நான் பிறக்கும் போது தொட்டில் இல்லை 

நான் இறக்கும்போது சுடுகாடு இல்லை 

ஊருக்கு செருப்பு தைப்பது என்வேலை 

ஊரார் இறந்து போனால் என்னைத் தேடிவரும் ஓலை 

சாவு செய்தி சொல்ல 

சாமமெல்லாம் தப்படிக்க 

சுடுகாட்டில் சாவுக்குழி தோண்ட! 

நானோ தீண்டதகாதவன் 

நான்தோண்டிய குழியில் படுக்கலாமா? 

நான் வெட்டிய கிணற்று நீரை புழங்கலாமா? 

நான் நட்ட பயிரின் விளைச்சலை உண்ணலாமா? 

ஏனோ எனைத்திட்டி இழிபுபடுத்தி 

என்ன சுகம் காண்பாரோ? தெரியவில்லை! 

இழிசாதி சக்கிலியென 

மேல்சாதி இழிவாய்ப்பேச 

சட்டம் திடுக்கிறதாம்? 

தீண்டாமையைத் தீயை அணைக்க வேண்டாமா? 

மனிதர்களை மனு பிரித்தான் சாதியாய்! 

மானுட நீதி இதை ஏற்பது சரியா? 

- கே.துரைராஜ் ஈரோடு 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.