வரப்பை நீக்கிய கூட்டுப் பண்ணையில்
தரமிகு வேளாண் பொருளைப் படைக்கவும்
முதலெனும் நுகத்தடி களைந்த தொழிலில்
மதியுடை மக்களின் தேவையை யுணர்ந்து
புவியை அதிகம் பிழியா வண்ணம்
நவிலும் சான்றோர் நல்லுரை கேட்டு
வேண்டிய பொருளை உற்பத்தி செய்ய
ஈண்டு அமைப்போம் உழைப்பவர் அரசை
(வரப்புகளை நீக்கி, கூட்டுப் பண்ணைகளை அமைத்து, அங்கே தரம் மிகுந்த வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யவும், மூலதனம் என்ற நுகத்தடியை வீசி எறிந்து விட்டு (சுற்றுச் சூழலுக்குக் கேடு வராதபடி) அறிவடைய மக்களின் தேவைகளை உணர்ந்து கொண்டு பூமியன் மூலாதாரங்களை அதிகமாகப் பிழியாமல், நல்லறிஞர்களின் ஆலோசனைகளின்படி (தொழிலாளர்களின் கண்காணிப்பில்) வேண்டிய பொருட்களை உற்பத்தி செய்ய உழைப்பவர்களின் தலைமையில் சோஷலிச அரசை அமைப்போம்.)
- இராமியா
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- வேளாண் விளைபொருள்கள் விலைக்குச் சட்ட ஏற்பு வழங்கு!
- கலைஞர் நூற்றாண்டு: மறுவாசிப்பில் கலைஞரின் ‘நளாயினி'
- சனாதனம் குறித்த உயர்நீதிமன்றத்தின் முறையற்ற தீர்ப்பு!
- இறகுகளுக்காக ஒரு நூலகம்
- எதிர்மறை அலைகள்
- நான்
- பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்?
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
- விவரங்கள்
- இராமியா
- பிரிவு: கவிதைகள்