அந்த ஆலமரத்தின் அடியில்
இளைப்பாற எங்களை
அனுமதிக்காமலிருக்கலாம்.

அந்த ஆலமரத்தின் வேர்கள்
அந்தச் சுவரை தாண்டி
எங்கள் வீடுகளின் அடியில் உறங்கிக் கொண்டிருக்கின்றன.

எமைத் தீண்டிய காற்று
உங்கள் நெஞ்சுக் கூட்டுக்குள்
உங்களுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பாம்புக்கு
பால் வார்த்தால்
பாசமாக இருக்குமா?
தீண்டாமைக்கு
பால்வார்க்காதீர்!

- இலமு

Pin It