அதே சமயம்
உட்கிரமம் சிலவற்றில்
உள்ளடு இரட்டைக் குவளை
நின்றுபோன இடத்தில் தண்ணீர்
தெளிக்கப்படுகிறது தீட்டென
பறையடிக்க மறுத்தால்
வெட்டப்படுவதோ-
கட்டைவிரல் காணிக்கையாக
அனுமதி மறுப்பு
ஆலத்துள் நுழைய
உயர்திணைகளில் தாழ்த்தப்பட்டோராய்
இனங்காணப்படுவது
அழுகைகளாலல்ல-
அரசு வழங்கும் சலுகைகளால்.
- சி. கண்ணன், சென்னை-26.