மோடி ஆட்சி இஸ்ரேலை ஆதரிப்பது ஏன் (4)

உலக நாடுகளின் எஜமானனாகத் தன்னைக் கருதிக் கொண்டு செயல்பட்டு வரும் அமெரிக்கா, இஸ்ரேலின் யூதவெறிக்கு - பட்டுக் கம்பளம் விரித்துக் கொண்டு, அரபு, இஸ்லாமிய நாடுகளை எதிரிகளாகக் கருதி செயல்பட்டு வருவதற்கு என்ன காரணம்? அமெரிக்காவில் ஆட்சி அதிகாரத்தை - ஆட்டிப் படைத்து வரும் யூதர்களின் நிர்ப்பந்தம், இதற்கு ஒரு முக்கிய காரணம்! இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைப் பார்ப்பனர்கள் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருப்பதுபோல்தான், அமெரிக்காவில் யூதர்கள் - இந்தியாவில் பார்ப்பனர்கள்! அரபு மக்களையும், இஸ்லாமியர்களையும் தங்களது எதிரிகளாகக் கருதுகிறார்கள் யூதர்கள். இங்கே இந்தியாவில் பார்ப்பனர்கள், இந்து மதக் கட்டமைப்புக்கு அடிமைப்பட மறுக்கும் இஸ்லாமியர்களையும், அந்தக் கட்டமைப்புக்குள்ளே இருந்து கொண்டு போராடும் தலித் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களையும் தங்களது எதிரியாகக் கருதுகிறார்கள்.Jews control usயூதர்களும் - ஆரியப் பார்ப்பனர்களும் சிந்தனையில் ஒன்றுபட்டு நிற்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்! இரண்டு சம்பவங்களை உதாரணத்துக்குக் குறிப்பிடுவோம். 1967-ம் ஆண்டு - பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் 6 நாட்கள் போர் நடத்தியது. பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள், அப்போது, சொந்த நாட்டை விட்டு வெளியேறினார்கள். அப்போது ஆர்.எஸ்.எஸ்.ஸின் அதிகாரபூர்வ ஏடு ஆர்கனைசர் இவ்வாறு எழுதியது:

‘இஸ்ரேலியப் படைகள் போரிடுவதை - வெற்றிகளைக் குவித்திருப்பதைப் பார்க்கும்போது, நமது கலாச்சாரமும் வெற்றி பெற்று, உலகில் நம்மைச் சரியான இடத்தில் கொண்டு போய் நிறுத்தப்போகிறது. யூத மதத்தின் கருத்துகள், நமது வேதங்களையும் இந்து தர்ம சாஸ்திரங்களையும் சமூகப் பழக்கவழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது” - (ஆர்கனைசர் - 18.6.67)

ஆர்கனைசர் சொல்வதும் உண்மைதான். ‘யூதர்கள்தான் சிறந்த மனிதர்கள். அவர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்” என்கிறது யூதக் கோட்பாடு! அது போல - பிராமணர்கள் தான் உயர்ந்தவர்கள் அவர்கள் பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்தவர்கள் என்கிறது பார்ப்பன வேதமான புருஷ சுக்தா. இதை, ஆர்.எஸ்.எஸ். தத்துவத் தலைவர் கோல்வாக்கரும் மறவாமல் வலியுறுத்துகிறார்.

‘புருஷ சுக்தாவில் நம்மை உருவாக்கிய கடவுள் யார் என்பது கூறப்பட்டிருக்கிறது. அதுவே நமது இனத்தின் அடையாளம் பிராமணர் நமது கடவுளின் தலை” - (Bunch of Thoughts- நூலில் கோல்வாக்கர்)

தங்களுடைய மதச் சடங்குகளுக்காகச் சமூகத்திலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு தனிக்குடியிருப்புகளை உருவாக்கிக் கொண்டவர்கள் யூதர்கள். பார்ப்பனர்களும் தங்களது வேதப் பார்ப்பனியச் சடங்குகள் வலியுறுத்தும் தீண்டாமையைக் கடைப்பிடிக்க - தங்களுக்குத் தனிக்குடியிருப்புகளை அக்கிரகாரங்கள் என்று ஏற்படுத்திக் கொண்டவர்கள்! இந்தியா இந்துக்களின் தேசம் என்று - இங்கே சங் பரிவாரங்கள் முழங்குகின்றன. பாலஸ்தீனத்தைப் படிப்படியாக அபகரித்து, அங்கு வாழ்ந்த மக்களை விரட்டி அடித்து, அகதிகளாக்கி விட்டு - உலகம் முழுவதும் வாழ்ந்த யூதர்களை எல்லாம் அழைத்து இஸ்ரேல் என்ற யூதத் தாயகத்தை உருவாக்கியவர்கள் யூதர்கள்! இந்தியாவில் பிறந்தாலும் இந்துக்கள் அல்லாதவர்களை இந்தியர்களாக அங்கீகரிக்க முடியாது. அவர்கள் தேசத்துரோகிகள் என்று வெறிக்கூச்சல் போடுகிறவர்கள், சங் பரிவாரங்கள்! ஹீப்ரு மொழியைத் தெய்வீக மொழியாகக் கூறுகிறவர்கள் யூதர்கள் என்றால், சமஸ்கிருதத்தை தேவபாஷை என்பவர்கள் சங் பரிவாரங்கள்! எனவே யூதர்களும் - பார்ப்பனர்களும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான்!

இந்தியாவின் ஆட்சி அதிகாரம் பார்ப்பனர்களிடமும், பொருளாதாரம் - பார்ப்பனர்களுக்குக் கட்டுப்பட்டுள்ள பனியாக்களிடம் சிக்கியிருக்கிறது. அமெரிக்காவில் அரசியல், பொருளாதாரம் இரண்டையுமே ஆட்டிப் படைக்கிறவர்கள் யூதர்கள்தான். இது பற்றி ஏராளமான ஆய்வுகளும் - புள்ளி விவரங்களும் வெளிவந்திருக்கின்றன.

அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவரான ஜார்ஜ் வாஷிங்டன் - யூதர்களைக் கடுமையாக விமர்சித்தவர்! ‘எதிரி ராணுவத்தை விட பல நூறு மடங்கு ஆபத்தானவர்கள் யூதர்கள். அமெரிக்கர்களின் மகிழ்ச்சியையும், சுமுகமான வாழ்வையும், அபகரிக்கும் கும்பல் அது! இதை நான் வேதனையோடு தெரிவிக்கிறேன்” என்றார் ஜார்ஜ் வாஷிங்டன்! அமெரிக்க சமூகத்தின் எதிரிகள் என்று அவரால் பிரகடனப்படுத்தப்பட்ட அதே யூதர்கள்தான், இன்று அமெரிக்க பொருளாதாரத்தையும் அரசியலையும் ஆட்டிப் படைக்கும் சக்தியாகத் திகழ்கிறார்கள்! மோடியின் பிரதம அமைச்சகத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்கள் 3 மட்டுமே.

இந்தியாவின் ஆட்சி, அதிகாரம் - பார்ப்பனர்களிடம் தங்கி இருப்பது போலவே - அமெரிக்க ஆட்சியை ஆட்டிப் படைக்கும் அதிகாரம் படைத்தவர்களாக யூதர்களே இருக்கிறார்கள். அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவர்கள் அனைவரும், (அதன் முதல் குடியரசுத் தலைவர் வாஷிங்டன் நீங்கலாக) யூதர்களின் கைப்பாவைகளாக செயல்பட்டு வந்திருப்பதே - கடந்த கால அமெரிக்க அரசியல் வரலாறு.

17-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து அமெரிக்காவில் யூதர்களின் குடியேற்றம் துவங்கியது. ரோத் தீவு, நியூயார்க், பென்சில்வேனியா, தெற்கு கரோலினா பகுதிகளில் அவர்கள் குடியேறினார்கள். அமெரிக்கா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, குடியேறிய யூதர்கள் அந்நாட்டின் அரசியல் நடவடிக்கைகளிலும், உள்நாட்டு போர்களிலும் பங்கேற்று வந்ததோடு, தங்களின் யூதக் கலாச்சாரத்தைப் பரப்புவதில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தனர். ஏராளமான நூல்களை அச்சிட்டுப் பரப்பினர். படிப்பறிவு இல்லாதவர்களாகவும், சிறிய பெட்டிக் கடைகளை வைத்தும் பிழைப்பு நடத்தி வந்த யூதர்கள், அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலத்தில், யுத்த சூழலைப் பயன்படுத்தி, தங்களது வர்த்தகத்தை வளர்த்துக் கொண்டனர். பலர் பெரும் பணக்காரர்கள் ஆனார்கள். ஆடைகள் தயாரிப்பு நிறுவனங்களைப் பலர் தொடங்கினார்கள்.

உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு, நுகர்பொருள் சந்தையை யூதர்கள் பிடித்தனர். தொடர்ந்து, யூதர்கள் குடியேற்றம் நடந்து கொண்டே இருந்தன. இப்போது நியூயார்க் நகரம் - யூதர்களின் நகரம் என்றே அழைக்கப்படுகிறது. அமெரிக்க மொத்த மக்கள் தொகையில் - யூதர்களின் எண்ணிக்கை 2.2 சதவீதம்தான். (சுமார் 61 லட்சத்து 55 ஆயிரம் மக்கள்) ஆனால், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகளில் யூதர்களின் ஆதிக்கம்தான் கொடி கட்டிப் பறக்கிறது. பப்ளிக் இன்ட்ரஸ்ட் (Public Interest) என்ற அமெரிக்க ஆராய்ச்சி இதழ் ஒன்று, அண்மையில் வெளியிட்ட ஓர் ஆய்வில், திடுக்கிடும் தகவல் ஒன்று வெளிவந்தது. அந்நாட்டின் மிகப் பெரும் அறிஞர்கள் 70 பேர் என்ற பட்டியலில் - 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களைப் பிடித்துக் கொண்டி ருப்பவர்கள், அந்நாட்டில் 2.2 சதவீதமாக மட்டும் இருக்கும் யூதர்கள்தான்.

அமெரிக்க நாட்டின் பொருளாதாரத்துக்கு இணையாக, யூதர்கள் தங்கள் பொருளாதார அமைப்புகளை வலிமையுடன் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டி இஸ்ரேலுக்கு உதவுவதோடு, அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலிலும் தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்துவதற்குப் பணத்தை அள்ளி வீசும் யூதர்கள், தலைவர்கள் கூட்டமைப்பு (Presidents Conference) என்ற அமைப்பையும் உருவாக்கியுள்ளனர். பல்வேறு யூத அமைப்புகளின் தலைவர்கள் இதில் உறுப்பினர்கள். இஸ்ரேல் பிரச்சினையில் அமெரிக்க அதிபர்கள் - இந்த அமைப்பைச் சந்தித்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்ட பிறகே எந்த முடிவையும் எடுக்கிறார்கள். அதிகார மட்டத்தில் அந்த அளவுக்கு செல்வாக்கு படைத்த அமைப்பாக இது விளங்குகிறது. இந்தியாவில் பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆலோசனையை பெற்றுத்தான் மோடி ஆட்சி செயல்படுகிறது.

1916-ல் உட்ரோ வில்சன், அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆனதிலிருந்து, வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும் நிர்ப்பந்த சக்திகளாக யூதர்கள் செயல்படத் துவங்கினர். வில்சனின் தேர்தல் செலவுக்கு, பெரும் தொகையை வழங்கிய யூதர்கள், வெற்றிக்குப் பிறகு தங்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்! இங்கிலாந்து, பிரான்ஸ்ஆகியவை ஒருபுறமும், ஜெர்மனி, துருக்கி போன்றவை மறுபுறமும் இருந்து நடத்திய முதல் உலகப் போரில், யூதர்களின் நிர்ப்பந்தத்தை ஏற்று, அமெரிக்க அதிபர் வில்சன், இங்கிலாந்துக்கு ஆதரவாக, அமெரிக்காவை போரில் ஈடுபடுத்தினார். இதன் விளைவாக - பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு ஒரு தேசிய இருப்பிடம் ஏற்படுத்தப்படும் என்ற பிரகடனம் (பால்பர் பிரகடனம்) இங்கிலாந்து அரசால் வெளியிடப்பட்டது.

போரிலிருந்து ஒதுங்கி இருந்த ஒரு நாட்டை, போரில் ஈடுபட வைத்து, அதன் மூலம் வேறு ஒரு நாட்டுக்கு அழுத்தத்தைக் கொடுத்து, தங்கள் தாயகத்துக்கு ஆதரவான ஒரு பிரகடனத்தை வெளியிடக்கூடிய அளவுக்கு, யூதர்களின் செல்வாக்குக் கொடி கட்டிப் பறந்தது. அதன்பிறகு அமெரிக்க அதிபர்களான பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், ஹோரி எஸ்.ட்ரூமேன், ஜான் எப். கென்னடி, லிண்டன் பி. ஜான்சன், ரிச்சர்ட் நிக்சன், ஜெரால்ட் ஃபோர்டு, ஜிம்மி கார்ட்டர், ஜார்ஜ் புஷ், கிளிண்டன் என ஒவ்வொருவர் ஆட்சியிலும் யூதர்களே, அரசியலை ஆட்டிப் படைக்கும் சக்திகளாக விளங்கினார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் வெளிவந்திருக்கின்றன! இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சட்டம் வழங்கியிருந்த 370வது சிறப்பு பிரிவை நீக்கி மாநில அந்தஸ்து உரிமையும் பறித்தது.

ரூஸ்வெல்ட், ட்ரூமேன் ஆகியோருக்கு ஆலோசகராகச் செயல்பட்டார் அமெரிக்க யூதர் தலைவரான ஃபெலிக்ஸ் - பிராங்க் ஃபர்ட்டர். அமெரிக்காவின் வெளியுறவுத் துறையை ஆட்டிப் படைத்து வருகிறவர்கள் யூதர்கள்தான். யூதக் கோட்பாட்டின் தீவிர ஆதரவாளர்கள் பலர், உயர்பதவிகளில் அமர்த்தப்பட்டனர். உதாரணமாக - வில்சன் பிரதமராக இருந்தபோது, அவருக்காகத் தேர்தலில் தீவிரமாகச் செயல்பட்டதற்காக, லூயி பிராண்டிஸ்என்ற யூதத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதியாக்கப்பட்டார். ரூஸ்வெல்ட் காலத்தில் - ஏராளமான யூதர்கள் அமெரிக்காவில் குடியேற உரிமை வழங்கப்பட்டது. ஐரோப்பாவிலிருந்து, ஒரு லட்சம் யூதர்களை, பாலஸ்தீனத்தில் குடியேறச் செய்வதற்கு, இங்கிலாந்து மூலம் வழிவகுத்தவர்தான் தீவிர யூத ஆதரவாளரான ட்ரூமேன். பாலஸ்தீனப் பிரச்சினையில் - அமெரிக்காவின் நேரடித் தலையீடு அப்போதுதான் தொடங்கியது.

1949 மே மாதத்தில் - இஸ்ரேல் என்ற சட்ட விரோத அரசை அய்.நா. அங்கீகரித்தது. அதே ஆண்டு ஜனவரி 25-ம் தேதி இஸ்ரேல் தேர்தலை நடத்தி ஆட்சியை அமைத்தவுடன், அடுத்த 6 நாட்களிலேயே இஸ்ரேலிய ஆட்சியை ட்ரூமேனின் அமெரிக்க அரசு அங்கீகரித்து, இஸ்ரேல் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு, தனது நாட்டிலிருந்து யூத நிபுணர்களை அனுப்பி வைத்தது. 1961-ல் பதவிக்கு வந்த கென்னடி - இஸ்ரேலுக்குத் தனது வெளிப்படையான ஆதரவை முன் வைத்துத்தான் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தினார். இஸ்ரேலுக்கும் யூதர்களுக்கும் ஆதரவான, கென்னடியின் பேச்சைப் பல லட்சக்கணக்கில் அச்சிட்டு யூதர்கள் பாராட்டினர். கென்னடியின் மூன்று ஆண்டு ஆட்சிக் காலமும், யூதர்களின் செல்வாக்குக் கொடி கட்டிப் பறந்தது. தனது உதவியாளர் மையர் ஃபீல்டுமேன் என்பவரை, இஸ்ரேலுக்கு நேரடியாக அனுப்பி வைத்து, யூத அரசை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து உதவிகளையும் செய்தார் கென்னடி. இஸ்ரேலுக்கு ஏவுகணைகளையும் அவர் வழங்கினார். அய்.நா.வில் இஸ்ரேலுக்கு எதிராக, அதன் ‘சிரியா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குக்” கண்டனத் தீர்மானம் வந்தபோது, கென்னடி அரசு கண்மூடித்தனமாக இஸ்ரேலை ஆதரித்தது.

1963-ல் பதவிக்கு வந்த ஜான்சன் ஆட்சியிலும் யூதர்களின் செல்வாக்கே தாண்டவமாடியது. தங்களுடைய அரசியல் - பணம் - பத்திரிகைச் செல்வாக்குகளைப் பயன்படுத்தி, யூதர்கள் அமெரிக்காவின் கொள்கையை நிர்ணயிப்பதில் பெரும் செல்வாக்கு செலுத்தி வருவதாக, அமெரிக்காவின் தலைமை ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பர்ன்ஸ் - வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார்.

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.