கடந்த மாதம் திருப்பூரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய 'நாம் தமிழர்' கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருமலை நாயக்கர் மகாலை இடிக்க வேண்டும் என்றும், அது தமிழர்களை அன்னியர்கள் ஆண்டார்கள் என்பதற்கான அவமானச் சின்னம் என்றும் பேசியிருக்கின்றார். அத்தோடு நிறுத்தாமல் வீரபாண்டியக் கட்டபொம்மனையும் தரக்குறைவாக விமர்சித்து இருக்கின்றார். இது தொடர்பாக தேனி மாவட்ட நாயக்கர் முன்னணி என்ற சாதிவெறி அமைப்பைச் சேர்ந்த ஜெகதீசன் என்ற நபருக்கும், சீமான் அவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் வாட்ஸ்அப்பிலும், பேஸ்புக்கிலும் வெளியாகி இருக்கின்றது. சீமானின் அரசியல் நாகரிகத்தைப் பற்றியும், அவரின் யோக்கியதையைப் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புகின்றவர்கள் அதைக் கண்டிப்பாக கேட்க வேண்டும்.

seeman 289சீமானை இப்படி எல்லாம் பேசச் சொல்லி பின்னிருந்து இயக்கும் இயங்கு சக்தி என்ன என்று பார்த்தால், அவரின் கீழ்த்தரமான அரசியல் பிழைப்புவாதமே. அவர் பெரியாரியம் பேசுவார்; திராவிடத்தை எதிர்ப்பார், ஜெயலலிதாவுக்கு ஓட்டு கேட்பார்; ஆனால் கன்னடர்களையும், மலையாளிகளையும், தெலுங்கர்களையும் தமிழ்நாட்டை விட்டே துரத்த வேண்டும் என்பார். அப்படியே வைகுண்டராஜனிடம் காலை நக்கி 'ஆசியும்' வாங்கிக் கொள்வார். வாங்கிக் கொண்ட கையோடு தமிழ் முதலாளியம் பேசுவார். யாராவது எதிர்த்துக் கேள்வி கேட்டால், அவர்களை 'ங்கோத்தா ங்கொம்மா' என்று வசை பாடுவார். முடிந்தால் ஆள் வைத்தும் அடிப்பார். இதுதான் சீமானுக்குத் தெரிந்த அரசியல்.

இங்கே இருக்கும் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் சீமானை அப்படி என்ன செய்து விட்டார்கள் என்றுதான் நமக்குத் தெரியவில்லை. அவர் நேர்மையான வழியில் சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை எல்லாம் பிடுங்கிக் கொண்டு தெருவிலே விட்டுவிட்டார்களா? இல்லை சீமான் பிடித்து வைத்திருந்த தமிழ்த் தேசியத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டார்களா? எதற்காக சீமான் முஷ்டியை முறுக்குகின்றார்? இந்த அதிகாரத்தை சீமானுக்கு யார் கொடுத்தது? தொண்டை கிழிய முக்கி முக்கிப் பேசினால் மட்டும் பொய் உண்மையாகி விடுமா?

இங்கே தேர்தல் அரசியல் செய்யும் ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை தேவைப்படுகிறதோ இல்லையோ ஒரு எதிரி நிச்சயம் தேவைப்படுகின்றான். அந்த எதிரியை முன்வைத்தே தங்களை கதாநாயகர்களாக அவர்கள் காட்டிக் கொள்கின்றார்கள். பாஜகவினர் எப்படி பாகிஸ்தானையும், முஸ்லீம்களையும் எதிரியாக கட்டமைத்தார்களோ, 'மகாராஷ்டிரா மராட்டியர்களுக்கே' என்ற முழக்கத்தை முன்வைத்த சிவசேனா எப்படி மராட்டிமொழி பேசாத அனைவரையும் எதிரிகளாக கட்டமைத்தார்களோ, அதே போல அண்ணன் சீமான் அவர்கள் 'தமிழ்நாட்டை தமிழர்களே ஆளவேண்டும்' என்ற முழக்கத்தை முன்வைத்து, அதற்காக கன்னடர்களையும், தெலுங்கர்களையும், மலையாளிகளையும் எதிரிகளாக கட்டமைத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு பேசும் மக்களையும், மலையாளம் பேசும் மக்களையும், கன்னடம் பேசும் மக்களையும் அடிக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஓர் ஓட்டு கிடைக்கும் என்று சீமான் கணக்கு போடுகின்றார்.

தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று சீமான் நினைப்பது ஒன்றும் தவறான கருத்தல்ல. ஆனால் எந்தத் தமிழன் என்று சீமான் தெளிவாகக் கூற வேண்டும். சீமானுக்குப் புரவலர்களாக இருக்கின்றார்களே ஆற்று மணலையும், கிரானைட்டையும், தாதுமணலையும் கொள்ளையடித்த அந்த நல்ல தமிழ் முதலாளிகளா? இல்லை இருக்க இடமில்லாமல், உடுக்க நல்ல ஆடையில்லாமால் தங்கள் கை, கால்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தினம்தினம் அற்ப கூலிக்கு உழைத்துச் சாகும் அந்த சாமானிய தமிழ் மக்களா? சீமான் அவர்கள் தான் சொல்ல வேண்டும்.

சீமான் 'தமிழ் நாட்டை தமிழர்களே ஆள வேண்டும்' என்று சொல்கின்றார். நடிகர் சங்கத் தேர்தலில் கூட தமிழர்கள் தான் நிற்க வேண்டும்; விஷால் ரெட்டி நிற்கக் கூடாது என்கின்றார். அப்படி என்றால் தமிழ்ப் படங்களில் தமிழர்கள் மட்டுமே நடிக்க வேண்டும்; அந்தத் திரைப்படங்களுக்குப் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களும் தமிழர்களாக இருக்க வேண்டும் என்று சீமானால் சொல்ல முடியுமா? அதை மீறி எவனாவது பார்ப்பன மாதவனையும், மலையாளி பாவனாவையும் வைத்து படம் எடுத்தால், அவனை ஓட ஓட செருப்பாலே அடித்து தமிழ்நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்று சொல்வதற்கு அண்ணன் சீமான் அவர்கள் தயாரா?

அண்ணன் சீமான் அவர்கள் பேசும் தமிழ்த் தேசியத்திற்கு அடிப்படையாக இருக்கும் பிரச்சினை என்பது காவிரி, முல்லைப் பெரியாறு, ஈழம் போன்றவையே. ஆனால் சீமான் போன்றவர்கள் கர்நாடகாவிலும், கேரளாவிலும், ஈழத்திலும் இருப்பதே இந்தப் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாகும். எப்படி சீமான் தமிழ்நாடு தமிழர்களுக்கே என்கின்றாரோ, அதே போல கர்நாடகா கன்னடர்களுக்கே, கேரளா மலையாளிகளுக்கே, இலங்கை சிங்களவர்களுக்கே என்று சொல்லும் இனவாதிகள் அங்கே இருக்கின்றார்கள். எப்படி தமிழ் முதலாளிகள் சீமானை ஆதரிக்கின்றர்களோ, அதே போல அவர்களையும் அவர்களது முதலாளிகள் ஆதரிக்கின்றார்கள்; கொம்புசீவி விடுகின்றார்கள். மற்றபடி மக்கள் நலன் சார்ந்த எந்த அக்கறையும் அவர்களிடம் கிடையாது. மொழி வெறியையும், இன வெறியையும் சாமானிய மக்களிடம் தூண்டிவிட்டு அவர்களது பிரச்சினைக்கான உண்மையான காரணத்தை அவர்கள் அறியாமல் செய்வதே இது போன்ற இனவாதிகளின் வேலை.

பின்நவீனத்துவவாதிகள், அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் கைக்கூலிகள் போன்றவர்களைப் போன்றே இவர்களும் முதலாளியம் பெற்றெடுத்த பிள்ளைகள். இவர்களின் நோக்கமே பாட்டாளி வர்க்க உணர்வை சிதறடிப்பதுதான். அதற்காக என்ன வகையான வழிமுறைகளையும் இவர்கள் கையாளுவர்கள்.

'முப்பாட்டன் முருகன்; எம்பாட்டான் சிவன்' என்று சீமான் சொல்கின்றார். அப்படி என்றால் ஒரு பார்ப்பனனுக்குப் பிறந்தவன் தான் முருகன் என்றாகின்றது. அப்படி என்றால் சீமானின் முப்பாட்டனும், பாட்டனும் பார்ப்பனர்கள். அவர்களை தனக்கான முன்னோடியாகக் கொள்ளும் சீமானும் ஒரு பார்ப்பன அடிமை. அதனால் தான் திராவிடத்தை எதிர்க்கின்றார். திருமுருகாற்றுப்படை என்ற நூலில்தான் முதன்முதலில் முருகனுக்கு அப்பன் சிவன் என்று வருகின்றது. அதற்கு முந்திய எந்த இலக்கியத்திலும் முருகனுக்கு அப்பன் சிவன் என்று கிடையாது என்பது பார்ப்பன அடிமை சீமானுக்குத் தெரியாமல் போனது துரதிர்ஷ்டமே. முருகன் பாலைநிலத்தின் தெய்வம்; கொற்றவையின் மகன் என்று பேராசிரியர் வானமாமலை அவர்கள் தன்னுடைய முருகன் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையில் கூறுகின்றார். ஆனால் சீமானோ, சிவனை முருகனின் அப்பனாக மனமுவந்து ஏற்றுக் கொள்கின்றார். பார்ப்பனனைப் பகைத்துக் கொண்டால் ஆட்சிக் கட்டிலில் ஏற முடியாது என்பது சீமானுக்குத் தெரியாதா என்ன?

அதனால் தான் திருமலை நாயக்கர் மகாலை மட்டும் இடிக்க வேண்டும் என்று சொல்கின்றார் சீமான். அவருக்குத் தெரியாதா மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருவரங்கம் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவில், காஞ்சி ஏகாம்பரீசுவரர் கோவில் போன்றவையும் சீமானின் பரம எதிரி நாயக்கர்களால் கட்டப்பட்டதுதான் என்பது. சீமானுக்கு உண்மையிலேயே சூடு, சுரணை இருந்தால் அதையும் இடிக்கச் சொல்லட்டும். அப்படி இடிக்கச் சொன்னால் அவரின் அரசியல் நேர்மையை நாம் பாராட்டலாம்.

அன்னியர்கள் ஆண்டதற்கு அடையாளமாக தமிழ்நாட்டில் திருமலை நாயக்கர் மகால் மட்டும்தான் இருக்கிறதா? ஆங்கிலேயர்கள் ஆண்டதற்கு அடையாளமாக சென்னையில் மட்டும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம், எழும்பூர் தொடர்வண்டி நிலையம், சென்னை பல்கலைக்கழகம், சென்னை மருத்துவக் கல்லூரி, மாநிலக் கல்லூரி, கன்னிமெரா நூலகம் என நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் இருக்கின்றன. தமிழகம் முழுவதும் பார்த்தால் குறைந்தது பத்தாயிரம் 'அவமானச் சின்னங்களாவது' தேறும். சீமான் எல்லாவற்றையும் இடிக்க வேண்டும் என்கிறாரா? என்ன மடத்தனம் இது?! 

சீமான் சொல்வது போன்று நாயக்க மன்னர்கள் அயோக்கியர்கள் என்றால், கோவிலில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்த ராஜராஜ சோழனை என்னவென்று சொல்வது? ஆனால் சீமானுக்கு ராஜராஜ சோழனை மிகவும் பிடிக்கும். ஏன் என்ற காரணத்தை நடிகை விஜயலட்சுமியிடம் கேட்டால், வண்டி வண்டியாக சொல்வார்.

அரசியலிலும் நேர்மையில்லை; தனிமனித வாழ்க்கையிலும் ஒழுக்கமில்லை இப்படிப்பட்ட சீமான் வீரபாண்டியக் கட்டபொம்மனை அவதூறாகப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கின்றது? கும்பினி ஆட்சிக்கு எதிராக வீரச்சமர் புரிந்த கட்டபொம்மனையும், ஊமைத்துரையையும், விருப்பாச்சி கோபால நாயக்கரையும் விடுதலைப் போராட்ட வீரர்களாக மட்டுமே பார்த்த தமிழ் மக்களிடம் சீமானைப் போன்ற தமிழிழிவுவாதிகள் அவர்களை நாயக்கர்களாக, தெலுங்கர்களாக காட்ட முற்படுகின்றனர். எப்படி சாதிக் கழிசடைகள் தீரன் சின்னமலையை கவுண்டராக காட்ட முற்படுகின்றார்களோ, மருது சகோதரர்களை தேவராக காட்ட முற்படுகின்றார்களோ அதற்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல சீமானின் இந்தச் செயல். ஆனால் தீரன் சின்னமலையும், மருது சகோதரர்களும், ஊமைத்துரையும், வீரபாண்டியக் கட்டபொம்மனும் ஒருவருக்கு ஒருவர் நண்பர்கள் என்பதையும் அவர்கள் தங்களுக்குள் ஒருநாளும் மொழிபேதமோ, இனபேதமோ பார்த்ததில்லை என்பதும் ஒன்றாகவே கும்பினி ஆட்சியை எதிர்த்தார்கள் என்பதும், அவர்கள் அனைவரும் அதற்காக தங்களின் உயிரையும் கொடுத்தார்கள் என்பதும் வரலாறு. ஆனால் மதவாதிகளும், சாதியவாதிகளும், இனவாதிகளும் தங்களுடைய அற்ப பதவி சுகத்திற்காக வரலாற்றை தங்களுக்கு ஏற்றார்போல புரட்டி எழுதுகின்றார்கள்.

தமிழ்நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கு அடுத்தபடியாக இருப்பவர்கள் தெலுங்கு பேசும் மக்கள். தமிழ் எப்படி சாதி வித்தியாசம் இல்லாமல் அனைவராலும் பேசப்படுகின்றதோ, அதே போல தெலுங்கும் நிறைய சாதி மக்களால் பேசப்படுகின்றது. அதுவும் வெறும் பேச்சு மொழியாக மட்டுமே இருக்கின்றது. பெரும்பான்மையான தெலுங்கு பேசும் மக்களுக்கு தெலுங்கை எழுதவோ, படிக்கவோ தெரியாது என்பதுதான் உண்மை. வீட்டில் பேசப்படும் ஒரு மொழியாக மட்டுமே தெலுங்கு தமிழ்நாட்டில் உள்ளது. அதை நாயக்கரும், நாயுடுவும் மட்டுமே பேசுகின்றார்கள் என்பதில்லை; தலித் மக்கள் பேசுகின்றார்கள், செட்டியார்கள் பேசுகின்றார்கள், ஆசாரிகள் பேசுகின்றார்கள், பார்ப்பனர்களிலே ஒரு பிரிவினர் பேசுகின்றார்கள்; இன்னும் நிறைய சாதிமக்கள் பேசுகின்றார்கள். அப்போது அவர்கள் எல்லாம் சீமானின் கணக்குப்படி பார்த்தால் தமிழர்கள் இல்லை. அவர்கள் அனைவரும் ஆந்திராவுக்கு ஓடிவிட வேண்டும்!

இதிலே குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் அவர்களில் பல பேர் தங்களின் தாய்மொழி தமிழ் என்றே சான்றிதழ்களில் குறிப்பிடுகின்றார்கள். அவர்களை யாரும் ஆந்திராவில் இருந்து இங்கு வந்து குடியேறியே வந்தேறிகளாக தமிழ் மக்கள் ஒருபோதும் பார்த்தது கிடையாது. ஆனால் சீமான் போன்ற இனவெறி தலைக்கேறிய சில பதவி வெறியர்களுக்கு மட்டுமே அவர்கள் தெலுங்கர்களாகத் தெரிகின்றார்கள். உழைக்கும் சாமானிய மக்கள் ஒருவனை எப்போதும் தெலுங்கனாகவோ, கன்னடனாகவோ, இல்லை மலையாளியாகவோ பார்ப்பதில்லை. சீமானைப் போன்ற கொழுத்துப்போன அரசியல் கழிசடைகள் எப்படியாவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற கொள்கையின் இடத்தில் இனவெறியை வைத்து அரசியல் நடத்துகின்றார்கள். இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்றொழித்த ஹிட்லரை தங்களுக்கான சித்தாந்தத் தலைவராக ஏற்பதில் இருந்தே அவர்கள் தங்களை இனவெறியர்கள் என்று வெளிப்படையாக சொல்கின்றார்கள்.

தமிழ்த் தேசியம் பேசும் சீமான் அவர்கள் எப்போதுமே சாதிவெறியர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டார் என்பது வரலாறு. தர்மபுரி கலவரம், மரக்காணம் கலவரம் தொடங்கி இப்போது நடைபெற்ற சேச சமுத்திரம் கலவரம்வரை அவர் யார் பக்கம் இருந்தார் என்பது வெளிப்படை. தேவர் ஜெயந்திக்கு ஆண்டு தவறாமல் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்யும் சீமான் எப்படி தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பிற்காக குரல் கொடுப்பார். சீமானின் உடம்பில் ஓடுவது மேட்டுக்குடி சாதிவெறியும், மொழிவெறியும், பதவிவெறியும் பிடித்த ரத்தமே ஒழிய, அது சாமானிய தமிழ் மக்களின் ரத்தமல்ல! எந்த அரசியல் அறிவும் இல்லாத சாமானிய தமிழ் இளைஞர்களுக்கு இனவெறியும், மொழிவெறியும் ஊட்டி அவர்களை மொழிச் சிறுபான்மையின மக்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் சீமான் அரசியல் களத்தில் இருந்தே அப்புறப்படுத்தப்பட வேண்டிய பேர்வழி ஆவார்.

- செ.கார்கி

Comments

47 comments

47
Jaleel Aleel
சீமானின் மீது உங்களுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியின் மீதுமுள்ள அரிப்பையே உங்கள் பதிவு காட்டுகிறது. நீங்கள் ஒரு ரோமத்தையும் பிடுங்க முடியாது என்பதை இங்கே உறுதியாக பதிவு செய்கிறோம். மேலும் எங்கள் ஆட்சியில் அவமான சின்னங்கள் அனைத்தும் அழிக்கப்படும்.
karthik
அன்புள்ள தோழா, சீமான் நாயக்கர் மகாலை பற்றி பேசினார்,உண்மைதான் அதில் எந்த ஒரு இடத்திலும் அதை இடிப்பதாக கூறவில்லை...
நாயக்கர் மக்களை தமிழர்கள் நேசிக்கிறோம். ஆனால் கருணாநிதி ஒரு தெலுங்கர் ... இனவழிப்பு புகார் அவர்மேல் உள்ளது ... ஆந்திர வனத்தில் பத்து தமிழர்களை கொடுமைபடுத்தி கொன்ற தெலுங்கர்களை கண்டித்து ஒரு குறளையும் முதல்வர் எழுப்பவில்லை மாறாக கருணாநிதி பத்துலட்சம் நிவாரணம் கொடுக்கச்சொன்னார்....எந்த ஒரு தெலுங்கரையாவது அடித்தோமா... சொல்லுங்கள்
மனிதநேயம் கொண்டுள்ளோம்

தெலுங்கர்கள் வாழட்டும் தோழரே ஆனால் முக்கிய பதவிகளில் அதாவது தமிழகத்தில் முப்பத்தி எட்டு லட்சம் உள்ள தெலுங்கர்கள் தமிழக சட்டமன்றத்தில் அறுபத்தி நான்கு சட்டமன்ற உறுப்பினறாக எப்படி செல்ல முடிந்தது. கர்நாடகத்தில் ஒரு கோடி தமிழர்கள் உள்ளோம் ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவி உண்டா?
முதல்வர் செயலலிதா தமிழக சட்டமன்றத்திற்குள்ளேயே கன்னடமொழியிலேயே பேசுகிறார்.

தமிழகத்தில் உள்ள பல காவல் ஆய்வாளர்கள், காவல் அதிகாரிகள் தெலுங்கர்கள் . தமிழ் அமைப்புகள் ஒரு போராட்டம் நடத்த இயலவில்லை ... எதற்கும் அணுமதி மறுக்கப்படுகிறது.. இதில் நம்மையே தீவிரவாதி பட்டம் சூட்டுகிறார்கள்.
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற திராவிட ஆட்சியே தஞ்சை நாயக்கர் மற்றும் மதுரை நாயக்கர் ஆட்சியின் தொடர்ச்சியே. இது வரலாற்றில் திராவிடநாயக்கர் ஆட்சியாகவே பதியப்பட்டுள்ளது. இதனாலேயே தமிழக திராவிடகட்சிகளின் தலைமைகள் வேற்று மொழி பேசுபவர்களாக இருந்த்தாலேயே ஈழ பிரச்சனை இந்தநிலை அடைந்த்து.
மேலும் சாதிவெறி என்று சாதாரனமாக சொல்கிரீர்களே... ஆதாரமான காணொளியை காட்டமுடியுமா? முக்குலத்தோர் உயர்ந்த சாதீயாக நீங்கள் பார்க்களாம் ... எங்களுக்கு அணைவருமே தமிழர்களே... பார்பணீய சாதீயத்தை என்றுமே வேர்ருப்போம் , அதற்கு பலியாகி தாங்கள் உயர்ந்த சாதிகள் என்று ஏமாந்துகொண்டிருக்கும் தமிழர்களுக்கு புரியவைப்போம்.
Pugal
இது முழுக்க முழுக்க சீமான் அவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சி காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது
போகிற போக்கில் அப்படியே வீட்டில்
தெலுங்கு வெளியே தமிழ் பேசும் மக்கள் மீது
என்ன ஒரு கரிசன பார்வை.
என்னமோ தமிழர்கள் மட்டும் கொள்ளையர்கள்போல
திராவிடர்கள் எல்லாம் யோக்கிய சிகாமணிபோல
பேசுவதின் உள்நோககம் தெரிகிறது
அப்பறம் வைகுண்ட ராஜன்
மணல் கொள்ளையை பற்றி பேசுகிறிர்கள்
ஏன் ஆட்சி அதிகாரம் திராவிடர் கையில்தானே
உள்ளது சீமான் அவர்களை, பாடகர் கோவனை
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய தெரிகிறது
சந்திரகுமார்
ஆந்திராவில் 22 தமிழர்கள் கூலித்தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டபோது உங்களது இடதுசாரித்தத்தைவம் எங்கே போனது?உலகிலே எங்குமே இல்லாத ஒரு மாபெரும் தேசிய இனத்தை வேற்றினத்தார் 50 ஆண்டுகளாக ஆள்வது உங்களுக்கு தெரியாமல் அவர்களது பலமான ஆளுமைக்குள் சிக்கி எமது இனம் தனது இயற்கை வளங்களை இழப்பதை கலை ,கலாச்சார விழுமியங்களை இழந்து நிற்பதைப்பார்க்கும் எந்த தமிழனும் உங்கள் பார்வையில் இனவாதியே.இடதுசாரித்தத்துவமே செத்துப்போய் விட்டது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அது இன்று எங்குமே நடைமுறையில் இல்லை
அண்ணாமலையார் திரு
2009 முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு பின்பு தமிழ் நாட்டில் , தமிழ் உணர்வு பெற்ற இளைஞர்களை , இந்தியத்துக்கு எதிராக கிளம்பிய இளைஞர்களை , மடை மாற்றம் செய்வதற்கும் , தமிழ் நாட்டில் பகுத்தறிவு சிந்தனையை ஒழிப்பதற்கும் , ஆர் எஸ் செஸ் இயக்கப்படும் இந்திய உளவுத்துறையான " ரா " உருவாக்கப்பட்ட ஒரு அஜன்ட் தான் இந்த சீமான் . முன்பு ஐகப் என்ற கிருத்துவ தொண்டு நிறுவனத்தால் பங்களூர் குணா என்பவானால் இந்த வேலை துவக்கப்பட்டது . இன்று "ரா "-பார்ப்பினிய ஆர் எஸ் எஸ் யும் சேர்ந்து "சீமான் தலைமையில் அதை செய்ய முயற்ச்சிக்கிறது ... இதில் சீமான் எந்த லங்கோடு கிழிவது உண்மை
தமிழன்
உன்னை தரக்குறைவாக பேசாமல் விட்டிருந்தால்தான் நாங்கள் கவலைப்பட்டிருப்போம் நாங்கள் தயாராகி விட்டோம் எமக்கு எம் அண்ணணைப்பற்றி தெரியும் சாதியம் பேசித்திரிகிற கீழ்த்தரமான உங்களை எல்லாம் .
திராவிடன்
எப்படி நஞ்சை கக்கு கிறார்கள் இந்த நாம் டம்ளர்சு.காட்டுமிராண்டி கூட்டங்களின் தலைவன்தான் இந்த சீமான். எங்கள் பண்பாடு பழைமையானது ஆனால் இவனுங்க பண்படவே இல்லை. ஆனால் ஒரு மேட்டாஙகாட்டு நிலத்தை சீர்படுத்தி பணபடுத்தினாலே பண்பட்டுவிடும் ஆனால் இந்த காட்டு மிராண்டிங்க பண்படவே இல்லையே. அவனுங்களுக்கு நம்மாழ்வாரை முன்னிலை படுத்த எந்த யோக்கியதை கிடையாது. இவனுங்க எல்லாம் வாசல் விளக்கு புடிச்ச வனுங்க விசயலடசுமி விசயத்துல தூ..
இராஜ்குமார்
ஒருவன் தன்னை தெலுங்கன் என்று சொல்லிக்கொண்டு, தன்னை தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவனை போனில் அழைத்து மிரட்டுவான் என்றால் அல்லது கேள்வி கேட்பான் என்றாலும் ...த்தா தான். [துணிவுள்ள தெலுங்கன், ஒரு தமிழன் பேசியதாக சொல்லப்படும் ஆதாரங்களை முன்வைத்து பேசுவது தான் நன்று. மேலும் பிறமொழி மக்களின் ஆதிக்கமும், வீட்டுகொரு மொழி, வீதிக்கொரு மொழி என்று இரண்டகம் செய்வோரின் ஆதிக்கத்தையும் அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்]
இராஜ்குமார்
சீமானை விவாதிக்கும் அதே வேலை பொறுக்கித்தனமாய் நடந்து கொண்ட அந்த மாற்று மொழிகாரனின் செயலையும் கண்டித்திருக்க வேண்டும்.
மு.முத்துக்குமார்
இந்த கட்டுரையை நான் முழுதுமாக வாசிக்க வில்ல்சி பாதி வாசித்துக்கொண்டு இருக்கும் போதே ஏராளமான பொய்களும் புரட்டுகளும் கண்ணில் தென் படுகின்றன, சீமான் திருப்பூர் மாநாட்டில் நாயக்கர் மகால் தமிழர்களின் அவமான சின்னம் என்று தான் சொன்னாரே "இடிப்பேன்" என்ற வார்த்தையை சொல்லவே இல்லை சொன்னதை நீரூபிக்க முடியுமா..? வெள்ளையர்கள் கட்டிய ஜார்ஜ் கோட்டையோ, ரயில் நிலையமோ,மற்ற கட்டிடங்களோ எந்த ஒரு சாதியின் பெயரிலும் இயங்க வில்லை..! சீமான் எந்த இடத்தில் எப்போது முருகன் பார்ப்பனுக்கு பிறந்தவர் என்று சொன்னார் என்று நீரூபிக்க முடியுமா..? சீமான் எப்போது சிவன் முருகனின் தந்தை என்று சொன்னார் என்று நீரூபிக்க முடியுமா..? இவ்வாறு சீமான் சொல்லாத பல விசயங்களை சொன்னதாக பபொய்யாக வெளியிட்டுள்ளதால் இந்த இணைய தளத்தில் வந்துள்ள மற்ற தகவல்களும் பொய்யாக தான் இருக்குமோ என்ற ஐயம் வருகிறது..? இதை எழுதிய கூமுட்டைக்கு சீமான் மீது தனிப்பட்ட வன்மத்தின் காரணமாக எழுதியுள்ளான் என்றால் கேற்றுவும் அதை அங்கிகரித்து வெளியிடுகிறது என்றால் இதை எழுதியவனின் அறிவும் கீற்றின் அறிவும் ஒன்றுதான் போல..நாம் தமிழர் கட்சியின் கொள்கையை விமர்சிப்பது அறிவாலித்தனம், இது தான் கொள்கை என்று கற்பனை செய்து கொண்டு நீங்களாகவே விமர்சிப்பது அடி முட்டாள் தனம்...
மணிகண்டன்
ஐயா நீங்கள் பேசுவது அண்ணனை தனிப்பட்ட முயற்சியை மட்டும் அல்ல,அவரின் நிலை தற்போது எந்த அளவு உயற்ந்துள்ளார் என்பது தெறிகிறது,எந்த அயல் நாட்டு மக்களையும் தமிழர்கள் கொடுமை படுத்தியதாக கேள்வி பட்டுள்ளீர்களா ஆனால் தமிழனை மட்டும் தான் தனிப்பட்ட முறையில் கொடுமை படுத்துகின்றனர்,அண்ணன் சீமானை பேசுவதற்கு துளி கூட தகுதி இல்லை உங்களுக்கு.அண்ணன் சீமானின் வளர்ச்சி எந்த அளவிற்கு உயற்ந்துள்ளது என்பது தங்களின் தீய வார்தைகளின் மூலமாகவே தெறிகிறது.இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை,ஒன்றாக வேண்டும் தமிழ் வென்றாக வேண்டும் தமிழர்கள்,நாம் தமிழர்
Mohan
Do not bluff about Raja raja choolan
மு. ஆசைத்தம்பி தமிழன்
நாம் தமிழர் கட்சி சீமான் திருமலை நாயக்கர் மகாலைத் தமிழனின் அவமானச் சின்னம் என்று பேசியதால், தேனி மாவட்ட நாயக்கர் முன்னனி சாதிச்சங்க அமைப்பைச் சேர்ந்த செகதீசன் என்பவர் தொலைபேசியில் சீமானோடு தேவை இல்லாமல் பேசியுள்ளார். அதற்கு, சீமனும் சினம்கொண்டு “வைடா ஃபோனை ங்கோத்தா...!” என்ற முழுமை பெறாத பொருளற்ற ஒர் உணர்ச்சி சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இப்படி அரைகுறையாக வெளிவந்த ஒரு சொல்லை முழுமையாக்கிப் பொருள்கொண்டு கொச்சைப்படுத்துவது விதண்டாவாதச் செயலாகும். இதில் ஏதும் பெரிய குற்றம் இருப்பதாக நான் கருதவில்லை. அவர் ஓர் அமைப்பைச் சேர்ந்தவர் என்கிறபடியால் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கொண்டு அது தொடர்பாக, சீமானிடம் பேசியிருக்கவேண்டும். அதுவே முறையாகும்; சரியான அணுகுமுறையுமாகும். அதை விட்டுவிட்டு மனம் கொந்தளித்துக்கொண்டிருக்கும் ஒரு தமிழனிடம் வாய் கொடுத்தால் இதுதான் விளைவு! நிற்க. நாங்கள் இந்த மண்ணுக்குரியவர்கள் இந்த மண்ணை ஆண்ட எங்கள் முப்பாட்டனுக்கோ பாட்டனுக்கோ ஒரு மகாலோ மணிமண்டபமோ இல்லாதபோது எங்களை ஆண்டு அடிமைப்படுத்திய ஓர் அந்நியனுக்கு இங்கே ஒரு மகால் இருப்பது கண்டு ஒவ்வொரு தன்மானத் தமிழனுக்கும் கோபம் கொப்பளிக்கத்தான் செய்யும்! அது இயற்கை! உணர்ச்சிவசப்பட்டுக் கோபம் கொப்பளிக்கும்போது இப்படியான சொற்கள் வாயிலிருந்து வருவது இயல்பு!
இதை வைத்துக்கொண்டு அவர் அரசியல் நாகரிகம் அற்றவர் என்றும் யோக்கியதை அற்றவர் என்றும் பேசுவது வேலையற்றவர்களின் பழிசுமத்தும் சூழ்ச்சியென்று சீமானை அறிந்தவர்களுக்குப் புரியும்.
 
அவர் முன்பு திராவிட சூழ்ச்சி அறியாத நாளில் கழகத்தில் இருந்தது உண்மைதான். திராவிடமும் ஆரியமும் மறைமுகமாகத் தமிழர்களுக்கு எதிராக இயங்குவதையும் தமிழரின் அடையாளத்தை வேரரறுப்பதையும் உணர்ந்த பின்பு அதற்கு எதிராகச் செயல்படத் தொடங்கினார். இதில் என்ன தவறிருக்க முடியும்? தன் மொழி அழிக்கப்படுவதையும்! தன் இனம் சீரழிக்கப்படுவதையும்! தன் நாடு கொள்ளையடிக்கப்படுவதையும்! அதற்குக் காரணமானவர்களை எதிர்ப்பது மண்ணின் மைந்தனான அவரது கடமை அது!
ஈழப்போர் நடந்துகொண்டிருந்த நேரம் அது அன்றிருந்த முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் செய்த துரோகத்தை அறிந்து மனம் நொந்திருந்த வேளை, எதிர்கட்சி தலைவர் அம்மையார் செயலலிதா தம்மை ஆதரித்தால் தனி ஈழம் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்தார். அதை நம்பி அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டது உண்மைதான். கால ஓட்டத்தில் அதுவும் கானல் நீர் என்று அறிந்த பின்பு சீமானின் அதிமுகாவுக்கான ஆதரவு எதிர்ப்பாக மாறியது. இது அவர் பேசும் காணொளிகளைப் பார்த்தால் புரியும்.
 
தெலுங்கரையும் கன்னடரையும் மலையாளியையும் ஊரைவிட்டுத் துரத்த வேண்டும் என்று அவர் சொல்லவில்லை! யார் வேண்டுமானாலும் இங்கே வாழலாம் ஆனால் ஆளும் உரிமை தமிழர்க்கே உரியது! என்பதே அவரின் வாதம் அல்லது கொள்கை! இது குற்றமாகுமா?
 
சீமான் முதலாளியம் பேசினார் என்று கூறுகின்றீர்கள். எப்படியென்று நீங்கள் தெளிவாகச் சொல்லவில்லை.
 
உண்மையை மக்களுக்கு உரக்கச் சொல்வதென்பது உங்களுக்கு முக்கி முக்கிப் பேசுவதுபோல் உள்ளது போலும்! உண்மையைச் சொன்னால் உரைக்கும் எவனுக்கும் அப்படித்தான் இருக்கும்!
 
தேர்தலுக்காக அரசியல் செய்யும் கட்சியல்ல நாம் தமிழர் கட்சி! இன விடுதலைக்காகவும்! மொழி விடுதலைக்காகவும்! மண்ணின் விடுதலைக்காகவும்! கொள்கை முழக்கம் செய்து அரசியல் செய்யவந்த கட்சி நாம் தமிழர் கட்சி!  கன்னடர்களையும் தெலுங்கர்களையும் மலையாளிகளையும் எதிரிகளாகக் கட்டமைத்து அரசியல் நடத்தப்படுகிறது என்பது விதண்டாவாதம். கன்னடன், தெலுங்கன், மலையாளி இவர்களை  அடித்து வாக்குப் பெறவேண்டும் என்பதுதான் நாம் தமிழர் கட்சியின் நோக்கமென்று எழுதுவது பல்லினங்களுக்கிடையே காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் செயலாகும்! எவன் தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் தமிழ் மண்ணுக்கும் கீழறுப்பு வேலை செய்கின்றானோ அவன் தமிழனுக்கு எதிரி! எனவே, இது திராவிட மாயையிலிருந்து தமிழனை மீட்டெடுக்க விடுதலைப் போராட்ட அரசியல்!
 
நாம் தமிழர் கட்சியின் கொள்கையும் நோக்கமும் தமிழ்நாட்டைத் தமிழனே ஆளவேண்டும் என்பதே! வேட்பாளர்களாக நிறுத்தப்படும் ஒவ்வொருவரையும் பார்த்தாலே விளங்குமே! அவர்கள் யாவரும் ஏழை எளியவர்களின் பிள்ளைகள்! முதலாளிகளின் கைப்பாவையாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் செயல்படுவதாகச் சொல்வது அவதூறாகும்!
 
தென்னிந்தியர் நடிகர் சங்கம் என்பதை, தமிழ் நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்து அதற்கு ஒரு தமிழன்தான் தலவனாக வேண்டும் என்று சொல்வதென்பது குற்றமாகுமா? கூடாதா? அண்டை மாநிலங்களில் அவரவர் மொழிக்குரியவரே தலைவராகவும் அவர்களின் சங்கத்தின் பெயர்களும் தெலுங்கு நடிகர் சங்கம், கன்னாடா நடிகர் சங்கம், மலையாளி நடிகர் சங்கம் என்றிருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தென்னிந்தியர் நடிகர் சங்கம் என்றிருக்க வேண்டும் என்பதே கேள்வி! தமிழ்த்திரைப்படத் துறையிலும் அனைவரும் தமிழராகவே பணியாற்ற வேண்டியதுதானே! என்று கூறியுள்ளீர்கள். அப்படியான சிந்தனையும் செயலும் தொடக்கம் முதலே தமிழனுக்கு இருந்திருந்தால் அண்டை மாநில கலைஞர்கள் இங்குக் கோடி கோடியாகப் பணம் சம்பாதித்திருக்கவும் முடியாது! கொடிகட்டிப் பறந்திருக்கவும் முடியாது! வாழ வைத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மை இல்லாத அந்நிய கலஞர்களின் இலட்சணத்தைத்தான் பார்க்கின்றோமே! நிற்க. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தபின் அதுவும் எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்பது நடைமுறையாகும்!
 
காவிரி, முல்லை பெரியாறு, ஈழம் போன்றவை பற்றிப் பேசாமல் நயந்தாராவைப் பற்றியும் நக்மாவைப் பற்றியுமா பேச முடியும்? அது தமிழ்மக்களின் நெடுங்காலப் பிரச்சினைகள்! இன்றியமையாத அடிப்படைத் தேவைகள்! அதுபற்றிப் பேசித் தீர்வு காண முயல்வதே கட்சியின் நோக்கமாக இருக்கவேண்டும்! ஒரு தேசிய இனத்தின் மொழி அழிக்கப்பட்டு வருவதையும்! அந்த இனம் பல வழிகளில் அழிக்கப்பட்டு வருவதையும்! அந்த இனத்தின் நாட்டு வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதையும் அந்த இனத்தவர்க்குச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது மொழி வெறியையும்! இன வாதத்தையும் தூண்டும் செயலாகும் என்பது உங்களின் அறியாமையையும் தெளிவற்ற சிந்தனையையும் தெற்றென விளக்குகிறது!
உங்கள் பார்வைக்கு நாம் தமிழர் கட்சி என்பது முதலாளியம் பெற்றெடுத்த பிள்ளைகள்! அவர்களின் நோக்கம் பாட்டாளி வர்க்க உணர்வைச் சிதறடிப்பது!  
அதற்காக அவர்கள் எதையும் செய்யத் துணிவார்கள்! இதுதான் நீங்கள் நாம் தமிழர் கட்சிபற்றி உங்களுக்குள்ளே ஒரு கணக்குப் போட்டு வைத்திருக்கும் முடிவு. இதிலிருந்தே தெரிகிறதே உங்களின் அடையாளம்!
 
முருகனின் கதையையும் சிவனின் கதையையும் வைத்து, சீமானைப் பார்ப்பனனின் அடிமை என்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள்! நல்ல ஆராய்ச்சி! திருமுருகாற்றுப்படை தான் முருகன் சிவன் பற்றிப் பேசுகின்ற நூல்கள் என்று நினைக்கின்றீர்கள். அதற்கும் முன்னால் இருந்த தமிழ் நூல்கள் மறைந்து போன வரலாறு என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?
தமிழ் இலக்கியத்தின் காலம் மூவாயிரம் ஆண்டுகள்தான் என்று எண்ணுகின்றீர்களா?
 
மீனாட்சி அம்மன் கோயில், திருவரங்கம் கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில், காஞ்சி ஏகம்பரீசுவரர் கோயில் போன்றவை திருமலை நாயக்கர் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருந்த போது கட்டப்பட்ட கோயில்கள். வழிப்பாட்டுத் தலங்கள் என்பது மொழி இன பேதம் இல்லாது அனைவரும் ஒருமையுடன் ஒன்று கூடும் இடம். மகால் என்பது அப்படி அல்ல! ஓர் இனம் ஐநூறு ஆண்டுகளாக அந்நியர்க்கு அடிமைப்பட்டுக் கிடந்த நினைவை அறிவுறுத்திக்கொண்டே இருக்கும் அடையாளச் (அவமானச்) சின்னம்! இதுதான் கோயிலுக்கும் மகாலுக்கும் உள்ள வேற்றுமை!
 
அந்நியர்கள் வெள்ளையர்கள் கிறித்தவர்க்கான கோயில்தான் செயின்ட் சார்சு கோட்டை. அது ஒரே மதத்தைச் சேர்ந்த பல்லினத்தவர்கள் ஒன்று கூடும் இடம்! அது ஆண்டதற்கான அடையாளம் அல்ல! மற்றும் அவர்களால் தொடர்வண்டி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், நூலகங்கள் போன்றவை மக்கள் பயன்பெறவும் பயன்பாட்டுக்கும் கட்டப்பட்டவை! அவைகளையும் மகாலையும் ஒப்பிட்டுப் பேசுவது விதண்டாவாதம்!
 
இராச ராச சோழன் கோயில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்தான் என்று சும்மா சொன்னால் எப்படி? மெய்ப்பித்துக் காட்டுங்கள்!
 
விடுதலைப் போராட்ட வீரர்கள் எல்லாம் நாயக்கர்களும் தெலுங்கர்களும் தானா? தமிழர்களே இல்லையா? இருந்தும் மறைக்கப்பட்டு வந்துள்ளார்கள்! வீரப்பாண்டி கட்டபொம்மன் போன்றவர்களைத் தமிழர்களாகவே காட்டி தமிழ் விடுதலைப் போராளிகளை இருட்டடிப்புச் செய்வது! இதுதான் திராவிட அரசுகள் கால காலமாகக் கையாண்டுவந்த சூழ்ச்சி! யாரும் இங்குப் பதவிக்காக வரலாற்றைப் புரட்டியும் திரட்டியும் எழுதவில்லை! தக்க ஆதாரங்களோடுதான் பேசிவருகின்றார்கள்! வெறுமென இதை இனவாதமென்றோ சாதிய வாதமென்றோ மதவாதமென்றோ கதையைத் திரித்துக் கூற வேண்டாம்!
 
தமிழ் எப்படி இன வேறுபாடு இல்லாமல் பேசப்படுகின்றதோ அது போலத் தெலுங்கும் இன வேறுபாடு இல்லாமல் பேசப்படுகின்றது. விழுக்காட்டுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் தமிழே அதிகப்படி பேசப்படும் மொழியாகும். ஆயினும் தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்களாகிவிட முடியாதே! எப்படி ஒரு தமிழர் தெலுங்கு பேசுவதால் தெலுங்கராக முடியாதோ! எப்படி ஒரு தெலுங்கர் தமிழ் பேசுவதால் தமிழராக முடியாதோ! அது போலத்தான். யாரையும் அவரவர்கள் நாட்டுக்கு ஓடச் சொல்லவில்லை நாம் தமிழர் கட்சி சீமான்! ஆந்திராவிலும் பல லட்சம் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பது மறந்தா போய்விடும்!
 
பிறப்பால் தெலுங்கராயிருந்தும் தன்னை ஒரு தமிழராய்ச் சான்றிதழில் குறிப்பிடுவது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பது சொல்லவும் வேண்டுமோ? இதுவே ஆந்திராவில் ஒரு தமிழன் பிறப்பால் தமிழனாயிருந்து தன்னை ஒரு தெலுங்கனாகக் காட்டிச் சான்றிதழ் எடுக்க முடியுமா? இதுபோன்ற ஆள்மாறாட்டம் எல்லாம் நடைபெறக் கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாட்டைத் தமிழனே ஆளவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி முன்னெடுத்திருக்கும் புதிய மாற்று அரசியல்! இது இனவாதம் என்று சொல்பவர் ஒரு தமிழர் அல்லாதவர் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்! எனவே இதுபோன்ற வெறுங்கூச்சலுக்கெல்லாம் நாங்கள் செவிசாய்த்துக்கொண்டிருக்க நேரமில்லை!
 
மொழி அழிந்த நிலையில்! இனம் சீரழிந்த நிலையில்! மண் களவு போன நிலையில்! இங்கு வாழும் மண்ணின் மைந்தர்கள் ஏதுமற்ற ஏதிலிகளாகக் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்! அண்டை மாநிலத்தவர்கள் இங்குக் குடியேறி இங்குள்ள வளங்களைச் சுரண்டித் தாம் செல்வந்தர்களாக வாழ்கின்றார்கள்! ஏன் இந்த நிலை? வந்தாரை வாழவைத்து மகிழ்ந்ததும்! மனம் திறந்து அவர்களை ஆளவிட்டு நம்பியிருந்ததுமே காரணம்! திராவிடர்கள் ஆட்சி இனித் தொடர்ந்தால் தமிழ் இனம் அழிவது திண்ணம்! தமிழ் மக்களுக்கு இந்த விழிப்புணவைக் கொடுத்தால் அது இனவாதம்! நாம் தமிழர் ஆட்சிக்கு வந்த மறுகணமே உம்மை முதலில் அப்புறப்படுத்த வேண்டியுள்ளது! தேவையற்று ஏன் வம்புக்கு வருகின்றீர்கள்? வேறு வேலை ஏதும் இருந்தால் போய்ப் பாருங்கள்!

மு. ஆசைத்தம்பி தமிழன்
 
aravind
கீற்று இணையதளத்தில் நேற்று சீமானையும் தமிழ் தேசியத்தையும் கீழ்த்தரமாக விமர்சித்து ஒரு கட்டுரை வெளியானது. அந்த கட்டுரையில் ராஜ ராஜ சோழன் கோவில்களில் விபச்சாரம் செய்தார் என்றும் தமிழகத்தில் உள்ள பல கோவில்களை கட்டியதே நாயக்கர்கள் தான் என்றும் குறிப்பிடபட்டிருந்தது.

"சீமான் அமைக்க நினைப்பது தமிழ்த் தேசியமா? தறுதலை தேசியமா?" என்ற தலைப்பில் வெளியான அந்த கட்டுரையில் ராஜ ராஜ சோழன் கட்டிய கோவில்களை விபச்சார விடுதிகள் என்றாற்போல் எழுதியவரை பாராட்டுகிறேன். ஏன் என்றால் இப்படி எழுதுபவர்கள் தான் திராவிடத்தின் உண்மையான முகத்தையும் தமிழர்களின் தற்போதைய இழி நிலையையும் வெளிக்கொண்டு வர உதவியாக இருக்கிறார்கள். கீற்று இணையதளத்தில் ராஜ ராஜ சோழனை விமர்சித்து எழுதியதை போல், கர்னாடகாவில் கிருஷ்ணதேவராயரை பற்றியும், மராட்டிய மண்ணில் சிவாஜியை பற்றியும் எந்த எதிர்கருத்தும், எதிர்ப்பும் இல்லாமல் சர்வ சாதரணமாக எழுதிவிட முடியுமா?

அங்கே முடியாது, ஏன் என்றால் கன்னடனுக்கும் மராடியனுக்கும் தன் வரலாறு ஏதோ ஒரு அளவுக்கு தெரியும், அதை தவிர தன்மானம் சுயமரியாதை என்று நமக்கில்லாத பல உணர்வுகள் அவர்களுக்கு இருக்கு.

அந்த கட்டுரை எழுதியவர் என்னமோ நாயக்கர்கள் தமிழகத்திற்கு திருப்பணி செய்ய வந்தவர்கள் போல் சித்தரித்து எழுதி இருக்கிறார். கோவில்களை நிர்மாணிப்பவர்களுக்கும் கட்டியவர்களுக்கும் வித்தியாசம் இல்லையா? நாயக்கர்கள் என்ன தமிழர்களுக்கு கட்டிட கலை சொல்லி கொடுக்கவா வந்தார்கள் ? நாயக்கர்கள் என்ன அவர்களின் அப்பன் வீட்டு சொத்தை விற்றா இந்த திருப்பணிகளை செய்தார்கள் ? எங்களை அடிமை படுத்தி, எமது பொருளாதாரத்தை சுரண்டி, அதில் இருந்து செய்த பணிகள் தானே இவைகள்.

பாளையக்காரர் முறையின் கீழ் இன்றைய சாதிய கட்டமைப்பை வளர்த்து விட்டவர்கள் நாயக்கர்கள் தானே? இன்று சாதி வெறியர்களுக்கு கொடி பிடிக்கும் திராவிடர்களே பல மேடைகளில் பார்ப்பனியத்தை வளர்த்து விட்டதே நாயக்கர்கள் தான் என்று குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.அதை பற்றி எல்லாம் எழுத உங்களுக்கு திராணி இல்லையா?

அது மட்டுமா, சாதியையே ஏதோ சீமான் தான் கண்டுபிடித்தார் போல வேறு எழுதியிருக்கிறார்.

இதுவரை சீட்டு அரசியலுக்காக சாதிய கட்சிகளை வளர்த்து விட்டது சீமானா? திராவிடமா? அதை பற்றி எழுத உங்களுக்கு திராணி இல்லையா?

கட்டபொம்மனையும் திருமலை நாயக்கரையும் பற்றி பேச சீமானுக்கு என்ன தகுதி இருக்குது என்று கேட்கும் உங்களுக்கு, ராஜ ராஜ சோழனை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?.

கட்டபொம்மனையும், விடுதலைக்காக போராடிய பல வீரர்களை எல்லாம் இன்று சாதி குறியீடாக மாற்றி, அவர்களின் பெயரை பயன்படுத்தி சாதி கட்சி தொடங்கி, சாதி வெறியாட்டம் ஆடி கொண்டிருக்கும் சாதி வெறியர்களை வளர்த்து விட்டது யார்? சீமானா? திராவிடமா?

திராவிடத்தின் வளர்ச்சி தான் இன்று தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி பேசும் சீமானிடம் தொலைபேசியில் நான் இந்த சாதியின் தலைவன் என்றும் நான் தெலுங்கன் என்றும் அடையாளபடுத்திகொண்டு ஒரு சாதி வெறியனை பேச தூண்டிவிட்டிருக்கிறது.

திராவிடர்கள் சாதிக்கெதிரானவர்கள் என்றால் ஏன் இப்படி பட்ட சாதிய அடையாளம் தாங்கும் அமைப்புகளை வளர்த்து விட்டார்களாம் ?

கேவலம் கிருஷ்ணதேவராயரின் கைகூலி நாயக்க தலைவர்களுக்கு பரிந்து பேச ராஜ ராஜ சோழனை இழிவுபடுத்துவதா? இது தான் திராவிடத்தின் உண்மை முகம்

இதற்க்கு பெயர் தான் திராவிடமா? நீங்கள் பேசுவது திராவிட அரசியலா தேவிடியாள் அரசியலா ? From fb.
காட்டுமிராண்டி
பார்பனரை நீ என்ன காரணகளுக்காக எதிர்தாயோ அதே காரணங்கள் இதற்கும் பொருந்தும்.

திராவிட ஒட்டுபொருக்கிகளே
V.PANDY
Nice article. I congratulate the author...
செந்தமிழன்
சீமானைக் குறை சொல்ல கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவரகளில் பெரும்பாலோர் தெலுங்கைத் தாய் மொழியாக் கொண்டோரும் சாதி அரசியலை முன்னெடுத்துச் செல்வோரும்தான். ஆக இந்தக் கட்டுரையாளரும் இந்தப் பிரிவுள் ஒருவரே....
Sasikumar Bose
சீமான் பேசியது தவறாக இருக்கட்டும், அதற்கான பாதிவு அவரை சாற்றி பேசுவதாக இருப்பதும் தவறில்லை... சைடு கேப் ல வச்சிங்க பாரு ஆப்பு.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நாயகர்களால் கட்டபட்டதுன்னு.. தப்பு நண்பா, இப்படித்த உங்களோட முன்னோர்கள் பல விசயங்கள் நாங்கள் பண்ணியதுன்னு சொல்லி தமிழனின் அடையாளத்தை அழித்தார்கள், அதயே தங்களும் செய்ய முயல்கிரிர்கள்.. மீனாட்சி அம்மன் கோவிலை கட்டியது நாயகர் அல்ல, வேறு அன்னியனால் சிதைக்கப்பட்ட கோவிலை சீரமைத்தது மட்டுமே நாயகர்கள்.. கூருடுதனமான வார்த்தைகளால் உண்மைய மறைக்க வேண்டாம், அதுக்காக சீமான் பேசுனது சரி அவன ஏதும் கேக்க வேண்டனு சொல்லல... அனால் நீங்க பதிவிட்டது தவறு, திரும்ப இதுபோல பண்ணவேண்டாம், எங்களோட அடையாளத ஆழிக்க முற்பட வேண்டாம் திராவிட அன்பரே..
Surya
Very nice article Mr. Karki. Keep it up.
குமாரசாமி
இது வரை கீற்றில் இரு கருத்துக்கு எதிர்ப்பாக அல்லது ஆதரவாக இத்தனை பேர் வந்ததில்லை. இரண்டு மூன்று பேர்களைத் தவிற மீதிபேர் மிகவும் ஆவேசத்துடன் இருப்பது தெரிகிறது. இதிலுள்ள ராஜராஜ சோழனுக்கான வக்காலத்தும், அவன்மீதான குற்றச்சாட்டும் பெறும் எதிர்கொள்ளல்கள், இதற்கு முன் வந்த குற்றச்சாட்டுகளுக்கு இல்லை. கீற்று என்று ஒரு இணையதளம் இருப்பதும், அதறுகு பதில் எழுதுவதும் இது போன்ற நிகழ்வுகளுக்குத்தான் என்றால் அது ஆரோக்கியம் இல்லாத ஓரு நிலையே..
venkat
ஆமா சீமான் Christian தானே இவர் எப்படி தமிழர்
லிவி
//கோவிலில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்த ராஜராஜ சோழனை என்னவென்று சொல்வது?//

இதற்கான ஆதாரத்தை வையுங்கள். அல்லது இந்த கருத்தை மீளப் பெறுங்கள். தவறாக தமிழ் மன்னனைச் சொல்வது சரியல்ல.
Alagarraja
அன்பு தோழர் கீற்றுவிர்க்கு ,,

நீங்கள் சீமானுக்கு எதிராக இவ்வளவு தூரம் பொங்கவெண்டிய தருணம் இது என்று நீங்கள் கருதும் போது , தங்களின் நடுநிலைமை கேள்விக்குறியாகும் அளவுக்கு மீறிய பொங்கல் தெரிகிறது.

நீங்கள் குற்றம் சாட்டும் காணொளியில் நாயக்கர் மகாலை இடிப்பதாக எந்த வார்த்தை பிரயோகமும் இல்லையே , பிறகு ஏன் இல்லாததை சொல்லி ஒரு பதற்ற நிலை உருவாக்க முயல்கிறீர்..

ஆண்ட மன்னர்களில் எந்த மன்னருக்கும் சரியான வரலாறு இல்லை , அப்படி புதிரான நிலை உருவாக்கியதில் திராவிட ஆட்சியாளருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது ,,

திராவிடம் என்ற போர்வையில் ஆட்சி செய்துகொண்டிருக்கும் தெலுங்கு முக்கியஸ்தர்கள் இப்போது பதற்றம் அடைய காரணம் ஏனோ !
50 ஆண்டுகளாக இந்த தமிழர் நிலத்தில் நடந்த துரோகங்களுக்கு ஆண்ட ஆட்சியாளர்கள் விலைகொடுக்கும் தருணம் வரும் காலம் இது..
இதில் இந்த மண்ணை நேசிக்கும் தெலுங்கர்கள் சீமானை ஆதரிப்பது உண்மை , நான் உட்பட ,,

இந்த மண்ணுக்கு சம்பந்தம் இல்லாத ஆந்திராவில் இருந்து தற்போது குடிவந்து இந்த மண்ணையும் மக்களையும் வஞ்சிக்க நினைக்கும் சில வாங்கி தின்னும் சாதி தலைவர்கள் தான் இந்த மண்ணிலே பூர்விகமாக ஆண்டாண்டு காலம் வாழும் தெலுங்கு பேசும் மக்களை வஞ்சிக்கின்றனர் .. இந்த மண்ணை தங்கள் உயிராக நேசிப்பவர்களை . இந்த மண்ணின் பூர்விக குடி மக்கள் மீது வெறுப்பு வர வைக்கும் சூழ்ச்சி செய்கின்றனர்.

50 ஆண்டு கால ஆட்சியில் தமிழ் மக்களோடு சேர்ந்து பெரும் பாதிப்பை அடைந்துள்ளது தெலுங்கு , கன்னடம் , மலையாளம் பேசும் மக்களும் தான் .. அதிலும் இந்த மண்ணையும் இந்த நிலத்தையும் உயிராக நேசிக்கும் மக்களை சில கேடு கெட்ட தெலுங்கு பேசும் ஜென்மங்கள் வஞ்சிக்கின்றனர் என்பதை எழுதும் தைரியம் உங்கள் நடுநிலைமை பேனாவிற்கு இருக்கிறதா ??

சீமான் அவர்கள் பேசும் தமிழ் தேசியம் தான் இங்கே வாழும் பிறமொழி பேசும் மக்களுக்கும் பாதுகாப்பு தரும் எம்பது நிதர்சனமான உண்மை.
சீமான் இந்த மண்ணை கைப்பற்ற தெலுங்கின மக்கள் கண்டிப்பாக அவர் உடன் இருப்போம் , அவர் பேசும் தமிழ் தேசியம் 50,000 பழைமை ,, இதில் அந்த பழைமையை உணரும் தெலுங்கு மற்றும் இன்ன பிற மொழி பேசும் மக்கள் தங்களை தமிழர்களாகவே பாவிக்கின்றனர் ,
இந்த மண்ணும் மக்களும் நமக்கானது இல்லை என எண்ணுபவனே தெலுங்கு வெறியனாக தமிழர் நிலத்தையும் தமிழர்களையும் வஞ்சிக்கின்றான்.

அந்த திராவிட போர்வை போர்த்தி தெலுங்கு வெறி காட்டுபவனை விட தமிழனாக உணர்ந்து இந்த மண்ணை துரோகிகளிடம் இருந்து மீட்டு சீமான் போன்ற தமிழனிடம் ஒப்படைப்பது என்பது இந்த நம்மை காக்க நினைக்கும் மற்று மொழி பேசும் அனைத்து இனங்களுக்கும் இருக்கும் தலையாய கடமை ஆகும் .
Murugan
தமிழன் கடலூர் மாவட்டதில் புயலால் வீடு இழந்து நிற்கிறான் ,இந்த வந்தேறிங்க 5400கிலோ தங்கத்த வித்து சேதாரம் என்ற பெயரில் கொள்ளை அடிச்சது உங்களுக்கு தெரியுமா கீற்று
வாய்மை
தமிழ் தேசியம் பேசுபவர்கள் நாவடக்கத்தோடு. | பேசுவது நலம். மற்றும் நாயக்கர் மகாலை இடிக்க கூடாது. அதன் பெயரை யாவரும் கேளிர் என்று வைத்து விடலாம். ஏனெனில் எந்த ஊருக்கோ / தெரு வுக்கோ ஜாதிப்பெயர் சடாது என்று சட்டமே உள்ளது.
Ajith
How Vira Pandyan saved madurai meenakshi amman temple from malik kafur?

1. Handed over all the treasures belonging to the Meenakshi Temple and Madurai Treasury which included 96,000 gold coins and precious stones
2. Half of the rice rationed inside the walls of Madurai
3. All the elephants and horses available with Pandyas.

In return, Vira Pandyan was promised the release of his brother, Sundara Pandyan and safety of the deities in the inner sanctum of the Meenakshi Temple....

Madurai Meenakshi temple was built by the pandya kings not telugu nayakar kings .... do not try to re-write history on your own terms ... telugu nayakkar kings only performed maintenance work with the money looted from Tamils and it does not mean that it was built by telugu nayakkar... Big temple is not only the pride of chola's it is the pride of Tamils... finally how did telugu kattabooma nayak belong to the pandyan dynasty... please thing and write articles . better luck next time
Tamizhselvan.S.S.
Dear Karki,

I have already replied against the article of The Great Dr.APJ
Again I am telling / requesting you to consult a psychiatric immediately. or
If you try to propagate your self a great author without proof (like refer page no Book Name etc) don't write / (kirukkathey) any thing.
About us you are also like one more seeman( Araivekkadu)
Ramesh.packirisamy
விமர்சிப்பதில் தவறில்லை ஆனால் அதில் உங்களது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டுவது நல்ல எழுத்தாளர்க்கு அஅழகர்மலையான!!!. நீங்கள் திறமையாக எழுதுவதாக நினைத்து இருந்தால் அது மிகவும் அபத்தம். உங்கள் எழுத்தில் பிரிவினைவாதம் நன்றாக தெரிகிறது. எங்களை போன்ற போன்ற நடுநிலைவாதிகள் ஒருபோதும் உங்கள் மன ஓட்டங்களை அறியாமல் இருக்க வாய்ப்பில்லை...!
Raja
தமிழர் வரலாற்றில் தெலுங்கர்கள் செய்த தகிடுதத்தங்கள் சொல்லி மாளாது. வரலாற்றை மாற்றி, தங்கள் சுய அடையாளம் மறைத்து தமிழராக உருமாறி அவர்கள் காட்டிய, காட்டும் குரளிவித்தைகளை சமீபகாலம் வரை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவர்களில் முக்கியமானவன் நமக்கெல்லாம் வீரபாண்டியக் கட்டப்பொம்மனாக பிஆர் பந்துலு நாயக்கனால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட கெட்டிப்பொம்மு நாயக்கன். பால்வாடி பொடிசுகளின் மேடைநாடகங்களிலும், பல்லுப்போன பெரிசுகள் டீக்கடைகளில் சிலாகித்து ஆத்தும் சிறப்புறைகளிலும் "வானம் பொழிகிறது, பூமி விளைகிறது" புகழ் வீரபாண்டியக் கட்டப் பொம்மனாக சித்தரிக்கப்பட்ட கட்டப்பொம்முவின் கதை உண்மையென்றே நம்பியவர்களுள் அடியேனும் ஒருவன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு முறை திராவிட ஆதிக்கம் தொடர்பான கட்டுரைகளை இணையத்தில் தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தேன். தேடலின் முடிவில் அது தெலுங்கர்களின் வரலாற்றில் போய் நின்றது. தெலுங்கர்களின் வரலாற்றை அவர்களின் பக்கங்களில் தேடியபோது கட்டப்பொம்மனைப் பற்றிய அவர்களின் பெருமை பீத்தக்கலய உரைகளை வாசிக்க நேரிட்டே விட்டது. அன்று துவங்கிய மொம்முநாயக்கன் பற்றிய தேடல் இன்றும் முடிவுறவில்லை. ஒன்று மட்டும் உறுதி. அவன் பாண்டிய மன்னன் இல்லை. பாண்டிய மன்னன் எவனும் அவனுக்கு அப்பனாக இருந்ததும் இல்லை. எனினும் அவன் ஒரு சுத்தத் தெலுங்கன் என்பதையும், வெள்ளையருக்கு அஞ்சி பனிந்தவன் என்பதையும், ஊர்புகுந்து திருடிய கொள்ளைக்காரன் என்பதை நிரூபிக்கும் சான்றுகள் வரையுமாவது கிடைத்து விட்டது.
அனைத்தையும் புத்தகமாக்கும் முன்பு அவற்றை சுருக்கி மக்கள் மன்றத்தில் வைக்கின்றேன். தெலுங்கு நாயக்கர்கள் புளகாங்கிதப்பட்டு போற்றிப் புகழும் கட்டப்பொம்மன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரனா அல்லது டவுசரை ஈரமாக்கிக் கொள்ளும் தொடைநடுங்கி ஓடுகாலியா என்பதை வரும் அத்தியாயங்களைப் படித்தபின்பு முடிவெடுங்கள்..
Raja
எங்கு ஒளிந்திருந்தது பாஞ்சாலங்குறிச்சி?
தமிழகத்திற்கு வந்து சேர்ந்த தெலுங்கர்களை குறைந்தது மூன்று வகைப்படுத்தலாம். முகமதியர்களின் காட்டுத் தனமான ஆக்கிரமிப்பிற்கு அஞ்சி பெண்டு பிள்ளைகளோடு கூட்டம் கூட்டமாய் வந்தேறியவர்கள். வேட்டையாடும் சாக்கில் காட்டுநாய்களோடு மருதநிலத்தை ஆக்கிரமித்து வந்தேறியவர்கள். விஜயநகர பேரரசின் பெயரால் வெளிப்படையான ஆக்கிரமிப்பில் வந்தேறியவர்கள்.
பாண்டிய அரசில் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி வந்தேறிய தெலுங்கு நாயக்கர்களின் முதல் பிதாமகன் விசுவநாத நாயக்கன், பாண்டியநாட்டை முதலில் ராமநாதபுரம் துவங்கி மணியாச்சி வரை பதினாறு பாளையங்களாகப் பிரித்தான். இந்தப் பாளையங்கள் பெரும்பாலும் மறவர் பாளையங்களாக இருந்தது அவனுக்குப் பெரும் தலைவலியாக இருந்தது. பிறகு அதற்கும் வடுகர்கள் பாணியில் ஒரு திட்டம் தீட்டினான்.
படைவீரர்களாகவும், அரசப் பிரதிநிதிகளாகவும், வேட்டையாடவும், ஆடுமாடு மேய்க்கவும், பஞ்சத்தாலும், குறிசொல்லி பிழைக்கவும், முகமதியர்களின் அச்சுருத்தலுக்குப் பயந்தும் லக்கண்ணா, மாடண்ணா காலந்தொட்டே ஏராளமான தெலுங்கர்கள் தமிழகத்தில் குடியேறி இருந்தனர். அவர்களைத் தேடியெடுத்து நிலபுலன்களை வழங்கி மறவர் பாளையங்களைச் சுற்றி குடியேற்றினான். பின்பு பதினாறு பாளையங்களை பிரித்து 72 பாளையங்களாக்கினான். ஒவ்வொரு மறவர் பாளையங்களைச் சுற்றியும் குடியேறிய தெலுங்கர்களுக்கு பாளையங்கள் பிரித்து அமைக்கப் பட்டது. இந்த தெலுங்கு பாளையங்கள் கம்பளத்தார் பாளையம் எனப்பட்டது. இந்த 72பாளையங்களில் தேடிப்பார்த்தாலும் 'பாஞ்சாலங்குறிச்சி' எனும் பெயர் லேது!
பாண்டிய மன்னர்களின் காலத்தில் பாண்டியநாடு ஐம்பத்தியிரண்டு கூற்றங்களாகப் பிரித்து நிர்வகிக்கப்பட்டது. இந்த ஐம்பத்தியிரண்டு கூற்றங்களிலும் லென்ஸ் வைத்துத் தேடிப் பார்த்தாலும் பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரையே கானவில்லை!
அப்போ, வீரபாண்டிய கட்டப்பொம்மனின் 47வது பரம்பரை, 600ஆண்டுகால ஆட்சி என பொம்முநாயக்கனின் ரசிகக் குஞ்சுகள் பீலா விடுவது?
-தொடரும்!
Raja
சொம்புதூக்கி மன்னனான கதை!
இந்தபாளையப்பட்டு முறை என்றால் என்ன? கிட்டத்தட்ட குறுநில மன்னர்கள். வரி வசூல், நீதி வழங்குதல், படை வைத்துக் கொள்வது, பாதுகாவல் புரிவது இவையெல்லாம் பாளையக்காரர் பொறுப்பு. வரும் வருவாயில் ஒரு பங்கு பாளையத்தின் நிர்வாகத்திற்கு. மற்றொரு பங்கு நாயக்கப் பேரரசுக்கு. இன்னொரு பங்கு பாளையக்காரருக்கு.
பாளையத்து மக்களின் உழைப்பை வரியாக வசூலித்து மூன்றில் ஒருபங்கை நெய்போட்டுச் சாப்பிட்டுத்தான் சைடுக்கொண்டை வந்தேறிகளுக்கு வயிறு ஜோதிகா போல் ஆனது போலும்!
ஆந்திரர்கள் தமிழ் மண்ணில் உல்லாசமாக வாழ்வதற்காக ஏற்படுத்தப்பட்ட பாளையப்பட்டு முறை சீரும் சிறப்புமாக செயல்பட்டு, மேலும் பல புதிய கம்பளத்துப் பாளையங்கள் தோன்றி தமிழகம் மொட்டையடிக்கப்பட்டது. அவை பற்றிய விபரங்கள் இணையத்திலேயே ஏராளமாக கிடைக்கிறது.
கட்டப்பொம்மன் பரம்பரையினர் 12ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே பாஞ்சாலங்குறிச்சிக்கு அதிபதிகளாய் இருந்தனர் என கட்டப்பொம்மனின் தொண்டரடிப் பொடியாழ்வார்கள் எழுதிய நூல்களில் பெருமை பீற்றியிருக்கின்றனர். எனினும் வரலாற்றில் தேடிப்பார்த்தால் 18ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரே கிடையாது. கட்டப்பொம்மன் வம்சம் எனும் பேச்சே கிடையாது.
அப்படியானால் தெலுங்கர்களால் போற்றிப் புகழப்படும் மாமன்னன் கட்டப்பொம்மனின் வீரம் மிகுந்த வம்சம் வரலாற்றில் எங்கு ஒளிந்திருந்தது?
மாமன்னானைத் தேடிப்பார்த்தால் எட்டயபுர பாளையக்காரனுக்கு வெற்றிலை பாக்கு மடித்துக் கொடுத்து எச்சில் துப்ப சொம்பு தூக்கித் திரிந்த 'காட்ர கட்டபிரமையா' எனும் மாமா மன்னன்தான் அகப்படுகிறான்! இவன்தான் கட்டப்பொம்மன் பரம்பரையின் முதல் கட்டப்பொம்மன். சொம்பு தூக்கி எப்படி மன்னனான்?
தொடரும்!
Raja
கட்டப்பொம்மன் பரம்பரையிலேயே வரலாற்றின் கண்ணுக்குப் புலப்படுகிறவன் காட்ர கட்டப் பிரமையாதான். இவன் 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் எட்டயபுர பாளையக்காரன் எட்டப்ப நாயக்கனுக்கு அடப்பக் காரனாக இருந்தவன்.
அடப்பக்காரர்களின் தலையாய பணி எதுவெனில் பாளையக்காரருக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பது, மென்ற வெற்றிலைச் சாற்றினை 'புளிச்' எனத் துப்பும் போது சிந்தாமல் ஒரு சொம்பில் பிடித்துக் கொள்வது, மன்னவருக்கு அலுப்பாக இருக்கும் வேளைகளில் கைகால் அமுக்கி விடுவது போன்ற ராஜபணிகள்!
கட்டப்பொம்மனின் பரம்பரையினர் கம்பளத்தார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். கம்பளத்தாரில் கொல்லவார், சில்லவார், தோகலவார் என ஒன்பது பிரிவு. தோகலவார் என்றால் பசுமாடுகளை ஊர்ஊராக ஓட்டிச் சென்று மேய்க்கும் நாடோடிகள் எனப் பொருள். கெட்டிப்பொம்முவின் ஆண்ட(!) பரம்பரை மூதாதையர்கள் இந்த தோகலவார் வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான். எட்டப்ப நாயக்கருக்கு அடப்பக் காரனாக அரும்பணியாற்றும் பேறுபெற்றவுடன் காட்ரகட்டபிரமையா ஆடுமாடு மேய்க்கும் குலத்தொழிலை புறந்தள்ளி எட்டயபுரத்தின் விளக்கி வைத்த சொம்புகளுடன் ஐக்கியமானான்.
காட்ர கட்டப் பிரமையாவால் தோற்றுவிக்கப்பட்ட கட்டப்பொம்மன் பரம்பரை ஐந்தே தலைமுறையோடு கயத்தாறின் புளியமரத்தில் முடிவுக்கு வருகிறது.
1.காட்ர கட்டப்பிரமையா
2.கட்டப்பிரமையா என்கிற முதலாம் ஜெகவீர பாண்டியன்(1709-1736).
3.பொல்லாப்பாண்டிய கட்டப்பொம்மன்(1736-1706).
4.இரண்டாம் ஜெகவீர பாண்டிய கட்டப் பொம்மன் (1760-1790).
5.வீரபாண்டியக் கட்டப்பொம்மன் (1790-1799). இதில் ஐந்தாவதாக வருபவன்தான் பிஆர் பந்துலுநாயக்கன் தயாரிப்பில் நாம் பார்த்த 'வானம் பொழிகிறது பூமி விழைகிறது' சிவாசிக்கனேச கட்டப்பொம்மன்!
அது சரி, எட்டப்ப நாயக்கனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்து சொம்பு தூக்கித் திரிந்த காட்ர கட்டப் பிரமையா எப்படி அரியனை ஏறினான்?
-தொடரும்!
அராசிவா தமிழன்
அதெப்புடிங்க...

இவ்வளவு அழகா இவ்வளவு கோர்வையா தமிழின உணர்வை சாதிவெறிபோல எழுதி குழப்பி வழக்கமான திராவிட புலம்பலான "தமிழ்தேசியம் பேசினாலே பார்பனர்கள் வந்துவிடுவார்கள் "ங்கற கதைல வந்து முடிச்சிருக்குறீங்க...

செ.கார்கி நீங்களே சொல்றீங்க அவங்க (தமிழரல்லாதோர்) வீட்டுல தாய்மொழி பேசுறாங்க எழுதுறதில்ல ஆனா சான்றிதழ்கள்ல தமிழ்தான் தாய்மொழினு குடுக்குறாங்கனு.நான் கேக்குறேன் ஏன் இந்த ஈனப் பொழப்பு?

தன் அடையாளத்த விட்டுக்கொடுத்து பல நலன்களுக்காக சான்றிதழ்கள்ல ஏன் தமிழ்தான் தாய்மொழினு கொடுக்கனும்?

ஏன்யா... ஆங்கிலேயன் அதகட்டுனான் இத கட்டுனான் அதெல்லாம் இடிப்பீங்களானு கேக்குறீங்களே!!

நான் கேட்குறேன்...
அதெல்லாம் கட்டுன ஆங்கிலேயன் அவன் நாட்டுக்கு போயிட்டானே ஆனா நீங்க (தமிழரல்லாத நாயக்கர் இன்ன பிற) இங்க சகட போட்டு உக்காந்து ஆட்டயப்போட்டுட்டு இருக்கீங்களேயா!!

வேணும்னா ஒன்னு பண்ணுங்க இப்படி பேசுற தெலுங்கர்கள் தமிழர் மண்ண விட்டு வெளியேருங்க நாயக்கர் மகால் அப்படியே இருக்கட்டும் எங்களுக்கு பிரச்சன இல்ல. இல்லாட்டி நீங்க இங்க இருக்கலாம்னா நாயக்கர் மகால தூக்கிருவோம்... எப்புடி வசதி?

அதென்ன ஆசாரி செட்டியார் இன்னபிறர்லாம் தெலுங்கு பேசுறாங்க அவங்கெல்லாம் தமிழரில்லையானு கேக்குறீங்க?!!!!

உண்மையிலேயே உங்களுக்கு தெரியுமா தெரியாதா?

தமிழைத் தாய்மொழியா கொண்ட செட்டியார் ஆசாரி தவிர்த்து தெலுங்கை தாய்மொழியா கொண்டவன் தெலுங்கன்தானய்யா... இதுலென்ன சந்தேகம்?

எப்புடி...? மருதிருவர் மத்தவங்களெல்லாம் கெட்டிபொம்மலுகிட்ட மொழிபேதம் பாக்கலியா?

அதான அவங்க செஞ்ச தப்பே அதையே நாங்களும் செய்யனும்னு நெனச்சா எப்புடி?

கடைசியா என்னமோ பெனாத்திருக்கீரே..
அரசியலறிவு இல்லாத தமிழ் இளைஞர்களுக்கு மொழிவெறி இனவெறி சீமான் ஊட்டுறாரோ???

கடைசிவரைக்கும் எங்களுக்கு இனஉணர்வு மொழி உணர்வே வந்துரக்கூடாதுனு ஒம் பாட்டன் பூட்டன் சொல்லிக்குடுத்த மாதிரியே நீங்களும் நெனச்சா ஒங்க எண்ணத்துக்கு எண்ணெய்ய ஊத்தி சீக்கிரமா கொல்லி வச்சிர்றோம்...

உலகத்துலயே அதிமேதாவினு ஒமக்கு நெனப்போ...?

ஒம்ம எழுத்துல வடுக வாசந்தேன் வண்ட வண்டயா வீசுதே மொதல்ல ஒம்ம சைடுகொண்ட சரியிறத சரிபண்ணும்.தமிழ்தேசியத்த தருதலை தேசியமா பாக்குற ஒம்மப்போல ஆளுதாம்யா தருதல...

அதர பழசான கேள்விகளயே கேக்குறத விட்டுபுட்டு புதுசா ஏதாவது சிந்தியும்...
முற்போக்காளர்
கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்!!! தலைப்பே வெகு சிறப்பாக இருக்கிறது போங்கள்!! இந்தக்கட்டுரையை ஒவ்வொரு சொல்லாக நாங்கள் வழிமொழிகின்றோம். இந்த கட்டுரை ஏதோ ஒரு தனி நபர் கார்கி அவர்கள் எழுதிய கட்டுரையாக நாங்கள் பார்க்கவில்லை. ஒட்டுமொத்த சீமான் எதிர்பாளர்களின் குரலாக, ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, சாதிய இனவாத சமூகத்திற்கு எதிராக நிற்கும் அத்துணை பேர்களின் ஒட்டுமொத்த குரலாக, எழுத்தாகவே பார்க்கிறோம். காட்டுரைக்கு கருத்து பதிவு செய்திருக்கும் சீமானின் தொண்டர்கள் எந்த அளவிற்கு சீமான் பேசும் இனவாத போதையில் மயங்கி இருக்கிறார்கள் என்பதை வெகு சிறப்பாக அவர்களே வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எவ்வாறாகினும்,
கட்டுரையை வெளியிட்ட கீற்றுக்கு வாழ்த்துக்கள்!!
சி. பழனிசாமி
கீற்று என்ற பெயரில் தமிழில் எழுதி தமிழரை எப்படி வந்தேறிக்கு அடிமையாக்க நினைக்கிறாயோ, அதேப்போல்தான், நாயக்கர்களும் தமிழர்கள் வாயில் பழத்தை வைக்கிறார்கள். சீமான் பேசியதில் துளியளவும் தவறில்லை. நீ தெலுங்கன் என்ற உணர்வோடுதானே பேசுறகிற என்று கேட்பதற்கு " ஆமா நான் தெலுங்கன் என்ற உணர்வோடுதான் பேசுகிறேன்" என்பான். அதற்க்குத்தான் ஒரு குத்து.
நீ சீமானைப்பற்றி இனி எழுதினால் கீற்றை கிழிப்போம்.
சு. துளசிதாஸ், மலேசியா 
Chinnasamy Pazhanisamy - கீற்று என்ற பெயரில் தமிழில் எழுதி தமிழரை எப்படி வந்தேறிக்கு அடிமையாக்க நினைக்கிறாயோ, அதேப்போல்தான், நாயக்கர்களும் தமிழர்கள் வாயில் பழத்தை வைக்கிறார்கள். சீமான் பேசியதில் துளியளவும் தவறில்லை. நீ தெலுங்கன் என்ற உணர்வோடுதானே பேசுறகிற என்று கேட்பதற்கு " ஆமா நான் தெலுங்கன் என்ற உணர்வோடுதான் பேசுகிறேன்" என்பான். அதற்க்குத்தான் ஒரு குத்து.
நீ சீமானைப்பற்றி இனி எழுதினால் கீற்றை கிழிப்போம்.
தமிழன் சிவா
சார்ஜ் கோட்டை தமிழ்நாடு அரசு தலைமை செயலகமாக இருக்கு சர்ச் மசூதிகள் அவர்கள் வழிபாட்டு தலமாக இருக்கு ஆனால் நாயக்கர் மஹால் தான் நாயக்கர் மஹாலாகவே இருக்கு எவனோ ஒருவன் எங்களை அடிமைபடுத்தியதன் அடையாளமா இருக்கு
seelan
வணக்கம் கார்கி அவர்களே, உங்களோட கட்டுரைய விரும்பி படிக்கறவன் நான் ஆனா இந்த கட்டுரைய என்னால ஏத்துக்க முடியல(மன்னிக்கணும்).

அண்ணன் சீமானை விமர்சிக்க நீங்க முன்வைக்கும் காரணங்களை படிக்கும்போது சரியானது போல மாயையை ஏற்படுத்தினாலும் அது விதண்டாவாதமா இருப்பது கடைசிலதான் புரியுது. உங்கமெலயும் ஏதோ ஒரு சந்தேகத்த உருவாக்குது.
appu
கார்கிக்கு ஏன் இவ்வளவு கோபம் ..கார்கி அடிப்படையில் தெலுங்கைத்தாய்மொழீயாகக் கொண்டவர்தானே?50 ஆண்டு கால திராவிட ஆட்சியில் இன்றைய தமிழகத்தின் நிலை என்ன?சீமான் என்ன ஆயுதப்போராளியா?தேர்தல் அரசியல் மூலமாகவே ஆந்திரம்,கேரளம் கருநாடகம் ஆகியவை 1947க்குப்பின் தற்காலம் வரையில் அடிப்படைக்கட்டமைப்பில் ஓரளவு தன்னிறைவு பெற்றுள்ளன.அண்டை மாநிலங்களில் அந்தந்த மொழிவழி அரசியல் காழ்ப்புணர்வு அரசியல் தானே நடக்கிறது?தமிழகத்தில் உள்ள தெலுங்கர்களை விட கருநாடகத்தில் உள்ள தமிழர்கள் எண்ணிக்கை அதிகம்?அங்கே தமிழர்களில் எத்தனை பேர் அமைச்சர்கள்?அமைச்சர்களை விடுங்க..சட்ட மன்ற உறுப்பினர்களாக ஒரு தமிழர் வரமுடியுமா?இடது சாரிகள் வேடம்பூண்ட தமிழரல்லாதோர் இது போன்ற கட்டுரைகளை எழுதுகின்றனர்.தேசியம் என்பது மொழிவழி அல்ல என்பதை நிராகரித்து இந்திய இடதுசாரி வாதத்தை முன்வைக்கிறீர்.அப்பொழுது தேசியத்துக்கு வரையறை என்ன?இந்து மதமா?
இளம்பருதி
ஐயா,

உங்கள் பயம் நியாயமானதுதான் ஆனால் தமிழ் மக்கள் என்றும் தெலுங்கர்களுக்கு எதிரி அல்ல...யாரையும் விரட்டுவது எங்கள் குணம் அல்ல....நீங்களே விரட்டி விடுவோமே என்று பயப்பட வேண்டாம்...வந்தவரை எல்லாம் வாழ வைப்போம் ஆனால் இனி நம் சொந்தவரை மட்டும் ஆள வைப்போம் ..இது எங்கள் அட்படை அரசியல் உரிமை...இங்கு வாழும் தெலுங்கர்கள் தமிழர்கள் என்று அவர்கள் தெலுங்கை தூக்கி எரிய சம்மதம் என்றால் நன்று இருந்தாலும் தெலுங்கிலிருந்து தமிழிற்கு வந்தவருக்கு எங்களை ஆள வைத்து அழகு பார்த்து விட்டோம் இன்று நீங்கள் பழங்குடி தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரம் குடுக்க வேண்டியது உங்கள் கடமையும் கூட
தமிழரசா
திருப்பூரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய 'நாம் தமிழர்' கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருமலை நாயக்கர் மகாலை இடிக்க வேண்டும் என்று//

அந்த மாநாட்டில் அண்ணன் முதலில் இப்படி பேசினார் என்பதற்கு எதாவது ஆதாரம் காட்டுங்க தோழரே.. உங்கள் கட்டுரைகள் முன்பு வாசித்திருக்கிறேன் என்ற முறையில் இந்த முதல் வரியே நம்பகத்தன்மையை குறைத்துவிட்டது.
மணிக்குமார்
செ.கார்கி எழுப்பிய கேள்விகளை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத நாம் தமிழர் தம்பிகள், அண்ணன் சீமான் அப்படி கூறவில்லை, இப்படி கூறவில்லை என்று கூச்சல் எழுப்பியுள்ளார்கள்.

'இன்னும் உயிரோடு இருக்கிறாயே!' என்று சொன்னால், அதன் நேரடி அர்த்தம் 'செத்துப் போ' என்பதுதான். 'திருமலை நாயக்கர் மகால் தமிழ்நாட்டில் இன்னும் இருப்பது அவமானம்' என்று சொன்னால், அதன் நேரடியான அர்த்தம் 'அது இருக்கக்கூடாது' என்பதுதான்.
பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பிருந்து அத்வானி இதேபோல்தான் பேசினார். பாபர் மசூதி இடிப்புக்கு ஆதரவான கருத்தை இந்துக்களிடம் உருவாக்கினார். சீமான் பேசியதும் அதேபோன்ற பேச்சுதான். அதன் உடனடி விளைவை, முகநூலில் பார்க்க முடிந்தது. சீமானின் தம்பிகள் 'அந்த மகாலை இடிக்க வேண்டும்' என்று எழுதினார்கள். 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை இடிப்போம்' என்றார்கள். தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கினார்கள். இன்றுவரை அதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

அடுத்து, ராஜராஜசோழன் பற்றி எழுதியதற்கும் பொங்கி இருக்கிறார்கள். அண்ணனுக்கு இருக்கும் படிப்பறிவையும், வரலாற்று அறிவையும் நாம் அறிவோம். அண்ணனுக்குத் தப்பாமல் தம்பிகளும் இருக்கிறார்கள். இராஜராஜ சோழனைப் பற்றி வரலாற்று ஆய்வறிஞர்கள் தொ.பரமசிவன், ஆ.சிவசுப்ரமணியன் போன்றோர் நிறைய எழுதி இருக்கிறார்கள். கொஞ்சம் முயன்று தேடினால், இணையத்திலேயே அக்கட்டுரைகள் படிக்கக் கிடைக்கின்றன. அவற்றைத் தேடிப் படிக்கும் பொறுமையும், அவற்றை உள்வாங்கும் அறிவும் சீமானுக்கோ, அவரது தம்பிகளுக்கோ இல்லை. ஒன்றுமட்டும் சொல்லலாம், 'போய் புள்ள குட்டிகளையாவது படிக்க வைங்க'
தமிழரசா
'திருமலை நாயக்கர் மகால் தமிழ்நாட்டில் இன்னும் இருப்பது அவமானம்' // திரும்பவும் அடித்து விடாதீர்கள் அண்ணா. நீங்கள் கூறும் அதே தொ.ப தெலுங்கு மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழர் வாழ்வியலில் அவர்கள் ஏற்படுத்திய எதிர்மறை தாக்கங்களைப் பற்றியும் பேசியுள்ளார். கட்டுரையின் ஆரம்பம் முதலே Facebook type அவதூறுகளாக தான் இருக்கிறது. இடதுசாரி இயக்கங்கள் உங்களுக்குள் இணைந்து வலுவான அரசியல் கட்டமைப்பையும் உருவாக்க மாட்டீர்கள்,இயல்பாக எழுந்து வரும் தமிழ்தேசிய உணர்வையும் வழிநடத்தி செல்லாமல் அவதூறுகளால் இளைஞர்களை மா-லெ அரசியலில் இருந்து அன்னியப்படுத்தியும் விடுவீர்கள். மேலும் இந்த தமிழ்தேசியம்-இந்துத்துவ அரசியலை ஒன்றுப்படுத்திப் பேச வைப்பது தான் இந்திய பார்ப்பனியத்தின் சூழ்ச்சி என்பதை சொல்லி தான் தெரிய வேண்டியிருக்கிறதா என்ன?
Mathu
சீமான் போன்றவர்கள் முதலாளியம் பெற்றெடுத்தவர்கள். இவர்களின் நோக்கமே பட்டாளி வர்க்க உணர்வை சிதறடிப்பது தான் , என்று கார்கி கூறுகிறார்.

பாட்டாளி வர்க்கம். வர்க்க உணர்வு பெற்று புரட்சி செய்யும் என்பது வரலாறு நிராகரித்த தத்துவம். எங்கும் என்றும் நடை பெற வில்லை.
Karuppusamy
கட்டுரையின் மைய கருத்துக்கள் சரியானவைகள்தான். கட்டபொம்மு போன்ற கொள்ளையனுக்கு வீரபாண்டி என பட்டம் சூட்டி சுதந்திர போராட்ட வீரனாக சித்தரிப்பதை தவிர்க்கலாம். எனினும் கார்கி போன்றோர் மக்களிடம் மிகச் சிறிய அளவிலான செல்வாகினைக் கொண்டுள்ள சீமானைப் பற்றி தொடர்ந்து எழுதி அவரை திட்டமிட்டு வளர்த்துவிடுகின்றனரா என எண்ணத் தோன்றுகின்றது.
M.BABU
எப்போதுமே சாதிவெறியர். தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டிலில் ஏற முடியாது என்பது சீமானுக்குத் தெரியாதா என்ன?ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற கொள்கையின் இடத்தில் இனவெறியை வைத்து அரசியல் நடத்துகின்றார் சீமான் அவர்கள்.
கம்பன்
அவமானச்சின்னம் திருமலை நாயக்கர் மஹாலை இடிக்கனும் என்று சொல்லும் சீமானின் அன்பு தும்பிகளுக்கும் அவரது ரசிக குஞ்சிகளுக்கும் ஓரு வேண்டுகோள் இந்த மஹால் நீங்கள் அடிமையாய் இருந்ததற்க்கு அடையாளம் அதனால் நீங்க இடிக்னும்னு சொல்ரீங்க ஆனா நாங்க அடிமையா இருந்தத ஞாபகபடுத்துன பாபர் மசூதி இடிச்ச அன்றைய தினம் நீங்க ஏன்டா கன்டணபொதுக்கூட்டம் நடத்துரீங்க .

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.