1. தொலைபேசியைக் கண்டுபிடித்தவன் நமது நன்றிக்குறியவன். நேரில் திட்ட முடியாதவர்களையெல்லாம் அதன் மூலம் திட்ட முடிகிறதல்லவா!

2. நான் துறவியாகி, ரிஷிகேசம் போய் விடலாமா என்று எண்ணுகிறேன். கூடவே இன்னொரு எண்ணமும் வருகிறது. எந்தெந்த பெண்களை உடன் அழைத்துச் செல்லலாம்?

3. வயது ஆக ஆக தலைமுடி நரைத்து, பற்கள் விழுவதற்குப் பதிலாக, நாக்கே விழுந்து விடுமாறு ஒரு ஏற்பாடு செய்தால் நாட்டில் குழப்பமே இருக்காது!

4. கடவுள் பன்றியைப் படைத்ததிலே அர்த்தம் உண்டு. சில மனிதர்களுக்கு உவமை சொல்ல அதைவிடத் தோதானது ஒன்றுமில்லை!

(நகைச்சுவை உணர்வு மிக்க கவிப்பேரரசர் கண்ணதாசன் தனது 'செப்புமொழிகள்' நூலில் கூறியுள்ளது) 
........................................ 

-கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.