என அழைப்பதன் பொருள், பிறப்பால் அல்ல. அணிகளை ஆட்டு மந்தைகளாக்கி, தங்களது புட்டத்திற்கு மட்டும் ஒளிவட்டம் கட்டிய காரணத்திற்காக கொடுக்கப்படும் அடைமொழி) ஆற்றிய சொற்பொழிவில் தெறித்த கருத்துப் பிளம்புகள் தான். இரண்டு காட்சிகளை மட்டும் பதிவிடுகிறேன்.
1) ”ஏசு இறந்துவிடுகிறார ் என்று எல்லோரும் நினைக்கின்றனர். ஆனால் ஏசு தேவதைகளால் காப்பாற்றப்பட்ட ு மீண்டும் உயிருடனே எழுந்து வருகிறார். அப்பொழுது சந்தையில் ஒரு மதபோதகர் “தேவன் நம் பாவங்களுக்காக சிலுவையில் மரணித்தார்” என்று பிரசங்கம் செய்துகொண்டிருக ்கிறார். அப்பொழுது அவரிடம் சென்று, தான் தான் ஏசு, தான் மரணிக்கவில்லை என்றும், தேவதைகள் தன்னை காப்பாற்றிய கதையையும் விவரிக்கிறார். ஆனால் அதை நம்ப மறுக்கும் பிரசங்கி, “நீ சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள், ஏசு நம் பாவங்களுக்காக சிலுவையில் மரணித்துவிட்டார ்” என்று மீண்டும் ஈன ஸ்ருதியில் முழங்கத் துவங்குகிறான்.”
2) “ஏசு உயிரோடு இருப்பது அறிந்து அவரை சந்திக்க வீட்டிற்கு வருகிறார்கள் அவரின் சீடர்கள். யூதாசும் வருகிறான். “என்னைக் காட்டிக்கொடு நான் தியாகம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் இது நிலைக்கும் எனச் சொல்லி என்னைத் துரோகியாக மாற்றினாய்” என்று யூதாஸ் கோபம் கொள்கிறான். அதற்கு கிருஸ்து, தேவதைகள் தன்னை காப்பாற்றிய கதையை விவரிக்கிறார். தேவதைகள் என்று ஒரு இடத்தை நோக்கி சுட்டிக்காட்டுக ிறார் கிருஸ்து. ஆனால் அங்கு இருந்தவை சாத்தான்கள். தேவதைகளாக வேடமிட்டு இருந்த சாத்தான்கள்”.
கழித்துக்கூட்டிப் பார்த்தாலும் கணக்கு தவறாவதில்லை.
தம்பி மார்க்ஸ் ஏங்கல்ஸ் மேற்கோள்கள் மட்டுமே மார்க்சியம் அல்லவே. ஒருவன் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னாலும் வர்க்கம் இருக்கிறது, அரசியல் இருக்கிறது என்பது தாங்கள் அறியாததா ?
ஒரு வேசியை ஊரே கல்லால் அடிக்க விரட்டியதாம். அப்பொழுது ஏசு சொன்னாராம் “உங்களில் பாவம் செய்யாதவன் யாரோ, அவன் இந்த பெண்ணைக் கல்லால் எறியுங்கள்” என்றாராம். அனைவரும் கல்லைக் கீழே போட்டுவிட்டனர். அந்த கூட்டம் மட்டுமல்ல, மொத்த மனித இனத்திடம் கையில் கல் இருந்திருந்தாலு ம், எல்லோரும் கல்லை கீழே போட்டிருப்பார்கள்.
ஏன் ?
ஏனென்றால் மனிதனாக பிறக்கும் போதே “பாவத்துடன் ஜனிக்கிறோம்” என்கிறது மதம். எனில் யாருக்கும், யாரைப் பற்றியும் விமர்சிக்க ’தகுதி’ இல்லை என்றாகிறது. ஏன் அந்த ‘தகுதி’ ஏசுவிற்கே கூட கிடையாது. ஏனென்றால் அவரும் மனிதனாக பிறந்துவிட்டாரே . அவரும் மேற்சொன்ன கோட்பாட்டு விளக்கப்படி பாவஜீவியாகிறார்.
எனில்,
”யாரும், யாரையும் விமர்சிக்கக் கூடாது, ஏனெனில் அந்த தகுதி யாருக்கும் இல்லை” என்ற பொன்மொழி பிறக்கிறது.
நீ எங்கூட இல்லன்னா எதிரி கூட இருக்கிறே-ன்னு சொன்ன ஜார்ஜ் புஷ் மற்றும் ஹிட்லரோட கோயபல்ஸ் கூட விமர்சகருங்க தான் போங்க.
///பின்பும் உள்ளே இருப்பதற்கு மொக்கையான காரணங்களைச் சொல்லி திருடர்களுக்கு முட்டுக்கொடுப்ப தை///
உள்ளே இருப்பதாலேயே - தவறுக்கு முட்டுக் கொடுக்கிறார்கள் , தவறை நியாயப்படுத்துக ிறார்கள் - என்ற உங்கள் வாதத்தை சுட்டிக் காட்டுனேன்.
///”யாரும், யாரையும் விமர்சிக்கக் கூடாது, ஏனெனில் அந்த தகுதி யாருக்கும் இல்லை” என்ற பொன்மொழி பிறக்கிறது.///
யாரும் யாரையும் விமரிசிக்கலாம்ண ்ணே.. யாரு இல்லையின்னு சொன்னது? விமரிசிக்கிறதுக ்கு தகுதி தேவையில்லை. அதே நேரத்துல விமரிசிக்கிறதால ேயே புனிதர் பட்டமும் குடுத்துற முடியாதில்லையா? (அது விமர்சனமா, இல்லை கதம்பமாங்குறது வேற விசயம்)
உள்ள இருக்கவன் தான் ரப்பர் ஸ்டாம்ப் தூக்கிட்டு அலையுறான்னா, வெளிய வந்துட்ட நீங்களும் ரப்பர் ஸ்டாம்ப் குத்திகிட்டு அலையிறீயேண்ணே..
அங்க உள்ள பொகையுதுன்னா பொகையட்டும்.. அத நாந்தேன் பத்தவெச்சேன்னு சொல்றதெல்லாம் ஒரு பெருமையா பாஸு? இல்ல, புகையுறதப் பாத்து ஏன் எரியலை, இப்பமே எரிஞ்சாகனும்னு பாக்குறவன் மேல எல்லாம் நெருப்ப அள்ளி வீசுறது தான் விமர்ச்சனமான்னு கேக்குறேன்..
அதனால என்ன சொல்ல வர்ரீங்க? ’பிதாவே பாவஞ்செஞ்ச எம்மை இரட்சிய்யும்’ன் னு உங்க பின்னாடி உடனே வந்துடனுமா?
மீண்டெழுந்து வர்ரது தேவனா, சாத்தானா என்பது உள்ள இருக்கற பூஜிக்ககிறவங்க பிரச்சனை. வெளியில இருக்குற நமக்கு என்னண்ணே? விமர்சிக்கலாம் தான்.
அதுக்காக பரமார்த்த குருவும், சிஷ்யர்களும் சொல்றதெல்லாமே சரின்னோ, எல்லாமே விமர்சனும்னோ ஆயிடாதில்லையா?
2) “ஏசு உயிரோடு இருப்பது அறிந்து அவரை சந்திக்க வீட்டிற்கு வருகிறார்கள் அவரின் சீடர்கள். யூதாசும் வருகிறான். “என்னைக் காட்டிக்கொடு நான் தியாகம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் இது நிலைக்கும் எனச் சொல்லி என்னைத் துரோகியாக மாற்றினாய்” என்று யூதாஸ் கோபம் கொள்கிறான். அதற்கு கிருஸ்து, தேவதைகள் தன்னை காப்பாற்றிய கதையை விவரிக்கிறார். தேவதைகள் என்று ஒரு இடத்தை நோக்கி சுட்டிக்காட்டுக ிறார் கிருஸ்து. ஆனால் அங்கு இருந்தவை சாத்தான்கள். தேவதைகளாக வேடமிட்டு இருந்த சாத்தான்கள்”.///
Good analogy.
But, புரியுமா? புரியாதவர்களுக் கு விளக்க வேண்டியதில்லையா ?
கேடுகெட்ட முறையில் முட்டுக்கொடுத்த ால் 'தம்பீஸ்'
முற்போக்கு சாயம் பூசி முட்டுக்கொடுத்த ால் மகஇக 'புர்ச்சீஸ்'
உங்களை அந்த மார்க்ஸே வந்தாலும் திருத்த முடியாது என்பது திண்ணம்.
RSS feed for comments to this post