புத்தகத்தில்
மயிலிறகுகளை
சேமித்திருந்தாள் சிறுமி பிரியா
யாராவது ஏதாவது சொன்னால்
மயிலிடம் சொல்லிவிடுவேனென
மிரட்டுவாள்
புத்தகத்தை
இறுகிப் பிடித்தே தூங்குவாள்

திடீரென ஒரு நாள்
காணாமல் போனது
மயிலிறகு புத்தகம்
அம்மாவிடம் சொல்லி
அழுது கொண்டே இருந்தாள்
மயில் அச்சடித்த
சேலை உடுத்தி
எதிரே நின்ற அம்மாவை
கட்டியணைத்து
முத்தம் கொடுத்தாள்
கண்ணீரைத்
துடைத்துக் கொண்டிருந்தது
மயில்...

 - பாரிமேகம்

Pin It