அடைப்பை சரிசெய்ய
மூழ்கிய
அண்ணனைக்
காணவில்லை.

 என்னுள் பதட்டம்
 இந்த வேலை
 முத்தெடுப்பது போலல்ல.
 இறந்திருப்பானோ?
 அச்சம்.

 இல்லை.
 அவன்
 உயிரோடுதான்
 இருக்கிறான்.

மலங்களுக்கிடையே
நீர்க் குமிழ்கள்
உறுதி செய்கின்றன
 
 வெளியே வந்த
 அண்ணன்
 தலை, உடல்
 எல்லாம் மலம்தான்.

அண்ணனைக் கட்டித்தழுவி
கண்ணீர்விட்டேன்
அண்ணனே எனக்கு
முத்துதான்.

- இலமு, திண்டுக்கல்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.