மேகக்கைகளால்
சூரியக் குதிரையை
விரட்டியது வானம்...

குளிர்க்காற்று
மழைக்கு
கட்டியம் கூறியது

அன்ன நடை போட்டவர்கள்
அணுகுண்டு விழுந்ததாக
அலறிஅடித்து ஓடினர்
சிலருக்கு
கைக்குட்டையே குடையானது

காதலர்க்கு
முத்தப்பரிசாக
மழை

நகரச்சாலையில்
மழை மட்டும்
என் கால்களை
வேகப்படுத்திய பொழுது
சற்றென்று கறுத்தது
மனம்...

ஒதுங்க இடமின்றி
ஓடக் கால்கள் அற்ற
கருத்த உருவம்
சுருண்டு கிடந்தது
கூடவே
கொஞ்சம் சில்லறைக் காசும்
கரைந்து கொண்டிருந்தது
அவன் வரைந்த
கடவுள் படம்...

- பாரிமேகம்

More articles by பாரிமேகம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.