கீழைத் திமோரின் மக்கள் விடுதலை
தீமைக்கு அஞ்சா வீரம் செறிந்தது
தெற்குச் சூடான் கருத்துக் கணிப்பும்
எதற்கும் குறைவாய்க் கொள்வதும் இல்லையே
இருப்பினும் ஈழத் தமிழர் சிந்திய
குருதிக்கு இணையாய் எதுவும் உண்டோ
கீழையும் தெற்கும் விடுதலை பெற்றனர்
ஈழத் தமிழரோ தேவையும் பெற்றிலர்
சூடான் திமோரின் மக்கள் போரில்
மேட்டிமை உணர்வுப் பார்ப்பான் இல்லை
ஈழத் தமிழனும் இலங்கையை வென்றான்
பாழாய்ப் போன பார்ப்பன இந்தியத்
தலையீட் டினாலே வெற்றியும் கவிழ்ந்தது
பார்ப்பன ஆட்சி தொடரும் வரையில்
யார்க்கும் உதவிட முடியா தென்று
அன்றே சொன்னார் அருமைப் பெரியார்
இன்றும் உணரேல் புன்மை தொடருமே.
 
(கிழக்குத் திமோர் மக்கள் விடுதலை அடைந்தது வீரஞ் செறிந்த போராட்டத்தினால் தான். தெற்குச் சூடான், கருத்துக் கணிப்பின் மூலம் விடுதலை அடைந்ததைக் குறைவாக மதிப்பிடவும் முடியாது. ஆனால் ஈழத் தமிழர்கள் சிந்திய இரத்தத்திற்கு எதுவும் இணையாக முடியாது. (ஆனால்) கிழக்குத் திமோர் மக்களும், தெற்குச் சூடான் மக்களும் சுதந்திரம் பெற்றனர்; ஈழத் தமிழர்களோ அடிப்படை உரிமைகளைக் கூடப் பெறவில்லை. (ஏனெனில்) கிழக்குத் திமோர் மக்கள் போரிலும் தெற்குச் சூடான் மக்கள் போரிலும் (தாங்களே பிறவியில் உயர்ந்தவர்கள் என்ற) திமிர்க் குணம் படைத்த பார்ப்பனர்களின் தலையீடு இல்லை. ஈழத் தமிழர்களும் இலங்கையை (சிங்கள அரசை) வென்றனர். (ஆனால்) பாழாய்ப் போன பார்ப்பன (அதிகார) இந்திய அரசின் தலையீட்டினால் (ஈழத் தமிழர்கள் ஈட்டிய) வெற்றியும் கவிழ்க்கப்பட்டது. (நாம் டெல்லிக்கு அடிமை என்று சொல்ல வைக்கும் படியான) பார்ப்பன அதிகாரம் தொடரும் வரையிலும் நாம் யாருக்கும் உதவிட முடியாது என்று (தமிழீழத் தந்தை செல்வாவிடம்) அன்றே நமது அருமைப் பெரியார் சொன்னார். (இவ்வளவு அழிவு நடந்த பிறகு) இன்னும் (அனைத்துப் பிரச்சினைகளையும் மூட்டை கட்டி வைத்து விட்டு) பார்ப்பன அதிகாரப் பிடிப்பைத் தகர்க்கும் பணி ஒன்றை மட்டுமே மேற்கொள்வது என்று உணராமல் போனால் நம் வாழ்வின் இழிநிலை தொடர்ந்து கொண்டே இருக்கும்)
 
- இராமியா

Pin It